வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
ஈழத்து நாடகத்துறை முன்னோடி டேமியன் சூரி மேடையிலேயே தனது உயிரை அர்ப்பணித்தார் பிரான்ஸ் திருமறைக் கலா மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் “கலைவண்ணம்” கலை நிகழ்வின் சிறப்பு அரங்காற்றுகையாக “தங்கத் தமிழ் வேந்தன்” என்ற நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டது.இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்ணன் பாத்திரமேற்று, நடித்திருந்த டேமியன் சூரி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, இராமனால் எய்யப்பட்ட அம்பு தைத்து வீழ்வதாக நடித்த படியே மேடையிலேயே உயிரிழந்தார் ஈழத்து நாடகத்துறை முன்னோடியான டேமியன் சூரி.ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலையுலகிற்கு அருஞ்சேவையாற்றிய இவர், அரங்கிலேயே உயிரை அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்…
-
- 8 replies
- 1.5k views
-
-
பிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019 மஜூரான் சதானந்தன் எதிர் பிரிகேடியர் ஆண்டிகே பிரியங்க இந்துனில் பெர்னாண்டோ வழக்கு மீதான விசாரணை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது, அரச தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களுடன், தனியாக அரச தரப்பு வழக்கை நீதிமன்றம் கேட்டது. இந்த நாளுக்கான வழக்கு அமர்வின் நிறைவில், நீதிமன்றத்தினால் எதிர்த் தரப்பு வழக்கு விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்தை தலைமை நீதிபதி 2019 நவம்பர் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். இந்தப் பிரச்சினை தொடர்பில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தின் ஆரம்ப அமர்வு நீத…
-
- 0 replies
- 1.2k views
-
-
35 வருட ‘ஜியோப்படி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவுக்கு வரலாம்? வழங்குனர் அலெக்ஸ் ட்றெபெக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அமெரிக்க தொலைக்காட்சியில் கடந்த 35 வருடங்களாகத் தொடர்ந்து 8000 காட்சிகளை ஒளிபரப்பை வரும் போட்டி நிகழ்ச்சியான ‘ஜியோப்படி’ யை (Jeopardy) நடத்திவரும் வழங்குனரான அலெக்ஸ் ட்றெபெக் சதயப் புற்றுநோய் காரணமாகத் தொடர்ந்தும் நிகழ்ச்சியை நடத்தமுடியாத நிலை ஏற்படலாம் என கனடாவின் சீ.டி.வி. தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டார். கனடியரான அலெக்ஸ் ட்றெபெக் தொடர்ச்சியாக நடத்திவரும் ‘ஜியோப்படி’ தொலைக்காட்சிப் போட்டி நிகழ்ச்சிகளில் முதல் தரமானதும், பல மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டதுமான நிகழ்ச்சியாகும். போட்டியாளர்கள் உலகத்தி…
-
- 0 replies
- 800 views
-
-
இன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னதாக சட்டபூர்வமாக்கப்பட்ட கஞ்சா பாவனை, இன்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. இதன்மூலம், சட்டாபூர்வமாக ஒருவர் கஞ்சா கலந்த தின்பண்டகளை விற்கலாம், உண்ணலாம். விற்பனைக்கு வர சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். ஆனால், அவை சில சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவை. அவற்றை மீறினால், பெரிய தண்டனைக்கு உள்ளாகலாம். இருந்தும் சட்டத்திற்கு புறம்பான கஞ்சா வளர்ப்பு குறையவில்லை. காரணம், விலை மற்றும் நுகர்வோருக்கு கொண்டுசேர்க்கும் வேகம். இது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனர் குற்றங்கள் பெரிதாக அதிகரிக்கவில்லை என்கின்றனர் காவல்துறை. அதேவேளை, ஒருவர் போதையில் உள்ளாரா என அறிவதற்கான கருவிகள் முழ…
-
- 16 replies
- 2.2k views
-
-
