Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இரவோடு இரவாக இரு தரப்பு கடும் மோதல்.. பைக், கார், ஆட்டோ உடைப்பு.. திருநெல்வேலி: நெல்லை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், பைக்குகள், கார் ஆட்டோ உடைக்கப்பட்டன. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாநகரத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மருதநகர் பகுதியை சார்ந்த பாலமுருகன் என்ற பால முகேஷுக்கு (17)அரிவாள் வெட்டுவிழுந்தது . இதனையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கார் ,ஆட்டோ ,பைக், சில வீடுகள் கல்லெறிந்து சேதம் அடைந்துள்ளது. வைக்கோல் படப்புக்கும் தீ வைக்கப்பட்டதினால் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தனர…

    • 4 replies
    • 869 views
  2. அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்கு ஒரே நாளில் பெரும் இழப்பு - ஏன்? பட மூலாதாரம், Mint அதானி குழுமத்தின் முதலீட்டாளர்களுக்கு திங்கட்கிழமை காலை பேரதிர்ச்சி காத்திருந்தது. முதலில், அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய மூன்று வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் (வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு) முடக்கப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்தது. இதன் பின்னர், நிறுவனத்தின் பங்குகளின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதானி குழுமத்தின் அனைத்து, அதாவது 6 நிறுவனங்களின் பங்குகளும் 5 முதல் 25 சதவீதம் வரை சரிந்தன. அதே நேரத்தில், அதானியின் மொத்த சொத்துக்கள் சுமார் 55,692 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தன. நித…

  3. மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் காலை 7:30 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி, நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், செங்கல்பட்டில் கொவிட் தடுப்பூசி உற்பத்தி என பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளைய தினம் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, மற்றும் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவி…

  4. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, நிதி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார் ஸ்டாலின்! கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பலன் அளிக்கும் வகையில், 5 இலட்சம் ரூபாய் வைப்பில் இடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார். தமிழக அரசின் அறிவிப்பின் படி சென்னை தலைமை செயலகத்தில் குறித்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி தமிழக அரசு வழங்கும் 5 இலட்சம் வைப்பு தொகை மின் நிதி நிறுவனத்தில் வைப்பீட்டு தொகையாக நிலுவையில் வைக்கப்படும். குழந்தைகளின் 18 வயது வரையில் இந்த பணம் அங்கேயே இருக்கும். 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியுடன் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. https://athavann…

  5. தமிழ்நாட்டில் இருந்து இந்தியா, இலங்கை கடற்படைகளை அலறச் செய்த விஷமிகள் - என்ன நடந்தது? எம்.ஏ. பரணிதரன் பிபிசி தமிழ் 41 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MADURAI POLICE படக்குறிப்பு, மதுரை திடீர் நகர் காவல் நிலையம் 'தி ஃபேமிலிமேன் சீசன் 2' என்ற பெயரில் சமீபத்தில் வெளியான ஓடிடி தொடர் ஒன்றில் இடம்பெற்ற சில காட்சிகளைப் போல, இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் கடத்தி வரப்படுவதாக தமிழ்நாட்டுக்கு வந்த இரண்டு தொலைபேசி அழைப்புகள், இந்திய, இலங்கை கடற்படைகளை கதிகலங்கச் செய்திருக்கின்றன. தி ஃபேமிலிமேன் - இரண்டாம் பாகம் வெப்சீரிஸ், சமீபத்தில் அமேச…

  6. மணல் கடத்தல் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக அவரை கடுமையாகச் சாடி ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார் சாட்டை துரைமுருகன். மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற யூ-டியூபர் சாட்டை துரைமுருகன். மீண்டும் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் கட்சியினர் செயல்படுவதாகப் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது கடந்த சில தினங்களுக்கு முன், சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் அதன் உரிமையாளர் வினோத் என்பவர், தமிழ் ஈழத்துக்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய…

  7. "குட் ஜாப்".. கண்ணாமூச்சி ஆடிய சிவசங்கர் பாபாவை.. டெல்லியில் வளைத்தது எப்படி.. போலீஸ் மாஸ் ஆபரேஷன்! Shyamsundar IPublished:June 16 2021, 12:51 [IST] சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில்தான் சிவசங்கர் பாபா தேடப்பட்டு வந்தார். அங்கு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இவர் அத்துமீறியதாக புகார் வைக்கப்பட்டது. கைது இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டிய நிலையில், தான் கண்டிப்பாக கைது செய்யப்படுவோம் என்று தெரிந்ததும் உடனே சிவசங்கர் பாபா டேராடூன் தப்பி சென்றார். அங்கு தனது உடல்நிலை சரியில்லை என்று கூறி, முன் ஜாமீன் வாங்கும் திட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா…

