Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தமிழர் கூட்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை மீட்கும் பொருத்தமான வழிமுறைகள் பற்றி ஆராய இளையவர்களின் தலைமைத்துவம் கொண்ட புலம் பெயர் தமிழர் கூட்டு Tamil Diaspora Alliance பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தது. இந்த கூட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தவுடன் Zoom வழியாகவும் பல நாடுகளில் இருந்தும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். தாயகத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்து கடந்த வருடத்திலிருந்து தாம் பரீட்சார்த்தமாக முன்னெடுத்து வந்த உற்பத்தி …

  2. இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தினை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இன்று சந்தித்துள்ளார். குயின்ஸ்லாந்தி;ற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில் நடேசலிங்கம் குடும்பத்தினை சந்தித்துள்ளார். நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர் அவர்களிற்கு நிரந்தர வதிவிடம் விரைவில் கிடைக்கும் என பிரதமர் உறுதியளித்தார் என தமிழ் குடும்பத்தின் நண்பரான அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் மகி;ழ்ச்சியான நாட்கள் வரவுள்ளன என்பதை அறிந்து இன்று நாங்கள் உண்மையாகவே நம்பிக்கையுடன் காணப்படுகின்றோம்என குறிப்பிட்டுள்ள அவர் பிரதமருடன் உரையாட எங்களிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாதநிலையில் காணப்பட்டோம்இஆனால் பிரியா…

  3. இரண்டாவது உலக யுத்தத்தின் போது நான் வசிக்கும் நகரமான Schwäbisch Hall, அந்த மாநிலம் முழுவதற்குமே உணவுப் பொருட்களை வழங்கியது மட்டுமல்லாமல் குண்டுத் தாக்குதலுகளுக்குத் தப்பிய ஒரு அழகான நகரமும் கூட. ஒரு சிறிய நகரமானாலும் தனது கடந்த கால கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், விளையாட்டுக்கள் கலைகள்,கலாச்சாரங்கள் என எல்லாவற்றையும் காத்து அதை இன்றும் பேணி வருகிறது. நான் இருப்பது சின்ன நகரம் என்பதாலோ என்னவோ ஒரே ஒரு தமிழ்க்கடை மட்டும்தான் இருக்கிறது. பணப் பரிமாற்றங்களால் பெருமளவளவில் இலாபம் கிட்டுவதால் பொருட்களை கொள்வனவு செய்வதில் முதலாளி அம்மாவுக்கு அவ்வளவு நாட்டம் இல்லை. ஏதாவது மனதுக்கு விருப்பமானதை சமைத்து சாப்பிட விரும்பி அந்தப் பொருளைக் கேட்டால், “முடிஞ்சுது அண்ணை. வியாழக்கிழ…

  4. மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2022 யேர்மனி Posted on April 15, 2022 by சமர்வீரன் 449 0 மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2022 யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 329 views
  5. “உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு யேர்மனியிலிருந்து வலுச்சேர்ப்போம். 27.06.2022 Posted on June 4, 2022 by சமர்வீரன் 266 0 “உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு யேர்மனியிலிருந்து வலுச்சேர்ப்போம். 27.06.2022 – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 280 views
  6. வழக்கம் போல தமிழர் வாழ்வில் பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் இருந்தன. காலப் போக்கில் அவை மறந்து போக ஆரம்பித்திருக்கிறது. , என்றாலும் சில நம் புலம்பெயர் நாட்டிலும் "வழக்கங்கள்" நடை முறைப் படுத்த படுகின்றன . நான் தாயகத்தில் வாழ்ந்த காலங்களில் பதின்ம வயதுக்கு முன் பின்னான காலப்பகுதியில் எமது தலைமை ஆசிரியையின் கணவர் காலமாகி விட்டார். தலைமை ஆசிரியை மிகவும் பிரபலமானவர் கஷ்டபடட , வசதி குறைந்த குழந்தைகளுக்கு பள்ளிச்சீருடை உட்பட பிள்ளைகளுக்கு உதவுபவர் . கத்தோலிக்க வழக்க படி அந்த கிராமத்தை சேர்ந்த கோவிலின் நுழைவாயிலில் இறந்தவரின் பேழை வணக்க நிகழ்வுக்காக வைக்க பட்டு அவை நிகழ்ந்து முடிந்த பின் சேமக் காலை எனப்படும் (சுடலை ) க்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்ப…

  7. இறந்தவர்களது இறுதி நிகழ்வு ஒவ்வொரு மதங்களிலும் மாறுபட்டிருக்கின்றது. ஆனாலும் கால ஓட்டத்தில் சடங்குகளில் ஆங்காங்கே மாற்றங்கள் நிகழ்கின்றன. சைவர்களைப் பொறுத்தளவில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த வழிமுறைகள் ஏனென்ற விளக்கங்கள் இல்லாமல் இன்றும் தொடர்வதுதான் புரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புலம்பெயர் நாடுகளில் அது ஒரு வியாபாரமாகவே தென்படுகின்றது. சமீபத்தில் உறவினர் ஒருவரது இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இறந்தவரை தூய்மையாக்கி, அழகுபடுத்தி, நல்ல உடை அணிவித்து மரப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து மட்டுமல்ல அருகில் சென்று பார்க்கும் போது கூட அவர் அமைதியாக உறங்குவது போன்ற தோற்றமே தெரிந்தது. இறந்து விட்டார் என்ற எண்ணமே தோன்றாத வகையில…

