Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விசாரணையை கோர்ட் கண்காணிக்க கோரி பேரறிவாளன் மனு - 10 ஆம் திகதி தீர்ப்பு [Friday, 2013-11-29 10:13:24] ராஜீவ்காந்தி கொலை குறித்து பல்நோக்கு ஒழுங்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்தி வரும் விசாரணையை கோர்ட்டு கண்காணிக்கவேண்டும் என்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வருகிற டிசம்பர் 10-ந் தேதி பிறப்பிப்பதாக தடா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில், விடுதலை புலி இயக்கத்தின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உட்பட பலர் இன்றும் தேடப்படும் குற்றவாளியாக உள்ளனர். எனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்த பின்னர், சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்டு பல்நோக்கு ஒழுங்குமுறை விசாரணை கண்காணிப்பு முகமையை (எம்.டி.எம்.ஏ.) 17-6-1999 அன்று மத்திய அரசு அமைத்தது. இந்த …

  2. அ.தி.மு.க சண்டையில் வேட்டி கிழிந்தால் கவர்னருக்கு ஏன் வியர்க்கிறது? ப.திருமாவேலன் கவர்னர் வித்யாசாகர் ராவ்தான் தமிழ்நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு வில்லன். எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தினகரனும் பாவம்... தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். வித்யாசாகர் ராவ் தெரிந்தே செய்கிறார். தவறுக்கு மேல் தவறைத் திட்டமிட்டுச் செய்கிறார். ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கொடுக்கும் இரண்டு கால்கள் கவர்னருடையவை. ‘ஏன் இப்படி நடந்துகொள்கிறார்’ என்பதற்கான காரணங்கள் பச்சையாக வெளியே தெரிந்தபிறகும், தெருவில் நாறிய பிறகும் வித்யாசாகர் ராவ் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்கான அசைன்மென்ட் ‘அவ்வளவு’ பெரியது போல! அ…

  3. ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் வருகையை மறைமுகமாக சாடியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ரஜினி மற்றும் கமல் இருவரின் அரசியல் வருகை, தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் முடிவு மற்றும் சிவாஜி கணேசன் மணிமண்டப விழா ஆகியவற்றை முன்வைத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். இதில் ரஜினி மற்றும் கமல் இருவரின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்திருக்கிறார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இரு துருவங்கள் இந்த சினிமாவில் எப்போதும் உண்டு. இந்த துருவங்களுக்கு அரசியல் ஆசையும் உண்டு. முந்தைய துருவங்கள் அரசியலில் ஈடுபடும் முன் மக்கள் பணியும் செ…

    • 0 replies
    • 563 views
  4. மு.க.ஸ்டாலின்: ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் இந்தியாவின் எதிரிகள் - முதல்வர் உரையின் 10 அம்சங்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN மலையாள மனோரமா பத்திரிகையின் 'இந்தியா 75' நிகழ்வில் இணைய வழியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், என் பிரியப்பட்ட மலையாள உடன்பிறப்புகளே என்று பேசத்தொடங்கி உரையாற்றினார். நான் கன்னூருக்கு வந்தபோது கேரள மக்கள் அளித்த வரவேற்பை என்னால் மறக்க முடியவில்லை என்று கேரள மக்களுக்கு நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து 2 நிமிடங்கள் மலையாளத்திலேயே பேசினார். இந்த பேச்சின்போது, இந்தியாவின் பன்மைத்தன்மை, திமுக பாஜக கூட்டணி குறித்த பேச்சு, சிபிஎ…

  5. மோதி சர்ச்சை - பார்த்திபன் விளக்கம்: “மோடிஜீக்கு ஜே என்றால் தேசிய விருதா?” நபில் அஹமது பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரதமர் மோதிக்கு ஆதரவாகப் பேசினால் தேசிய விருது கிடைக்குமா? என்ற பொருள்படும் வகையில் நடிகரும் இயக்குநரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சைக்குள்ளானது. இது பற்றி பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் அவர் விளக்கமளித்துள்ளார். அந்தப் பேட்டியின் உரை வடிவம். கேள்வி: 75ஆவது சுதந்திர தினத்திற்காக நீங்கள் அனுப்பிய ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது அது பற்றி உங்கள் கருத்து என்ன…

