Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பஞ்சாப்புக்குள் பறந்து வந்து விழும், ஏ.கே.47 துப்பாக்கிகள்.. பாகிஸ்தான் அட்டூழியம் ட்ரோன்களின் உதவியுடன் பாகிஸ்தான் ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் இந்திய எல்லைக்குள் வீசிச் செல்கிறது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட மெகா பயிற்சி, இந்தியஎல்லையில் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இருந்தது. பல ரோந்துப் பணிகளை ஏற்பாடு செய்யப்பட்டு எல்லை கண்காணிக்கப்பட்டது.இந்த சோதனையின்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன்கள் மூலம் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஏராளமான ஏ.கே .47 துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் தூக்கிப் போடப்பட்டதாக, பஞ்சாப் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த மாத தொடக்கத்தில் இதுபோன்ற 8 சம்பவங்கள…

  2. சீன எல்லை அருகே பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க இந்தியா திட்டம் by : Dhackshala சீனாவுடன் பதற்றம் நிலவும் நிலையில் அந்நாட்டு எல்லை அருகே பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுமார் 14 கிலோ மீற்றர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அசாமின் கோபூர் மற்றும் நுமாலிகார் நகரங்களை (Gohpur and Numaligarh) இணைக்கும் வகையில் நான்குவழி சுரங்கம் (four-lane tunnel) அமைக்க மார்ச்சில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் இது சீனாவின் தாய்கு நதியின் கீழ் (Taihu Lake in Jiangsu province) 10 புள்ளி 79 கிலோ மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்ட சுரங்கபாதையைவ…

  3. பங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தல் இடம்பெறுகின்றது. December 30, 2018 பங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது. இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்காள தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதேவேளை பிரதமர் ஷேக் ஹசினா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்காள தேசிய கட்சித் தலைவர்களின் உதவியுடன் பொதுத்தேர்தலை சீர்குலைக்க முயல்கிறது என குற்றம் சுமத்தியுள்ளதனால் அங்கு பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை வங்காள தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்…

  4. பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் கடும் வெப்பம் காரணமாக சுமார் 568 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் வெப்பநிலை 49 – 50 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசிப்பதற்கு வீடுகள் இல்லாதோர் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களே அதிகளவில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பாக்கிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/304692

  5. உத்தரப் பிரதேசத்தில்... மர்மக் காய்ச்சலால், 33 குழந்தைகள் உயிரிழப்பு! உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அவர் பார்வையிட்டார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட சிகிச்சை நிலையங்கள் குறித்த மர்ம காய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதே மருத்துவமனையில் ஏறக்குறைய 30 குழந்தைகள் இந்த காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2021…

  6. அதானி வணிகத்தை மேம்படுத்துவதே இந்திய வெளியுறவு கொள்கை: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI அதானி குழுமத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி தவறான வழியில் உதவியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். அதானி குழுமம் பங்குச் சந்தையில் பெரிய அளவில் திருகு வேலை செய்தது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற சந்தை ஆய்வு நிறுவனம். இதையடுத்து அதானி நிறுவனப் பங்குகளின் மதிப்பு மோசமான சரிவை சந்தித்தது. …

  7. பட மூலாதாரம்,URMILESH படக்குறிப்பு, பத்திரிகையாளர் ஊர்மிளேஷ் 3 அக்டோபர் 2023 இன்று காலை முதல் நியூஸ்க்ளிக் என்ற செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய பல பத்திரிகையாளர்களின் வீடுகளில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரிகையாளர்களிடம் நடத்திய சோதனைக்கு பிறகு அவர்களிடமிருந்து தொலைபேசி, மடிக்கணினி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நியூஸ்க்ளிக் ஊடகத்தின் மீது டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தகவல் வெளியிட்டுள்ளது. நியூஸ்க்ளிக்குடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. …

  8. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான வித்யா பாரதி சார்பாக ராணுவ பயிற்சி பள்ளி இயக்கப்படும். இதில் பாதுகாப்பு தொடர்பான கல்வி பயிற்றுவிக்கப்படவுள்ளது. முன்னாள் ராணுவ தலைமை தளபதி ராஜூ பையா நினைவாக உத்தர பிரதேசத்தில் ராணுவ பயிற்சி பள்ளி ஒன்றை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கவுள்ளது. ஏற்கனவே அரசு சார்பில் ராணுவ பயிற்சி பள்ளிகள் நடத்தப்படும்போது புதிதாக இதை ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். புலந்த்சாகர் மாவட்டம் ஷிகார்பூரில் தொடங்கப்படவுள்ள இந்த பள்ளிக்கு 'ராஜு பையா சைனிக் வித்யா மந்திர்' என்று பெயர் சூட்டப்படும். ஆர்.எஸ்.எஸ்.-ன் கல்வி பிரிவான வித்யா பாரதி இந்த பணிகளை கவனிக்கும். இந்த பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாட…

