தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் ஜெயலலிதா தனக்கென சொகுசு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு எவ்வித நிபந்தனையும் வைக்கவில்லை என சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெய்சிம்ஹா தகவல் வெளியிடுகையில் --- "மேடம் ஜெயலலிதா எவ்வித வி.ஐ.பி வசதியும் கோரவில்லை. பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள மற்ற கைதிகளைப் போலவே அவரும் நடத்தப்படுகிறார். சிறைக்காவலர்கள், அதிகாரிகளிடம் அவர் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்கிறார். மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் இரும்புக் கட்டில் வேண்டும் என கேட்டார். அது…
-
- 0 replies
- 743 views
-
-
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வருவதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெவித்துள்ளனர். இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பக்ரீத், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிமுக வினரின் போராட்டங்களால் பொதுமக்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக வணிகர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. எதற்கெடுத்தாலும் 144 தடை உத்தரவு போடும் அதிமுக அரசு மிகப்பெரிய அளவில் அசம்பாவிதங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றும், தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை அமல்படுத்தா…
-
- 0 replies
- 468 views
-
-
1.தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, அதனால் இங்கு ஜனாதிபதியின் ஆட்சியை கொண்டு வரவேண்டும். 2.தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம், பாகிஸ்தான் உளவாளிகள் நடமாட்டம் உள்ளது . அதனால் ராணுவத்தை தமிழகத்தில் நிலைநிறுத்த வேண்டும். 3.மணிப்பூர், காஷ்மீர் தேசங்களில் உள்ளது போல ராணுவச் சிறப்பு சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும். இது தமிழகத்தை ராணுவ மயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வு. 4.தமிழகத்தில் உள்ள ஆட்சியை கலைத்து ஆர்.எஸ்.எஸ் கொள்கையை ஏற்றுக் கொண்ட ஒரு கட்சியை தமிழகத்தில் ஆட்சியமைக்க வழிவகை செய்ய வேண்டும். 5.இந்திய அரசுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத ஒரு இந்திய தேசிய கட்சியே தமிழகத்தை ஆள வேண்டும். 6.தமிழகத்தில் தற்போது எழுச்சி பெற்றுவரும் தமிழ்த் தேசிய கருத்துக்கள் …
-
- 0 replies
- 520 views
-
-
ஜெ. தீர்ப்பு எதிரொலி: தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம் சென்னையில் 2013-ல் நடைபெற்ற 'இந்திய சினிமா நூற்றாண்டு விழா' நிகழ்ச்சி. | கோப்புப் படம் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் நாளை (செவ்வாய்க்கிழமை) மவுன உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்களது தமிழ்த் திரையுலகின் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில், அறவழியில் ஒரு மாபெரும் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து தமிழ்த் திரையுலகின் சார்பாக, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நாளை (செவ்வாய்க்கிழம…
-
- 41 replies
- 3.3k views
-
-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி முன்னாள் சட்டசபை உறுப்பினர் திருச்சி சவுந்திரராஜன் தலைமையில் இந்தியா வாழ் ஈழத் தமிழர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். இன்று சென்னை கோயம்பேடு செங்கொடி அரங்கத்தில், இந்தியா வாழ் ஈழத் தமிழரின் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, புரட்சி பாரதம் பொதுச்செயலாளர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 397 views
-
-
தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கச்சத்தீவை மீள பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் இது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்திருந்தார். எனினும் அவ்வாறு செய்ய முடியாது என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்றுள்ள முதல்வர் மீண்டும் அது குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=726803508203361931
-
- 3 replies
- 941 views
-
-
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் வெள்ளிக்கிழமை கருணாநிதி அறிக்கையாக வெளியாகியுள்ளது.. கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே பதில்: இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது. கே: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் உண்டா ப: உச்சநீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன…
-
- 0 replies
- 400 views
-
-
Posted Date : 08:12 (01/10/2014)Last updated : 08:14 (01/10/2014) சிவாஜி 25 சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்... * சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது! * நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்! * 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த…
-
- 3 replies
- 3.2k views
-
-
