தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
“சின்னம்மா என அழைப்பவர்கள் அப்பாவிகளா?” இலக்கிய விழாவில் அரசியல் பேசிய ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகில் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் எழுத்தாளர்கள் சாருநிவேதிதாவும் ஜெயமோகனும். ஒருமுறை ‘உயிர்மை’ புத்தக வெளியீட்டுவிழாவில் ‘ஜெயமோகனின் புத்தகம் கவிஞர் மனுஷ்யபுத்திரனை இழிவுபடுத்துகிறது’ என்று அந்தப் புத்தகத்தை மேடையிலேயே கிழித்தெறிந்தார் சாருநிவேதிதா. ஆனால், திடீரென்று தமிழ் சினிமாவில் வரும் திடுக்கிடும் திருப்பத்தைப் போல, ‘தம்பி ஜெயமோகன் ’ என்று உறவு பாராட்ட ஆரம்பித்தார் சாருநிவேதிதா. இருவருக்கும் இடையில் இணக்கம் நிலவும் சூழலிலும் இருவரும் ஒரே மேடையில் பேசியதில்லை. அந்த அதிசயமும் நிகழ்ந்தது சமீபத்தில். அராத்து எழுதிய ஆறு புத்தகங்களின் வெளியீட்டு விழா ஜன…
-
- 0 replies
- 899 views
-
-
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர் Halley KarthikPublished: Sunday, July 13, 2025, 19:33 [IST] சென்னை: காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களத்தில் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த தவெகவினர், சீமானையும், உதயநிதி ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த பிரச்சனை தொர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோராப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அனுமதியை மறுத்திருந்தது. இதனையடு…
-
-
- 9 replies
- 758 views
- 1 follower
-
-
எழுத்தாளர் சுஜாதா எனும் ரங்கராஜன் அவர்களைப் பற்றி அவரது மனைவி சுஜாதா அவர்கள், தனது கணவர் மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தினகரன் நாளிதழுடன் வெளிவரும் வசந்தம் இதழுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா பற்றி ஒரு பிம்பம் உருவாக்கி வைத்து இருந்தவர்களுக்கு இதைப் படிக்கும் போது வருத்தமாகவும் அதை ஜீரணிக்க முடியாமலும் இருக்கிறது. சுஜாதா என்றில்லை எந்த பிரபலத்தின் ரசிகர்களுக்கும் இது பொருந்தும். இதன் காரணமாகவே அந்தப் பிரபலம் தவறு செய்து இருந்தாலும், அதை நியாயப்படுத்தி பேச வேண்டியதாகி விடுகிறது. கொஞ்சம் பக்குவப்பட்டவர்கள் என்றால் அது அவர் தனிப்பட்ட விஷயம் என்பதை புரிந்து கொண்டு அதிகம் அது பற்றி கவலைப்படாமல் இருந்து விடுவார்கள். நானும் ஒரு கணவன், இரு குழந்தைகளுக்கு…
-
- 10 replies
- 781 views
-
-
“ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்... கூவத்தூர் கதை... ஜெயித்த சத்தியமூர்த்தி... தோற்ற தாமரைக்கண்ணன்!” #NewsChat ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்! * ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் சென்னைப் போலீஸ் கமிஷனர் மற்றும் டி.ஜி.பி அந்தஸ்தில் இருந்த ஜார்ஜ், வட சென்னை கூடுதல் கமிஷனர் சாரங்கன், வட சென்னை இணை கமிஷனர் நிர்மல் குமார் ஜோஷி, புதுவண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார் உள்ளிட்ட 22 அதிகாரிகள் மீது எதிர்க்கட்சியினர் புகார் கிளப்பினர். அதையடுத்து, அவர்களைக் கூண்டோடு மாற்றியது தேர்தல் கமிஷன். கடந்த இரண்டு வாரங்களாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் நின்றுபோன மறுநாளே இவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கியிருக்கவேண்டும். ஆ…
-
- 0 replies
- 389 views
-
-
“ஜெ. வெற்றிடத்தை வைகோவால் நிரப்ப முடியாது! - திருமா அதிரடி “மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறினாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து செயல்படும்” என்று சொல்கிறார், இந்த அணியைத் தொடங்குவதற்கு முன்முயற்சி எடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். திருமாவளவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். “மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ அறிவித்துள்ளாரே?” “கூட்டணியில் இருந்து விலகுவதாக அண்ணன் வைகோ அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக மக்கள் நலக் கூட்டணியை மிகச் சிறப்பா…
