Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பரோலில் வெளியே வந்த நளினி மின்னம்பலம்2021-12-27 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி ஒரு மாத பரோலில் இன்று (டிசம்பர் 27) வெளியே வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு ஒன்றைக் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தது. இதனிடையே கடந்த 2021 மே 28ஆம் தேதி பர…

  2. ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு தமிழ்நாடு Sinekadhara Published : 23,Dec 2021 01:05 PM ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையிலுள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. Advertisement முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதான நளினிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் …

  3. பா.ரஞ்சித் நேர்க்காணல்: "சினிமாவுக்குள் சாதி நவீனமாக உள்ளது, அதன் அணுகுமுறையும் மாறி இருக்கிறது" ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEELAM PANPATTU MAIYAM HANDOUT படக்குறிப்பு, மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி மேடை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தப்படும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சிக்கு இது இரண்டாவது ஆண்டு. கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் நடந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு கோவை, மதுரை மக்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியின் மு…

  4. டி.என்.பி.எஸ்.சி. புதிய பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கம் - தேர்வர்கள் அதிர்ச்சி சென்னை, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் நேற்று இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் குரூப்-4, குரூப்-2, குரூப்-1 உள்ளிட்ட பலவகையான தேர்வுகளில் என்னென்ன பாடதிட்டங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தேர்வுகளுக்கான மாதிரி கேள்விகளும் வெளியிடப்பட்டன. இதில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த திருக்குறள் பாடத்திட்ட பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாரிகள் நிலையிலான போட்டித் தேர்வுகளான குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வின்போது திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. …

  5. 69 தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்- அன்புமணி ராமதாசிடம் மத்திய மந்திரி உறுதி. தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும், வெகுவிரைவில் 69 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார். பா.ம.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டின் ராமேசுவரம், மண்டபம், ஜெகதாபாட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 69 பேர், அவர்கள் பயணித்த 11 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள ச…

    • 0 replies
    • 323 views
  6. தமிழக மீனவர்கள் கைதுக்கு தமிழகத்தில் உண்ணாவிரதம் : அமைச்சர் டக்ளஸின் கருத்துக்கும் கண்டனம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சனி,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்களிலும் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 மீனவர்களையும் அவர்களது 10 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித…

  7. தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்: சில முக்கிய தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER தமிழகத்தில் "மீண்டும் மஞ்சப்பை - விழிப்புணர்வு இயக்கம்" நிகழ்ச்சியை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மஞ்சள் பைதான் சூழலுக்கு - சுற்றுச்சூழலுக்கு சரியானது - அழகான - நாகரிகமான - பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளை கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப் பயணம்," என்றார். …

  8. நாம் தமிழர் மேடையில் ஏறி மைக்கை பிடுங்கிய திமுகவினர் - தருமபுரியில் பரபரப்பு ஏ.எம். சுதாகர் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@NAAMTAMILARORG தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், மேடையில் இருந்த மைக்கையும் அவர்கள் பிடுங்கி வீசியதாக காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியை பிபிசி தமிழ் தன்னிச்சையாக உறுதிப்படுத்தவில்லை. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நில…

  9. மாணவிகளை பாலியல் ரீதியாக மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதிவு: டிசம்பர் 21, 2021 12:11 PM சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய ஓபுளாபுரத்தை அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது பெயர் பிரேம் குமார் என்பதும், 20 வயதான அவர் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்…

  10. `நாட்டையே ஆளத் துடிப்பவனுக்கு, சொந்த வீடு இல்லாதது எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம்' என பொதுக்கூட்ட மேடையிலேயே சென்டிமென்ட் டச் கொடுப்பதாகட்டும், 'தி.மு.கதான்டா உண்மையான சங்கி' என்று செருப்பைத் தூக்கிப் பிடித்து விமர்சிப்பதாகட்டும்... எப்போதுமே தமிழக அரசியலின் ஹாட் டாபிக் சீமான்! பரபரப்பான இந்த நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்தேன்... ``மாரிதாஸின் பதிவு கருத்துரிமைக்கு ஆதரவாக நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள். ஆனால், கருத்தைப் பதிவிட்ட மாரிதாஸே சிறிது நேரத்தில் அந்தப் பதிவை நீக்கிவிட்டார் என்றால் என்ன அர்த்தம்?'' ``கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ், ஸ்டேன் லூர்து சாமி போன்றோரை பா.ஜ.க-வின…

