Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஞானதேசிகனுக்கு எதிராக திருச்சியில் திரண்ட மாணவர்கள். பிரிவு: தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் திருச்சி, கரூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கலந்து கொள்ள இருந்தார். இதற்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை திடீரென்று தனி ஈழத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் சேதப்படுத்தினர். ஞானதேசிகன் திருச்சியை விட்டு வெளியேற வேண்டும், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாணவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது காங்கிரஸ் கட்சியினர், பேனர்களை சேதப்படுத்தியவர்களை கைதுசெய்யக் கோரினர். இதில் இருதரப்புக்கும் வாக்க…

    • 0 replies
    • 636 views
  2. இலங்கை தூதரை உடனடியாக கைது செய்ய வேண்டும்: வைகோ பிரிவு: தமிழ் நாடு இந்தியாவுக்கு உள்ளே இனபேதத்தைக் தூண்டும் சிங்களத் தூதர் பிரசாத் கரியவாஸத்தை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம், தொடர்ந்து அத்துமீறிச் செயல்பட்டு வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது, இந்தியாவுக்கு உள்ளே, தமிழர்களுக்கு எதிராக, இனபோதத்தைத் தூண்டும் வகையில், ஒரு கடிதத்தை எழுதி, மின் அஞ்சல் வழியாக, இந்திய ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார். சிங்களர்கள், வட இந்தியர்களின் வழித் …

    • 0 replies
    • 966 views
  3. முக்கிய செய்தி; தமிழீழ்ம் கோரியும் மாணவர் போரட்டத்தை வலுசேர்க்கவும் எத்திராஜ் கல்லுரி மாணவி தற்கொலை செய்து கொண்ட்தாகவும், இன்று மாலையே அடக்கம் செய்ய காவல் துறை வர்புறுத்துவதாகவும், மாணவர்கள் விரைந்து வருங்கள் என்றும் எனக்கு திரு மணி, தமிழ் உணர்வாளரிடம் இருந்து செய்தி வ்ந்துள்ளது. இடம் வியாசர்பாடி எண் 9840480273 மேலும் https://www.facebook.com/tamilnaduhungerstrike

  4. ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரி குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்ட பிரிவு: Business: General வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் இளங்கோவன் (வயது 24). தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இளங்கோவன் திடீரென்று கட்டவாக்கத்தில் உள்ள 50 அடி உயரம் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிமீது ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். தற்கொலைக்கு காரணமாக இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கூக்குரல் எழுப்பினார். இதனை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து சமாதானம் செய்ய முயன்றனர். கிராம மக்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து இளங்கோவன் மேலிருந்து குதிப்பதாக மிர…

    • 0 replies
    • 397 views
  5. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது. பிரிவு: தமிழ் நாடு பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது என நாடாளுமன்றச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியது: சஸ்பெண்ட் விவகாரத்தில் சட்டப் பேரவையில் எந்த மாதிரியான உத்தரவு வெளியாகி உள்ளது என்பதைப் பார்க்க வேண்டுமெனவும் அவர்கள் கூறினர். வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கை என்றால் அவர்கள் எம்.எல்.ஏ.வாகத் தொடர்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. சம்பளம், படிகள் மற்றும் தகுதிகள் அனைத்தையும் இழப்பதாக உத்தரவிட்டால் அத்தகைய எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்படும். ஆனாலும் இது குறித்து தேர்தல் ஆணையமே இற…

    • 0 replies
    • 436 views
  6. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சதீவை இந்தியாவுடன் இணைப்பதே தீர்வாக இருக்கும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் சட்டப் பேரவையில் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பு கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'இந்தியாவின் ஒரு பகுதியாக கச்சதீவு இருந்தபோது இந்தப் பிரச்சினை எழவில்லை. தமிழக மீனவர்கள் கச்சதீவின் அருகில் மீன் பிடித்து தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. அப்போது, தமிழ…

    • 1 reply
    • 700 views
  7. நேற்று நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அன்பழகன் காங்கிரஸ் ஆட்சி கவிழ திமுக துணை நிற்காது என பேசியதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கருணாநிதி ஆதரவு தெரிவித்து பல்டி அடித்துள்ளமை உறுதிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசு கவிழ திமுக துணை நிற்காது என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.அதேசமயம் மதச்சார்புள்ள கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடகது என்பதில் தெளிவாக இருக்கின்றோம். அதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கவிழ திமுக ஒருபோதும் துணை நிற்காது என்றார். அய்யா அன்பழகனாரே நாங்களும் தெளிவாகத்தான் உள்ளோம். எந்த முகமூடிகளை போட்டுக் கொண்டு வந்தாலும் நாங்களும் எற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதில் உங்களைவ…

