தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10291 topics in this forum
-
-
- 8 replies
- 1.5k views
-
-
சென்னையின் இந்த ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் நாற்பது சதவீதம் சரிவைச் சந்தித்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘குஷ்மேன் அண்ட் வேக்ஃபீல்டு’ (Cushman and Wakefield) ஆய்வின்படி 3,350 குடியிருப்புப் பகுதிகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டின் வெள்ள பாதிப்பும், இந்த ஆண்டின் சட்டமன்ற தேர்தலும் ரியால்டி சந்தையைப் பெரியளவில் பாதித்திருக்கிறது. அத்துடன், உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சியடையாமல் இருப்பதும் இந்தச் சரிவுக்கான இன்னொரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இதனால், புறநகர்ப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மலிவு விலை, நடுத்தரக் குடியிருப்புத் திட்டங்களும் குறைவான வெற்றி விகிதத்தையே அடைந்திருக்கின்றன. …
-
- 0 replies
- 692 views
-
-
ஜெயலலிதா வீடு திரும்புவதில் தாமதம் ஏன்?- அப்போலோ அப்டேட்ஸ்! முதல்வர் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 55 நாட்கள் கடந்து விட்டன. அக்டோபர் 29-ம் தேதி தீபாவளி தினத்தன்றே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விடுவார். தீபாவளியை போயஸ் கார்டன் வீட்டில் கொண்டாடுவார் என்றெல்லாம் ஊடகங்களிலும் பரவலாக தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதா வீடு திரும்ப ஏதுவாக, அவரது வீட்டில் சிறப்பு மருத்துவ வசதிகளுடன் கூடிய அறை உருவாக்கப்பட்டுள்ளது. லிப்ட் வசதி அதற்கேற்ப செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. தொடக்கத்தில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டாலும், இங்கிலாந்து டாக்டர் அப்போலோவுக்கு வருகை த…
-
- 2 replies
- 835 views
-
-
அடுத்து அழகிரியும் கனிமொழியும் கைதா ? பிரிவு: தலையங்கம் நேற்றைக்கு முந்தைய நாள் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியது . அவர்கள் ராசினாமா கடிதத்தை முறையாக பிரதமர் மற்றும் திமுக கட்சி ஆதரவு வாபஸ் என்ற கடிதத்தை குடியரசு தலைவருக்கும் கொடுத்தார்கள் . இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அதன் தலைவர் கருணாநிதியால் மட்டுமே கட்சிக்குள் அழுத்தி எடுக்கப்பட்ட ஒன்று என்றும் அதற்க்கு அவர்கள் குடும்பத்தில் கனிமொழியை தவிர யாரும் ஆதரவு தரவில்லை என்றும் செய்திகள் கசிந்தன. இன்றைக்கு அவரது மகனும் கட்சியின் பொருளாளருமான ஸ்டாலின் வீட்டில் , எதற்கு , என்னவென்ற ஒரு அறிவிப்பு கூட இல்லாமல் சிபிஐ சோதனை இட்டு வருகிறது . அதே நேரம் மதுரையில் , முக அழகிரி மீது எந்நேரமும் வழக்கு பதிய படலாம் என…
-
- 1 reply
- 755 views
-
-
நாங்கள் வெளியே வந்ததால், இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்து விட்டது? கருணாநிதி கேள்வி சென்னை: இலங்கை விவகாரத்தில், மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்துள்ளதால், இலங்கை தமிழர்களின் நிலையில், எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்ததற்காக கட்சியினர் கவலைப்படவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரின் ஆசைப்படி நாங்கள் மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டோம். இப்போது என்ன நடந்து விட்டது? ஈழத்தமிழர்களின் பிரச்னைகள் தீர்ந்து விட்டதா? அல்லது அமெரிக்க தீர்மானத்தின் மீது ஐ.நா., மனித உரிமை கவு…
-
- 49 replies
- 3.8k views
-
-
காற்றாலைகள் மூலம் 1,400 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டதால் தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி சனிக்கிழமை எப்போதும் இல்லாத அளவுக்கு 10,600 மெகா வாட் அளவைத் தொட்டது. இதன் காரணமாக மாவட்டங்களில் மின் வெட்டு செய்யப்படும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இரவில் மின் வெட்டே செய்யப்படுவதில்லை என்றும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் இரண்டாம் வாரத்தில் புது யூனிட்டுகளில் கோளாறுகள் ஏற்பட்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மொத்த மின் உற்பத்தி 8,500 மெகா வாட் அளவுக்கு குறைந்தது. இதனால் சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் மீண்டும் 9 மணி நேரத்துக்கும்மேல் மின் வெட்டு செய்யப்பட்டது. தேர்வு நேரத்தில் இதுபோன்று கூடுதல் மின் வெட்டு செய்யப்பட்டதால்…