தாயைக் கண்டுபிடித்தார் டேவிட் சாந்தகுமார்! - முடிவுக்கு வந்தது 39 வருடப் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி மற்றும் தனலட்சுமி தம்பதியர். வறுமை காரணமாக சென்னைக்குக் குடிபெயர்ந்த இவர்கள் கடந்த 1979-ம் ஆண்டு, தங்களின் மகனைத் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். சென்னை, பல்லாவரத்தில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்க் நாட்டில் வாழும் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டானிஸ் எனும் தம்பதியால் டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் பாசமாக வளர்க்கப்பட்டார். தொடர்ந்து டென்மார்க்கில் உயர் படிப்பை முடித்து டென்மார்க் வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணிபுரியும் டேவிட் சாந்தகுமாருக்குத் திருமணமாக…
-
- 1 reply
- 839 views
-
-
கனேடிய பாராளுமன்ற தேர்தலும் சிவாஜிலிங்கம் என்ற பிரிவினைவாதமும் கனேடிய பாராளுமன்ற தேர்தலுக்கு மேலும் ஒரு வாரமே (ஐப்பசி 21) உள்ள நிலையில், கனடிய தேர்தல் களம் எதிர்பாராத திருப்பங்களை நோக்கி நகர்கிறதா?, என்ற கேள்வியையே எழுப்பி நிற்கிறது. தலைவர்களுக்கிடையிலான நேரடி விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இறுதி வாரப்பபரப்புரை சூடுபிடிக்கும் நிலையல், களநிலைகள் எதிர்பாராத மாற்றங்களை சுட்டி நிற்கின்றன. பெரும்பான்மை ஆட்சியமைக்கும் நிலையை, தற்போதைய களநிலை முற்றாக இல்லாதொழித்துள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 170 தொகுதிகளை வெல்லும் நிலை, எந்தவொரு கட்சிக்கும் சாத்தியமே இல்லை. அண்மைக்காலமாக, லிபரல் கட்சி சிறுபான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்கும் சாத்தியங்கள் இருந்தன. அதி…
-
- 1 reply
- 1.3k views
-
-
திரைப்பட வசூலை குறைக்க திரையரங்குகளை சேதப்படுத்திய கும்பல் – பின்னணியில் இந்தியர்! கனடாவில் இந்திய திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்ட இரண்டு திரையரங்குகள் தாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து ஒன்ராறியோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரபல இந்திய நடிகர்களான சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோரின் நடிப்பில் வௌியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படம் திரையிடப்பட்ட கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள இரண்டு திரையரங்கங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. Kitchener பகுதியில் உள்ள Landmark Cinemas என்ற திரையரங்கில் நுழைந்த ஒருவர், திரைப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடிய தேர்தல் | தலைவர்களின் விவாதம் – வென்றது யார்? சிவதாசன் விவாதம் ‘சப்’ பென்று போய்விட்டது. எதிர்பார்த்த வாண வேடிக்கை நடைபெறவில்லை. இருப்பினும் இரண்டு மணித்தியாலங்கள் பார்க்க வைத்துவிட்டன கனடிய தொலைக்காட்சிகள். அவர்களுக்கு வியாபாரம். இரண்டு முயல்களும் நான்கு ஆமைகளும் போட்டி போட்டன. முயல்கள் இரண்டும் தமக்குள் சண்டை பிடித்துக்கொண்டிருக்க ஜாக்மீட் சிங் என்ற ஆமை இலகுவாக வென்றுவிட்டது. ஆளும் பிரதமர் என்ற வகையில் ட்ரூடோ அடி / வெடி வாங்கத் தயாராகத் தான் வந்தார். ஷீயர் பலரக ஆயுதங்களுடன் வந்தாரே தவிர கனரக ஆயுதங்களுடன் வரவில்லை. இயக்கக்காரர் சொல்வதுபோல எல்லாமே ‘சிம்பாப்வே’ வெடிகள் தான். SNC Lavalin ஆயுதத்தைச் ஷீயர் அடிக்கடி பாவித்து அது மழு…
-
- 4 replies
- 961 views
-
-
லண்டன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் லண்டன், லூட்டன் விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் உட்பட இலங்கை பிரஜைகள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் லண்டன் லூட்டன் விமான நிலையத்திற்கு வந்த பின்னர் அந் நாட்டின் பயங்கரவாத சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 35 வயது பெண், 39,35 மற்றும் 41 வயதுகளுடைய ஆண்கள் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு 'ERSOU' இன் பயங்கரவாத தடுப்பு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த ஆண்கள் மூவரும் லண்டனில் உள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்காவில் பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை