Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆட்சியரிடம், விவசாயி ஒருவர் தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சாவதை தவிர வேறு வழியில்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு, ‘உனது விருப்பப்படி செத்து போ’ என்று ஆட்சியர் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சட்டீஸ்கர் மாநிலம் குதெரா பகுதியை சேர்ந்தவர் ராமேஷ்வர் பன்ஜாரி. விவசாயியான இவர், தனது நிலத்திற்கு அருகே சாய ஆலை இருப்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும், அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் ஆட்சியர் அகர்வாலிடம் மனு அளித்துள்ளார். மேலும், தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் இறப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் ஆட்சியரிடம் கூறியிருக்கிறார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென ஆட்சியர் அகர்வால், "நீங்கள…

  2. பாமக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி பாமகவில் இருந்து விலகி, சென்னை போயஸ்கார்டனில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.http://www.dinaithal.com/tamilnadu/16529-pmk-joined-the-aiadmk-former-federal-minister-ponnusamy.html

    • 0 replies
    • 524 views
  3. திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி, சென்னை போயஸ் கார்டனில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்தாக தகவல் வெளியாகியுள்ளது.திமுக ஆட்சியின் போது செய்தி விளம்பரதுறை அமைச்சராக பரிதி இளம்வழுதி இருந்தார். www.dinaithal.com/tamilnadu/16526-he-joined-aiadmk-former-minister-arc-ilamvaluti.html

  4. உத்தமபாளையம் மலை சூழ்த்த ஓர் அழகிய ஊர், இங்கு மக்கள் தொகை 22,104. 10%, 600 வருடம் பழமை கொண்ட இங்கு முஸ்லிம், ஹிந்து மற்றும் கிறிஸ்துவரும் வாழ்ந்துவருகின்றனர். தென்னகத்திலேயே தஞ்சாவுருக்கு அடுத்தபடியாக இங்குதான் நெல் அதிகம் விளைகின்றது. இதற்கு காரணம் இங்கு ஓடும் பெரியார் ஆறு, பெரியார் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு வந்து அணைத்து ஊர்களையும் செளிபடைய வைக்கிறது என்றால் அது மிகையாகாது! இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயம் செய்து வருகிறனர், இந்தபகுதியில் நெல் மற்றும் இன்றி முக்கனியும் மா,பாழ,வாழை, திராட்சை, கொய்யா போன்ற பழங்களும் விளைகின்றன. இதுவே இங்கு வாழலும் மக்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கு ஆதாரமாகவுள்ளது. இங்கு பள்ளி, கல்லுரி, தாலுகா அலுவலகம், மற்றும் …

    • 0 replies
    • 630 views
  5. தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த 6 எம்.பிக் களின் பதவிக்காலம் முடிந்தை தொடர்ந்து.6 எம்.பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. மாநிலங்களஅவை தேர்தலில் 231 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் மாலையில் எண்ணப்பட்டது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட டி.ராஜா மற்றும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றுள்ளனர். பதிவான ஓட்டுகளில் ஒரு ஓட்டு செல்லாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் : அர்ஜுனன் - 36 லட்சுமணன் - 35 இளங்கோவன் - 22 கனிமொழி - 31 மைத்ரேயன் - 36 ரத்தினவேல் - 36 டி.ராஜா - 34http://dinaithal.com/tamilnadu/16517-the-upp…

    • 3 replies
    • 630 views
  6. தேனி அருகே கம்பம் நகரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரிக்க சதி செய்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. ஈழத்தமிழர்களுக்காகவும், முல்லை பெரியாறு பிரச்சினைக்காகவும், சிறுபான்மை சமுதாய மக்களுக்காகவும் எங்கள் கட்சி போராடி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும் அசைக்கமுடியாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நான் இல்லை. எந்த அணியில் சேர்ந்து எம்.பி.யாக ஆனேனோ அந்த நன்றியை மறக்க மாட்டேன். தி.மு.க.வே எங்ளோடு கூட்டு வேண்டாம் என்று கூறினால் கூட அதைப்பற்றி நாங்கள் கவலை படமாட்டோம். என்றும் நாங்கள் த…

    • 0 replies
    • 321 views
  7. தமிழ்நாடு நடிகர் சங்கத்தின் தலைவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:- நடைபெற இருக்கும் ராஜ்ய சபைத் தேர்தலில் கனிமொழியை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆக்கியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு பெற்றிருக்கும் தி.மு.க.வின் புதிய நாடகம், அரசியல் உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் கேலிக்கும், நகைப்பிற்கும் உள்ளாகி இருக்கிறது. ராஜ்ய சபை உறுப்பினராவதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி காப்பாற்றப்படவேண்டும், அதன் மூலம் ஊழலுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் காட்டிக்கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற இரு கட்சிகளின் சுயநலத்தைத் தவிர இந்த நிகழ்வுக்கு வேறு என்ன காரணம் இருக்க …

