வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
நோர்வேயிய மக்களின் கொண்டாட்டமும் ஈழத்தமிழரின் கலைகளும் 24.08.14 ஞாயிற்றுக்கிழமை அன்று திறம்மனில் நடைபெற்ற elvefestival இல் திறம்மன் அன்னை பூபதி வளாகத்தின் அழைப்பை ஏற்று நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினர் திறம்மன் elvefestival இல் சிற்றுண்டிச்சாலை நடாத்தினர். இதற்கு கணிசமான அளவு நோர்வேஐpய மக்களும் வேற்று நாட்டு மக்களும் வந்து சிற்றுண்டிகளை சுவைத்து மகிழ்ந்தனர். எமது நாட்டு உணவான அப்பம் தோசை வடை என்பனவற்றை அவர்கள் ரசித்து ருசித்து உண்டதே கண்கொள்ளாக் காட்சி. சில வயோதிப நோர்வேஐpயர்கள் மகளிர் அமைப்பினர் அணிந்திருந்த சேலையின் அழகு குறித்து விமர்சித்தனர் இன்னும் சிலரோ நீங்கள் வரும் வருடமும் சிற்றுண்டிச்சாலை நடத்துவீர்கள் தானே என்று வினா எழுப்பினர். இதைத் தவிர திறம்மன் ஒஸ்லோ அ…
-
- 0 replies
- 752 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னராக ஆரம்பித்து தமிழின அழிப்பிற்கு சர்வதேசத்திடம் நீதி கோரி ஐ.நா நோக்கி பயணிக்கும் ஈருருளி ஆரம்பிக்கும் இடம்: ஐரோப்பிய ஒன்றியம் (Schumanplein) பெல்ஜியம் நேரம்: 03.09.2014 அன்று 12 மணிக்கு முடிவடையும் இடம்: ஐ.நா முன்னராக ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் 15.09.2014 (Facebook)
-
- 1 reply
- 722 views
-
-
15.09.2014 திங்கள் 14.00 - 17.30 UNO Geneva ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் பேரணி: ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ நா சபை முன்றல் வரை. மேலதிக தொடர்புக்கு: சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு : 0789650918, 0786629306, 0793868462
-
- 9 replies
- 710 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா.விசாரணை குழுவிடம் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அனுப்பி வைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது. 21.02.2002 முதல் 15.11.2011 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையாளர் அலுவலகத்தின் இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகள் அனுப்பப்பட வேண்டும். முறைப்பாடுகளை ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழிய…
-
- 34 replies
- 2.5k views
-
-
-
ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு நடந்த நியமனத் தேர்தலில் திரு கரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்றார். அவருக்கு 1400 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஸ்வானிக்கு 600 வாக்குகளும் கிடைத்தன. கரி வெற்றி பெற்று விட்டார் என லிபரல் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கனடிய அரசியல் கட்சிகளில் ஒன்றான லிபறல் கட்சி சார்பில் ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு போட்டியிட இருவர் ஒரே கட்சியில் விண்ணப்பித்திருந்த நிலையில் அவாகளுள் ஒருவரை தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட வைப்பதற்காக கட்சியினால் நியமனத் தேர்தல் 20-08-14 அன்று மாலை நடாத்தப்பட்டது. இதில் கனடிய தமிழரான சட்டத்தரணி கரி ஆனந்த சங்கரி வெற்றிபெற்றார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற மாலைநேர நியமணத் தேர்தலில் 1400 வா…
-
- 33 replies
- 3.6k views
-
-
ஐ.நாவில் மகிந்த! பொங்குதமிழென அணிதிரளத் தயாராகும் வட அமெரிக்கத் தமிழர்கள்!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் Sanjith August 21, 2014 ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் எதிராக, வட அமெரிக்கத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் நிகழ்வொன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 25ம் நாளன்று சிறிலங்கா அரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நியூ யோர்க் ஐ.நாவின் முன் *’பொங்குதமிழ்’ *ஒன்றுகூடலாக இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. இந்தியாவில் புதிதாக ஆட்சிப்பீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க இருப்பதனா…
