Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மேற்கு வங்க வன்முறை; அமைதியை பேணுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்! மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெடித்த வன்முறையின் சில நாட்களின் பின்னர் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடிமக்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுமாறு வலியுறுத்தி ஒரு பொது வேண்டுகோளை நேற்றைய தினம் விடுத்தார். அதேநேரம், அரசியல் ஆதாயத்திற்காக அமைதியின்மையைத் தூண்டுவதற்காக, பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் துணை அமைப்புகளான RSS உட்பட, இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் பின்னணியைப் பயன்படுத்தி” ஒரு பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதாகவும் சுட்டிக்காட்டியு…

  2. உலகிலேயே அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் – ஐரோப்பிய ஒன்றியம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உலகிலேயே அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 அமைப்புகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை மறுநாள் (புதன்கிழமை) இடம்பெறவுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 அமைப்புகள் 6 தீர்மானங்களை கொண்டுவந்துள்ளன. இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச மனித உரிமை குறித்த விதிகளுக்கும், இந்தியா ம…

  3. பட மூலாதாரம்,ISPR படக்குறிப்பு,சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லமாபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா, ராணுவ நடவடிக்கை ஒன்றில் உயிரிழந்தார். பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சரரோகா பகுதியில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது அவர் உயிரிழந்தார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலகோட் தாக்குதலின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை, ராணுவ அதிகாரி மோயிஸ் ஷா சிறைபிடித்தார். அவரின் இறுதி அஞ்சலி ராவல்பிண்டியில் நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர் துறையின்(ஐ.எஸ்.பி.ஆர்) தகவல்களின்படி, பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர், உள்துறை அமைச்சர் மோஹ்சி…

  4. உயிரிழந்த தாயின் எச்சங்களைத் தவறாக அனுப்பியதாக ஏயார் இந்தியா மீது மகன் குற்றச்சாட்டு! எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தனது தாயின் உடலுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, லண்டனில் வசிக்கும் மகன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த நபரின் பெற்றோர் இருவரும் கடந்த அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அவர்களது உடலங்கங்கள் என்றும் கூறப்பட்ட எச்சங்கள் அவருக்கு அனுப்பப்பட்டன. ‘எனினும் அதில் தனது தாயின் எச்சங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் காணப்பட்டதாக ‘ அவர்களது மகன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட ஒருவரின் உடல் எச்சங்களில், பலரின் எச்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக…

  5. இந்தியாவில் தற்போது வேகமெடுத்துள்ள கொரோனா பரவலைத் தடுக்க அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும செப்ரெம்பர் மாதம் வரை நீடிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தற்போது 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24-ம் திகதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் திகதி வரை நீடிக்கும். இந்தநிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் நிறுவனம், ‘இந்தியாவில் நாடு தழுவிய அளவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி மற்றும் செப்ரெம்பர் மாத இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில்தான் நீக்கப்படலாம். இந்திய சுகாதாரத்துறை மற்றும் அரசின் திட்டங்களின் செயல்பாட்டால் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத…

  6. இமாச்சல் எல்லையில் இந்தியாவை நோக்கி புதிய வீதியை அமைக்கும் சீனா? இமாச்சல பிரதேச மாநிலத்தை அண்மித்த தனது எல்லை பகுதியில் இந்தியாவை நோக்கி 20 கிலோ மீற்றர் தூரத்துக்கு சீனா புதிதாக வீதி கட்டமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலால் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாநிலம், கின்னோர் மாவட்டம் சாரங் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், இந்தோ -திபெத் எல்லை காவல் படையினருடன் சீன எல்லைக்கு அண்மையில் சென்றிருந்தனர். இதன்போது இந்தியாவை நோக்கி புதிய வீதியை சீனா மிக வேகமாக கட்டமைத்தது தெரியவந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதத்தில் குறித்த பகுதியில் வீதி அமை…

  7. நேதாஜியின் பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் – மம்தா பானர்ஜி கோரிக்கை! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என வங்காள மாநில முதலைமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள், 2022 ஜனவரி 23-ந் திகதி கொண்டாடப்படவுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள். வங்காளத்தின் மாபெரும் மகன்களில் அவர் ஒருவர். இந்திய சுதந்திர இயக்கத்தின் சின்னம். அவர் எல்லா தலைமுறையினருக்குமான உத்வேகம். அவரது அயராத தலைமையின்கீழ் இந்திய தேசிய இராணுவத்தின் ஆயிரக்கணக்கான வீரர்கள் தாய்த்திருநாட்டுக்காக மிக உன்னதமான தியாகங்களை செய்தனர். அவரது பிறந…

