தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டி யாராச்சிகே ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு நிறுத்தும் வரையும், தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையும் இலங்கையை சேர்ந்த அதிகாரிகளுக்கு இங்கு எவ்வித பயிற்சியும் அளிக்கக் கூடாது என்றும் அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க., பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 18ம் தேதி முற்றுகை போராட்டம் நடந்தது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இ…
-
- 0 replies
- 400 views
-
-
கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில், தொலைபேசி அழைப்புகளை பெறும் பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தவர் கே.பி.கிரீஷ் குமார். தனது குறையை தெரிவிப்பதற்காக முதல்-மந்திரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண்ணிடம் கே.பி.கிரீஷ் குமார் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை வந்ததை தொடர்ந்து கே.பி.கிரீஷ் குமார் வேலையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் என்ற பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியதாக உம்மன்சாண்டியின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலைய…
-
- 0 replies
- 492 views
-
-
வரும் தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். சேலத்தில் நடந்த காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்தப் பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதேபோல, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. கோஷ்டியே இருக்கக் கூடாது. எந்தக் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை. அரசியல் கட்சி என்றால் அதில், கோஷ்டி பூசல் தவிர்க்க முடி…
-
- 8 replies
- 1k views
-
-
இலங்கை அதிகாரிகளுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிப்பதை கண்டித்து ஜூன் 25ம் தேதி வைகோ தலைமையில் குன்னூரில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது. கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்த…
-
- 0 replies
- 366 views
-
-
சிங்கள இராணுவத்தினருக்கு குன்னூர் வெலிங்டனில் பயிற்சியைத் தொடரும் இந்திய அரசின் துரோகம்! ஜூன் 25 செவ்வாய்கிழமை: குன்னூரில் இராணுவப் பயிற்சிக் கல்லூரி முற்றுகை இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது. கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்திய அரசு துச்சமாகக்…
-
- 0 replies
- 290 views
-
-
6-வது எம்.பி.யை தேர்வு செய்வதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்கள் தேர்வு செய்ய 27-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஓட்டு தேவை. அ.தி.மு.க. - கம்யூனிஸ்டு அணியில் 170 எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளது. இவர்கள் ஓட்டு போட்டு அ.தி.மு.க.வின் 4 வேட்பாளர்களையும், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிடும் டி.ராஜாவையும் தேர்வு செய்து விடுவார்கள். 6-வது எம்.பி.யை தேர்வு செய்வதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 2 பேரும், புதிய தமிழகம் …
-
- 0 replies
- 484 views
-
-
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, நிதிக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுற்று, பெட்ரோலியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் ஏறிக் கொண்டே செல்வதன் விளைவாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் செய்வதறியாது விழி பிதுங்கி, இதனை எதிர்கொள்ள வழி தெரியாத சூழ்நிலையில், விலைவாசி என்னும் கொடூரத்திலிருந்து மக்களை காக்கும் வகையில், தமிழக மக்களை வாழவைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி; அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக வெளிச்சந்தையில் 20 ரூபாய் விலையில் ஒரு கிலோ அரிசி; சிறப்பு பொது விந…
-
- 0 replies
- 454 views
-
-
இந்தியாவில் மொஹாலாய பேரரசை நிறுவிய மன்னர் பாபர் , ஒரு முறை தமது மகனும் அடுத்த பட்டத்துக்கு உரியவருமான ஹூமாயூன் , கொடிய நோயினால் உடல் வெந்து சாவின் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் , அல்லா ! என் உயிரை எடுத்து விட்டு எனது மகனின் உயிரை காப்பாற்றுங்கள் என்று வேண்டினாராம் , அல்லாவின் அதிசயமாக , ஹூமாயூன் உயிர் பிழைத்த அந்த வாரமே , பாபரும் அவர் வேண்டிகொண்டபடிக்கு உடல் நலிவுற்று , நோய்களை எதிர்கொண்டு இறந்தாராம் . மக்காளாட்சி , ஜனநாயக கட்சி நடைமுறைகளில் முந்தைய மன்னர் நடைமுறைகள் தோற்கும் அளவிற்கு தமது குடும்ப நபர்களின் ஆட்சியை நிறுவியது இரு குடும்பங்கள் , ஒன்று நேரு குடும்பம் , மற்றொன்று கருணாநிதி குடும்பம் , இதை தொடர்ந்துதான் பல குடும்பங்கள் வந்தது . அந்த இரு கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
குமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றத்தினால் பல மீனவ கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடற்கரையோர மணல் கொள்ளை, வளர்ச்சித் திட்டங்களின் பெயரில் கடலைச் சூறையாடியதன் விளைவால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலோர கிராமங்களில் ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்புகளை இழுத்துச் செல்கின்றன. அலையின் வேகத்தினால் கடலரிப்பு தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து கடலில் விழுந்து கிடக்கிறது. ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடியப்பட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இரவிபுத்த…
-
- 0 replies
- 528 views
-
-
வருகிற 27-ந்தேதி டெல்லி மேல்சபை தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு எம்.பி.யை தேர்ந்து எடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. சட்டசபையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், த.ரத்தினவேல், இரா.லட்சுமணண் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டை சேர்ந்த டி.ராஜா ஆகிய 5 பேரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 6-வது எம்.பி. யார் என்பதில் தான் கேள்வி குறி நீடிக்கிறது. அந்த இடத்தை கைப்பற்ற தி.மு.க. சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க. சார்பில் இங்கோவனும் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டசபையில் தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் இ…
-
- 1 reply
- 535 views
-
-
தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் நாடுதிரும்பும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜ.நா.சபையின் அகதிகள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் அகதிகள் தமது தாயதகத்தில் இருந்து இந்தியா சென்ற 1 600 பேர் கடந்த ஆண்டு நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பெரும்பாலானவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றிருந்ததனர். எனினும் 2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அகதிகள் நாடு திரும்புவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி கடந்த 2010ஆம் ஆண்டில் 2040 பேர் நாடு திரும்பியுள்ளதுடன் …
-
- 0 replies
- 348 views
-
-
அறப்போர் ஆவணப்படம் படப்பிடிப்பில் உள்ளது... விரைவில் உலகெங்கும் ஜேர்மன், ஆங்கிலம், பிரெஞ் (Subtitle)ஆகிய மொழிகளில் மக்கள் பார்வைக்கு... https://www.facebook.com/Arapoor
-
- 4 replies
- 1.4k views
-
-
தே.மு.தி.க.வை சேர்ந்த மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர்வரை இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இதனால் தே.மு.தி.க தலைவர் வியகாந்த் உட்பட தே.மு.தி.க வினர் அதிர்ச்சியில் உள்ளது. சென்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 எம்.எல்.ஏ.க்களை பெற்றது. ஆனால் இந்த கூட்டணி சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இதையடுத்து, தே.மு.தி.க உடைக்கும் முயற்சியில் அ.தி.மு.க ஈடுபட்டது. அதிலும் அ.தி.மு.க வெற்றி பெற்று வருகிறது. தொகுதி வளர்ச்சிக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதாக இதுவரை தே.மு.தி.க.வை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க பக்கம் சென்று விட்டனர். இவர்களை போல் மேலும் பல தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க ஈ…
-
- 0 replies
- 501 views
-
-
தமிழக அரசு இயக்கம் அதிக கிளைகள் கொண்ட விற்பனை நிறுவனம் எதுவென்றால் அது டாஸ்மாக் என்பதை அனைவரும் அறிவோம் . சுகாதார நிலையங்கள் புகாத கிராம இடங்களில் கூட டாஸ்மாக் பார் புகுந்து விளையாடுகிறது. மாலை வேளைகளில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத ஆண்களிற்கு அடைகள இடமாக , அல்லது அடையாள இடமாக டாஸ்மாக் மாறி விட்டது . பணக்கார அரசியல்வாதிகளில் பாதி பேர் இப்போது மது உற்பத்தி கூட நிறுவனங்களையே நடத்துகின்றனர் . அந்த கூடத்தில் இருந்தே டாஸ்மாக்கிற்கு விநியோகம் நடைபெறுகிறது. இப்படி சாராயம் எந்த வித தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கையில் , அன்றாடம் பயன்படுத்தும் நீருக்கும் குடி நீருக்கும் தமிழ்நாடு , குறிப்பாக சென்னை கடும் தட்டுப்பாட்டை நோக்கி சென்று கொண்டு வருகிறது. சென்னையில்…
