Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதாவிற்கு செலவு செய்த அந்த குடும்பத்தார் யார்?: தீபா கேள்வி மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு ஆன செலவினை வழங்கிய குடும்பத்தினர் யார் என்று தமக்கு தெரியவில்லை என்று தீபா கூறியுள்ளார். சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த…

  2. தேனி அருகே கம்பம் நகரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரிக்க சதி செய்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. ஈழத்தமிழர்களுக்காகவும், முல்லை பெரியாறு பிரச்சினைக்காகவும், சிறுபான்மை சமுதாய மக்களுக்காகவும் எங்கள் கட்சி போராடி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும் அசைக்கமுடியாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நான் இல்லை. எந்த அணியில் சேர்ந்து எம்.பி.யாக ஆனேனோ அந்த நன்றியை மறக்க மாட்டேன். தி.மு.க.வே எங்ளோடு கூட்டு வேண்டாம் என்று கூறினால் கூட அதைப்பற்றி நாங்கள் கவலை படமாட்டோம். என்றும் நாங்கள் த…

    • 0 replies
    • 320 views
  3. முதல்வருக்கு எதிராக நீதிபதி போராட்டம்? புதுடில்லி:'தமிழகத்தில் அமைந்துள்ள, சிறையில் இருந்து நடத்தப்படும் பினாமி ஆட்சி நீக்கப்படும் வரை என் போராட்டம் தொடரும்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். 'தமிழன் என்று கூறிக் கொள்வதற்கு வெட்கப் படுகிறேன்' என, நேற்று முன்தினம், 'பேஸ்புக்' சமூகவளைதளத்தில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து, தன் கருத்தை வெளியிட்டி ருந்தார், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. இந்த நிலையில், நேற்று பதிவிட்டுள்ள மற்றொரு செய்தியில், அவர் கூறியுள்ளதாவது: தமிழர் குறித்து நான்கூறியுள்ள கருத்துக்கு வந்துள்ள பதில்கள், …

  4. பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FUNDAOPRNCIPE_FFI கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மாசு குறைந்ததால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு 19 ஆயிரம் ஆமை முட்டைகள் மண்டபம் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன. இவை பொரிப்பகத்தில் வைக்கப்பட்ட பின் பிறந்த ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. உலகில் உள்ள ஏழு வகை கடல் ஆமைகளில் சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய ஐந்து வகை கடல் ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. ஆண் ஆமையோடு இனப் பெருக்கம் செய்த பெண் ஆமையானது முட்டையிடுவதற்காக மணல்பா…

  5. spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்ட, சசிகலா அக்கா மகன் தினகரனை, ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, கோர்ட் அனுமதித்துள்ளது. தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரி…

  6. மதுரையில் காப்பக குழந்தைகளை லட்சக்கணக்கான விலைக்கு விற்ற சம்பவம்; 2 தம்பதியர் உட்பட 7 பேர் கைது மீட்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு. மதுரை மதுரையில் காப்பக குழந்தைகளை லட்சக்கணக்கான விலைக்கு விற்ற சம்பவத்தில் 2 தம்பதியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர், சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில், சுற்றித்திரியும் முதியவர்கள், குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு உதவி செய்வதோடு, காப்பகங்களிலும் தங்க வைக்க முயற்சி செய்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் மதுரை ஆயுதப்பட…

  7. அவர் பேசக்கூடாதுனு சொல்லிவிட்டார்! கலகலத்த அமைச்சர் வேலுமணி இரு அணிகளின் பேச்சுவார்த்தை பற்றி மீடியாவில் பேசினாலே பிரச்னை அதிகமாகத்தான் ஆகிறது என்று கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இதுதொடர்பாக அதிகமாக பேட்டிக்கொடுக்காதீர்கள் என்று முதலமைச்சரே சொல்லியிருக்கிறார் என்று தெரிவித்தார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இருஅணிகளின் பேச்சுவார்த்தை பற்றி மீடியாவில் பேசினாலே பிரச்னை அதிகமாகத்தான் ஆகிறது. அதிகமாக பேட்டிக்கொடுக்காதீர்கள் என்று முதலமைச்சரே சொல்லியிருக்கிறார். நேரடியாக பேசும்போதுதான் கோரிக்கைகள் வைப்பது சரியாயிருக்கும். மீடியாவில் நாங்கள் சொல்லி, அவர்கள் சொல்லி வேறுவிதமான சூழ்நிலை உ…

  8. நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் ஆகும். இந்த ரயில் நிலையங்கள் ரயில்வேதுறைக்கு வரும் வருமான அடிப்படையில் தற்போது ஏ கிரேடு ரயில் நிலையமாக உள்ளன. நாகர்கோவில் ரயில் நிலையம் மூலம் ரயில்வேதுறைக்கு 2011-12-ம் நிதி ஆண்டில் 26 கோடி 27 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. http://tamil.oneindia.in/news/2013/09/08/tamilnadu-nagerkovil-railway-station-extension-works-are-stagnant-183011.html