    • 5 replies
    • 761 views
  8. பதிவு செய்த நாள் : மார்ச் 26,2013,23:37 IST கருத்துகள் (12) கருத்தை பதிவு செய்ய சென்னை: ""மெஜாரிட்டி அரசில், மின்வெட்டு, 16 மணி நேரமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் வெட்கம் இல்லையா?'' என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. அப்போது, தி.மு.க., உறுப்பினர் எ.வ.வேலு பேசுகையில், ""தமிழக அரசின் பட்ஜெட், உப்பு சப்பு இல்லாதது. தேர்தல் அறிவிப்பில், "அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் நிலவும் மின் பிரச்னை தீர்க்கப்படும்; தமிழகம் மின் மிகை மாநிலமாகும்' என்றனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் மின் பிரச்னை நீடிக்கிறது,'' என்றார். இதற்கு, அ.தி.மு.க., உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளித…

    • 0 replies
    • 820 views
  9. பாராளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலைகளில் பிஸியாகியுள்ளன. அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும் தங்களது கூட்டணியை பிரிந்து தனித்து நிற்கின்றன. எந்த எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று உறுதியாகவில்லை என்றாலும், சில கட்சிகளில் நடவடிக்கைகளைப் பார்த்தால் திமுக, தேமுதிக-வுடன் கூட்டணி அமைப்பதற்காக வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்த திமுக, இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. அதேபோல தேமுதிக-அதிமுக கூட்டணி பிரிந்து விட்டதாலும், இவர்களும் இனி கூட்டண் அமைக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்தால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கருதும்…

  10. சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!: எதிர்ப்பு ஆரம்பம் Posted by: Mayura Akilan Published: Tuesday, March 26, 2013, 10:08 [iST] சென்னை: இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனம் சிங்களத்தில் நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும் கடைகள் உள்ளன. சர்ச்சைக்கும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போல. அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி பின்னர் மீள்கிறது. இப்போது தமிழகர்களுக்கு எதிரான பிரச்சனையில் சிக்கியுள்ளது. http://tam…

  11. சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், கொழும்பில் நவம்பர் 15 முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் இருந்து வேறு ஒரு நாட்டுக்கு மாற்றுமாறு நெருக்கடி கொடுக்க வேண்டும். இப்படி கொழும்பு மாநாட்டை புறக்கணிப்பதன் மூலமே இலங்கையில் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்று வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று கனடா வலியுறுத்தி வருகிறது. கொழும்பு காமன்வெல்…

    • 4 replies
    • 662 views
  12. சென்னை: முதல்வர் ஜெயலலிதா, நேற்று காலை, திடீரென வாகனத்தை நிறுத்தி, சாலை ஓர கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த கோவில் குருக்களை அழைத்து, பூஜை செய்த பிரசாதத்தை வாங்கிச் சென்றார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, ஈஞ்சம்பாக்கம் அனுமான் காலனியை சேர்ந்தவர் பால சூர்யா, 34. இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, 10க்கும் அதிகமான, விநாயகர் கோவில்களுக்கு பூஜை செய்து வருகிறார். மேலும், சாலைகளில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்வதும், இவரது வழக்கம். வழக்கம் போல், நேற்று காலை கிழக்கு கடற்கரைச் சாலையில், அக்கரை சிக்னல் அருகில் உள்ள, சாலையோர விநாயகர் கோவிலில், பூஜை செய்து கொண்டிருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவின் கார், இவரை கடந்து சென்றது. சிறிது நேரத்தில், முதல்வரின் கார் பின்னால் வந்து,…

  13. பொருளாதார புறக்கணிப்பு :: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்? கடந்த வருடம் நடந்த இனப்படுகொலைக்கு பின்னனியில் இருந்த சதிகளை கண்டுபிடித்து மாறிவரும் உலகஒழுங்கை புரிந்து கொண்டு செயல்பட வெண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. போருக்கு பின்னனியில் செயல்பட்ட இந்திய காங்கிரஸ் அரசின் தனிப்பட்ட வெறுப்பு, அரசு அதிகாரிகளின் தமிழின எதிர்ப்புடன் சேர்ந்து மனிதநேயமற்ற முறையில் சந்தை லாபத்திற்காக இந்திய அரசு செயல்பட்டதும் அதன் துணையாக இந்தியாவின் நிறுவங்கள் வேலைசெய்ததையும்/செய்வதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த தமிழினப்படுகொலைக்கு துணையாய் நின்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதார காரணிகளை நாம் தொடர்ச்சியாக கண்டறிந்து அதை எதிர்த்து போராடுவது நமக்கு கட்டாயமாகிறது. இந்த வழியில் நமத…

