Jump to content

ஐ.நா மனிதவுரிமைகள் செயலகத்தின் போர்க்குற்ற விசாரணையும் உதவிடும் அமைப்புகளும்!


Recommended Posts

சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அழைப்பு.

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமையகம் எடுத்துள்ள போர்க்குற்ற, இன அழிப்பு விசாரணையானது எமது விடுதலையைப் பெறுவதற்கு வலுச்சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் சாட்சியங்களைச் சேகரிக்கும் பணி அனைத்துலக நாடெங்கும் இயங்கி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களாலும், மனிதநேயப் பணியாளர்களாலும், இளையோர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தாங்கள் அறிந்ததே.

எமது இடைவிடாத போராட்டங்களின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையால் சேகரிக்கப்படுகின்ற தமிழினப் படுகொலைக்கான ஆதாரங்களைச் சாட்சியங்கள் ஊடாக வழங்கும் பணிக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் எம்மாலான அனைத்து வழிகளிலும் பலம் சேர்க்க வேண்டும் என்ற உறுதியோடு செயற்படுகிறது.

எனவே, எம் அன்பிற்கும், மதிப்புக்கும் உரிய உறவுகளே! இந்த மாபெரும் வரலாற்றுக் கடமையை உணர்ந்து உங்களாலான அனைத்து சாட்சியங்களையும் எதிர்வரும் 30.10.2014ற்கு முன்னதாக வழங்கி, சிங்கள இனவெறி அரசின் கபட முகத்திரையைக் கிழித்து, தமிழின அழிப்பிற்கு நீதி பெற வலுச்சேர்க்கும் வண்ணம் உரிமையுடன் வேண்டுவதுடன், சாட்சியாளர்களின் விபரங்கள் யாவும் இரகசியத்தன்மையுடன் பேணப்படும் என்பதையும் தங்களுக்கு உறுதியுடன் தெரிவிக்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு:

078 662 93 06 / 078 882 05 96

(Facebook)

Link to comment
Share on other sites

கனடிய தமிழ் மக்களுக்கு கனடிய தமிழர் தேசிய அவையின் அழைப்பு.

ஐ.நா விசாரணை குழு முன்பாக தமிழினப் படுகொலை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் !

அன்பான கனடியத் தமிழ் உறவுகளே. ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றுக் கொண்டு இருப்பது தமிழினப் படுகொலை தான் என்பதை நிரூபிப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அமைக்கப்பட்ட OHCHR விசாரணைக் குழு தமது விசாரணைக்கான ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவ்விசாரணக்கு சரியான ஆதாரங்களை சரியான முறையில் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதன் மூலம், எமது மக்களின் விடுதலைக்கான பாதையைத் திறப்போம்.

இவ்வருடம் ஒக்டொபர் மாதம் 31ம் திகதிக்கு முதல் ஈழத்தமிழருக்கு இலங்கை அரசு இழைத்த குற்றங்களை முன் கூட்டியே பதிவு செய்வோம். ஐ நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் முன்னெடுக்கும் விசாரணைக்குரிய கால எல்லையாக 21.02.2002 முதல் 15.11.2011 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பொழுது உங்கள் தனிப்பட்ட பாதிப்புகளை மட்டும் சமர்ப்பிக்காமல் உங்கள் நீண்ட கால பட்டறிவுகளையும் ஆதாரத்துடன் உள்ளடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறான பதிவுகள் தான் விசாரணக்குழு அடுத்த கட்ட விசாரணையான இன அழிப்பிற்குரிய பாதையைத் திறந்து விடும்.

உங்கள் பதிவில் உள்ளடக்க கூடிய விபரங்கள்:

- அடிப்படை சுதந்திரங்களை மீறல்,

- சட்டத்துக்கு புறம்பான கொலை,

- சித்திரவதை,

- துன்புறுத்தல்,

- அச்சுறுத்தல்,

- காணாமல் போதல்,

- பாலியல் வல்லுறவு,

- கொத்துக் குண்டு,

- இரசாயன தாக்குதல்,

- வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்,

- கைது செய்து காணாமல்போனோர்,

- நிலப்பறிப்பு மற்றும் குடிமனை அபகரிப்பு

போன்றனவற்றை கண்கண்ட சாட்சியங்களாகவோ ஆதாரமாகவோ பதிவு செய்யலாம். இத்துடன் இனப்படுகொலைக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கலாம்.

