நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
அடி வயிற்று கொழுப்பை கரைக்கும் அற்புத வீட்டு வைத்தியம்!
-
- 0 replies
- 481 views
-
-
உண்ணாவிரதம் இதய நோய்களை குறைக்கும் மாதத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் கடைபிடித்தால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உண்ணாவிரதம் தொடர்பாக யுடா பகுதியைச் சேர்ந்த 200 நபர்களின் ஆரோக்கியம் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் போது நடத்தப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளாத நபர்களில் 75 சதவீதத்தினருக்கு ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் குறுகி இருப்பது தெரியவந்தது. ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் இதயத்தில் இருந்து உடலின் இதர உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய் ஆகும். ஆர்ட்ரிஸ் குழாய்கள் குறுகினால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் …
-
- 0 replies
- 481 views
-
-
வேலை, பொருளாதார நிலை, வாழ்வியல், கலாச்சார மாற்றம், ஃபேஷன் என்ற பெயரில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஒருசில வருடங்கள் தம்பதிகள் தள்ளிப் போடுவதுண்டு. சிலர் தங்களது இளம் வயதை அல்லது திருமணத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தை அனுபவிக்கிறோம் என்ற பெயரிலும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார்கள். இதில் என்ன இருக்கிறது என நீங்கள் எண்ணலாம், ஆனால், தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வதால் பெண்களுக்கு நாளடைவில் இதய நலன் மோசமடைகிறது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.. இதய நலன் 30 – 35 வயதுக்கு மேல் குழந்தை குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்களுக்கு இதய நலன் குறைபாடு, மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கிறது என சமீபத்திய ஆய்வில் தெரியவந…
-
- 1 reply
- 481 views
-
-
ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்து பேசியபடி இருசக்கர வாகனத்தில் வாலிபர் சென்ற போது செல்போன் வெடித்ததில், அவர் படுகாயம் அடைந்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. "கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புலியரசியை அடுத்த குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). இவர் நேற்று காலை சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணிந்தபடி சென்ற அவர், செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்றார். அப்போது அதிக வெப்பம் காரணமாக செல்போன் திடீரென்று வெடித்தது. இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர…
-
- 0 replies
- 480 views
-
-
அன்றாட உணவில் காய், கனிகளின் அளவே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம் என்கிறார்கள் சுமார் 65 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்திருக்கும் இந்த விஞ்ஞானிகள். இதுநாள்வரை ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்காவது காய்கறி மற்றும் பழங்களை உண்ணவேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 560 கிராம், அதாவது அரைகிலோவுக்கும் அதிகமாக…
-
- 1 reply
- 480 views
-
-
பல் துலக்கும் பிரஷ்களில் இத்தனை வகைகளா? - பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES 17 மார்ச் 2023, 03:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகளவில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படும் பிரச்னைகளில் முதன்மையானதாக பல் மற்றும் வாய் சம்பந்தபட்ட நோய்கள் இருக்கின்றன. 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேலான மக்கள் பல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் தெரிவிக்கிறது. குறிப்பாக மிகவும் பின்னடைந்திருக்கும் நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும்தான் மக்…
-
- 0 replies
- 480 views
- 1 follower
-
-
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி செய்யும் ஹார்மோனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது இவர்களுக்கு “இன்சுலின்” மருந்து மட்டுமே வரபிரசாதமாக உள்ளது. இதற்கு மாற்று வழியை கண்டு பிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் ரத்தத்தில் “குளுகோஸ்” அளவை குறைக்கும் ஹார்மோனை கண்டுபிடித்துள்ளனர். முதல் கட்டமாக இந்த ஹார்மோனை எலிக்கு சோதனை செய்து பார்த்து வெற்றியடைந்துள்ளனர். இதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கும் முயற்சியில் விஞ்ஞானி ஜொனாதன் க்ராப் தலைமை…
