Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செஞ்சோலையில் உயிர்களைப் பறித்த சிறிலங்கா மீது அனைத்துலகம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது?: சுவிஸ் தமிழர் பேரவை [செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007, 16:03 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] செஞ்சோலையில் அப்பாவி பாடசாலை சிறார்களை பலிகொண்டு ஓராண்டாகி விட்ட நிலையிலும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது யுனிசெஃப் உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தினர் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைதான் என்ன? என்று சுவிசில் உள்ள 27 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டு நிறுவனமான சுவிஸ் தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. யுனிசெஃப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் எம்.வெனமானுக்கு சுவிஸ் தமிழர் பேரவை அனுப்பியுள்ள கடிதம்: வட இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை விடுதியில் தங்கியிருந்து முதலுதவிப் …

  2. சிலாபத்தை சேர்ந்த அனிஸ்டா மேரி (Anista Marie) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 10 வருடங்களாக அடிமையாக சிறைவைக்கப்பட்டுள்ளார். அந்த வீட்டில் உள்ள ஒருவருடைய அனுதாபம் அவருக்கு கிடைக்காமல் போயிருந்தால் நேற்று கூட அந்த பெண்ணால் (அனிஸ்டா மேரி) arabnews.com ற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்க முடிந்திருக்காது. அப்பெண் தொலைபேசி மூலம் arabnews.com தெரிவித்த விபரத்தின் சுருக்கம்: நான் இங்கு வரும் போது எனக்கு வயது 30. இப்போது எனக்கு வயது 40. நான் ஒருபோதும் விடுமுறை லீவு எடுத்ததில்லை . எனக்கு கடந்த 8 வருடங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனக்கு இலங்கையில் 4 குழந்தைகள் உண்டு.எனது கணவர் இறந்துவிட்டார். அவரின் இறப்புசெய்தி கூட மூன்றாம் நபர் ஒருவரின் மூலம் அவர்…

    • 2 replies
    • 1.7k views
  3. சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா? எமது உணர்வுகளை மதிக்காது எம்மை வைத்து வியாபாரம் செய்யும் தமிழ் சினிமா உலகிற்கு நாம் உதவி செய்வது தகுமா? வெளிநாடுகளில் வாழும் நாங்கள் தமிழ் சினிமாவைப் புறக்கணிப்பது, எமக்கு சாதகமான பலாபலன்களை தமிழீழத்தில் ஏற்படுத்துமா? தாயகத் தமிழீழத்தில் எமது உறவுகள்படும் துன்பங்களைத் துடைப்பதற்கு வெளிநாடுகளில் வாழும் நீங்கள் உங்கள் சில சுகங்களை - பொழுதுபோக்குகளை விட்டுக் கொடுக்க, தியாகம் செய்ய தயாராக இருக்கிறீர்களா? :angry:பாபா :angry: என்ற பெயரில் கோமாளிக் கூத்தாடிய ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தை புறக்கணித்து, தமிழ் சினிமா உலகம், தமிழகம் ஈழத் தமிழர் மீது பாரா முகமாக இருப்பதை கண்டிக்க தயாராக இருக்கின்றீர்களா? …

  4. பல லட்சம் ரூபாய் சம்பளம் தந்தாலும், வெளிநாட்டு வேலை வேண்டாம் என்று உதறி விட்டு, இந்தியாவுக்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சாப்ட்வேர், மேலாண்மை மேற்படிப்பு படித்தவர்கள், பல லட்சம் ரூபாய் சம்பளத்துக்காக, வெளிநாடு போகின்றனர். ஆனால், சமீப காலமாக, அங்குள்ள சூழ்நிலையை கருதி, சிலர் திரும்ப ஆரம்பித்துள்ளனர். சாப்ட்வேர் படிப்பு மற்றும் ஐ.ஐ.எம்.,மில், மேலாண்மை கல்வி படித்தவர்கள், வெளிநாடுகளில் பல லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில், வேலையை விட்டு, திரும்பி வருகின்றனர். சமீபத்தில், ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,மில் எம்.பி.ஏ., முடித்து வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்ற 72 பேரில், 20 பேர் திரும்பி விட்டனர். 'இந்தியாவை விட, பல மடங்கு சம்பளம் வெளிநாட்டில் கிடைக்கிறது என்பத…

