சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
தனக்குப் பிடிக்காத பாடத்தில் பூச்சியம் எடுத்ததும் பின்னர் பாடத்தை மாற்றியதால் சிறந்த பெறுபேறு எடுத்து தேறியதையும் குறிப்பிட்டு ” பெறுபேறு குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல ” என மாணவி குறிப்பிட்டதை அருமையாகச் சொன்னீர்கள் என கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகத்தில், சென்னை கே.கே.நகரில் ஒரு எளியக்குடும்பத்தில் பிறந்த சாதாரண பாடசாலையில் படித்து பட்டம் வாங்கி பின்னர் சிரமப்பட்டு அமெரிக்காச் சென்று படித்து கூகுள் நிறுவனத்தில் இணைந்து கூகுள் குரோமை அறிமுகப்படுத்தி அதன் தலைமை நிர்வாகியாக பதவி வகிப்பவர் சுந்தர் பிச்சை. மனிதரை மதிப்பிடுவது தேர்வு, பெறுபேறுகள் அல்ல என்பது குறித்து பலரும் பல சந்தர்ப…
-
- 0 replies
- 361 views
-
-
கண்ணீர் சிந்துவதை ஆண்கள் அவமானமாக நினைக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சர்வதேச ஆண்கள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சச்சின் டெண்டுல்கர் சக ஆண்களுக்காக உருக்கமான ஒரு மடலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''விரைவில் நீங்கள் தந்தையாக, கணவனாகக் கூடும். அண்ணனாக, தோழனாக, வழிகாட்டியாக, ஆசிரியராக இருப்பீர்கள். முன்மாதிரியாக வாழ்ந்து காட்டப் போகும் நீங்கள் தைரியமிக்கவராக, உறுதி உடையவராக, வீரமும், வலிகளைத் தாங்கும் வல்லமை உள்ளவராக உருவெடுக்க உள்ளீர்கள். நீங்கள் அச்சம், சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். பெரும் துயரங்களை அனுபவிப்பீர்கள். நீங்கள் நிச்சய…
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேரடியாக பல்வேறுபட்ட பொருளாதார, அரசியல் மாற்றங்கள் மற்றும் சமய சமூக பிரச்சினைகளை தோற்றுவித்தது. யுத்தத்தின் அதியுச்ச பாதிப்பை தன்னகத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தத்தின் பின்னர் பாரிய அளவு இல்லாவிட்டாலும் ஒரு அளவிற்கு யுத்தத்தின் வடுக்களை குறைப்பதற்கான அபிவிருத்தி செயற்பாடுகள் இடம் பெற்றாலும் வடக்கு கிழக்கு பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உள ரீதியான பாதிப்பு இதுவரை சரி செய்யப்பட முடியாததாகவே காணப்படுகின்றது. மனிதர்களாகிய நாம் ஏதேனும் பிரச்சினைகளுக்கு அல்லது கசப்பான சம்பவங்களுக்கு முகங்கொடுக்கும் போது நாம் அனைவரும் உளவியல் ரீதியான …
-
- 1 reply
- 621 views
-
-
'மனித நேயம்' என்ற வார்த்தை மரித்துக்கொண்டிருக்கும் இன்றைய அவசர உலகில், தன்னலமற்ற ஒருசில மனிதர்கள் தங்களின் செயல்களால் அதை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியான ஒருவர்தான், புதுச்சேரியைச் சேர்ந்த ஜோசப். மாற்றுத்திறனாளியான இவர், புதுச்சேரி சாரம் பகுதியில் சிறிய அளவில் பிரின்டிங், பைண்டிங் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் கடை வைத்திருக்கிறார். சமூகத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் இவர், தனது சொற்ப வருவாயில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, விளிம்புநிலையில் இருப்பவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். ஒப்பீட்டளவில், சராசரி மனிதர்களைவிட உயரம் குறைந்து காணப்படும் இவரின் சட்டைப் பையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஸ்மைலிகள், ர…
-
- 0 replies
- 904 views
-
-
