நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
உங்களுக்கு என்ன நோய்? -பா. இந்திரா பிரியதர்ஷிணி- கண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். கண் இமைகளில் வலி என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவத…
-
- 0 replies
- 1.2k views
-
-
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? இதுபுத்திசாலிகளுக்கான காலம்! பிறக்கிற குழந்தை புத்திசாலி-யாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எல்லாப் பெற்-றோர்களின் கனவு! கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தாய் உணவு எடுத்துக்கொள்வது சரி; ஆனால், அது எந்த அளவுக்குக் குழந்தையின் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும்? ‘‘கரு உருவான 20&வது நாளில் வளர ஆரம்பிக்கும் மூளை, 28 &வது நாளுக்குள்ளேயே அந்தக் குழந்தை அதன் வாழ்நாள் முழு வதும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்-கான அடித்தள வேலை-கள் மொத்தத்தையும் முடித்துவிடுகிறது. இதனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே பெண் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்க…
-
- 2 replies
- 4.1k views
-
-
காய்கறிகளின் வயாகரா முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறhர்;. மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒர…
-
- 11 replies
- 3.9k views
-
-
மதுவால் வரும் கேடு மது ஓர் உணவு அல்ல. போதைப் பொருள். பதார்த்தங்கள் கெடுவதிலிருந்து தயாரிக்கும் பொருள். மிகக் கொடிய விஷம். மதுவினால் குடிகள் பல கெட்டன என்பதை நாம் அறிவோம். அகால மரணம், கொலை, திருடு, விபச்சாரம் எல்லாம் மதுவினாலேயே உண்டாகின்றன. ஞாபகசக்தியும் சிந்தனை ஆற்றலும் சிதைந்து போகும். புத்தி, நிதானம் குலைந்து மன ஒழுங்கையும் அடக்கத்தையும் சீரழித்து விடுவது மதுபானம். பெருங்குடியர்களும் யோகாசனப் பழக்கத்தினால் கொடுமை நிறைந்த இப்பழக்கத்தை விட்டொழித்திருப்பது அனுபவ உண்மையாகும். மதுவால் இரைப்பை, கல்லீரல், இரத்தக் குழாய்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் இவற்றிற்குப் பெரும் கேடு உண்டாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். பஞ்சமாதபாதங்களில் மது குடிப்பதும் ஒன்…
-
- 10 replies
- 20.2k views
-
-
ஆணுக்கு அழகு மீசை. சங்க காலத்தில் ஆண்கள் முறுக்கு மீசையுடன் வலம் வந்தனர். நாகரீகம் வளர வளர மனிதனின் நடை, உடை பாவனை மாறியது. முறுக்கு மீசையும் தொங்கு மீசையானது. வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலான பேர் மீசை இல்லாத முகத்தையே விரும்புகின்றனர். தமிழர்களில் பெரும்பாலான பேர் மீசை வைத்துக்கொள்வதை அவசியமாக கருதுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் கூட அரும்பு மீசையை தடவிப்பார்த்து `நாம பெரிய மனுசனாயிட்டோம்' என்று சந்தோஷப்பட்டுக் கொள்வதுண்டு. இப்படி பலருக்கு பல விதமான ரசனைகள் உண்டு.யாழ் கள உறுப்பினர்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? (தயவு செய்து நாட்டுக்கு இந்த கருத்து கணிப்பு தேவையா என கேட்காதீர்கள்)
-
- 43 replies
- 14.4k views
-
-
மாரடைப்பை விரட்டும் விரதம்: ஆய்வு லண்டன்: மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாதம் ஒருமுறை விரதம் இருந்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்பதுதான் இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் …
-
- 2 replies
- 1.6k views
-
-
டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்! டாக்டர் வேதமாலிகா Webdunia இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம். நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது. மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும்,…
-
- 3 replies
- 1.7k views
-
-
தூக்கம் வரவில்லையா? உடல் தளர்ந்து, கண்களும் சோர்ந்திருந்த அவரது முக்கிய பிரச்சனை 'நித்திரை வருகுதில்லை' என்பதுதான்.உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா போன்ற நோய்களும் அவருக்குத் தொல்லை கொடுக்கின்றன. "பகல் முழுதும் கதிரையில் இருந்து தூங்குவார். இரவும் எட்டு மணிக்கே படுத்திடுவார். ஆனால் எப்பவும் நித்திரை இல்லை எண்டுதான் சொல்லூர்" என்று அலட்சியமாகக் கூறினாள் கூட்டிக் கொண்டு வந்த மகள். இது அவருடைய பிரச்சனை மட்டுமல்ல. பெரும்பாலான வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைதான். பகலெல்லாம் தூங்கி விழுவது, நேர காலத்துடன் இரவு 7-8 மணிக்கே படுத்துத் தூங்குவதும், அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்து எழுந்து சிரமப்படுவதும் பல வயதானவர்ளைப் பாதிக்கும் பிரச்சனை த…
-
- 3 replies
- 2k views
-
-
குழந்தைகளின்(18 மாதம்) தலை ஏன் வியர்கிறது? கூடுதலாக நித்திரை கொள்ளும் போதுதான் அவதானிக்க முடிகிறது. இப்போது இங்கு குளிர் காலம். இருந்தும் நாங்கள் வெப்பநிலையை அதிகம் கூட்டுவதில்லை. 22 - 23 பாகை செல்சியஸ் தான் இருக்கும் இருந்தும் அவனின் தலையில் மிகவும் வியர்வை கசிந்து உள்ளது. இது சில குழந்தைகளுக்கு பொதுவென கூகிள் தேடலில் அறிந்தேன். இதுபற்றி இங்கு யாருக்காவது தெரியுமோ? நன்றி.
