Jump to content

தாய் நலனே சேய் நலன்


Recommended Posts

தாய் நலனே சேய் நலன்

--------------------------------------------------------------------------------

cri

"தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை" என்பார்கள். "அன்னை ஓர் ஆலையம்" என்று தாயை கோவிலாக போற்றும் வழக்கம் என்றுமே இருந்து வருகிறது. தாய் தான் குடும்பத்தை அரவணைத்து செல்பவராக உலா வருகிறார். தந்தை இல்லாத குடும்பத்தை நினைத்து பார்த்தாலும் தாய் இல்லாத கும்பத்தை நினைத்து பார்க்க முடியாது. தாய் தந்தையையின் அரவணைப்போடு வளரும் குழந்தையும், அவர்களின் இணைந்த திட்டத்தின்படி அமையும் குடும்பமும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இல்லறத்தின் நிறைவாக குழந்தைகள் பாவிக்கப்படுகின்றனர். குழந்தைகளே குடும்பத்தின் மகிழ்ச்சி. எவ்வளவு தான் கடினமான வேலைகளை செய்து களைத்து வந்தாலும் குழந்தையின் மழலை சொல் குடும்ப தலைவருக்கு புத்துணர்ச்சியை தரும். தனது குழந்தை தன்னை அப்பா.. என முதன்முதலில் அழைத்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் இரண்டு மூன்று நாள் அலுவலகத்திற்கே செல்லாத தந்தையர்கள் நம்மிடம் உண்டு.

"தாய் இல்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நானில்லை"

என்று தாயின் பெருமையை போற்றாத நாவில்லை. காரணம் குழந்தைகளை பராமரிப்பதன் பெரும் பொறுப்பு தாயை சென்றடைகிறது என்றால் மிகையாகாது. குழந்தைளை கவனித்து வளர்ப்பது பற்றிய நுணுக்கமும், பொறுமையும், கனிவும் தாயை போல் எவரிடமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு குழந்தையை பராமரிக்கும் தாய் அதற்கு மருந்தூட்ட, தான் மருந்துகளை சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளார். குழந்தையை பராமரிக்கும் தாயின் உடல் நலமும் மிக மிக முக்கியமாகும்.

எனவே மகப்பேறு காலங்களில் பெண்களின் உடல் நலத்தில் அதிக அக்கறை என்பது மிக அவசியமானது. நலமான தாய் தான் நலமான குழந்தையை இச்சமுதாயத்திற்கு தர முடியும். அப்படிப்பட்ட தாயின் நலனை முன்னேற்ற நிறுவனங்களும், அரசுகளும் இன்னும் பல புதிய தனிச்சலுகைகளை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் ஆங்காங்கு எழுப்பப்படுகின்றன. சீனா, உலகின் 20 விழுக்காட்டு பெண்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி சீன தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நலமுடன் பாலூட்ட அதிக மகபேறு விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென்று பிரபல குழந்தை மருத்துவரும், சீன மருத்துவ அமைப்பின் கீழுள்ள குழந்தைகள் நலக்குழுவின் தலைவருமான Ding Zongyi பரிந்துரைக்கிறார். "தற்போது சீனா, உலக சுகாதார அமைப்பின் வழிமுறைகளை பின்பற்றுகிறது. உலக அளவில் அதிக பாலூட்டும் தாய்மார்களை கொண்டிருக்கிறது. ஆனால் அது கொண்டிருக்கும் இன்றைய கோட்பாடுகள் புதிய தாய்மார்களுக்கு போதுமான அக்கறையை உறுதி செய்யவில்லை" என்று Ding Zongyi கூறுகிறார்.

குழந்தைகளுக்கு ஊட்டப்படும் தொடக்ககால உணவு மிக முக்கியமானது. அது தாய்பாலை தவிர வேறில்லை. குழந்தைகள் எல்லா ஊட்டசத்துகளையும் பெற்று, நலமுடன் வளர்வதற்கு சிறந்த வழி தாய்பால் மட்டுமே என்பதால், முதல் ஆறு மாதங்கள் குழந்தைகளுக்கு அதிகமாகவே தாய் பாலூட்ட உலக சுகதார அமைப்பு வலியுறுத்துகிறது.

