Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு – 2 நாட்களில் 2.72 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்தனர். இந்தியாவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தையில் தளம்பல் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் முதலீட்டாளர்கள் 2.72 லட்சம் கோடியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் அமெரிக்க டொலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாட்டு நாணயங்கள் சரிவினை சந்தித்து வருகின்ற நிலையில் , இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் …

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்தது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் இந்திய பங்குச் சந்தையில், கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பங்குகளை வாங்குவோரைவிட விற்பவர்களின் அளவு மிக அதிகமாக இருந்துள்ளது. இதை முன்னிட்டு, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டுமே கடும் சரிவைக் கண்டுள்ளது. இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21-ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரி…

  3. இஸ்லாமாபாத்: இந்திய படைகளுக்கு எதிராக ஆசாத் காஷ்மீர் மக்கள் புனிதப் போர் புரியக்கூடாது என்றும், அது பாகிஸ்தானின் நலன்களுக்கு எதிரானதாகும் எனவும் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வந்த பாகிஸ்தானில், தீபாவளி திருநாளான நேற்று காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் மக்கள் பேரணியில் ஈடுபட்டும், போராட்டம் மேற்கொண்டும் இந்தியாவுக்கு எதிரான தங்களின் கருத்தை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இ…

    • 2 replies
    • 424 views
  4. இந்திய படையினர் தயாராக இருக்க வேண்டும் – பிபின் ராவத் அறிவுறுத்தல்! சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம் படையினர் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார். எல்லைப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாடு சுதந்திரம் பெற்ற பின் அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் இராணுவம் இன்றைக்கு நவீன போர் கருவிகளை உடைய மிக வலுவான படையாக மாறியுள்ளது. போர்களின் தன்மைகளில் 20ம் நுாற்றாண்டில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளோம். பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களை சந்தித்து வருகிறோம். உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த இராணுவம்…

  5. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை. இந்தியாவின் நிதி நிலை அறிக்கை வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிபிசியின் ஃபேஸ்புக் நேரலையில் இந்த அறிக்கை குறித்த தனது கருத்துக்களை செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பகிர்ந்துகொண்டார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் க. ஜோதி சிவஞானம். அந்த உரையாடலில் இருந்து: வியாழக்கிழமை வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது இது ஓர் ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கைதான். வருடாவருடம் பொரு…

  6. அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தமது இந்திய பயணத்தை இன்று ஆரம்பிக்கிறார். அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது இந்திய-அமெரிக்க கூட்டுவணிக முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன. அண்மையில் இந்தியாவிற்கான ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை அமெரிக்க ஜனாதிபதி இரத்துச் செய்தார். பின்னர் அமெரிக்க பண்டங்கள் சிலவற்றுக்கான வரியை இந்தியா அதிகரித்தது. இவ்வாறான சூழ்நிலையில், மைக்பொம்பியோவின் பயணம் அமைந்துள்ளது. அவர் இந்திய பயணத்தின் நிறைவில் இலங்கைக்கு வருவார் என்று சொல்லப்பட்டிருந்தாலும், அந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் சோபா உடன்படிக்கை தொடர்பான எ…

    • 0 replies
    • 331 views
  7. இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை... இராணுவ அதிகாரிகள், கசியவிட்டதாக தகவல்! இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை இராணுவ அதிகாரிகள் சிலர் அண்டை நாட்டுக்கு கசியவிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அண்டை நாட்டின் உளவு பார்க்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அதிகாரிகள் மீது உறுதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1277526

  8. Published By: VISHNU 24 APR, 2025 | 09:22 PM தவறுதலாக பாகிஸ்தானில் எல்லைக்குள் சென்றதால் இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. ஓய்வு எடுப்பதற்காக நிழலைத்தேடிச் சென்றபோதே தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் குறித்த இந்திய எல்லைப் பாதுகாப்புடை வீரர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த வீரரை விடுவிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் எல்லையில் 182 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.சிங் விவசாயிகளுடன் ஓய்வு எடுக்க நிழல் பகுதிக்கு செல்ல முயன்றபோது, இந்திய எல்லையில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பி.கே. சிங்கை கைது செய்துள்ளனர். இரா…

  9. இந்திய பிரதமருக்கு கொலை மிரட்டல்! தேசிய புலனாய்பு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபரொருவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக, சென்னை புரசைவாக்கத்திலுள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணொன்றை வெளியிட்டிருந்தது. குறித்த தொலைபேசி எண்ணுக்கு, இன்று காலை அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபர், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யப் போவதாக ஹிந்தியில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இவ்வாறான மிரட்டல் அழைப்புக்கள்கள் வழமையாக சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கே வரும். ஆனால், NIA அலுவலகத்துக்கே தொடர்பு கொண்டு மிரட…

