வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை காலை 4 மணி முதல் மாலை 7 மணிவரை இடம்பெற்றிருந்தது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்…
-
- 0 replies
- 364 views
-
-
கனடா-ஸ்காபரோவில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நடந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமானார். யாழ்-கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட ஞானபுஸ்பம் செபஸ்தியாம்பிள்ளை (77) என்பவரே உயிரிழந்தவராவார். ஞாயிறு இரவு ஸ்காபரோ நகரில் நடைபெற்ற தமிழர் தெருவிழாவை கண்டு களித்து விட்டு அருகில் இருக்கும் தனது இல்லத்திற்கு கணவருடன் கால் நடையாக திரும்பிய பொழுதே கார் மோதி இவர் மரணமானார். http://www.seithy.com/breifNews.php?newsID=189196&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கை பெற்றோருக்கு பெருமை சேர்த்த கனேடிய தமிழன்! இலங்கையில் தனது பெற்றோர் பயன்படுத்திய கார் போன்று, பல வருட முயற்சியின் பயனாக மீளவும் கனேடிய தமிழர் ஒருவர் தயாரித்துள்ளார். இலங்கையை சேர்ந்த ஸ்ரீ இராமலிங்கம் என்பவரே பழமை வாய்ந்த காரை தற்போது தயாரித்துள்ளார். கனடாவில் இன்று நடைபெறும் தமிழர் திருவிழாவின் போது அந்த காருடன் இராமலிங்கம் பெருமையாக அங்கே வந்து நிற்பார் என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் Austin மோட்டார் வாகன நிறுவனத்தினால் இளம் பச்சை நிறத்திலான A40 Somerset என்ற இந்த 1950ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இராமலிங்கத்தின் சிறுவனாக இருக்கும் போது, இதே போன்றதொரு காரை அவரது பெற்றோர் இலங்கையில் பயன்படுத்தியுள்ளன…
-
- 1 reply
- 875 views
-
-
உலக கராத்தே சுற்றுப் போட்டியில் ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை சீனா நாட்டின் ஷங்காய் நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் சுவிஸ் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை புரிந்துள்ளனர். இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் 6 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர். அந்த வகையில் சுவிஸ் நாட்டிலிருந்து அந்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினரை உள்ளடக்கிய குழுவினர் முதற்தடவையாக பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்டுள்ளது. http://newuthayan.com/story/23668.html
-
- 0 replies
- 510 views
-
-
இலங்கையர் வீட்டின் மீது இனவெறி தாக்குதல்! லண்டனில் தமிழர்கள் வாழும் வீடொன்றில் இன வன்முறைகளை தூண்டும் வகையிலான தகாத வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. liverpool பிராந்தியத்திலுள்ள Speke என்ற இடத்திலுள்ள வீட்டின் வெளியே அசிங்கமான இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதனை காண முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டின் வெளி பகுதி சுவரின் மீது கறுப்பு நிறத்தில் தகாத வார்த்தைகள் மற்றும் அல்லாஹு அக்பர் என இனவெறி வசனம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்லாஹு அக்பர் என்பது “அல்லாஹ்வே சிறந்தவர்” என்று மொழி பெயர்க்கப்படும் ஒரு அரபு சொற்றொடராகும். முஸ்லிம்கள் மற்றும் அரபு பேச…
-
- 5 replies
- 1.4k views
-
-
சட்டவிரோத தொழிலாளர்களை நியமித்த காரணத்தினால் பிரித்தானியாவில் உள்ள PFC என்ற உணவகம் மூடப்படும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்துறை அலுவலகத்தால் பெறப்பட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில், பிரித்தானியாவின் Moulsham தெருவில் உள்ள PFC உணவகம் கடந்த ஜுன் மாதம் 2ஆம் பொலிஸ் மற்றும் குடிவரவு அதிகாரிகளினால் பார்வையிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பணி புரிய உரிமம் இல்லாத இரண்டு இலங்கையர்களை அங்கு அதிகாரிகள் சந்தித்ததாக கூறப்படுகின்றது. அந்த உணவகத்தில் இந்த இரண்டு பணியாளர்களும் தங்கும் அறையில் இருந்து மூன்று இரட்டை தட்டு கட்டில்களை Essex பொலிஸார் அவதானித்துள்ளனர். இந்த நிலையல் அவர்களில் பெண் ஒருவர் அங்கு சம்பளம் பெற்று கொள்ளாமல் உரிமையாளருக்கு ஆதரவாக செய…
-
- 1 reply
- 782 views
-
-
