Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒரு இந்தி மொழி வெறியனுக்கு முன்னாள் தமிழக கிரிக்கெட் ஆட்டக்காரர் கொடுக்கும் பதில் செருப்படி. இப்படித்தான் ஒவ்வொரு தமிழனும் இந்தி மொழி வெறியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். தலைப்பாகை அணிந்த சிங்கு வெக்கமில்லாமல் பொய் சொல்கிறான் , இந்தியில் பேசினால் 99 விழுக்காடு மக்களுக்கு புரியுமாம் ! இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் இந்தியாவில் வெறும் 40 விழுக்காடு மட்டுமே . அதுவும் இந்தி ஒத்த பல மொழி பேசும் மக்களிடம் இந்தி தாய் மொழியாக திணிக்கப்பட்டது. சிங்கு சொல்கிறான் ஆங்கிலம் அந்நிய மொழியாம். பாவம் அவனுக்கு தெரியவில்லை இந்தியும் அந்நிய மொழி தான் என்று. அவனுக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழக ஆட்டக்காரருக்கு நம் பாராட்டுகள்! Srikkanth gave a heavy dose to Sidhu....Naan Tamil Pesuna …

  2. இஸ்லாமியர்களை குற்றப் பரம்பரையினர் போல எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கான விசாரணையைத் தொடங்கும் முன்பே, முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்வது என்பது அவர்கள்தான் குற்றம் செய்திருப்பார்கள் என்று நாட்டு மக்களை நம்ப வைக்கும் முயற்சியாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில், குறிப்பாக கோவையில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பிறகு அவர்கள் தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் சமீப நாட்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த மல்லேஸ்வரம் குண…

  3. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை சென்னை, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அவர் பேசியபோது, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டிருந்தாலும் அத்திட்டத்திற்கு அ இஅதிமுகவே மூல காரணம் என வாதிட்டார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். 1986 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது 120 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1994 ஆம் ஆண்டு 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்தைச் ச…

  4. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த வக்கீல் சாந்தகுமரேசன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள் அதிகம் உள்ளன. எனவே மீண்டும் விசாரித்தால் முழு விவரம் தெரியவரும். இல்லையெனில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் வழக்கை போல ராஜீவ் கொலையும் "மர்ம"மாக இருக்கும். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. இயக்குநர்கள் க…

    • 0 replies
    • 565 views
  5. சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாள் விழா தென் சென்னை மாவட்ட திமுக சென்னையில் பொதுக் கூட்டத்துடன் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு 90வது வயது ஜூன் 3ம் தேதி பிறக்கிறது. இதையொட்டி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்குகிறார். கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகன் பாராட்டுரை வழங்குகிறார். கருணாநிதி கலந்து கொண்டு ஏற்புரை வழங்கி பேசுகிறார். இதில் திமுக முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள். மேலும், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம் மற்றும் சிறுகதைப் பூங்கா நூல்கள் வெளியீட்டு விழா வருகிற 2-ந்தே…

    • 7 replies
    • 809 views
  6. இலங்கை தமிழர் பிரச்னை ஓர் உணர்வுப்பூர்வ பிரச்னை. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ் மண்ணில் எந்த ராணுவப் பயிற்சியையும் இந்திய ராணுவம் அளிக்காது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி அளித்தார். தஞ்சையில், புதுக் கோட்டை சாலையில் உள்ள விமானப்படை தளம் ரூ.150 கோடியில் நவீனமயமாக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் தஞ்சை விமானப்படைத் தளத்திற்கு வந்தார். அவரை இந்திய விமானப்படை தலைமை தளபதி என்.ஏ.கே.ப்ரவுனி, தென்னக வான்படை தலைமை கட்டளை அலுவலர் ஏர்மார்ஷல் ஆர்.கே .ஜோலி, எஸ்பி தர்மராஜ், டிஆர்ஓ சுரேஷ்குமார் ஆகியோர…

  7. மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் குறித்த விடயங்களுக்கு பொறுப்பாக ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி நியமிக்கப்பட்டமைக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇக) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் நஜீப் ரசாக்கின் நேரடிப் பார்வையில், பிரதமர் அலுவலகத்தில் இந்தத் துறைக்கான துணை அமைச்சராக வேதமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதை எந்த வகையிலும் தம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று மஇக-வின் தலைவரும் சுற்றுச்சூழல் அமைச்சருமான பழனிவேலு பிபிசி தமிழோசையிடம் கூறினார். இது குறித்து தாங்கள் பிரதமர் நஜீப் ரசாக்குடன் விவாதித்திருந்தாலும், அவர் எவ்விதமான முடிவையும் வெளியிடவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஹிண்ட்ராஃப் வேதமூர்த்தி ( பிரதமர் நஜீபுக்கு ஆதரவு தெரிவிக்க முன்னதா…

