Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம்களை விடுதலை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் அப்துல் ரஹிம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய தேசிய லீக் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதுபோல்,கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம்களையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 24 ஆம் தேதி, விருந்தினர் மாளிகை முன்பு நான் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளேன்'' என தெரிவித்தார். http://news.vikatan.com/article.php?modu…

  2. திருச்சியில் இலங்கைத் தமிழ் மாணவர் வெட்டிக்கொலை! – காதலியின் தங்கையை காதலித்தவரை தட்டிக்கேட்டதால் விபரீதம். [Monday, 2014-02-17 18:08:50] திருச்சியில், காதல் தகராறில் இலங்கைத் தமிழரான கல்லூரி மாணவர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருச்சி சீனிவாச நகரில் வசிக்கும், ஸ்ரீதரன். இலங்கை தமிழரான இவரது மகன் விதுகரன் (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார். விதுகரன் காதலித்த மாணவியின் தங்கையை அதே கல்லூரியில் படிக்கும் திருச்சி தில்லைநகரை சேர்ந்த அரவிந்த் (20) காதலித்தார். விதுகரனுக்கு இது பிடிக்காததால் அரவிந்தை கண்டித்தார். இந்நிலை…

  3. சிறையிலிருந்து ஒரு குரல் டி.அருள் எழிலன் “நான் களைத்துப் போகவில்லை. உற்சாகம் அடைந்திருக்கிறேன். எந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு தூக்குத் தண்டனை விதித்தார்களோ, அந்த வாக்குமூலமே பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. 'சதிகாரன்’, 'கொலைகாரன்’ என்று என் மீது சுமத்தப்பட்ட களங்கம் கழுவப்பட்டுவிட்டது. நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் இறுதிப் பகுதியில் நிற்கிறேன். இந்த ஒளி, இந்தியாவின் அனைத்து மரண தண்டனை கைதிகளின் கழுத்தின் மீதும் தொங்கிக்கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றை அறுத்தெறியட்டும்'' என்ற பேரறிவாளனுக்கு இப்போது வயது 42. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்குக் தண்டனை பெற்று, தனது மேல் முறையீட்டு மனு மீதான வழக்கின் தன் வழக்கில் இறுதித் தீர்ப்புக்காகக…

  4. நெல்லை மாவட்டத்தில் அமைகப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். இந்த மக்களை தங்களது கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் சுமார் 15 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் பணிக்கும் சுமார் 7 ஆயிரத்து 500 தொண்டர்களை களமிறக்க தீர்மானித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தமிழ் நாடு மாநில கிளை நிர்வாகிகள், கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதில் ஒரு கட்டமாக, உதயகுமார் தலைமையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் போராடி வரும் மக்களை தங்களது கட்சியில் உறுப்பினர்…

  5. திருப்புமுனை நாயகன் வனவாசத்தில் இருந்து திமுக மீண்டு ஆட்சியை கைப்பற்றிய 89 தேர்தல்தான் கே.என்.நேருவை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அத்தேர்தலில் திமுக ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு’ என்கிற கோஷத்தை முன்வைத்து, வேட்பாளர்களை தேர்வு செய்தது. நாற்பது வயதுகூட ஆகாத நேரு தேர்தலில் வென்று அமைச்சரும் ஆனார். இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களாக இருக்கும் பொன்முடி போன்றவர்கள் அப்போது இளைஞர்களாக இருந்து வாய்ப்பு பெற்றவர்கள்தான். வழக்கமாக ஜீப்பில் வந்து வாக்கு கேட்கும் பண்ணையார்களை கண்டு அலுத்துப்போன லால்குடி மக்கள், என்ஃபீல்ட் புல்லட்டில் புயலென வந்த இளைஞரை தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆரம்பத்திலிருந்தே நேரு களத்தில் இறங்கி பணியாற்றக்கூடியவர். தொண்டர்களின் உணர்வுகளை துல…

  6. பாலுமகேந்திரா... தமிழ் சினிமாவின் வீடு! இயக்குநர் ராம் எங்கள் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு தாய் மண்ணின்மீது தாளாத பாசம். அங்கே அவர் வசித்த வீடு, வளர்த்த மாடு, அவரது அப்பா அவரது பால்யம் ஈழம் தொடர்பான கவலை எப்போதும் அவர் பேச்சில் ஒலிக்கும். சினிமாவைத் தாண்டி பணம் பற்றியோ, வீடு பற்றியோ என்றைக்குமே அவர் யோசித்ததே இல்லை. 'வீடு’ படத்துக்காக ஒரு இடம் வாங்கியபோது தானாகவே ஒரு வீடு முளைத்தது. கதைப்படி பாதி கட்டிமுடிக்கப்பட்ட வீடு வெகுகாலம் பாதியிலேயே நின்று, பிறகுதான் முழுமை பெற்றது. அந்த வீட்டில் அவர் மாட்டிய புகைப்படம் 'வீடு’ படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதர் படத்தைத்தான். அங்கே வருகின்ற எல்லோரிடமும் அந்த வீடு சொக்கலிங்க பாகவதர் வீடு என்று சொன்னார். அந்த வீடு பாகவதர் வீட…