மாயக் கட்டம் வா. மணிகண்டன் திருமணம் என்பது மாயக்கட்டம். வெளியில் இருப்பவர்கள் உள்ளே நுழையவும் உள்ளே இருப்பவர்கள் வெளியே சென்றுவிடவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு வாசகம் உண்டு. யார் இதைச் சொல்லியிருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இது என்ன கம்பசூத்திரமா? திருமணம் செய்து கொண்ட பெரும்பாலானவர்கள் சொல்லிவிடுவார்கள். அதுதான் மாயக்கட்டம் அல்லவா? பிறகு ஏன் எல்லோரும் திருமணத்தை வற்புறுத்துகிறார்கள் என்று கேட்கலாம்தான். ஆனால் தனிமனிதர்களை இழுத்துப் பிடிக்கும் மூக்கணாங்கயிறாக இந்த பிணைப்பு இல்லாமல் இருந்தால் மனிதர்களின் பக்குவம், சமூக ஒழுங்கமைவு என்பதெல்லாம் தாறுமாக சிதறிவிடக் கூடும். இல்லையா? தறிகெட்டு ஓடும் மனதை இழுத்துப் பிடிக்க ஒரு ஆள் அ…
-
- 0 replies
- 475 views
-
-
யாழ்ப்பாணத்து மாணவர்களின் தற்போதைய போக்கு, அவர்களின் கல்வி கற்கும் திறன்கள் மற்றும் யாழ்ப்பாண சூழ்நிலைகள் குறித்து மனந்திறந்து பேசுகிறார் பிரபல தாவரவியல் ஆசிரியர், விரிவுரையாளர் திரு சின்னத்தம்பி குணசீலன் அவர்கள். நீதி, நேர்மை, எளிமை, கண்டிப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உறைவிடம் என அவரது மாணவர்களினால் புகழ் சூட்டப்பட்ட யாழ்ப்பாணத்தின் பிரபல தாவரவியல் ஆசிரியர் திரு சின்னத்தம்பி குணசீலன் இம்மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் வந்திருந்தார். அப்போது சிட்னியில் அவரின் மாணவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டிருந்த அவருடன் சந்தித்து உரையாடினார் மகேஸ்வரன் பிரபாகரன். ஒலி வடிவம்...https://www.sbs.com.au/language/tamil/audio/making-jaffna-a-dumb-society?fbclid=IwAR2aKbeZiT1UiLlQSP04nof05YMM4…
-
- 0 replies
- 644 views
- 1 follower
-
-
பிக் பாஸ்:உறவுகளே நாடகமாகும் அவலம் 2019 - ராஜன் குறை · கட்டுரை நான்காண்டுகளுக்கு முன், எனக்குத் தெரிந்த மாணவி ஸ்ப்லிட்ஸ்வில்லா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கேள்விப்பட்டபோதுதான் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் ஒரு குழு தங்கும்வகையிலான ரியாலிட்டி ஷோக்கள் இருப்பது தெரியவந்தது. அதற்கு முன்னால் டிரூமேன் ஷோ (1998) என்ற திரைப்படத்தின் மூலம் எந்த அளவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‘உண்மையை’ உருவாக்க எல்லையற்ற ஜோடிப்புகளை செய்யக்கூடியன என்ற சிந்தனை ஏற்பட்டதுண்டு. உலகின் பல பகுதிகளிலும் குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் பிரபலமடையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் தயாரிக்கப்படுவதை அறிவோம். உலகில் நடப்பவற்றை அறிய நேர்ந்தாலும் பெரும்பாலும் நான் தமிழ்ச் சம…
-
- 0 replies
- 687 views
-
-
குவைத்: இணையத்தில் நடைபெற்ற அடிமை வர்த்தகம் - பிபிசி வெளிப்படுத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை வீட்டு பெண் வேலையாட்களை அடிமைகளைப் போல விற்பதற்கு சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தியவர்களை நேரில் அழைத்து விசாரிப்பதற்கான அதிகாரபூர்வ ஆணையை அனுப்பியுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிபிசியின் அரபிக் சேவை நடத்திய புலனாய்வில், இணையத்தில் அடிமை வர்த்தக சந்தை என்பது செயலிகள் மூலமாக நடைபெற்று வருவதை கண்டறிந்தது. இந்த அடிமை வர்த்தக சந்தை, ஃபேஸ்புக்குக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் உட்பட கூகுள், ஆப்பிள் செயலிகள் மூலமும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. "இடமாற்றத்திற்கு பெண் வீட்டு வேலையாள்" அல்லது "விற்பனைக்கு பெண் வீட்டு வேலையாள்" என்று பொருள்படும் ஹாஷ்டேக்குகள…
