Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மிஸ்டர் கழுகு: அல்வா கொடுத்த ‘பக்கோடா’ மோடி! கோட்டையிலிருந்து பறந்து வந்தார் கழுகார். ‘‘நான் சொன்னதுபோலவே நடந்ததா?” என்றபடி சிரித்தார். ‘ஆமாம்’ என்று தலையாட்டியபடியே கடந்த இதழின் அட்டைப் படத்தை எடுத்துக் காட்டினோம். ‘‘ஜெயலலிதாவின் படத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி மறுத்த நிலையில், அவசர அவசரமாக இவர்களே திறந்துவைத்து விட்டார்கள்!” ‘‘இதைத்தான் நீர் சொல்லியிருந்தீரே!” ‘‘ஆமாம்! எப்படியாவது மோடியை வரவைத்து விட பகீரத முயற்சிகளை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் செய்தார்கள். ஆனால் அவர்களது ஆசையில் மொத்தமாக மண் விழுந்துவிட்டது. கடந்த ஏழு மாதங்களாகப் பிரதமரை வரவைப்பதில் குறியாக இருந்தார் எடப்பாடி. 2017 மே 24-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்…

  2. திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மருத்துவ பரிசோதனை! - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு. [sunday 2014-09-14 09:00] திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விவகாரத்து வழக்குகள் அதிகரிப்பதால், திருமணத்துக்கு முன் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கின் சிறப்பு விசாரணை விடுமுறை தினமான நேற்று ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி கிருபாகரன் முன் நேற்று நடந்தது. அப்போது மூத்த வக்கீல்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர், பாதிக்கப்பட்டோர் என பல தரப்பினரும் ஆஜராகினர். அப்போது வக்கீல்கள், நீதிபதிகளிடம் கூறியதாவது: பிரான்ஸ், ஐக்கிய அரபு எமி…

  3. மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை - அத்தியாயம் - 1 Chennai: ஆண்டுகள் எத்தனை... ஆட்சிகள் எத்தனை... வழக்குகள் எத்தனை... இழப்புகள் எத்தனை... பிரச்னைகள் எத்தனை... வன்முறைகள் எத்தனை என இந்தப் பிரச்னையின் பின்னணியில் உள்ள எத்தனையோ வலிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தப் பிரச்னை வேறு எதுவுமல்ல, காவிரி விவகாரம்தான்..! உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், நடுவர் மன்றம் என எந்த மன்றத்தின் உத்தரவைக் கேட்டும் நியாயமில்லை காவிரிக்கு. காலங்கள் கடந்தபோதும் இதுவரை இந்தப் பிரச்னைக்கு எந்தவொரு நிரந்தரத் தீர்வும் ஏற்படவில்லை. இது, இன்று... நேற்றல்ல... மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கிறது. ‘காவிரிக்க…

  4. பட மூலாதாரம்,TAMIL NADU FOREST DEPARTMENT படக்குறிப்பு, நீலகிரியில் மட்டுமே அதிக அளவிலான புலிகள் இருப்பதை வனத்துறையினர் பதிவு செய்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தனது மாடு இறந்த கோபத்தில், இறந்த மாட்டின் உடலில் விஷம் வைத்து இரண்டு புலிகளை விவசாயி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 புலிகளோடு சேர்த்து ஒரு மாதத்தில் மட்டுமே நீலகிரியில் ஆறு புலிகள் மரணித்துள்ளதால், சூழலியலாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் க…

  5. எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுக… பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கடிதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயரை வைத்திருப்பது போல எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயர் சூட்டப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் இந்த கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னை வண்டலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில…

  6. 08 JUN, 2024 | 03:59 PM "பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை, அதிமுக மீண்டும் வலிமை பெறும்" என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்ததாவது. ''நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகளை விட, 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றிருக்கிறது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாகும். ஒவ்வொரு தேர்தலிலும் சூழலுக்கு ஏற்றவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பது…

  7. படத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption மனிதர்களுக்கு மட்டுமா தண்ணீர் பிரச்சனை கிண்டி வன உயிரின பூங்காவில் சொட்டு நீருக்காக காத்திருக்கும் குரங்கு தமிழகம் இந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது. அதிலும், தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. குறைந்து போன நிலத்தடி நீர் மட்டம், வறண்டு போன ஏரிகள் என அத்தியாவசிய தண்ணீருக்காக அனுதினமும் தமிழக மக்கள் தர்ம யுத்தம் நடத்தி வருகிறார்கள் என்றால் மிகையாகாது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு. படத்தின் காப்புரிமை ARUN SANKAR படத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption கிண்டியில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் குரங்கு படத்தின் காப…

  8. தஞ்சையில் மிக பெரிய ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பேரணி நடந்து கொண்டு இருக்கிறது...இது எந்த பத்திரிகையும் செய்தியாக வெளியிடாது..