கனடாவில் 2009 ம் ஆண்டுற்குப் பின் அனைத்து விதமான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் 'போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் (Center for War Victims and Human Rights - CWVHR) ஈடுபட்டுள்ளது. இத் தன்னார்வ தொண்டர் நிறுவனம் இது வரைக்கும் நூற்றுக்கணக்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு தேவையான வடிவத்தில் மிகவும் கவனமான முறையில் அவ்வாதாரங்களை தொகுத்து வருகின்றது. இன்நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் பதிவை விரைவில் மேற்கொள்ள வேண்டுகின்றோம்.

CWVHR மின்னஞ்சல்: info@cwvhr.org

உங்கள் தொகுதியில், உங்கள் தொடர்பில் இருக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை உறுப்பினர்களை அணுகினால் உங்களுக்கு தேவையான உதவிகளைப் புரிவார்கள். மேலதிக விபரங்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் தொடர்பு இலக்கமான 416.830.7703 ஐ தொடர்பு கொள்ளவும்.

கனடியத் தமிழர் தேசிய அவை

https://m.facebook.com/story.php?story_fbid=554849847977302&id=113938848735073

சாட்சியங்களின் பெறுமதியை கேள்விக்குறியாக்கும் மாதிரிப்படிவமும்; மூன்றாம் தரபுக்களின் தலையீடும்!

Published on September 7, 2014-10:47 am · No Comments

kirupakaran1ஐ. நா. விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை அனுப்புமாறு வேண்டியுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலயம், இதற்கான ஓர் மாதிரி விண்ணப்ப படிவத்தை உருவாக்காத நிலையில், இலங்கைதீவில் உள்ள ஓர் அரசியல் கட்சி, விசேடமாக, ஐ.நா. விசாரணையை முன்னெடுப்பதற்காக, ஐ. நா. மனித உரிமை சபையில் கொண்டுவந்த பிரேரணை எதிர்த்து மிகவும் மோசமாக வேலை செய்த கட்சி, தற்பொழுது ஓர் மாதிரி படிவத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது, மிக விசித்திரமானது.

உண்மையான சாட்சியங்கள் எழுதும் யாரும், இவ் மாதிரி படிவத்தை பாவித்து சாட்சியங்களை ஐ.நா.விசாரணை குழுவிடம் அனுப்பும் பொழுது, உள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கும் பட்சத்திலும், சிறிலங்கா அரசு இவை யாவும் நன்றாக திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்ற வாதத்தை முன்வைப்பதற்கு வழிவகுக்கிறது.

இதற்கு ஓர் ஊதாரணத்தை இங்கு தருகிறோம். ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்தில், புலம் பெயர் தேசங்களில் – பல மாதிரி மனுக்கள், கடிதங்கள் யாவும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இவற்றை லட்சக்கணக்கான புலம் பெயர் தேசத்து ஈழத் தமிழர்கள் உட்பட, மாற்று இனத்தவர்களும், அவர்கள் வாழும் நாட்டு அரசுகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைத்தனர். இவ் மனுக்களுக்கு இறுதியில் கிடைத்த பதில், “இவை யாவும், ஒரு குழு, ஓரு அமைப்பினால் தயாரிக்கப்பட்டு விநியோகிகப்பட்டவையே. ஆகையால் இவை சுயேட்சையான கருத்துக்களை கொண்டிருக்கவில்லை”.

இவ் நிலை, ஐ. நா. விசாரணை குழுவிடம் தமது உண்மையான சாட்சியங்களை அனுப்புவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதை மனதில் கொண்டு> இவ் பத்திரிகை செய்தியை நாம் வெளியிடுகிறோம்.

ஆகையால்> இப்படியான சர்ச்சைக்குரிய மாதிரிப் படிவங்களை கவனத்தில் கொள்ளாது, சாட்சியங்கள் அனுப்பும் ஓவ்வொருவரும் – தமது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் போன்றவற்றுடன், 10 பக்கங்களுக்கு குறைவாக, தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தாம் நேரில் பார்த்த அனுபவித்த உண்மை சம்பவங்களை> தமது சாட்சியத்தில் எழுதி> மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது கடிதம் மூலம் அனுப்புவதே> தனி நபருக்கு மட்டுமல்லாது> தமிழீழ மக்களுக்கு பலன் தரும் செயற்பாடாகும்.

