தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
புதுடெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்றுக்கொள்வேன் என கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 41 இடங்களில் போட்டியிட்டு வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விலக வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தினர். மேலும் இதே காங்கிரஸ் மேலிடத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். நெருக்கடி முற்றியதை தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, கட்சி மேலிடத்தில் கடிதம் அளித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இ…
-
- 3 replies
- 596 views
-
-
உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து நமக்கொரு பிம்பம் இருக்கும். அங்கு படிப்பவர்கள் எல்லாம் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள்... அனைத்தையும் பரந்த மனப்பான்மையுடன் அணுகுபவர்கள் என்று. ஆனால், அண்மையில் நடந்த ஒரு சம்பவம், அந்த எண்ணங்களை எல்லாம் பொய்யாக்கி உள்ளது. தனது முகநூல் பக்கத்தில் ’கபாலி’ திரைப்படத்தின் இயக்குநர் ரஞ்சித்தோடு இருக்கும் புகைப்படத்தை வைத்ததற்கு, ஐ.ஐ.டி-யில் படிக்கும் ஒரு மாணவருக்கு என்னென்ன கமென்ட்கள், மெசேஜ்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். ‘சூப்பர் மச்சி’, ‘கூல் டூட்’, ‘செம’ என்கிற கமென்ட்களை நீங்கள் எதிர்பார்த்தீர்களானால் ஏமாந்துபோவீர்கள். "உன்னையெல்லாம் வெட்டி பன்றிக்குத்தான் போட வேண்டும்." "கீழ்த்தரமான உன்னைப் பார்க்கும்போது உன் தாயு…
-
- 0 replies
- 267 views
-
-
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா.. காவிரிக்காக உண்ணாவிரதம் இருப்பாரா ஜெ? சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று பெங்களூருவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரிக்காக 1993, 2007ம் ஆண்டுகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது போல முதல்வர் ஜெயலலிதா இப்போதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 50 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி, தமிழ்நாட்டுக…
-
- 0 replies
- 511 views
-
-
இன்று இரவு சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார் முதல்வர் ஜெயலலிதா! சென்னை அப்போலோ மருத்துவமனையில் எம்டிசிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று இரவு 2-வது தளத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார். கடந்த 22-ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தாெடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் சேர்த்து 42-வது நாளாக முதல்வர் சிகிச்சை பெற்று வருகிறார். 2-வது தளத்தில் உள்ள எம்டிசிசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதல்வரின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2-…
-
- 2 replies
- 636 views
-
-
'எங்கள் ஆதரவு விஜயகாந்துக்கே....!' - வைகோவை ஓரம் கட்டுகிறதா மக்கள் நலக் கூட்டணி? தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தைப் பற்றி வைகோ தெரிவித்த கருத்துக்கள் மக்கள் நலக் கூட்டணிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. 'மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் விஜயகாந்த் கேட்டால், அவரை நாங்கள் ஆதரிப்போம்' என்கின்றனர் வி.சி.க மற்றும் இடதுசாரிகள். தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு வருகின்ற நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. ' தேர்தலில் போட்டியிட விரும்புகிறோம்' என சி.பி.எம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தாலும், மக்கள் நலக் கூட்டணியின் இதர தலைவர்களிடம் இதற்கு…
-
- 2 replies
- 696 views
-
-
மனுஸ்மிருதி: திருமாவளவனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! மின்னம்பலம் ஐரோப்பிய பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மனுதர்மம் பெண்களை எவ்வாறு சித்தரிக்கிறது என பேசினார். பாஜக மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருமாவளவன் பெண்களைக் கொச்சைப்படுத்திவிட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். ஆனால், மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டதை தான் மேற்கோள் காட்டியதாக தெரிவித்த திருமாவளவன், பெண்களை இழிவுபடுத்தும் மனு ஸ்மிருதியைத் தடை செய்ய ஆர்பாட்டமும் நடத்தினார். இந்த நிலையில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் காசி ர…