  10. Published By: T. SARANYA 21 APR, 2023 | 04:30 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலக பௌத்த மாநாட்டினை 2023 ஏப்ரல் 20ஆம் திகதி புது டில்லியில் ஆரம்பித்துவைத்தார். 2023 ஏப்ரல் 20-21 ஆகிய திகதிகளில் நடைபெறும் இம்மாநாட்டினை சர்வதேச பௌத்த சம்மேளனத்துடன் இணைந்து இந்திய அரசாங்கம் ஒழுங்கமைத்துள்ளது. “சமகால சவால்களுக்கான பதில்கள்: தத்துவம் முதல் செயன்முறைகள் வரையில்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகளாவிய பௌத்த தம்ம தலைமைத்துவத்தினையும் புலமையாளர்களையும், பௌத்த விவகாரங்கள் மற்றும் பிரபஞ்ச ரீதியான கரிசனைகள் குறித்த விடயங்களில் ஈடுபடுத்தி அப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு கொள்கை ரீதியிலா…

  11. இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டுவர தீர்மானம் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பதிலளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா பிரேரனையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நா…

  12. இந்திய பிரதமர் மோடி - உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை 31 Aug, 2025 | 11:14 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி மோடியிடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய பிரதமர் மோடி ஜப்பான், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 29ம் திகதி ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு பிரதமர் உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்தார். இதையடுத்து, இந்தியா , ஜப்பான் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2 நாட்கள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு சீனா சென்றார். அவர் சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், …

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, பிபிசி செய்தியாளர் 2 அக்டோபர் 2023, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் சீன கடற்படையின் ஆதிக்கமும் செயல்பாடுகளும் இந்திய அரசுக்கும் பாதுகாப்பு நிபுணர்களுக்கும் கவலைக்குரியதாகவும் விவாதத்துக்கு உரியதாகவும் உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும்நிலையில், கடந்த மூன்று ஆண்டு…

  14. இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு சூழல் : கடற்படையின் பலத்தை அதிகரிக்க இந்தியா திட்டம்! இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படையில் ஏவுகணை அழிப்பு போர்க் கப்பலும், நீர்மூழ்கிக் கப்பலும் விரைவில் இணைக்கப்படவுள்ளன. இது குறித்து கடற்படை துணைத் தளபதி சதீஷ் நாம்தேவ் கோர்மடே தெரிவிக்கையில், “ஏவுகணை அழிப்பு போர்க்கப்பலான விசாகப்பட்டினம் எதிர்வரும் 21 ஆம் திகதியும், நீர்மூழ்கிக் கப்பலான வேலா எதிர்வரும் 25 ஆம் திகதியும் கடற்படையில் இணைக்கப்படும். இதன்படி 39 கடற்படைக் கப்பல்கள், நீர்மூழக்கிக் கப்பல்கள் நாட்டின் பல்வேறு கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்டு வருகின்றன. இவை இந்தியாவின் கடல்சார் வலிமையை அதிகரிக்கும். …

  15. இந்திய பெருங்கடல் பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி - சீனாவுக்கு கடற்படை தளபதி மறைமுக எச்சரிக்கை புதுடெல்லி, இந்திய, பாகிஸ்தான்போரின்போது, 1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி, பாகிஸ்தானின் 4 போர்க்கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்தது. இதில், நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இந்திய கடற்படையின் இந்த சாதனையை, பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் தொடர் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.…

  16. இந்திய பொருளாதாரச் சரிவும், அந்நிய கார்ப்பரேட்களின் வரவும் – இதயச்சந்திரன் கொரோனாவால் மோசமாகப் பாதிப்புற்றுள்ள இந்தியாவிற்கு, 750 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளது ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி. சீன தேசத்தால் உருவாக்கப்பட்ட இவ் வங்கியில் (AIIB), இந்தியா உட்பட, அமெரிக்கா-ஜப்பான் தவிர்ந்த, பல மேற்கு நாடுகள் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்திய-சீன மோதல் குறித்த அதிகளவில் கொம்பு சீவி விடும் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் யாவும் இந்தக் கடன் விவகாரத்தை ஏன் மறைக்கின்றன?. புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய மசோதாக்கள், வெளிநாட்டு கார்ப்பரேட் வணிகர்களுக்கு புதிய வாசல்களை அகலத் திறந்துள்ளது. இது குறித்தும் இந்த ஊடகங்கள் பேசுவதில்லை. …

  17. இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம் – நிதின் கட்கரி “இந்தியாவை 350 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது கடினம் தான். எனினும், அது நடக்காத காரியம் அல்ல” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில், இந்துார் மேலாண்மை சங்கத்தின் 29வது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “2024ம் ஆண்டுக்குள் இந்தியாவை 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது என்பது கடினமான இலக்கு தான். எனினும் அது நடக்காத காரியம் அல்ல. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைத்துவிட்டால் அந்த இலக்கை நாம் எளிதில் எட்டிவிடலாம். நம் நாட்…