  8. ரூவாண்டா செல்லும் பிரித்தானிய அகதிகள். பிரித்தானிய அரசின், ஜரோப்பாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த அகதிகள் 35 பேரை செவ்வாயன்று ரூவாண்டாவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவதை தடை விதிக்க மேல் நீதிமன்றம் மறுத்ததால், பயணம் திட்டமிட்டபடி நடை பெறும் என அரசுஅறிவித்துள்ளது. வகை தொகை இல்லாமல் பிரான்ஸில் இருந்து வருபவர்களை, தடுக்க முடியாமல் தவித்த அரசு, ரூவாண்டா அரசுடன் 120 மில்லியன் பவுண்ஸ் ஒப்பந்தம் இட்டு, அகதிகளை அந்த நாட்டுக்கு அனுப்ப தீர்மானம் எடுத்துள்ளது. ரூவாண்டா நாடு அவர்களது அகதிக் கோரிக்கையை பரீசீலனை செய்யும். இதன் மூலம் கடல் கடந்து வருபவர்களை மட்டுப்படுத்த அரசு நிணைக்கிறது. நீதிமன்றம், நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் உண்டாக்கக் கூடியவர்கள் என்…

  9. தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம்- இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பம் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம் என குயின்லாந்தின் பயோலா சென்றடைந்த பின்னர் பிரியா நடேசலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம்,எனது பிள்ளைகள் உடல்உளரீதீயாக பாதிக்கப்பட்டனர்,எனது இளையமகள் தனது பல்லை இழந்தார் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் மிகவும் அவலம் நிறைந்த வாழ்வை வாழ்ந்தோம் எவருக்கும் அந்த நிலையேற்படக்கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் ஆட்சி மாற்றம் நாங்கள் இங்கு வரும் நிலையை ஏற்படுத்தியது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்திற்கு அரசாங…

  10. யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல். Posted on June 6, 2022 by சமர்வீரன் 21 0 „மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், ஆனால் சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்.” („Das Geheimnis des Glückes ist die Freiheit , Das Geheimnis der Freiheit aber ist der Mut . „) யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்/ தமிழீழ மாணவர் எழுச்சி நாள் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் தியாகி பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்…

    • 0 replies
    • 637 views
  11. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2021,2022 Posted on June 5, 2022 by சமர்வீரன் 326 0 ஓரிரு மாதங்களாக எமது அன்றாட வாழ்க்கை மீண்டும் ஒரு சுமுகமான நிலைக்கு மாறியமை நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டில் அனைத்துலகப் பொதுத்தேர்வை மீண்டும் இயல்புநிலையில் நடாத்தக்கூடியதாக இருந்தது. இத்தேர்வு மிகவும் கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் 04.06.2022 சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. சென்ற ஆண…

    • 0 replies
    • 305 views
  12. ஒன்ராறியோ தேர்தலில் இந்தியப் பின்னணி கொண்ட ஆறு பேர் வெற்றி ரம் ஜூன் 2, வியாழக்கிழமை நடந்து முடிந்த ஒன்ராறியோ பொதுத்தேர்தலில், இந்தியப் பின்னணி கொண்டவர்கள் ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். வியாழக்கிழமை, ஒன்ராறியோ மாகாண சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்றவர்கள் விவரமாவது: பிராம்ப்டன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த Hardeep Grewal, பிராம்ப்டன் தெற்குப் பகுதியைச் சேர்ந்த Prabmeet Sarkaria, பிராம்ப்டன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த Amarjot Sandhu, Mississauga Streetvilleஐச் சேர்ந்த Nina Tangri, Mississauga Malton பகுதியைச் சேர்ந்த Deepak Anand…

    • 1 reply
    • 361 views
  13. ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் வெற்றியை பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் ளம்பரம் ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் இலங்கை தமிழ்-கனேடியர்களான விஜய் தணிகாசலம் மற்றும் லோகன் கணபதி ஆகியோர் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட கனேடிய-தமிழர்களான செந்தில் மகாலிங்கம், சாந்தா சுந்தரசன், அனிதா ஆனந்தராஜா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். விஜய் தணிகாசலம், ஒன்ராறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ரொரண்டோ ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதியில் விஜய் தணிகாசலம் போட்டியிட்டார். 2018 -ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை விஜய் தணிகாசலம் பிரதிநித…

    • 0 replies
    • 399 views
  14. யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி. 149 0 யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி. Video Player 00:00 04:37 …

    • 1 reply
    • 669 views
  15. யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. Posted on May 26, 2022 by சமர்வீரன் 85 0 யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி “ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும். யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி அழித்த செய்தியை நாமறிவோம். …

