Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு பயணமாகியுள்ளார். இமயமலை செல்வதற்காக சென்னையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விமானம் மூலம் டெல்லி சென்ற ரஜினிகாந்த், அங்கு ஒரு வார காலம் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஹிந்தி நடிகர்கள் பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்துள்ளனர…

  2. இவர்களை பச்சை மட்டையை... எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம் 10 வருடமாக கத்தி உன் பேச்சை கேட்கிறீர்கள், ஏன் வாக்கு வரலை..ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை. 18 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளார்கள் அல்லவா.. அவர்கள் தான் தமிழர்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "10 வருடமாக கத்தி உன் பேச்சை கேட்கிறீர்கள், ஏன் வாக்கு வரலை..ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை. 18 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளார்கள் அல்லவா அவர்கள் தான் தமிழர்கள்.ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்கள் தமிங்கிலர்கள். இவ…

    • 9 replies
    • 1.4k views
  3. எழுவரின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்: அழகிரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7பேரை விடுதலை செய்வதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்குமென கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளதாவது, “பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் உட்பட ஏராளமானோர் தமிழக சிறைகளில் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜீவ் கொலை கைதிகளை மட்டும் விடுதலை செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது? தண்டனை அனுபவித்து வரும் அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும், அது தவறான முன்னுதாரணமாகி விடும். அது தமி…

  4. தமிழகத்தில் நீட் பயிற்சி மையங்களில் கடும் சோதனை – 30 கோடி பறிமுதல் தமிழகத்தில் செயற்பட்டு வரும் நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் நாமக்கல், கரூர், பெருந்துறை, சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள், வீடு மற்றும் நீட் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட 17 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கணக்கில் காட்டப்படாத 150 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் …

  5. சென்னை: சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்ததற்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சீன அதிபரை பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டை, மேல் துண்டு அணிந்து கைகுலுக்கியபடி உற்சாகமாக வரவேற்று பேசினார். இரு நாட்டுத் தலைவர்களும் வெண்ணெய் உருண்டை கல் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடந்த கலாசார நடன நிகழ்ச்சிகளை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கண்டு ரசித்தனர். இதையடுத்து சென்னை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் இருவரும் சுமார் இரண்டு மணி நேரத்திற்க…

    • 0 replies
    • 263 views
  6. சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் மொழிப்பெயர்ப்பாளராக செயல்பட்ட தமிழகர் குறித்து சுவாரஷ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பின் போது அவர்களுடன் மேலும் 2 பேர் உடனிருந்தனர். அதில் ஒருவர் சீனர், மற்றோருவர் மதுசூதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி. ஒரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு வரும் மதுசூதன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் ஆவார். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி- ஜின்பிங் சந்திப்பில் மொழியாற்றுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அங்…

    • 0 replies
    • 463 views
  7. படத்தின் காப்புரிமை ANI மாலை 5 மணி அளவில், மாமல்லபுரத்தை சென்றடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்திருந்தார் பிரதமர் மோதி. இந்தியப் பிரதமருடன் இணைந்து அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடவிருக்கிறார் சீன அதிபர். இந்தத் தருணத்தில் இரு தலைவர்களுடனும் வரும் தூதுக் குழுவினர் சற்றுத் தூரத்திலேயே இருப்பார்கள். இது இந்தாண்டில் பிரதமர் மோதியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரண்டாவது முறையாக சந்தித்து கொள்கிறார்கள். முன்னதாக பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், "கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்ததில…

  8. சட்டசபை தேர்தல் : நாம் தமிழர் கட்சியின் முக்கிய அறிவிப்பு! நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் குறித்த ஆலோசனையின் பின்னர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதன்படி நாங்குநேரி தொகுதியில் பெண் வேட்பாளரும், விக்கிரவாண்டி தொகுதியில் ஆண் வேட்பாளரும் களமிறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள…

  9. * பெங்களூருவில் இருந்து விமானத்தில் வந்தவர்களும் கைது * கிண்டி நட்சத்திர ஓட்டல் முன்பு பரபரப்பு சீன அதிபர் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்திய விடுதலை போராளிகள் மற்றும் திபெத்திய மாணவர்கள் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சீன அதிபர் வரும் நேரத்தில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த அவர்கள் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் திபெத்திய மாணவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு தாம்பரம் அருகே தங்கியிருந்த 8 திபெத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு அறை எடுத்து தங்க உதவிய தனியார் கல்லூரி பேராசிரியரும் கைது செய்யப…

