Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விவகாரம்: தமிழக ஆளுநர் டெல்லிக்கு விஜயம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த டெல்லி விஜயத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சந்திப்பின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து. கலந்துரையாடலொன்றில் ஈடுபடுவாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பேரறிவாளன்-உள்ளிட்ட-7-பேர/

  2. டெல்டா விவசாயிகள் மீண்டும் டெல்லியில் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானம் June 22, 2019 டெல்டா விவசாயிகள் மீண்டும் டெல்லியில் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி ஜூலை 26ஆம் திகதி டெல்லி பாராளுமன்றம் முன் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாகத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். மன்னார்குடியில் நேற்று நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு மாதம் தோறும் தர வேண்டிய தண்ணீரை விடுவிக்கக் கர்நாடகம் …

  3. 65 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி இலங்கையைச் சேர்ந்த 65 தமிழர்களினால் இந்தியக் குடியுரிமை பெறுவதற்காகச் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அவர்களை குடியுரிமை கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி அதிகாரியிடம் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனுமதியளித்திருக்கிறது என்று சென்னை த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. அவர்களின் புதிய விண்ணப்பங்களை எந்தவித தாமதமும் இன்றி மத்திய அரசாங்கத்திற்கு அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி அதிகாரி நீதியரசர் ஜீ.ஆர்.சுவாமிநாதன் பணித்தார். மனுதாரர்கள் இருக்கின்ற பிரத்யேகமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொருத்தமான உத்தரவுகளை மத்திய அரச…

  4. "பஸ்" டே... அட்டாசம். கூரை மீது ஏறி கொண்டாட்டம்.. பிரேக் போட்ட டிரைவர்.. சரிந்து விழுந்த மாணவர்கள் சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தின்போது மாணவர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் சடர்ன் பிரேக் போட்டதால் பஸ் மீது ஏறி அமர்ந்திருந்த மாணவர் சரிந்து கீழே விழுந்தனர். தடையை மீறி பஸ் டே கொண்டாடாடிய 17 மாணவர்களை பிடித்து சென்னை போலீசார் விசாரித்து வருகிறார்கள். விடுமுறை முடிந்து நேற்று சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பஸ் டே என்ற பெயரில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு, இதற்கான சிறப்பு ஏற்பாடாக பஸ்ஸூக்கு அலங்காரம் செய்தனர். பின்னர், பஸ் கூரை மீது ஏறி நின்றுகொ…

  5. தமிழகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவிகரம் நீட்டுகிறது கேரள அரசு! தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை கருத்திற்கொண்டு கேரள அரசு 20 இலட்சம் லீட்டர் தண்ணீர் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், தமிழக முதலமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று குடிநீர் வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு 20 இலட்சம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தி.மு.க அரசு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்ப…

  6. கருணை கொலையாவது செய்யுங்கள்!- இலங்கை தமிழர்கள் திருச்சி சிறையில் உண்ணாவிரத போராட்டம் எங்களை கருணை கொலையாவது செய்யுங்கள் என வலியுறுத்தி திருச்சி மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் நான்கு பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தமிழர்களான பாஸ்கரன், ரமேஷ், அருளின்பதேவன் மற்றும் செல்வம் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கைதிகள் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் எந்ததொரு குற்றங்களும் புரியவில்லை. ஆகையால் உடனடியாக தங்களது வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிடின், கருணை கொலையாவது தங்களை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்ப…

  7. இலங்கையைச் சேர்ந்த ஒப்பந்தத் தோட்டத் தொழிலாளர்கள் வம்சாவளியைச் சேர்ந்த 65 தமிழர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு செய்திருந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உடனடியாகத் தாமதிக்காமல் மத்திய அரசுக்கு குடியுரிமை விண்ணப்பத்தை அனுப்பி வைக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார். மத்திய அரசு இதன் மீது 16 வாரங்களில் முறையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். அதாவது மனுதாரர்கள் இருக்கும் ஒரு தனிப்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறும்போத…

  8. June 20, 2019 சென்னையில் வீசும் காற்றில் விசம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள சென்னையின் வருடாந்த காற்று மாசு குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பொதுவாக சென்னையில் மரங்கள், கடற்கரைக்கு அருகே இருக்கும் பகுதி போன்ற காரணங்களால் ஏனைய பகுதிகளைவிட காற்றின் தரநிலை சற்று சிறப்பாகவே இருக்கும். எனினும் 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கும் கடந்த மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அடையாற்றிலும் காற்றின் தரநிலை மிக மோசமட…

