மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1239 topics in this forum
-
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படு…
-
- 0 replies
- 528 views
-
-
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்: லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர் திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவில் நாள்தோறும் காலையில் உமையாளுடன் சந்திரசேகரரும், மாலையில் பஞ்ச மூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் வீதிஉலா வந்தனர். 5-ம் நாள் இரவு வெள்ளி ரிஷப வாகனத்திலும…
-
- 0 replies
- 406 views
-
-
திரு சத்திய நாராயண் கோயன்கா அவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் பெர்னே நகரில் ஆற்றிய உரையிலிருந்து... நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்புகிறோம். ஏனெனில், இவற்றுக்குதான் நம் வாழ்வில் குறைபாடு உள்ளது. நாம் அனைவரும் அவ்வப்பொழுது மனக்கலக்கம், எரிச்சல், இணக்கமின்மை, துயரம் ஆகியவற்றை அனுபவிக்கிறோம். அவ்வாறு நாம் நிலையின்றி தவிக்கும்பொழுது, நாம் படும் துயரத்தை நம்மிடம் மட்டும் வைத்துக்கொள்ளாது அவற்றைப் பரப்பவும் செய்கிறோம். துயரப்படுபவரை சுற்றி எங்கும் சமநிலையின்மை சூழ்கிறது. அவரைச் சுற்றி இருப்பவர்களும் கலக்கம் அடைகிறார்கள்; சினம் அடைகிறார்கள். கண்டிப்பாக இது வாழ்வதற்கான சரியான முறை அன்று. ஒருவர் தனக்குள்ளே மன அமைதியுடன் வாழ வேண்டும்; மற்றவ…
-
- 1 reply
- 2.1k views
-
-
பைபிள் கதைகள் 1: தோட்டத்தை இழந்த தோழர்கள் இத்தனை அழகான பூமியை கடவுள் எதற்காகப் படைத்திருப்பார்? சந்தேகமே வேண்டாம்; மனிதர்களுக்காகவே அவர் பூமியைப் படைத்தார். மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் வானதூதர்களை உண்டாக்கினார். அவர்கள் சர்வ வல்லமைகொண்ட கடவுளுக்கு கீழ்படிந்து நடக்கும் அவரது ஊழியர்கள். அவர்கள் கடவுளைப்போல் ஆவித்தன்மை கொண்டவர்கள். ஆனால் அவரைப்போல் தலைமைப் பண்பு கொண்டவர்கள் அல்ல. இந்த ஊழியர்களில் ஒருவன் கடவுளைப்போல் இந்த பிரபஞ்சத்தை ஆள விரும்பினான். அவருக்கு எதிரியாக மாறினான். எனவே கடவுள் அவனுக்குத் தந்திருந்த புனிதத்தன்மையை இழந்தான். சாத்தானாக போகும்படி கடவுளால் சபிக்கப்பட்டான். கோபம்கொண்ட சாத்தான், “ நீ…
-
- 66 replies
- 22.8k views
-
-
மஞ்சள் மழையே பொழிக! தேனருவி முழுக்க முழுக்க சித்தர்களின் அருவி. இங்கு எப்போதுமே அரூப நிலையில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அருகிலுள்ள குகைகளில் அமர்ந்து தவம் புரிகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் குழுவாக அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். சித்ரா பௌர்ணமி தோறும் ஈசனை தேனால் அபிஷேகம் செய்கிறார்கள். எனவேதான் இங்கு சித்ரா பௌர்ணமி தோறும் மஞ்சள் மழை பொழிகிறது. அதை காணத்தான் இந்தக் கடினமான பயணம். எனவேதான் குற்றால மலையில் ஆற்றைத் தாண்டி கடினமான பாதை வழியாக மேலே வந்தோம். இருபது நிமிடங்கள் நடந்திருப்போம். அங்கு ஆங்கிலேயர்கள் நடந்து செல்ல பயன் படுத்திய இரும்புக் கம்பி வளைந்து நெளிந்து கிடந்தது. திடீர் திடீரென்று சிற்றாற்றில் வரும் வெள்ளத்தால்தான் இந்தக் கம்பி இப்…
-
- 0 replies
- 506 views
-
-
கதை சொல்லும் சிற்பங்கள் 01 ஓவியர் பத்மவாசன் சிற்பங்கள் சொல்லும் அற்புதக் கதைகள் என்ற இந்தத் தொடர் வெறும் கதைகளைச் சொல்வதற்கு மட்டுமல்ல. இப்படிப்பட்ட செல்வப் புதையலைப் பெற்ற மண்ணில் வாழ்கிறோம் என்ற பெருமையை உங்களுக்கு உணர்த்துவதற்கும், உணர்ந்த பின் அந்தத் தலங்களுக்குச் செல்லவும் ரசிக்கவும் ரசித்தவற்றைப் பிறருக்கும் கூறி மகிழவும் முக்கியமாக, அடுத்த தலைமுறைக்கு, நமது பாரம்பரியத்தின் சிறப்புகளைக் கூறி வளர்த்தெடுக்கவும் செய்யப்படும் சிறிய முயற்சி இது. குழந்தைப் பிள்ளையார் ஆரம்பம் எப்போதும் பிள்ளையார் தானே! இங்கே நீங்கள் காணும், தவழும் நிலைப் பிள்ளையார்கள் எழில் கொஞ்சுபவை. பார்க்கும்போதே, தூக்கி மடிய…
-
- 26 replies
- 9.1k views
-
-
பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி - கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு - 1 திருப்பரங்குன்றம் (முதல் படைவீடு) முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற புண்ணியம்பதி, பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி, நக்கீரர் வாழ்ந்த ஊர், முருகனுக்குப் பரிகாரம் அருளிய மீனாட்சிசுந்தரபுரம், அறுபடைவீடுகளில் ஒன்று, திருப்பரங்குன்றம்! மதுரைக்குத் தென்மேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம். மதுரையிலிருந்து திருப்பரங்குன்றத்தை வெகு எளிதாக அடையலாம். கோயில் முகப்பு வரை வாகனங்கள் செல்கின்றன. மலையடிவாரத்திலேயே, கோயிலின் முகப்பு கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. உண்மையில், கோயிலின் கோபுர வாசலுக்கும் முன்பாக உள்ள மண்டபத்தையும், அதன் முகப்பையும்தாம் நாம் மு…
-
- 12 replies
- 7.1k views
-
-
தெற்கிலங்கையின் சைவாலயங்கள் பஞ்சஈஸ்வரங்கள் (ஐந்து ஈஸ்வரங்கள்) என்று குறிப்பிடப்படும் ஐந்து சிவாலயங்களில் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த தொண்டேஸ்வரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்ட பின்னர் இன்று விஷ்ணுகோயிலாக மாற்றப்பட்டு தென்னிலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயமாக விளங்குகின்றது. அழிக்கப்பட்ட ஆலயத்தை அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர். இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருந்த இந்த தொண்டேஸ்வரம் நம்மில் பலர் அறியாத ஒன்று. இவ்வாலயம் தற்போதய மாத்தறைப் பகுதியில் உள்ள தெ…
-
- 0 replies
- 728 views
-
-
விஜயதசமியை முன்னிட்டு இணுவைக்கந்தனில் இடம்பெற்ற மானம்பூ திருவிழா
-
- 0 replies
- 372 views
-
-
புரட்டாதி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை நாள் முதல் நவமி நாள் வரை வருகின்ற ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமை எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி அன்று அமைகின்றது. நவமி 10 ஆம் திகதி முன்னிரவில் அற்றுப்போகின்றது. எனவே விரதம் 01 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும். மறுநாள் விஜயதசமி மற்றும் கேதாரகௌரி விரதத்தின் தொடக்க நாளாக அமைகின்றது. பத்து நாட்கள் வருகின்ற போது துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதிக்கு எப்படி நாட்களைப் பகுப்பது? நாட்களைப் பகுப்பது என்பது ஒரு கருத்தியல்தான். கோவிலில் கும்ப பூசை மூன்று தேவியருக்கும்தான் செய்யப்படுகின்றது. ஆயினும் சரஸ்வதிக்குரிய நாளை மூலநட்…
-
- 6 replies
- 889 views
-
-
கொக்கட்டிச்சோலை தேர்த் திருவிழா இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும் தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது. கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது. பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள் முறையே விநாயகர் தேர் , சித்திரத்தேர்வடம்பூட்டி ஆண் அ…
-
- 2 replies
- 460 views
-
-
யாழ் தோழர்களே, நலமா..? வேறொன்றும் இல்லை, நாலு பக்கமும் தமிழனுக்கு சோதனை மேல் சோதனையாக வந்தவண்ணம் இருக்கிறதே என மனச்சோர்வுடன் இணையத்தில் துழாவியபோது தினமலரில் இத்துரும்பு செய்தியை படித்தேன்.. மனதிற்கு சிறிய ஆறுதல்.. இங்கேயும் பதிகிறேன்.. அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். "ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து ப…
-
- 7 replies
- 861 views
-
-
அனைத்து மதத்தவரும் விரும்பும் அன்னை வேளாங்கண்ணித் திருவிழா! நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். ஒவ்வொரு வருடமும் இந்தப் பேராலயத்தில் ஆண்டு விழாக் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த ஆகஸ்ட் 29 - ம் தேதி கடல் போல் கூடிய மக்கள் வெள்ளத்தின் நடுவில் கொடியேற்றப்பட்டுத் தொடங்கப்பட்ட திருவிழா, மேரி மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8 ம் தேதி நேற்று மாலையுடன் கோலாகலமாக நிறைவுற்றிருக்கிறது. வங்காள விரிகுடா கடற்கரையோரம் பனை மரங்கள் சூழ்ந்த, கடற்காற்றும் வீசும் பரவசமான சோலையில் அமைந்திருக்கிறது புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில். இயேசுநாதரின் தா…
