Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தொடர் மழையால் வற்றாத வைகை; 2 ஆண்டுகளுக்கு நீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தேனி, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்து வைகை ஆறு உற்பத்தி ஆகிறது. பழங்காலத்தில் வற்றாத நதியாக இருந்த வைகை, இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே நீர்வரத்து உள்ள ஆறாக வைகை மாறியது. இந்த 3 மாதங்கள் மட்டும் ஓடும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலமாக விவசாயம் செய்து வருகின்றனர். இதுபோகை வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை ஆற்றில் கடந்த ஓராண்டாக தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ…

  2. தமிழகத்தில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை... இரத்து செய்வதாக முதலமைச்சர் அறிவிப்பு தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வைத்தியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி வகுப்புகளுக்கான தகுதியாக 102 பொதுத்தேர்வுகள் மாத்திரமே கவனத்தில் கொள்ளப்படும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கின்றது. இருப்பினும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதி…

  3. கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத தமிழகம்: சில முக்கிய ஆலோசனைகள் ப.இளவழகன் கடந்த மே மாதம் 31ஆம் தேதி, தேசிய மனித உரிமை ஆணையம் பெருந்தொற்றுக் காலத்தில், கொத்தடிமைத் தொழிலாளர்களை இனம்காண, விடுவிக்க, மறுவாழ்வு மற்றும் திருப்பி அனுப்புதல் போன்ற செயல்களைச் செய்வதற்காக ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த டிசம்பர் 2020-ல், இதே போல் ஒரு விரிவான வழிகாட்டுதலை எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியிருந்தது. தற்போது இரண்டாவது அலையில் ஏற்பட்ட சவால்களையும், தாக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. தடுப்பு (Prevention) ஊராட்சி…

    • 1 reply
    • 620 views
  4. அனைத்து துறைகளிலும் தமிழ் யூனிகோடு: தலைமை செயலாளர்! மின்னம்பலம் அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோடு முறையைக் கையாள வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் ஃபாண்ட் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைத்து அரசு துறைகளிலும் ஒரே தமிழ் ஃபாண்ட் பயன்படுத்தப்பட்டால் வசதியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழக இணைய கல்விக்கழகம் மேம்படுத்தியுள்ள தமிழ் யூனிகோடு, அனைத்து வகை தமிழ் குறி அமைவு (TACE16) கொண்ட எழுத்துருக்கள் (Fonts),…

  5. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான் மின்னம்பலம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், எழுவர் விடுதலையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இன்று (ஜூன் 4) சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தனர். சீமான் ரூ. 5 லட்சம் வழங்கினார். பின்னர் பேரறிவாளன் …

  6. மீண்டும்... அரசியலுக்கு, வருகிறாரா சசிகலா! கடந்த சில நாட்களாக சசிகலா குறித்த செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த சசிகலா தற்போது விடுதலையாகி உள்ளார். நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இவரின் ஆதிக்கம் இருக்கும் என்றே பல விமர்சனங்கள் எழுந்திருந்தன. பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயங்களுக்கு அரசியலில் இருந்து விலகபோவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியே மலர வேண்டும் எனவும் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து அவரது அரசியல் வாழ்க்கை நிறைவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. இருப்பினும் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி தோல்வியை தழுவவே சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரபோகிறார் என்ற கருத்…

  7. Yasser Arafat ராஜீவ் உயிருக்கு ஆபத்து என அவர் உயிரோடு இருக்கும் போதே சொன்னார்! - பழ நெடுமாறன்

    • 0 replies
    • 822 views
  8. மைதானத்தை வட்டமிடும் கழுகுகள்... வீராங்கனைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?! #SexualHarassment மு.பிரதீப் கிருஷ்ணா Sexual Harassment PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லைகள் கொடுத்ததைப் அப்பள்ளி மாணவிகள் சில தினங்களுக்கு முன் வெளிப்படுத்தினார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சென்னையின் முன்னணி தடகள பயிற்சியாளர் நாகராஜன் இப்போது போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். புத்தகத்தைக் கிழித்தெறிந்த வகுப்பறையின் கதை படித்த தமிழகம், இப்போது கால்களை வாரிவிட்ட மைதானத்தின் கதை படித்துக்கொண்டிருக்கிறது. பள்ளி ஆசிரியரைத் தொடர்ந்து, தங்கள் தடகள பயிற்சியாளரால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் இப்போது குரல் கொட…

  9. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டத்தை ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு து.ரவிக்குமார் வேண்டுகோள் 109 Views கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலவாழ்வுக்கான ஒரு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அந்த நலத்திட்டத்தை இந்தியாவிலிருக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் து.ரவிகரன் அவர்கள் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலவாழ்வுக்கான மிகச் சிறந்த திட்டமொன்றைத் தங்களுடைய தலைமையிலான அரசு அறிவித்திருப்பது பாரா…