  7. முருகன் - நளினி... சிறைப் பறவைகளின் காதல் கதை! டி.அருள் எழிலன், ஓவியங்கள்: ஸ்யாம் முருகன்-நளினி காதலுக்கு வயது 23 வருடங்கள். இதில் சிறையில் பிரிக்கப்பட்டு இருவரும் தனித்திருந்த காலம்... கிட்டத்தட்ட அதே 23 வருடங்கள்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன்-நளினி ஜோடி, தங்கள் காதலுக்குக் கொடுத்த விலை மிக மிக அதிகம்! 1991 பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு. மே மாதம் ராஜீவ் காந்தி கொலை. ஜூன் மாதம் இருவரும் கைதாகிறார்கள். அன்று முதல் இன்று வரை சிறைச் சுவர்களுக்கு இடையில் கிளைத்துக் கிடக்கிறது இவர்களின் காதல்! ''முதல் சந்திப்பு முதல் உங்கள் காதல் கதையை விரிவாகச் சொல்லுங்கள்!'' என்று வழக்கறிஞர் மூலம…

    • 2 replies
    • 1.3k views
  8. இனப்படுகொலையை நிகழ்திய சிறிலங்கா அதிபர் ராசபக்சேவை தண்டிக்கக்கோரியும் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் 5000ற்கு மேற்பட்ட மாணவர்கள் திரண்டு பிரமாண்ட பேரணியை நடத்தியுள்ளார்கள். ஈழத்தில் நீதி மறுக்கப்பட்டுவரும் தமிழீழ மக்களிற்கு ஆதரவான போராட்டங்கள் தமிழக மாணவசகோதரர்களால் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்ட வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தம்மை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டுவருகின்ற கொதிநிலையில் கல்லூரி நிர்வாகங்கள் சுயமாகவும் காவல்துறை உளவுத்துறை அரசியல் கட்சிகளின் கடுமையான அழுத்தங்களிற்கு …

      • Like
    • 1.3k replies
    • 120.3k views
  9. பாஜக தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஷரத்துகளை சேர்க்க அக்கட்சியின் தமிழக நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். இலங்கை மீது போர் தொடுத்தாவது ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்ற ரீதியில் தேர்தல் அறிக்கை இருக்கலாமா என்று ஈழத் தமிழ் தலைவர் ஒருவரிடம் பாஜக தலைவர்கள் ஆலோசனை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் தேதியும் கூட்டணி களும் இன்னும் இறுதியாகவில்லை என்றாலும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும் முரமாய் இருக்கின்றன. பாஜக தரப்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, உள்நாட்டுப் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, மாநில அரசுகளுக்கு உரிய முக்கியத்து…

  10. தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பட்டியலோடு வந்தார் கழுகார்! ''தி.மு.க. வட்டாரம் தன்னுடைய தேர்தல் முஸ்தீபுகளைத் தொடங்கிவிட்டது. 15, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் தி.மு.க. மாநாடு முடிந்ததும், வேட்பாளர் நேர்காணல் தொடங்க ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். தி.மு.க-வை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவந்து சேர்த்துவிட பலரும் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், அதற்கு இதுநாள் வரை கருணாநிதியும் ஸ்டாலினும் பிடிகொடுக்கவில்லை. தே.மு.தி.க-வுடனான பேச்சுவார்த்தைகளையும் தற்காலிகமாக தி.மு.க. நிறுத்தி வைத்துள்ளது. தி.மு.க. சார்பில் பேசப் போன தொழிலதிபர் ஒருவரிடம், 'என்னுடைய இலக்கு 2016-தான். இப்போது தி.மு.க-வை ஆதரித்துவிட்டால், அப்போது தி.மு.க-வை எதிர்த்து பிரசாரம் செய்ய முடியாது’ என்று வெளிப்படையாகவே வி…