-
- 0 replies
- 511 views
-
-
“ஜெயலலிதா அப்போலோவுக்கு கொண்டுவரப்பட்டபோது...” - மர்மம் உடைக்க வருகிறது சி.பி.ஐ ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழ ஆரம்பித்துள்ளன. ‘கூட்டாளிகள் பிரிந்தால்தான் களவாணி வெளிப்படுவான்’ என்பார்கள். அ.தி.மு.க இரண்டுபட்டதால் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சில இருண்ட பக்கங்கள் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்ல ஆரம்பித்துள்ளார். அவருக்கு ஆதரவாக இருக்கும் 12 எம்.பி-க்கள் கடந்த 27-ம் தேதி அன்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ‘குற்றவாளியை நெருங…
-
- 2 replies
- 2.6k views
-
-
“ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!” திவாகரன் தடாலடி ‘‘பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கக் கூடாது. ‘எங்களிடம் இரண்டு எம்.எல்.ஏ-க்கள்தான் குறைவாக இருக்கிறார்கள். பாதாளம் வரை செல்லும்’ என ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். மீடியாவை, மக்களை, தொண்டர்களை முட்டாளாக நினைத்து இப்படிச் செல்கிறார். அமைச்சர் சொல்லக்கூடிய வார்த்தையா அது? இது மைனாரிட்டி கவர்ன்மென்ட் ஆகிவிட்டது’’ எனச் சூடாக ஆரம்பிக்கிறார் திவாகரன். ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என 19 எம்.எல்.ஏ-க்கள் தினகரன் பக்கம் வந்துவிட்டார்கள். இந்தச் சூழலில், ‘அடுத்து என்ன செய்யப்போகிறார…
-
- 0 replies
- 5.3k views
-
-
“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்!" சீக்ரெட் சொல்கிறார் எம்.பி. நாகராஜன் ஜெயலலிதா இருக்கும்போது, ‘இவர்களுக்கெல்லாம் பேச்சு வருமா?’ என்று சந்தேகப்படும்படி இருந்த பலரும் தினம்தோறும் கொடுக்கிற அதிரடி பேட்டிகளால் அ.தி.மு.க மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகமும் திணறுகிறது. இந்நிலையில், ‘‘நான் உண்மைகளை வெளியிட்டால் ஆட்சிக்கு நெருக்கடி உருவாகும். என் உயிருக்கேகூட ஆபத்து ஏற்படும். அந்த அளவுக்கு உண்மைகள் என்னிடம் புதைந்துள்ளன’’ என அதிர வைத்திருக்கிறார் கோவை எம்.பி. நாகராஜன். உயிருக்கே ஆபத்து வரும் அளவுக்கு என்ன ரகசியத்தை வைத்திருக்கிறார் அவர்? கோவை கோவில்பாளையத்தில் உள்ள நாகராஜனின் வீட்டுக்குச் சென்றோம். எம்.பி என்பதற்கான எந்த அடையாளமும் இ…
-
- 0 replies
- 3.6k views
-
-
“ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லையா? அப்போ அப்போலோ CCTV காட்சிகளை வெளியிடுங்கள்!” - சசிகலா புஷ்பா அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச் செயலாளராக விளம்பரப்படுத்திக்கொள்ளும் சசிகலாவை எதிர்த்தும், ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் சசிகலா புஷ்பாதான் இப்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக். எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத காரியத்தைத் தைரியத்துடன் செய்திருக்கும் சசிகலா புஷ்பா விகடனுக்கு அளித்த சிறப்பு பேட்டி. ‘‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறீர்களே?’’ ‘‘அம்மாவின் மரணத்தில் ஏதோ ஒன்று மக்களுக்குத் தெரியக…
-
- 0 replies
- 540 views
-
-
“ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களில் உடன் இருந்தவர்களை விசாரிக்க வேண்டும்!” ஆவேச சசிகலா புஷ்பா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா-வின் மரணத்தில், சந்தேகமிருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பலவித சந்தேக கணைகளை வீசி வருகின்றனர். இதில், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பேசிய ஆடியோ வாட்ஸ் அப் ஒன்றும் வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்த ஆடியோவில் இருக்கும் குரல் அவருடையதுதானா என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், (8-12-16) கோவையில் அதனை அவர் உறுதி செய்துள்ளார். ஜெயலலதாவின் மரணத்தில் சந்தேகம்! ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில், எங்களுக்குப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து ஜெயலலிதாவை ஒருமுறைகூட நேரில் காட்டவில்லை. ஒரு …
-
- 0 replies
- 518 views
-
-
“ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது கொடூரம்” – எடப்பாடி SelvamAug 13, 2023 13:06PM ஜெயலலிதா சேலை சட்டமன்றத்தில் இழுக்கப்பட்டது பற்றி ஸ்டாலின் பொய்யான தகவலை தெரிவித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் போது பேசிய கனிமொழி எம்.பி, “மகாபாரதத்தில் திரெளபதி துகிலுரிக்கப்பட்டார். அவரை காப்பாற்ற கிருஷ்ணர் வந்தார். மணிப்பூரில் தங்களை காப்பாற்ற யாரும் வர மாட்டார்களா என்று அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்று பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பெண்களுக்கு எங்கு பிரச்ச…
-
- 2 replies
- 607 views
- 1 follower
-
-
“ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு!” எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் - படங்கள்: பா.காளிமுத்து சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு வைகோவுடன் நடத்தும் முதல் சந்திப்பு இது. செம உற்சாகத்தில் இருக்கிறார் வைகோ. காரணம், எட்டு ஆண்டுகளாக நடந்த அரசு விரோத வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்கிறது. கறுப்பு சால்வையைச் சரிசெய்துகொண்டே கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார். ‘‘எட்டு ஆண்டுகளாக நடந்த வழக்கில் இருந்து விடுதலையாகி இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?” ‘‘பாலகங்காதர திலகர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்ற புகழ்வாய்ந்த தலைவர்கள் மீது, ஆங்கிலேயர் ஆட்சியின்போது எந்தப் பிரிவுகளில் வழக்கு போட்டார்களோ, அதே ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
“டயர் சைஸ் கூட இல்லை, உனக்கு பஸ் வேணுமான்னு கேப்பாங்க” - பேருந்து ஓட்டுநராக துடிக்கும் ஷர்மிளாவின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான ஷர்மிளா பார்மசியில் டிப்ளமோ முடித்துள்ளார். தற்போது முழு நேரமாக ஆட்டோ ஓட்டி வரும் ஷர்மிளா, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாக கொண்டுள்ளார். பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சி பெற்று அதற்கான உரிமமும் பெற்றுள்ளார். ஆண்கள் மட்டுமே அ…
-
- 0 replies
- 756 views
- 1 follower
-
-
சென்னை: “எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக் குழு கூட்டத்தில் உரையாற்றிய சீமான், “நாம் தமிழர் கட்சியின் வெற்றிதான் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும். மக்களாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிற மண்ணில் ஆட்சி அதிகாரம்தான் எல்லா மாற்றத்துக்கும் அடிப்படையாக இருக்கும். இங்கே நம்முடைய மொழியை பே…
-
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
“தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” – தோழர் பெ.மணியரசன் உரை! “தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” நா.ப.இராமசாமி நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் உரை! தமிழின உணர்வாளர்களுக்கு நாமக்கல் பகுதியில் துணை நின்ற திரு. நா.ப.இராமசாமி அவர்கள் கடந்த 23.09.2013 அன்று நாமக்கலில் காலமானார். அவரது நினைவேந்தல் நிகழ்வு 10.10.2013 அன்று நாமக்கல் – திருச்செங்கோடு சாலை – சுப்புலட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சிலம்பொழி சு.செல்லப்பன் அவர்கள் தலைமையேற்றார். திராவிடர் விடுதலைக் க…