-
- 2 replies
- 1.9k views
-
-
பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரேறி பவனி வந்தாள் தெல். துர்க்கை வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கையம்மனின் வருடாந்த இரதோற்சவமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அம்மன் தேரேறி பவனி வந்தாள். பலபக்தர்கள் காவடிகள்,தூக்குகாவடிகள்,அங்கப்பிரதட்சணைமூலம் தமது நேர்த்திக்கடன்க ளை நிறைவேற்றினர் http://onlineuthayan.com/news/17518
-
- 0 replies
- 328 views
-
-
மரணத்தை வெல்லும் வழி ! மரணத்தை வெல்லும் வழி ! மரணத்தை வெல்லுவதற்கு .இந்திரிய ஒழக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும் என்று வள்ளலார் சொல்லுகின்றார் . உலகியல் வழியில் செல்லாமல் ,அருளைப் பெறும் இறுதி வழியாகிய , ஞான சரியை ஞான கிரியை ஞான யோகம் ஞானத்தில் ஞானம் என்னும் சுத்த சன்மார்க்க பெறு நெறியாகிய தனிநெறியைக் கடைபிடித்து பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் என்கின்றார் . முன்பு ஞான சரியை ,ஞான கிரியை ,ஞான யோகம் .என்றால் என்ன ? என்பதைப் பார்த்தோம் .இப்போது "ஞானத்தில ஞானம்" என்றால் என்ன என்பதைப் பார்ப்போம் . ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக…
-
- 3 replies
- 4.1k views
-
-
மன்னார், மருதமடு மாதா திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா, கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று இடம்பெற்றது. இன்று காலை 6.15க்கு கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், மாதாவின் பவனியும் இடம்பெற்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=163603&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 472 views
-
-
இந்து மத வழக்கங்களின் பின்னணியில் உள்ள அருமையான அறிவியல் காரணங்கள்!!! 0 Comment பல ஆயிரம் ஆண்டு காலமாக சில இந்து மத வழக்கங்கள், இன்றளவும் கூட மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது – அதனை மூட நம்பிக்கை என்றும் கூறலாம், வழக்கங்கள் என்றும் கூறலாம், மற்றவர்கள் மனதில் பயத்தை உண்டாக்குவதற்கு மற்றொரு வழி என்றும் கூறலாம், இந்த வழக்கங்களின் அவசியத்தைப் பற்றி நம்மில் பலரும் கேள்வி எழுப்புவோம். இன்றைய நவீன உலகத்தில் இவைகள் எப்படி தொடர்புடையாதாக இருக்கும் என நாம் வியக்கவும் செய்வோம். இதற்கு முன்னால் பின்பற்றப்பட்டு வந்த இந்த பழக்க வழக்கங்களை நம்மில் பலரும் இன்றைய காலத்தில் மூட நம்பிக்கைகளாக கருதி புறக்கணித்து விடுவோம். ஆனால் அனைத்து இந்து மத மரபுகளும் மூட…
-
- 0 replies
- 408 views
-
-
நல்லூர்க் கந்தனுக்கு அன்பு வணக்கம்.நேற்றும் காகிதம் எழுதினேன். இன்றும் இம் மடலை எழுதுவதற்குக் குறைவிளங்க வேண்டாம். உன்னைத் தவிர வேறு யாருக்குத்தான் நான் காகிதம் எழுத முடியும். எல்லாக் குறையும் உன்னிடமே உரைப்பவன் என்பதால், இக்கடிதம் எழுதுவதில் குறையில்லை. நேற்று உன் கொடியேற்றம் கண்டேன். மிகச்சிறப்பாய் அமைந்திருந்தது. அடியார் கூட்டம் முன்னரிலும் அதிகம். சரியாக பகல் 10 மணிக்கு கொடியேறியது. அந்த அற்புதத்தைக் கண்குளிரக் காண்பதற்கு அளித்த கருணைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மாலை விழாவிலும் வணங்கும் பேறு பெற்றேன். ஈசானத்தில் திருவாசகம் ஓதும் ஒரு புதுமை கண்டேன். கல் மனதையும் உருக வைத்த அந்தத் திருவாசகத்தால் என் நெஞ்சு நெக்குருகிக் கொண்டது. இப்படியே வெளிவீதி…
-
- 16 replies
- 1.2k views
-
-
அரோகரா கோஷத்துடன் நல்லூரானுக்கு கொடியேற்றம். வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் பத்தாம் நாள் (17.08.2016) மஞ்சந்திருவிழாவும் பதினெட்டாம் நாள் (24.08.2016) கார்த்திகை உற்சவமும் இருபதாம் நாள் (27.08.2016) காலை சந்தானகோபாலர் உற்சவம், மாலை கைலாசவாகனம் இருபத்தோராம் நாள் (28.08.2016) காலை கஜவல்லிமகாவல்லி உற்சவமும் மாலை வேல்விமானத் திருவிழாவும் இருபத்திரண்டாம் நாள் (29.08.2016) காலையில் தண்டாயுதபாணி உற்சவமும் …
-