-
- 0 replies
- 522 views
-
-
தி.மு.க உறுப்பினர் வசந்தி ஸ்ரான்லி இலங்கை தமிழர் விவகாரங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது மயங்கி வீழ்ந்தார். https://www.youtube.com/watch?v=hu7NfHgjcfk NEW DELHI: DMK MP Vasanthi Stanley on Wednesday fainted in theRajya Sabha while strongly raising the Sri Lankan Tamil issue, leading to a chaotic situation in the House. Stanley was shouting full-throated slogans on the floor during Zero Hour seeking justice to Tamils in Sri Lanka as her colleagues as well members from arch rival AIADMK waved photographs of slain LTTE chief Prabhakaran's son killed by Sri Lankan forces. Renuka Chowdhary, who was in the Chair, immediately adjourned the House till 2pm and ca…
-
- 0 replies
- 554 views
-
-
தமிழக பாஜகவின் தேர்தல் வியூகம் இதுதான்! 12/22/2020 இனியொரு... இதுவரை தமிழகத்தில் பாஜக காலூன்றியதில்லை. கன்னியாகுமரி காங்கிரஸ், திமுக கூட்டணி தனித்தனியாக போட்டியிட்டால் கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே பாஜக வெல்லும். இதுதான் நிலை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் நிலவும் குழப்பங்களை வயப்படுத்தி பாஜக வெல்ல நினைக்கும் நிலையில், இப்போது அதன் வியூகங்கள் மாறி வருவதை அவதானிக்க முடிகிறது. பாஜக ஏன் ஒரு மாநிலத்தில் காலூன்ற முடியாமல் போகிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்தி பேசும் வட இந்திய மாநிலங்கள்தான் அதிலும் குறிப்பாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், உட்பட இந்தி பேசி மாநிலங்களில் பாஜக இந்து அரசியல், ராம ராஜ்ஜியம் போன்ற மத உணர்ச்சியைத்…
-
- 0 replies
- 598 views
-
-
தமிழகத்தைப் பீடித்திருக்கும் 24x7 பரபரப்பு நோய் எப்போது நீங்கும்? பொதுவாக, ஊடகவியல் வகுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் மாணவர்களுக்குச் சொல்லும் முதல் பாடமாக இது அமையும். “எது செய்தி? மனிதனை நாய் கடித்தால் அது செய்தி அல்ல; மாறாக நாயை மனிதன் கடித்தால் அதுவே செய்தி!” ஆனால், ஒரு நல்ல ஊடகர், வணிக ஊடகவியல் புத்தி கட்டமைத்த ‘மனிதனை நாய் கடித்தால் அது செய்தி அல்ல’ எனும் மலிவான பரபரப்புச் செய்தி இலக்கணத்தை உடைத்தெறிவார். ஏனென்றால், ஆண்டுக்கு 20,000 பேர் வெறிவிலங்குக்கடியால் உயிரிழக்கும் ஒரு நாட்டில், அதுவும் ஒரு முக்கியமான செய்தி. ஆகையால், “கார்களில் பயணிப்பவர்களுக்குத் தெரு நாய்களின் ஆபத்து புரியாது; ஆனால் ஐயா, இதுவும் ஒரு மு…
-
- 0 replies
- 407 views
-
-
சிறப்புக் கட்டுரை : இந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வரலாற்று முக்கியத்துவம் என்ன? மின்னம்பலம் ராஜன் குறை திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து எம்.ஜி.ராமச்சந்திரன் பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் துவங்கி கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் ஆகின்றன. இரண்டு திராவிட கட்சிகளின் இருதுருவ அரசியல் என்பதே தமிழக அரசியலை நிர்ணயிப்பதாகவும், அதன் வழியாக இந்திய அரசியலிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், நிகழ்வுப் போக்குகளை தீர்மானிப்பதாகவும் இருந்து வந்துள்ளது. இதன் ஒருமுனையில் 1969 முதல் தி.மு.க-வினை தலைமையேற்று நடத்திய கலைஞர் 2018-ஆம் ஆண்டு மறைந்தார். எதிர்முனையில் எம்.ஜி.ஆர் 1987-ஆம் ஆண்டே மறைந்தாலும், அவரால் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆக்கப்பட்டு, பலரால் எம்…
-
- 0 replies
- 484 views
-
-
அ.தி.மு.க., ஆட்டத்தில் அடுத்த மாதம் உச்சகட்டம்! ஜெயிக்க போவது யார்; தினகரனா... பழனிசாமியா? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்கும் பணியில், முதல்வர் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.,வில், தற்போது உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. தற்போது, சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு, கட்சியைய…