  6. ஆடு மேய்த்த பெண் மரணம்: சிறுவன் கைது; சந்தேகத்தில் வட மாநிலத்தவர் குடிசைகளுக்கு தீ வைத்ததாக 6 பேர் கைது பட மூலாதாரம்,GETTY IMAGES 26 மார்ச் 2023, 17:01 GMT புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர் நாமக்கல் மாவட்டத்தில் ஆடுமேய்க்க சென்ற பெண் முள் புதரில் ஆடைகள் கிழிக்கப்பட்டு, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில், ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தவிர, அருகே குடியிருக்கும் வட மாநிலத் தொழிலாளர்…

  7. கச்சதீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிடு செய்ய முடியாது என சென்னை மேல் நீதிமன்றின் மதுரைக்கிளை அறிவித்துள்ளது. சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், மேல் நீதிமன்ற கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக கச்சதீவு இருந்த நிலையில் 1974-ல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவு இலங்கையிடம் கையளிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார். அந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் தமிழக மீனவர்…

  8. சென்னை: செம்மரங்களை வெட்டியதாக 20 அப்பாவி தமிழர்களைப் படுகொலை செய்த விவகாரத்தில் ஆந்திரா அரசு தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள்தான் என்பதை பலியானோரின் செல்போன் அழைப்பு விவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளது. திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை கடந்த மாதம் 7-ந் தேதியன்று ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். ஆனால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் முன்னரே கைது செய்யப்பட்டு கொடூர சித்ரவதைகளுக்குக்குப் பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி இருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆந்திரா போலீசாரின் போலி என்கவுண்ட்டரை அம்பலப்படுத்துகிற சாட்…

    • 0 replies
    • 375 views
  9. நெய் திருடிய ரவுடி.. கடையை தாக்கி அட்டகாசம்.. கைது செய்த போலீஸ்.. பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம். ஒரு ரவுடி.. போயும் போயும் ஒரு நெய் பாட்டிலை திருடி மாட்டிக் கொண்டுள்ளார்.. விஷயம் வெளியே தெரிந்ததும், அரிவாளை கொண்டு பொதுமக்களை வெட்ட முயன்றபோது, போலீசாரிடம் சிக்கி.. விசாரணையின்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையையும் உடைத்து கொண்டுள்ளார்! தமிழகத்தின் முக்கிய இடங்களில் சரவணா ஸ்டோர் கடைகள் உள்ளன. அதில் நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையும் ஒன்று. ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கடை இது. அதனால் எப்பவுமே கூட்டநெரிசல் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சில ரவுடிகள் இங்கு திடீரென அரிவாளுடன் புகுந்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்துவிட்டனர்.…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருந்தார். இதன் மூலம் 13,988 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க இது உதவும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 'தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் பணி என்ற பழ…

  11. இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்! இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்தார். ஜூலை 13 ஆம் திகதி அதிகாலையில், ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டினார். மேலும், தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இலங்கை அதிகா…

  12. காவலர்களை நம்பி என் பிள்ளைகளை பள்ளிக்கும், வெளியிடங்களுக்கும் எப்படி அனுப்ப முடியும் என்ற பயம் வந்துவிட்டது

  13. வயதான காலத்தில் ஏராளமான குடும்பப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு முதியவர் பற்றி எதற்கு எழுத வேண்டும் என்று சமீப காலமாக நான் கலைஞர் பற்றி எழுதவில்லை. ஆனால் இந்த செய்தி என்னை எழுத வைத்து விட்டது. அவரது பிறந்த நாளுக்கு போப்பாண்டவர் வாழ்த்து தெரிவித்தார் என்று மீண்டும் மீண்டும் கலைஞர் டி.வி யில் செய்தி வெளியிட்டார்கள். போப்பாண்டவர் என்ன இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எதற்கு வாழ்த்து அனுப்ப வேண்டும். ஒரு வேளை இப்படி இருக்கலாம். சில கோயில்களுக்கு பணத்தை மணி ஆர்டர் அனுப்பினால், ரசீதோடு விபூதி, குங்குமம் அனுப்பி வைப்பார்கள். அது போல பணம் கட்டி வாழ்த்து வரவைத்திருக்கலாம், அல்லது பேரா…