பெங்களூர் சிறையில் ஜெயலலிதா, வீட்டுச் சிறையில் கருணாநிதி! [Thursday 2014-10-02 08:00] ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதால், 'எந்த நிகழ்ச்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, தேசிய பாதுகாப்பு படை அதிகாரி (என்.எஸ்.ஜி.,) ஆலோசனை கூறியுள்ளார். சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், கருணாநிதியை நேற்று முன்தினம் மதியம், என்.எஸ்.ஜி., படையின் எஸ்.பி., சந்தித்து, 'தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அதனால், நிலைமை சீரடை…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமைச்சர்களை சென்னை திரும்ப ஜெயலலிதா உத்தரவு! [Thursday 2014-10-02 08:00] பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில் காத்திருந்த தமிழக அமைச்சர்களை சென்னை திரும்பும்படி, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து எல்லா அமைச்சர்களும் நேற்று இரவே சென்னை திரும்பினர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று, ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணைக்கு வந்ததை அடுத்து எல்லா அமைச்சர்களும் பெங்களூரு விரைந்தனர். சிறை வாசலில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுச்சாமி, பச்சைமால் உள்ளிட்ட ஏராளமானோர் காத்திருந்தனர். மாலை, 3:00 மணியளவில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் சந்திக்க ஜெயலலி…
-
- 0 replies
- 820 views
-
-
ஊழலுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினரே போராட்டம் நடத்தும் கொடுமை: ராமதாஸ் அறிக்கை [Thursday 2014-10-02 12:00] சென்னை: நீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு ஆதரவாகவும் ஆளுங்கட்சியினரே போராட்டம் நடத்தும் கொடுமை தமிழகத்தில் இப்போது தான் அரங்கேறுகிறது என்று வேதனை தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக இல்லாமல், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக தமிழக காவல்துறை செயல்பட வேண்டும் என்று கேட்டுக கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது... "தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் குடும்பங்களை ஆதரவற்றவர்களாக்கி வரும் மது அரக்கனை ஒழித்து, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் இ…
-
- 0 replies
- 526 views
-
-
குற்றமும் தண்டனையும் அண்மைக் காலமாக இந்திய நீதிமன்றங்கள் தன்னெழுச்சி பெற்றுக் குற்ற விசாரணைகளில் ஈடுபட்டுத் தண்டனைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக 2ஜி விசாரணை, நிலக்கரி ஊழல் விசாரணை ஆகியவை மக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ள சூழலில் நீண்டகாலம் தமிழகத்திலும், பின்னர் கர்நாடகத்திலுமாக நடைபெற்ற தமிழக (முன்னாள்) முதல்வரின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. உடனடியாகத் தண்டனையின் நிறைவேற்றம் சிறையில் அடைக்கப்படும் நிகழ்வாகத் தொடர்ந்திருப்பது பல்வேறு சிந்தனை அலைகளை எழுப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் நீதியின் வெற்றியாக இத் தீர்ப்பைக் குறித்து அவசரம் அவசரமாக அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள். நாளிதழ்களும்…
-
- 0 replies
- 383 views
-
-
ஜெயலிதாவை விமர்சிக்க இங்கு எவருக்கும் அருகதை இல்லை! அ.தி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எந்த ஓர்அரசியல்வாதிக்கும் யோக்கியதை இல்லை. குறிப்பாக ஊழல், குடும்ப ஆட்சி, வீண் விரயம், அதிகார துஷ்பிரயோகம், எதிரணியினர் மீது வன்முறை, ஊடக அடக்கு முறை, மனித உரிமை மீறல், சட்ட ஆட்சி இன்மை, சொந்த வயிற்றுப்பாடு தேவைக்காக சொந்த மக்களையே விற்று சாப்பிடும் அரசியல் ஆகியவற்றில் உலக சாதனை செய்துள்ள இந்த வெட்கங்கெட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்…
-
- 3 replies
- 1.1k views
-
-
யாரையும் சந்திக்க விரும்பாத ஜெ! கடந்த சனிக்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா இதுவரை யாரையும் சிறை வளாகத்தில் சந்திக்கவில்லை என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து சிறை வளாக வட்டாரம் மேலும் தெரிவித்த தகவல் வருமாறு:- தமிழகத்தின் புதிய முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் என பலரும் சிறையில் ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் பொதுவாக கைதிகளை பார்க்க சிறைக்கு யார் வந்தாலும், வெளியில் இருந்து இன்னார் வந்திருக்கிறார். நீங்கள் சந்திக்க விருப்பமா? என்று கேட்கப்படும். கைதிகள் விரும்பினால் மட்டுமே கைதி அறையில் இருந்து அழைத்து வரப்படுவர். இதுபோல் சட்டமுறைகள் ஜெயலலிதாவ…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை! 10 ஆண்டுகளாக இல்லை என்பதால் ஜாமீன் பெற உரிமை இருக்கிறது: - ராம்ஜெத்மலானி வாதம் [Tuesday 2014-09-30 20:00] சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாமீ…
-
- 7 replies
- 1k views
-
-
எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை - எனக்குள்ள ஒரே சொத்து தமிழக மக்கள் தான்: நீதிமன்றில் ஜெயலலிதா ஆவேசம்! [Wednesday 2014-10-01 12:00] சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து ஜெயலலிதா மற்றும் இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இது பற்றிய தீர்ப்பை நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்கா அறிவித்ததும், அது குறித்து பெங்களூர் தனி கோர்ட்டில் ஜெயலலிதா கூறியதாவது:– நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவர். செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில…
-
- 1 reply
- 912 views
-
-
தமிழகத்தில் செயற்பட்டு வரும் தமிழ்நாடு விடுதலை இயக்கத்தின் 6 உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் முன்னாள் மத்திய அமைச்சர்களான பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோரை, குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு நிறுவனம் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சுதந்திரமான தமிழ்நாட்டை நோக்காக கொண்டு தமிழர் விடுதலைப்படை என்ற பெயரில் இயங்கிவரும் இந்த இயக்கம் நக்ஸலைட் இயக்கமாக செயற்பட்டு வருகிறது. குறித்த இரண்டு அமைச்சர்களும் கூடங்குளம் அணுமின்சார திட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றமைக்கு எதிர்ப்பை காட்டும் முகமாகவே …