-
- 0 replies
- 440 views
-
-
காரைக்கால் மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் வாய்ந்த கத்தாழை மீன்கள் 1½ டன் சிக்கியது - ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது காரைக்கால், ‘நிவர்’, ‘புரெவி’ புயல் மற்றும் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராம மீனவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர், கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. மழை எச்சரிக்கை முடிந்ததை அடுத்து காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள் சென்றனர். அவர்கள் கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு நேற்று முன்தினம் கரை திரும்பினர். அவர்க…
-
- 1 reply
- 1k views
-
-
தனி ஈழம் கோரிக்கையை முன் வைத்து வரும் மே மாதம் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் கூறுகையில், ‘‘1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தது. அதுபோல இலங்கைக்கு எதிராக இருந்து தனித் தமிழ் ஈழம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு! பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வருவதை முன்னிட்டு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் திகதி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்திற்கு காலை 10.40 மணியளவில் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கிற்கு செல்கிறார். அங்கு மெட்ரோ ரெயில் விரிவாக்கம் மற்றும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகளுக்காக 20 நிம…
-
- 0 replies
- 344 views
-
-
மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் குறித்த விடயங்களுக்கு பொறுப்பாக ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி நியமிக்கப்பட்டமைக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇக) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் நஜீப் ரசாக்கின் நேரடிப் பார்வையில், பிரதமர் அலுவலகத்தில் இந்தத் துறைக்கான துணை அமைச்சராக வேதமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதை எந்த வகையிலும் தம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று மஇக-வின் தலைவரும் சுற்றுச்சூழல் அமைச்சருமான பழனிவேலு பிபிசி தமிழோசையிடம் கூறினார். இது குறித்து தாங்கள் பிரதமர் நஜீப் ரசாக்குடன் விவாதித்திருந்தாலும், அவர் எவ்விதமான முடிவையும் வெளியிடவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஹிண்ட்ராஃப் வேதமூர்த்தி ( பிரதமர் நஜீபுக்கு ஆதரவு தெரிவிக்க முன்னதா…
-
- 0 replies
- 542 views
-
-
ஆதரவாளர்கள் போல் நடித்து சசிகலா வீட்டிற்குள் நுழைந்து சங்கு ஊதியவர்கள் கைது! சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆதரவாளர்கள் போல் நடித்து அவர் இல்லத்துக்குள் நுழைந்து சங்கு ஊதியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தங்கியுள்ள இல்லத்திற்கு நேற்று நள்ளிரவு பத்து பேர் அவரது புகழ்பாடியபடி வந்தனர். வீட்டின் முன்பு நின்று சசிகலாவை வாழ்த்து பாட்டுப்பாடினர். தொடர்ந்து வீட்டிற்குள் சென்று சசிகலாவைச் சந்தித்து வாழத்துகூற அவர்கள் விரும்பினர். அதற்கு அப்பகுதியில் இருந்த காவலர்கள் முதலில் அனுமதி மறுத்தனர். பின்னர், வாழ்த்து தெரிவிக்கத்தானே கோருகிறார்கள் என்று உள்ளே அனுமதித்தனர். ஆனால்…
-
- 0 replies
- 519 views
-
-
ஓ.பி.எஸ் மற்றும் ஹெச்.ராஜா அவசர சந்திப்பு! தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் பதவியேற்றுள்ளனர். ஆளுநர் வித்யாசாகர்ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கிடையே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கிடையே பன்னீர் செல்வத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். வரும் சனிக்கிழமை சட்டசபை கூடும் நிலையில் இந்த சந்திப்பானது முக்கியமானதாக கருத்தப்படுகிறது. http://www.vikatan.com/news/politics/81073-emergency-m…
-
- 0 replies
- 370 views
-
-
