தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
`எல்லாரையும் நல்லா கொண்டு வரணும்!' பழங்குடி பிள்ளைகளுக்கு கலாவதி டீச்சரின் சேவை ``பழங்குடி கிராமங்களுக்கு நேர்ல போய், படிப்பை பாதியிலேயே விட்ட பசங்களக் கணக்கெடுத்து, அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்துல சேர்த்துவிடுறேன். இந்த வருஷம் மட்டும் 30 பேரை சேர்த்துவிட்டிருக்கேன்.'' மலையுச்சியில் இருந்தாலும் கூடலூர் மீது கல்வி வெளிச்சம் தற்போதுதான் மெல்ல படர்கிறது. இங்கு வாழும் பெரும்பாலான பழங்குடிகளுக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கும் உயர் கல்வி என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதிலும் குறிப்பாகப் பணியர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக…
-
- 0 replies
- 508 views
-
-
`ஒன்னு கிடக்க ஒன்னு....' - அப்போலோவில் ஜெயலலிதா பேசியது 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நிலவி வந்த குழப்பங்களுக்கு பிறகு ஓ.பி.எஸ் - சசிகலா தலைமையில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தத்தின் விளைவாக ஆறுமுகசாமி ஆணையம் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா தொடர்பான முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அது, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அதாவது இறப்பதற்கு 68 நாள்கள…
-
- 3 replies
- 991 views
-
-
கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை நோக்கி எழுப்பப்பட்டு வந்த கேள்விக்கு கடந்த டிசம்பர் 3-ம் தேதி பதில் சொல்லியிருந்தார் ரஜினி. டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு, 2021 ஜனவரியில் புதிய கட்சி என ட்விட்டரில் அறிவித்திருந்தார் ரஜினி. தொடர்ந்து தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியையும் நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ` அரசியலில் மாற்றம் வேண்டும். இப்போ இல்லைன்னா... எப்பவும் இல்லை' என்றும் முழங்கினார். இது ரஜினி ரசிகர்களுக்கு …
-
- 40 replies
- 3.9k views
-
-
`கணவர் இறப்புக்காகப் பார்க்க வேண்டாம்; போராட்டத்தை நடத்துங்கள்' - தினகரனுக்கு உத்தரவிட்ட சசிகலா கணவர் இறந்து இருந்தாலும் பரவாயில்லை காவிரி விஷயம் என்பது டெல்டா மக்களோட வாழ்வாதார பிரச்னை. அதில் அவர்களின் ஜீவாதாரம் அடங்கியிருக்கிறது அதனால் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள் என சசிகலா கூறியதாகத் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டி.டி.வி.தினகரன், தஞ்சாவூரில் வரும் 25-ம் தேதி மாபெரும் உன்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் சசிகலா கணவர் நடராசன் உடல் நலக் குறைவால் இறந்துவிட அவரின் இறுதிச் சடங்குக்காகச் சசிகலா 15 நாள்கள் பரோலில் வந்தி…
-
- 1 reply
- 546 views
-
-
`கல்வி கடனுக்கு கல்தா.. இலவச ஸ்மார்ட்போன்?’ - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் எடப்பாடி பட்ஜெட்! அ.சையது அபுதாஹிர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் விவசாயக்கடன் ரத்து செய்யபப்டும் என்றார் ஸ்டாலின். ஆனால் தமிழக அரசு விவசாய கடனை ரத்து செய்து தி.மு.க-வுக்கு ஷாக் கொடுத்தது. அதே போல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க -வுக்கு அடுத்த ஷாக் கொடுக்க அ.தி.மு.க தயாராகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி வரும் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் தேர்தல் களத்தினை எதிர்நோக்கி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவருகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலலில் தி.மு.க ஆட்சியை கைப்பற்…
-
- 4 replies
- 507 views
-
-
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பிருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 35 ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான நிலை நீடித்துவருவதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் கைது…
-
- 0 replies
- 488 views
-
-
`சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன்!' - 12 மணியைக் கடந்த உடன் வாழ்த்து சொன்ன கமல்! தனது அறுபத்து எட்டாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், `சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். விஸ்வரூபம் 2 வேலையாக அமெரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணி நேரத்துக்கு முன் பிறந்தது 12-ம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார். கமல், ரஜினிக்கு ஆங்கிலத்திலும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்…