கனடாவில் தமிழ் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கனடா ஸ்காபரோ (Scarborough) நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கனடாவில் தமிழ் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கனடா ஸ்காபரோ (Scarborough) நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. ஸ்காபரோ நகர் பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த தமிழ் பெண் வந்திருந்த போது,…
-
- 14 replies
- 1.4k views
-
-
பாட்சுவல்பாக் தமிழாலய மெய்வல்லுனர் போட்டி-2017 யேர்மன் தமிழ்க்கல்விக் கழகத்தின் வழிகாட்டலோடு செயற்பட்டுவரும் தமிழாலயங்களில் ஒன்றான பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்ப் போட்டி 20.08.17 அன்று சிறப்பாக நடைபெற்றது. மங்கலவிளக்கேற்றல் யேர்மன் தேசியக்கொடி மற்றும் தமிழாலயக்கொடி ஏற்றல் அகவணக்கம் தமிழாலயப்பண் இசைத்தல் அணிநடை என்பவற்றைத் தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக உற்சாகத்தோடு இடம்பெற்றன. பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்போட்டியிலே அயலிலேயுள்ள பிராங்பேர்ட் டாம்ஸ்ரட்-றோஸ்டொவ், மேர்பெல்டன்-வால்டொவ் மற்றும் பென்ஸ்கைம் தமிழாலயங்களின் மாணவர்கள் பெற்றோர்கள் பார்வையாளர்களெனப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்குபற்றிச் ச…
-
- 0 replies
- 641 views
-
-
இனவாத சோப்பு வழங்கி. இணையத்தினை கலக்கிக் கொண்டிருக்கும் வீடியோ. கைகழுவ கறுப்பருக்கு வழங்காத சோப்பை, வெள்ளையர்களுக்கு மட்டும் வழங்குகிறது இந்த உபகரணம். பாத்ரூம் போய் விட்டு கை கழுவ போன கறுப்பர், சோப்பு மெசினில் கையை நீட்டுகிறார். சோப்பு வரவில்லை. சரிதான் மெசின் பழுதாகி விட்டது என்று நினைத்துக் கொண்டே, கையைக் கழுவுகிறார். கழுவிக் கொண்டு இருக்கும் போது வந்த வெள்ளையர், கையை நீட்ட, சோப்பு வருகிறது. அட, இப்ப வேலை செய்யுதே என்று இவர் மீண்டும் கையை நீட்ட.... க்கும்.. வரவில்லை. என்னடா இது... யோசித்தார். வெள்ளை திசு பேப்பரை எடுத்து காய் மேல் வைத்து நீட்டினார். வந்தது. புரிந்து விட்டது..... மெசின்... இனவெறி காட்டுகிறது. அடப் பாவி மெஷின…
-
- 0 replies
- 1.4k views
-
-
கடலில் மூழ்கி இறந்து போன தனது சகோதரன், குழந்தை வடிவில் உயிர்வாழ்வதாக லண்டனில் வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் லண்டன் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற நிலையில் 5 இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா என்பவரும் பலியாகி இருந்தார். எதிர்வரும் 24ம் திகதி ஓராண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அவரின் மரணம் குறித்து சசோதரி கிருஷாந்தனி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார். இந்துஷன் உயிரிழந்து இரண்டு மாதங்களில் எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. எமது கலாச்சாரத்தின்படி ஒரு குழந்தை பிறக்கும் போது சடங்குகள் ந…
-
- 0 replies
- 722 views
-
-
ஆஸ்திரேலியா தேர்தல் களத்தில் யாழ்ப்பாணத்துத் தமிழன் ஆஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் போட்டியிடவுள்ளார். யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இறுதிப் போர் காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வாய்ஸ் ஒப் தமிழ்” என்னும் அமைப்பை நிறுவியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியாவில் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும…
-
- 0 replies
- 744 views
-
-
எதனையும் துணிந்து செய்யும் ஆற்றல் பெண்களுக்கும் உள்ளது பாடகி, பெண் விமானி சாதனைப்பெண் அர்ச்சனா செல்லத்துரை உடனான நேர்காணல் எந்தத்துறையும் யாருக்கும் தனித்ததொன்றல்ல. எதனையும் அச்சமின்றி எதிர்கொள்ளும் சக்தி பெண்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் அர்ப்பணிப்பாகச் செயற்பட்டால் வெற்றி நிச்சயம் என்கிறார் பாடகியாகவும், பெண் விமானியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் எம் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இளம் தமிழ் பெண் அர்ச்சனா செல்லத்துரை. மறத்தி இசைத் தொகுப்பினை தாய் மண்ணில் வெளியீடு செய்வதற்காக வருகை தந்திருந்த அர்ச்சனா செல்லத்துரை கேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ…
-
- 2 replies
- 703 views