  5. எதிர் வரும் 11ம் திகதி கனடா றிச்மன்ர்கில் இந்து ஆலயத்தில் சுப்பிறமணிய சுவாமியின் விசேட பேச்சு. இது தேவையா எமக்கு, இதை நாம் புறக்கணிக்க தவறினால் எதிர்காலத்தில் ராயபக்ஸ்சாவும் அவருடைய சகோதரர்களும் இப்படி வருவார்கள். http://www.thehindutemple.ca/

  6. லண்டன் தமிழருக்கு அடி-சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் அடாவடி: 7 பேர் கைது ஜூலை 23, 2007 சென்னை: லண்டனைச் சேர்ந்த தமிழரின் கைக் குழந்தை பந்தைத் திருடி விட்டதாக கூறி, அவரது கையில் இருந்த பந்தைப் பறித்ததோடு நில்லாமல், அந்த தொழிலதிபரையும் சரமாரியாக அடித்து உதைத்த சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 6 பேர் மற்றும் கண்காணிப்பாளரை போலீஸார் கைது செய்தனர். சென்னை தி.நகரில் ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். இந்த நிறுவனத்தின் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அடாவடி, அராஜகங்கள் செய்தது தொடர்பாக பலமுறை புகார்கள் வந்துள்ளன. ஒருமுறை பெரிய தொழிலதிபரின் மனைவியையே அடைத்து வைத்ததாகவும் புகா…

  7. தமிழின் தொன்மை வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது என்கிறார் தொல்லியல் ஆய்வாளரும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான டி.கே.வி.ராஜன். அதற்கான ஆதாரங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பண்டைப் பொருட்கள் பற்றிய கண்காட்சி ஒன்றினை நடத்தியிருக்கிறது. அவரால் நிறுவப்பட்டிருக்கும் இந்தியன் சயின்ஸ் மானிட்டர் என்ற அமைப்பு, திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் 24 கி.மீ. தென்கிழக்கில் அமைந்துள்ளது ஆதிச்ச நல்லூர். இங்கு சுமார் 100 - ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு நடத்திய தொல்லியலாளர் அலெக்சாண்டர்ரீ ஆதிச்சநல்லூர் மனித நாகரீகத்தின் தொட்டில் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்விடத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற அகழவாய்வுகள் அறி…

    • 3 replies
    • 2.6k views
  8. திருமதி. வசந்தி தங்கராஜா (வயது 38) என்பவர் அவர் தங்கியிருந்த ஹொட்டல் ரூமில் நேற்று வியாழக்கிழமை பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாக பிரேதபரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது..... இதன் நிமித்தம் இவரது கணவன் தங்கராஜாவை பொலிசார் தடுத்து வைத்துள்ளனர். Lankan woman found dead in hotel room

  9. வெள்ளி 10-08-2007 16:32 மணி தமிழீழம் [மயூரன்] பிரித்தானியாவில் நடைபெறும் உலக சாரணிய பாசறைக்குச் சென்ற இலங்கையர்கள் தலைமைறைவு பிரித்தானியாவில் நடைபெறும் அனைத்துலக சாரணிய பாசறை நிகழ்வுக்குச் சென்ற இலங்கையர்கள் உட்பட 13 பேர் காணாமல் போயுள்ளனர். உலகெங்கிலிருந்தும் 40 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இப்பாசறைக்கு சாரணர்கள் வருகை தந்திருந்தனர். இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, னைஜீரியா ஆகிய நான்கு நான்கு நாட்டைச் சேர்ந்த 13 பேர் காணமல் போயுள்ளனர். இவர்கள் விமான நிலையத்தை வந்து சேர்ந்ததும் இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். காணமல் போனவர்கள் 12 அகவைக்கும் 24 அகவைக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தேடும் பணியை பிரித்தானியக் காவல்துறை…

  10. இலங்கைக்கு திருப்பி அனுப்பவேண்டாம்' லண்டனில் 28 தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதம் [22 - July - 2007] லண்டன் கீத்ரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கார்மன்வேத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழ் இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தற்போதய அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக லண்டன் சென்று புகலிடம் கோரிய நிலையில் கார்மன்வேத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞர்கள் 28 பேரே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தொடரும் தற்போதைய மிக மோசமான நிலைமைகளுக்கு மத்தியில் தம்மை நாடு கடத்த வேண்டாமெனக் கோரியே …

