Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த குற்றச்சாட்டின் பேரில், நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்திருக்கிறது? கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு பெண்களிடம் பழகி வந்த காசி, அவர்களிடம் பாலியல் ரீதியாகவும் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும் இதனை வீடியோ மற்றும் புகைப்படமாகவும் பதிவு செய்து வந்துள்ளார். இவர…

  2. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதாக காங்கிரஸ் உயர்மட்டக் குழு எடுத்துள்ள முடிவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பில் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் உயர்மட்ட குழு பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்ற முடிவை எடுத்துள்ளது. இதுபெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. …

  3. ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன். பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு என்ற பெண்ணால் பெல்ட்பாம் முறையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறியவர் அவர். மத்திய அரசின் மிக உயரிய ‘பத்மபூஷண்’ விருது ப…

  4. சென்னை: பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தலைவர் பன்முகம் கொண்டவர். சென்னையில் பிரபலமான கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். டிவி வைத்திருக்கிறார். பத்திரிக்கை வைத்திருக்கிறார். இவர் மீதுதான் இந்தப் பரபரப்பான புகார் எழுந்துள்ளது. அவர் மீது குற்றம் சாட்டியிருப்பவர் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் ஆவார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர். தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கூட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக இவர் போட்டியிட்டாராம். அந்த கட்சி தலைவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட அந்த பெ…

  5. “எனக்கும், கருணாநிதிக்கும் மோதலா?” என்பதற்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பதில் அளித்துள்ளார். தி.மு.க. முப்பெரும் விழாவில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தகராறா? பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு, இந்த இயக்கத்தை அழிக்க பலர் சூழ்ச்சி வலை பின்னினார்கள். ஆனால், வலை பின்னியவர்கள்தான் அதில் சிக்கி அழிந்துபோனார்கள். அப்போது சிலர் சம்பத்தை பிரித்து தனி கூடாரம் அமைத்தார்கள். அதனால் தி.மு.க. அழிந்துபோய்விடவில்லை. அதன்பிறகு கலைஞரிடம் இருந்து நாவலரையும், எம்.ஜி.ஆரையும் பிரித்தார்கள். அப்போதும் தி.மு.க. அழிந்துவிடவில்லை. அதன்பிறகு வைகோவை பிரித்தார்கள். அப்போதும் அழிந்துபோய்விடவில்லை. என்றைக்கும் தி.மு.க. கம்பீரமாக நிற்பதற்கு தலைவர் கலைஞர்தான் காரணம். சில பத்திரிகைகள் தொட…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 21 ஜூலை 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு' (IT outage), கடந்த இரண்டு நாட்களாக உலகம் முழுவதும் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த நவீன யுகத்தில் ஒரு சிறு தொழில்நுட்ப தவறு கூட நமது அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்கு வெள்ளிக்கிழமை நடந்தவை ஒரு உதாரணம். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது விமான சேவைகள் தான். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமா…

  7. நெல்லித்தோப்பில் நாராயணசாமி அமோக வெற்றி நாராயணசாமி வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்கள் | படம்: எஸ்.செந்தளிர். நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் புதுச்சேரி முதல்வர் பதவியை நாராயணசாமி தக்கவைத்துக் கொண்டார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது. இதில், இறுதி நிலவரப்படி தஞ்சையில் 69, அரவக்குறிச்சியில் 82, திருப்பரங்குன்றத்தில் 71 மற்றும் நெல்லித்தோப்பில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியத…

  8. நேபாளத்தில் சிக்கியுள்ள 10 தமிழர்களை ஹெலிகாப்டரில் மீட்பதற்காக தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோயிலுக்கு ஜுலை 20-இல் பக்திச் சுற்றுலா சென்றனர். அங்கு அற்பட்ட கடும் மழை-நிலச்சரிவு காரணமாக, அவர்களில் 10 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைந்தகரையைச் சேர்ந்த ப.கணேஷ் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன்பேரில், அவர்களை உடனடியாக மீட்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினர். இதன்படி, 10 பேரும் ஜா…

  9. செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜு பவுஞ்சூர் வெட்கடாபுரம் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் கூச்சட்டதை அறிந்து எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் வந்து தீப்பற்றிய காரை அணைத்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியது குறித்து அவர் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எம்எல்ஏ ராஜு கூறுகையில், நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டு வெளியே வந்தோம். அப்போது கார் எரிந்து கொண்டிருந்தது. பின்னர் …