  10. கீழடி பற்றிய ஸ்டாலின் ட்விட்டால் சர்ச்சை.. எப்படி இவ்வாறு சொல்லலாம்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம். கீழடியில் நடைபெற்ற தொல்லியல் துறை ஆய்வு முடிவுகளை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் அறிக்கையாக வெளியிட்டார். ஆய்வுகளின் முடிவில், கீழடியில் வாழ்ந்தவர்கள் கி.மு 6ம் நூற்றாண்டிலேயே கல்வியறிவு கொண்டவர்களாக விளங்கினார்கள் என்ற தகவல் வெளியானது. கங்கைக் கரையில் இரண்டாம் நகர நாகரீகம் நிலவிய அதே காலகட்டத்தில் கீழடியிலும் தமிழர்களின் நகர நாகரீகம் இருந்துள்ளது இதன் மூலம் உறுதியானது. பிராமி எழுத்துக்களும் கண்டெடுக்கப்பட்டன.தமிழினத்தின் பொற்காலம் என அறியப்படும், சங்க காலம் என்பது மேலும் 3 நூற்றாண்டுகள் பழமையானது என்பதை கீழடி அறுதியிட்டு கூறியது. சிந்து சமவெளி நாகரீகத்த…

  11. மோடி, சீன ஜனாதிபதி இன்று மாமல்லபுரத்திற்கு வருகை பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று(வெள்ளிக்கிழமை) மாமல்லபுரத்திற்கு வருகை தரவுள்ளனர். இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை ஆளுநர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களும் அதிகாரிகளும் வரவேற்கவுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து பிரதமர் ஹெலிகொப்டர் மூலம் கோவளம் செல்லவுள்ளார். அதனைத் தொடர்ந்து சீனாவில் இருந்து தனி விமானத்தில் வரும் சீன ஜனாதிபதி ஜின் பிங், நண்பகல் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்…

  12. சென்னையில் சாலையில் செல்ல வேண்டும்.. ஆசைப்பட்ட ஜி ஜின்பிங்.. ஓ இதுதான் ரியல் பின்னணியா! சென்னையில் சாலையில் பயணிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் விருப்பப்பட்டு இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று சென்னைக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருகை தருகிறார். பிரதமர் மோடி உடன் அவர் இன்று மாலை சந்திப்பு நடத்துகிறார். இந்த மூன்று நாள் சந்திப்பில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட உள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுஇந்த சந்திப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகள் கூடி கடந்த இரண்டு மாதம் முன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். டெல்லியில் இந்த ஆலோசனை நடந்துள…

  13. கீழடி பொருள்களை அருங்காட்சியகமாக அமைப்பது குறித்து மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வந்துள்ளேன். உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகம் விரைவில் கீழடியில் அமையும். அதற்கான இடம் பார்த்துக்கொண்டுள்ளோம். இந்தியப் பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்புக்கு முன்னோட்டமாக சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு சார்பாக ``சீன - இந்திய சந்திப்பு" என்கிற தலைப்பில் இணைய நட்சத்திரங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில், தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், இருநாட்டுத் தூதரக பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் பூங்கோதை, நிலானி, கலைமகள் உள்ளிட்டோர் க…

    • 0 replies
    • 708 views
  14. தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக, சென்னை தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 2 ஆயிரம் பேர், ஜின்பிங் போன்று முகமூடியை அணிந்து வரவேற்றுள்ளனர். சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக, தமிழக அரசு சார்பில் இருவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, இருதலைவர்களுக்கும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் பரத நாட்டிய…

    • 0 replies
    • 497 views
  15. சென்னைக்கு கொண்டுவரப்பட்டது சீன ஜனாதிபதியின் கார் சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கின் கார், தனி விமானம் ஊடாக சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) கொண்டுவரப்பட்ட குறித்த காரினூடாகவே இந்தியாவில் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு சீன ஜனாதிபதி செல்லவுள்ளார். இந்த கார், சீன ஜனாதிபதிக்காகவே அவர்கள் நாட்டில் எஃப்.ஏ.டபிள்யு (FAW) என்ற சீன நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கார் அவருக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். சீன ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக, எந்த ரக துப்பாக்கி குண்டுகளும் துளைக்க முடியாத கண்ணாடிகள் இந்த காரில் உள்ளன. அத்துடன் ஆடம்பரமான காரான இது 6 தானியங்கி வசதிகளைக் கொண்டது. இதில் 110 லீட்டர் வரை பெற்றோல…

  16. சிறையின் விதிமுறைகளை சசிகலா மீறியுள்ளார்- விசாரணைக்குழு பெங்களூர்- பரப்பன அக்ரஹாரா சிறையின் விதிமுறைகளை அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மீறியது உண்மையென விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு சிறையின் விதிமுறைகளை மீறி சசிகலா வெளியே சென்றதாகவும் அவருக்கு சிறையில் பிரத்தியேக வசதிகள் செய்து தரப்பட்டதாகவும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிகாரியாக பணியாற்றிய ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. குறித்த விசாரணைக்குழு இவ்விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து வந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது. …

