தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
சென்னை: ம.தி.மு.க. 20ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. தி.மு.க.வில் இருந்து விலகிய வைகோ, ம.தி.மு.க. என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றுடன் 20 ஆண்டு ஆகிறது. இந்த நிலையில், 20 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கழகக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி முன்னோடிகளும், தோழர்களும், முன்னணியினரும் கலந்து கொண்டனர் http://news.vikatan.com/article.php?module=news&aid=14564
-
- 0 replies
- 374 views
-
-
நான்கு நாட்களுக்கு முன்பு அத்துமீறி இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்தபோது 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு நாட்டு கடல் எல்லைக்குள் செல்கிறோம் என்ற அச்சம் சற்றும் இல்லாமல் இந்திய நாட்டு கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடித்த காரணத்தாலேயே இந்திய கடலோரக் காவல்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோரக் காவல்படையினர், இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த இலங்கை மீனவர்களை காக்கிநாடா கடலோரப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கிழக்கு கோதாவரி மாவட்டம் தும்முலபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் காவல் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இரண்டு போலீஸ்கார்கள காவலுக்கு இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மின் சப்ளை கட் ஆனதை தொடர்ந்து காற்று…
-
- 0 replies
- 680 views
-
-
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த ரமணிதரன். அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அந்தியூர் அருகே அண்ணாமடுவு என்ற இடத்தில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு அதிமுக எம்எல்ஏ ரமணிதரன் மாதத்தில் ஓரிரு நாட்கள் வந்து விட்டுபோவார். அதன்பிறகு உள்ளூர் அதிமுகவினர் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் 05.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை அந்த கட்டிடம் உள்ள பகுதியில் விவசாய தோட்டத்திற்கு சென்ற தங்கவேலு என்பவர் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அங்கு சென்றுள்ளார். அப்போது அலுவலகத்திற்குள் இருந்த பொருட்கள் எரிந்து கிடந்துள்ளது. உடனே விவசாயி தங்கவேல் உள்ளூர் விஏஓ மற்றும் காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார். அத…
-
- 0 replies
- 479 views
-
-
கச்சத்தீவு குறித்த தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவினால் அண்மையில் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் சரியானதே என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பேரவை உறுப்பினர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மற்றுமொரு தீர்மானத்தையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பான முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானம் தைரியமானது என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/…
-
- 0 replies
- 291 views
-
-
கோயம்பேடு அருகே நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்தவர் நாகநாதன். இவர் வில்லிவாக்கம் ஒன்றிய அண்ணா தொழிற் சங்க செயலாளராக இருக்கிறார். நேற்று இரவு வீட்டின் முன்பு தனது காரை நிறுத்தி விட்டு நாகநாதன் வீட்டுக்குள் தூங்கினார். நள்ளிரவில் சில மர்ம நபர்கள் நாகநாதன் வீட்டுக்கு வந்துள்ளனர். கோணி பையை பெட்ரோலில் நனைத்து காரின் முன்பக்கம் என்ஜின் பகுதியில் போட்டு தீவைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கார் தீ பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. அப்போது எதிர் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் கார் எரிவதை பார்த்து கூச்சல் போட்டனர். வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த நாகநாதனையும் எழுப்பினார்கள். எழுந்து வந்த நாகநாதன் கார் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தண்ணீர் ஊற்றி த…
-
- 0 replies
- 333 views
-
-
சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் 30-வது வணிகர் தின விழா, உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு மாநாடு இன்று நடந்தது. பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் கே.வி.கந்தசாமி செட்டியார் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.வி.ரத்தினம், தலைமை நிர்வாக செயலாளர் சி.எல்.செல்வம், துணை பொதுச் செயலாளர்கள் பெருங்குடி எஸ்.சவுந்திரராஜன், ஜவருல்லாகான், சண்முகநாதன், பழனியப்பன், ஹபிபுல்லா, மாவட்ட தலைவர்கள் ப.தேவராஜ், வியாசை எம்.மணி, மணலி டி.ஏ.சண்முகம், வி.ஏ.கருணாநிதி, கோபால், திருவடி, நிதிக்குழு எஸ்.ஆர்.பி.ராஜன், என்.ஏ.தங்கதுரை, சாலமன், சையது அகமது, திருஞானம் முன்னிலை வகித்தனர். மாநில முதன்மை துணை தலைவர் டி.பாலகிருஷ்ணன், தேசிய கொடியேற்றினார். இரா.ரத்தினசாமி வணிக …