மின் அஞ்சல் : OISL_submission@ohchr.org

அஞ்சல் முகவரி : OISL, UNOG-OHCHR, 8-14 Rue de la Paix, 1211 Geneva 10, SWITZERLAND

ஐ. நா. விசாரணைக்கு அனுப்பும் உங்களது சாட்சியம், 2002ம் ஆண்டு பெப்ரவரி 21ம் திகதிக்கும், 2011ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி உட்பட்ட காலமாக இருக்க வேண்டும். இக் காலத்திற்கு முந்திய அல்லது பிந்திய காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய சாட்சியங்களை அனுப்புவதால் எந்த பிரயோசனமுமில்லை. உங்கள் சாட்சியத்தை> 2014 ஓக்டொபர் 30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ் சாட்சியங்களுக்கு ஓர் சமாதான நீதவனின் உறுதிப்படுத்தலோ அல்லது சத்திய கடுதாசி போன்று அனுப்ப வேண்டிய அவசியமில்லை. இவற்றை செய்வதன் மூலம் உங்கள் சாட்சியத்தின் அந்தரங்கத்தை (ரகசியத்தை) நீங்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதேவேளை இப்படியான விதிமுறைகளின் அடிப்படையில்> எந்த சாட்சியத்தையும் ஐ.நா. விசாரணை குழு உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

உங்கள் சாட்சியங்களுக்கான படங்கள், வீடியோக்கள் போன்று ஏதும் ஆதாரம் இருப்பின், இவற்றை உங்கள் சாட்சியத்துடன் அனுப்புவதை தவிர்த்து கொள்ளுங்கள். உங்கள் சாட்சியங்களில் இவை உங்களிடம் உள்ளதாக எழுதினால், அவை தேவைப்பட்டால், ஐ. நா. விசாரணைக் குழு உங்களை தொடர்புகொள்வார்கள்

எழுத்து மூலமான சாட்சியங்களின் வரவிலக்கணக்கம் என்பது - கீறிமினல் அல்லது விபத்துக்கள் பற்றிய வழக்குகள் விசாரணைகள் என்ற அடிப்படையில், சந்தர்பங்களை பொறுத்து மாறுபடும். ஐ.நா. விசாரணைக்களுக்கான சாட்சியத்தை பொறுத்தவரையில், “ஒருவர், ஓர் சம்பவத்தில் நேரில் பார்த்தவராகவோ அல்லது அது பற்றிய ஆதரங்களுடன் அறிந்தவராகவோ, இருக்க வேண்டும். இவர்களின் சாட்சியம் என்பது உண்மைகளை அடிப்படையாக கொண்டதாக உள்ள அதேவேளை,அவர்களது அபிப்பிராயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும்”.

இவ் அடிப்படையில் எப்படியாக எல்லா தமிழர்களும் ஐ. நா. விசாரணைக்கு சாட்சியம் கூற முடியும்? இப்படி செய்யுமாறு அழைப்பு விடுவது கபடம் நிறைந்து காணப்படுகிறது!

மின் அஞ்சல் மூலம் தமது சாட்சியங்களை அனுப்புவது பாதுகாப்பு அற்றது என கருதுபவர்கள், கடிதம் (அஞ்சல்) மூலமாக அனுப்பலாம்.

இலங்கைதீவிலிருந்து தமது சாட்சியங்களை அனுப்ப விரும்புபவர்கள், தமது சாட்சியங்களை வெளிநாடுகளில் உள்ள, தமது உறவினர்கள் அல்லது தமக்கு மிக நம்பிக்கையான நண்பர்களுக்கு அனுப்பி, அவர்கள் மூலம் ஐ.நா. விசாரணை குழுவிற்கு சேர்பிப்பதே பாதுகாப்பானது.