    • 0 replies
    • 328 views
  10. சென்னை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி ஜனவரி 28ம் தேதி தமிழகத்தில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை... தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஆர். ரஹ்மதுல்லாஹ் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். தமிழகத்தில் முஸ்லீம்க…

  11. தமிழக ஆளுநரின் முடிவு சரியா? சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே மீறுவதாகத்தான் அமையும். எனவே, ஆளுநர் இந்த முறைகளைக் கடைப்பிடிக்காதது வரவேற்புக்குரியது! தமிழகத்தில், அதிமுகவில் உருவான பிளவின் விளைவாக பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் ஆட்சி அமைக்கும் உரிமை கோரியபோது பலரும் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர். ‘முன்னதாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்ட பன்னீர்செல்வத்துக்கு முதல் வாய்ப்பு அளிக்க வேண்டும். இரண்டு பேருக்குமே பெரும்பான்மையை நிரூபிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்கிற யோசனைகள் அவற்றில் முக்கியமானவை. ஆனா…

  12. சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர், முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க இருப்பதாக கூறினார். சென்னையில் 80 பேருந்துகளும், மதுரை மற்றும் கோவையில் தலா 10 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். மொத்தமாக 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே போக்குவரத்து துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில், பேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமு…

  13. காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளால் தனித்து விடப்பட்ட தே.மு.தி.க வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது பற்றி பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி தே.மு.தி.க. முடிவு எடுத்தால் நாட்டின் நலன் கருதி அதை கருத்தில் கொள்வோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் காங்கிரசோடு கூட்டணி அமைத்தாலும் அது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். தி.மு.க. 2004 முதல் 2013 தொடக்கம் வரை மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து, ஆட்சியில் பங்கு பெற்று இருந்தது. அந்த காலகட்டத்தில் இலங்கை தமிழர்களின் பேரழிவுக்கு காரணமாக இருந்ததை யாராலும் மறைக்க …

    • 0 replies
    • 328 views
  14. அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்ட அடுத்த நாளே, மன்னார்குடி சொந்தங்கள், தங்களின் மிரட்டல் வேலைகளை ஆரம்பித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. மின் வாரிய டெண்டர்களை, ஆதரவாளர்களுக்கு கொடுக்கும்படி, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்து உள் ளனர். சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று, டெண்டர் படிவம் சமர்ப்பிக்க, மற்ற ஒப்பந்ததாரர்களை போலீசார் அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மன்னார்குடி சொந்தங்கள் தலையீட்டால், ஏற்கனவே திட்டமிட்டபடி மின் வாரிய ஊழியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் நடக்கவில்லை. வெளிப்படையாக நடக்க விரு ந்த இந்த நேர்காணல் நிறுத்தப்பட்டதால், அதற் காக விண்ணப்பித்தவர்…

  15. தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை – ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது – பகுதி 1 மின்னிதழ் உள்ளடக்கம் பகுதி 1 தமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும் பற்றி ஓய்வு பெற்ற சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை கேள்வி? தமிழக சட்டசபையின் வளர்ச்சிக் கட்டங்களையும், அவற்றின் முக்கியத் துவங்களையும் பற்றிக் கூறுங்கள்? பதில்! கேள்வி? தமிழக சட்டசபை தோற்றுவித்த ஆளுமைகள் குறித்து சுருக்கமாகக் கூறவும்? …

  16. சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரும் எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க வந்தபோது, அவர்களில் ஒருவர் கடல் அல…

  17. கலைச்செல்வி: 'லித்தியம் பேட்டரிகளுடன் 25 ஆண்டுகள்' - சி.எஸ்.ஐ.ஆர். தலைவரான விஞ்ஞானியின் உத்வேகப் பயணம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் சிஎஸ்ஐஆர் என்றழைக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் 4500 விஞ்ஞானிகள் பணியாற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு இவர் தலைமை வகிப்பார் என்பதும் இந்த மையத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள கலைச்செல்வியுடன் பிபிசி தமிழ் பேசியது. கேள்வி: நீங்கள் செய்த முதல் ப்ராஜெக்ட் என்ன …