  9. மோடியா, சோனியாவா? மீண்டும் சூடுபிடிக்கும் இந்தியத் தேர்தல் களம் எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:44 பொருளாதார தேக்க நிலைமை பற்றி, அகில இந்திய அளவில், போராட்ட அழைப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. மாநிலங்களின் அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து விவாதித்துள்ள சோனியா காந்தி, இது தொடர்பாகக் காங்கிரஸ் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று, கட்டளை பிறப்பித்திருக்கிறார். நாள்கள் நகர நகர, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டும், கடுமையான பிரசாரத்தில் ஈடுபடும் பரபரப்பான காட்சிகள், ‘வெள்ளித்திரை’யில் காணலாம் என்பது போல், தற்போது தேசிய அளவில், அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சோனியா காந்தி தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற…

  10. அக்னிபத்: வேலூரில் போராட்டம் - "இளைஞர்களின் ராணுவ கனவைக் கலைக்கும் திட்டம் இது" பிரசன்னா பிபிசி தமிழுக்காக 16 ஜூன் 2022 இந்திய அரசு தற்போது அறிவித்துள்ள "அக்னி பத்" திட்டத்தை ரத்து செய்ய கோரி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசிய கொடியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்காக ஆட்களை சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில், சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்ட…

  11. மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images விமானங்களில் அறிவிப்புகள் தமிழில் செய்யப…

  12. ஒடிசாவில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் பூட்டி உழ வைத்த கொடூரம் 15 JUL, 2025 | 10:16 AM புவனேஸ்வர்: ஒடிசாவில் ஒருசில பழங்குடி சமூகங்களில் ஒரே குலம் அல்லது கோத்திரத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கோராபுட் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் காளைகளை பூட்டுவது போல நுகத்தடியில் பூட்டி கிராம மக்கள் நிலத்தை உழச் செய்தனர். அப்போது அந்த ஜோடியை டிக்கவும் செய்தனர். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒடிசாவில் கஞ்சமஜிரா என்ற கிராமத்தில் ஒரு பெண் தனது அத்தை மகனை திருமணம் செய்து கொண்டதற்காக அவர்களை சில நாட்களுக்கு முன் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்தனர். இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற சம…

  13. இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஆதரவுக் கரம் நீட்டும் உலக நாடுகள் 27 Views இந்தியாவில் தினந்தோறும் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஓஜ்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களில் 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான், பிரான்ஸ், பூடான், ஆஸ்திரேலியா,அமெரிக்கா,சீனா மற்றும் ரஷ்சியா போன்ற நாடுகள் உதவ முன்வந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகியுள்ளமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை விரை…

  14. 08 JUL, 2024 | 11:14 AM மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 😎 காலை முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில் 300 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பை தானே பகுதியில்…

  15. திருப்பதி கோயிலில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.87.84 கோடி வருமானம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.87.84 கோடி வருமானம் உண்டியல் காணிக்கை மூலம் வந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாத உண்டியல் காணிக்கையைவிட ரூ.11.56 கோடி அதிகம் எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.76.28 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதத்தில் சுமார் 23.38 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். லட்டு பிரசாதம் 97.87 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 63.49 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. 9.82 லட்சம் ப…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஆகஸ்ட் 2023, 09:02 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பையடுத்து லாகூரில் உள்ள இல்லத்தில் இருந்த இம்ரான் கானை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி ஹுமாயுன் தில்வார், இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்…

  17. பாராளுமன்ற தேர்தலின் 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று April 23, 2019 இந்தியாவின் பாராளுமன்ற தேர்தலில் 3-வது கட்டமாக 13 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகி நடைபெறுகின்றது பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகின்ற நிலையில் முதல் கட்டமாக கடந்த 11-ம் திகதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் திகதி 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மண…