-
-
பாரீஸ் லாக்கூர்நெவ் சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா
-
- 7 replies
- 964 views
-
-
Toronto officer buys shirt, tie for shoplifter who needed outfit for job interview திருடியவருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் நிரன் ஜெயனேசனுக்கு வோல்மாட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் சேட்டும் ரையும் சொக்சும் திருடியதாக தகவல் கொடுக்கப்பட்டு அங்கு செல்கிறார். அங்கு சென்று திருடியவரை விசாரித்த போது அவ்விளைஞர் வேலை நேர்முக தேர்வுக்கு உடை தேவை எனவும் தன்னிடம் இல்லாததால் திருடியதாகவும் சொல்கிறார். அவருக்கு எந்த தண்டனையும் வழங்காமல் தானே அவரது உடைகளை வாங்கி கொடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் நிரன். A Toronto police officer who purchased a shirt and tie for a shoplifter who needed an outfit for a job interv…
-
- 7 replies
- 1k views
-
-
இலங்கை இளைஞன் சுவிட்சர்லாந்தில் உயிரை மாய்த்துள்ளார் Share சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் தவறான முடிவினால் தனது உயிரை மாய்த்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 27 வயதான தயாகரன் கந்தசாமி என்பவரே தொடருந்தில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த தயாகரன், சுவிட்சர்லாந்தின் லுசர்ண் நகரில் வசித்து வந்துள்ளார். இவர் தொடருந்தில் பாய்ந்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண…
-
- 1 reply
- 768 views
-
-
எயிட்ஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுப்பிடித்த இலங்கையருக்கு இங்கிலாந்தில் அங்கீகாரம் இது வரை எச்.ஐ.வி தொற்றுடையவர்களை குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறை ஒன்றை எவரும் கண்டுப்பிடித்திராத நிலையில் தடுப்பு மருந்தை கண்டு பிடித்த இலங்கை இளைஞருக்கு இங்கிலாந்து ராணியின் அதியுயர் விருது பகிங்ஹாம் மாளிகையில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். குறித்த சாதனையாளரான ரகித மாலேவத கொழும்பு வைத்திய பரிசோதனை நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பரிசோதனையாளராக கடமையாற்றுகிறார். உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் எச்.ஐ.வி யை குணப்படுத்தும் மருந்தை ரகித நாலந்த பாடசாலையில் கல்விப்பயிலும் காலத்திலேயே கண்டுப்பிடித்துள்ளார். http://www.vir…
-
- 0 replies
- 660 views
-
-
சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை..!! கடந்த வெள்ளிக்கிழமை சுவிஸ்லாந்தில் 22 வயது தமிழ் இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் சென்ட் கோல் (St-Gall) மாநிலத்தில் வசித்துவரும் 22 வயது சுவிஸ் பிரஜையான தமிழ் இளைஞனே இவ்வாறு மக்கள் நடமாட்டம் அதி…
-
- 4 replies
- 940 views
-
-
ரொரன்ரோவில் நாடக கலைஞர் பாபு காலமானார். கனடாவில் கலையுலகில் நன்கு அறியப்பட்டவரும், ரொரன்ரோ நகரில் உள்ள “தேடகம்” நூலக வளர்ச்சியில் பங்கெடுத்து கொண்டவரும் “அரங்காடல்” நாடக பட்டறையின் ஸ்தாபகர்களில் ஒருவருமான பாபு என செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்ரீதரன் பரதராஜா ரொரன்ரோவில் காலமானார். அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave., Markham) த்தில் 11-08-2017 மாலை 5 மணி தொடக்கம் 9 மணி வரை வைக்கப்படும் என அறியப்படுகிறது. http://tamilsguide.com/blog/canada-news/11516
-
- 0 replies
- 801 views
-
-
யூலை ஓகஸ்ட் மாதங்கள் ஐரோப்பிய மக்களுக்கு முக்கியமானவையான காலங்களாகும். இந்த மாதங்களில் வரும் கோடைகால விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக உல்லாசத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடங்களையும் நாடுகளையும் நாடி செல்வதை மேற்குலக நாடுகளில் உள்ள மக்கள் வழமையாக கொண்டுள்ளனர். இலங்கையை போன்ற ஆசிய நாடுகளை போலன்றி ஐரோப்பிய நாடுகளில் வழமையான விடுமுறை நாட்களை தவிர நான்கு முதல் 6 கிழமைகள் வரை விடுமுறைகள் வழங்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வருடத்தில் மேலதிகமாக ஒரு மாத சம்பளமும் வழங்கப்படுகிறது. இலங்கையர்களை போல சொத்து வீடு நகை நட்டு வாங்கி சேர்க்கும் பழக்கம் ஐரோப்பியர்களிடம் கிடையாது. அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அல்லது அடுத்த சந்ததிக்கு என சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்…