  14. தமிழகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டங்களால் செல்வாக்கிழந்துள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வியூகத்தில் தமிழகத்தை வளைத்துப்போட புதிதாக யோசிப்பதாக அமெரிக்க பத்திரிகையான ரைம் எழுதியுள்ளது. எப்படி பஞ்சாப்பில் இந்திய நடுவண் அரசுக்கு எதிராக எழுந்த அலையை அடக்க, அன்று ஒரு சீக்கியரை காங்கிரஸ் பிரதமராக அறிவித்ததோ அதுபோல தற்போது தமிழகத்தில் காங்கிரசை நோக்கி பெருக்கெடுத்துள்ள சுனாமியை தடுக்க ப.சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளராக்கும் துரும்புச் சீட்டை காங்கிரஸ் பாவிக்க யோசித்துள்ளது. மும்பை குண்டு வெடிப்பை சிறப்பாக கையாண்டமை, இதுவரை இந்திய பொருளாதாரத்தை ஸ்திரத் தன்மையுடன் வைத்திருத்தல் போன்ற திறமைகள் இவரிடம் இருக்கிறதாக ரைம் சுட்டிக்காட்டியுள்ளது. இதே கருத்தை பிரிட்டனில் இருந்…

    • 2 replies
    • 611 views
  15. ஈழத் தமிழர் நலனை முன்னிறுத்தி தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் உத்வேகம் அளிக்கிறது. இப்படி ஒரு போராட்டச் சூழலை தமிழகம் சந்தித்து எவ்வளவு காலம் இருக்கும்? அரசியல் ஒரு சாக்கடை; அது நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி, பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறையிடமிருந்து வெளிப்படும் இந்தத் தார்மிகக் கோபமும் தன்னெழுச்சியும் அது வெளிப்படும் அறவழியும் கொண்டாடப்பட வேண்டியவை. ஆனால், ஒரு போராட்டம் என்பது இவ்வளவு மட்டும்தானா? முக்கியமாக, இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன அதாவது இந்தப் போராட்டம் அடையப்போகும் இலக்கு என்ன? நாம் வாழும் காலத்தின் தன்னிகரற்ற போராளியான இரோம் ஷர்மிளா ஒரு போராட்டத்துக்கான தேவையாகக் குறிப்பிடுவது இவை: ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை... தீவி…

    • 7 replies
    • 689 views
  16. ராசா ஊழல் செய்தார் என்றால் பிரதமரும் அதற்கு உடந்தை. கருணாநிதி பிரிவு: அரசியல் தி.மு.க. மீது விழுந்த இடி, இப்போது காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. 2ஜி சேற்றை பிரதமரின் மீது பூசும் ஆவணங்கள் வெளியானதில் தி.மு.க-வின் பங்கு இருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது. 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை’ என்ற மூன்று வார்த்தைகள்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு ஏற்றத்தையும் இறக்கத்தையும் கொடுத்தது. மிகஅரிதான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற பணமூட்டைகளோடு முன்அனுபவம் உள்ள நிறுவனங்கள், முந்தாநாள் முளைத்த நிறுவனங்கள்... என்று நூற்றுக்கும் மேற்பட்ட பணம் கொழிக்கும் நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதியதும்... இந்த தள்ளுமுள்ளுவில் ராசா தில்லுமுல்லு செய்தார் என்பதும்தான் ஒரு லட்…

  17. ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிராக பலம் பெறும் போராட்டம் ஈழம் சிங்களவனின் கொலைக்களம் , தமிழகம் சிங்களவனின் விளையாட்டு களமா ?? ஐ.பி.எல் , கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியிலிருந்து எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் (?) அனுமதிக்க கூடாது , மீறி அனுமதித்தால் நாம் ஐ.பி.எல் போட்டியை புறக்கணிப்போம். மேலும் தமிழகத்தில் ஐ பி எல் போட்டிகள் நடைபெற விடமால் தடுத்து நிறுத்துவோம் , இந்த ஐ.பி.எல் விளையாட்டு போட்டியை தடுத்து நிறுத்தினால் அது அரசுக்கு பெரிய ஈழப்பீடை ஏற்படுத்தும், இந்தியா மட்டுமல்லமால் உலகத்தில் உள்ள அணைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் நமது போராட்டம் சென்றடையும் . பரப்புங்கள் பகிருங்கள் Lanka protests continue in Tamil Nadu, heat on IPL now The vote at UNHRC is ove…

    • 2 replies
    • 1.1k views
  18. சென்னையில் தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார். தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 7 முதல் 10 பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இவர்களுடன் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250 பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க.வின் கோரிக்கையை மத்திய அரசு உதாசீனப் படுத்தியதால் ஐக்க…

