Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. இப்போது ஆணுறை முக்கிய கருத்தடை சாதனமாக இருந்து வருகிறது. இது நோயை தடுப்பதுடன், கருத்தரிப்பையும் தடுக்கிறது.ஆனால் ஆணுறையால் முழுமையான பயன் கிடைப்பதில்லை. ஆணுறை பயன்படுத்தினாலும், 18 சதவீதம் கர்ப்பம் உருவாகி விடுகிறது.மேம்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்களை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ரொனால்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.அதில் புதிய வகை கருத்தடை மருந்து ஒன்றை உருவாக்கி உள்ளனர். ஸ்டீரின் அல்மாலிக் ஆசிட் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மருந்து சிறந்த கருத்தடை மருந்தாக செயல்படுகிறது. இதை முயல்களுக்கு கொடுத்து சோதனை நடத்தினார்கள். அப்போது அது வெற்றிகரமாக செயல்பட்டது. இந்த மருந்தை பயன்படுத்த…

  2. உடலில் செரிமானம் சீராக நடைபெறுவதில் குடல்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. உங்கள் குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், செரிமானம் மீண்டலம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் உடலிலேலே குடலில் அதிக கழிவுகள் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் இதன் வழியாகத் தான் உடலின் அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகிறது. கழிவுகள் வெளியேற்றப்பட்டால் தான் உடலால் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியும். எனவே அத்தகைய குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். குடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கேட்கிறீர்களா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. டிப்ஸ் #1 …

  3. சாக்லெட் சாப்பிடுவது உடலுக்கு கெடுதலா? சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி டார்க் சாக்லெட்டைச் சாப்பிடுவது நல்லது எனத் தெரியவந்திருக்கிறது. சாக்லெட் உடலுக்கு கெடுதியானது. அதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பு, பற்சொத்தை, சக்கரை நோய் உட்பட பல உபாதைகள் வந்துச்சேரும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளோ, இதற்கு மாறான தகவல்களை வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன் மக்களே அதிகமான சாக்லெட்டை சாப்பிடுபவர்கள் என ஆய்வொன்று தெரிவிக்கிறது. பிரிட்டனில் இருக்கும் ஆறு பேரில் ஒருவர், சாக்லெட் சாப்பிடுவது வழமை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இதை ஒரு இலகுவான உணவாகவும் அனைவரும் பார்க்கின்றனர். டார்…

  4. இன்றைய நவீனஉலகமும், இயந்திரத்தனமான வாழ்க்கையும் அத்தகைய உணவு பழக்கத்தை நம்மை விட்டு தள்ளி விட்டுள்ளது. அதனால்தான், வாழ்க்கையின் குறிப்பிட்ட நாட்களை மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகிறோம். அந்த வகையில் நமது முன்னோர்களின் உணவில் முக்கிய பங்கு வகித்த வெந்தயத்தின் மகிமை அலாதியானது. வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் கு…

  5. இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல்தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான். அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம். தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று. சரி, இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம். * நோயெதிர்…

  6. வளரும் இளம் பெண்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவினை பொறுத்து அழகாக ஜொலிக்கலாம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில் பழங்கள், காய்கறிகளை அதிகளவில் எடுத்துக்கொண்டால் அதில் நிறைந்துள்ள இயற்கை சத்துக்கள் உங்கள் உடம்பில் உள்ள திசுக்களை வளர்ச்சிடைய செய்து, தோல்களின் பளபளப்புக்கு உதவுகின்றன. என்ன சாப்பிடலாம்..? 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல் 15 வயது வரையில் உள்ளவர்கள் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தினமும் 290 முதல் 350 கிராம் வரையிலும் தானியங்கள், தினை, சாமை உணவு வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். புரோட்டின் நி…

  7. நகம் என்றால் கடிப்பதற்கும், ராவி விடுவதற்கும், பாலீஷ் போட்டுக் கொள்ளவும்தான் என்று சிலர் நினைக்கலாம். உண்மையில் அது அனேக வியப்பிற்குரிய விஷயங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே 'இன்ன நோய்' என்று சொல்லிவிடுவார்கள். நுண்மையான, நரம்பு கூட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், 'புரோட்டீன் _ கெராட்டீன்' என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது. நகங்கள்…

    • 17 replies
    • 13.9k views
  8. * புற்றுநோய் பரவுவதை தடுக்கும். * மலச்சிக்கலைப் போக்கும். * பித்தத்தைக் குறைக்கும் * அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும். * கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும். அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது. ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பர…

  9. கொய்யா பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. அடங்கியுள்ள சத்துக்கள் கொலஸ்ட்ரால் கிடையாது, சோடியம் – 3 மிகி, பொட்டாசியம் 417 மிகி, கார்போஹைட்ரேட் 14 கி, புரோட்டின் 2.6 கி, விட்டமின் ஏ 12 சதவீதம், கால்வியம், விட்டமின் D, விட்டமின் B12 , விட்டமின் C, இரும்புச்சத்து, விட்டமின் B6, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பயன்கள் கொய்யா பழத்தை நன்றாக கழுவிய பிறகு, பற்களால் கடித்து நன்கு மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத விட்டமின் சி என்ற உயிர்ச்சத்து, இப…