  9. விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?! முன்குறிப்பு: இக் கட்டுரையில் இடம்பெறும் சம்பவங்களும் வர்ணனைகளும் முழுக்க கற்பனையே. ஆனால், அவை எதிர்காலத்தில் நிகழவும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை! ஒரு பக்கம் விஜயகாந்தை கூட்டணிக்காக மக்கள் நலக் கூட்டணி கையைப் பிடித்து இழுக்க, மறுபக்கம் கருணாநிதி வாய்விட்டே வரவேற்பு கொடுக்கிறார். வழக்கம்போல விஜயகாந்த் முறுக்கிக் கொண்டிருக்கிறார். வரும் நாட்களில் இந்த கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் கலகல அத்தியாயங்களை எட்டும். அதை நமது கற்பனையில் இப்போதே ஓட்டிப் பார்த்தோம். நீங்களும் உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்..! தே.மு.தி.க. அலுவலகத்தில் காலை 9 மணிக்கு உள்ளூர் பா.ஜ.க. தலைவர…

  10. கீழடி: ஆதிகால தமிழரின் வடிகால் அமைப்பை வெளிப்படுத்திய ஐந்தாம் கட்ட ஆய்வு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் தலத்தில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீழடி தொல்லியல் தலத்தில் ஏற்கனவே நான…

  11. Feb 08, 2025, 10:53 Am IST தபால் வாக்குகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி தபால் வாக்குகளில் திமுகவுக்கு 197 வாக்குகள் கிடைத்தன; நோட்டாவுக்கு 18-ம் நாம் தமிழர் கட்சிக்கு 13 வாக்குகளும் கிடைத்தன. Feb 08, 2025, 10:42 Am IST 18,712 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை திமுக வேட்பாளர் சந்திரகுமார் 22,682 வாக்குகளையும் நாதக சீதாலட்சுமி 3970 வாக்குகளையும் பெற்றுள்ளனர். …

  12. 24 FEB, 2025 | 10:46 AM சென்னை- ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அதிகாலை மன்னார் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டியதாக கூறி 5 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 32 மீனவர்களை கைது செய்தனர். இந்நிலையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினர…

  13. தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று? தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது இன்று(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி பா.ஜ.க தலைவராக வி.சாமிநாதனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டு முதல் இவர், அந்த பொறுப்பில் இருக்கிறார். அதேபோல போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என பேசி சர்ச்சையில் சிக்கிய திலீப் கோஷ்க்கு மீண்டும் மேற்குவங்க மாநில பா.ஜ.க தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பாஜக தலைவராக சமிர் மொஹந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 61 வயதான மொஹந்தி, 2016-ஆம் ஆண்டு முதல், ஒடிசா மாநில பாஜகவின் துணைத்தலைவராக பொறுப்பு வகித்தவர். உத்தரகாண்ட் மாநிலத்தில் பன்ஷிதார் ப…

  14. ஒட்டு மொத்த தமிழக மக்களின் நலனுக்கு எதிராக தி.மு.க.செயற்படுகிறது- ஜி.கே.வாசன் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்கும் எதிராக தி.மு.க.செயற்படுகிறது என த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று காவிரிடெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்துக்கு அ.தி.மு.க.அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்புக்க…

  15. பொதுமக்களும், அரசியல்வாதிகளும் நினைத்தால் மட்டுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என்றார் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி.திருச்சியில் நடைபெற்ற ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் 20-ஆவது ஆண்டு கல்லூரி நாள் விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அதனால்தான் அரசியல்வாதிகளும் கொடுக்கின்றனர். மக்களும், அரசியல்வாதிகளும் நினைத்தால் மட்டுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். 144 தடை உத்தரவால் பணம் கொடுப்பதை தடுக்க முடியாது. 144 தடை உத்தரவு இல்லாத சமயங்களிலும் அரசியல்வாதிகள் பணம் கொடுத்துள்ள…

  16. போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய் August 28, 2025 1:42 pm தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் நடத்திய மாநாட்டில் எடுத்து செல்பி காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருந்ததாக பரப்பப்பட்ட செய்தி போலியானது என தமிழகத்தின் பிரபல யூடியுபர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மக்களை ஏமாற்றும் பல உத்திகளை கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ள மாரிதாஸ், அப்பட்டமாக மக்களை ஏமாற்று பணியில் விஜய் இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். குறித்த காணொளி பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் பகிரும் இன்ஸ்டாகிராம் காணொளிக்கு நிகராக மக்களை செ…

  17. வெளிமாநில தொழிலாளர்களை முகாம்களில் தங்கியிருக்குமாறு தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் by : Dhackshala வெளிமாநில தொழிலாளர்களை ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒருவார காலத்திற்குள் அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், அதுவரையில் அவர்களை முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளி மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், பட…