குஷ்புக்கு ஆதரவு திரட்டி சென்னையில் அமித்ஷா தேர்தல் பிரசாரம் பா.ஜ.க.வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். நேற்று சென்னைக்கு வருகை தந்த அமித்ஷா, துறைமுக தொகுதி பா.ஜ.கவேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் பா.ஜ.கவேட்பாளர் குஷ்புக்கு ஆதரவு திரட்டும் வகையில், இன்று காலை 10 மணிக்கு தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா ஈடுபடுகின்றார். மேலும் தேனாம்பேட்டையில் இருந்து திறந்த வானில் பாண்டிபஜார் நோக்கி பேரணியாக செல்லும் அமித்ஷா, கூட்டணிக் கட்சி, பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி தேர்த…
-
- 1 reply
- 465 views
-
-
ஜெ. மரணம்! மாநிலங்களவையில் கொந்தளித்த மைத்ரேயன்! குறுக்கிட்ட அதிமுக பெண் எம்.பி-க்குக் குட்டு ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி மைத்ரேயன் ஆவேசத்துடன் பேசினார். அப்போது, அ.தி.மு.க பெண் எம்பி விஜிலா தொடர்ந்து குறுக்கிட்டதால் கோபம் அடைந்த துணைத் தலைவர் குரியன், அவரைக் கண்டித்தார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிவிசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவையில் மைத்ரேயன், லெட்சுமணன், சசிகலா புஷ்பா ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையின் அருகே சென்று பதாகைகளை ஏந்தி, கூச்சல் போட்டனர். துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் அவர்களை இருக்கையில் சென்று அமரச் சொன்னார். அதன்பின்ன…
-
- 0 replies
- 339 views
-
-
மூன்று தினகரன்; இரண்டு மதுசூதனன்! ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் பட்டியல் சின்னத்துடன் வெளியீடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அ.தி.மு.க பிளவுப்பட்டுள்ளதால் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது யூகிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. ஜெயலலிதா வாக்குகளை பங்குபோட அதிமுக அம்மா கட்சி சார்பாக டி.டி.வி.தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பாக இ.மதுசூதனன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தீபா ஆகியோர் களத்தில் உள்ளனர். மேலும் தி.மு.க…
-
- 0 replies
- 340 views
-
-
வளைக்கப்படும் வனிதாமணி வாரிசுகள்! - பின்னணி இது தான் “ 'எழுமுன் வீழ்த்துவோம், அடியோடு அகற்றுவோம்’ என்ற நிலைப்பாட்டைத்தான் சசிகலா விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ளது. வனிதாமணியின் வாரிசுகள் மீதான வழக்குகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வேகம் எடுத்திருப்பதன் பின்னணி இதுதான்” என்கிறார்கள் டெல்லி பி.ஜே.பி-க்கு நெருக்கமானவர்கள். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியை மக்கள் ஆட்சி என்று சொல்வதைவிட மன்னர் ஆட்சி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இருந்தது நிர்வாகம். அந்த ஆட்சியில் இளவரசர்களைப் போன்று வலம் வந்தவர்கள் தான் டி.டி.வி.தினகரன், சுதாகரன், பாஸ்கரன். சசிகலாவுக்கு சிறுவயது முதலே தனது அக்கா வனிதாமணியின் குழந்தைகள் மீது அத…
-
- 0 replies
- 502 views
-
-
அ.தி.மு.க. இரு அணிகளுக்கு இடையே பிரமாண பத்திரம் தாக்கலுக்கு கடும் போட்டி இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கு இடையே பிரமாண பத்திரம் தாக்கலுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. சென்னை: ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவரது தோழி சசிகலா முதல்- அமைச்சராக முயற்சி செய்ததால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஒரு பிரிவினரும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரு அணிகளும் போட்டியிட்டதால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதோடு சசிகலா அணிக்கு அ.தி.மு…
-
- 0 replies
- 455 views
-
-
சென்னை: மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் மேற்கொள்ள உள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (24.09.2013)சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாட்டு அரசியலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுகளை நனவாக்கும் இயக்கமாக, திராவிட இயக்கத்தின் காலத் தேவைக்கான புதிய பரிமாணமாக வார்ப்பிக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. தனது இருபது ஆண்டு கால அரசியல் பயணத்தில், இடைவிடாத போராட்டங்களால், மகத்தான தியாகத்தால், தன்னலமற்ற நேர்மை நெறியால், கணக்கற்ற அல்லல்களையும் இன்னல்களையும…