-
- 0 replies
- 346 views
-
-
சென்னை :தமிழக மக்கள், தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு, 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு, அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. எதிர்பார்ப்பு அ.தி.மு.க., ஆட்சியில் பரிசுத் தொகுப்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் இடம் பெற்றிருந்தன. மேலும், 2,500 ரூபாயும் வழங்கப்பட்டது. இதற்காக, 5,604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின…
-
- 0 replies
- 340 views
-
-
முரசொலி பவள விழாவில் கமல் ரஜினி பங்கேற்பு ஸ்டாலின் தகவல் சென்னை:'முரசொலி பவள விழாவில், கமல் பங்கேற்பார்; மேடையில் அமர்ந்து, வாழ்த்தி பேசுவார். ரஜினி, முன் வரிசையில் அமர்ந்து பங்கேற்பார்' என, தி.மு.க., செயலர் தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்த, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், கட்சி தலைவர்கள் பற்றி, ஸ்டாலின் உருக்க மாக பேசியுள்ளார். இது குறித்து, ஸ்டாலின் கூறியதாக, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளேடான, 'முரசொலி'யின் பவள விழாவில், அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி உள்ளேன். வைகோவை த…
-
- 0 replies
- 307 views
-
-
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்... ஆட்சி கவிழ்ப்பா... அரசியல் நாடகமா...?! "நல்லதில் இருந்து கழிசடைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்" என்றார் பெரியார். அப்படியான மாற்றங்கள்தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. முதலமைச்சர் பதவிக்கான சண்டை, ஓ.பன்னீர்செல்வத்தில் தொடங்கி தற்போது எடப்பாடி பழனிசாமியில் வந்துநிற்கிறது. ஆனால், இரண்டுபேரும் மல்லுக்கு நின்றதும்... நிற்பதும் மன்னார்குடி தரப்பிடம்தான். ஜெ., மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா முதல்வராக விரும்பியதையடுத்து, தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் மன்னார்குடி தரப்பிடமிருந்து வி…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்ட்ரல் குண்டுவெடிப்பு..தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை ஏற்க ஜெ. மறுப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி! சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத இயக்கங்களின் தாக்குதலாக இருக்கலாமோ என்ற கோணத்தில் மத்திய அரசு பார்த்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அந்த கூற்றை தமிழக அரசு நிராகரித்து விட்டதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போலீஸார் யாரையும் இதுவரை பிடித்து வைக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தீவிரவாத தாக்குதலாக பார்த்தால் அதிமுக அரசின் மீதான இமேஜ் போய் விடும் என்ற பயத்தால் தமிழக அரசும், காவல்துறையும் இந்த வழக்கில் மேம்போக்காக செயல்பட்டு வருவ…
-
- 3 replies
- 691 views
-
-
தமிழக அரசியல் 2018 ரஜனியின் அரசியல்! BJP யின் அவசரமா?... JV Breaks
-
- 22 replies
- 2.1k views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஜூலை 7 ஆம் திகதியன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தங்களுக்கான மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதியிடம் கருணை மனுவை மூவரும் கொடுத்தனர். ஆனால் 11 ஆண்டுகாலம் கழித்து இவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இப்படி தாமதமாக கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் தங்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த …
-
- 0 replies
- 445 views
-
-
சென்னை: அ.தி.மு.க. ஆட்சியில் அகால மரணங்கள் தொடருவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் ஏற்பட்ட போதெல்லாம், அகால மரணங்கள் நடக்கின்றன. உதாரணமாக, கும்பகோணம் மகாமக குளத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் இறங்கி குளித்த போது, 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஏர்வாடியில் தீ விபத்து ஏற்பட்டு, அதில், 28 பேர் பலியாகினர். ஸ்ரீரங்கத்தில் மண விழா ஒன்றில் நடந்த தீ விபத்தில் 54 பேர் பலியாகினர். கும்ப கோணம் பள்ளியில் தீப்பிடித்து 94 குழந்தைகள் கருகினர். எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பெண்களும், 19 ஆண்களும் என மொத்த…