  9. ‘எதிரிக்கு எதிரி; நமக்கு நண்பன்!’ - சசிகலாவின் கூட்டல் கழித்தல் கணக்கு #VikatanExclusive அ.தி.மு.க-வில், சசிகலாவின் குடும்பத்தினரை ஓரம்கட்ட முடிவுசெய்துள்ள நிலையில், 'எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்' என்ற ரீதியில் அவர்கள் குடும்பத்துக்குள் சில வாக்குறுதிகளுக்கு சசிகலா தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என அணிகள் உருவாகிவருகின்றன. சசிகலா, டி.டி.வி.தினகரன் சிறைக்குச் சென்ற பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், சுமுகத் தீர்வு எட்டப்படவி…

  10. தங்கர்பச்சான் மக்களின் மேல் கொள்ளும் கோவம்

    • 0 replies
    • 460 views
  11. ”தெனாலி’ திரைப்படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும். நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது’ என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். ‘இலங்கைப் பிரச்சினையைப் பற்றி ஒரு திரைப்படமும் எடுக்க முயல முடியாது. இங்கே கருத்துரிமை கிடையாது. ஜெயகாந்தன், பெரியார் காலத்தில் அவர்கள் அனுபவித்த கருத்துச் சுதந்திரம் தற்போது ஒரு கலைஞர்களான எமக்கு கிடையாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். - See more at: http://newsalai.com/cinemas/?p=914#sthash.b0cAfpky.dpuf

  12. அன்று ஆடிய ஆட்டம் என்ன? இன்று ஓடிய ஓட்டம் என்ன? ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வரும்போது அவர்களை மீடியாக்கள் படம் பிடிப்பது புதிய விஷயம் அல்ல. ஆனால் ஜூன் 6 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கே.டி.பிரதர்ஸை படம் பிடிக்க முயன்ற மீடியாக்களைச் சிலர் பகிரங்கமாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலகட்டமான 2004 முதல் 2007 வரையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கு அது. சென்னை போட் கிளப்பில் உள்ள தயாநிதியின் வீட்டில் சட்டவிரோதமாக அதிவேக தொலைத்தொடர்பு இணைப்பகம் இருந்ததாகவும் அதனை சன் குழும தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்குப் பயன்படுத்தியதாகவும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத…

  13. தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்: சில முக்கிய தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER தமிழகத்தில் "மீண்டும் மஞ்சப்பை - விழிப்புணர்வு இயக்கம்" நிகழ்ச்சியை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மஞ்சள் பைதான் சூழலுக்கு - சுற்றுச்சூழலுக்கு சரியானது - அழகான - நாகரிகமான - பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளை கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப் பயணம்," என்றார். …

  14. ஆளுநரை சந்திக்க தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் முடிவு! இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி, 'கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தினகரன் நியமனம் சட்டவிதிகள்படி செல்லாது. அவர் நியமித்த கட்சியின் புது நிர்வாகிகளின் பதவிகளும் செல்லாது' என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தஞ்சாவூரில் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டவிதிகளின்படிதான் தன்னை பொதுச்செயலாளர் சசிகலா நியமித்ததாக சொன்னார். இந்த நிலையில், அண்மையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் எழுப்பிய ஒரு கேள்விக்கு தேர்தல் கமிஷன் அளித்த பதில் வைரலாக இன்று மாலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறத…

  15. 06.01.2014 சென்னை பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா?, தனித்து போட்டியா? என்பது குறித்து உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தே.மு.தி.க. மாநில மாநாட்டில் முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார். சென்னையை அடுத்த பொன்னேரியில் நடந்த தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:– மக்களை ஏமாற்ற சதி தற்போது, தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி நாட்டை இருட்டாக்கிவிட்டுவிட்டு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறிவருகிறது. மக்களை ஏமாற்ற சதி வேலை செய்கிறது. என் மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன். என்றைக்கும் நான் அனாவசியமாக பேச மாட்டேன். எப்போதும் உண்மையைத்…

  16. கோவை: அணியாகப் போட்டியிட்டு திமுக, அதிமுகவை வீழ்த்தி பேரூராட்சியை கைப்பற்றிய சுயேச்சைகள் மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக, அதிமுக என்கிற இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி கோவை மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சியை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மாநகராட்சியும் ஏழு நகராட்சிகளையும் 31 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியு…

  17. பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நடந்த நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய சீமான், தேர்தலுக்கு பிறகு புலிபாய்ச்சல் என்ற வேலைத் திட்டத்தை வைத்து சீறிப்பாயப் போவதாக அறிவித்திருந்தார். புலிக்குட்டி எதுவும் சீறிப்பாய்வது போல தெரியவில்லை. ஆனால், சீமானை பற்றி பல பூனைக்குட்டிகள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார். பச்சமுத்து ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறாராம். உலகமே காறி துப்பும் ஒரு கல்விக் கொள்ளையனான பச்சமுத்துவை பற்றி எஸ்.ஆர்.எம் மாணவர்களிடமோ இல்லை பணம் கட்டிய…