  10. அமுல் நிறுவனத்தை சைவ பால் தயாரிக்க சொன்ன பீட்டா; வலுக்கும் எதிர்ப்பு! செ.சல்மான் பாரிஸ்என்.ஜி.மணிகண்டன் பசு ( Representational Image ) ``தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பீட்டாவிடமிருந்து மீட்டது போல் இந்திய பால்வளத உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களுக்கு பொதுமக்கள் எப்போதும் துணை நிற்க வேண்டும்". ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை வரக் காரணமான பீட்டா அமைப்பு தற்போது, சோயா மூலம் சைவ பால் தயாரிக்க வேண்டும் என்று அமுல் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளதைப் பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகிறார்கள். Amul அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பீட்டா அமைப்…

  11. தென்னிந்தியாவை சுற்றி வளைத்தது சீனா- டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை 23 Views தென்னிந்தியாவை சுற்றி வளைத்திருக்கிறது சீனா. இலங்கையில் சீனாவின் அரசியல் சாசனத்துக்குட்பட்ட இறையாண்மை பிரதேசத்தை சீனா பெற்று விட்டது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் அமெரிக்காவால் செய்ய முடியாததை சீனா சாதித்திருக்கிறது. தமிழக எல்லையையொட்டிய அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதையொட்டிய 15,000 ஏக்கர் நிலங்களையும் சீனாவுக்கு தாரை வார்த்துள்ள சிங்கள அரசு, அவற்றை சீன இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவித்திருக்கிறது. இதன்மூலம் இந்தியப் பாதுகாப்புக்…

  12. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் கொரோனா முதல் அலையின் தாக்கத்தைவிட இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் கடுமையாக இருக்கிறது. முதல் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட கிராமங்கள் பலவும், இரண்டாம் அலையில் தீவிர தாக்குதலையும், இறப்புகளையும் சந்தித்து வருகின்றன. இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பலரும் நகரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்தனர். கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு வந்தவர்கள் பலரும் தங்களது கிராமங்களில் உள்ள சுகாதார நிலையங்களில் போதுமான படுக்கை மற்றும் ஆக்சிஜன் படுக்கை இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருந்த காட்சிகளை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன. கொரோனாவின் வீரியத்தை குற…

  13. `என் கதையை முடித்துவிட முடியும் என நினைக்கிறீர்களா?' அதிரடிக்கும் மம்தா; மே.வங்கத்தில் நடப்பது என்ன? வருண்.நா மம்தா பானர்ஜி ``மத்திய அரசுப் பணியிலிருக்கும் மேற்கு வங்கப் பிரிவு அதிகாரிகளை, என்னாலும் மாநிலப் பணிகளுக்கு அழைத்துக் கொள்ள முடியும். இப்படியா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நடத்துவது? அவர்கள் என்ன கொத்தடிமை பணியாளர்களா?'' - அதிரடி காட்டும் மம்தா... மே. வங்க அரசியலில் நடப்பது என்ன? மேற்கு வங்க முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பதவியேற்றதிலிருந்தே பரபரப்பாக இயங்கி வருகிறது மேற்கு வங்க அரசியல் களம். பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா கலந்து கொள்ளாதது, தலைமைச் செயலாளரை மத்திய அரசு பணிமாற்றம் செய்தது என தற்போது உச்சக்கட்ட பரபரப்…

  14. மதுரையில் குறையும் கரோனா பாதிப்பு: மாநாராட்சிப் பகுதிகளில் 16.3 சதவீதமாக இருந்த பாதிப்பு 7.2 சதவீதமாக சரிவு மதுரை மதுரை மாநகராட்சியில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. இது நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மருந்தும், எந்த சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படாதநிலையில் தமிழகத்தில் ‘கரோனா’ தொற்று முதல் அலை பரவத்தொடங்கியபோது இந்தத் தொற்றின் முதல் உயிரிழப்பு மதுரை அண்ணாநகரில்தான் நிகழ்ந்தது. பெரும் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை மதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனால், …

  15. எலிசபெத் மகாராணிக்கு முன்னால்: ஆடர்லி ராதாகிருஷ்ணனின் நீங்கா நினைவுகள்! மல்லிகா ராதாகிருஷ்ணனோட அப்பா 1940ல மெட்ராஸ் கவர்னருக்கு சாரட்டு ஓட்டிக் கொண்டிருந்தார். தன் அப்பாவுடன் இவன் அடிக்கடி குதிரை லாயத்துக்குப் போய் குதிரை ஓட்டப் பயின்று கொண்டான். கவர்னர் சடங்கு அணிவகுகுப்புகளுக்கு (ceremonial parade) போகும்போது அவருடைய சாரட்டுக்கு முன்னே போகும் குதிரைகள் ஓட்டும் அணியில் ஒருவனாக ராதாகிருஷ்ணன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். ஒரு சமயம் வைஸ்ராய் லார்ட் மௌன்ட்பேட்டன் மெட்ராஸுக்கு வந்தபோது அவருடைய சாரட்டுக்குப் பின்னே சென்ற குதிரை அணியில் ஒருவனாகப் பங்கெடுத்தான். ராதாகிருஷ்ணனுடைய அம்மாவிற்குத் தன் மகன் மௌன்ட்பேட்டன் துரையின் குதிரை அ…

