தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை,இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் மறுத்துள்ளது. கடற்படையினரால் எந்த ஒரு தரப்புக்கு எதிராகவும் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்படவில்லை என்று உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் கோடிக்கரை பகுதியில் வைத்து கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரமும் இவ்வாறு அத்துமீறி நுழைந்த 16 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tam…
-
- 0 replies
- 688 views
-
-
இலங்கை அதிபர் போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று போராட்டம் நடந்தது. புதுச்சேரியில் உள்ள அண்ணா சாலையில் சோனியா காந்தி உருவபொம்மையை எரித்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது, அங்கிருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலக கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மத்திய அமைச்சர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13077
-
- 0 replies
- 516 views
-
-
தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான் மின்னம்பலம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகமான ராவணன் குடிலில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சீமான் நேற்று (நவம்பர் 18) மலர்த்தூவி மரியாதை செல…
-
- 59 replies
- 6.6k views
-
-
நெல்லை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இருதரப்பு மாணவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் கல்லூரியில் உள்ள லேப், கம்ப்யூட்டர் அறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ரூ. 30 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.நெல்லை மாவட்டம் பிரான்சேரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மாணவி ஒருவரிடம் பேசியது தொடர்பாக இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு விடுதியில் தங்கியுள்ள கேரள மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் உ…
-
- 5 replies
- 995 views
-
-
சிறையில் துன்புறுத்தப் படும் முருகன் -முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு December 21, 2020 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள்தண்டனை பெற்று வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் முருகன் துன்புறுத்தப்பட்டு வருகிறார் எனத் தெரிவித்துள்ள அவரது வழக்கறி ஞர் புகழேந்தி, முருகனின் உயிரை காப்பாற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் “சிறையில் உள்ள முருகன் மீது இரண்டு பொய் வழக்குகளை சிறை நிர்வாகம் தரப்பில் திட்ட மிட்டு போட்டுள்ளனர். இது நளினி-முருகனின் விடுதலையை தடுக்க செய்யப்படும்…
-
- 0 replies
- 704 views
-
-
தமிழக அரசு நிர்வாகத்தை,முழுமையாக மாற்றி அமைக்கும் வகையில், விரைவில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் மாற் றப்பட உள்ளனர். ஊழல் நபர்களை நீக்கி, நேர்மையானவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, விடுமுறை நாளான நேற்று, முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோர், கோட்டை யில் அவசர ஆலோசனை நடத்தினர். விடு முறை நாளான, நேற்று காலை, 10:00 மணிக்கு, . புதிய தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன், தலைமை செயலகம் வந்தார்உள்துறை செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து பேசினார். பிற்பகலில்,முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலகம் வந்தார். தலைமை செயல ருடன…
-
- 0 replies
- 421 views
-
-
தி.மு.க.கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க முடியும்- ம.தி.மு.க ‘சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக உள்ளது’ என அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. அதில் அ.தி.மு.க. அரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பது என்ற முடிவை ம.தி.மு.க. எடுத்தது. அதேநிலை சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக இருக்கிறது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் தேர்தல் திகதி தொடர்பாக தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பு ஓரிரு …
-
- 0 replies
- 553 views
-
-
தமிழர்களின் உயரிய கலாச்சாரம் மிகவும் பெருமைக்குரியது என்றும், மத்திய அரசு தமிழர்களின் கலாச்சார விருப்பங்களை காப்பதில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். நரேந்திர மோதியின் ட்விட்டர் செய்தி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோதி குறிப்பிடுகையில், 'தமிழகத்தின் உயரிய கலாச்சாரத்தை நினைத்து நாம் பெருமையடைகிறோம். தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது ட்விட்டர் செய்தியில், 'தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. மேலும் பல முன்னேற்றங…
-
- 0 replies
- 619 views
-
-