-
- 0 replies
- 649 views
-
-
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இருவருக்கு 10 மாத பயிற்சி கடந்த 27ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, வெலிங்டன் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், இலங்கை அதிகாரிகளை வெளியேற்ற கோரி ராணுவ முகாமை முற்றுகையிட்டன. இதைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்பி செந்தில்குமார் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:குன்னூர்…
-
- 0 replies
- 399 views
-
-
தமிழகத்தில் விவசாய நிலத்தின் பரப்பு, கடந்த 10 ஆண்டுகளில், 17.66 லட்சம் எக்டர் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் விவசாய பரப்பு மற்றும் விளைபொருட்களின் உற்பத்தி குறைந்து வருவதை தடுக்க, தமிழக அரசு தனி பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பருவமழை பொய்த்து போவதால், பாசன திட்டங்களை நம்பியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கின்றன. மழைநீரை சேமிக்கும் குளம், குட்டைகளை தூர்வாரி புனரமைக்காததாலும்; நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீரை சேமிக்காததால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி விவசாய பணிகளுக்கான தொழிலாளர் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு சென்றடையாத வேளாண் பல்கலை., தொழில்நுட்பங்கள், பெரும் சவாலாக உள்ளன. மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி, தொழில்நுட்ப பிரச்ன…
-
- 0 replies
- 2.5k views
-
-
புதுக்கோட்டை அருகே இன்று புதன்கிழமை நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் எட்டு பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றனர். கைக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் வல்லத்திராக்கோட்டையில் அவர்கள் பயிலும் அரசுப் பள்ளிக்குச் செல்ல பேருந்திற்காக காத்திருந்தனர். நெடுநேரமாகியும் பஸ் எதுவும் வராத நிலையில் அவர்கள் அவ்வழியே வந்த சரக்கு வாகனம் ஒன்றில் பயணித்தனர் அப்போது, புதுக்கோட்டையிலிருந்து எதிரே வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து, அந்த வாகனத்தின் மீது மோதியது. இதில் சரக்கு வாகனத்திலிருந்த 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மருத்துவமனைக்…
-
- 1 reply
- 481 views
-
-
தமிழகத்தில் இருந்து டெல்லி மேல்-சபை தேர்தலில் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட 4 வேட்பாளர்கள் தங்களுடைய 151 எம்.எல்.ஏ.க்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டுவிடுவார்கள். அத்துடன் கூட்டணி கட்சி வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ராஜாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிப்பதன் மூலம் 5-வது வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஆறாவது வேட்பாளர் பதவிக்கு தி.மு.க. சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வெற்றிக்காக தி.மு.க. வும், தே.மு.தி.க.வும் காங்கிரஸ் கட்சி தலைமையை நாடி உள்ளனர். இந்நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, டெல்…
-
- 0 replies
- 494 views
-
-
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ஆறு உறுப்பினர்களை தேர்ந்து எடுத்து அனுப்ப வேண்டிய அரசியல் பணிகள் ஆரம்பித்த வேளையிலேயே , திமுக, கனிமொழியை அந்த பதவிக்கு என்று மனதில் வைத்து கொண்டு தேமுதிக , பா ம க , காங்கிரஸ் என்று அனைத்து கட்சி வாக்குகளை திரட்ட ஆரம்பித்து விட்டது , கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகளையும் கண்டு கொள்ளாமல் பா ம க வோடு நெருக்கம் என காண்பித்து கொண்டது இதற்காகவே . பா ம க தலைவர் ராமதாசை மருத்துவமனையில் சென்று திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கனிமொழி நேரில் பார்த்தனர் . ஆனால் எந்த கட்சியும் திமுகவை கண்டு கொண்டதாக தெரியவில்லை . பா ம கவும் தேர்தலை புறக்கணிக்கும் என்று சொல்லி விட்டது. இடையில் அதிமுக ஐந்து உற…
-
- 1 reply
- 584 views
-
-