  10. தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர போகாது அப்படியே இருக்கும். அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி முடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது எ…

  11. நீங்கள் இன்று எப்படி உணர்கிறீர்கள்? ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பது போல் உணர்கிறீர்களா? இல்லையெனில், நீங்கள் மன அழுத்தத்திற்கு அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டால், எதிலும் சரியாக கவனத்தை செலுத்த முடியாமல் இருப்பதோடு, அதனாலேயே உடலினுள் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பமாகிவிடும். அப்படி உங்கள் உடலில் பிரச்சனைகள் ஆரம்பமாகியிருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளைக் கொண்டே நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால், தீவிர பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உங்களுக்கு அந்த அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். …

  12. ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்! இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில்…

    • 4 replies
    • 3.3k views
  13. என்றென்றும் இளமையாக இருக்க உதவும் பானங்கள் [ ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, 02:05.38 மு.ப GMT ] இளமையிலேயே ஏன் முதுமையான தோற்றம் வருகிறது என்று தெரியுமா? ஏனெனில் நமது உடலில் இருக்கும் டாக்ஸின்கள் சரியாக உடலில் இருந்து வெளியேற்றப்படுவதில்லை. இதனால் உடலில் அவை தங்கி முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய அமிலத்தன்மை மிக்க டாக்ஸின்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டால் தான், உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும். மேலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் டயட் காரணமாகவும், இளமையிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. ஆகவே என்ன தான் ஆரோக்கியமான உணவுகளான பிராக்கோலி, முட்…

  14. வேலை, பொருளாதார நிலை, வாழ்வியல், கலாச்சார மாற்றம், ஃபேஷன் என்ற பெயரில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஒருசில வருடங்கள் தம்பதிகள் தள்ளிப் போடுவதுண்டு. சிலர் தங்களது இளம் வயதை அல்லது திருமணத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தை அனுபவிக்கிறோம் என்ற பெயரிலும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார்கள். இதில் என்ன இருக்கிறது என நீங்கள் எண்ணலாம், ஆனால், தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வதால் பெண்களுக்கு நாளடைவில் இதய நலன் மோசமடைகிறது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.. இதய நலன் 30 – 35 வயதுக்கு மேல் குழந்தை குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்களுக்கு இதய நலன் குறைபாடு, மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கிறது என சமீபத்திய ஆய்வில் தெரியவந…

  15. புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான செயலி அறிமுகம் புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிய, மருத்துவர்களுக்கு உதவும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புற்றுநோயை கண்டுபிடிக்க ஒரு ஆப்ஸ் அறிமுகம் புற்றுநோய் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளிடமிருந்து குறிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும், அறிகுறிகள் மற்றும் தடயங்களை சுகாதார அதிகாரிகள் இனம் கண்டு கொள்ளவும், இந்த செயலி வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக உள்ளது. இந்த செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள தொழில்நுட்பத்திற்கான ஸ்காட்டிஷ் மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயல…

  16. அதிக எடை : நினைவாற்றல் குறையும் அபாயம் உடல் எடை அதிகமாக உள்ளவர்களின் நினைவாற்றல் மற்றும் திறமை குறைவாக இருக்குமென அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலுள்ள கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திலுள்ள ஆய்வாளர்கள் 18 தொடக்கம் 35 வயதிற்குட்பட்டவர்களின் நிறை அவர்களின் தினசரி ஞாபகசக்தி என்பவற்றை ஆய்வுக்குட்படுத்தினர். இதில் அதிக எடை கொண்டவர்களின் ஞாபகசக்தி குறைந்து காணப்பட்டது. அதிக எடை கொண்டவர்கள் அடிக்கடி உணவு சாப்பிட்டதால் அவர்கள் தமது சிந்திக்கும் திறனை இழந்துள்ளார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குண்டானவர்கள் கற்பது மற்றும் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.virakesari…

  17. இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அத…

  18. “சோதனைக்கூட விந்தணுக்கள் மூலம் குழந்தைகள் சாத்தியம்” சோதனைக்கூடத்தில் விந்தணுக்கள் உருவாக்கி சாதனை செய்திருப்பதாக சீன விஞ்ஞானிகள் அறிவிப்பு குருத்தணுவில் இருந்து சோதனைக்கூடத்தில் விந்தணுவை உருவாக்கி அதன் மூலம் ஆரோக்கியமான குட்டி/ழந்தைகளை உருவாக்க முடியும் என்பதற்கான சாத்தியத்தை தாங்கள் நிரூபித்திருப்பதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். விலங்குகளின் உடலுக்கு வெளியே விந்தணுக்களை உருவாக்கியிருப்பதும் அதன்மூலம் கருவூட்டப்பட்டு பிறந்த எலிக் குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பதும் விஞ்ஞான உலகில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சுண்டெலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் ஆரோக்கியமான சுண்டெலிக்குட்டிகள் பிறந்திருப்பதாகவும் இதனை மனிதர்கள…