  14. எனக்கு 40; உனக்கு 35... கணக்கு போடும் கட்சிகள்! வாக்குப்பதிவு குறைந்ததால் வலுக்கும் சந்தேகம்! மின்னம்பலம் சதவிகிதம் குறைந்தால் அரசுக்குச் சாதகம்; கூடினால் எதிர்ப்பு அலை என்று தேர்தல் வாக்குப்பதிவு குறித்து காலம் காலமாக ஒரு கணக்குச் சொல்லப்படுகிறது. இந்தத் தேர்தலிலும் அதே விவாதங்கள் தொடர்கின்றன. இந்தியாவில் நேற்று பொதுத்தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில், மிகவும் குறைவான வாக்குப்பதிவு நடந்திருப்பது தமிழகத்தில்தான். பயங்கரவாதத் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் நிறைந்த அஸ்ஸாமில் 82.15 சதவிகித வாக்குகளும், கடுமையான கட்சி மோதல்கள் நடந்து வரும் மேற்கு வங்கத்தில் 77.68 சதவிகித வாக்குகளும், அண்டை மாநிலமான கேரளாவில் 73.58 சதவிகித வாக்குகளும், மினி தமிழகமாகக் கருதப்…

  15. தமிழ்நாட்டு குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் - வைரமுத்து தமிழ்நாட்டில் படிக்கின்ற குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற ஒரு கருத்து வந்தாலொழிய இன்னோரு தலைமுறை தமிழுக்குள் போக முடியுமா என்பது தெரியாது என்று பிபிசி தமிழ் நேரலைக்கு அளித்த பேட்டியில் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். தற்கால தமிழ் கல்வியின் தரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைரமுத்து, இனமும், மொழியும் வளர வேண்டும் என்றால் அந்த தாய் மொழியை பேசக்கூடிய மக்கள் மொழியை பேண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், ''மனிதர் இல்லாவிட்டால் மொழி ஏது, இனம் இல்லாவிட்டால் மொழி ஏது, மொழிதான் இனத்திற்கு பெயர் வைக்கிறது. ஆனால் இனம் தான் மொழ…

  16. கல்வீச்சு, மண்டை உடைப்பு, சாலை மறியல் - ஆர்.கே.நகரில் பதற்றம்! ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இப்போதுதான், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இடைத்தேர்தலுக்கே உரித்தான கல்வீச்சு, மண்டை உடைப்பு, சாலை மறியல் போன்றவை அரங்கேறியுள்ளன. ஆர்.கே.நகர் நேதாஜி நகர் ஏரியா-வுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் டி.டி.வி.தினகரன் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்த பகுதியில் தான் ஏப்ரல் 6-ம் தேதியான நேற்று, ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி.தினகரனும் தேர்தல் பிரசாரம் செய்ய வந்தனர். அதனால் இரு அணியை சேர்ந்தவர்களும் தங்களது பலத்தை காட்ட ஆட்களை திரட்டி வைத்து இருந்தனர். ஒரு பிரசார வேனில் ஜெயலலிதா பேச்சுகள் ஒளிப…

  17. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப் பட்டதால், பழனிசாமியை பதவியிறக்கி விட்டு, தினகரனை முதல்வராக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு இறங்கியுள்ளது. 'கூஜா துாக்கி' களின் இந்த திட்டத்தை முறியடிக்க, சசி எதிர்ப்பு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், அமைச்சர் கள் பலர் தீவிரம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக அறிவிக்கப்பட்ட சசிகலா, சிறையில் அடைக்கப் பட்ட பின், கட்சியின் முழு கட்டுப்பாடும், தினகரன் கைக்கு வந்து விட்டது. சசிகலாவை ஆதரித்த அதே கும்பல், இப்போது தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அவரை நிறுத்தி வெற்றி பெற வைக்கவும், பண பலத்துடன் களமிறங்கி யது. தினகரன் வெற்றி பெற்ற பின், அவரை முதல்வராக்கவும…

  18. தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறை, சமுதாயத்தின் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும் அவ்வாறு ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்ய மாற்றாக கடைப்பிடிக்க வேண்டிய முறை குறித்தும் ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையிலான உயர்நிலைக்குழுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்த குழுவில் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துதறை சிறப்புப் பணி அலுவலர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர், மருத்துவ கல்வி இயக்கக கூடுத…

  19. தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். `கடந்த 5 ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு சரியவில்லை' என அமைச்சர் தெரிவித்தார். வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் என்ன? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, `அரசின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்' என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தியது. அதேநேரம், கடந்த சில வாரங்களாக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்…

