அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3312 topics in this forum
-
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு? காங்கிரஸ் காரிய குழு கூட்டத்தில் அக்கட்சிக்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரென தெரிவிக்கப்படுகின்றது. டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் குறித்த குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தமையினால் ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். ஆனாலும் இராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் பலர் கூறியும் ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரென கூறப்படுகின்றது. மேலும் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வாகலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்…
-
- 5 replies
- 489 views
-
-
ஜம்மு - காஷ்மீரில், கர்நாடக அரசு சார்பில் நிலம் வாங்க முடிவு செய்துள்ளதாக, அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர், சி.டி.ரவி, நேற்று தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், பிரபல வர்த்தக நிறுவனங்கள், தங்கள் கிளைகளை, ஜம்மு - காஷ்மீரில் துவக்குவோம் என அறிவித்துள்ளன. அதே போல, மஹாராஷ்டிரா உட்பட பா.ஜ., ஆளும் மாநில அரசுகளும், இம்மாநிலத்தில் தங்கள் சுற்றுலா துறையை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இந்த வரிசையில், கர்நாடகாவும், ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த தீர்மானித்துள்ளது. இது பற்றி, கர்நாடக சுற்றுலா துறை அமைச…
-
- 0 replies
- 395 views
-
-
உத்தரப்பிரதேசில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு! உத்தரப்பிரதேசின் பிரயாக்ராஜில் புதன்கிழமை (29) காலை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்றைய தை (மௌனி) அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் திரண்டதில் நிறுவப்பட்ட தடைகள் உடைந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க ஏராளமான அம்பியூலன்ஸகள் விரைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுதமிக்கப்பட்டனர். குறைந்தபட்சம் 15 உடல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக ஆர…
-
- 0 replies
- 138 views
-
-
விளாடிமிர் புதின் இந்தியா வருகை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகைத் தரவுள்ளார். டெல்லியில் நடைபெறும் 21ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், இதில் இருநாட்டு வெளியுறவு, மற்றும் இராணுவ அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1254680
-
- 5 replies
- 477 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது. இதன் பிறகு இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டமத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்…
-
- 9 replies
- 462 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SHEIKH ZAYED MEDICAL COLLEGE படக்குறிப்பு, குழந்தை ஷாஜியாவின் வயிற்றுக்குள் இருந்தது அவரின் இரட்டை கரு கட்டுரை தகவல் எழுதியவர், சுபைர் அசாம் & அகமது கவாஜா பதவி, பிபிசி உலக சேவை 9 செப்டெம்பர் 2023, 07:55 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்கள் உங்களை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கலாம். 10 மாத குழந்தையான ஷாஜியாவின் வயிற்றில் சந்தேகத்திற்குரிய நீர்க்கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் முஸ்தக் அகமது அவளின் வயிற்றுக்குள் இருந்த பாதியே வளர்ச்சி பெற…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
காஷ்மீர் எல்லையில் பாக். தொடர்ந்து தாக்குதல்.. 5 இந்திய வீரர்கள் படுகாயம்.. தொடரும் பதற்றம்! ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை புகுந்து நேற்று தாக்குதல் நடத்தியது. 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் இதற்கு உடனடியாக பதில் அளிக்கும் என்று கூறியது. அதன் ஒருகட்டமாக தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலையில் இருந்தே பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று காஷ்மீரின் சோபியான் எல்லை பகுதியில் பாக…
-
- 5 replies
- 768 views
-
-
பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம் March 5, 2019 பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று திடீரென முடங்கியுள்ளதாகவும் அந்த வலைத்தளத்தில் எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி உள்ளிடோர் பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருவதுடன் கட்சியின் செயல்பாடு மற்றும் தலைவர்களின் பிரச்சார பயணங்கள் அடங்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான …
-
- 0 replies
- 395 views
-
-
அனில் அம்பானி சிறைக்கு செல்வதைத் தவிர்க்க பணம் தந்து உதவிய அண்ணன் முகேஷ் அம்பானி 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது தம்பி அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி, அவர் சிறை தண்டனையை தவிர்க்க உதவியுள்ளார் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி. தொலைத் தொடர்பு பெரு நிறுவன…
-
- 0 replies
- 676 views
- 1 follower
-
-