-
- 0 replies
- 527 views
-
-
உறவுகளிடம் ஒரு வேண்டுகோள்... தமிழ் மீதும் தமிழ் தேசியத்தின் மீதும் பற்றும் பாசமும் கொண்ட பிரான்ஸ் வாழ் நண்பர்களால் "முகடு" என்ற பெயரில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சஞ்சிகை ஓன்று வெளிவர இருக்கின்றது அதற்க்கு அன்பு உறவுகளிடம் இருந்து ஆக்கங்களை எதிர் பாக்கின்றோம்...... முதல் சஞ்சிகைக்கான ஆக்கங்களை இந்த மாதம் முடிவதற்குள் அனுப்பி வைப்பீர்களானால் வசதியாக இருக்கும் மேலதிக விபரங்களுக்கு எமது கள உறவு அஞ்சரன் அவர்களை தொடர்புகொள்ளவும் நன்றிகள் இந்த இளைஞர்களின் முயற்ச்சிக்கு அதரவு அளிப்பீர்கள் என்று நம்புகின்றோம்
-
- 32 replies
- 3k views
-
-
200 நோயாளிகள் திடீர் மரணம் - அவுஸ்திரேலியாவில் பரபரப்பு அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும் தகவல் குறிப்புகளில் கவனக்குறைவாக இதுபோல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று இம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அனைவ…
-
- 8 replies
- 990 views
-
-
லண்டனில் 100 மைல் சைக்கிள் ஓட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வரும் வல்வையைச் சார்ந்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்ற 100 மைல் சைக்கிள் ஓட்டத்தில் (Prudential Ride London 100) வல்வையைச் சேர்ந்த குடும்பஸ்தரான திரு.அருட்பிரகாசம் நரேந்திரன் பங்குபற்றி போட்டியை முடித்துள்ளார். இந்த சைக்கிள் லண்டனில் இருந்து சுரே ஹில்ஸ் வரை நீடித்திருந்தது. வருடா வருடம் நடைபெறும் இப்போட்டி இந்த முறை, நேற்று முன்தினம் அட்லாண்டிக் சமுத்திரத்தில் உருவான புயல் பேர்தா (Bertha) காரணமாக 86 மைல்களுடன் முடிவிற்கு வந்தது. திரு.நரேந்திரன் இந்தப்போட்டியில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக பங்குபற்றிவருவமைக் கு…
-
- 6 replies
- 821 views
-
-
லிபரல் கட்சியினர், ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) தொகுதிக்கு தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான ஆயுத்தங்களைச் செய்தவண்ணம் உள்ளபோது ஹரி ஆனதசங்கரியின் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. லிபரல் கட்சியினர், புதிய ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) தொகுதியில் வருகின்ற பொதுத் தேர்தலுக்கான தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான நியமனத் தேர்தலை எதிர்வரும் ஆவணி 20ம் திகதி மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை ஸ்காபரோ கொன்வென்சன் சென்ரரில் (Scarborough Convention Centre) நடாத்துவதாக அறிவித்துள்ளனர். இந்த நியமனத் தேர்தலில் நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரியும் போட்டியிட அறிவித்திருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. தனது வாழ் நாள்…
-
- 22 replies
- 1.3k views
-
-
ஒஸ்லோவில் சில வருடமாக சிவைன் எரிக் எண்டு ஒரு வயதான, மென்மையான, அதிகம் அதிர்ந்து பேசாத,தனிமையாக வாழ்ந்த நோர்வேயிய நண்பர் உண்மையாகவே எப்பவும் நண்பராக இருந்தார், அடிக்கடி ஒரு குறிப்பிட்ட பப்பில், குறிப்பிட்ட சில நாட்களில்,வேறு சில குறிப்பிட்ட நண்பர்களுடன் அவரைச் சந்திப்பேன். என்னைப் போன்ற வந்தேறுகுடி பல்லின கலாச்சார மக்களை அவர் எப்பவும் நேசிப்பார்,நெறய கீளைதேய சமய நம்பிக்கை,தத்துவ விசியம் அவருக்கு எங்களை விட நல்லா தெரியும், இர்க்கு வேதத்தில் வரும் கபோடோநிதசம் எல்லாம் விளக்கமாத் தெரியும். ப்றேடிறிச் நிட்சேயின் யாரதுஸ் டிரா தத்துவ புத்தகத்தை சப்பித் துப்புவார்.முக்கியமா அவரைச் சந்திப்பது, புத்தகங்கள் வாசிக்க சோம்போறியான என்னோட மூளையில், பல புத்தககங்கள் வாசித்த அவருடன் பே…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 7 replies