  8. திருச்சியில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு வைகோ பேசியதாவது:- திருச்சி தீரர்களின் கோட்டையாக விளங்கி வருகிறது. அண்ணாதுரை முதல் பல தலைவர்களும் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகளை திருச்சியில் தான் அறிவித்துள்ளனர். அந்த வகையில் ம.தி.மு.க. வும் முக்கிய முடிவுகளை திருச்சியில் இருந்து அறிவித்துள்ளது. மது அருந்துவோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலை நீடித்தால் வளமான தமிழகம் என்பது கேள்விக்குறியாகி விடும். இதுபோன்ற தொலை நோக்கு சிந்தனையில்தான் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பல்வேறு போராட்டங்கள், நடை பயணம் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதை சிலர் கேலி செய்து வருகின்றனர். இலங்கையில் பொத…

    • 0 replies
    • 511 views
  9. இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம். தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொலைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது. அந்த போராளி வீரமங்கை யின் பெயர்தான் குயிலி. 1776ம்…

  10. சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கேன் குடிநீர் நிரப்பும் நிறுவனங்கள் தரச்சான்றிதழ் பெற்றுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு பதிலளிக்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தரமற்ற வகையில் குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதையடுத்து, பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக கொண்டு பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து தரமற்ற குடிநீர் நிரப்பும் நிறுவனங்களை மூட மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை, புறநகர் பகுதிகளில் தரமற்ற 200க்கும் மேற்பட்ட குடி…

  11. Sunday 26th May 2013 கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடத்தி வருவது மட்டுமின்றி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் குழு இன்று இடிந்தகரைக்கு வந்துள்ளது. பையனூர் ராமச்சந்திரன் என்பவரின் தலைமையில் வந்துள்ள இந்த குழுவில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என 130பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடந்துவரும் பந்தலில் இன்றுகாலை “கூடங்குளம் தொடர்வண்டி”…

  12. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு வரவில்லை என்று கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளும், 438 சுயநிதி கலை, அறி…

    • 0 replies
    • 499 views
  13. சிம்மக் குரலோன் டி.எம்.செளந்தரராஜன் உடலுக்கு இசைஞானி இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை டிஎம்எஸ்மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பல்துறையினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., சிவாஜியின் மறைவுக்குப் பின்னர் டி.எம்.எஸ்ஸின் மரணம் உலகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டி.எம்.எஸ்ஸின் வீட்டுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டி.எம்.சவுந்தரராஜன் குரல் மாதிரி இன்னொருத்தர் வரமுடியாது. தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய குரல். அவர் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது. எவ்வளவு புதியதாக பாடல்கள் வந்தாலும், அவருடைய பாடல்களை கேட்டு, ரசிக…

  14. கும்ப கோணம் அருகே உள்ள ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட 1000 வருடங்கள் பழமைவாய்ந்த கோவில் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு கேட்டு கையொப்பமிடுங்கள். http://www.change.org/petitions/stop-demolishing-the-1000-year-old-temple? (முகநூல்)

  15. போலீஸ் ஏட்டு பெயர் தியாகராஜன் (வயது 45). இவர், கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றுகிறார். ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். ஏட்டு தியாகராஜன் நேற்று மாலை 3.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை செல்லம்மா தோட்டம் குடிசை பகுதியில் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே பகுதியில் விமல் என்ற விமல்ராஜ் (20) என்ற ரவுடி வசித்து வந்தார். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடுவதில் பலே குற்றவாளி. இவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர். வீடு புகுந்து திருடிய வழக்கில் ஐஸ் அவுஸ் போலீசார் இவரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று இவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார…

    • 4 replies
    • 581 views
  16. புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிøரவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்காலில் காவு கொள்ளப்ப…

  17. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் கடந்த ஒருவாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க வில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.யை அனுப்பி உடல்நலம் பற்றி விசாரித்தார். இந்த நிலையில் கனிமொழி எம்.பி. நேற்று பகலில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர் ராமதாஸ் உடல்நலம் பற்றி விசாரித்தார். அவர் ராமதாசின் மகளுடன் சுமார் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் மு.க. ஸ்டாலினும் ராமதாசை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரும் ராமதாசின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். ரா…

    • 0 replies
    • 554 views
  18. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தன் மகனை மீட்க உதவி கோரி, அவருடைய தாயார் குசலகுமாரி என்பவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் செய்தி ஒன்று வந்துள்ளதே? பதில்:- 2009ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது, தன் மகன் துஷ்யந்தனை (வயது 26) இந்தோனேசியாவிற்கு அவருடைய தாய் குசல குமாரி அனுப்பி வைத்திருக் கிறார். அங்கிருந்த அவருடைய மகன் பத்திரமாக இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் கூடவந்த ஒன்பது தமிழர்களுடன் செல்லவிருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு நான்காண்டுகளாக எந்தச் செய்தியும் மகனிடமிருந்து கிடைக்கவி…