கேரள மக்கள் - எப்படி? பட மூலாதாரம்,INDIA TODAY படக்குறிப்பு,அப்துல் ரஹீமின் பழைய படம். இப்போது அவருக்கு 41 வயதாகிறது 15 ஏப்ரல் 2024, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் `தி கேரளா ஸ்டோரி’ படம் தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ‘உண்மையான கேரளா ஸ்டோரி’ (தி ரியல் கேரளா ஸ்டோரி) என்ற தலைப்பில் இரண்டு செய்திகள் பகிரப்பட்டு வந்தன. முதல் செய்தி காங்கிரஸ் எம்பி சசி தரூரின் ட்வீட் பற்றியது. அதில், கேரளாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலின் படத்தை பதிவிட்டு, “400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து புதுப்பித்து அழகுபடுத்திய, கேரளாவி…
-
- 1 reply
- 300 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஷுமைலா ஜாஃப்ரி பதவி, பிபிசி நியூஸ், இஸ்லாமாபாத் 5 ஜூன் 2024, 02:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நரேந்திர மோதி மீண்டும் பிரதமராவது பற்றி பாகிஸ்தானிடம் இருந்து அவ்வளவு உற்சாகமான கருத்துகள் வெளியாகவில்லை. நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்பார் என்பதை வாக்கு எண்ணிக்கையை உன்னிப்பாக கவனித்தவர்களால் உணர முடிகிறது. இருப்பினும் பாஜக குறைந்த வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருப்பது சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் காரணமாக பாகிஸ்தான்-இந்தியா உறவுகளின் எதிர்கால திசை எப்படி இருக்க…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குதல், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு நிதியுதவி, மாநில போக்குவரத்து கழகத்தை அரசே ஏற்று நடத்தும், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.12,500, சுகாதாரத்துறை ஆஷா பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்டவை ஆகும். நாட்டிலேயே முதல் முறையாக 5 துணை முதலமைச்சர்களை நியமித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்த சூழலில் ஆந்திர மாநில போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஜெகன்மோகன் ரெட்டி அசத்தி உள்ளார். இனி தலைமைக் காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைத்து காவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் 19 மாடல் விடுமுறை முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள…
-
- 0 replies
- 816 views
-
-
இந்தியாவில் ஊழல், குடும்ப அரசியல், கொள்ளைக்குச் செக்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு! Read in English ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர், சூசகமாக தெரிவித்தார். இந்தியா | Edited by Barath Raj | Updated: August 23, 2019 16:32 IST EMAIL PRINT COMMENTS பாரீஸில் நடக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கிறார் மோடி. NEW DELHI: பிரான்ஸ் நாட்டுக்கு சுற்று…
-
- 0 replies
- 572 views
-
-
NDTV சேகரித்த விவரங்களின்படி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 111 கும்பல் தாக்குதல் (Lynching) நடந்துள்ளது. இதில் 44 பேர் உயிரிழந்துள்ளளனர். இந்த விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. Nagpur: கும்பல் தாக்குதல் (Lynching) என்பது மேற்கத்திய கலாசாரம் என்றும், அதனை இங்கு செய்து இந்தியாவின் பெயரைக் கெடுக்க வேண்டாம் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கண்டித்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது- இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்த எல்லைக்குள் மக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண…
-
- 3 replies
- 935 views
-
-
அயோத்தி தீர்ப்பு கலக்கம் தருகிறது: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு தமது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் தாம் "மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்" தெரிவித…
-
- 1 reply
- 683 views
- 1 follower
-
-
கொரோனாவை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற் உற்பத்தி உள்நாட்டில் தொடங்கியது கொரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற்றுகளைத் (Rapid Test Kit) தயாரிக்கும் பணியில் இரண்டு இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமங்களைப் பெற்று டெல்லியில் உள்ள வன்கார்ட் டயக்னொஸ்ரிக்ஸ் (Vanguard Diagnostics) என்ற நிறுவனமும், கேரளாவில் உள்ள இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனமும் ரபிற் ரெஸ்ற் கிற்றுக்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனம் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் ஒரு இலட்சம் கிற்றுக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வன்கார்ட் நிறுவனம், 3 வாரங்கள…
-
- 0 replies
- 158 views
-
-
மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் 4 வாரங்களுக்கு கொரோனா சோதனைகளை நடத்த தடை பரிசோதனை முடிவுகள் தாமதம் காரணமாக மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் அடுத்த நான்கு வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பதிவு: ஜூன் 12, 2020 07:27 AM புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. 32,810 பேர் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லி 3-வது இடத…
-
- 0 replies
- 305 views
-
-