-
- 0 replies
- 480 views
-
-
உணவுகளில் வாசனைப் பொருளாக பயன்படுத்தும் ஏலக்காயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஏலக்காயில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது. ஏலக்காயை தேநீர் பாயாசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் அதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது. ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் இதி…
-
- 0 replies
- 480 views
-
-
[size=4]பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும்.[/size] [size=4]இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே. 'மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்' என்கிறார் இவர்.[/size] [size=4]இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, 'ஹைப்போகிளைசீமிக்' (ரத்தத்…
-
- 0 replies
- 480 views
-
-
நமது மூளையைப் பாதிக்க நாமே செய்யும் 10 கெடுதல்கல்! [Friday 2016-01-08 00:00] 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2.மிக அதிகமாகச் சாப்பிடுவதுஇது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு …
-
- 0 replies
- 480 views
-
-
கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவது ஏன்? ரிச்சர்ட் கேல்பின் பிபிசி Getty Images தீவிரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 30 சதவிகிதம் பேருக்கு அபாயகரமான முறையில் ரத்தம் உறையும் பிரச்சனை உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். துரொம்பாசிஸ் என்று அழைக்கப்படும் இந்த ரத்தம் உறையும் பிரச்சனையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. நுரையீரல் வீக்கம் கொரோனா வைரஸால் ஏற்படும் வழக்கமான பாதிப்பு. இதே போல உலகில் உள்ள பல கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வேறு பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சில மிகவும் ஆபத்தானவை. கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வந…
-
- 0 replies
- 480 views
-
-
ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் செயலற்றுப் போகும் நிலையை நோக்கி உலகம் -- உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை உலகம் ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள் சாதாரண தொற்றுக்களாலும், சிறிய காயங்களாலும் உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை மீண்டும் உருவாகும் நிலை வரலாம் என்று அது கூறுகிறது. சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள், உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டிபயாடிக்ஸ்களிடமிருந்துகூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருப்பதாகவும்,இது இப்போது உலக அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதாகவும், உலகச் சுகாதா…
-
- 0 replies
- 479 views
-
-
ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம். இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்புமொய்க்காதாம். மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம். நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது! இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒ…
-
- 3 replies
- 479 views
-
-
வலி இல்லாத வாழ்க்கை ஒன்று இருக்குமானால் அதுவே சொர்க்கம், அதுவே வாழ்க்கையின் அளவிட முடியாத ஆசீர்வாதம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட வரம் பலருக்கும் வாய்ப்பதில்லை. பலருடைய வாழ்க்கையில் வலி என்பது நோயின் அறிகுறி என்ற நிலை மாறி, அதுவே நோயாக மாறிவிடுவதும் உண்டு. இப்படி வலியால் அவதிப்படுபவர்களின் தேவைக்குத் தீர்வு கொடுக்கும் மருத்துவத் துறை ‘நோய்த் தணிப்பு பேணுதல்’ எனப்படும் ‘வலி நிர்வாகத் துறை’. தலைவலியில் தொடங்கி முழங்கால் வலி, முதுகுத் தண்டு வலி, மூட்டுவலி, புற்றுநோய் வலி உள்படப் பலவற்றுக்கும் இத்துறை சிகிச்சை தருகிறது. இன்றைய வாழ்க்கையில் சரிவிகித உணவுப் பழக்கம் இல்லாமை, போதிய உடற்பயிற்சி இல்லாமை, தவறான உடற்பயிற்சிகள், அதிகமான உடல் எடை, உடல் இளைக்கிறேன் என…
-
- 0 replies
- 479 views
-
-