-
- 8 replies
- 6.3k views
-
-
கண்களும் கண்ணாடியும் பற்றி செல்வராஜ் எழுதிய மிகச் சுவையான வலைப் பதிவைப் படித்தபின் என் மூக்கு பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உணர்வு எனக்குத் தோன்றியது. ஏனென்றால் என் மூக்கோடும் தும்மலோடும் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போராடி அதற்கு ஒரு வேடிக்கையான தீர்வு இணையத் தொடர்பின் காரணமாகக் கிடைத்த கதையை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என் கைகள் துடிக்கின்றன. நினைவு தெரிந்த நாளாய் .. மூன்று, நான்கு வயது சிறுவனாய் இருந்த காலந்தொட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் நான் தும்மிக் கொண்டே துயில் எழுவேன். அடுக்கடுக்கான தும்மல்கள் ஒவ்வொரு காலையும் நாற்பது .. அறுபது .. அல்லது நுாறு தும்மல்கள். காலை எட்டுமணிக்குப் பிறகு.. நல்ல வெய்யில் ஏறிய பிறகு தும்மல் தானாக …
-
- 3 replies
- 2.2k views
-
-
பசியும் உணவுப் பழக்கங்களும் நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை இயங்கிக் கொண்டே உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன. தாயின் வயிற்றில் கருவாக, உயிர்பெற்று, கரு வளர்ச்சிக்குக் காரணமான உணவு, கருப்பையில் குழந்தையோடு வளரும் ‘நஞ்சு’ (உண்மையில் அது நஞ்சல்ல, உணவுச் சேமிப்பு கிடங்கு) மூலம் தாய் உட்கொள்ளும் உணவு குழந்தைக்கும் செல்கிறது. நஞ்சிலிருந்து வெளிப்படும் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உணவு செல்கிறது. கரு உருவாகும் பொழுது ஏற்படும் உணவுத் தேவை மரணம் வரை நிகழும் ஒரு தேவையன்றோ! நம் மூளையின் ஒரு பகுதியான கீழ்முகுளம் நம் உணவுத் தேவையை கட்டுப்படுத்தும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உறுப்பாகும். உடலிற்கு சத…
-
- 0 replies
- 963 views
-
-
வணக்கம், இன்னொரு ஆராய்ச்சி... இப்ப எங்கள் எல்லாருக்கும் இருந்திட்டு தலையிடி, காய்ச்சல் வருகிது. சிலர் அடுத்தநாள் டொக்டரிட்ட போய் காட்டுவீனம். ஆனால், பலர் அப்படி செய்வதில்லை. பேசாமல் வருத்தத்தை அனுபவித்து கஸ்டப்பட்டுக்கொண்டு இருப்பீனம். இல்லாட்டி தங்கட பாட்டில ஏதாவது மருந்து குளிகைகளை போடுவீனம். இப்படி போடப்படுகிற மருந்துக் குளிகைகளில பிரபல்யமானது பனடோ, தைலனோ, அஸ்பிரின்.. இவை.. நான் உடனடியாக மருந்து குளிகைகள் போடுவதில்லை. டொக்டரிட்டையும் போவதில்லை. வருத்தம் ஓரளவு துன்பம் தரத்தொடங்கியதும் முதலில் பனடோல் அல்லது தைலனோலை நாடுவேன். வருத்தம் எக்கச்சக்கமாய் முத்தியபின் தான் டொக்டரிடம் ஓடுவது. ஆ... அந்த அனுபவம் பயங்கரமானது... உடம்பில குளிர் ஊதல் அடிக்க.. …
-
- 19 replies
- 6k views
-
-
வணக்கம், ஒரு சிறிய ஆராய்ச்சி.. உங்களுக்கு வாயில் சூட்டுப்பரு வருவதற்கான காரணங்கள் என்ன என்று தெரியுமா? வாய் என்றால் நாக்கு, உள்சொண்டுகள், முரசு.. இப்படி வாயினுள் காணப்படும் பகுதிகளில் காயம் மாதிரி வந்து துன்பம் ஏற்படுதல். பலர் குளிக்காவிட்டால் சூட்டுப்பரு வரும் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள், குளிக்காவிட்டால் சூட்டுப்பரு போடும் என்று சொல்வார்கள். ஆனால், இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், நான் ஆகக்குறைந்தது ஒன்றுவிட்ட ஒரு நாளாவது குளிப்பேன். ஆனால், எனக்கு இருந்திட்டு சூட்டுப்பரு வரும். பல வருடங்களாக நான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சூட்டுப்பரு வருவதற்கான அடிப்படைக் காரணங்களாக கீழ்வருபவை உள்ளன. ஆளுக்கு ஆள், இதற்கான காரணிகள் வேறுபடலாம்.…
-
- 2 replies
- 5.1k views
-
-