  18. இந்த ஆண்டின் முதல் காலாண்டில், கடந்த ஆறு ஆண்டுகள் காணாத 5 சதவீத ஜிடிபி வீழ்ச்சி ஏற்பட்ட பின்னர், 2019 ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.2 சதவீதமாக மேலும் சரியும் என்று எஸ்பிஐ பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2020ம் நிதியாண்டு முழுவதும் முன்பு எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதமான 6.1 சதவீதத்திற்கு பதிலாக 5 சதவீதமாக குறையலாம். “ஆனால், 2020ம் நிதியாண்டு ஜிடிபி சரிவு உலக மந்தநிலைோடு ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும்” என்று இந்த பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட…

  19. படத்தின் காப்புரிமை RITUPALLAB SAIKIA Image caption சாராயம் அருந்தியபின் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச் சாராயத்தை அருந்தியவர்களில் குறைந்தது 99 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 200க்கும் மேலானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். அவர்களில் பெண்களும் அடக்கம். பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. …

    • 1 reply
    • 755 views
  20. நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் - பிரதமர் மோடி வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி வைத்து நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் என பிரதமர் மோடி கூறினார். பதிவு: ஜூன் 18, 2020 12:30 PM புதுடெல்லி வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- எரிசக்தியில் தன்னம்பிக்கை அடைய இந்தியா இன்று "ஒரு பெரிய நடவடிக்கை" எடுத்துள்ளது.வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களின் தொடக்கமானது "ஒவ்வொரு பங்குதாரருக்கும் வெற்றி வெற்றி என்ற நிலையை கொடுக்கும். நிலக்கரிக்கான சந்தை இப்போது திறக்கப்பட்டுள்ளது. இது அனைத்து துறைகளுக்கும் உதவ…

  21. இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்!- பாகிஸ்தான் இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு துறையான ஐ.எஸ்.ஐ சம்மந்தப்பட்டிருப்பதாக இந்திய இராணுவ தளபதி அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் ராவல்பிண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை. மேலும் இந்தியாவுடன் போர் புரிவதற்கும் எங்களுக்கு விருப்பமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்…

  22. சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை”- புரட்சி நாயகன் பகத் சிங் 3 Views “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்” என்று கூறிய புத்தகப்பிரியர் புரட்சி நாயகன் பகத்சிங். தூக்கு மேடைக்குப் போவதற்கு முன் படிப்பதற்காக பத்து நிமிடம் தாருங்கள் என்று வேண்டியவரும் அவரே. இந்த புரட்சியின் நாயகனை இந்திய வரலாறு மறப்பதற்கில்லை…. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் வெளிப்படையாகப் பார்க்கின்ற போது அது அகிம்சை வழி ஏற்பட்டதென்பது உண்மை தான். ஆனால் வெள்ளையர்களுக்கு அச்சத்தை தந்தது அகிம்சை போராட்டத்தைக் கண்டு அல்ல, ஆயுதப் போராட்டத்தைக் கண்டு தான். அந்தளவிற்கு இந்த…

  23. அபிநந்தன் ஓட்டிய மிக்-21 ‘பறக்கும் சவப்பெட்டி’- 1966-ல் வாங்கிய விமானங்களால் இழந்த 200 உயிர்கள் Published : 02 Mar 2019 08:13 IST Updated : 02 Mar 2019 08:13 IST ஆர்.ஷபிமுன்னா புதுடெல்லி YouTube பாகிஸ்தானில் அபிநந்தன் சிக்க காரணமாக இருந்த மிக்-21 போர் விமானம் 1966-ல் தயாரிக்கப்பட் டது. இந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதால் அது ‘பறக்கும் சவப்பெட்டி’ என்றழைக்கப்படு கிறது. கடந்த 1966-ம் ஆண்டில் ரஷ்யா விடம் இருந்த வாங்கப்பட்டது மிக்-21 ரக போர் விமானங்கள். அப்போது உலகின் தலைசிறந்ததாகவும் பெருமை வாய்ந்ததாகவும் அமைந்திர…

  24. அமராவதி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியாவில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கார்பரேட் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என, அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். சட்டத்தில் இடம் இருக்கு! ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாவது: ஆந்திராவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். பாதிக்கப்படவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தனிமைப்படுத்…

  25. இந்தியாவில் ஒரேநாளில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன! by : Krushnamoorthy Dushanthini http://athavannews.com/wp-content/uploads/2020/10/Coronavirus-PCR.jpg இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 14.42 இலட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவரை கண்டறிவதற்கும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் அதிகளவான பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகிறது. அதிகளவிலான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் தொற்றாளர்களை விரைவில் கண்டுப்பிடிக்கவும், அவர்கள் மூலம் சமூகத்தில் பரவுவதை கட்டுப்படுத்தவும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.