  18. பெரியாருக்கும் எம்ஜிஆருக்கும் சீமான் விழா எடுத்தது ஏன்?'-ஈரோட்டில் புகழேந்தி கேள்வி பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி ஈரோடு பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் பிப்ரவரி 3 மூன்றாம் தேதி இன்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரோடு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ''சீமான் என்பவர் 2008 எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்ததாகவும் அப்போது அவர் உபதேசம் வழங்கியதாகவும் அதற்குப் பின்னர் தான் திராவிடர்கள் திருடர்கள் என தெரிய வந்ததாகவும் அதுவரை தெரியாமல் போனதாகவும் மேடைகளில் பேசி வருகிறார். 2008இல் பிரபாகரன் உபதேசம் கூறிய பின்னர் 2010 ஆம் ஆண்டு பெரியார், எம் ஜி ஆர் கட்டவு…

  19. பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை! சட்டத்துக்கு விரோதமான தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2004-2007ம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் தயாநிதி மாறன். இவர் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம், போட் கிளப் சாலையில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு சட்டத்திற்கு விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும், அதன் பின்னர் அந்த இணைப்புகளை தவறான வகையில் சன் டிவிக்குப் பயன்படுத்தியதால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ர…

  20. ராயபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் சிறுவர்களுக்கு கரோனா: உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு: சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் சிறுவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அது தொடர்பான செய்திகளை வைத்து, கரோனா தொற்று தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து அறிக்கை அளிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. 36,000 எண்ணிக்கையைக் கடந்து கரோனா தொற்று உள்ளது. சென்னை 26,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்து தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக உள்ளது. அதிலும் சென்னையில் குறிப்பிட்ட 5 மண்டலங்களில் கரோனா தொற்று 2,000 என்கிற…

  21. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் கரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3,371 வென்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மர…

  22. தேசிய இனத் தாயக அழிப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த் தேசியப் பேரியக்கம். ஒருங்கிணைப்பாளர் – காவிரி உரிமை மீட்புக் குழு 119 Views நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் அழிப்பு சட்டங்களுக்கு எதிராக, புதுதில்லியில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. மிகக்கடும் குளிரிலும், பனியிலும் சீக்கிய உழவர்களும் வடநாட்டுப் பொதுமக்களும் தொடர்ந்து 23 நாட்களைக் கடந்து தில்லியை முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் உழவர்களின் போராட்டங்கள் ஆங்காங்கு நடந்து வருகிறது. இந்திய நாட்டின் உழவர்களை ஒட்டுமொத்தமாக நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, நிலம், வேளாண்மை, வேளாண் விளைபொர…

  23. புதுக்கோட்டை: மனிதன் உயிர் வாழும் வரை 2 வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். அவைகள், உண்பதும், சுவாசிப்பதும்தான். இதில் ஒன்று நின்றாலும் சுடுகாட்டுக்கு போவது நிச்சயம். ஆனால், உயிரோடு இருக்கும்போதே ஒரு கிராமமே சுடுகாட்டுக்கு குடிபெயர்ந்திருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கும் 3 வேலையும் உண்ணுவதற்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டதுதான் நியாயவிலைக் கடைகள். ஆனால், இன்றுவரை அந்த வசதிகள் கிடைக்காமல் அவதிப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு ரகுநாதப்பட்டி கிராமம். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.பாலக்குறிச்சி பஞ்சாயத்தில் இருக்கிறது ரகுநாதப்பட்டி கிராமம். இங்கு சுமார் அறுநூறு பேர் வசித்து வருகிறார்கள். 172 ரேஷன் …

  24. விழுப்புரம்: “கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை? கள் மது என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் அருகே பூரிக்குடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ‘கள் விடுதலை மாநாடு’ அந்த இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தலைமையில் இன்று (ஜன.21) நடைபெற்றது. இதில், பாஜக துணைத் தலைவர் ஏஜி சம்பத், வேட்டவலம் மணிகண்டன், பனையேறி பாதுகாப்பு இயத்தத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக பெண்கள் கள் பானையை தலையில் ச…

  25. நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலைத் தோட்டயில் பணியாற்றும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் | உள்படம்: எம்.எஸ்.செல்வராஜ் இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காகவும் பரிந்து பேசியுள்ளார். அவர்களின் நலன், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசு உதவும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதேபோல, நீலகிரி மலையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் பரிவுகாட்ட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து 1815-ல் பிரிட்டிஷாரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், அங்கு காபி, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். தமிழக கிராமங்களில் வறட்சி, வறுமை, பஞ்சத்தால் பாதிக்கப…

    • 0 replies
    • 327 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.