பெண்களின் மகப்பேறு சம்பந்தப்பட்ட காலங்களில் அவர்களுடைய வேலையிலிருந்து விடுப்பு பெற சட்டப்படி அனுமதி உள்ளது. சீன சட்டப்படி 90 நாட்களுக்கு குறையாத மகப்பேற்று விடுமுறையும், 15 நாட்களுக்கு மேலாகாத பிரசவத்துக்கு முன்னான விடுமுறையும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் முதிய வயதில் மகப்பேறு, பிரசவம் நடைபெற்ற முறைகள் மற்றும் அறுவை சிகிச்சை என்றால் அதற்கான ஓய்வு ஆகிய பல்வேறு சூழல்களின் அடிப்படையில் 30 முதல் 40 நாட்கள் வரை மேலும் விடுமுறை அளிக்கப்பட அனுமதியுள்ளது.

இவை போதுமானது அல்ல என விளக்கும் Ding Zongyi, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை நிறைவேற்ற புதிய தாய்மார்களுக்கு 6 திங்கள் மகப்பேறு கால விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்கள் செய்யும் வேலை, தாய்பாலின் தரத்தை பாதிக்கும் என்று சைனா டெய்லி நாளேட்டிற்கு பேட்டியளித்தபோது கூறினார். நலமான, மகிழ்ச்சியான தாய் மிகவும் சத்தான பாலை தனது குழந்தைக்கு ஊட்ட முடியும். எனவே அவருடைய நலன் பேணும் அனைத்து செயல்களும் ஆதரிக்கப்பட வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் வேலை செய்தால், ஒவ்வொரு நாளும் ஏற்படும் களைப்பு, விரக்தி, பதட்டம், மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவை குழந்தையின் தார்மீக உணவான தாய்பாலை பாதிப்பது நிச்சயம். இப்படிப்பட்ட நெருக்கடிகளில் தவிக்கும் பல தாய்மார்கள் தங்களையும் சரியாக பேணி பராமரித்து கொள்ளாமல்;, தனது குழந்தைகளுக்கு கொடுக்க போதுமான தாய்பால் சுரக்கமல் அவதிப்படுவதும் உண்டு.

வேலை செய்கின்ற தாய்மார்கள் பாலூட்டுவதில் அதிக சிரமத்தை மேற்கொள்கின்றனர். தாய் வேலை செய்வதால் பிஞ்சு குழந்தை காலையிலிருந்து மாலை வரை தாயிடமிருந்து பிரிக்கப்படுகிறது. தாயை பிரிந்த குழந்தை அவரை நினைத்தே ஏங்கி தவித்திருக்க, வேலைக்கு சென்ற தாய், குழந்தையை நினைத்தே ஏங்கி கொண்டிருப்பார். வேலையிலும் தனது முழுக்கவனத்தையும் செலுத்த முடியாமல் துன்பப்படுவார். அடுத்ததாக குடும்பத்தோடு வெளியே செல்கின்றபோது குழந்தைக்கு பாலூட்ட பல நடைமுறை பிரச்சனைகளை தாய் தான் சந்திக்க வேண்டியுள்ளது. குழந்தைக்கு பாலூட்ட மறைமுக இடம் தேடி பரபரப்பின்றி அமைதியாக குழந்தையை பேணுவது என்பது பயணக் நேரங்களில் கடினமானது. அப்படியானால் ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் எப்படி குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுவது?

இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்ட Ding Zongyi, இந்நிலைமைகள் மாற்றப்படுவதற்கு சில ஆலோசனைகள் வழங்குகிறார். மகப்பேறு கால விடுமுறை ஒழுங்குகள் மாற்றப்படுவதற்கு முன்னால் தொழில் நிர்வாகங்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு வாகன போக்குவரத்து ஏற்பாடு செய்ய முதலாளிகளை தூண்டுவதோடு, பாலூட்டுவதற்காக தனிஅறை ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். இவை அனைத்தும் புதிய தாய்மார்களின் நலனுக்காகவே. இத்தகைய முயற்சிகள் பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதிய அளவில் பாலூட்டுவதை ஊக்கப்படுத்தும். Ding யின் இக்கருத்துக்கள் தாயாக போகின்ற பெண்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Ding யினுடைய பல தோழிகள் அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டுமென்பதற்காக தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதை நிறுத்திவிட்டனர். அவர்களிடன் குழந்தைகளுக்கு அதிகமாக பாலூட்ட வலியுறுத்திய பின்னரும் பணி அழுத்தத்தால் அவ்வாறு செய்தனர்" என்று Ding தெரிவித்தார்.

ஷாங்காயிலுள்ள 19 மாத பெண் குழந்தையின் தாயான Renee Wang "இவ்வாறு வேலை செய்துகொண்டு குழந்தைக்கு பாலூட்டுவது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவமில்லாதவர்கள் கற்பனை செய்யவே முடியாது" என்று கூறியுள்ளார். Shenxhen னில் உள்ள பொதுத்துறைப்பணியாளர் Yang Min "பெண்களுக்கு 6 திங்கள் மகப்பேறு கால விடுமுறை என்பது மிகவும் உகந்தது" என்றார். "தாய் பாலூட்டுவது குழந்தைக்கும் தாய்க்கும் நல்லது. எனது குழந்தைக்கு அது விரும்பும் வரை தாய் பாலூட்ட முடியும் என நான் நம்புகிறேன்" என்று டிசம்பர் கடைசியில் பிரசவத்திற்காக காத்திருக்கும் தாய் ஒருவர் கூறியுள்ளார்.

தாய் பாலூட்டவது என்பது குழந்தைக்கு தேவைப்படும் ஊட்டசத்தை வெறுமனே வழங்குவது அல்ல. மாறாக தாய் தனது இரத்தத்தையே வழங்குவது. அத்தோடு பாசம், நேசம், பண்பு, பாதுகாப்பு, வீரம் ஆகிய உணர்வுகள் அனைத்தையும் ஒருசேர வழங்குவதாகும். எனவே குழந்தையின் இக்கால வாழ்க்கை பகுதி மிக முக்கியமானது. இதை தாயின்றி வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை பெருளுள்ள அளவில் நிறைவேற்ற போதுமான அவகாசம் தாய்மார்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் தானே.

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காத உலகில்லையே"

http://tamil.cri.cn/1/2007/12/10/62@64093.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
    • தமிழனுக்கு ஒரு பிடி உரிமையும் கொடுக்க முடியாது என்ற இனத்துவேசம் இன்று இலங்கை இந்தியாவின் மாகாணம் போல் ஏர்போர்ட் முதல் அனைத்திலும் தாரை வார்த்து கொடுத்துள்ளார்கள்  இந்தக்கால சிங்கள மதன முத்தாக்கள் . பகிடி என்னவென்றால் அதானி குழுமம் 20 வருடத்துக்கு ஒப்பந்தம் ஆம் அவ்வளவு காலம் இந்தியாவை சைனா காரன் விட்டு வைப்பானா ? மேலே கொச்சி தூள் கொட்டப்பட்டு உள்ளது அவரவர் அதை எடுத்து கொள்ளும் முறையில் உள்ளது .😃
    • என்னப்பனே எல்லோருக்கும் நல்ல அறிவையும் வாழ்க்கையும் கொடு...🙏🏼 அவர்கள் தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருள்வாயாக....🙏🏼
    • 👍..... மூன்று கிழமைகள் ஊர் போயிருந்தேன். திரும்பி வந்தவுடன் கொஞ்சம் அசதியாகப் போய் விட்டது....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.