  18. இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதா என்பது சந்தேகம்… March 27, 2019 இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி தெரிவித்துள்ளார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிய ஒரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் எப்படி 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும் . எனவே ஒரு நடுநிலையான குழுவை அமைத்து உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதையும், புள்ளிவிவரத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் 7 சதவீத வள…

  19. இந்திய பொருளாதாரம் தடுமாறுகிறது – நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி… October 15, 2019 இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஊடகம் ஒன்று, அமெரிக்காவில் உள்ள அபிஜித் பானர்ஜியிடம் மேற்கொண்ட செவ்வியின்போது, இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், வ…

  20. இந்திய மக்கள் மீதே குண்டு மழை பொழிந்த இந்திய விமானப் படை – இந்திரா காந்தி ஆட்சியில் என்ன நடந்தது? ரெஹான் ஃபஸல் பிபிசி நிருபர் 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIRMAL NIBEDAN இது ஜனவரி 21, 1966 அன்று நடந்த நிகழ்வு. இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்க இன்னும் மூன்று நாட்களே இருந்தன. மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) தலைவர் லால்டெங்கா, இந்தோனேசிய அதிபர் சுகர்னோவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். இந்தக் கடிதத்தில் மிசோ வரலாற்றைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருப்பதாவது, "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் நாம் சுதந்திரம் இல்லாத நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தோம். …

  21. இந்திய மாணவர்கள் எவரும்... வீட்டை விட்டு, வெளியே வர வேண்டாம்! இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. சுமி நகரில் சுமார் 700 மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில். வாகன வசதி கிடைக்காத அவர்கள் நடந்தே நாட்டின் எல்லை வரை செல்ல முடிவெடுத்து ஒரு குழுவாக சென்றுள்ளனர். இது தொடர்பாக படங்கள் வெளியான நிலையில் குண்டுகள் பொழியும் சூழலில் மாணவர்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறும் இந்திய தூதரகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுடன் தூதரகங்கள் மூலம் தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர்களுக்கு அழ…

  22. இந்திய மாலுமிகள் கடத்தல் விவகாரம் – உறுதி செய்தார் சுஸ்மா சுவராஜ் நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐவர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட இந்திய தூதர் அபய் தாக்கூருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். T.M apecus என்ற இந்திய கப்பலை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடந்தமாதம் கடத்தியிருந்தனர். இது குறித்து கப்பலில் பணியாற்றிய மாலுமியின் மனைவியான பாக்யஸ்ரீ தாஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜுயிடம் தன் கணவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்…

  23. இந்திய மீனவர் மரணம் – விசாரணை அறிக்கையை எதிர்பார்ப்பதாக ஜெய்சங்கர் அறிவிப்பு 15 Views இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பெறுபேறுகளை தாம் எதிர்பார்த்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர்தெரிவித்திருக்கின்றார். இந்திய மேல் சபையில் நேற்று வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இந்திய அமைச்சர், “இந்த விவகாரம் தொடர்பில் நாம் எமது எதிர்ப்பை மிக மிக கடுமையாக சிறிலங்கா அரசாங்கத்துக்குத் தெரிவித்திருக்கின்றோம். அதற்குப் பதிலாக இச்சம்பவம் குறிதத விசாரணைகளை ஆரம்பிப்பதாக இலங்கை அரசாங்கம் உறுதியளிததிருந்தது” எனவும் கூறினார். …

  24. இந்திய முப்படைகளுக்காக 9,100 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் இந்திய முப்படைகளுக்காக 9,100 கோடி ரூபாய் பெறுமதியில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றினை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் பேரவைக் கூட்டம் கூட்டம் இன்று நடைபெற்றுள்ள நிலையிலேயே இவ்வாறு இந்தக் கூட்டத்தில், 9,100 கோடி பெறுமதியிலான ஆயுதங்கள் மற்றும ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில், ராணுவத்தின் இரண்டு பிரிவுக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வாங்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்…

  25. இந்திய மொழி வரலாறு: கணக்கெடுப்பில் காணாமல் போன 1500 மொழிகள் எங்கே? அக்னி கோஷ் பிபிசி ஃபியூச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1961 மற்றும் 1971 க்கு இடையில், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளிலிருந்து சுமார் 1500 மொழிகள் மறைந்துவிட்டன. முற்றிலுமாகக் காணாமல் போவதற்கு முன்பு அவற்றைக் கண்டுபிடிக்க ஒருவர் முடிவு செய்தார். அது 2010. இந்தியாவின் மொழிகள் பற்றிய விரிவான தரவு இல்லாதது பற்றி கணேஷ் என் தேவி கவலைப்பட்டார். "1961 [இந்திய] மக்கள் தொகை கணக்கெடுப்பு 1,652 தாய் மொழிகளை அங்கீகரித்தது. ஆனால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 109 மொழிகள் மட்டுமே பட்டிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.