உண்ணாநோன்பு மருத்துவம் - பேராசிரியர் யூரி நிக்கோலயேவ் உண்ணாநோன்பு மருத்துவம் மிகப் புராதனமானதோர் இந்தியமுறையாகும். இப்போது மீண்டும் அது ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்று ரூசிய நாட்டிலிருந்து இந்தியா வந்துள்ளது என்று நான் ஒருமுறை இந்தியாவுக்கு வந்திருந்த போது பல இந்திய மருத்துவர்கள் என்னிடம் கூறினர். உண்ணாநோன்பு மருத்துவம் பல நோய்களுக்கான மருத்துவமுறையாக நெடுங் காலத்திற்கு முன்னரே எகிப்து, இந்தியா, கிரோக்கதேசம், ஆகிய நாடுகளில் வழங்கிவந்தது. வரலாற்றிற்கு முற்பட்ட புராதன - மிகப் பழங்காலத்திலேயே மக்கள் இந்த முறையை கடைப்பிடித்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. விலங்குகளின் உடல்நலம் கெட்டால், உடல் நலம் சீரடையும் வரை, அவை தாமாகவே உணவு ஏற்பதை நிறுத்தி விடுக…
-
- 0 replies
- 1.2k views
-
-
நீரிழிவு நோய்க்கும் வைட்டமின் B1 க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்னும் அரிய கண்டுபிடிப்பை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். மருத்துவ வரலாற்றிலேயே நீரிழிவு நோய்க்கும் ஒரு வைட்டமின் சத்துக்கும் இடையே உள்ள தொடர்பைச் சொல்லும் முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத் தக்கது. நீரிழிவு நோய் இருப்பவர்களின் உடலில் இருந்து இந்த உயிர்ச்சத்து பதினைந்து மடங்கு அதிகமாய் வெளியேறுவதால் தான் உடலில் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த சத்து நீரிழிவு நோயாளிகளை விட்டு வெளியேறாமல் இருந்தால் இதயம், கண், சிறுநீரகங்கள், நரம்பு போன்ற நோய்கள் இவர்களைத் தாக்கும் பாதிப்பு குறைவு என்றும் இவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இறைச்சி, தானிய வகைகள் போன்றவற்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ஈகரை இணையதளம் வழங்கும் காய்கறி மருத்துவம் கசப்பு அமுதம் பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறhர்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறhக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும். இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை…
-
- 0 replies
- 4.2k views
-
-
********
-
- 1 reply
- 1.4k views
-
-
தினமும் காப்பி குடித்தால்... புற்றுநோயும் வராதாம்...! சர்க்கரை நோயும் வராதாம்! புற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காப்பி குடிக்க வேண்டுமாம். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் “ஆண்டி ஆக்சிடென்ட்” காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக காப்பியிலு…
-
- 13 replies
- 3.1k views
-
-
-
-
இரத்த அழுத்தம் இரத்த அழுத்தம் என்றால் என்ன…?உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது…? பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன. இதில் இரண்டு வகை சொல்கிறார்களே (அதாவது ரீடிங்) …
-
- 1 reply
- 1.5k views
-
-
குண்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பை தாங்கும் சக்தி அதிகமென்கிறது மருத்துவ ஆய்வு மாரடைப்பு வந்தபின்னர், ஒல்லியாக இருக்கும் நபர்களைவிட, குண்டாக இருப்பவர்களால் எளிதாகத் தாங்க முடிகிறது. அவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள டேவிட் ஷெபன் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள். ஒரு மனிதனின் பி.எம்.ஐ. என்று சொல்லப்படும், எடை, உயர கூட்டு அளவைக்கும், அவர் மாரடைப்பால் பாதிக்கும் போது அளிக்கப்படும் சிகிச்சைக்கும் தொடர்பு உள்ளது என்று இப்போது தான் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டாக இருந்தால், அவர்களுக்கு இருதயக் கோளாறு நிச்சயம் என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம், மருத்துவமனையில் மாரடைப்புக்காக சேர்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின…
-
- 33 replies
- 10.2k views
-
-
அழகுக் குறிப்புகள் தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். -------------------------------------------------------------------------------- ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். -------------------------------------------------------------------------------- முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். -----…
-
- 4 replies
- 2.3k views
-