    • 0 replies
    • 685 views
  16. பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த அவ்ரினா ஜோஸ் எழுத்தாளர் & முனைவர் பட்ட ஆய்வாளர் லைப்சிக் பல்கலைக்கழகம் Video Player பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில்-அவ்ரினா ஜோஸ். – குறியீடு (kuriyeedu.com) 01:39 06:0

    • 0 replies
    • 328 views
  17. நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு விசா வழங்கியது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்த உத்தரவிடப்பட்டு, பேர்த் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களான நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தற்காலிக இணைப்பு விசா வழங்கியுள்ளது. Photograph: Stephanie Coombes இதனால், அவர்கள் முன்னர் தாம் வசித்து வந்த, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா நகருக்குத் திரும்புவதற்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர்கள் பேர்த் நகருக்குள் மாத்திரம் வசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநிலையில் இக்குடும்பத்துக்…

  18. வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர்..! அவுஸ்திரேலியா புதிய பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி, இலங்கையைச் சேர்ந்த முருகன்-பிரியா தம்பதியினருக்கு மீண்டும் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் முருகப்பன், பிரியா ஆகிய இருவரும் இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது தப்பித்து 2012-ம் ஆண்டு ஆள்கடத்தல் படகுகள் மூலம் தனித்தனியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்தனர். அவுஸ்திரேலியாவுக்கு வந்தபிறகு, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு கோபிகா, தர்ணிகா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்…

  19. ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம் இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் தமிழக அரசிடம் இருந்து…

  20. அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் வெற்றி அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட மிஷேல் ஆனந்தராஜா பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேர்ந்த பெற்றோருக்கு தென் ஆபிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர். இவரின் பூர்வீகம், குடும்ப விபரம் என்பன தேர்தல் முடியும் வரை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் பல பத்திரிகைகள் இவரின் பெயரை வைத்து இவர் ஒரு இந்தியர் என்று கூறி வந்தன. இவர் ஒரு மருத்துவராகவும் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் கடமை புரிந்து வந்துள்ளார். https://www.virakesari.lk/article/128038

  21. சாகோஸ் தீவில் பிரிட்டனால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர் பிரிட்டனிற்கு சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சகோஸ் தீவில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 89 இலங்கை தமிழ் அகதிகளில் 42 பேர் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒக்டோபரில் தமிழ் நாட்டிலிருந்து கனடா நோக்கி 89 இலங்கை தமிழ் அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவேளை பிரிட்டிஸ் இராணுவத்தினரை அதனை மீட்டு டியோகோ கார்சியாவிற்கு கொண்டு சென்றிருந்தனர். அமெ…

  22. பிரான்சு பேரணியில் தமிழீழத் தேசியக் கொடிக்குத் தடையா; வழக்கறிஞர் விளக்கம்! AdminMay 19, 2022 பிரான்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடிகளைப் பாவிப்பதற்கு காவல்துறையினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் மக்களின் குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக பிரெஞ்சு காவல்துறையினரிடம் தொடர்புகொண்ட வழக்கறிஞர் பிரெஞ்சு மொழியில் தந்த விளக்கத்தினையும் அதன் தமிழ் வடிவத்தையும் இங்கே காணொளியில் காணலாம். 👇🏾 http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/10000000_428414332448632_1489212956907331428_n.mp4 http://www.errimalai.com/?p=74313

  23. மே-18ஐ இனப்படுகொலை தினமாக அங்கீகரித்து கனேடிய பாராளுமன்றம் (ஆர்.ராம்) கனடா பாராளுமன்றத்தில் மே 18 ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி மே 18ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். பாராளுமன்றில் குறித்த பிரேரணை முன்நகர்த்தப்பட்டிருந்த நிலையில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஏற்றுக்கொள்வதாகவும் சபை தெரிவித்துள்ளது. இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட…

    • 16 replies
    • 943 views
  24. பிரித்தானியாவில்... வருடாந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்! வருடாந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில் இடம்பெற்றது. Tamils for Labour என்ற அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானிய நேரப்படி நேற்று பிற்பகல் 6:30 ற்கு இந்த கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழ் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சி உதவி கொறடா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1282186

  25. யேர்மனி சார்புறுக்கன் நகரமத்தியில் தமிழின அழிப்பு நினைவுகூரப்பட்டது. Posted on May 6, 2022 by சமர்வீரன் 120 0 சிறிலங்கா அரசினால் தமிழீழமக்கள் மேல் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக இன்று 6.5.2022 வெள்ளிக்கிழமை சார்புறுக்கன் நகரத்தின் மத்தியில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களின் நிலமையை ஓவியமாகத் தீட்டி சார்புறுக்கன் நகரமத்தியில் கண்காட்சி நடாத்தப்பட்டது. இதன்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களுக்கு நகரமத்தியில் தீபம் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. இந் நிகழ்வானது யேர்மனியில் 4.5.2022 இல் இருந்து 18.5.2022 வரை முக்கிய நகரங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. …

    • 0 replies
    • 297 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.