எபோலா எமன்! தப்புவது எப்படி? இப்போது உலகை அதிரவைக்கும் ஒரு சொல் ‘எபோலா’. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று விதவிதமான வியாதிகள், விஞ்ஞான முன்னேற்றத்துக்குச் சவால்விட்டு, அவ்வப்போது மனிதனை மரணபீதிக்குள் உறையவைக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு அபாயத்தின் பெயர் ‘எபோலா’. 1976ல் ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் கிருமி, இப்போது மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அச்சத்தில் ஆழ்ந்துபோயிருக்கிறது ஆப்பிரிக்கா. இந்தியாவுக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. ‘எபோலா வைரஸ் தாக்குதலில் இருந்து நாம் வெகுதொலைவில் இருக்கிறோம்’ என்கிறார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். ஆனாலும், ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் ஏரா…
-
- 0 replies
- 479 views
-
-
அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. இது தோற்றத்தில் வெளிர் பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவையானது. சில சமயம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். செயல்திறன் மிக்க சத்துக்கள்: பேரிக்காயில் உயர்தர நார்ச்சத்து. ஆன்டி ஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. மேலும் பேரிக்காயில் தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 பேன்றவை ஆகியவை அடங்கியுள்ளன. நன்மை தரும் நார்ச்சத்து: பேரிக்காயில் உள்ள…
-
- 0 replies
- 478 views
-
-
அதிகம் வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் கேன்சருக்குத் தூண்டுகோலா? வியாழன், 22 நவம்பர் 2012( 18:13 IST ) கடைகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ், குறிப்பாக ஃபாஸ்ட் புட் கடைகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு வருவலில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் உருவாவதாக லண்டன் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது உருளைக்கிழங்கு சிப்ஸில் அபாயம் ஒன்றுமில்லை ஆனால் அது செய்யப்படும் விதங்களில் பிரச்சனை இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. அதாவது விற்பதற்கு முன்பாக பாதி வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு வருவல் விற்கப்படும் முன் மீண்டும் முழுதுமாக வறுத்துக் கொடுக்கப்படுகிறது. இதனால் அக்ரைலமைட் (acrylamide) என்ற ரசாயனம் அதில் உருவாகிறது. இது புற்று நோய் உருவாக்க ரசாயனமாகும் என்று லண்ட…
-
- 2 replies
- 478 views
-
-
எயிட்ஸ் நோயின் 30 ஆண்டுகள்: ஐநா மாநாடு உலகெங்கும் எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு தேவைப்படுகின்ற பணத்தேவை குறித்து ஐநாவில் நடந்த மாநாடு ஒன்றில் உலகத் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச் ஐ வி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு முப்பதாண்டுகள் ஆனதை நினைவு கூறுமுகமாக நடக்கும் இந்த மாநாட்டில் முப்பது நாடுகளின் அதிபர்களும் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். உலகிலேயே தென்னாபிரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்டிருக்கும் நைஜீரியாவின் அதிபரான குட்லக் ஜொனார்த்தன் அவர்கள் இந்த போராட்டத்துக்கு போதுமான நிதி என்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். மோதல்களை கூட அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் கையாள முடியும் ஆ…
-
- 0 replies
- 478 views
-
-
பரோட்டா சாப்பிடுவதால், இதய நோயும், நீரிழிவு நோயும் வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பரோட்டா தமிழர்களின் அன்றாட உணவு என்று சொல்ல முடியாவிட்டாலும், அடிக்கடி உண்ணக் கூடிய உணவாக மாறிவிட்டது. பரோட்டாக்கள் மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. மைதாவை பதப்படுத்தும் போது சேர்க்கப்படும் இராசயனப் பொருட்கள் நீரிழிவு நோயையும், இதய நோயையும் ஏற்படுத்தவல்லவை என்பதால் மைதாவை தவிர்ப்பது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். மரபணுக்கள் உடல்பருமனை தூண்டுகின்றன Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு பின்னணியில் இருக்கும் குறிபிட்ட மரபணுக்களை லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். உலக அளவில் ஆறில் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக உடல் பருமனாகும் ஆபத…
-
- 0 replies
- 478 views
-
-