  16. பிணையில்... விடுதலையானார், பேரறிவாளன்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், குறித்த கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியிருந்தார். இதற்கமைய இன்று அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன்படி புழல் சிறையில் இருந்து வேலூர் மத்தியச் சிறைக்கு அழைத்து செல்லப்படும் பேரறிவாளன் அங்கிருந்து ஜோலார்போட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1218778

  17. `28 வயதில் எம்.பி; 1,000 பள்ளிகளை திறந்து சாதனை’ - 101 வயதில் மறைந்த டி.எம்.காளியண்ணன் கவுண்டர் துரை.வேம்பையன்நா.ராஜமுருகன் காளியண்ணன் கவுண்டர் ( நா.ராஜமுருகன் ) இந்தப் பதவியை வைத்து ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஆயிரம் பள்ளிகளை இவர் திறந்தார். 'இங்குள்ள பிள்ளைகள் நாலெழுத்து படிக்கோணும். அதுக்காகதான் ஆயிரம் பள்ளிகள். கடைக்கோடி பிள்ளைக்கும் கல்வி கிடைக்கணும்னா, இன்னும் அதிகம் பள்ளிகளை திறப்பேன்' என்று தெரிவித்தார். 28 வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை எனப்படும் திருச்செங்கோடு முதல் பாராளுமன்ற உறுப்பினர், 1,000 பள்ளிகளை திறந்த கல்வியாளர், 36 முறை தேர்தலைச் சந்தித்தவர், ஜமீன்தார் என்றாலும், தனது சொத்துகளை மக்களுக்காக செலவிட்டவர…

    • 3 replies
    • 835 views
  18. விடுதலைப்புலிகள் ஒரு ‘விடுதலை இயக்கம்’ என்பதை ஏற்றுக் கொண்ட அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்- பழ. நெடுமாறன் 35 Views ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்தும் அமெரிக்க காங்கிரஸில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் எனக் கூறி வந்த அமெரிக்கா, இப்போது அதை விடுதலை இயக்கம் என குறிப்பிட்டிருப்பதையும் பழ. நெடுமாறன் சுட்டிக் காட்டியுள்ளார். இது தொடர்பாக பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு முதன்மு…

    • 3 replies
    • 901 views
  19. வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – ஸ்டாலின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார். அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். 6 மாத காலமாக விவசாயி…

  20. 30 நாட்கள் விடுப்பு வழங்கும்படி நளினி தமிழக முதல்வருக்கு மனு 106 Views ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இவர்களை விடுதலை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் குடியரசுத் தலை…

  21. தமிழகத்திற்கான ஒக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை அதிகரித்தது மத்திய அரசு! தமிழகத்திற்கான ஒக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழக அரசுக்கு தேவையான ஒக்சிஜன் அளவு போதுமானதாக இல்லை என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 131 டன் பிராணவாயு தமிழகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் 25 டன் ஒக்சிஜனும் அடங்குகிறது. இதனையடுத்து தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒக்சிஜன் அளவு 650 டன் ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1218190

  22. YG மகேந்திரனையும் கைது செய்யனும்

    • 0 replies
    • 632 views
  23. இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச்சீட்டிலும் தமிழைப் புறக்கணித்து, சீன மொழியை உட்புகுத்துவதா? – சீமான் கண்டனம் 86 Views இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச் சீட்டிலும் தமிழைப் புறக்கணித்து விட்டு சீன மொழியை உட்புகுத்துவதா? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது. “இலங்கையின் அலுவல் பணிகளிலும், அரசின் செயல்பாடுகளிலும், நாட்டின் கடவுச் சீட்டிலும் தமிழை முற்றாகப் புறக்கணித்து விட்டு சீன மொழியை உட்புகுத்தி வரும் சிங்களப் பேரினவாத அரசின் செயல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இலங்கையின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக சிங்களத்தோடு தமிழும் இருக்கும் ந…

  24. கொரோனா சிகிச்சைக்காக 50 மணி நேரமாக வேனில் காத்திருந்த வயதான தம்பதியர் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையளிக்க படுக்கை வசதி தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தவண்ணம் உள்ளனர். இதற்காக ஆஸ்பத்திரியின் அனைத்து வார்டுகளும் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தீவிரசிகிச்சை பிரிவு, சிறப்பு சிகிச்சை பிரிவு ஆகியனவும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, கடந்த 22-ந்தேதி வயதான தம்பதியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வேனில் வந்தனர். ஆனால், அவர்களுக்கு படுக்கை வசதி கிட…

  25. பாஜக பத்மா சேஷாத்ரி பள்ளியின் பாலியல் தொல்லை | அதிர வைக்கும் உண்மை பின்னணி | மதுவந்தி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.