    • 30 replies
    • 5.3k views
  11. Britain: A Sri Lankan immigrant took his own life in a courtroom moments after being found guilty of assaulting his baby daughter http://moderntribalist.blogspot.com/2007/0...-his.html#links

    • 4 replies
    • 2.4k views
  12. செப்.12-இல் பிரான்சில் பாரிய ஒன்று கூடல் பிரான்சில் செப்ரம்பர் 12ஆம் நாளன்று பாரிய ஒன்று கூடலை எழுச்சியோடு நடத்த தமிழ்ச் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மொன்றோயில் தமிழ்ச் சங்கங்களிடையேயான சந்திப்பு கடந்த 5ஆம் நாள் நடைபெற்றது. பிரான்சின் இன்றைய அரசியல் நிலை பற்றியும், பிரஞ்சு அரசால் ஏப்ரல் 1ஆம் நாள் கைது செய்யப்பட்ட 14 தமிழ் சமூகப் பணியாளர்கள்; விடுதலைபற்றியும், அதற்காக மக்கள் அமைப்புகள் என்ன செய்தல் வேண்டும் என்பது பற்றியும் அக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் செப்ரெம்பர் 12ஆம் நாளன்று பிரான்சில் பெரியளவிலான ஒன்று கூடல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. பிரஞ்சு அரச தலைவருக்கு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்…

  13. Started by putthan,

    பொன்னியில்செல்வன் யாழில் போட்ட தலைப்புக்கு நெடுக்ஸ் எழுதிய விளக்கங்களையும் விவாதங்களையும் பார்கும் போது அண்மையில் சிட்னியில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சி தான் ஞாபகதிற்கு வந்தது,அதை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளளாம் என்றூ நினைகிறேன். நாங்கள் கொஞ்ச சனம் ஈழத்துகலைஞர்களிற்கு ஆதரவு இல்லை என்றும் தென்னிந்திய கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகமாக கிடைக்குது என்று எழுதி கொண்டு இருகிறோம் ஆனால் புலத்தில் பாருங்கோ (சிட்னியில்) ஈழதமிழர்களின் தென்னிந்திய கலைகளையும் தாண்டி வட இந்தியா வரையும் உள்ள கலைகள் பயின்று அதை மேடையும் ஏற்றுகிறார்கள்.நான் என்ன சொல்ல வாரேன் என்றா சிட்னியில் நடந்த "பொலிவூட்" நடனத்தை பற்றி குறிபிடுகிறேன். …

    • 11 replies
    • 2.7k views
  14. ரட்ணசிங்கம் ஜானகி (30) என்பவர் கிரேக்க நாட்டிற்க்குள் ஒரு படகு மூலம் கடக்க முற்பட்டபோது ஏஜியன் கடலில் உள்ள சாமேஸ் தீவில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..... ஜானகியின் சகோதரியும் இன்னுமொரு இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.......... Sri Lankan found dead in Greece BBC

  15. தமிழர் புலம்பெயர்ந்த வாழுகின்ற நாடுகளில் கோடை காலம் வந்துவிட்டது. வழமை போன்று இந்த ஆண்டும் தமிழர்களை முட்டாளாக்கிப் பிழைப்பவர்கள் பவனி வரத் தொடங்கி விட்டார்கள். யேசுவை அழைத்து, அவரோடு தேனீர் அருந்தி, வியாபார ஒப்பந்தங்கள் செய்து, தொலைக்காட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து.... இப்படி நிறைய விடயங்கள் செய்வதற்கு பரம்பரை பரம்பரையாக உரிமை பெற்றுள்ள பால் தினகரன் குடும்பம் தற்பொழுது ஐரோப்பாவில் தங்களின் அலட்டல்களையும், கூச்சல்களையும் நடத்துவதற்கு வந்திருக்கிறார்கள். தினகரன் குடும்பமே மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள். பணமே அவர்களுடைய குறியாக இருக்கிறது. இவர்கள் எவ்வளவு தூரம் மக்களை முட்டாள்கள் ஆக்கி பணம் பறிப்பார்கள் என்பதற்கு, அவர்கள் செய்த "தங்கச் சாவி வியாபாரம்" ஒரு உ…