    • 0 replies
    • 404 views
  8. டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுவதால் ஓட்டுப்பதிவு நடக்கிறது. டெல்லி மேல்-சபைக்கு தமிழ்நாட்டில் இருந்து சமீபகாலமாக போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வாகி வந்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. டெல்லி மேல்-சபை தேர்தலுக்கு சென்னை தலைமை செயலக கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை குழுக்கள் கூடும் அறையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 234 எம்.எல்.ஏ.க்கள் என்ற அடிப்படையில் அத்துடன் 10 சதவீதம் கூடுதலாக வாக்குச்சீட்டுகள் அச்சிடப்…

    • 0 replies
    • 321 views
  9. முதலமைச்சர் ஜெயலலிதா : அதிமுக கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டடுள்ளனர் . இக்காரணத்தினாலும் வழக்கறிஞர்கள் பார்கவுன்சில் சேர்மன் டி.செல்வம் (காஞ்சிபுரம் கிழக்கு), வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கன கராஜ் (வடசென்னை வடக்கு ), விஜய் என்கிற விஜயராஜ் (வடசென்னை தெற்கு) மற்றும் டி.ராஜா (திருவள்ளூர் தெற்கு) ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் கட்சி தொண்டர்கள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என கேட்டுக் க…

  10. சோனியா காந்திக்கு கலைஞர் நன்றி ராஜ்யபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பிய கடி ததத்தில், ‘’காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். காரணம் மேல்–சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அறிவித்ததற்காக நன்றி கூறி கொள்கிறேன்’’என்று கூறி உள்ளார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=102387

    • 6 replies
    • 737 views
  11. இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவருக்கு இந்தியா பயிற்சி அளித்து வந்த நிலையில் தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் இலங்கைக்கு கோவை விமான நிலையம் மூலம் திருப்பி அனுப்ப வைக்கப் பட்டனர். இதை அறிந்த தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு விழிப்புணர்வு பயணம் செய்யும் மாணவர்கள் கோவை விமான நிலையதில் போராட்டம் நடத்தினர் . பின்னர் மாணவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்தர் . மாணவர்களில் தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு விழிப்புணர்வு பயண முயற்சியை வைகோ பாராட்டி ஊக்கமளிக்கும் விதமாக 15 நிமிடங்கள் அங்கு உரையாற்றினர் . படங்கள் கிழே : http://dinaithal.com/tamilnadu/16472-they-struggle-against-the-sri-lankan-military-airport-on-the-students-movies.html

    • 0 replies
    • 433 views
  12. சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் எதிர்க்கட்சி கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் (திமுக) பேசுகையில், 'சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பை சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டன. அவை இப்போது மாயமாகி விட்டன. இதில் ஊழல் நடந்து இருக்கிறது' என்று குற்றம் சாட்டினார். மேயர் மீதும் புகார் கூறினார். உடனே மேயர் சைதை துரைசாமி, அவரை பார்த்து, 'ஊழல் பற்றி பேச உங்களுக்கும், உங்கள் கட்சி தலைவர்களுக்கும் யோக்கியதை இல்லை' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து வந்து மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கலைந்து போக மறுத்து விட்டனர். இந்த சமயத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கு வந்து தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற…

    • 0 replies
    • 304 views
  13. சென்னை அருகே வங்கக் கடலுக்கு அடியில் எரிமலை இருக்கிறதா என்பது குறித்து 3 நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 100 முதல் 110 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 1757ஆம் ஆண்டில் எரிமலை ஒன்று வெடித்து லாவாவை கக்கியது.. இதனால் கடல் நீரின் நிறம் மாறியது என்று ஒரு மாலுமி தமது பயணக் குறிப்பில் பதிவு செய்திருந்தார். மேலும் சில விஞ்ஞானிகளும் இணையதள பக்கங்களில் இதைப் பதிவு செய்திருப்பதுடன் வங்கக் கடலின் அடியில் பெயரிடப்படாத 0305=01 என்ற எண்ணால் குறிப்பிடப்படுகிற எரிமலை இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் விவ…

  14. கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்க தாக்கல் செய்த (ஐ.நா.மனித உரிமை அமர்வு) கண்துடைப்பு தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மாணவர்களின் விதவிதமான போராட்ட வடிவங்கள் இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. மத்திய அரசின் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது; ஐ.நா.அவையில் கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் ஒப்புதலோடுதான் கொண்டு வரப்பட்டது என்று அமெரிக்காவை ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கச் செய்தது; தமிழக சட்டப் பேரவையில் தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேறச் செய்தது என என மாணவர் போராட்டம் சாதித்தவை ஏராளம். இந்த மாணவர் போராட்டத்தை கருவாகக் கொண்டு, அறப்போர் என்கிற ஆவணப்படம் உருவாகி இருக்கிறது…