    • 0 replies
    • 398 views
  19. சென்னை: "வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீனவ அமைப்புகள் ஒன்றுபட்டு நின்று நமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும்" என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை மூடக் கோரி ஓராண்டுக்கு மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அணுஉலை இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் பச்சை கொடி காட்டியது. இதைத் தொடர்ந்து, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உவரியில் மீனவ அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், அடுத்தகட…

  20. போலீஸ் ஸ்டேஷனில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக கடமலைக் குண்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேனி பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் ரமா (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஒரு வழக்கு விசாரணைக்காக கடமலைகுண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட் டார். அன்று இரவில் ஸ்டேஷனில் ரமாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார், எஸ்ஐ அமுதன் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. பின்னர் திருட்டு வழக்கில் போலீசார் ரமாவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் ரமா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக…

    • 0 replies
    • 610 views
  21. புதன், 22 மே 2013 மரக்காணம் கலவரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக செயல்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை, உணரவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பா.ம.க. நிறுவனர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது கூறினார். மேலும் மரக்காணம் கலவரம் தொடர்பாக கருணாநிதி கண்டன அறிக்கை எதுவும் விடாதது விடுதலை சிறுத்தைகள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது. இது குறித்து திருமாவளவன் கூறுகையில்: ஆளுங்கட்சியை விமர்சிப்பது எதிர்கட்சியின் கடமை. அந்த அடிப்படையில…

  22. புதன், 22 மே 2013 கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. காவிரிப் பிரச்சனையில் ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. கர்நாடகத்தில் புதிய முதல்வராகப் பதவி ஏற்று உள்ள சித்தராமையாவும் இதற்கு விதி விலக்கு அல்ல. தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவைச் செயல்படுத்த, பாஜக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முயன்றபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித…

  23. காஞ்சிபுரம்: கல்பாக்கத்தில் இனிமேல் புதிய அணுஉலை திறக்கக்கூடாது என ஏற்படுத்தப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று கையெழுத்திட்டார். சுமார் 30 வருடமாக கல்பாக்கத்தில் அணுஉலை இயங்கி வருகிறது. 2 அணுஉலைகள் இயங்கி வரும் நிலையில் தற்போது மேலும் 'பாவினி' என்ற ஒரு அணுஉலையை கட்டி வருகிறார்கள். இந்த அணுஉலையைத் தொடர்ந்து, மேலும் புதிய அணுஉலைகள் கட்டக்கூடாது எனக்கூறியும், கல்பாக்கத்தைச் சுற்றி சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், வெங்கம்பாக்கம், குன்னத்தூர், மனமை, நல்லாத்தூர், வாயலூர், கொக்கிலமேடு போன்ற சுமார் 16 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். அணுஉலைக்கு சொந்தமான பள்ளிகளில் இடம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் சுற்றுவட்டா…

  24. மதுரை ரயில்வே நிலையம் அருகே விக்டோரியா ராணியால் உருவாக்கப்பட்ட எட்வர்டு மன்றத்தில், அரசு ஊழியர் மற்றும் வழக்கறிஞர்களும் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மன்றத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியர். கடந்த சில ஆண்டு சில ஆண்டுகளாக இந்த மன்றத்தில் சிலர் மதுபானம் அருந்துவதாக மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலத்துக்கு புகார்கள் குவிந்தன. இந்த நிலையில் 22.05.2013 புதன்கிழமை இரவு 50க்கும் மேற்பட்ட போலீசார் மன்றத்தை சுற்றி வளைத்தனர். உள்ளே மது அருந்தியதாகவும், மது அருந்தும் கூடம் அனுமதியின்றி வைத்திருந்தாகவும் 41 பேரை பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவருமே மத்திய மாநில அரசு ஊழியர்கள், வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகளாவர். முன்னாள் மதுரை காவல்துறை உதவி கண்காண…

    • 0 replies
    • 388 views
  25. இந்தியாவில் பிணை வழங்கப்பட்ட ஒரு பெண் கைதி, சிறையிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்ட நிகழ்ச்சி குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய் குமார் என்ற பெண், கர்ப்பமாயிருந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தான் குற்றமற்றவர், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறியிருந்தார். அவரது கணவர் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு ஒரு சிறிய ஜாமின் தொகை கட்டி பிணையில் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தொகை கட்டப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். விஜய் குமார் இதற்கிடைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.