Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொண்றமை தொடர்பில் காணொளி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் கூடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கூடலூர் பழைய நகரத்தில் அண்மையில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய அவர், வழக்கத்தில் தீவிரவாதிகள் எதிரியிடம் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக சயனைட் குப்பிகளை உட்கொள்வது அல்லது ஒருவரையொருவர் சுட்டுக்கொல்;வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர். எனினும், சிறுவனை கொல்வது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் அழகிரி குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையும் தமிழ்ம மக்களின் க…

  2. டில்லி மேலிடத்தின் பாரபட்ச நடவடிக்கை, இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் த.மா.கா.,:அப்பிரச்னைகளை மையப்படுத்தி, காங்கிரஸ் கட்சியை, இரண்டாக உடைக்க, மத்திய அமைச்சர் வாசனும், அவருடைய ஆதரவாளர்களும் தயாராகியுள்ளனர் என்றும், லோக்சபா தேர்தலுக்கு, மூன்று மாதம் முன், மீண்டும், த.மா.கா., உதயமாகும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஆறு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., "சீட்' பெறுவதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் துவக்கப்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படுதோல்வி: தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்னையை முன்னிலைப்படு…

    • 4 replies
    • 1k views
  3. சென்னை: "காங்கிரசில் சேரப்போவதாக எனக்கு வேண்டாதவர்கள் வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள்" என்று கூறிய நடிகை குஷ்பு, தி.மு.க.வில்தான் இருக்கிறேன், தி.மு.க.வில்தான் தொடர்ந்து இருப்பேன் என்றார். தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினைத்தான் நான் முன்மொழிவேன் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பேட்டி ஒன்றில் கூறினார். இதனை நடிகை குஷ்பு விமர்சித்திருந்தார். இதையடுத்து, திருச்சியில் நடிகை குஷ்பு மீது மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியதோடு., சென்னையில் உள்ள அவரது வீடும் தாக்கப்பட்டது. இதனிடையே, இந்த தாக்குதலை கண்டித்த தி.மு.க. தலைமைக் கழகம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் தற்போது வரை நடவ…

  4. மதுரை: தி.மு.க. பொதுக்குழு கூட்டம் புறக்கணிப்பு, ஆதரவாளர்களுக்கு விளக்கம் கேட்டு தி.மு.க. நோட்டீஸ் என கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய மு.க.அழகிரியை இன்று கனிமொழி திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களை படபடக்க வைத்துள்ளது. சமீபத்தில் மதுரையில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் கலந்து கொள்ளாத அழகிரி ஆதரவாளர்கள் பதினைந்து பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் விட்டது தி.மு.க தலைமை. இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத அழகிரி ஆதரவாளர்கள், நாங்கள் நடத்திய அஞ்சா நெஞ்சன் பிறந்த நாள் விழாவில், கலந்து கொள்ளாத ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர் கேள்வி கே…

  5. இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் 25 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் மீனவ குடும்பத்தினர். காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட இவர்கள் இலங்கை போலீஸார் மூலம் மல்லாஹம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் 26 பேரையும் வரும் 11ஆம் தேதி வரை சிறைவைக்க மல்லாஹம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து 634 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி பெற்றிருந்தன. ஆனாலும் இலங்கை கடற்படையினர் மீதுள்ள அச்சத்தால் 300…

    • 0 replies
    • 379 views
  6. டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம், சட்டம், நீதிக்கான அமைச்சர் கே.பி.முனுசாமி இந்த மாநாட்டில் பங் கேற்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கையை இந்த மாநாட்டில் வாசித்தார். அந்த அறிக்கையில், பிராந்திய மொழி வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களும் நீதித்துறை நடவடிக்கைகளில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத்த வேண்டும்.. என்று அவர் கூறியுள்ளார்.htt…

    • 0 replies
    • 433 views
  7. குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியால், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 கைதிகளை தூக்கிலிடுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வழக்கறிஞர் சாமிக் மற்றும் சௌவுத்ரி ஆகியோர், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேர் தரப்பில், மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தனர். இதனை அவசர வழக்காக நீதிபதிகள் சதாசிவம் மற்றும் இக்பால் ஆகியோர் நேற்று இரவு விசாரித்தனர். கருணை மனுக்களை பரிசீலிப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்தியது ஏன் என அப்போது கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக 4 வாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். அதுவரை கருணை மனு நிராகரிக்கப்பட…

  8. பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்பதற்கு கனிமொழி எம்.பி. பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி. இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கலை இலக்கிய பகுத்தறிவு சார்பில் அமைப்பாளர் பூக்கடை ராமச்சந்திரன் தலைமையில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? பதில்: தலைவர்கள் தான் பேசி முடிவு செய்ய வேண்டும். கேள்வி: மதுரை மாவட்டத்தில் 6 தி.மு.க. நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்க…

    • 0 replies
    • 420 views
  9. 25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் 'இனப் படுகொலையை நடத்தி தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன் வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும் 'டெசோ' அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். 26.…