-
- 2 replies
- 982 views
-
-
`சசிகலா உத்தரவுக்கு தலை வணங்கிய திவாகரன்..!' உறவுக்கு வேட்டு வைத்த அந்த வார்த்தை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் அறிவிக்கப்பட்டபோது சசிகலா குடும்பம் மொத்தமும் அதை ஏற்றுக்கொண்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை சசிகலா சுவீகரித்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். சசிகலாவால் முதல்வர் என்று அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் விரோதியாகி ஓ.பன்னீர்செல்வம் முகாமுக்கு மாறிய பிறகுதான் சசிகலா குடும்பத்தில் மோதல்கள் உருவானது. ''ஆட்சி அதிகாரத்தில் இனி கோலோச்ச முடியாது; டி.டி.வி.தினகரன், ரத்த சொந்தங்களுக்கு அரசியல் முக்கியத்துவம் தருவது இல்லை'' என்று அரசல் புரசலாக சசிகலா …
-
- 0 replies
- 584 views
-
-
`சசிகலா சொன்ன சூசகம்’ - அதிர்ச்சியில் அ.தி.மு.க தலைமை? அ.சையது அபுதாஹிர் சசிகலா அ.தி.மு.க தரப்பில் சிலருடன் சசிகலா தரப்பினர் பேசியிருந்தனர். ஆனால் அவர்களிடமிருந்து பாஸிட்டிவ் பதில் வரவில்லை. இது சசிகலா தரப்புக்கு ஆரம்பத்தில் வருத்தத்தைக் கொடுத்தது. பெங்களூரிலிருந்து சென்னை திரும்பி பதினைந்து நாள்கள் கழித்து சசிகலாவின் அரசியல் சந்திப்புகள் இன்று ஆரம்பித்துள்ளன. சசிகலாவினால் அ.தி.மு.க-வுக்குள் எந்த அதிர்வலைகளும் இல்லையென்று உற்சாகமாக இருந்த அ.தி.மு.க தலைமை சசிகலாவின் அறிவிப்பால் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளது என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, சசிகலா பிப்ரவரி 9-ம் தேதி…
-
- 0 replies
- 718 views
-
-
`சசிகலாவுக்குத் திடீர் உடல்நலக் குறைவு!' - வீட்டிற்கு விரைந்த டாக்டர் பரோலில் வந்துள்ள சசிகலா, தஞ்சாவூரில் பரிசுத்தம் நகர் இல்லத்தில் தங்கியிருக்கிறார். சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்க டாக்டர் வந்துள்ளதால், அந்த இல்லத்தில் பரபரப்பு நிலவுகிறது. கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கிற்காக பரோல் மூலம் கடந்த 20-ம் தேதி, சிறையிலிருந்து தஞ்சாவூருக்கு வந்த சசிகலா, பரிசுத்தம் நகரில் உள்ள கணவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த ஆறு நாள்களுக்கு மேலாகத் தங்கியிருக்கிறார். சசிகலா, மாடியில் உள்ள கணவர் நடராஜனின் அறையில்தான் தங்கியிருக்கிறார். அவரைச் சந்திக்க தினமும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வருகின்றனர். காலை மாலை, வருபவர்களைச் சந…
-
- 0 replies
- 607 views
-
-
`சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை!’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர் பிரேம் குமார் எஸ்.கே. எடப்பாடி பழனிசாமி `முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை சசிகலா கட்சியிலே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க வில் இணைந்து விட்டனர்’ - முதல்வர் பழனிசாமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார். டெல்லியில் அ.தி.மு.க எம்.பிக்கள் முதல்வரை வரவேற்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. …
-
- 5 replies
- 2.4k views
-
-
`சட்டப்படி வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்' - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது! சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் தன்னைக் கண்டு அஞ்சுவதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, `சட்டையை கழற்றிவிட்டு வந்து நேருக்கு நேர் என்னுடன் மோதத் தயாரா?' எனப் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, கருணாஸ் சவால் விடுத்தார். மேலும் சாதி ரீதியாகவும் கூவத்தூரை அடையாளம் காட்டியது நான்தான் எனவும் அவர் பல்வேறு சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்தார். …
-
- 6 replies
- 1k views
-
-
சந்தன கடத்தல்' வீரப்பனின் நிறைவேறாத இறுதி ஆசை - எப்படி இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள்? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2021 தமிழ்நாடு அதிரடிப்படையால் `சந்தனக் கடத்தல்' வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. ` காடுகள் மற்றும் அவற்றையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கொண்டு செல்லப்படாததால்தான் வீரப்பன் என்ற நபர் உருவானார். தற்போதும் அதே சூழலில்தான் பழங்குடிகள் வசிக்கின்றனர்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியம். என்ன நடக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில்? 2004 அக்டோபர் 18. தமிழ்நாடு அதிரடிப்படையினரின் வாழ்வ…