-
- 0 replies
- 787 views
-
-
“தமிழ்நாட்டை இந்தியா அழிக்க வேண்டும் என நினைக்கிறது”- இயக்குநர் கௌதமன்
-
- 0 replies
- 245 views
-
-
“தயார் நிலையில் துணை ராணுவம்” - தமிழக அரசுக்கு செக் வைக்க துடிக்கும் மோடி அரசு! தலைவர்களே இல்லாமல் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக இளைஞர்கள் போராட்டக்களத்தில் இறங்கி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. வரலாற்றில் இடம்பிடித்துள்ள இந்தப் போராட்டத்தைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாமல் தவித்து வருகிறது. எந்தவித வன்முறையும் இல்லாமல், அறவழியில் நடைபெறும் இந்தப் போராட்டம் ஆரம்பித்தபோது, அதை சாதாரணமாக நினைத்தது தமிழக காவல்துறை. அதன்பிறகு நாட்கள் செல்லச்செல்ல... அதன் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கையைப் பிசைந்து நிற்கிறது. இந்த நிலையில், துணை ராணுவம்மூலம் பூச்சாண்டி …
-
- 2 replies
- 576 views
-
-
“தி வேர்ல்ட் பெஸ்ட்” சம்பியன் சென்னைச் சிறுவன் லிடியன் : 1 மில்லியன் டொலர் பரிசு “தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்” நிகழ்ச்சியின் சம்பியன் பட்டதைச் சுவீகரித்த சென்னையைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரதத்துக்கு 1 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்றுவரும் “தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்” என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியிலேயே 13 வயதான சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் சம்பியனாகி உலகப்புகழைப் பெற்றுள்ளார். கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் குழுவாகவும், தனி நபராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளர் வர்சனின் மகனான பியானோ கலைஞன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்ட…
-
- 2 replies
- 451 views
-
-
“தினகரனா... யார் சார் அது...?” - ஆர்.கே.நகர் வல ஆச்சரியம்! #VikatanExclusive ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி அதிகாரப் போட்டியின் காரணமாக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசியலுக்குள் நடைபெற்ற காய்நகர்த்தல்கள் இந்தியாவையே உற்றுப் பார்க்கவைத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா சிறைசென்றுவிட, அவர் முன் மொழிந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளார். கட்சிப் பொறுப்பிலோ, டி.டி.வி தினகரனை அ.தி.மு.க-வின் துணைப்பொதுச் செயலாளராக நியமித்துவிட்டுச் சென்றுள்ளார் சசிகலா. ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே.நகர் தொகுத…
-
- 1 reply
- 531 views
-
-
“தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! “சித்தியிடம் கேட்டு முடிவு சொல்கிறேன்” என அமைச்சர்களிடம் தினகரன் தரப்பு சொன்ன கால அவகாசம் முடிந்தது தான் தங்கமணி வீட்டில் நடந்த அவசர கூட்டத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்தே தினகரன் மீது அமைச்சர்கள் சிலர் வருத்ததில் இருந்துள்ளார்கள். மக்கள் செல்வாக்கும் இல்லை, கட்சியினர் செல்வாக்கும் இல்லை, எதற்காக இவர் கட்சியை கைப்பற்ற துடிக்கின்றார் என்று மூத்த அமைச்சர்கள் சிலரே முணுமுணுத்தனர். அடுத்து இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதும் அ.தி.மு.கவில் அடித்தளத்துக்கே ஆபத்து வந்ததை அக்கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உணரத்துவங்கினார். சின்னத்தை மு…
-
- 0 replies
- 1.2k views
-
-