  16. கிளிநொச்சி அக்கராயன்குளத்தை சேர்ந்த கணபதிபிள்ளை சத்தியரூபன் (31)15வது மாடியில் இருந்து தற்காலிகமாக போடப்பட்ட படி உடைந்து கீழே விழுந்தபோது அவருடைய கழுத்தில் கம்பி குத்தியதால் ஸ்தலத்திலேயே மரணமானார். இவருக்கு தாயார், இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவரது உடல் சகல சம்பிர்தாயங்களும் முடிந்தவுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.............. Worker falls to death from building Gulf-times

    • 0 replies
    • 1.1k views
  17. இன்றைய லண்டன் தமிழ் பத்திரிகைகளில் தலையங்கம் என்னவென்றால் ஈழ தமிழ் அகதிகள் பற்றியதாகவே இருக்கிறது. இந்த நிலமைக்கு காரணம் யார்? ஏன் ஈழ தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்? இலங்கை white listல் இருந்து எடுக்கப்பட்டாலும் ஏன் இவர்களுக்கு இந்த நிலமை? கடைசி நேரத்தில் தஞ்சம் கோரி போகும் எம்மவர்களை.... வாங்கோ தம்பி ஒரு பிரசனனியும் இல்லை.. எல்லாம் வெல்லலாம்.... நாங்கள் இதை போல எத்தனை செய்தனாங்கள்... FAST TRACK மூலம் உங்களை வெளியே எடுத்து விடுகிறம் என்று கூறி பசு மாட்டில் பால் கறக்கிற மாதிறி ஆயிரக்கணக்கில் பணத்தை கறந்து விட்டு கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது தம்பி என்று கையை விட்டு விடுகிறர்கள் எம் தமிழ் சட்டத்தரணிகள். இவர்கள்ளை நாம் நாடத்தான் வேண்டுமா? இ…

  18. சிட்னியில் நவம் அறிவுக்கூடத்திற்கு நிதிசேகரிப்புக்காக நடன நிகழ்ச்சி 2007

  19. அன்றைக்கு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் அங்கே பிள்ளைகள் தமிழ் பாடசாலைக்கு செல்வது பற்றி பேசி கொண்டிருந்தபோது அந்த உறவினர் கூறினார் தமிழ் பாடசாலைகளிற்கு தன்ட பிள்ளைகள் இப்ப போக விருப்பம் இல்லாம இருக்கீனம் என்று கவலைபட்டார்,உடனே நான் உங்கள் பிள்ளைகள் நன்றாக தமிழ் கதைப்பார்களே கலை நிகழ்ச்சிகளிளும் பங்கு கொள்வார்களே இப்ப என்ன பிரச்சினை என்று கேட்க அவர் சொன்ன பதில் வியப்பாக இருந்தது,அதாவது புலத்தில் தமிழ் வகுப்பில் கல்வி கற்கும் ஆசிரியர்கள் நாட்டில் எப்படி கல்வி கற்பித்தார்களோ அவ்வாறே இருகிறார்கள் என்று,நானும் அந்த கதையை மேலும் தொடர்ந்த வண்ணம் இருக்கையில் இன்னொரு உறவினர் அங்கே வந்துவிட்டார்,,தொடர்ந்து அதே சம்பாசனை தான் நடந்தது,நான் அவரிடம் வினாவினேன் நீங்கள் நாட்ட…

    • 23 replies
    • 4.4k views
  20. பிரித்தானியாவில் இருந்து ஈழத்தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்தக்கோரி, பிரித்தானிய அரசை வேண்டி வரும் வெள்ளி, சனி தினங்களில் பிரித்தானிய உள்துறை அமைச்சரான திருமதி Jacqui Smith இன் தொகுதியான Redditch இல் பிரித்தானிய தமிழ் கவுன்ஸிலர்களின் தலைவரான திரு தயா இடைக்காடர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இடம்: Redditch Town Hall, Alcaster Street, B98 8AH காலம்: 03/08/07 வெள்ளி முற்பகல் 12.00 மணி தொடக்கம் 04/08/07 சனி பிற்பகல் 16.00 மணி வரை மேலதிக விபரங்கள் .....

  21. உண்டியல் கள்ளன் ஜெயதேவா சங்கக்கடை கள்ளன் கே.ரி. இராசசிங்கம் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பவாத உறவு முறிவடைந்து விட்டதாகவும். .இந்த சண்டையில் இரண்டுபேரின் குப்பைகளையும் ஆளுக்காள் கிளறி நாறடடிக்கப் போயினம் என தெரியவந்துள்ளது. சாம்பிளுக்கு ஓன்று: http://www.independentsl.com/cgi-bin/newss...cgi?record=2039 யாரும் தமிழ்படுத்துங்கோ....