அல்லற்படும் தமிழீழ மக்களுக்கு நாம் செய்வதற்கு எந்தனையோ சேவைகள் இருக்கும் இவ் வேளையில், எல்லாவற்றிற்கும் “கீரை கடை” போடுவதன் மூலம், அவர் அவரது கபட நோக்கங்களை யாவரும் இலகுவாக புரிந்து கொள்ள வழிவகுக்கிறது. ஐ.நா விசாரணை பற்றிய விடயத்தில் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும்> சில அமைப்புக்கள் தம்மை மூன்றாம் தரப்பினர்களாக காண்பிக்க முயல்வது> சிறிலங்கா அரசு சாட்சியங்கள் யாவும் நன்றாக திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்ற வாதத்தை முன்வைப்பதற்கு வழிவகுப்பதுடன்> ஒருவரது உண்மை சாட்சியம் கேள்விக்குறியாக்கப்படும்.

கடந்த 24 வருடங்களுக்கு மேலாக ஐ.நா. மனித உரிமை அமர்வுகளில் பங்கு பற்றுவதுடன்> பல விதப்பட் விடயங்களை> மிக நீண்ட காலமாக ஐக்கிய நாடுகள் சபையின் பல பிரிவுகளுக்கு சமர்பித்து வந்த தமிழர் மனிதர் உரிமை மையத்தினர் ஆகிய நாம்> ஐ. நா. விசாரணைக்களுக்கு சாட்சியங்களை அனுப்புவர்களது பாதுகாகப்பு> நன்மை போன்றவற்றுடன்> தமிழீழ மக்களது நன்மையும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு இவ் பத்தரிகை செய்தியை வெளியிடுகிறோம்.

நன்றி

ச. வி. கிருபாகரன்

பொதுச் செயலாளர்

தமிழர் மனிதர் உரிமைகள் மையம் - TCHR

பிரான்ஸ்

Link to comment
Share on other sites

Gari அண்ணா, இதை நீங்கள் ஏன் கனேடிய தமிழர் தேசிய அவையை சுட்டிக்காட்டி எழுதுகிறீர்கள்?

புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புகள் ஆதாரங்களை அனுப்புவதற்கு உதவி செய்கிறார்களே தவிர மாதிரி படிவம் தாமே தயாரிக்கவில்லை என நினைக்கிறேன்.

இலங்கையில் தமிழில் மாதிரி படிவத்தை வெளியிட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. (அதை பயன்படுத்தலாமா இல்லையா என எனக்கு தெரியாது.)

Link to comment
Share on other sites

Gari அண்ணா, இதை நீங்கள் ஏன் கனேடிய தமிழர் தேசிய அவையை சுட்டிக்காட்டி எழுதுகிறீர்கள்?

 

புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புகள் விசாரணைகளை அனுப்புவதற்கு உதவி செய்கிறார்களே தவிர மாதிரி படிவம் தாமே தயாரிக்கவில்லை என நினைக்கிறேன்.

 

இலங்கையில் தமிழில் மாதிரி படிவத்தை வெளியிட்டது . (அதை பயன்படுத்தலாமா இல்லையா என எனக்கு தெரியாது.)

உங்களுடைய இணைப்புகளுக்கும் ,பதிவுகளுக்கும் பாராட்டுகள் .

மக்கள் அவையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் .இரு அமைப்புகளும் இணைந்து தான் இந்த தீர்மானத்தை எதிர்த்து மகாநாடு நடத்தியவர்கள் ,இவர்களின் சதிவேலையால் கடைசி நேரத்தில் சுமந்திரன் ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது .

Press Conference at the Geneva Press Club

Friday 21 March

Is the Sri Lanka resolution at the UNHCR part of the problem or part of the solution? Representatives of the Eelam Tamils and their supporters speak out:

Gajendrakumar Ponnampalam (Tamil National People’s Front);

Ananthy Sasitharan (NPC, Tamil National Alliance);

Kumaravadivel Guruparan (Tamil Civil Society);

Dr. Sri Ranjan (International Council of Eelam Tamils)

Krisna Saravanamuttu (International Council of Eelam Tamils)

Dr. Jude Lal Fernando (Irish Forum for peace in Sri Lanka);

Dr. Andrew Higginbottom (Prosecutor at the ‘People’s Tribunal on Sri Lanka)

நாங்கள் கொடுத்த அழுத்தத்தினால் ஆனந்தியை இதில் கலந்து கொள்ளாமல் தடுத்தனாங்கள் .அப்பொழுது இதனை எதிர்த்து செயற்பட்டு இப்பொழுது ஆதரிக்கும் நிலையானது இந்த இரு அமைப்புகளுக்கும் சாதாரணம் .இந்த இரு அமைப்புகளும் தாயகத்திலோ அல்லது புலம்பெயர் நாடுகளிலோ எதாவது உருப்படியாக செய்துள்ளார்களா ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=140967&hl=

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138399&hl=

Link to comment
Share on other sites

Gari அண்ணா,

உப்புச்சப்பில்லாத பிரேரணை என்று எதிர்த்தாலும் சர்வதேச விசாரணை, பொதுவாக்கெடுப்பு ஆகியவற்றை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கூறி வந்தார்கள்.