  11. கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி வடவர்கள் தமிழ் நாட்டில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். நடுவண் அரசும் தமிழக அரசும் இணைந்தே இந்த செயலை செய்துள்ளது. இந்த குடியேற்றத்தினால் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கவலைப்பட்டதுண்டா? பல அடுக்குமாடி கட்டிடங்கள் வடவர்களின் முழுமையான குடியிருப்பாக உருவெடுத்து உள்ளது . தமிழகத்தில் உள்ள நீர், உணவு , உறைவிடம் , நிலம், வளங்கள் குடியேறிய மக்களுக்கும் இப்போது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் மேலும் இரண்டு கோடி வடவர்கள் இங்கு குடியேறுவார்கள் எனத் தெரிகிறது. ஒரு கால கட்டத்தில் தமிழர்களை விடவும் வடவர்களே தமிழகத்தில் அதிமாகவும் வசிப்பார்கள். தமிழர்களின் உரிமைகளையும் தட்டிப் பறிப்பார்கள். …

  12. நேற்று சனிக்கிழமை மாலை 20 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் சென்னையில் ஒன்று கூடி பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள் எவ்வாறு போட்டியிடுவது என்று விவாதித்தனர். திராவிடக் கட்சிகள், இந்திய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக தமிழ்த் தேசிய கூட்டணி ஒன்றை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தற்போது பெரிய கட்சிகள் இணையவில்லை என்றாலும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடி தங்கள் பலத்தை நாற்பது தொகுதிகளிலும் காட்டவுள்ளனர் என்பது மற்றும் உறுதி செய்யப்பட்டது. தமிழர் நாடு தமிழர் வசம் வருவதற்கு நூறாண்டு திட்டம் வகுக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக இந்த முன்னெடுப்பு நடக்க உள்ளது. தமிழர் அரசியல் 70 ஆண்டு காலம் பின்தங்கியுள்ள நிலையில் இனியாவது துணிந்து இன நலம் சார்ந…

  13. இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இந்தியா தளர்வான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதால் தான், அண்டைநாடுகள் இந்தியாவுக்கு போக்கு காட்டுவதாகத் தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. சென்னையை அடுத்த, வண்டலூரில் நேற்று நடந்த மாபெரும் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்ற விடயத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். இந்த விடயத்தில் இந்தியாவின் தளர்வு போக்கு காரணமாகவே இந்திய மீனவர்கள் இன்னும் இலங்கையின் சிறைகளில் இருக்கின்றனர். இலங்கை போன்ற சிறிய நாடுகளிடம் இருந்து இந்தியா அழுத்தங்களை எதிர்நோக்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் பலவீனமான அணுகுமுறைகளே காரணம். இந்தியாவுக்கு பாகிஸ்தான், பங்களாதேஸ், சீனா, இலங்கை எ…

  14. ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த வைகோவின் கோரிக்கையை நரேந்திரமோடி ஏற்றுக்கொண்டார். [sunday, 2014-02-09 11:24:58] தமிழக மீனவர்கள் பிரச்சினையில் வாஜ்பாய் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மோடியிடம் வைகோ கேட்டுக்கொண்டார். அதற்கு மோடி, "அப்படியே செய்வோம்" என்று ஏற்று கொண்டுள்ளார். வண்டலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு பின் நேற்று இரவு தனியார் ஹோட்டலில் நரேந்திர மோடியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது, காலையில் இம்பாலில் பேசிவிட்டு, பகலில் கெளஹாத்தியில் பேசிவிட்டு, மாலையில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் உணர்ச்சிமிக்க உரையாற்றுவது என்பது அனைவராலும் இயலாது. "இந்தியில் நீங்கள் உரையாற்ற…

  15. அச்சுப்பிரதி சென்னையிலும் சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் எனக் கோரிக்கை சென்னையிலுள்ள பாலியல் தொழிலாளர்கள் தமது தொழிலை நடத்த தனியான பகுதி ஒன்றை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். சுமார் 2,300 பாலியல் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பாலியல் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கலைவாணி தமது கோரிக்கையை வலியுறுத்தி பிபிசிக்கு அளித்த பேட்டியில் இந்த கோரிக்கைக்கான நியாயங்களை விளக்கினார். இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழக முதல்வருக்கும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கும் ஏற்கனவே மனுக்களை அனுப்பியுள்ளதாக அவர் கூறினார். பாலியல் தொழிலாளர்கள் தொழில் நடத்தவென தனியாக சிகப்பு விளக்குப் பகுதி ஒன்றை ஏற்படுத்தாமல் இருக்கும் ஒரே இந்தியப் பெருநகரம் சென்னைதான். மும…

    • 2 replies
    • 4.9k views
  16. வருகின்ற 20.02.2014 அன்று மாலை 3 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் அய்யா பழ. நெடுமாறன் அண்ணன் சீமான் தலைமையில் ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்க கோரி ஆர்ப்பாட்டம் !!! அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும். (facebook: நாம் தமிழர் வட சென்னை)