-
- 0 replies
- 377 views
-
-
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பின் பின்னணியில் சர்வதேச சதி இடம்பெற்றுள்ளதாக, அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக கூறி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர்,சுப்பிரமணியசாமியால் கற்பனையால் தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்ற தகவல், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. தீர்ப்பை நீதிபதி படித்தபோது, "நீங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்," என ஜெயலலிதாவைப் பார்த்து கூறியுள்ளார். எதை வைத்து இப்படி கூறினார். வதோதர…
-
- 3 replies
- 3.7k views
-
-
காரைக்குடி: ஊழல் புகாரினால் தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிட கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வரும் தேர்தலில் இந்த பின்னடைவை பா.ஜ.க பயன்படுத்தி கொள்ளும் என்றும் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் பா.ஜ.க. சார்பில் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிறந்தாள் வாழ்த்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "மோடியின் வெளிநாட்டு பயணம் இந்தியாவை உலக அரங்கில் மதிப்பு மிக்க நாடாக உருவாக்கியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்பது நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனை. அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் அதை காரணமாக வைத்து த…
-
- 2 replies
- 515 views
-
-
பெங்களூரு: பெங்களூரு மத்திய சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது என போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் சில கன்னட ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டர் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள பெங்களூரு போலீஸ் கமிஷனர் ''ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை உள்ளது என சில கன்னட செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறான செய்தி. வழக்கமாக இசட் பிளஸ் பாதுகாப்பின்கீழ் உள்ள ஒருவர், நகருக்…
-
- 0 replies
- 451 views
-
-
ஜெயலலிதா ஜெயராம் இன்று இந்தியாவில் மாத்திரமல்லாது உலகம் முழுவதும் அதிகம் பேசப்படுகின்ற அரசியல் கதாபாத்திரமாக திகழ்கின்றார். தமிழக மக்களால் “அம்மா” என்ற அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், பிணையில் விடுதலையாவாரா? என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் மேலோங்கியுள்ளது. பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு எனினும் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் அவருடன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு மீதான விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை இன்று ஒத்திவைக்கத் தீர்மானித்தது. கர்நாடக மாநிலத்தில் தசரா விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறைக்கால விசேட நீதிமன்ற அமர்வி…
-
- 0 replies
- 657 views
-
-
அன்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு அன்பு வணக்கம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தங்களுக்கு விதித்த தீர்ப்பறிந்து ஈழத்தமிழர்களாகிய நாம் அதிர்ந்து போனோம். ஏன்தான் இப்படியயன்று நொந்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதுமில்லை. தமிழர்களை நீதியும் அநீதியும் வாட்டுவதுதான் வேதனையிலும் வேதனை. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்ததை மறந்து விட முடியாது. 2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வதைபட்டபோது, நீங்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். கெடுகாலம். நாடக நடிகர் கலைஞர் கருணாநிதி பதவியிலிருந்தார். வன்னி யுத்தம் முடிந்து எதுவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் நடந்து …
-
- 0 replies
- 579 views
-
-
'அம்மா'வுக்காக அனைத்து தியேட்டர்களும் இன்று மூடல்- மதுரையில் உணவகங்களும்.. சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாளை நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து த…
-
- 0 replies
- 590 views
-
-
தமிழகத்தின் முதல்வராக 13 ஆண்டுகள் கழித்து இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ள ஓ. பன்னீர் செல்வத்தின் பயோடேட்டா இங்கே... ஓ.பன்னீர்செல்வம் 1951 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவர் தற்போது அ.தி.மு.க பொருளாளராக இருந்து வருகிறார். உள்ளாட்சி மன்றத்தில்.... 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர் மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். சட்டமன்றத்தில்.. 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். * வருவாய்த்துறை அமைச்சர் (2001 ம் ஆண்டு மே 19 முதல் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி வரை) * தம…
-
- 2 replies
- 766 views
-
-
மதுரை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து மதுரை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். இதனிடையே, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையில் அ.தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தை …
-
- 4 replies
- 1.4k views
-