இப்பொழுது குறிப்பிட்ட காலப்பகுதிக்காவது சர்வதேச விசாரணை என்று வரும்போது அதை மேற்கொள்ள ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

இந்த ஐ.நா விசாரணை கூட ஒரு முழுமையான விசாரணை அல்ல. மட்டுபடுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் மட்டும் விசாரிக்கிறார்கள். எனவே இந்த விசாரணை ஒரு விதத்தில் நன்மையளித்தாலும் ஒரு விதத்தில் ஏமாற்றப்படுகிறோம். ஆனாலும் இது முன்னேற்றத்துக்கான ஒரு சிறுபடிக்கல்லாக அமையும் என்பதால் இதற்கு ஆதரவளிக்கிறோம்.

நீங்கள் குறிப்பிடும் இரு அமைப்புகளும் எதுவும் செய்யவில்லை என்று கூறாதீர்கள். அவர்கள் நடத்திய போராட்ட தகவல்களை நானே யாழில் இணைத்து இருக்கிறேன்.

உதவும் அமைப்புக்களை உதவ விடுவோம்.

Link to comment
Share on other sites

பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்கனவே உதவி செய்து வரும் நிலையில் அவர்களுடன் தொடர்புகொள்ளக்கூடிய மேலும் சில தொடர்பு முகவரிகள்,

British Tamils Forum

Unit 1, Fountayne Business Centre,

Broad lane, London N15 4AG

Telephone: +44(0)20 8808 0465

E-mail : admin@tamilsforum.com

பிரித்தானிய தமிழர் பேரவை

(Facebook)

Link to comment
Share on other sites

மேலும் சில உதவி செய்யும் அமைப்புகளின் தொடர்பிலக்கங்கள்.

கனடா - போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் (CWVHR)

தொலைபேசி எண் : 416 628 14 08

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு –பிரித்தானியா

தொலைபேசி எண் : 079 18 32 41 00

சுவிஸ் அக்கினிப் பறவைகள் - புதிய தலைமுறை அமைப்பு

தொலைபேசி எண் : 0041 79 19 38 668

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – அவுஸ்திரேலியா

தொலைபேசி எண் : 046 90 89 883

நோர்வே ஈழத்தமிழர் அவை

தொலைபேசி எண் : 0047 90 64 16 99 – 0047 93 42 22 29

டென்மார்க் - டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்.

தொலைபேசி எண் : 0045 21 73 41 79

இத்தாலி - தமிழ் அமைப்புகள் ஒன்றியம்

தொலைபேசி எண் :

பலர்மோ : 32 98 51 97 46

மேற்பிராந்தியம் : 32 92 41 09 80

நெதர்லாந்து தமிழர் அவை

தொலைபேசி எண் 0031 64 02 29 481

தமிழர் பண்பாட்டுக் கழகம் - பெல்ஜியம்

தொலைபேசி எண் : 0032 49 21 98 664

நியூசிலாந்து மக்கள் அவை

தொலைபேசி எண் : 0064 21 07 50 029

தமிழ் சங்கம் - பின்லாந்து

தொலைபேசி எண் : 0035 84 65 76 75 47

(Facebook)

Link to comment
Share on other sites

ஐ.நா விசாரணை குழு முன்பாக தமிழினப் படுகொலை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் டென்மார்க் தமிழீழ உறவுகளே!