இந்திய நடுவண் அரசு மலையாள மொழிக்கு செம்மொழி தகுதி வழங்க தீர்மானித்துள்ளது. மலையாள மொழி சுமார் 3 கோடியே 30 லட்சம் பேரால் உலகம் எங்கும் பேசப்படுகின்றது. கடந்த நூற்றாண்டில் பல உலகத் தரம் வாய்ந்த இலக்கியப் படைப்புக்களை உருவாக்கியுள்ளது. இருந்த போதும் மலையாளம் எவ்வகையில் செம்மொழியாகும் என்ற வினாவை உலகம் எங்கும் உள்ள மொழியியல் வல்லுநர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். மலையாள மொழிக்கு செம்மொழி தகுதியை வழங்கியதை கேரள அரசும், அரசியல்வாதிகளும் வரவேற்று உள்ளனர். மலையாளத்துக்கு செம்மொழி தகுதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர்கள் ஞானபீட விருது பெற்ற ஒற்றபிலாக்கல் நம்பியாடிகள் வேலு குருப் மற்றும் புதுச்சேரி ராமச்சந்திரன் போன்றோரே. ஆனால் மலையாளத்தை செம்மொழி என மலையாள இ…
-
- 0 replies
- 3.8k views
-
-
இன்று மாலை எடப்பாடி பதவியேற்பு சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1712038 15 நாளில் பெரும்பான்மையை நிருபிக்க எடப்பாடிக்கு உத்தரவு சென்னை: அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் 15 நாளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1712036 முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி! தமிழகத்தில் ஆட்சியமைக்கு…
-
- 12 replies
- 2.9k views
-
-
சசிகலா விரக்தி; 'கைத்தடி'கள் மிரட்சி பெங்களூரு சிறையில், எதிர்பார்த்த கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தராததால், கடும் விரக்தியில் இருக்கும் சசிகலா, தமிழக மூத்த அமைச்சர்கள் மீது அதிருப்தியில் உள்ளார். இதனால், மிரட்சியில் இருக்கும் அமைச்சர்கள், தமிழக சிறைக்கு அவரை மாற்ற, தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலர் சசிகலா, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறை யில், மற்ற கிரிமினல் கைதிகளை போன்றே, தானும் நடத்தப்படுவதால், சிறப்பு சலுகைகள் கேட்டு, கர்நாடக சிறைத் துறையிடம் மனு அளித்துள்ளார். சசிகலா கேட்டி…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஸ்டெர்லைட்டுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி! மின்னம்பலம் நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஆக்ஸிஜன் பிளான்ட்டில் ஆக்ஸிஜன் நான்கு மாதங்களுக்கு தயாரித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தனக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஏப்ரல் 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே காலை 9.30 மணிவாக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தி…
-
- 16 replies
- 1.1k views
-
-
இனி சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போவார்கள்! சவால் விடும் மதுசூதனன் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன். 1991-ம் ஆண்டு தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வென்று, ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பும், பரபரப்பும் தொகுதிக்குள் இயல்பாகவே எழுந்துள்ளது. அவரைச் சந்தித்தோம்... ‘‘வடசென்னையில் மதுசூதனன் என்றாலே ஒரு டெரரர் இமேஜ் இருக்கிறதே... தொகுதி மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?’’ “என்மீது சொல்லப்படும் ‘டெரர்’ எல்லாம் கட்டுக்கதை. நான் அமைதியான ஆளு. என் வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கும் இவர்கள் வேலைக்குப் போனால் தினமும் நூறோ, இருநூற…
-
- 0 replies
- 1.2k views
-
-
தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடந்த நவம்பர் 7–ந் தேதி கலவரம் நடந்தது. இதில் பல வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே திவ்யா தாயார் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து திவ்யா கடத்தப்பட்டிருப்பதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் சுந்தரேஸ் முன்பு கடந்த 3–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான திவ்யா தனது தாயாருடன் செல்வதாக கூறினார். இந்த நிலையில் மறுநாள் இளவரசன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு…
-
- 0 replies
- 533 views
-
-
பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா – ஜெயக்குமார் விளக்கம்! உள்ளுராட்சி தேர்தலிலும் பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து அதிமுக தலைமை தான் தீர்மானிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விளக்கம் அளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்புகளுக்குப் பிறகே மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவை தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்’ எனத் தெரிவித்தார். https://athavannews.com/2021/1227208
-
- 0 replies
- 429 views
-
-
கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு: 2004 மக்களவைத் தேர்தல் போல மெகா கூட்டணி அமைக்க ஸ்டாலின் வியூகம் கோப்புப் படம்: ஸ்டாலின் கடந்த 2004 மக்களவைத் தேர்தலைப் போல திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வியூகம் அமைத்து வருகிறார். 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 பேரவைத் தேர்தல் என தொடர்ந்து 3 தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்தது. கடந்த 2016 தேர்தலில் நூலிழையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது. இது திமுக தொண்டர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அசாதாரண சூழல் ஜெயலலிதா மறைவால் அதிமுகவிலும்…