-
- 0 replies
- 310 views
-
-
நான் என்ன தீவிரவாதியா? திருமுருகன் காந்தி பொலிஸாரிடம் கேள்வி தனிமைச் சிறையில் அடைக்கும் அளவிற்கு நான் என்ன தீவிரவாதியா என, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். திருமுருகன் காந்தியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக இன்று(வெள்ளிக்கிழமை) பொலிஸார் அழைத்து வந்தனர். இதன்போது வேனில் இருந்து இறங்கும்போது பொலிஸாரிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் திருமுருகன் காந்தி. வேலூரில் வாகனத்தில் ஏற்றிய பிறகு சிறுநீர் கழிக்க கூட நிறுத்தவில்லை. நான் என்ன தீவிரவாதியா? எஸ்.வி.சேகரை பிடித்தீர்களா? எஸ்.வி.சேகரைக் கைது செய்ய முடியாத பொலிஸார் இங்கே வந்து நிற்கிறீர்களா? உங்கள் நேர்மையைதான் உலகமே சிரிக்கிறதே?…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
தவறு... மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களுடன், உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல; முழு நேர அரசியலில் இறங்கிவிட்டேன்: நடிகர் கார்த்திக் பேட்டி அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘மிஸ்டர் உதயநிதி, ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில, உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று ஷாமுராய் என்பவர் ட்விட்டரில் கே…
-
- 0 replies
- 583 views
-
-
30 SEP, 2024 | 11:39 AM இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய வெளிவிவகார அமைச்சர்ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது : “ராமேஸ்வரம் மீன் பிடித்தளத்திலிருந்து இரண்டு படகுகளில் நேற்று( 28.09.2024 ) தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்து நிலையில் இன்று (29.09.2024) நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீன…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் மட்டும் தமிழகத்தின் ஆயிரம் சிலைகள்.. ஒவ்வொன்றும் பல கோடி மதிப்பு.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பொன்.மாணிக்கவேல்!! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் கல்லிடைகுறிச்சியைச் சேர்ந்த குலசேகரமுடையார் கோவிலில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டு இன்று காலை சென்னை வந்ததடைந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பொன்.மாணிக்கவேல் பேசினார். அவர் கூறும்போது, தமிழகத்தின் பழங்கால சிலைகள் அமெரிக்காவில் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பதாக தெரிவித்தார். அதில் 20 சிலைகளை மீட்க தீவிர நடவடிக்கைகள் தற்போது நடந்து வருவதாக கூறினார். அது போல சிங்கப்பூரில் இருந்த 18 சிலைகளை மீட்டு கொண்டு வருவதற்கான பணிகளும் நடந்து வருவதா…
-
- 0 replies
- 649 views
-
-
-
காதலர் தினத்தில் நாய்கள் முத்தமிடும் போராட்டம்; 'ஆணாதிக்க சிந்தனை' உலகின் பல பாகங்களிலும் பிப்ரவரி 14-ம் திகதி கொண்டாடப்படுகின்ற காதலர் தினம் இந்தியாவிலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டுவருகின்றது. நாட்டின் பல பாகங்களிலும் இன்று இந்த தினத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஆதரவான கொண்டாட்டங்களும் நடந்துள்ளன. சென்னையில் மெரினா கடற்கரையில் காதலர் தினக் கொண்டாட்டங்களை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் நிகழ்வுகளை நடத்தியிருந்தனர். முத்தங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகளும் இங்கு நடந்தன. இதுபோன்ற ஆதரவு நிகழ்வுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன. 'கலாசார சீர்கேடு' இதனிடையே, காதலர் த…
-
- 0 replies
- 536 views
-
-
தேமுதிக மாநாடு: இன்று கூட்டணி முடிவை அறிவிப்பார் விஜயகாந்த்? சென்னை: காஞ்சிபுரத்தில் இன்று (20-ம் தேதி) மாலை தே.மு.தி.க.வின் 'தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு' நடைபெறவிருக்கிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், கூட்டணி அமைப்பதிலும், அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என ஏற்கனவே தேர்தல் …
-
- 1 reply
- 960 views
-