அன்பான டென்மார்க் தமிழீழ உறவுகளே,

ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக்குழுவிற்கு தேவையான சாட்சிகளை சேகரிக்கும் வேலைத்திட்டங்கள் டென்மார்க்கிலும் ஆரம்பமாகியுள்ளது. எமது மக்களின் உயிர்களை வதையெடுத்த சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனத்தை ஆதாரத்துடன் நிருபிப்பதற்கான காலம் இது. 2002 - 2011 காலப்பகுதியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ (உங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டாலோ) பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை அவர்களிடம் வழங்குதன் மூலம் எங்களிற்கான நீதியினைப்பெற்றுக் கொள்ளமுடியும். அத்துடன் எமது இனத்திற்கு எதிராக திட்டமிட்ட முறையில் நடாத்தப்படும் இனப்படுகொலையினை அம்பலப்படுத்துவதற்கும் இதுவொரு வாய்ப்பாகும்.

இப்பதிவுகள் யாவும் இரகசியமாக பேணப்படுமென்பதனை மனித உரிமைகள் ஆணையகம் உறுதிசெய்துள்ளது. இதனை எமது பணியாளர்களும் கடைப்பிடிப்பார்கள் என்பதனைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உங்கள் பதிவுகளிற்கோ அல்லது மேலதிக விபரங்களிற்கோ தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கங்கள்:

- 21734179 – 91823342

நன்றி

http://www.pathivu.com/news/34102/57/d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பிரித்தானியாவில் இந்த கிழமைக்கும் அழைப்பு விட்டிருந்திருக்கிறார்கள். நடந்ததை தெரியப்படுத்துவதற்காக இணைக்கிறேன்.

"Collecting Evidence & Witness Statements from Tamils by ICPPG"

International Centre for Prevention & Prosecution of Genocide will be collecting evidence & witness statements from Tamils for OHCHR - UNHRC.

Tamils are invited to give evidence & witness of GENOCIDE happened to them to get Justice, Peace for our Tamils.

We need to submit this evidence to OHCHR before 30th October 2014, we

have "2 MORE WEEKS LEFT" to do this. Please come forward and do your duty for our people.

Dates: This week.....

Tue 14/10/2014 at 4:30PM

Wed 15/10/2014 at 7PM

Thu 16/10/2014 at 7PM

Fri 17/10/2014 at 6PM

Sat 18/10/2014 at 10AM

Sun 19/10/2014 at 10AM

EASTHAM:

Tue 14th Oct on 4:30pm at

Trinity Community Centre,

East Ave, Eastham, E12 6SG.

WEMBLEY:

On 15, 16, 18 & 19th Oct on 10AM at

TGTE Office, 227 Preston Rd, Wembley, HA9 8NF

CROYDON:

Friday 10th Oct on 6pm at

229-231 London Road, Croydon, CR0 6DT 2RL (Behind Paddy Power via Summer Road)

Organised by ICPPG

www.icppg.org

For further details call :

07869133073, 07877204123 07929349302(Wembly) 07920787576(Croydon),

07832954281 & 07960899219 (Eastham)

(Facebook)

Link to comment
Share on other sites

  • 1 month later...

உண்மையான சாட்சியங்கள் எழுதும் யாரும், இவ் மாதிரி படிவத்தை பாவித்து சாட்சியங்களை ஐ.நா.விசாரணை குழுவிடம் அனுப்பும் பொழுது, உள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கும் பட்சத்திலும், சிறிலங்கா அரசு இவை யாவும் நன்றாக திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்ற வாதத்தை முன்வைப்பதற்கு வழிவகுக்கிறது.

சொன்னபடியே நடந்துள்ளது .இந்த மாதிரி படிவத்தை பயன்படுத்தி ஸ்ரீலங்கா அரசு மிகப்பெரிய குற்றச்சாடுக்களை கொழும்பிலுள்ள பல வெளிநாட்டு தூதுவராலயங்கலுக்கு அனுப்பியுள்ளது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதே கதை சண்டை தொடன்கியபின்னும் 2௦௦7லும் இருந்தது கொழும்பில் .
    • தவறவிட்டு விட்டோம் என சொல்லவரவில்லை. யாராகினும் தமக்கு பிடித்தவர்களை,நண்பர்களை,கலைஞர்களை பாராட்டலாம்.. அல்லது எமக்கு கல்வி தந்த ஆசான்களின் பெருமைகளை சொல்லியும் பாராட்டலாம்.  
    • நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப்  போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம்   அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது .   மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும்.   முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல.   ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர்.   அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர்.   சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள்.   மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது.   'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.   பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது.   இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர்.    நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.   பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.   (தொடரும்........)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.