புலம்பெயர் ஈழத்தமிழர்களால் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் 17.00 மணிவரை இடம்பெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் வன்கொடுமைகளைக் குறிக்கும் பதாகைகளைம் கைகளில் தாங்கியிருந்தனர். கலந்துகொண்ட மக்களின் சார்பில் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் சிறிலங்காவின் இனவாதம் குறித்து சான்று பகரும் உரைகளும் இடம்பெற்றன. போராட்டத்தின் நிறைவில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடிய தேர்தல் |’தலைப்பாகையை வெட்டிவிடு’-மொன்றியலில் ஜக்மீட் சிங் எதிர்கொண்ட வாக்காளர் மொன்றியல் தெருவில் வாக்காளரை எதிர்கொள்ளும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் (படம்: CBC) அக்டோபர் 21 இல் நடைபெறவிருக்கும் கனடிய பொதுத் தேர்தலை முன்னிட்டு கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் கியூபெக் மாகாணத்தில் இன்று தனது பிரச்சார வேலைகளை மேற்கொண்டார். மொன்றியால் நகரில் அவர் தெருவில் மக்களைச் சந்தித்து அளவளவியபோது ஒரு வெள்ளை இனத்தவர் சிங்கை அணுகி அவரது கைகளைக் குலுக்கிவிட்டு, ‘ தலைப்பாகையை வெட்டிவிட்டாயானால் நீ கனடியன் மாதிரி இருப்பாய்’ என ஆலோசனை கூறினார். சிங் அந்த வாக்காளரை எதிர்கொண்டு பதிலளித்த விதம் கனடா முழுவதும் அ…
-
- 0 replies
- 820 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 14 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பு அங்குள்ள தமிழர்களால் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிகவும் பழமையான தமிழ்மொழியை கற்பிப்பதற்கும், தமிழ் இலக்கியங்கள், அதன் பாரம்பரிய மற்றும் பண்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கும் தமிழ் இருக்கை அமைப்பு நிதி திரட்டி வருகிறது. அதன்படி, தமிழ் இருக்கை அமைப்பிற்கு 2 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14 கோடி ரூபாய் நிதி தமிழ் ஆர்வலர்கள் மூலம் கிடைத்துள்ளது. இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கும் அமெரிக்காவில் இந்த நிதியை கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்த நிகழ்…
-
- 0 replies
- 890 views
-
-
CANADA கனடா NEWS கனடிய தேர்தல்|கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொய் சொன்னாரா? அண்ட்றூ ஷீயர் காப்புறுதி முகவருக்கான அனுமதியைப் பெற்றிருக்கவில்லை – தி குளோப் அண்ட் மெயில் செப்டம்பர் 30, 2019 கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் காணப்படும் சுய குறிப்பு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷீயர் தான் முன்னாளில் சாஸ்கச்செவன் மாகாணத்தில் ஒரு காப்புறுதி முகவராகப் பணி புரிந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் அதற்கான உத்தரவுப் பத்திரத்தை மாகாண அரசிடம் பெற்றுக்கொண்டிருக்கவில்லை என கனடாவின் தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ‘தி குளோப் அண்ட் மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் அதன் தலைவர் அண்ட்றூ ஷீயர் பற்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை : நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கடந்த ஆகஸ்ட் 01 முதல் 31 வரை அவுஸ்திரேலியா மேற்கொண்ட எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அவுஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்டுள்ள மாதந்திர செய்திக்குறிப்பில், பல இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில், இலங்கையிலிருந்து 13 பேருடன் அவுஸ்திரேலியாவை படகு வழியாக அடைய மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்ட இவர்கள் யாருக்கும் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளது ஆஸி. எல்லைப்படை. இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் இவர்கள் மீண்டும் இலங்கைக்கே …
-
- 0 replies
- 711 views
-
-
மலேசியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜையின் மரணம் காணாமல் போன மனைவி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன… September 25, 2019 இலங்கையை சேர்ந்த பிரித்தானிய பிரஜை மலேசியாவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானிய பிரஜையான 40 வயதுடைய ஜனார்த்தனம் விஜயரட்ணம் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி அதிகாலையில், அவரது மலேசிய அண்ணி மற்றும் ஒரு மலேசிய நபருடன், சுட்டுக்கொல்லப்பட்டார். இவர்கள் பயணித்த காரை காவற்துறையினர் துரத்திச் சென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், அப்போது அவர் தனது மனைவி மற்றும் ஐந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் வாழ்வும் திருமணங்களும் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயமாகின்றது என்று கேட்டு வளர்ந்தவர்கள் பலர். இனப்படுகொலையில் இருந்து தம்மை பாதுகாக்க புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழுகபவர்கள் எம்மில் ஐந்து இலட்ச்சத்திற்கும் மேல். அதிலும் கனடா நாட்டில் வாழுபவர்கள் அதிகம். புதிய தேசம், புதிய மொழிகள், புதிய அனுபவங்கள். இருந்தாலும் எம்மில் பலருக்கும் சில பழமைவாத முறைகளை புலம்பெயர் நாடுகளிலும் தொடர ஆசை. முதலில் மொழியை, பின்னர் கல்வியை மற்றும் தொழில்வாய்ப்புக்களை கற்று முன்னேற அதிகம் எண்ணுவோம். அதில் கணிசமான வெற்றியும் கொண்ட சமூகம் எமது சமூகம். வெற்றியை அளவிடும் ஒரு சமூக அளவுகோலாக அந்தந்த சமூக குற்றச்செயல்களும் பார்க்கப்படுகின்றன. அதில் திருமணம் சார்ந்த குற்றங்களும…
-
- 7 replies
- 1.9k views
-
-
இன்னொரு தமிழ் இளைஞனின் உயிர் ரொரன்டோ பகுதியில் பறிப்பு சாரங்கன் சந்திரகாந்தன் ( Charankan Chandrakanthan) எனும் 25 வயதேயான தமிழ் இளைஞன் நேற்றிரவு Middlefiled and McNicoll உயிராபத்தான நிலையில் சூட்டுக் காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டு சற்று நேரத்தில் இறந்துள்ளார். இவருக்கும் இன்னொருவருக்கிடையில் ஏற்பட்ட பிணக்கின் போது மற்ற நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://toronto.ctvnews.ca/25-year-old-fatally-shot-in-scarborough-identified-by-loved-ones-1.4602516
-
- 7 replies
- 2.1k views
-
-
இலங்கைத் தமிழ்க் குடும்பம் நாடுகடத்தல் விவகாரம்: முழுமையாக விசாரிக்க ஆஸி. நீதிமன்றம் உத்தரவு அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் விவகாரம் தொடர்பில் முழுமையாக விசாரிக்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தற்போது பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்துள்ளார். பாதுகாப்பு கருதியே அவர்கள் தடுப்பு முகாமிற்கு அருகாமையில் உள்ள வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை நிராகரித்துள்ள பிரியா, “இது சுத்தப் பொய். நாங்கள் தடுப்பு…
-
- 0 replies
- 665 views
-
-
தமிழ் இளைஞர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்! அவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவின் சிட்னி – Strathfield பகுதியைச் சேர்ந்த 28 வயதான சக்திவேல் லோகநாதன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு நியூசவுத் வேல்ஸ் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சக்திவேல் லோகநாதன் கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் Wollongong-க்கு அருகிலுள்ள Scarborough ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து எவ்வித தகவல்களும் இல்லை’ எனவும்…
-
- 0 replies
- 796 views
-
-
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பள்ளிப் பாடத்திட்டத்தில் விருப்பப்பாடமாக தமிழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு பாடமாக்கப்படுகிறது http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526935
-
- 1 reply
- 726 views
-
-
கனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம் சிவதாசன் பல மேற்கத்தய நாடுகள் வெளிநாட்டு மாணவர்களின் வரவை ஊக்கப்படுத்த ஆரம்பித்துள்ளன. பிரித்தானியா, கனடா அவற்றில் சில. கனடாவின் சனத்தொகை குறையாமல் வைத்திருக்க வேண்டுமானால் வருடமொன்றுக்கு 350,000 குடிவரவாளர்களை அனுமதிக்க வேண்டும். பிறப்பு வீதம் குறைவதனாலும், அகதிகள் வரவு குறைந்ததனாலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து முன்னர் போல் குடிவரவாளர்கள் வருவது ஏறத்தாழ நின்றுபோய் விட்டதாலும் கனடா எப்படியாவது சுமார் மூன்றரை இலட்சம் குடிவரவாளரைக் கொண்டு வந்தேயாக வேண்டும். இதனடிப்படையில் கனடிய குடிவரவமைச்சு வெளிநாட்டு மாணவர்கள் மீது கண்வைக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்காக அவர்களின் வரவை இலகுவாக்க சில…
-
- 1 reply
- 1k views
-
-
இன்று 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வருவதால் இது அபாய நாள் என சிலர் நம்புகின்றனர். குறிப்பாக மேற்குலக நாடுகளில் இதை புலம்பெயர் தமிழர்கள் பார்த்துவருகின்றனர். உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு நம்பிக்கை உள்ளது. உதாரணமாக தென் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை நல்ல நாள் இல்லை என பலர் கருதுகின்றனர். அதே செவ்வாய்க்கிழமையை வட இந்தியர் மங்கள வாரம் என அழைத்து பல சுப காரியங்களை நிகழ்த்துகின்றனர். இவ்வகையில் மேல் நாட்டினர் 13ஆம் தேதியை கெட்ட நாள் என கருதுகின்றனர். அத்துடன் அதோடு வெள்ளிக்கிழமை அன்று 13ஆம் தேதி வந்தால் அது அபாயமான நாள் என பலரும் பயந்து வருகின்றனர். சிலர் வேலைக்கும் போவதில்லை ஆனால் காலத்தின் சுழற்சியில் இந்த 13ஆம் தேதியுடன்…
-
- 2 replies
- 914 views
-
-
27 வயதான தன் முன்னாள் மனைவியை வாளால் பல முறை வெட்டி ஈழத் தமிழர் ஒருவர் படுகொலை செய்துள்ளார். நேற்று புதன் கிழமை (செப்ரம்பர் 11) 27 வயதான தர்சிகா ஜெகநாதனை 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் வீட்டின் நடைப்பாதைக்கு அருகில் வைத்து தள்ளி விழுத்திய பின்னர் வாளால் பல முறை வெட்டி படுகொலை செய்துள்ளார். படுகொலை செய்த பின்னர் காரில் ஏறி தப்பிச் சென்றவர் பின்னர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இவர் கொல்லப்பட்டவரின் முன்னாள் கணவர் என்று சில செய்திகளும், விவாகரத்து வழக்கு இன்னும் முடியவில்லை என வேறு சில செய்திகளும் சொல்கின்றன. இது ரொரண்டோ மாநகரில் இவ் ஆண்டில் இடம்பெற்ற 45 ஆவது கொலையாகும். ----- Man, 38, charged with 1st-degree murder in fatal Scarbo…
-
- 81 replies
- 11.2k views
-
-
ரொறன்ரோவில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய, இரு தமிழ் இளைஞர்கள் கைது! ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது குயிண் வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த துரித உணவகத்தில் 34 வயது ஆண் ஒருவர் வரிசையில் காத்துக்கொண்டிருந்த போது, உணவகத்தினுள் நுளைந்த இருவர் குறித்த இந்த நபருடனும் வரிசையில் காத்திருந்த பிறிதொருவருடனும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முரண்பாட்டின் போது, வெளிய…
-
- 1 reply
- 913 views
-
-
‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்! ‘வேப்பிங்’ எனப்படும் புகைத்தலினால் அமெரிக்காவில் இது வரையில் 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீப காலங்களில் நூற்றுக்கணக்கானோர் சுவாசப் பை தொடர்பான வியாதிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது வியாதிகளை சாதாரண தொற்று நோய்கள் எனக் கருதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவே கருதப்படுகிறது. சமீப காலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பலர் இளைய வயதினர் எனவும் இஅவர்கள் எல்லோரிலும் காணப்பட்ட பொது அம்சம் இவர்கள் வபிங் என்ற புகைத்தலைச் செய்தவர்கள் என்றும் தெரிய வந்த போது இப் புகைத்தலின் பின்னணி பற்றி …
-
- 11 replies
- 2k views
-