  17. சுபஸ்ரீ உயிரிழப்பு: 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தந்தை மனுதாக்கல் சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவுக்கு வழக்குகளை மாற்ற வேண்டும் என்றும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த மாதம் பல்லாவரம் துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பனர் காரணமாக தனது மகள் உயிரிழந்தார் என்றும் இந்தச் சம்பவத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சுபஸ்ரீயின் தந்தை ரவி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதியின்றி வைக்கப்படும் பனர்களை அகற்ற உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக அதிகாரிகள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று…

  18. போதுமான குடிநீர் இருப்பு: ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட குடிநீர் நிறுத்தம் சென்னையில் போதுமான குடிநீர் இருப்பு இருப்பதால் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் இன்றுடன் நிறுத்தப்பட்டது. சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டுக் குடிநீரைக் கொண்டு வர தமிழக முதல்வர் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி உத்தரவிட்டார். இதையடுத்து, இத்திட்டத்துக்காக 65 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், சென்னை நகர மக்களுக்குப் பருவமழை கைகொடுத்து வருவதால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த …

  19. தமிழக பாஜக தலைவர் பதவி... அமித்ஷா பாணியில் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம்? தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் அருகே அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் யாகம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதனை அடுத்துதான் அவர் பாஜகவின் தேசிய தலைவரானார் என்பது நம்பிக்கை.தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதே கோவிலில் சிறப்பு யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் யாருக்கு அப்பதவி கிடைக்கும் என நாள்தோறும் விவா…

  20. இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வருகையையொட்டி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் செல்லவும், இறங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு சமீபத்தில் சென்று இருந்தபோது இந்தியாவிற்கு வருமாறு சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்ற சீன அதிபர் ஜின்பிங் வரும் 11ம் தேதி இந்தியா வருகிறார்.இவர்களின் சந்திப்பு தமிழகத்தில் புராதன நகரமான மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது. இதில் வர்த்தகம், எல்லை பிரச்னை, இரு நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச தீவிரவாதம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இரண்டு தலைவர்களும் பேசுகின்றனர். இதற்காக பி…

    • 0 replies
    • 466 views
  21. தமிழ் மெல்ல சாகடிக்கப்படுகிறதா?: ஒவ்வொரு தேர்வுகளிலும் புறக்கணிப்பு......தாய்மொழிக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவது தொடர்கதையாகிறது எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்ற தமிழர்களின் முழக்கம், அதன் தொன்மையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், சமீபகாலமாக தமிழுக்கு ஆபத்து வந்து விட்டது. ஏதோ தெரியாமல் செய்த பிழை என்பதெல்லாம் போய், மத்தியில் உள்ள பாஜ அரசு, ‘பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டும்’ கலையை செய்ததெல்லாம் போய், இப்போது பகிரங்கமாகவே தமிழை புறக்கணிக்கும் போக்கை கடைபிடிக்க தயாராகி விட்டது என்று தமிழ் ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். நீட் தேர்வில் ஆரம்பித்தது தமிழ் புறக்கணிப்பு; போராடி பின்னர் தமிழில் எழுதும் உரிமை மீட்கப்பட்டது. ஆனால், ரயில்வே தேர்வில் ஆரம்பித்து…

    • 0 replies
    • 442 views
  22. கருணாநிதிக்கு அருங்காட்சியம்... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம். ! சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.திமுக தலைவராகவும், முதுபெரும் அரசியல் தலைவராகவும் வாழ்ந்து மறைந்த கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது அவரது மகள் செல்வியின் எண்ணமாகும். இதையடுத்து தனது அண்ணனும், திமுக தலைவருமான ஸ்டாலினிடம் இது தொடர்பாக பேசிய அவர், அருங்காட்சியகத்தை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என அவர்கள் இருவரும் முடிவு செய்ததை அடுத்து, அருங்காட்சியகம் அமைப்பதற்காக மு.க.ஸ்ட…

  23. கன்னியாகுமரி: பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் சூழல் விரைவில் உருவாகும். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜ ஆதரவு அளிக்கும் என்றார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=530965 பிரதமர் மோடி தமிழை தொடர்ந்து உயர்த்தி பேசுவது, தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்காக கூட இருக்கலாம்: கமல்ஹாசன் சென்னை: பிரதமர் மோடி தமிழை தொடர்ந்து உயர்த்தி…

    • 0 replies
    • 491 views
  24. தூய்மையான தமிழகம்: மோடியிடமிருந்து விருது பெற்றார் வேலுமணி தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருதினைப் பெற்றார் நாட்டின் பல பகுதிகளில் ஓகஸ்ட் 17 முதல் செப்டெம்பர் ஐந்தாம் திகதி வரை 690 மாவட்டங்கள் மற்றும் 17 ஆயிரத்து 400 கிராம பஞ்சாயத்துகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தமிழ்நாட்டிலுள்ள 31 மாவட்டங்கள் உட்பட்ட 800 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் படி தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தெரிவாகியது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.