  22. அமெரிக்க தலைநகரில் ஜூலை 23 இல் தமிழீழ தனியரசை ஆதரித்து அமைதிப் பேரணி அமெரிக்க தலைநகரில் தமிழீழ தனியரசை ஆதரித்தும், தேசிய தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் அமைதிப்பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதிப் பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (23.07.07) முற்பகல் 11 மணிக்கு வாசிங்ரனில் உள்ள தலைநகர கட்டட முன்றலில் (In front of the US Capitol building, Washington, DC) இடம்பெறவுள்ளது. - தமிழீழ தனியரசை வெளிப்படையாக ஆதரிப்போம் - தமிழ் தேசியத் தன்னாட்சி உரிமையை உறுதியாக வலியுறுத்துவோம் - சுதந்திரமாக வாழ்வதற்காகப் பிரிந்து செல்லும் உரிமையைக் கேட்போம் - சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் தலையிட்டுத் தடுக…

  23. "தமிழர் தகவல்" ஆசிரியருக்கு கனடா அரசாங்க உயர் விருது [சனிக்கிழமை, 21 யூலை 2007, 05:51 ஈழம்] [காவலூர் கவிதன்] கனடாவில் புதிய குடிவரவாளர்களுக்கு சேவையாற்றிய பதினான்கு பிரமுகர்கள் ஒன்ராறியோ மாகாண அரசினால் சிறப்பிக்கப்பட்டனர். கனடிய பல்கலாச்சார நாளை முன்னிட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த விருது விழாவில், சிறப்பிக்கப்பட்ட பிரமுகர்களுக்கு விருதும் பதக்கமும் வழங்கப்பட்டது. நியூகமர் சம்பியன் எவோர்ட்(Newcomer Champion Award) என்று அழைக்கப்படும், ஒன்ராரியோ மாகாணத்திற்கான இந்த உயரிய விருது இந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. விருது பெற்றவர்களில் "தமிழர் தகவல்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.திருச்செல்வம் அவர்களும் அடங்கியுள்ளார். …

    • 6 replies
    • 2k views
  24. இன்று யாழ்கள உறவுகள் எதிர்பாராதவிதமாக சிட்னி முருகன் கோயில் அன்னதானத்தில் சந்திக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டது,ஜம்மு சனிஸ்வரனுக்கு எள்ளுசட்டி எரித்துவிட்டு திரும்பும் போது சுண்டல் எள்ளுசட்டியுடன் ஆஜரானார்,அவரை பார்த்த போது கிட்டதட்ட சூர்யாவின்ட லுக் அடித்தது உடனே அவர் எப்படி ஜம்மு என்றார் பரஸ்பர சுகம் விசாரிக்கும் போது ஒரு மனிதர் குறுக்கிட்டார் உடனே சுண்டல் யார் இவர் என்று கேட்டார் நானோ இவரை தெறியாதோ இவர் தான் தமிழ் தமிழ் என்று கதைக்கும் நம்ம கந்தப்பு தாத்தா என்றேன்(சனீஸ்வரனுக்காக கறுத்த சேட்டும் கறுத்த பாண்டும் போட்டு கொண்டு வந்தார்)சுண்டலுக்கோ அவரை பார்த்தவுடன் அதிர்ச்சி ஏனேனில் அவர் கிழசா இருப்பார் என்று நினைத்தார் ஆனால் அவர் விஜய் போல் இருந்தார் அவர்ம் எங்களோடு கூட்டனியி…

    • 72 replies
    • 7.9k views
  25.  திங்கள் 23-07-2007 00:08 மணி தமிழீழம் [மயூரன்] யேர்மனி கோயில் ஒன்றின் பூசகர் கொழும்பில் கடத்தப்பட்ட பின்னர் விடுதலை யேர்மனிக் கோவில் ஒன்றின் பூசகர் சிறீலங்கா இராணுவத் துணைக்குழு ஒன்றினால் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். பெரும் தொகைப்பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் நடத்துனர் விடுதலை செய்யப்பட்டதாக கொழுபுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் யேர்மனியிலிருந்து சிறீலங்கா சென்றிருந்த வேளை கொழும்பில் உள்ள துணை இராணுவக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பெரும் தொலைப் பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.