  15. சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்குதான் வாக்களிப்போம் என்று தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்திருப்பது தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 27ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன், அர்ஜூனன், ரத்னவேல், லட்சுமணனும், அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டி.ராஜாவும் போட்டியிடுகின்றனர். தி.மு.க. சார்பில் கனிமொழி, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் 6வது எம்.பி.யாக தேர்வாவது கனிமொழியா?, இளங்கோவனா? என்ற எதிர்பார்ப்பு …

  16. மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் இன்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் 49 லட்சம் தமிழ் குடும்பங்கள் உள்ளன. அவர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் நிலை உருவாகும். இதை தடுக்…

    • 5 replies
    • 927 views
  17. சென்னை: இந்திய அளவில், சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தேசிய குற்றவியல் தகவல் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும், இந்தியாவில் மொத்தம் 4,40,042 சாலை விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதில், 1,39,091 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் 1,18,533 பேர் ஆண்களாவர். இதில், தமிழகத்தில் மட்டும் 67,757 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 16,175 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. இங்கு கடந்த 24,478 சாலை விபத்துக்களில், 15,109 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திரத்தில், 39,344 சாலை விபத்துக்களில், 14,966 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் மகார…

  18. சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் 3 பேர் சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மிது அவதூறு வழக்கு தாக்கல்: தி.மு.க. தலைவர் கருணாநிதி முரசொலி பத்திரிகையில் 23.8.2012 அன்று கேள்வி- பதில் கட்டுரை வெளியிட்டார். அதில் அப்போதைய அமைச்சர் கோகுல இந்திரா, சிவபதி, பச்சைமால் ஆகியோர் பற்றி அவதூறாக குறிப்பிட்டதாக கூறி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் 3 பேர் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி தரப்பில் வக்கீல் குமரேசன் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்த 3 வழக்குகளின் விசா ரணைக்காக கருணாநிதி நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார…

    • 0 replies
    • 431 views
  19. வெலிங்டன் ராணுவ முகாம் முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் கைது. வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வெளிநாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறுகிறார்கள். இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு கடந்த மே மாதம் முதல் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து வெலிங்டன் ராணுவ முகாமை நாம் தமிழர் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தலைமையில் முற்றுகையிட போவதாக தகவல் வந்தது. இதனால் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு நேரிடைய…

  20. கடந்த சில நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதியில் பயங்கர காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாலும் கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று மதியம் 752 விசைப் படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் 15 ரோந்து படகுகளில் அங்கு வந்தனர். அங்கு மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை பார்த்து எத்தனை முறைதான் சொல்வது இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது எ…

  21. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி சுதர்சன நாச்சியப்பன். இவர் இன்று கோவையில் நடைபெறும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து காரில் புறப்பட்டார். சுதர்சன நாச்சியப்பன் பொள்ளாச்சி வழியாக வருவதை அறிந்ததும் தந்தைபெரியார் திராவிடர் கழகத்தினர் பொள்ளாச்சி காந்தி சிலைமுன்பு நகரசெயலாளர் நாகராஜ் தலைமையில் கையில் கருப்புக்கொடியுடன் திரண்டனர். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவமுகாமில் பயிற்சி அளிக்க அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதை அறிந்ததும் காங்கிரசாரும் அங்கு திரண்டனர். எதிர்புறத்தில் நின்ற அவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை கண்டித்து கோஷம் எழுப்பின…

  22. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட தமிழ்ஈழ ஆதரவு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கை ராணுவ அதிகாரிகளை வெலிங்டன் முகாமில் இருந்து வெளியேற்றக்கோரியும் அவர்களுக்கு ராணுவ பயிற்சி அளித்து வரும் மத்திய அரசை கண்டித்தும் கூடலூர்-பந்தலூர் தாலுகாக்களில் நாளை (திங்கட்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, ம.தி…

    • 0 replies
    • 567 views
  23. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டி யாராச்சிகே ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு நிறுத்தும் வரையும், தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையும் இலங்கையை சேர்ந்த அதிகாரிகளுக்கு இங்கு எவ்வித பயிற்சியும் அளிக்கக் கூடாது என்றும் அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க., பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 18ம் தேதி முற்றுகை போராட்டம் நடந்தது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இ…

    • 0 replies
    • 402 views
  24. கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில், தொலைபேசி அழைப்புகளை பெறும் பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தவர் கே.பி.கிரீஷ் குமார். தனது குறையை தெரிவிப்பதற்காக முதல்-மந்திரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண்ணிடம் கே.பி.கிரீஷ் குமார் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை வந்ததை தொடர்ந்து கே.பி.கிரீஷ் குமார் வேலையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் என்ற பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியதாக உம்மன்சாண்டியின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலைய…

    • 0 replies
    • 495 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.