- 36 replies
- 2.3k views
-
-
ஒரே நாளில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி... எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் நாம்? ஆடி மாதத்தின் சிறப்பு: ஆடி மாதம் என்றாலே அது பெண்களுக்கான பிரத்யேக மாதம். சைவ சமயத்தில் அம்பாள் சிவனை நோக்கி தவம் செய்து, ஆசி பெற்றதும் இம்மாதத்தில்தான்; வைணவ சமயத்தில் ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்ததும் இம்மாதம்தான். இத்தகைய பெருமைமிகு ஆடிமாதத்தில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருப்பெயர்ச்சி ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒரே நாளில் அமைவது, அபூர்வமாக நிகழும் நிகழ்வு. ஆனால், மூன்று நிகழ்வுகளும் ஒரே நாளில் வந்தாலும் ஆடி அமாவாசைக்கு மிகவும் முக்கியத்துவம் தரவேண்டும், என்று ஞானநூல்கள் கூறுகின்றன. பொதுவாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாளில் நம்முடைய முன்னோர்களுக்கு…
-
- 1 reply
- 511 views
-
-
ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 02.08.2015 செவ்வாய்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம்என்று பெயர். இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர…
-
- 1 reply
- 688 views
-
-
சுவாமி அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா? June 17 2016 பித்ருலோகம் அதாவது முன்னோர்களின் உலகம் என்பது நமது பூமிக்கு தென் திசையில் உள்ளது என்ற நம்பிக்கை நமது இந்து மதத்தில் உண்டு. இந்த காரணத்தால் முன்னோர்களின் படங்களை தென்திசை நோக்கி வைக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இறந்தவர்களின் படங்களை வீட்டில் வைப்பதே தவறு என்றும் வாதிடுவார்கள். வரலாற்று உண்மைகளை வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அரண்மனைகளில் அரசர்களின் உருவத்தினை வரைந்து வைத்தார்கள். காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியில் தற்காலத்தில் போட்டோக்களில் முன்னோர்களின் உருவத்தினை காண்கிறோம். இந்த படங்களை வீட்டில் அவர்கள் நினைவாக வைத…
-
- 0 replies
- 768 views
-
-
அழகு தெய்வம் முருகனின் நல்லூர் ஆலய வரலாறு...! அழகுத் தெய்வம் முருகனுக்கு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன் ஆலயம் ஆகும். நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் நல்லூர் விளங்கியது. யாழ்ப்பாண அரசிற்கு சிறப்புச் சேர்த்துள்ள நல்லூர், யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்ச…
-
- 0 replies
- 975 views
-
-
ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்க பிள்ளையார் கொடியேற்றம்.! ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடியமாவாசை மகோற்ஷபம் இன்று மிகவும் கோலாகலமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்ப அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தம்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்றது. சரியாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் பிரம்ம ஸ்ரீ இரங்க வரதராஜ சிவாசாரிய குருக்களினால் ஏற்றப்படாது. தொடர்ந்து தம்பத…
-
- 20 replies
- 2.3k views
-
-
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், திருப்பதி ஏழுமலையான் கோயிலைப்போன்றே, மாதிரி கோயில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஆகம முறைப்படி அக்கோயில் திறக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில், வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி முதல், கிருஷ்ணா ஆற்றில் புஷ்கரம் தொடங்க உள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் முழுவதும் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பக்தர்கள் குளிக்க வசதியாகப் படித்துறைகள் அமைக்கப்பட்டும் வருகின்றன. சில கரையோரங்களில் நாட்டில் உள்ள புகழ்பெற்ற புனித ஸ்தலங்களின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் ஏழுமலையான் மாதிரி கோயிலை அங்கு ஏற்படுத்தத் திட்டமிட்டது. அதற்காக விஜயவாடாவில் உள்ள ப…
-
- 1 reply
- 926 views
-