-
- 0 replies
- 251 views
-
-
ஒருநிமிடம் இதையும் படியுங்கள் நண்பர்களே!!! நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! அதிகம் பகிர்ந்து நம்கண்முன் நடக்கும் அழிவை மற்றவருக்கும் காட்டுங்கள் சொந்தங்களே!! ►கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிட்டட் என்ற அமெரிக்க நிறுவனம் நம் தமிழ்நாட்டில் மீதேன் வாயு எடுக்க மத்திய அரசிடமும்,மாநில அரசிடமும் அனுமதி பெற்றுள்ளது.. ►மீதேன் வாயு எடுக்கப்படும் விதமும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை. • முதற்கட்டமாக நிலத்தடியிலுள்ள 1500 அடி ஆழத்திலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள்... • அதன் காரணமாக நிலத்தடியில் நீரை வெளிஎர்ரியப் பின்னர் அவ்விடத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாக அங்கு கடல்நீர் உட்புகுந்துவிடும். • நிலத்தடி நீர் உப்பானால் அங்கு வி…
-
- 1 reply
- 702 views
-
-
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை..! எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடும் பொதுக்குழு கூட்டத்துக்கு பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக மாலை 7.15 மணிக்குத் தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு நாளை சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுக்கு தடைகோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தெரிவித்தார். மேலும் எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபரா…
-
- 1 reply
- 406 views
-
-
சென்னை: மு.க. அழகிரி தம்மையும் மு.க. ஸ்டாலினையும் பற்றி விரும்பத்தகாத வார்த்தைகளை பேசினார் என்றும் மு.க. ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் இறந்துவிடுவார் என கூறியதை எப்படி பொறுப்பது என்று அவரது தந்தையும் திமுக தலைவருமான மு. கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். - See more at: http://m.oneindia.in/tamil/news/tamilnadu/azhagiri-used-harsh-words-against-stalin-dmk-chief-karunanidhi-192278.html#sthash.jv6hODMk.dpuf
-
- 6 replies
- 679 views
-
-
திமுகவின் முரசொலி கட்டுரை: ஸ்டாலின் கூட்டணி கட்சிகளின் விமர்சனங்களை விரும்புவதில்லையா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK/MKSTALIN படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலாக, தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கண்டனம் தெரிவிக்கும் வகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இன்று வெளியான முரசொலி வலிமையான கூட்டணியை வலியுறுத்துகிறது. கூட்டணிக் கட்சிகள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதை தி.மு.க. விரும்பவில்லையா? தமிழ்…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர…
-
- 0 replies
- 444 views
-
-
மன்னார் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகை நிறுத்துமாறு கடற்படையினர் கூறியுள்ளனர். எனினும் மீனவர்கள் படகை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த கடற்படையினர் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்த மீனவரை கடற்படையினர் மீட்டு ராமநாதபுரம் அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்க…
-
- 7 replies
- 463 views
- 1 follower
-
-
குஷ்புவிடம் கனிமொழி கேட்ட மன்னிப்பு - திமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடந்தது என்ன? 27 அக்டோபர் 2022 படக்குறிப்பு, கனிமொழி-குஷ்பு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குறிப்பிட்டு, நடிகை குஷ்பு வெளியிட்ட ட்வீட்டுக்கு, ட்விட்டரிலேயே மன்னிப்பு கேட்டுள்ளார் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? 'பாஜகவில் கட்சி வளர்க்கும் நான்கு நடிகைகள்' என்று பெயர்களைக் குறிப்பிட்டு பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், சர்ச்சைக்குரிய …
-
- 0 replies
- 356 views
- 1 follower
-