    • 1 reply
    • 399 views
  10. காற்றாலைகள் மூலம் 1,400 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டதால் தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி சனிக்கிழமை எப்போதும் இல்லாத அளவுக்கு 10,600 மெகா வாட் அளவைத் தொட்டது. இதன் காரணமாக மாவட்டங்களில் மின் வெட்டு செய்யப்படும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இரவில் மின் வெட்டே செய்யப்படுவதில்லை என்றும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் இரண்டாம் வாரத்தில் புது யூனிட்டுகளில் கோளாறுகள் ஏற்பட்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மொத்த மின் உற்பத்தி 8,500 மெகா வாட் அளவுக்கு குறைந்தது. இதனால் சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் மீண்டும் 9 மணி நேரத்துக்கும்மேல் மின் வெட்டு செய்யப்பட்டது. தேர்வு நேரத்தில் இதுபோன்று கூடுதல் மின் வெட்டு செய்யப்பட்டதால்…

    • 0 replies
    • 441 views
  11. தோழர்களே ! தமிழர் பண்பாட்டு நடுவம் ஐந்து விதமான வடிவமைப்பை கொண்ட கை உடைகளை வெளியிட உள்ளது . தமிழ் மொழி, தமிழர் நாடு, தமிழர் பண்பாடு இவைகளை முன்னிறுத்தி இந்த உடைகளை வடிவமைத்து உள்ளோம். இவை எப்படி உள்ளது ? எந்த அளவிற்கு தமிழ் மக்கள் இதை விரும்பி அணிவார்கள் என்பதை பொறுத்து தான் நாங்கள் இதை அச்சிட்டு வெளியிட முடியும். கடைகளில் விற்பனை செய்யவும் மற்றும் தனி நபர் பயன்பாட்டிற்கும் இதை தர உள்ளோம். உங்கள் விருப்பம் எப்படி என்று தெரிவிக்கவும். அதிகமான மக்கள் இவற்றை வாங்கினால் இதன் விலையை குறைத்துக் கொடுக்கலாம் . தமிழும் , தமிழர் அடையாளமும் தமிழகமெங்கும் இந்த கை உடைகள் மூலமாக நாம் பரப்பமுடியும் என்ற நம்பிக்கையில் இதை நாம் முன்னெடுக்கிறோம் . உங்கள் மேலான கருத்துக்களை பதியுங்கள் தோழர்…

    • 5 replies
    • 1k views
  12. நீங்கள் தமிழ் ஆர்வலரா ? கணினித் தமிழின் பயன்பாடு குறித்து அறிய விருப்பமா ? தமிழில் மென் பொருட்கள் உருவாக்க உங்களுக்கு ஆர்வம் உள்ளதா ? அதிவேகமாக வளர்ந்து வரும் தமிழ் கணினித் துறையில் உங்களுக்கு பயிற்சி பெற விருப்பமா ? எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகம் தமிழ் கணிப்பொறி பயன்பாடு மற்றும் மென்பொருள் குறித்து கோடை கால பயிற்சி வகுப்பு நடத்த இருக்கிறது. இது ஒரு மாத கால சான்றிதழ் படிப்பு. தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் இதில் சேர்ந்து பயன்பெறலாம். வயது வரம்பு இல்லை. தமிழ் கணித்துறை வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். தமிழ் தேசிய அரசியலின் மிக முக்கியமான கூறுகளில் ஓன்று கணிப்பொறியில் தமிழின் பயன்பாட்டை அதிகரிப்பது. தமிழின் வளர்ச்சிக்கு இது மிக இன்றியமையாதது. பணம் கட்டி படிக்க இயலாத மாணவர்களுக்…

  13. இன்று காலை வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பேட்டியளித்த குஷ்பு, இலங்கை வீரர்களுக்கு தடை விதிப்பது விளையாட்டுத்தனமானது. விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். தமிழக அரசின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக பேட்டியளித்துள்ளார். இதனால் குஷ்புவுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக போராடுவதற்கு டெசோ போன்ற அமைப்புகளை நடத்திவரும் திமுகவில் இருந்து கொண்டு, இம்மாதிரியான கருத்தை கூறியது குஷ்புவின் அரைவேக்காட்டுத்தனத்தை காட்டுவதாக திமுகவின் பெயர் கூற விரும்பாத முக்கிய தலைவர் ஒருவர் கூறியுள்ளார். தமிழில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தும், சுந்தர்சியை திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாகிவிட்டும் இலங்கையில் கொல்லப்பட்ட த…

  14. சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," 25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், “இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன் வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது”” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், ‘டெசோ’ …

  15. சென்னை: ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்று, காரைக்கால் அருகே நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 120 பேரை கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அகதிகள் முகாம்களில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 120 இலங்கை தமிழர்கள், படகு ஒன்றில் அனுமதி இன்றி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற படகு இன்று காலை வேளாங்கண்ணி - காரைக்கால் இடையே சென்றபோது, படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கடலோர காவல்படையினருக்கு செல்பேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனிடையே இது தொடர்பாக தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாற…

  16. தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மூர்த்தி என்பவரின் மனைவி ஜெயந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தேர்தல் விதிகளை மீறி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றும் விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், வ…