-
- 0 replies
- 940 views
- 1 follower
-
-
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு பிரிட்டன், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்குப் பயணமாகியுள்ளது. பிரிட்டன் பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர், செப்.1-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றார். முதல்வருக்கு முன்பே நியூயார்க் சென்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய குழு, நியூயார்க் நகரைச் சுற்றிப் பார்த்தது. இக்குழுவிலேயே வெள்ளை வேட்டி சட்டை, பாக்கெட்டில் ஜெயலலிதா படத்துடன் சுற்றியது ராஜேந்திர பாலாஜி மட்டும்தான். அமைச்சர்கள் குழுவுடன் சென்றுள்ள அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். …
-
- 4 replies
- 1.4k views
-
-
`சிறை கையேடு 459-ன்படி சசிகலா மூன்றாம்வகை குற்றவாளி!' - சத்ய நாராயணராவ் வாக்குமூலத்தின் முழு விவரம் சசிகலாவுக்குச் சிறையில் செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து வெளியாகும் தகவல்களால், சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. `அரசு விருந்தினர் மாளிகைக்கு என்னை அழைத்தார் முதல்வரின் உதவியாளர். அங்கு சென்றபோது, சசிகலாவுக்குச் சிறப்பு வசதிகள் செய்து தருமாறு கூறினார்' என வினய் குமார் கமிஷன் முன்பாக சிறைத்துறை டி.ஜி.பியாக இருந்த சத்யநாராயண ராவ் தெரிவித்த கருத்துகள் புயலைக் கிளப்பியுள்ளன. கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியாகப் பொறுப்பேற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை மேற்கொண…
-
- 0 replies
- 373 views
-
-
சீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில், மதுராவயல் ஆலப்பாக்கம் அருகே உள்ளே அஷ்டலட்சுமி நகரில் சீமானின் வீட்டுக்கு எதிராக கட்சியினர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது இப்படி ஆள்களைக் கூட்டி போராட்டம் நடத்தியதற்காக சீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்த…
-
- 0 replies
- 685 views
-
-
`சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயம்; சி.பி.சி.ஐ.டி விசாரணை!’ - என்ன நடந்தது? தினேஷ் ராமையா தங்கம் ( Representational Image ) சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. `இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினால், சி.பி.ஐ-யின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படும்’ என்ற சி.பி.ஐ-யின் வாதத்தை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் ஏற்க மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, `இது சி.பி.ஐ-க்கு அக்னிப் பரீட்சை போன்றது. தாங்கள் குற்றம…
-
- 0 replies
- 563 views
-
-
`ஜெயலலிதா அறையிலிருந்த சிசிடிவி காட்சிப் பதிவு அழிக்கப்பட்டதா?' - அப்போலோ பிரதாப் ரெட்டி புதிய தகவல் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப்பெற்றப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகப் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஜெயலலிதா மரணம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த பிரதாப் ரெட்டி ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக எங்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் விசாரணை ஆணையத்திடம் கொடுத்துள்ளோம். மருத்துவமனைக்கு வந்தபோது ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமடைந்தி…
-
- 0 replies
- 317 views
-
-
`ஜெயலலிதா எப்போது இறந்தார்?' - திவாகரன் அதிர்ச்சி தகவல் ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவலைச் சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் தேதி செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பின்னர், டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. இதனிடையே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தற்போது இருக்கிற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூறினர். இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசார…
-