-
- 0 replies
- 304 views
-
-
திருச்சி: திருச்சி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இரவு வரை போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். திருச்சி சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் சாலையில் உள்ளது சத்யம் ஓட்டல். இந்த ஓட்டல் புதுக்கோட்டையைச் சேர்ந்த காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சத்தியமூர்த்திக்கு சொந்தமானது. இதன் தரைதளத்தில் பனாமா ரெஸ்டாரென்டும், இரண்டாவது, மூன்றாவது தளங்களில் 40 அறைகள் உள்ளன. 4வது தளத்தில், 2 கூட்ட அரங்கு அறைகள் உள்ளது. 4வது தளத்தில் ஜூனியர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். மற்றொரு ஹாலில், 50 பேர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இது தவிர ஓட்டலில் உள்ள…
-
- 1 reply
- 350 views
-
-
“தினகரன் அணியில் முதல்வரின் ஸ்லீப்பர் செல்ஸ்!” - பரபர பின்னணி #VikatanExclusive தினகரன் அணியிலிருக்கும் பெரும்பாலான எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், முதல்வரின் 'ஸ்லீப்பர் செல்ஸ்' எனத் தெரியவந்துள்ளதால், தினகரன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைய 30 நாள்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தார் தினகரன். 'ஆகஸ்ட் புரட்சி' என்று காத்திருந்த தினகரனுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தின…
-
- 0 replies
- 381 views
-
-
தமிழ்நாட்டில் மூடப்படும் ஃபோர்டு ஆலை: கலங்கும் தொழிலாளர் குடும்பங்கள் பிரசன்னா வெங்கடேஷ், பிபிசி தமிழுக்காக பிரமிளா கிருஷ்ணன், பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த ஃபோர்டு தொழிற்சாலை விரைவில் மூடப்படவுள்ள நிலையில், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆலை மூடப்படுவதற்கு எதிராக, கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்திவரும் தொழிலாளர்கள் இதுவரை எந்த சுமூகமான நிலையும் எட்டப்படவில்லை எனக் கொந்தளிக்கிறார்கள். ஃபோர்டு நிர்வாகம் இழப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தை நட…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பச்சிளம் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது? சே.பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தொட்டில் குழந்தை திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படாமல் முடங்கியுள்ளதால் பச்சிளம் குழந்தைகள் வீதிகள் வீசப்படும் அவலங்கள் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய வ…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
அரியலூர்: அரியலூர் அருகே பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். அரியலூர் ஒட்டக்கோவில் அருகே இன்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. அரியலூரில் இருந்து செந்துறை சென்ற அரசுப் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காயமடைந்த அப்பேருந்தில் பயணித்த 9 பேர் பலியாகினர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 13 பேரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். http://n…
-
- 0 replies
- 1.6k views
-
-
அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம் அ-அ+ `நாளை நமதே' என்ற பெயரில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அவரது அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இது தொடர்ப…
-
- 0 replies
- 446 views
-
-
தமிழ் அறிஞர்.. நெல்லை கண்ணன், காலமானார்! பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் இன்று(18) காலமானார். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை சமீபத்தில் பெற்றிருந்தார். 77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதி…
-
- 8 replies
- 950 views
- 1 follower
-
-
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படுமா– முதல்வர் ஸ்டாலினின் கூறுவது என்ன ? By Vishnu 05 Sep, 2022 | 09:34 PM குமார் சுகுணா தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மம் நீடித்து வரும் நிலையில், மரண விசாரணை அறிக்கையைச் சட்டசபையில் கொண்டு வருவோம். என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதாவின் மரணம் மீண்டும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. எதிரி என்றாலும் எதிரே நிற்பது சிங்கமல்லவா என்று தனது அரசியல் எதிரிகளாலேயே போற்றப்பட்டவர் தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதா. இவர் அரசியல் எதிரிகளுக…
-
- 0 replies
- 221 views
-
-
வெளிநாட்டு சிகிச்சைக்கு ஜெயலலிதா மறுத்தார்; இட்லி சாப்பிட்டது உண்மைதான்: கிருஷ்ணபிரியா பரபரப்பு சாட்சியம் கிருஷ்ணபிரியா | கோப்புப்படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல தெரிவித்தபோது, அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்று இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், வீட்டுப் பணியாளர்கள், பாதுகா…
-
- 0 replies
- 517 views
-