    • 0 replies
    • 413 views
  18. முக்கிய செய்திகள் : இந்தியா : நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நரேந்திர மோடி மறந்துவிட்டார்: மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு. தமிழகம் : சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே மோதல்: மாணவரின் கழுத்து கத்தியால் கிழிக்கப்பட்டதால் அதிர்ச்சி. தமிழகம் : செங்கத்தில் காவல்துறையினரால் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தாக்கப்பட்ட சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலர்கள் நேரில் விசாரணை. …

    • 0 replies
    • 528 views
  19. கீழடியில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கீழடியில் ரூ.12.25 கோடியில் அருங்காட்சியகத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பதிவு: ஜூலை 20, 2020 10:46 AM சென்னை கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச்…

  20. திமுக, அதிமுகவுக்கு அடுத்து... வியூகம் வகுக்கும் பாஜக! மின்னம்பலம் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6.47 சதவிகித வாக்குகளையும், 2019 மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக 12.7 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை விட அதிகமான வாக்கு சதவிகிதத்தை பாஜக பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தில் களமிறங்கியுள்ளன. 2017இல் தங்களது பணியைத் தொடங்கிய இந்த அமைப்புகள் குக்கிராமங்கள் முதல் மாநகராட்சி வரையில் பரவலாக காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. …

  21. ' நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!' -கட்சித் தலைவர்களிடம் மனம் திறந்த கவர்னர் அப்போலோவுக்கு இணையாக தினசரி தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கிறது கிண்டி ராஜ்பவன் மாளிகை. ' பொறுப்பு முதல்வரை நியமிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை' என மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஆளுநரின் சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. ஆனால், அப்படியொரு எந்த ஓர் அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்பிறகு, ஆளுநரை சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்…

  22. தி.மு.க-வுக்கு 'தண்ணி' காட்டும் திருநாவுக்கரசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்றதுமே பல்வேறு மாற்றங்களைக் காங்கிரஸ் கட்சியில் மேற்கொண்டு வருகிறார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், ஓரங்கட்டப்பட்டவர்களையும் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து அதிரடி நடவடிகை எடுத்தார். தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்துக்குச் சென்று, மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார் திருநாவுக்கரசர். திராவிட பாரம்பரியத்தில் இருந்து, தனிக்கட்சி தொடங்கி, பின்னர் பல கட்சிகளுக்குச் சென்று, கடைசியாக காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானதாலோ என்னவோ, திராவிடக் கட்சிகளைப் போ…

  23. 'எனக்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார்!' -சசிகலா புஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுவிட்டாலும், கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாகவே நீடிக்கிறார் சசிகலா புஷ்பா. முதல்வருக்கு ஆதரவாகவும் சசிகலாவுக்கு எதிராகவும் அவர் வெளியிடும் கருத்துகள் அரசியல் மட்டத்தில் கவனிக்கப்படுகிறது. ராஜாத்தி அம்மாவின் சமாதானப் பேச்சு எடுபடாமல் போனதால், சசிகலா புஷ்பாவுக்கு எதிரான சுவரொட்டிகள், வழக்குகள் என விவகாரம் நீண்டுகொண்டே செல்கிறது. சசிகலா புஷ்பாவிடம் பேசினோம். தஞ்சை இடைத் தேர்தலில் முதல்வர் முன்பு தேர்வு செய்த ரங்கசாமியே நிற்கிறார். 'சசிகலா நிற்பார்' என்று வந்த செய்தி, வதந்திதானே? " நிச்சயமாக இல்லை. அவர்களுடைய முதல் நோக்கமே, ஓ.பன்னீர்செல்வத…

  24. ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரி குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்ட பிரிவு: Business: General வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் இளங்கோவன் (வயது 24). தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இளங்கோவன் திடீரென்று கட்டவாக்கத்தில் உள்ள 50 அடி உயரம் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிமீது ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். தற்கொலைக்கு காரணமாக இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கூக்குரல் எழுப்பினார். இதனை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து சமாதானம் செய்ய முயன்றனர். கிராம மக்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து இளங்கோவன் மேலிருந்து குதிப்பதாக மிர…

    • 0 replies
    • 399 views
  25. நுரையீரல் தொற்று காரணமாக கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி #Update 12:30 மணி தற்போது, திமுக எம்.எல்.ஏவும், துணை பொது செயலாளருமான துரைமுருகன், மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று இருக்கிறார். 12:04 மணி காவேரி மருத்துவமனை நிர்வாகம், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில், 'திமுகவின் தலைவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக , சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.தொற்றை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் தரப்படுகிறது. மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.