  11. நாம் தமிழர் நிர்வாகிக்கு சிங்கப்பூர் அரசு வாழ்நாள் தடை.. திருப்பி அனுப்பப்பட்ட 400 பேர்- என்ன காரணம்? சென்னை: சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. இந்தியாவை சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அதிலும் சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழர்களின் முதல் தேர்வாக இருக்கும் வெளிநாடு சிங்கப்பூர் அல்லது மலேசியாதான். தமிழர்கள் பலர் சிங்கப்பூரில் அமைச்சர்களாக உள்ளனர். கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சிங்கப்பூர் - தமிழ்நாடு நெருங்கிய தொடர்புடையது. கட…

  12. 'காலம்' ஆன கருணாநிதியின் களஞ்சியம் சண்முகநாதன் மின்னம்பலம்2021-12-21 ஐந்து முறை முதலமைச்சராக இருந்த தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதியின் தனிச்செயலாளர் சண்முகநாதன், சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80. சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகநாதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சென்று பார்த்துவந்தார். கடைசியாக, நேற்றும் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்ததை, ஸ்டாலின் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சண்முகநாதனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு அஞ்சலிசெலுத்தச் சென்றபோது, மிகவும் உடைந்த…

  13. திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி 17 டிசம்பர் 2021, 08:36 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருநெல்வேலியில் கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். திருநெல்வியில் டவுன் செல்லும் சாலையில் உள்ளது ஷாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவேளை விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…

  14. மாநிலங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை – ஸ்டாலின் மாநிலங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழக அரசு இப்போது ஐந்து இலட்சம் கோடி கடனில் உள்ளது. அந்த நிதி நிலையைக் சரி செய்தாக வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா என்ற கொடியை தொற்று நோய் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அந்த தொழில்களை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர போராடி வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். …

  15. தமிழ் மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் ஒன்றுகூடினார்கள். அடுத்த 21ஆம் திகதி மீண்டும் ஒன்றுகூடுவதென தீர்மானித்துள்ளனர். இந்த கட்சிகள் விரைவில் இந்திய பயணம் செய்யவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம். மிக விரைவில் அந்த ஏற்பாடுகள் நடக்குமென தெரிகிறது. இந்த கட்சிகளிற்கு மேலதிக, தமிழ் தரப்பில் இன்னொரு முயற்சியும் நடப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம். புலம்பெயர் தமிழரான கோடீஸ்வரர் ஒருவரின் பின்னணியில் இந்த முயற்சி நடக்கிறது. புலம்பெயர் தேசத்திலும், இலங்கையிலும் ஊடகங்களை இயக்கும் அந்த வர்த்தகரின் பின்னணியில், இந்த முயற்சி நடக…

  16. மேல்மருவத்தூர் பங்காரு அடிகள் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: அரசியல் பின்னணி என்ன? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மேல்மருவத்தூரில் `நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பங்காரு அடிகளாரை சந்தித்துப் பேசியது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ` பிராமணர் அல்லாத சமயத் தலைவர்களை தன்பக்கம் வைத்துக் கொள்ள தி.மு.க முயல்வதாக இதனைப் பார்க்கலாம். பெரியார் காலத்தில் இருந்தே இது நடந்து வருகிறது' என்கின்றன பெரியாரிய இயக்கங்கள். `நம்மைக் காக்கும் 48' திட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் `நம்மைக் காக்கும் 48' என்ற கட்டணமில்லா உ…

  17. விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இறந்துகிடந்த 5 வயது குழந்தை: பட்டினியால் இறந்ததாக தகவல் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது குழந்தை தண்ணீர் இல்லாமல் பட்டினியால் உயிரிழந்ததாக உடற் கூறாய்வில் தெரியவந்தது. பெற்றோர் மற்றும் உறவினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மேலத் தெரு அருகே, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சிவகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரத்தில் தள்ளுவண்டி மூலமாக சலவை தொழில் …

  18. ஈழத்தில் சீனா- பின்னணிக் கணக்குகள்: எச்சரிக்கும் ராமதாஸ் மின்னம்பலம்2021-12-19 கடந்த டிசம்பர் 15, 16, 17 தேதிகளில் இலங்கைக்கான சீன தூதர் கி சென்ஹாங் அந்நாட்டின் தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் அருகே இருக்கும் இலங்கைக்குச் சொந்தமான ராமர் பாலத் திட்டிலும் ஆய்வு செய்திருக்கிறார். இதுபற்றி மின்னம்பலம் இதழில் இன்று (டிசம்பர் 19) காலை பதிப்பில், இலங்கையின் தமிழர் பகுதிகளில் சீன தூதர்: இந்தியாவுக்கான எச்சரிக்கை! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 19) இதே விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஓர் முக்கியமான அறிக்கையை வெளியிட…