  8. உருகிய அற்புதம்மாள்.. நம்பிக்கை கொடுத்த ஸ்டாலின்.. நெகிழ்ச்சியான சந்திப்பு.. விரைவில் நல்ல முடிவு? Rayar AUpdated: Wed, Jun 16, 2021, 14:19 [IST] ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக எழுந்து வரும் கோரிக்கையாக இருந்து வருகிறது. 7 தமிழர்கள் விடுதலை 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 பேரையும் தமிழ்நாடு அரசே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்யலாம் என கூறியது. இதனை தொடர்ந்து முந்தைய அதிமுக அரசு, எழுவர் விடுதலை குறித்து தமிழக சட்டச…

    • 0 replies
    • 317 views
  9. அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் தொலைபேசி ஊடாக சசிகலா, கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார். இதன்போது சசிகலா மேலும் கூறியுள்ளதாவது, “தொண்டர்கள் அனைவரும் என்னுடனே இருக்கின்றனர். ஆகவே அவர்களை விரைவில் சந்திக்க தீர்மானித்துள்ளேன். எம்,ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் அவர்களுடன் இருந்திருக்கின்றேன். மேலும் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கூட அவருடன் இருந்து நானும் எதிர்கொண்டுள்ளேன். …

  10. கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன... தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் டாஸ்மாக்கைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக்கைத் திறக்க அறிவுறுத்தியிருந்தாலும் அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டாஸ்மாக்கைத் திறக…

  11. எம்.ஏ. பரணி தரன் பிபிசி தமிழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவசங்கர் பாபா என்று அழைக்கப்படும் சிவசங்கருக்கு எதிராக அவர் நடத்தி வரும் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவிகள் அளித்துள்ள பாலியல் தொந்தரவு புகார்கள், நாளுக்கு நாள் புதிய சர்ச்சைகளை தோற்றுவித்து வருகின்றன. யார் இந்த சிவசங்கர் பாபா? இவருக்கு எதிராக வலுத்து வரும் சர்ச்சைகள் என்ன? திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 1949ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்தவர் சிவசங்கர். இவரது தந்தை நாராயண சர்மா, தாய் விஜயலட்சுமி. இவரது தந்தை பள்ளி ஆசிரியர். பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த இவர், வேதியியல் துறையில் பட்டப்படிப்பும், சரக்குகள், போக்குவரத்து கையாளல் பிரிவில் முதுகலை படிப்பும் படித்தார். கல்லூரி …

    • 7 replies
    • 1.3k views
  12. கடலில் பேருந்துகளை போடும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக... தமிழக மீனவர்கள் போராட்டம்! இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று(திங்கட்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகளை மராமத்தி பணி செய்து கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தில் தங்களது படகுகளை மராமத்துப் பணி செய்யாததால் மேலும் 15 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை மரா…

  13. எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் துணை கொறடாவாக அரக்கோணம் ரவியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்றத்தின் அ.தி.மு.க.பொருளாளராக கடம்பூர் ராஜூம் செயலாளராக அன்பழகனும் துணை செயலாளராக மனோஜ் பாண்டியனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை- ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 21 ஆம் திகதி சட்டப்பேரவை கூடும்போது, அ…

  14. பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FUNDAOPRNCIPE_FFI கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மாசு குறைந்ததால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு 19 ஆயிரம் ஆமை முட்டைகள் மண்டபம் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன. இவை பொரிப்பகத்தில் வைக்கப்பட்ட பின் பிறந்த ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. உலகில் உள்ள ஏழு வகை கடல் ஆமைகளில் சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய ஐந்து வகை கடல் ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. ஆண் ஆமையோடு இனப் பெருக்கம் செய்த பெண் ஆமையானது முட்டையிடுவதற்காக மணல்பா…

  15. மக்களின் ஒத்துழைப்பே... வைரஸ் தொற்றினை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது- முதலமைச்சர் அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றி, முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியமையினால் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி ஊடாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் 2 வார காலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியமையாலும் சுகாதார நடைமுறைகளை இற…

  16. இலங்கையில் இருந்து... ஆயுததாரிகள், ஊடுருவ முயற்சி – தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்! இலங்கையிலிருந்து ஆயுததாரிகள் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, தமிழ் நாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து படகு மூலம் ஆயுததாரிகள் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக இந்தியாவின் புலனாய்வுப் பிரிவுக்கு சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்தே, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த நபர…