சென்னை இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் செயற்கை ரத்தம் தயாரிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்திடம் இருந்து நிதி உதவி பெற்றனர். அதைத் தொடர்ந்து டாக்டர் சோமா குஹதா குர்தா தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் "ஸ்டெம்செல்"களில் இருந்து பல லட்சம் கோடி சிவப்பு ரத்த செல்களை சேகரித்தனர். இதில் இருந்து செயற்கை ரத்தம் தயாரித்தனர். இது ஆய்வகத்தில் 17 நாட்கள் வைத்து உருவாக்கப்பட்டது. பின்னர், அதை விலங்குகள் உடலில் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தனர். இன்னும் 3 ஆண்டுகளில் இது மனித உடலுக்குள் செலுத்தப்பட உள்ளது. தற்போது இது ஆக்சிஜனை எடுத்து செல்லும் திறன் கொண்டதாக உள்ளது. மனித உடலில் செலுத்தும்போது ரத்த சிவப்பணு…
-
- 1 reply
- 478 views
-
-
பாதங்களீண் ஓரங்கள் பிளவுபடுவதை பித்த வெடிப்பு என்று அழைக்கின்றோம். அவை வலியை கொடுப்பதோடு நிறுத்தாமல் சங்கடத்தையும் ஏற்படுத்தும். பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர். இருப்பினும் பாதங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இன்னும் பல காரணிகளும் இருக்கத் தான் செய்கிறது. இதனால் பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டு சிதைவுகளும் உண்டாகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகளினால் கூட சில நேரங்களில் பித்த வெடிப்பு உண்டாகலாம். பாதங்களை நல்ல அக்கறையுடன் கவனித்து கொண்டு பித்த வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கவும். அப்படி செய்யாமல், வலி வரும் வரை காத்திருந்து அதன் பின் அதற்கு சிகிச்சை எடுக்கும் கஷ்டம் எதற்கு? ஒரு வ…
-
- 0 replies
- 478 views
-
-
இன்றைய நவீனஉலகமும், இயந்திரத்தனமான வாழ்க்கையும் அத்தகைய உணவு பழக்கத்தை நம்மை விட்டு தள்ளி விட்டுள்ளது. அதனால்தான், வாழ்க்கையின் குறிப்பிட்ட நாட்களை மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகிறோம். அந்த வகையில் நமது முன்னோர்களின் உணவில் முக்கிய பங்கு வகித்த வெந்தயத்தின் மகிமை அலாதியானது. வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் கு…
-
- 0 replies
- 477 views
-
-
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சூப்பர் உணவுகள்! நொறுக்குத்தீனிகளை விரும்பாதவர்கள் யார்? ஒருகாலத்தில் சுண்டல், வேர்க்கடலை, முறுக்கு... என நீண்ட நொறுக்குத்தீனிப் பட்டியல், இன்றைக்கு வேறு ஒரு வடிவம் கொண்டிருக்கிறது. பானிபூரி, பேல்பூரி, பாவ்பாஜி, சிக்கன் பக்கோடா என நீளும் அந்தப் பட்டியலில் பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் போன்ற மேற்கத்திய உணவுகளும் அடக்கம். இவை கொலஸ்ட்ராலை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை. இளம் வயதில் சாப்பிடும் கொழுப்புகள் உடலில் அப்படியே தங்கி, உடல்பருமனை ஏற்படுத்தும். அப்படித் தங்கும் கெட்ட கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் படிந்துவிடும். இது ரத்தஅழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்புக்கு வழிவகுக்கும். சரி.. அது என்ன கொலஸ்ட்ரால்? …
-
- 1 reply
- 477 views
-
-
கொரோனா வைரஸ் முடக்கத்தின் போது நீங்கள் அதிகம் சாப்பிடுகிறீர்களா? விபேக் வெனிமா பிபிசி Getty Images "மன அழுத்தம் மற்றும் சலிப்பின் காரணமாக நாம் அதிகம் சாப்பிடுவோம். செய்வதற்கு வேறொன்றும் இல்லை", என்கிறார் இங்கிலாந்தின் ஷெஃப்ஃபீல்ட் நகரில் இருக்கும் 19 வயதான க்ளோ டைலர் வித்தம். ஊரடங்கின் பேரில் வீட்டுக்குள்ளே இருப்பதால் நம்மில் பலர், அதிகம் நோகாமல் கிடைக்கும் உணவை சாப்பிடுகிறோம். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும்போது புதிதாக சமைக்கப்பட்ட உணவை வாங்குவதற்கு பதில், டைலர் வித்தம் வீட்டில் இருக்கும் மீத உணவை மீண்டும் சமைக்கிறார். அதற்கான செய்முறையை அவர் டிக்டாக் மூலம் கண்டறிகிறார். எனக்கு நீரழிவு நோய் இருக்கின்றபோதும் சாக்லெட் மற்றும் பிஸ்கெட் ப…
-
- 1 reply
- 476 views
-
-
நீங்கள் இன்று எப்படி உணர்கிறீர்கள்? ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பது போல் உணர்கிறீர்களா? இல்லையெனில், நீங்கள் மன அழுத்தத்திற்கு அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டால், எதிலும் சரியாக கவனத்தை செலுத்த முடியாமல் இருப்பதோடு, அதனாலேயே உடலினுள் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பமாகிவிடும். அப்படி உங்கள் உடலில் பிரச்சனைகள் ஆரம்பமாகியிருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளைக் கொண்டே நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால், தீவிர பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உங்களுக்கு அந்த அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். …
-
- 0 replies
- 476 views
-