  19. போத்தல் தண்ணீர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக் கணக்கான ரூபாய்கள் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார் எனும் நபர். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார். ''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவா்கள், செம்புப் பாத்திரத்துல தண்ணீரை வைத்து ஒரு ஆராய்ச்சி நடாத்தினார்கள். அதனது முடிவுப்படி, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது. இந்தத் தகவல் அறிய…

  20. லண்டனில் விற்கப்படும் ஆபத்தான தோலை வெண்மையாக்கும் கிரீம்கள் லண்டனில் விற்கப்படும் ஆயிரக்கணக்கான தோலை வெண்மையாக்கும் கிரீம்களில் உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. இத்தகைய கிரீம்களில் இருக்கும் வேதிப்பொருட்களின் விவரங்கள் அவற்றின் மேலட்டைகளில் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து குறித்து பரவலாக தெரிவதில்லை. இந்த கிரீம்களில் ஹைட்ரோகுய்னான் என்கிற ஆபத்தான வேதிப்பொருள் இருக்கிறது. ஐரோப்பாவில் இது தடை செய்யப்பட்ட வேதிப்பொருள். காரணம், அது தோல் பிரச்சனைகளையும் அதைவிட மோசமான உடல்நல ஆபத்துக்களையும் உண்டாக்கவல்லது. ஆனால் லண்டன்…

  21. கட்டுமஸ்தான உடல் கட்டமைப்பை மெருகேற்ற ஆண்களுக்கான உணவு வகை! [Thursday 2016-02-18 07:00] பெண்கள் பொதுவாக அழகை மேம்படுத்த பல அழகு சாதனங்களைப் பயன்படுத்தி தோற்றத்தை மெருகேற்றுவர். ஆனால் ஆண்கள் தங்கள் அழகை வெளிக்காட்ட, உடல் கட்டமைப்பை மெருகேற்ற எண்ணுவார்கள். அதையே தான் பெண்களும் ஆண்களிடம் விரும்புகிறார்கள். அதனால் ஆண்கள் சல்மான் கான் போல், உடம்பை ஏற்ற மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிடுகிறார்கள். நல்ல உடல்கட்டு வேண்டும் என்று எண்ணுபவர்கள் எப்போதும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. seithy.com உடல் கட்டமைப்பில் உண்ணும் உணவும் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆகவே போதிய உடற்பயிற்சியுடன், சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். உடற்பயி…

  22. கொழுப்பு உணவு, முட்டை சாப்பிடுவதால் மாரடைப்பு வராது: புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு கோப்பு படம் அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவும், முட்டைகளும் சாப்பிடு வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. திடீரென ஏற்படும் மாரடைப் புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கிழக்கு பின்லாந்து பல்கலைக் கழகத்தில் உள்ள இதய நோய் பாதிப்புக்கான காரணி குறித்த ஆய்வு 1984 முதல் 1989 வரை நடத்தப்பட்டது. இதய நோய் பாதிப்பு இல்லாத மிகுந்த ஆரோக் கியமான 42 முதல் 60 வயது நிரம்பிய 1,032 ஆண்களின் தினசரி உணவு பழக்க வழக்கத்தை வைத்து ஆய்வு மேற…

  23. சாப்பிடும் போது தண்ணீர் பருகினால் என்ன ஆகும் ……….. Posted By: ShanthiniPosted date: February 12, 2016in: ஆரோக்கியம் உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும். வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக, உணவோடு சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப்படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை அரைக்க உதவும். …

    • 0 replies
    • 362 views
  24. நீரிழிவையும் இதயநோயையும் தரும் “பரோட்டா” பரோட்டா சாப்பிடுவதால், இதய நோயும், நீரிழிவு நோயும் வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பரோட்டா தமிழர்களின் அன்றாட உணவு என்று சொல்ல முடியாவிட்டாலும், அடிக்கடி உண்ணக் கூடிய உணவாக மாறிவிட்டது. பரோட்டாக்கள் மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. மைதாவை பதப்படுத்தும் போது சேர்க்கப்படும் இராசயனப் பொருட்கள் நீரிழிவு நோயையும், இதய நோயையும் ஏற்படுத்தவல்லவை என்பதால் மைதாவை தவிர்ப்பது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். மரபணுக்கள் உடல்பருமனை தூண்டுகின்றன. Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு பின்னணியில் இருக்கும் குறிபிட்ட மரபணுக்களை லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். உலக அளவில் ஆற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.