  9. குடிநீர் பிரச்சினை: தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்! தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்காத அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது. அந்த வகையில், வரும் 22ஆம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு பேட்டிகளில் ஈடுபட்டுள்ளதே தவிர ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவில்லை. தண்ணீருக்காக வெற்றுக் குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் போது மக்களையும…

  10. படத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption மனிதர்களுக்கு மட்டுமா தண்ணீர் பிரச்சனை கிண்டி வன உயிரின பூங்காவில் சொட்டு நீருக்காக காத்திருக்கும் குரங்கு தமிழகம் இந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது. அதிலும், தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. குறைந்து போன நிலத்தடி நீர் மட்டம், வறண்டு போன ஏரிகள் என அத்தியாவசிய தண்ணீருக்காக அனுதினமும் தமிழக மக்கள் தர்ம யுத்தம் நடத்தி வருகிறார்கள் என்றால் மிகையாகாது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு. படத்தின் காப்புரிமை ARUN SANKAR படத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption கிண்டியில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் குரங்கு படத்தின் காப…

  11. நீர் மேலாண்மை தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தமிழகத்தில் நீர் மேலாண்மை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வளப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், பாலாற்றில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இந்தக் கால்வாயின் வழியாக தண்ணீர் எளிதாகச் செல்ல வழிவகை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தைப் போக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக…

    • 1 reply
    • 589 views
  12. மேல கை வெச்சீங்க.. அவ்வளவுதான்.. நாம் தமிழர் கட்சியினரை சீண்டியதால் ஆவேசம்! "தண்ணி இல்லாம அவனவன் சாவறானுங்க.. இதுல ஏன் தண்ணி விட்டேன்னு சண்டையா?" என்று குடிநீர் விநியோகத்துக்கான பிரச்சனை ஒன்று ஆவடியில் வெடித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால், பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து தண்ணீர் கிடைக்க முடிந்த அளவு பொதுமக்களுக்கு உதவி வருகிறார்கள். இப்படித்தான் நாம் தமிழர் கட்சியும் குடிநீர் விநியோகத்தை கையில் எடுத்துள்ளது. ஆவடி, திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரில் குடிக்க சுத்தமாக தண்ணியே இல்லை என்று இந்த கட்சி உறுப்பினர்களுக்கு தெரியவந்தது. அதனால், அந்த பகுதிக்கு இக்கட்சி சார்பாக நேற்று டேங்கர் லாரிய…

  13. மக்களவையின் 2ஆம் கூட்டத்தொடர்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவிப்பிரமாணம் In இந்தியா June 18, 2019 9:07 am GMT 0 Comments 1140 by : Yuganthini மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றனர் 17ஆவது மக்களவையின் இரண்டாம் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பதில் சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். குறித்த பதவியேற்பு நிகழ்வில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாண்டே, தனது பதவியை முதலில் பொறுப்பேற்றார். அத…

  14. முரளிதரன் காசிவிஸ்வநாதன், மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சென்னைக்கு குடிநீ…

  15. நளினியின் விருப்பத்தை அறிந்து சொல்லுங்கள்: சட்டதரணிக்கு நீதிபதிகள் உத்தரவு! In இந்தியா June 18, 2019 10:10 am GMT 0 Comments 1117 by : Yuganthini காணொளி ஊடாக வழக்கு விசாரணைகளில் கலந்துகொள்வது தொடர்பான நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு நளினியின் சட்டத்தரணிகளிடம் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினி, இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயு…

  16. தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு ஒரு இலட்சம் அபராதம்! – கடும் நடைமுறை அமுல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரச தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி முதலாம் திகதி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்கவும் அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக முறைப்பாடு எழுந்த நிலையில் இந்த அபராதம் விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது. இதற்காகவென்றே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர…

    • 2 replies
    • 878 views
  17. தமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பால் அதிர்ச்சி. சென்னை: அலுவலகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அலுவல் விஷயமாக ரயில்வே அதிகாரிகள் யாரும் தமிழில் பேச கூடாது என்றும் தெற்கு ரயில்வே அதிகாரி சிவா என்பவர் நேற்று இரவு சுற்றறிக்கை அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் அருகே விபத்து ஏற்படும் அபாயத்துக்கு மொழி பிரச்னை தான் காரணம் என்பதால் இப்படி ஒரு உத்தரவை தெற்கு ரயில்வே பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு பயணிகள் ஒரே பாதையில் சென்றதால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இரு ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் ஏற்பட்ட மொழ…