  17. தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாரதத்தின் பிரதமரானால், நாடே இருண்டு விடும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவின் பிரதமராகும் கனவில் இருக்கிறார். ஆனால், கனவு பலித்து அவர் பிரதமரானால், நாடு இருண்டு விடும் என்றும் கூறினார். மேலும், திமுகவை எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது என்று தெரிவித்தார். http://www.dinamani.com/latest_news/2014/02/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D...--%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2/article2041352.…

    • 2 replies
    • 741 views
  18. ஐ.நா., சபையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்தியா கொண்டு வர வேண்டும். அப்படியொரு நிலையை இந்தியா எடுக்குமானால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், மீண்டும் தி.மு.க., இணைவதற்கான வாய்ப்பு உருவாகும்; தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் கிடைக்கும் என, காங்கிரஸ் தலைமைக்கு, தி.மு.க., திடீர் நிபந்தனை விதித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தூதராக, டில்லியில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தி.மு.க., நிலை குறித்து, சில விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளார். நெருக்கடிகள்: அப்போது, 'இலங்கைக்கு எதிரான தீர்மானம் போன்ற நடவடிக்கைகள் தான், கூட்டணி வாய்ப்பை உருவாக்கும் எனவும், இதை விடுத்து, …

  19. டெல்லியில், ராகுல் காந்தியை திருமாவளவன் திடீரென சந்தித்து பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருவரும் 45 நிமிடங்கள் தனியாக பேசியுள்ளனர். இதுகுறித்து திருமாவளவனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் பதில் அளித்து கூறியதாவது:– காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச கடிதம் கொடுத்து அவர் என்னை அழைத்த போது என்னால் அப்போது பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதால் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் அந்த வாய்ப்பு நேற்று எனக்கு கிடைத்தது. ராகுலும் நானும் தனியாக பேசியபோது தமிழக அரசியல் நிலவரங்கள், பாரா…

  20. இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்: வைகோ கோரிக்கை. இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஆதரவாக முழக்கமிட தமிழர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர், இலங்கை போரின் போது, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷேவுக்கு எதிராக, ஐ.நா, சபையில் அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும். தீர்மானத்துக்கு ஆதரவாக முழக்கமிட அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் என்கின்ற உணர்வோடு அனைவரும் முன்வரவேண்டும். இவ்வாறு வைகோ கூறினார். http://www.dinaithal.com/tamilnadu/20339-2014-02-06-15-21-43.html

  21. மதுரைக்கு வந்த சோதனை ஓர் உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது என்பதைக் கருணாநிதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஸ்டாலினா,அழகிரியா முக்கியம் என்று முடிவெடுக்க முடியாமல் தவித்த கருணாநிதி காலம் கடந்து உறுதியான முடிவை எடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேறியபோது மதுரைக்கு எம்.ஜி.ஆரை வரவிடமாட்டேன் எனச் சபதம் செய்த மதுரை முத்து பின்னர் எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார். திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து வைகோ விரட்டியடிக்கப்பட்ட போது தமிழகத்தில் தென்பகுதியில் கழகத்தின் செல்வாக்கை உயர்த்துவதற்காக களம் இறக்கப்பட்ட அழகிரி மதுரையில் தன்னை வளர்த்துக்கொண்டார். அழகிரியின் செயற்பாடுகளினால் துவண்டுபோன கருணாநிதி மீண்டும் சென்னைக்கு வரும்படி அ…

  22. மதுரை: தமிழகத்தில் இந்து தலைவர்களை கொல்ல லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு வசூலித்து பதுக்கி வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் நெல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் 18 கிலோ வெடி மருந்தை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை கொலை செய்யவும், அதற்கான வழக்கு செலவுக்காகவும் ரூ.6 லட்சம் வரை பணம் வசூல் செய்யப்பட்டதும் தெரியவந்தது.இந்த பணத்தை மேலப்பாளையத்தை சேர்ந்த கட்டை சாகுல் வீட்டில் பதுக்கி வைத்து இருந்தனர். இதையறிந்த சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் கட்டை சாகுல் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி ரூ.6 லட்சத்…

  23. சென்னை: "மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள தருணத்தையும், கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தையும் ஒப்பிடுகையில் மு.க.அழகிரியின் மூலம் ஆபத்து என்பது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து ஜெயலலிதா பேசுகையில், "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சில குற்றச்சாட்டுகளை எதிர்கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரிவர பராமரிக்கப்படுவது இல்லை, குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று உண்மைக்கு மாறான ஒரு தொடர் பிரச்சாரம் தி.மு.க.வினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த எ…

  24. சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று பிற்பலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சந்தித்தார். அவருடன் தமிழக மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இருந்தார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர். சந்திப்புக்கு பின் ஜெயலலிதா மற்றும் பிரகாஷ் காரத் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணைந்து தேர்தலை சந்திக்க ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இருக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.