  17. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 19 மீனவர்களை மீட்டுக் கொண்டுவர சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில், டெல்லியில் உள்ள இலங்கை தூதரிடம் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேசியுள்ளனர். இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்தினர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் நீதிமன்ற காவல் மேலும் 10 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இது குறித்தும் இலங்கை அரசுடன் இந்த…

  18. சேலத்தில் காவல்நிலையத்துக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் . சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் காவல்நிலைய போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு பிரச்சனையில் 4 பேரை கைது செய்தனர். 4 பேரையும் காவல்துறையினர் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேரின் உறவினர்கள் நீதிமன்றத்தில் மருத்துவ பரிசோதனை செய்யக்கோரி மனு செய்தனர். நீதிமன்றத்திற்கு போனவர்களை போலீசார் மிரட்டியதாக, வீராணம் பொதுமக்கள் காவல்நிலையத்தை வழக்கறிஞர் ஹரிபாபு தலைமையில் முற்றுகையிட்டனர். பொதுமக்கள் காவல்நிலையத்தை பூட்டு போட்டனர். இதையடுத்து போலீசார் பொதுமக்களை கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13803:saleam-new…

    • 0 replies
    • 574 views
  19. மகாராஷ்டிர மாநிலம் தானேயில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாயினர், 55-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 12 தீயணைப்புக்குழுவினரும், 24-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தானேயின் ஷில் பாட்டா பகுதியில் உள்ள அந்தக்கட்டடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். சம்பவம் நடந்த போது 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்தக்கட்டடத்தில் இருந்துள்ளனர். இந்த அடுக்கு மாடி குடியிருப்பு சட்ட விரோதமாக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் மீட்கும் பணி தொடர்ந்து ந…

    • 0 replies
    • 436 views
  20. மாணவர்களின் பேரெழுச்சி: முன்னும் பின்னும் - யமுனா ராஜேந்திரன் அமெரிக்கத் தீர்மானத்தை ஈழத்தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? புகலிடத்தமிழர்கள் மேற்குநாடுகளில் வாழ்கிற அவர்தம் இயல்பினால் மேற்கத்திய அமெரிக்க அரசுகளின் வழியிலான அழுத்த அரசியலைத் தான் அவர்கள் மேற்கொள்ள முடியும். அமெரிக்காவின் மேற்கின் எந்தவிதமான முன்னெடுப்புகள் ஆனாலும் அதனை நிராகரிக்கிற நிலைமையில் புகலிட அரசியல் என்பது இல்லை. இந்தத் தீர்மானங்கள் குறித்த தமது தயக்கங்களுடன் அவர்கள் இத்தீர்மானங்களை வரவேற்கவே செய்வர். அவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது. இந்தத் தீர்மானம் குறித்து எதிர்வு கூறி இதனால் பயனேதும் இல்லை என நிராகரித்திருக்கிறார் ஈழத்தின் உள்ளிருந்து செயல்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜ…

  21. தமிழகத்தில் மாணவர்களின் போராட்டத்தை புதிய தலைமுறை தூண்டியதா? சிபிஐ விசாரணை என்று அச்சுறுத்திய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்... 27-03-2013 அன்று நேர்படப்பேசு நிகழ்ச்சியில் நடந்தது என்ன...? காணொளி: http://puthiyathalaimurai.tv/evks-elangovan-threats-to-puthiyathalaimurai-tv

    • 7 replies
    • 1.2k views
  22. ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது நடுக் கடலில் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. மீனவர்களை தாக்குவதோடு, அவர்களது வலைகள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி வருகின்றனர். 16 நாட்களாக நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2 நாட்களாகத்தான் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று 580 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல டோக்கன் பெற்றன. ஆனால் 400 படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றன. ஒரு படகுக்கு 5 பேர் வீதம் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பி…

    • 0 replies
    • 472 views
  23. இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பிரமாண்ட உண்ணாவிரதம் நடத்துகின்றனர். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இதுவரை ஈழப் பிரச்சினை குறித்து பாராமுகமாக இருந்த ஐடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராடுகின்றனர். தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும், உலகெங்கும் பரவிக் கிடக்கும் உறவுகள் சுதந்திர ஈழத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நடிகர்களின் ரசிகர…

    • 4 replies
    • 1.1k views
  24. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பரிசீலிக்காது நிராகரித்தமைக்கு பாஜக கண்டனம் இலங்கைக்கு எதிரான தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலிக்காமல் நிராகரித்ததற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவிப்பதாக இல.கணேசன் கூறினார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த 3 தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை கூட செய்யாமல் நிராகரித்துள்ளது. இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார். ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், அம்மாநில மக்களின் எண்ணம். அதனை இந்த மைனாரிட்டி காங்கிரஸ் அரசு, நிர…

    • 5 replies
    • 1.3k views
  25. சென்னை: மதுரையில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்றும் சோழிங்கநல்லூரியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் எண்ணற்ற பயன்களை பெறும் வகையிலும் தேவையான அனைத்து திட்டங்களையும் வடிவமைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதி வளர்ச்சியினை அரசு ஏற்படுத்தி வருகிறது. மதுரை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.