  8. 15 வருடங்களுக்கு மேல் பழமையான... மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும். குறித்த வாக்கு…

  9. மும்பை கப்பல் விபத்து : உயிரிழப்புகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு! மும்பையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. டாக்தே புயல் காரணமாக மும்பை கடலுக்குள் எண்ணெய் கிணற்றில் பணியாற்றிய தொழிலாளர்கள் மிதவை கப்பல் ஒன்றில் தங்கியிருந்தனர். குறித்த மிதவை கப்பலானது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில், அதில் பணியாற்றிய 261 பேரும் நீரிழ் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது. குறித்த நபர்களை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 186 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1217260

  10. கர்நாடகாவின் இந்த பழங்குடி பெண் எப்படி விவசாயிகளுக்கு முன்மாதிரி ஆனார்? இம்ரான் குரேஷி பெங்களூரில் இருந்து பிபிசி இந்தி சேவைக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IMRAN QURESHI பிரேமா படித்திருந்தால், இந்நேரம் அவர் சமூக ஊடகங்களில் பிரபலமானவராக இருந்திருப்பார். அவரது அடையாளம் ஒரு 'செல்வாக்குள்ள நபர்' அந்தஸ்தை அவருக்கு கொடுத்திருக்கும். ஆனால் விவசாயம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் நல்லெண்ண தூதுவராக இருக்கக் கூடிய திறமை அவரிடம் உள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வனப்பகுதியில் வசித்து வந்த பிரேமா தாசப்பா (50) மிகக் குறைந்த கூலிக்கு கூலி வேலை செய்து வந்தார். …

  11. வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பு! கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகள் இந்தியாவில் தரையிறங்கிய பிறகு ஒரு வாரகாலம் கட்டாய சுய தனிமைப்படுத்தப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் எட்டாவது நாளில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் ஒமிக்ரொன் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முகமாக மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1260685

  12. இந்தியாவிற்கு அமைதிப் புறாவை டுவிட்டரில் தூதுவிட்ட இம்ரான் கான்!!! பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான் அமைதிப் பேச்சுவார்த்தை நடாத்த வருமாறு இந்தியாவிற்கு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டு மறுபுறம் பயங்கரவாத தாக்குதல்களை கடந்த கால நவாஷ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம் ஊக்குவித்தமையால் இந்தியா பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டது. தற்போது பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் எற்பட்டுள்ள நிலையில் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ளார். பிரதமராக பதிவியேற்றுள்ள இம்ரான் கான் அதிரடியாக பல செயற்பாடுகளில் …

  13. அயோத்தி நிலப்பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்குமாறு உத்தரவு… March 8, 2019 அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்குமாறு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர் குழுவையும் நியமித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் குறித்த நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினருமாக 14 மேல்முறையீட்டு மனுக்கள் உ…

  14. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சீன கருத்து தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ஹுவா சூன்யிங், "காஷ்மீர் பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை காக்க வேண்டும்," என்று கூறி உள்ளார். மேலும், "சீன நிலப்பகுதியின் இறையாண்மையை அண்மைக்காலமாக இந்தியா குறைத்து மதிப்பிட்டு ஒருதலைப்பட்சமாக உள்ளூர் சட்டங்களை மாற்றி வருகிறது," என்றும் கூறி உள்ளார். கேள்வி: லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்றுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளதே. அந்தப் பகுதியில்தான் சீனாவின் மேற்கு எல்லை வருகிறது. இது குறித்த உங்கள் கருத்து என்ன? பதில்: சீன - இந்திய எல்லையின் சீனாவின் மேற்கு பகுதியை, இந்தியா தனது நிர்வாக ஆளுகைக்குள் கொண்டி…

  15. லேண்டர் விக்ரம் வேகமாக தரை இறங்கியதால் அது சாய்ந்துள்ளதே தவிர உடைந்துவிடவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர், நிலவில் கால் பதிக்க 2.1 கி.மீ. மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அதனுடனான தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. "சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், வேகமாக தரை இறங்கியதால் 4 கால்களில் நிற்காமல் சாய்ந்துள்ளது. ஆனால், அது உடைந்துவிடவில்லை. மாறாக, ஒரே தொகுப்பாக காட்சி அளிக்கிறது. லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. தர…