- 1.1k views
-
-
14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்நகர்வு! Vildbjerg cup 2014 ன் மூன்றாம் நாளான 03.08.2014 அன்று நடை பெற்ற 2 போட்டிகளிலும் 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 2 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடி அரையிறுதி ஆட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர். இதனை தொடர்ந்து களம் இறங்கிய தமிழீழ அணி 01.க்கு 2 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர். இருப்பின் தமிழீழ அணி 4 இடத்தில் வெற்றிபெற்றன. எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள். http://www.pathivu.com/news/32914/57/14/d,article_full.aspx
-
- 0 replies
- 746 views
-
-
கடந்த காலங்களில் எம் இனத்துக்கான விடுதலை வழித்தடத்தில் உங்களுடன் நானும் இணைந்தே பயணித்திருக்கிறேன். அதே நம்பிக்கையுடன் எதிர்வரும் மார்க்கம் மாநகரசபைத் தேர்தலில் ஐந்தாம்(5) வட்டாரத்தில் உங்கள் வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன். எம் இனத்தினிடையே எத்தனையோ ஆற்றலாளர்கள் அறிவாளிகள் உள்ளனர். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் நாம் பங்கெடுத்து எம்பங்களிப்பினை உறுதியாகவும் நேர்மையாகவும் ஆற்றுகின்ற வேளையில்தான் இந்த உலகம் எம்மை இன்னும் உன்னிப்போடு கவனிக்கும். எனவே நகர மட்டத்திலான அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுத்து எனது பிரதேசத்தில் வாழும் எல்லா இன மக்களின் தேவைகளையும் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உண்மையுடனுன் நேர்மையுடனும் திறமையாக செயற்படுவேன் என்பதை உறுதியுடன் கூறுகின்ற…
-
- 10 replies
- 1.2k views
-
-
சாதித்தது Australia இந்தியாவுக்கு திரும்பி போகமாட்டம் இந்திய தூதரக அதிகாரிகளுடன் பெசமாட்டம் என்று அடம்பிடித்து அதிகாரிகளுக்கு தலைவலி கொடுத்து வந்த 157 தமிழ் அகதிகளையும் நவுரு தீவுகளுக்கு இரவோடு இரவா அனுப்பியாச்சு....... ஆஸ்திரேலியாவா கொக்கா....யாரு கிட்ட.....
-
- 11 replies
- 1.2k views
-
-
ஆறு வருடங்களுக்கு முன்பு அங்கோர்வாட் பற்றி முதன் முதலில் அறியக் கண்டேன். அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சிந்தையை ஆக்கிரமித்தது. எண்ணத்தில் மேலெழுந்த ஆசையலைகளை..தற்பொழுது சாத்தியமில்லை என அறிவு அடக்கியது. காலச் சுழற்சியில் அந்த எண்ணம் காணமல் போய்விட்டது.. போன மாதம் திடீரென்று அங்கோர்வாட் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் தலை தூக்கியது. இந்த முறை சென்றே ஆக வேண்டும் என்ற அளவுக்கு மனதில் நிலைத்து விட்டது. மனைவி குழந்தைகள் கோடை விடுமுறைக்காக தமிழகம் சென்று விட்டார்கள். கைக்குழந்தை இருப்பதால் அவர்களை கண்டிப்பாக அழைத்துச் செல்ல முடியாது. இதைவிட வேறு வாய்ப்பு கிட்டுமா !! மளமளவென்று மனது கணக்குப் போட ஆரம்பித்து விட்டது. முதலில் பயணம் எவ்வளவு நாள்? செலவுக்கு எவ்வளவ…
-
- 39 replies
- 8.3k views
-
-
பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய ஈழத் தமிழ் இளைஞன் ஒருவருடைய உடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால் மீட்க்கபட்டுள்ளது. இச்சடலம் 23வயது டைய இராஜதுரை லஜீவன் என அடையாளம் காணபட்டு ள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://www.sankathi24.com/news/44743/64//d,fullart.aspx
-
- 14 replies
- 1.3k views
-
-
கடந்த மூன்று ஆண்டுகளாக என் வீட்டில் வளரும் வாழை இந்த ஆண்டு குலை போட்டுள்ளது.