  18. மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதற்கான தடையை நீக்குங்கள் – மக்களவையில் திருமா வலியுறுத்தல்! கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதம் மாறிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தடை இருப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களவையில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த மக்களை பட்டியலினத்தவர் பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீட்டினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். https://athavannews.com/2023/13…

  19. "நாங்கள் பேசும் பேச்சுக்களும் உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் அளிக்கும் பதில்களும் எம்மை மட்டும் அல்ல, எமது வடமாகாண சபையையும் பாதிக்கக்கூடும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறக்கக்கூடாது. அதாவது, உணர்ச்சிப்பூர்வமான எமது பேச்சுக்களை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி, எமது வடமாகாண சபையைக் கலைக்கவும் எமது மத்திய அரசாங்கம் தயங்காது. ஒன்றரை லட்சம் படை வீரர்கள் முகாமிட்டிருக்கும் இடத்தில் அவர்களை பாதிக்கும் கருத்துக்களை நாம் எடுத்து இயம்பும்போது மிக்க கவனம் அவசியம். அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வராதீர்கள். சூழக்கு ஏற்பச் சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டி விடுவார்கள்" என்று உணர்ச்சி மிகுந்…

  20. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து, முதன்முதலாக பா.ஜ.க. கூட்டணியில் வைகோ இணைந்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கடந்த வாரம் சார்க் மாநாட்டின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசிய மோடி, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, ''ப…

  21. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை – நீதிமன்றம் 1974 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன், தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே இரண்டு பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு இதனை அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தப்படி, பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை இந்த பகுதியில் தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த உடன்படிக்கையை மீறும் வகையில், இலங்கை கடற்படையினர் செயற்படுவதாகவும் ஆகவ…

  22. கிரானைட் கொள்ளையர்களுக்கு எதிரான போரில் சகாயம் செல்ல வேண்டிய திசை எது? மலையை அப்புறப்படுத்த முயன்ற முட்டாள் கிழவனின் கதையை சீனத் தலைவர் மா சே துங் சொல்லி, அந்தக் கதை சீனப் பள்ளிகளில் பாடமாகக்கூட வைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய சொந்த ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு மலையைச் சுற்றிக்கொண்டு வெகுதூரம் செல்ல நேர்ந்ததால், ஒரு கிழவன் தினசரி அந்த மலையைத் தன்னுடைய சிறிய உளியைக் கொண்டு வெட்ட முயன்றான். அதைப் பார்த்தவர்களெல்லாம் அவனைக் கேலி செய்தார்கள். ஆனாலும், அவனது விடாமுயற்சியைப் பார்த்த கடவுள் ஒரு நாள் அந்த மலையை அங்கிருந்து அகற்றிவிட்டதாகச் சொல்லப்பட்ட பழைய சீனக் கதையைச் சிறிது மாற்றி, மா சே துங் அங்கே கடவுளுக்குப் பதிலாக மக்கள் சக்தியால் வென்றதாகப் புதிய கதையை எழுதியிருந்தார். …

  23. 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 35 வயதான சதீஷ்குமார் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அதனால் அவரால் நடக்க முடியாது. ஆனால் அது அவரை முடக்கிவிடவில்லை. பல்வேறு வகையான விளையாட்டுகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற தனது ஆர்வத்தை செயல்படுத்தி வருகிறார். ஸ்கூபா டைவிங், பாராஷூட்டில் பறப்பது, ராம்ப் வாக், கிரேனில் தொங்கியபடி நடனமாடுவது என்று பல விஷயங்களிலும் ஈடுபட்டு வாழ்க்கை தரும் அத்தனை சுவாரஸ்யமான அனுபவங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறார். மேலும், மாறுத்திறனாளிகளால் பயன்படுத்தக்கூடிய வகையில் பொது போக்குவரத்துச் சேவைகள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தாம் முயன்று வருவதாகவும் தெரிவிக்கிறார். இந்தக் காணொள…

  24. காணாமல் ஆக்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலனின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்…. February 26, 2019 சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 14 பேர் தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தனர். கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி இந்த சம்பவம் குறித்த ஆவணப்படமொன்றை சென்னையில் வெளியிட்ட சமூக ஆர்வலரான முகிலனை அன்றுமுதல் காணவில்லை. இதுகுறித்து, முதலில் புகையிரத காவல்துறையினரும், பின்னர் எழும்பூர் காவல் நிலையத்தின் சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால், இந்த வழக்கை நேற்று தி…

  25. கோவை மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம் - பொள்ளாச்சி விவகாரம் எதிரொலி? 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.