“தினகரன் அணியில் முதல்வரின் ஸ்லீப்பர் செல்ஸ்!” - பரபர பின்னணி #VikatanExclusive தினகரன் அணியிலிருக்கும் பெரும்பாலான எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், முதல்வரின் 'ஸ்லீப்பர் செல்ஸ்' எனத் தெரியவந்துள்ளதால், தினகரன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைய 30 நாள்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தார் தினகரன். 'ஆகஸ்ட் புரட்சி' என்று காத்திருந்த தினகரனுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தின…
-
- 0 replies
- 381 views
-
-
“தீபா கேட்டதும்... பன்னீர்செல்வம் மறுத்ததும்!” - முன்னாள் நிர்வாகி சொல்லும் தகவல் தெளிவற்ற அரசியல் நிலைப்பாடுகளால் தீபா அணியின் ஆதரவுக்கூட்டம் கரைய ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஒற்றை பதிலுக்காக பதைபதைப்போடு காத்திருக்கும் ஓ.பி.எஸ் அணிக்கு இப்போது சற்று ஆறுதலாக இருப்பது தீபா அணியிலிருந்து இங்குவந்துசேரும் ஆதரவாளர்கள்தான். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அவரது அண்ணன் மகளான தீபா, சசிகலாவுடனான கடந்த கால கசப்புகளை மனதில் கொண்டு அதிரடியாக சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். ஓ.பி.எஸ் சசிகலாவுடன் சுமூகமாக இருந்த இந்த நாட்களில் , சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருந்த தொண்டர்கள் சாரி சாரியாக திரண்டுவந்து தீபாவுக்கு ஆதர…
-
- 0 replies
- 399 views
-
-
“துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! “துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! மரியாதைக்குறிய விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு வணக்கம்! இந்த பூமிப்பந்தின் மூத்த மொழியான எங்களின் தமிழ் மொழியை பேசிய ஒரே காரணத்திற்காக ஈழ மண்ணில் லட்சக்கணக்கான எங்கள் தமிழ் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொண்று குவித்தது இலங்கை அதிகார வர்க்கம். அதனை தடுத்து நிறுத்தவே நெருப்பென தலைத்தூக்கி எங்கள் மண்ணை, மானத்தை, உரிமைகளை, உயிர்களை பாதுகாத்தவர்கள் எங்கள் போராளிகள். வீரம் செறிந்த அந்த விடுதலைப்போரட்டத்தில் அறுபத்தியெட்டாயிரம் பேர் தங்கள் உயிர்களை “தற்கொடை”களாக தந்து வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: “தேர்தலுக்குத் தயாராகுங்கள்!” - முடுக்கிவிடப்படும் தி.மு.க. சிறகுகளை விரித்து நம்முன் குதித்த கழுகார், தனது செல்போனில் இருந்த படங்களை வரிசையாகக் காட்டினார். முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்து பார்வையிட்டப் படங்கள் அவை. ‘‘ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு ‘முரசொலி’ அலுவலகத்துக்கு கருணாநிதி வந்ததால், தி.மு.க-வினர் உற்சாகமாக உள்ளார்களே’’ என்றோம். ‘‘ஆமாம்! தீபாவளிக்கு மறுநாள் தி.மு.க தொண்டர்களின் வீடுகளில் திடீரென பட்டாசுகள் வெடிக்க, கருணாநிதியின் வருகை காரணமாகிவிட்டது. ‘முரசொலி’ நாளிதழின் பவளவிழாவிற்காக, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ‘முரசொலி’ அலுவலகத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் ‘இந்து’ என்.ர…
-
- 0 replies
- 1.3k views
-
-
“நம்பி மோசம் போய்விட்டேன்!” - கொந்தளிக்கும் சசிகலா #VikatanExclusive முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நடத்திய பொதுக்குழுவில், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியை ரத்துசெய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, சசிகலா எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். தற்போது, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோர்மீது சசிகலா கோபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுக்குழுவில் அ.தி.மு.க வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்ந்தெடுத்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்தான், அவரை அந்தப் பதவியிலிருந்த…
-
- 0 replies
- 7.1k views
-