-
- 60 replies
- 4.6k views
- 2 followers
-
-
இங்கிலாந்தில் தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்யவிருந்த இளைஞர் ஒருவரை திட்டமிட்டு படுகொலை செய்த ஈழத் தமிழர் ஒருவரின் வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் விவாகரத்துச் செய்த தனது முன்னாள் மனைவியை மறுமணம் முடிக்கவிருந்த இன்னொரு ஈழத்தமிழரை பொறாமையின் காரணமாக ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவர் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளார். இதற்கென அவர் பிரத்தியேகமாக ஆட்களை நியமித்து சிவானந்தன் சுரேன் என்னும் அவரைக் கடத்தி சித்திரவதையின் மூலம் படுகொலை செய்துள்ளார் என்று அறியப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்த வருடம் ஜனவரி மாதம் முதற்பகுதியில் சுரேன் என்பவரது சடலம் தலையில் பாரிய காயங்களோடு மீட்கப்பட்டது. இது குறித்த விசாரண…
-
- 8 replies
- 1.5k views
-
-
bbc யின் புகழ் மிக்க டிராகன் டென் (Dragon Den) நிகழ்ச்சி. இதில் பங்குகொண்ட ஒருவரின் வியாபாரத்தில், பீட்டர் ஜோன்ஸ், தியோ பாப்டிஸ் ஆகிய இரு டிராகன்கள் முதலீடு செய்திருந்தனர். Red Letter Days எனும் நிறுவனத்தில் கணக்குப்பிள்ளையாக நம்ம அகிலன் செல்வரத்தினம். சூதாட்ட பழக்கம் கொண்ட அகிலன், தனது பணத்தேவைகளுக்காக, காசோலைகளை, பொய்யான கையெழுத்துகளுடன், காசாக்கி உள்ளார். லண்டன் வூட்கிறீன் மேல் நீதிமன்றில் நிறுத்தப் பட்ட அகிலன், வியாபார நிறுவங்களுக்கான பண மீள் செலுத்துகைக்காக (refund) என்று சொல்லியே வங்கியிடம் இருந்து, சூதாட பணத்தினைப் எடுத்துள்ளார் என அரச வழக்குத் தொடுனர் லிண்டா சாமல் தெரிவித்தார். மிக நீண்ட நாட்களாக, நடந்துள்ள ஒரு கடுமையான நம்பிக்கை மோசட…
-
- 5 replies
- 1.3k views
-
-
கோலாலம்பூரில் இலங்கையர்கள் கைது Share மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்டு இலங்கையர்கள் சிலர் கைதாகியுள்ளனர் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் நடவடிக்கைகளின்போது, 400க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் பல இலங்கையர்களும் அடங்குவதாக மலேசியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோனோர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதும், இன்னும் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 1 reply
- 661 views
-
-
இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது பெருந் தொகைப் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அறுவரும் 11 இலட்சத்து 98 ஆயிரம் திர்ஹம் பணத்தை திருடியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு நிறுவனங்களுக்கு உரிய பணத்தை வாகனத்தில் கொண்டு செல்லும் போது இவர்கள் பணத்தைத் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/15270.html
-
- 11 replies
- 1.3k views
-
-
கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் விபத்து நிகழ்ந்துள்ளது. இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்று ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். ரொரன்டோ போக்குவரத்துச் சபையின் (TTC) பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேருந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் …
-
- 29 replies
- 2.3k views
- 1 follower
-
-
கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் கைது கனடாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7 வருடத்தில் இரண்டு முறை தன்னை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். 2010 - 2016 ஆம் ஆண்டுடிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தான் இரண்டு முறை குறித்த நபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அந்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 371 Neilson வீதியில் அமைந்துள்ள கல்வி சேவையினை வழங்கும் நிறுவனம் ஒன்றின் இயக்குநரே சந்தேக நபர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் தொழிலு…
-
- 0 replies
- 836 views
-