  18. அமராவதி ஆறினை நேற்றும் , இன்றும் தூர் வாரி, சமூக சேவை செய்து கொண்டிருக்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். மறுபுறம், அமராவதி ஆற்றில் மண் அள்ள அனுமதி தருமாறு, செந்தில் பாலாஜி MLA, ஜோதிமணி MP இருவரும், மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்து உள்ளனர். தேர்தலில் செலவழித்த பணத்தினை எப்படி மீட்பது என்பது அவர்கள் கவலை. நல்ல காலமாக இவர்கள் எதிர்க்கட்சி. https://youtu.be/wy_BQb_HVdI

    • 0 replies
    • 829 views
  19. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – கோவையில் கைதுகள் தொடர்கின்றன… June 15, 2019 ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்து கோவையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் முகமது உசைன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மூவரும் கோவை அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் இன்று, சனிக்கிழமை காலை, மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து சந்தேகநபாகள் மூவரையும் எதிர்வரும் 28ம் திகதிவரை நீதிமன்ற காவலில் வ…

  20. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க தோல்வி குறித்து ஆராய்வு தேர்தலில் பின்னடைவை சந்தித்த பலவீனமான மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியினை எவ்வாறு வெற்றிபெற செய்வது என்பது குறித்து பா.ஜ.க மாநில தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சில இடங்களில் தோல்வியை தழுவியது. அதற்கு அந்தந்த காலப்பகுதியில் காணப்பட்ட சூழ்நிலைகளே காரணம். அத்துடன் குறித்த கூட்டத்தில் தமிழகம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களிலும் தேர…

  21. தமிழகத்தில் ஐ.எஸ்.உடன் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு! In இந்தியா June 14, 2019 8:51 am GMT 0 Comments 1063 by : Krushnamoorthy Dushanthini ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கோவையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் மூவர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஏழு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது அசாருதீன் என்பவர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், அபு…

  22. கோவையில் கைதான ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, தமிழகம், கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை யின்போது நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, இந்தியாவிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவாளர்களை கண்டறியும் பணியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) தீவிரப்படுத் தினர். அதில், கோவை உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன்(32) உள்ளிட்ட சிலர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதையும், பிரத்யேக சாட் பக்கம் மூலம் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய தீவிரவாதி ஜஹ்ரான் ஹாசிமுடன் முகநூல் மூலம் தொடர்பு ஏற்படுத்தி, தகவல்களை பரிமாறி வந்ததையும் என்ஐஏ அதிக…

  23. கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர் எனவும், தமிழகம் ,கேரளாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்த திட்டங்கள் இருப்பதாகவும் புலனாய்வுத் துறை விசாரணையில் தெரிய வந்ததால் இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளது. உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன், சேக் இதயத்துல்லா, இப்ராகிம், போத்தனூரை சேர்ந்த அக்ரம் சிந்தா, சதாம் உசைன், குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அசாருதீன், ‘khilafah GFX’ என்னும் முகநூல் பக்கத்தின் வழியாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை பரப்பியுள்ளார். மே…

    • 1 reply
    • 1.1k views
  24. ராஜராஜ சோழனை இழிவுபடுத்தவில்லை – பா.இரஞ்சித் : June 12, 2019 திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித், ராஜராஜ சோழன் ஆட்சியை விமர்சித்துப் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான எதிர்வினையும் வலுத்துள்ளது. இதுதொடர்பாக, பா.இரஞ்சித் மீது காவல்நிலையத்தில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.இரஞ்சித் “தனித் தொகுதிகளைத் தவிர்த்து, மற்ற தொகுதிகளில் அரசியல் கட்சிகள், சாதி அடிப்படையில்தான் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். அதை வெளிப்படையாக யாரும் சொல்வதில்லை. திராவிடத்திலிருந்தும், தமிழ் தேசியத்திலிருந்தும் பட்டியலின மக்களைத் தனிமைப்படுத்துகிறீர்கள் என்கிறார்கள். ஏற்கெனவே …

  25. பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமரனை தேடும் போலிஸ்.! நெல்லை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளரான பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமரனை போலீசார் தேடி வருகின்றனர்.கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை புதைக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் ஜூலை மாதம் 10 ம் தேதி மக்களின் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் அணுசக்திக்கு எதிரான அமைப்பை சேர்ந்தவரும் பச்சைத் தமிழகம் கட்சித்தலைவருமான உதயகுமரனை போலீசார் தேடி வருகின்றனர். தேசிய அணுமின் கழகம் கூடங்குளத்தில் அணுமின் நிலைய எரிபொருள் கழிவுகளை சேமிக்கும் வளாகம் கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.