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் ராணுவ முகாம் மற்றும் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 27-ந்தேதி முதல் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதினார். வெலிங்டன் ராணுவ முகாமில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவையும் இலங்கை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த கட்சியை சேர்ந்தவர்கள் ராணுவ …
-
- 1 reply
- 574 views
-
-
அம்மா இருக்கும்போது மோடி எதுக்கு? குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் இந்தியாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக்க பல ஆதரவுக்குரல்கள் எழுகின்றன. அதே வேளையில் திரு. நரேந்திர மோடியை விட தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராகத் தகுதியுள்ளவர் என்பதற்கு பத்து காரணங்களைத் தெரிவிக்கிறார் பத்திரிகையாளர் சஞ்சய் பின்ரோ. எல்லோரும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமராகலாமா அல்லது ஆகக் கூடாதா என விவாதித்துக் கொண்டிருக்கும் போது, இந்திய அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமாகிய சஞ்சய் பின்ரோ அவர்கள், தமிழ்நாட்டுப் பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பைப் பற்றிப் பேசுகிறார். ஜெயலலிதாவின் இன்றைய ஈ…
-
- 0 replies
- 1k views
-
-
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் படுகொலை செய்த சிங்கள ராணுவத்தினருக்கு மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே, அதிலும் தமிழ்நாட்டிலேயே பயிற்சி கொடுத்த இந்திய அரசு, கடந்த மே 27-ந் தேதி முதல் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை ராணுவத்தின் விங் கமாண்டர் தசநாயகேவுக்கும், மேஜர் ஹரிச்சந்திராவுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர், சிங்கள ராணுவதினரை உடனே வெளியேற்ற வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார். குன்னூர் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியை அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின. ஆனாலும் மத்திய அரசு, சிங்கள ராண…
-
- 0 replies
- 561 views
-
-
இனமான இயக்குனர் திரு மணிவண்ணனுக்கு தமிழீழ விடுதலை புலிகள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர் . அதில் திரு மணிவண்ணனுக்கு 'தமிழினஉணர்வாளர்' என்று மதிப்பளிப்பளித்துள்ளர். அவர்கள் வெளியிட்ட அறிக்கை பின் வருமாறு இருந்தது : 'தமிழினஉணர்வாளர்மதிப்பளிப்பு' திரு. சுப்பிரமணியன் மணிவண்ணன் அவர்கள். சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடத்திவரும் இனஅழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த் தேசியப் பணியினை இந்தியாவிலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் திறம்படச் செய்து வந்த திரு.சுப்பிரமணியன் மணிவண்ணன்அவர்களை நாம் இழந்துவிட்டோம். திரு. சுப்பிரமணியன் மணிவண்ணன் அவர்கள் இந்தியாவில் வாழ்ந்து வந்த போதிலும் தமிழீழ மண்மீது கொண்ட தீராப்பற்றின்காரணம…
-
- 0 replies
- 602 views
-
-
டெல்லி மேல்-சபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளரை அறிவிப்பதற்கான செயற்குழு கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.சி.டியூ. அலுவலகத்தில், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் நடந்தது. மேல்-சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர்டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில் இதுதொடர்பாக தா.பாண்டியன் …
-
- 0 replies
- 306 views
-
-
தமிழர் உணர்வாளர்கள் நடிகர்கள்,மக்கள் எனஆயிரக்கணக்கானவர்களின் இறுதி வணக்கத்துடன் இனமான இயக்குனர் மணிவண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்டது.(படங்கள்,காணொளிகள்) நாம்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மணிவண்ணின் இறுதி நிகழ்வுகள் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றுள்ளது இன்று இறுதி வணக்க நிகழ்வில் உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நெடுமாறன்,நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான, காசியானந்தன்,பொ.மணியரசன், வைகோ உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களும் சத்தியராஜ்,நடிகர் மனோபாலா,தென்னிந்திய நடிகர் சங்கதலைவர் சரத்துகுமார்,ராதிகா,உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்,இயக்குனர்கள் என பெருமளவானர்கள் திரண்டு தங்கள் இறுதி வணக்கத்தினை செலுத்தினார்கள் தொடர்ந்து தி.மு.க துணைத்தலைவர் மு.க.ஸ்டாலின்,…
-
- 2 replies
- 972 views
-