  17. யானை Vs மனிதன்: கோவை மாவட்ட வனப்பரப்பு அதிகரிப்பு மோதலை தடுக்க உதவுமா? மு ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம், Mohanraj கோவை மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான 1,049.74 ஹெக்டேர் நிலங்கள் காப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்த வனப்பரப்பளவு 1.23 லட்சம் ஹெக்டர் ஆக விரிவடைந்துள்ளது. மேலும், யானைகளின் மிகமுக்கிய வலசைப்பாதையாக கருதப்படும் கல்லார் வனப்பகுதியில் உள்ள 50.79 ஹெக்டேர் தனியார் நிலம், தனியார் வனமாகவும் மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு வனப் பாதுகாப்பு மற்றும் யானை - மனித மோதலை தடுப்பதற்கான மிகச் சிறந்த முயற்சி …

  18. தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்! மின்னம்பலம் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து வருகிற நிலையில், பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் திறப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். அதன் படி, இன்று(ஜூன் 13) தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள பா…

  19. எஸ்.றொசேரியன் லெம்பேட் பல நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியமை தொடர்பில் வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு நேற்று (11) மாலை தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கியூ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுற்றிக் கொண்டு இருந்த வெளிநாட்டவரை மடக்கிப் பிடித்து கியூ பிரிவு பொலிஸார் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதன்போது குறித்த நபர் இங்கிலாந்து பாஸ்போர்ட் மற்றும் இந்திய, இலங்கை பணத்தை வைத்திருந்தமை தெரியவந்தது. மேலு…

  20. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெறும் என்றும் அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும் அதற்கான பயிற்சியை அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். ''ஏற்கனவே கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி இருந்தாலும், அதனை தற்போது மேலும் ஊக்குவிக்கப்படும். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயர் மற்றும் தொடர்பு எண் கொண்ட பலகை வைக்கப்படும். எந்த கோயில்களில் அர்…

  21. எழுவர் விடுதலை – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை 5 Views எழுவர் விடுதலை குறித்து 2018 செப்.09 அன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை அறிவித்தும் அவரை விடுதலை செய்யும் விஷயத்தில…

  22. கொரோனா என்றால் என்னவென்றே தெரியாது- மூலிகை கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் பெருமிதம் மலைகளின் இளவரசி கொடைக்கானல் உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது வெள்ளகவி கிராமம். இந்த கிராமமானது சுமார் 400 வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த கிராமத்தில் 150 குடும்பங்களும் 400க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து 6 கி.மீ தூரம் கரடு முரடான ஒத்தையடி பாதையில் அடர்ந்த வன பகுதிக்கு நடுவே நடந்து தான் செல்ல முடியும். மேலும் வெள்ளகவி கிராமத்திலிருந்து கும்பக்கரை அருவி வழியாக பெரியகுளம் செல்வதற்கும் 6 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இ…

  23. இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம் Shyamsundar IUpdated: Fri, Jun 11, 2021, 22:21 [IST] திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகள் பிரபாகரன் குறித்து திருச்சியை வினோத் என்பவர் செய்த டிவிட் காரணமாக இன்று திருச்சியில் அவர் பணியாற்றும் கார் நிறுவனத்தில் மிரட்டப்பட்டார். கண்டனம் இந்த நிலையில் நால்வர் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியத்தலைவர் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்டவரை, காவல்துறை முன…

  24. மதுரை வழியாக கனடா நாட்டுக்கு தப்பிக்க, முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட சிலர் கனடா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். ஆனால் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத நிலையில் கடும் கெடுபிடி இருப்பதால் வேறு வழியின்றி அந்த இளைஞர்கள் மதுரை வழியாக கனடாவுக்கு தப்பிக்க முடிவெடுத்தாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலரை அணுகியபோது, மதுரைக்கு வந்தால் இங்கிருந்து கள்ளத் தோணி மூலம் கனடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த திருமகன், சுகந்தன், ஸ்ரீகாந்தன், க…

  25. ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தமிழகத்தில் ஜூன் மாதம் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்கள் இங்கே பார்க்கலாம்...! தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் திங்கள்கிழமை காலையுடன் நிறைவடையும் நிலையில், நேற்று முதலவர் மருத்துவக்குழுவினருடன், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது தளர்வுகளிடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கினை நீட்டித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடைகளின் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான் கட்டாயமாக வைக்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.