-
- 0 replies
- 348 views
-
-
ரஷியா உதவியுடன் கூடங்குளத்தில் அதிநவீன அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலையம் பாதுகாப்பானதாக இல்லை. எனவே அங்கு மின் உற்பத்தி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் கே.எஸ். ராதா கிருஷ்ணன், தீபக்மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்ச்சில் இந்த வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடந்தது. மின் உற்பத்திக்கு தடை விதிக்க கோருவதற்கு ஆதரவான கருத்துக்களை அணுமின் உற்பத்தி எதிர்ப்பாளர்கள் வைத்தனர். ஆனால் மத்திய அரசும், அணுமின் உற்பத்தி கழகமும் எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டுக்களை மறுத்தன. இயற்கை பேரழிவு ஏற்பட்டாலோ, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலோ கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று உறுதி கூறப்பட்டன. இந்த வ…
-
- 0 replies
- 519 views
-
-
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. பஸ்கள் கல்வீசி தாக்கப்படுகின்றன. இந்த போராட்டம் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 513 பஸ்கள் சேதம் அடைந்துள்ளன. 13 அரசு மற்றும் தனியார் பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ.2 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிய வந்துள்ளது. இதுதவிர 20 புளியமரங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 160 மரங்கள் வெட்டப்பட்டு ரோடுகளின் குறுக்கே போட்டு வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. 4,700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14456:13-bu…
-
- 0 replies
- 519 views
-
-
மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் வங்கிக் கணக்கு, சொத்துக்களை முடக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பவரின் புகழ் மாநிலம் கடந்தும் பரவி உள்ளதால், தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்தவர்களும் அவர் மீது புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பவர் ஸ்டார் பற்றிய வாழ்க்கைக் குறிப்பே உள்ளது. “மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த பவர்ஸ்டார் சீனிவாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து, பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் தபால் முறையில் அக்குபஞ்சர் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2-வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில…
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியின் கட்டளைப்படி, தமிழகத்தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான தமீம் அன்சாரி, திருச்சி சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தஞ்சாவூரை சேர்ந்த தமீம் அன்சாரியை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு கியூ பிராஞ்ச் கைது செய்தனர். அவரிடம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், கல்பாக்கம் அணு உலை, காரைக்கால், நாகை துறைமுகங்களின் வரை படங்கள், இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய சிடிக்கள், புத்தகங்கள் இருந்ததாக கியூ பிராஞ்ச் கூறியது. இவையெல்லாம், சாதாரணமாக யாராலும் எடுக்கப்படக் கூடியவை என்ற போதிலும், தமீம் அன்சாரி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட…
-
- 0 replies
- 521 views
-
-
2011-ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த, பா.ம.க. படுதோல்வி அடைந்தது. சட்டசபை தேர்தலில் வன்னியர், ஆதிதிராவிடர் ஆகிய இரு சமுதாயத்திலிருந்தும், சுமார் 50 சதவீதம் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தன. அதையடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. வட மாவட்டங்களில் பெருவாரியான வெற்றியை பெற்றது. தனித்துப் போட்டியிட்ட பா.ம.க. 3.5 சதவீதம் வோட்டுகளை தான் பெற முடிந்தது. இந்தக் கணக்கை பார்த்த அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே பா.ம.க.வின் செல்வாக்கு சரிந்துள்ளதை உறுதி செய்து கொண்டன. அக்கட்சியுடன் இனிமேல் கூட்டணி அமைக்க தேவையில்லை என, இரு கட்சிகளும் முடிவெடுத்து உள்ளன. இந்த மெசேஜ் ராமதாஸூக்கு போக அவர், ஏதோ…
-
- 0 replies
- 372 views
-