  20. இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு தன்னை அழைக்காதது குறித்த கேள்விக்கு, அவர்கள் யார் என்னை அழைப்பதற்கு என சாட்டையடி பதில் தந்துள்ளார் திமுக தலைவரும் திரையுலகின் மூத்த எழுத்தாளருமான கருணாநிதி. தமிழ் சினிமாவில் தன் வசனங்களால் பெரும் மாறுதல்களை உண்டாக்கியவர் என்ற பெருமை மு கருணாநிதிக்கு உண்டு. ஒரு படத்தின் ஹீரோவுக்கு நிகராகப் பேசப்பட்டவை அவரது நெத்தியடி வசனங்கள். தமிழ் சினிமாவில் கதை வசன ரெக்கார்டுகள் ஏராளமாய் விற்க ஆரம்பித்ததே இவர் காலத்தில்தான் என்ற உண்மையை பலர் வசதியாக மறந்துவிட்டனர்.தன் 20 வயதில் ராஜகுமாரி படத்துக்காக முதல் முதலில் வசனம் எழுதினார் கருணாநிதி. அதில் நாயகன் புரட்சி நடிகர் எம்ஜிஆர். தொடர்ந்து எம்ஜிஆர் படங்களுக்கு அவர்தான் ஆஸ்தான வசனகர்த்தா எ…

  21. பழனிசாமி - தினகரன் மோதல் அதிகரிப்பு கட்சி நாளிதழில் முதல்வர் படம், செய்திக்கு தடை முதல்வர் பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. அதனால், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், முதல்வர் படம் மற்றும் செய்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின், அதிகாரப்பூர்வ நாளிதழ், 'நமது எம்.ஜி.ஆர்.,' இதன் நிறுவனரான ஜெயலலிதா மறைவுக்குப்பின், நாளிதழ் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்ட போது, பன்னீர் அணிக்கு எதிரான செய்திகள், அதிகம் வெளியாகின. துணை பொதுச் செயலராக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் உள்ளதால், …

  22. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது நிரூபணம்.. கருவேல மரம் வெட்ட பிறப்பித்த தடையை.... நீக்கிய ஹைகோர்ட். தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வளந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களின் காரணமாக நிலத்தடி நீர் வளம் உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அவற்றை அகற்ற உத்தரவைட வேண்டும் என்று கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 11ம் தேதியன்று பிறப்பித்த உத்தரவில் இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பொதுநல மனு: …

  23. தமிழீழம் என்பதே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்பதை உலக நாடுகளிற்க்கு உணர்த்தும் வகையில், ஜனவரி 1 முதல் 15 வரை தமிழக மாணவர்களினால் தமிழகத்தில் தனி ஈழத்திற்கான மாதிரி பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : இந்தியாவும் சர்வதேசமும் தொடர்ந்து தனி ஈழ கோரிக்கையை மட்டுப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் நமது கோரிக்கையை அழுத்தமான முறையில் பதிவு செய்வதும் மக்களிடையே எடுத்துச் செல்வதும் இப்போது அவசியம். ஆகவே அரசாங்கமானது போராட்டத்தை ஒடுக்கிவரும் இந்த சூழலில் மக்களிடையே நமது கோரிக்கையை எடுத்து செல்வதற்காக தமிழகம் முழுவதும் தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பை இளைஞர்க…

  24. ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 5 பேர் இலங்கை சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது விடுதலையாகி தாயகம் திரும்புவார்கள் என கண்ணீருடன் காத்திருக்கின்றன அவர்களது குடும்பங்கள். இலங்கை சிறையிலுள்ள மீனவர் பிரசாத்தின் மனைவி ஸ்கெனிடா தனது குழந்தைகள் ரோசன் மற்றும் ஜெயஸ் உடன் நவம்பர் மாதம் 28, 2011 அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத் மற்றும் லாங்நெட் ஆகிய 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்கள் மீது இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. மீனவர்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு அப்பாவி மீனவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என உண…

  25. ’இரட்டை இலை!’- உச்ச நீதிமன்றத்தை நாடினார் தினகரன் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணைக்குத் தடை கேட்டு, டி.டி.வி.தினகரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். கூடுதல் ஆவணம் தாக்கல்செய்ய கால அவகாசம் வேண்டும் என்பதால், இன்று நடக்கவிருக்கும் தேர்தல் ஆணைய இறுதி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தினகரன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. கட்சிப் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள், டி.டி.வி.தினகரன், தீபா ஆகியோர் தாக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.