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் "சக்கா ஜாம்" போராட்டம் புதுடெல்லி புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக ஏற்கெனவே அறிவித்தனர். அதன்படி அரியானா மாநிலம் பால்வாலில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும் 3 மணிக்கு தொடர்ந்து 1 நிமிடம் வாகனங்களில் ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சம்யுக்தா கிசான் மோர…
-
- 0 replies
- 275 views
-
-
பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம் : விவாதத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு! பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பெகாசஸ் உளவு விவகாரத்தில், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்கட்சிகள் தடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எதிர்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவில்லை. தங்கள் கடமையைத்தான் செய்கின்றன. பெகாசஸ் உளவு விவகாரம், எங்களை பொறுத்தவரை தேசியம், தேசதுரோகம், சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். இது தனிய…
-
- 0 replies
- 182 views
-
-
டெல்லி: இந்திய எம்.பி-க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ''நேருவின் இந்தியாவில் தற்போது ஊடக அறிக்கைகளின்படி, மக்களவையில் கிட்டத்தட்டப் பாதி எம்.பி-க்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார்கள் நிலுவையில் உள்ளது. மேலும் இந்திய எம்.பி-க்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றாலும், இன்னும் இந்த நிலைதான் உள்ளது'' என்று பேசியிருந்தார். சிங்கப்பூர் பிரதமரின் இப்பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளி…
-
- 25 replies
- 1.3k views
- 1 follower
-
-
இந்தியாவும் – சீனாவும் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொள்ளக் கூடாது – வாங் யி இந்தியாவும் – சீனாவும் பரஸ்பரம் உதவி செய்துக்கொள்ள வேண்டும் எனவும், ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொள்ளக் கூடாது எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த வாங் யி தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்திக் குறிப்பில், ” சீனாவும், இந்தியாவும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை. இருநாடுகளுக்கு இடையே நிலவும் மாறுபாடுகளை சரியான முறையில் கையாள வேண்டும். இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகள்தானே தவிர போட்டியாளா்கள் அல்ல. இருநாடுகளும் வெற்றிபெற பரஸ்பரம் உதவி செய்துக்கொள்ள …
-
- 0 replies
- 118 views
-
-
பாகிஸ்தானில்... தேசிய அவசரநிலை பிரகடனம்: பேரழிவு தரும் வெள்ளத்தில், ஏறக்குறைய 1,000பேர் உயிரிழப்பு! பாகிஸ்தானில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கிட்டத்தட்ட 1,000பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்குமிடமின்றி உள்ளனர். இந்த கன மழையைத் தொடர்ந்து, ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் வெள்ளத்தை ‘தேசிய அவசரநிலை’ என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, ஜூன் நடுப்பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 937 பேர் இறந்துள்ளனர். இதில் 343 குழந்தைகள் உள்ளனர். தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, இது 2010ஆம் ஆண்டு பேரழிவுகரமான வெள்ளத்தின் நினைவை மீண்டும் கொண…
-
- 2 replies
- 266 views
- 1 follower
-
-
டெல்லியில் காதலியைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் -ஆறு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, டெல்லி போலீசார் அஃப்தாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர் 52 நிமிடங்களுக்கு முன்னர் ஆறு மாதங்களுக்கு முன்பு டெல்லியின் மெஹ்ரோலி பகுதியில் நடந்த கொலை வழக்கில் துப்பு துலக்கப்பட்டுவிட்டதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்ததான குற்றச்சாட்டின்பேரில் அஃப்தாப் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மே 18 ஆம் தேதி அஃப்தாப் தனது லின் இன் பார்ட்னரான ஷ்ரத்தாவை கொன்றுவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி காட்ட…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த் பேரறிவாளன் உட்பட 7 பேரை தெரியாது என்று கூற நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தெரிவித்தார். #Rajinikanth #BJP ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆபத்தான கட்சியா என்று கேட்டதற்கு எந்த 7 பேர், எனக்கு தெரியாது, பாஜக ஆபத்தான கட்சியாக பார்த்தால் அப்படித் தான் என்று கூறினார். எந்த 7 பேர் என்று ரஜினி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தி…
-
- 4 replies
- 1.6k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதுவரை இல்லாத அளவில், இந்த ஆண்டு செப்டம்பரில் சென்செக்ஸ் 85,978 புள்ளிகள் என்ற உச்சத்தைத் தொட்டது. எழுதியவர், நாகேந்திரசாயி குந்தவரம் பதவி, வணிக ஆய்வாளர், பிபிசிக்காக அமெரிக்கா தும்மினால், இந்தியாவுக்கு ஜலதோஷம் பிடிக்கும் என்று ஒரு கூற்று உண்டு. அது பங்குச் சந்தை விஷயத்திற்கும் பொருந்தும். அமெரிக்க பங்குச் சந்தையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது நேரடியாக நமது பங்குச் சந்தையைப் பாதிக்கும். அங்குள்ள முதலீட்டாளர்களின் திட்டங்கள் மாறினால், அதுவும் நமது பங்குச் சந்தைகளையே முதலில் பாதிக்கும். பத்து ஆண்டுகளாக இதுபோன்று நடப்பது குறைந்திருந்தாலும், கடந்த மூன்று மாதங்களாக பங்க…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-