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுவரை 6 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் சிறையிலிருந்து அவர் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் அவர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு விழாக்களில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக டாக்டர் ராமதாஸ் மீது மாமல்லபுரம் போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸை திருக்கழுக்கு…
-
- 0 replies
- 601 views
-
-
“பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தி, அந்தப் பழியை பா.ம.க. மீது போட சதி நடந்து வருகிறது. இதில் பா.ம.க.வினர் சிக்கி விடக் கூடாது. அமைதி வழியில் தங்களது போராட்டங்களை அவர்கள் நடத்த வேண்டும்” என்று பா.ம.க. தலைமை நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியதற்காக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு, அன்புமணி ராமதாசு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் உடைக்கப்படுவதாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு பா.ம.க.வினர் தான் காரணம் என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ப…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றையும் முதல்வர் கொண்டு வந்துள்ளார். தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும், கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றையும் முதல்வர் கொண்டு வந்தார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14414:chief-minister-jayalalithaa-on-katchativu-varkkappatta-recover-from-jet-assembly-resolution&catid=36:tamilnadu&Itemid=102
-
- 4 replies
- 560 views
-
-
நாமக்கல் அருகே உள்ள சேந்தமங்கலம் பேருந்து நிலையம் முன் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி எம்எல்ஏ காடுவெட்டி குரு ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் அந்த சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் எம்.ஜி.ஆர். சிலையின் கால் பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிமுகவின் நகர அவைத்தலைவர் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்ஜிஆர் சிலைக்கு தீ வைத்தவர் குறித்து தேடி வந்தனர். இந்நிலையில், போலீசார் விசாரனையில் அதே ஊரிலுள்ள மேட்டுத்தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரபு வயது-29…
-
- 0 replies
- 462 views
-
-
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜு பவுஞ்சூர் வெட்கடாபுரம் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் கூச்சட்டதை அறிந்து எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் வந்து தீப்பற்றிய காரை அணைத்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியது குறித்து அவர் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எம்எல்ஏ ராஜு கூறுகையில், நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டு வெளியே வந்தோம். அப்போது கார் எரிந்து கொண்டிருந்தது. பின்னர் …
-
- 0 replies
- 327 views
-
-
தமிழகத்தின் ஆண்ட பரம்பரை, வீரப் பரம்பரை என்று அப்பாவி மக்களை உசுப்பேத்தி ஆதாயம் அடையப் பார்க்கும் ஆதிக்க சாதி தலைவர்கள் ஒரு புறம். மறு புறம் இவர்களது ‘வீரம்’ என்பது பொதுக்கூட்ட மேடைகளில் அதிகபட்ச டெசிபல்களில் கத்தும் ஊளைச் சத்தம் மட்டும்தான் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. வில் ஏந்திய அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ராமதாஸ் நிலைமை வண்டு முருகன் என்றால் அன்புமணியின் நிலைமை கைப்புள்ளையின் கண்றாவி கண்டிசனையும் விஞ்சி விட்டது. சென்னை தி.நகர் வீட்டில் அவர் கைது செய்யப்படும் போது அழவில்லையே தவிர அவ்வளவு சோகம். அரற்றியவாறு ஜெயலலிதாவுக்கு சாபம் விடுகிறார். அதுவும் அடுத்த தேர்தலில் அவர் வெற்றிபெற மாட்டார் என்று. தனது கைதை கருணாநிதியின் “ஐயோ” கைதுடன் வேறு ஒப்பிடுகிறார்.…
-
- 1 reply
- 4.5k views
-
-
மகஇக தோழர் சீனிவாசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 5.5.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை, தி நகர் செ.தெ.நாயகம் பள்ளியில் நடைபெறும். அனைவரும் வருக ! நிகழ்ச்சி நிரல் : தலைமை : தோழர் வே.வெங்கடேசன், மாவட்டச் செயலர், ம.க.இ.க, சென்னை. உரையாற்றுவோர் : தோழர் காளியப்பன், இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம் தோழர் சு.ப.தங்கராசு, பொதுச் செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர் அஜிதா, பெண்கள் விடுதலை முன்னணி தோழர் வ.கார்த்திகேயன், புரட்சிகர – மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மில்ட்டன், மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தோழர் மருதையன், மாநில செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம் நாள் : 05.05.2013, ஞாயிறு நேரம் மாலை, 6 மணி. இடம் : செ.தெ.நாயகம…