- 2 replies
- 793 views
-
-
`ஜெயலலிதா எம்பாமிங் படிவத்தில் கையொப்பமிட்டது கார்த்திகேயனா?' - சசிகலாவை நெருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன், 130 நாள்களைக் கடந்துவிட்டது. விசாரணை, குறுக்குவிசாரணை எனத் தீவிரமாக இயங்கினாலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னும் விலகவில்லை. `இறுதி நாள்களில் என்ன நடந்தது என்ற முடிவுக்கு கமிஷன் வந்துவிட்டது. சசிகலாவுக்கு எதிரான விஷயங்கள் இதில் ஏராளம் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் ஆணைய வட்டாரத்தில். முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் உண்மையைக் கண்டறிவதற்காக, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. …
-
- 0 replies
- 548 views
-
-
பி.ஜே.பி-யில் இந்துகள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பல தரப்பு மக்கள் வரை அனைவரும் இருக்கிறார்கள். சாதி, மதம் பார்க்காமல் சமமாக நடத்துவதோடு, அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சந்தனக்கடத்தல் வீரப்பனை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் என மூன்று மாநில காவல்துறைக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இவர் 2004-ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய மூத்த மகள் வித்யா வீரப்பன், கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்குத் தற்போது மாநில இளைஞரணி துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. வித்யா வீரப்பன் வித்யா வீரப்பனிடம் ப…
-
- 0 replies
- 489 views
-
-
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது என்றும் நடப்பாண்டில் கடன் சுமையின் உயர்வை தவிர்க்க முடியாது என்றும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்க உருவாக்கப்பட்டிருந்த குழுவின் தலைவரான ரங்கராஜன் தனது அறிக்கையை இன்று சமர்ப்பித்தார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரான ரங்கராஜன், அடுத்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்ட…
-
- 0 replies
- 758 views
-
-
`தமிழ்நாடு என்ன அடிமை தேசமா?' - - அஞ்சல்துறை தேர்வில் தமிழ் ரத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! தேர்தல் முடிந்து நாளை அஞ்சல்துறை தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இரண்டு நாள் முன்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சல்துறை இந்திய அஞ்சல்துறை தொடர்பாக போஸ்ட்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாது என்று நேற்று முன்தினம் மத்திய அரசு தபால்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அஞ்சல்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான முதல்தாளுக்கான தேர்வு இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்த வேண்டும். இரண்டாம் தாளுக்கான தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் ந…
-
- 2 replies
- 919 views
-
-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு 1,043 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவின் இறுதியில், தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, செய்தியாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேக் வெட்டி கொண்டாடினார். வரும் புத்தாண்டுக்குள், நிச்சயமாக வாரியம் அமைக்கப்படும். திரையரங்குகளில், படம் திரையிடுவதற்கு முன் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. அதேபோல், திரையில் படத்தின் தலைப்பு போடுவதற்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்க…
-
- 0 replies
- 479 views
-
-
`துபாய் அரசு கற்றுக்கொடுத்த பாடம் இது!' - ஸ்ரீதேவி மரணமும் ஜெயலலிதா எம்பாமிங்கும் Chennai: நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம், திரையுலகத்தினரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய மறைவு திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம், அவருடைய மரணத்தில் எழும் சர்ச்சைகள் விவாதப் பொருளாகியிருக்கின்றன. துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 25-ம் தேதி அதிகாலை மாரடைப்பில் இறந்ததாகத் தகவல் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் பிரேதப் பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று வெளியானது. அதில், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்…
-
- 2 replies
- 917 views
-