  19. புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக 15 இலங்கையர்கள் மீது இந்தியாவில் குற்றப்பத்திரம் தாக்கல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு 15 இலங்கையர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த கடந்த மார்ச் 25ஆம் திகதி அரபிக்கடலில் மீன்பிடிக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.இதன்போது, அவர்களிடமிருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் சென்னையில் அகதியாக வசித்து வந்த மற்றொரு பிரதிவாதியான சற்குணம் இலங்கையில் விடுதலைப் பு…

    • 13 replies
    • 1.3k views
  20. வேலூர்: திமுகவினரே உண்மையான சங்கி என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமேடையில் காலணியை கழற்றி காண்பித்து எச்சரித்தார். திமுகவினரை காலணியால் அடிப்பேன் என்கிற வகையில் பேசியதால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் போலீசில் திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், யூடியூபர் மாரிதாஸ் ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவினரே உண்மையான சங்கிக…

  21. பாக்ஸ்கான் தொழிற்சாலை விடுதியில் தரமற்ற உணவு: விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை தொழிலாளர்கள். பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமான விடுதியில் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியது தொடர்பாக விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் ஜமீன் கொரட்டூரில் தனியாா் கப்பல் கட்டும் பொறியாளா் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து, ஸ்ரீபெரும்புதூா் தனியாா் கைப்பேசி உதிரி பாக தொழிற்சாலையில் 2,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மதியம் உணவு உட்கொண்டபோது, சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பூந்…

  22. வேலூர் நகைக்கடையில் 16.5 கிலோ நகை கொள்ளை: திருச்சி கொள்ளை போலவே நடந்ததா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DIBYANGSHU SARKAR/GETTY வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு 16 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி நகைக்கடை ஒன்றில் நடந்த இதைப் போன்ற துணிகரக் கொள்ளை நடந்த விதத்தைப் போலவே இதுவும் அமைந்துள்ளது. திருச்சி கொள்ளையில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட கும்பலுக்கு வேலூர் கொள்ளையிலும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாநகரில் தோட்டப்பாளைய…

  23. உரத் தட்டுப்பாடு: பொட்டாஷ் உரத்துக்கு மாற்றாக நுண்ணுயிர் உரம் - ஆர்வம் காட்டாத விவசாயிகள் ஜோ. மகேஸ்வரன் பிபிசி தமிழ் 15 டிசம்பர் 2021, 11:23 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பொட்டாஷ் உரத் தட்டுப்பாடும் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக நுண்ணுயிர் உரங்கள் பயன்பாட்டில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையில் டெல்டா மாவட்டங்களில் நெல் உள்ளிட்ட பயிர்கள் மூழ்கின. வெள்ளம் வடிந்து, பயிர்கள் தண்டு வலுவாகவும், மணிகள் ஊக்கம் பெற பொட்டாஷ் உரம் தேவையாக உள்ளது. ஆனால், பொட்டாஷ் தட்டுப்பாடு மற்ற…

  24. ``அம்மையார் சசிகலா மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. எங்களுக்கு குடும்ப ரீதியான உறவு உண்டு. நான் அவரை சந்தித்தபோது... ஏன் சந்தித்தீர்கள் / எதற்காக சந்தித்தீர்கள் என கடும் விமர்சனங்கள் எழுந்தன, இது எனது விருப்பம்” என்கிறார் சீமான் நகராட்சி, மாநாகராட்சி தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஒ,பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்ததோடு, சசிகலாவுக்கு ஆதரவாகவும் சில கருத்துகளை தெரிவித்தார். சசிகலா குடும்பத்தி…

  25. மாரிதாஸ் கைது: சீமான் எதிர்ப்பு ஏன்?- சுபவீ விளக்கம்! மின்னம்பலம்2021-12-11 டிசம்பர் 8 ஆம் தேதி, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இதுகுறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட யு ட்யூபர் மாரிதாஸ் டிசம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் தமிழக பாட நூல் அறிவுரைக் குழு உறுப்பினரும், திராவிட தமிழர் பேரவை தலைவருமான பேராசிரியர் சுபவீரபாண்டியன் இவ்விவகாரம் தொடர்பாக இன்று (டிசம்பர் 11) ஒரு விளக்கம் அளித்துள்ளார். “இந்திய முப்படைகளின் தளபத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.