-
- 0 replies
- 537 views
-
-
ராமதாஸ் கைது குறித்து தினமணியில் வந்த செய்தியைப் பார்த்து விடுவோம் : “ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும்” என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாமக தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்; மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்தநடவடிக்கை எடுக்க வேண்டும்…. ” என்றார். ஓட்டுப் பொறுக்கி அரசியலில் கூட்டணிகளின் மூலம்தான் காலம் தள்ள முடியும் என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளாக உருவாகியிருக்கும் நிலை. இதனால் தமிழகத்தில் கூட்டணி என்பது வ…
-
- 0 replies
- 402 views
-
-
சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, பா.ம.க.வினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ம.க தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான் என்றும் கூறினார். பா.ம.க.வினருக்கு நாடவடக்கம் வேண்டும் மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கருணாநிதி, பா.ம.க.வினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். ஓராண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அன்புமணியை கைது செய்தது சரியென்று தோன்றவில்லை என்று கருணாநிதி கூறினார். …
-
- 0 replies
- 317 views
-
-
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்களை தடுப்பதற்காக கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் முகம் கொடுக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணவேண்டுமாயின் கச்சத்தீவை மீட்பது மட்டுமே வழி என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங…
-
- 0 replies
- 262 views
-
-
தமிழ்நாட்டை பீடித்திருக்கிறது ஒரு பாசிச அரசியல் கும்பல். சில ஆயிரம் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை வைத்து கட்சி நடத்தி வரும் ராமதாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, தனது மகனை முதலமைச்சர் ஆக்குவதற்காக மக்களிடையே கலவரத்தைத் தூண்டி விடும் உத்தியை வந்தடைந்திருக்கிறார். இந்திய அளவில் இந்துத்துவா சக்திகள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களை நாட்டின் எதிரிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து செயற்கையான எதிரியை உருவாக்குவது போல, தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஆதிக்க சாதி குடும்பங்களின் எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் ராமதாசின் தலைமையிலான வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும். “தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்டும் கூலிங் கிளாசும் போட்டுக் கொண்டு வந்து வேறு ச…
-
- 4 replies
- 3.2k views
-
-
தமிழன் தொலைக்காட்சி முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது இன்று காலை சென்னை தி நகரில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு விழாவில் பேசியது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் பிடிவாரண்ட் அளித்துள்ளனர். இதனிடையே ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் இருந்து செல்லும் பெரும்பாலான பேருந்துகள் மூன்றா…
-
- 0 replies
- 453 views
-
-
பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த வாரகி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், பாமக தொடர்ந்து சாதி வன்முறையை தூண்டும் வகையிலும், கலப்பு திருமணத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு ஆகியோர் தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால், இருபிரிவினர் இடையே அண்மையில் சாதி மோதல் ஏற்பட்டது. அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த விழாவிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் மனுதாரர் வாரகி தெரிவித்துள்ளார். மரக்காணம் அரு…
-
- 0 replies
- 336 views
-
-
சென்னை: தவறான நோக்கத்திற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. தற்போது, ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம், கம்ப்யூட்டரில்தான் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றைக்கு செல்போன்களி்ல் இணையதளங்கள் பார்க்கும் வசதிகள் அமைந்ததோ, அன்று முதல் இணையதங்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை சிலர் நல்லதுக்காவும், சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துக…
-
- 1 reply
- 479 views
-