  16. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் மூண்டால் என்ன நடக்கும்? – பகுதி 1 13 May 2025, 6:52 PM 2025ஆம் ஆண்டு (ஆராய்ச்சிக்காக ஒரு கற்பனை), பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குகிறார்கள். டிசம்பர் 2001இல், இந்திய நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த முறை தாக்குதல்களில் இந்திய அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஜனவரி 2002இல் நடந்ததுபோல, இரு தரப்பினரும் நாடுகளுக்கு இடையிலான எல்லையிலும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியிலும் தங்கள் படைகளைத் திரட்டி நிறுத்துகிறார்கள். இரு பக்கமும் நிலவும் அதீதப் பதற்றங்கள் காரணமாக மோதல்கள் வெடிக்கின்றன. இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள். இந்திய அரசாங்…

  17. இலங்கை- காரைக்கால் இடையிலான கப்பல் சேவைக்கு கிரண்பேடி தடை- நாராயணசாமி இலங்கை- காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு தடை விதிக்க ஆளுநர் கிரண்பெடி நடவடிக்கை எடுத்து வருகிறாரென முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி மேலும் கூறியுள்ளதாவது, “புதுவை மாநில வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தால், ஆளுநர் கிரண்பெடி அதனை செயற்படுத்த விடாமல் தொடர்ந்து தடையாக இருந்து வருகிறார். இலங்கை- காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் கிரண்பெடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர…

  18. இந்தியாவில் 33 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில…

  19. ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? – ராகுல் கேள்வி by : Dhackshala சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீன எல்லையில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு தரப்பு படைகளுக்கு …

  20. இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா? Bharati October 17, 2020 இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா?2020-10-17T06:28:55+05:30அரசியல் களம் FacebookTwitterMore கேணல் ஆர் ஹரிஹரன் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகிய இருவரும், நவம்பர் 17ந் தேதி ரஷ்யாவின் தலைமையில் நடக்கவிருக்கும் ப்ரிக்ஸ் என்ற நான்கு நாடுகள் (பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தெற்கு ஆப்ரிக்கா) கூட்டமைப்புத் தலைவர்கள் சந்திப்பின் போது நேரடி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. அந்த சந்திப்பு, விடியோவில் நிகழும் மெய்நிகர் (virtual) பேச்சுவார்த்தையானாலும், லடாக்கில…

  21. இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்டது ருவிற்றர் நிறுவனம்! இந்தியாவின் பகுதியாகவுள்ள லடாக்கை சீனாவின் ஒரு பகுதி போல் தவறாக குறிப்பிட்டதற்காக டுவிற்றர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து, ருவிற்றர் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்த நிலையில் இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளதாக தரவுப் பாதுகாப்பு வரைபுக்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிற்றர் நிறுவனம் தங்களிடம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தவறு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அதனைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என ருவிற்றர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக அவர் …

  22. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்! மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி தற்போது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இனி வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும். நீட் தேர்வின் புதிய நடைமுறை இந்த வருடம் முதல் நடைமுறைக்கு வருகிறது. 2 நீட் தேர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு மருத்துவ படிப்பில் சேரலாம். மாணவர்கள் சிறந்த முறையில் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டு…

  23. Kumbh Mela ( AP Photo/Karma Sonam ) கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒன்றுகூடுவதால் அதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று பலரும் எச்சரிக்கின்றனர். கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவில் பல லட்சம்பேர் பங்கேற்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 14-ம் தேதி ஒருநாள் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பலரையும் கலங்கடித்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 1-ம…

  24. அமைச்சரவை, விரிவாக்கம் குறித்த அறிவிப்பு! பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இருபது புதிய அமைச்சர்கள் பதவி வகிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே நாட்டின் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலத்திட்டங்களின் பலன் அடித்தட்டு மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு இந்த அமைச்சகம் பாலமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1227118

  25. இந்தியாவில் எண்ணெய், எரிவாயு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வருமாறு... சர்வதேச நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு! இந்தியாவில் எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ள வருமாறு சர்வதேச நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச எண்ணெய், எரிவாயுத் துறை நிபுணர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடல் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியாவை தற்சார்பு நிலையை அடைய வைக்கும் நோக்கில் இந்த சீர்த்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இயற்கை எரிவாயு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.