-
- 43 replies
- 3.8k views
-
-
புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்தாலும் எமது இரண்டாம் தலமுறை தமிழ் இளையோர்கள் பல்வேறு வகையில் தமிழின அடையாளத்தை நிலை நிறுத்துவதில் முன்னின்று உழைப்பதை அனைத்து நாடுகளிலும் கவனிக்க கூடியதாக அமைகின்றது. அந்தவகையில் யேர்மனியில் Dortmund நகரில் நடைபெறும் உதைப்பந்தாட்டமும் / பல்லின சமூக ஒருங்கிணைப்பும் எனும் தலைப்பில் நடைபெறும் உதைப்பந்தாட்டாச்சுற்றுப்போட்டியில் பல்வேறு சர்வதேச நாடுகளின் இளையோர்களுடன் , ஈழத்தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தி குறிப்பிட்ட நகர தமிழ் இளையோர்கள் வெற்றிகரமாக விளையாடி இன்று 27.07.2014 மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். இச் சுற்றுப்போட்டியில் யேர்மனி, மரோக்கோ, கானா, கொங்கோ, குடிஸ்தான், அங்கோலா, துருக்க…
-
- 0 replies
- 679 views
-
-
-
- 0 replies
- 717 views
-
-
இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன்! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புை அமைப்பை வடிவமைத்திருந்தார். அதன…
-
- 25 replies
- 2.2k views
-
-
கனடா-ரொறொன்ரோவை சேர்ந்த Thinath Ganendralingam என்ற 20-வயது மனிதன் அசட்டு சிரிப்புடன் அவசரத்தில் இரண்டு முயல் குட்டிகளை நசித்து கொலை செய்ததுடன் மற்றொரு குட்டியை மூழ்கடித்தும் உள்ளார் என Barrie நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விலங்கு கொடுமை குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளார். இவருக்கு 3-வருடங்கள் நன்னடத்தை சோதனையுடன் 7-மாதங்கள் சிறைத்தண்டனையும் மிருகங்கள் வைத்திருப்பதற்கு வாழ்நாள் தடையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வயது வந்த ஒருவரின் துணை இன்றி 16-வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுற்றி இருப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகள் சொல்வதற்கே வெறுப்பூட்டத்தக்கதாக உள்ளதென அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ரொற…
-
- 10 replies
- 1.6k views
-
-
கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் எழுர்ச்சியுடன் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு நேற்று ஜூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் சதுர்க்கத்தில் நினைவு கூர்ந்தார்கள்.http://www.pathivu.com/news/32603/57//d,article_full.aspx இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும் தோளோடு தோள் நிறுக்கும் தோழர்களாக தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம் எனவும் எமக்கான குரலாக தாம் என்றும் பாராளுமனறத்தில் ஒலிப்போம் எனவும் உறுதி அளித்தார்கள். இந்நி…
-
- 0 replies
- 1.1k views
-
-
யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள் ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் டோட்முண்ட் Kiefer Str.24 , 42225 Dortmund(Hombruch) Tel.:0049 231 72515165, fax: 0049 231 72515166, E-mail:info@sivantempel-dortmund.de www.sivantempel-dortmund.de 2. ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் ஹம் Siegenbeckstr.04, 59071 Hamm-Uentrop, http://www.amman-tempel- hannover.de, http://de.webnode.com 18. ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் கஸ்ரப்றக்சல் Wartburg Str.30, 44579 Castrop – Rauxel …
-
- 18 replies
- 4.3k views
-