    • 3 replies
    • 612 views
  19. கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிலரும் தான்: அரிமாவளவன் பேச்சு Posted by: Vadivel Published: Monday, March 25, 2013, 11:56 [iST] கரூர்: கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிலரும் தான் என தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தெரிவித்துள்ளார். மணப்பாறை நகரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழீழம் கோரி உண்ணாவிரதம் இருந்தனர். மாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நகரின் வீதிகள் வழியாக தமிழீழம் ஒன்றே தீர்வு என்று முழக்கமிட்டு நகர்வலம் வந்தனர். அவர்கள் மத்தியில் தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் பேசியதாவது, ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி. அனைத்துலக நீதிமன்றத்தின் முன்பாக அவன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு செய்த …

  20. சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியதை பிரச்னையாக்க விரும்பவில்லை என்றும், காங்கிரசில் தமக்கு நண்பர்கள் அதிகம் இருப்பதாகவும், அவர்களுடன் உள்ள உறவை துண்டிக்க முடியாது என்றும் , இதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் தி.மு.க,. தென் மண்டல அமைப்பு செயலாளரும், மாஜி மத்தியஅமைச்சருமான மு.க., அழகிரி கூறியுள்ளார். இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் தொடர்பான பிரச்னையில் காங்., கூட்டணியில் இருந் தி.மு.க., வெளியேறியது. இதிலிருந்து 2 நாட்களில் , தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன், உதயநிதி ஸ்டாலின், சொகுசு கார் வாங்கியது தொடர்பாக, அவரது வீட்டில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் பண்ணை வீட்டிலும், கொகுசு கார் இருக்கிறதா என, சி.பி…

    • 1 reply
    • 625 views
  21. ஈழத்தமிழர் விவகாரத்தால் மூடப்பட்ட கல்லூரிகள் நாளை திறப்பு இலங்கையில், தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில், கல்லூரி மாணவர்கள், தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, அனைத்து கல்லூரிகளுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது. நிலைமை சீராகி உள்ளதை அடுத்து, நாளை, கல்லூரிகள் திறக்கப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகள் திறப்பு தேதி குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தேர்வு திகதிகளும், விரைவில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. http://www.adaderana.lk/tamil/news.php?ni…

    • 0 replies
    • 526 views
  22. தூத்துக்குடி மடத்தூர், புதிய பஸ் நிலையம், அண்ணாநகர், பழைய பஸ் நிலையம் தேவர் புரம் ரோடு, காய்கறி மார்க்கெட் பகுதி, ஜார்ஜ்ரோடு, லயன்ஸ் டவுன், பீச் ரோடு மற்றும் பல பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களுக்கு நேற்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும் அவர்கள் கண் எரிச்சல் மற்றும் வறட்டு இருமலாலும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்தனர். ரோட்டில் நடந்து சென்றவர்கள் மற்றும் வாகனங்களில் சென்றவர்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தூத்துக்குடி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஏதாவது தொழிற்சாலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டதால் மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வறட்டு இருமல் ஏற்பட்டிருக்கலாம் என கரு…

  23. இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக்கோரியும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காஞ்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ராசன் தலைமையில் 40 பேர் பல்லாவரம் தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ராஜபக்சேவின் உருவபொம்மையும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்திய 40 பேரை கைது செய்தனர். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19783:2013-03-24-14-48-03&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  24. ஈழ அரசியல் இனி தமிழக அரசியல் சந்திப்பு: அரவிந்தன், ச.கோபாலகிருஷ்ணன் நேர்காணல்: செ.ச.செந்தில்நாதன் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், அத்தீர்மானத்தை நிராகரித்து இந்தியா புதிய தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையுடன் வெடித்துக் கிளம்பிய தமிழகக் கல்லூரி மாணவர்கள் போராட்டம், மாணவர்களைப் பின்தொடரும் மக்கள் எழுச்சி என்று ஈழத் தமிழர் பிரச்சினை தமிழக அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் இதுவரை இல்லாத அளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதன் பின்னணியையும் விளைவுகளையும் பற்றிப் பேச ஊடகவியலாளரும் சர்வதேச அரசியல் குறித்துத் தொடர்ந்து எழுதிவருபவருமான செ.ச.செந்தில்நாதனைச் சந்தித்தோம். செந்தில்நாதன்,…

  25. மாணவர்கள் போராட்டம் எதிரொலி: திருவனந்தபுரத்துக்கு போகிறது சென்னை இலங்கை தூதரகம். சென்னை: இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் மாணவர் போராட்டத்தின் எதிரொலியாக சென்னையில் செயல்பட்டு வரும் இலங்கை துணை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஈழத்தில் இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு வார காலத்துக்கும் மேலாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து ட…

    • 4 replies
    • 792 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.