-
- 1 reply
- 634 views
-
-
ஜப்பான் ஒழித்த சாதி 100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது... கீழ் சாதியனர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் 'புராக்குமீன்' (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் "சேரி" களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர்... அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது..அவர்களுக்கு செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது... 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படு தோல்வியடைந்த பிறகு குறைவான மக்கள் தொகையில், பொருளாதாரமற்ற …
-
- 3 replies
- 1.8k views
-
-
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடில் தாயின் மிரட்டலுக்கு பயந்து 15 வயதில் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சிறுமி ஒருவர், 25 வயதான நிலையில், இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. 2 குழந்தைகளுடன் முதல் கணவனும், நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசும் தவிக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்த ரமேஷ் என்ற சமையல் தொழிலாளிதான் 2 குழந்தைகளுடன் தவிக்கும் அப்பாவி கணவன்..! தனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தான் துபாய்க்கு வேலைக்கு சென்ற நேரத்தில், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று அகில் என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றார். தனக்கு 18 வயது …
-
- 2 replies
- 715 views
-
-
கிளாரிந்தா என்கிற கோகிலா. தமிழின் முன்னோடி எழுத்தாளர் அ.மாதவையா நினைவு தினம்.... 22..அக்டோபர்...🌷💐🌷 மீள்பதிவு : 1915 ல் மாதவையா ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்று நாவல் ‘ கிளாரிந்தா’.... . பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்ணைப் பற்றியது. அதை மையமாக வைத்து 2002- ல் ’பெண்ணே நீ” இதழில் தோழர் பா.ஜீவசுந்தரி அவர்கள் எழுதிய கட்டுரை. எந்த ஒரு தனி நபரின் சாதனையும் அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, அரசியல் , பொருளாதாரப் பின்னணிகளோடு கலந்தே உருவாகியுள்ளது. அந்த சாதனைக்குரியவர் ஒரு பெண்ணாக இருந்தால் சிலுவையில் அறையப்படுவதை விட கொடுமையான துன்பங்களை அவள் அனுபவித்தாக வேண்டும். வெகுவாக முன்னேறி விட்டதாகக் கூறும் 21-ஆம் நூற்றாண்டிலேயே பெண்கள் படும் பாடு சொல்லிக் கொள்ளும…
-
- 0 replies
- 2.2k views
-
-
நேர மேலாண்மை - பத்து பரிந்துரைகள் ஆர். அபிலாஷ் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்; எப்போது பார்த்தாலும்“ஐயோ ரொம்ப வேலைகள் இருக்குதுங்க” என களைப்பாகசொல்வார். ஆனாலும் ஒரு உதவி கேட்டால் முடியாதென்றுசொல்ல மாட்டார் - “சரிங்க, உடனே பண்ணுவோம். நாளைக்கு வாங்க” என்பார். இவ்வளவு பிஸியானவர் எப்படிநமக்கு உதவுவார் என நாம் குழம்பாதபடி அவர்பரிபூரணமான அன்புடன் அதைச் சொல்வார். அடுத்தடுத்தநாட்களில் அவரை வைத்து வேலை சுலபத்தில் முடியாதுஎன புரிந்து கொள்வீர்கள். ஏனென்றால் உங்களைப்போன்றே வேறு பலருக்கும் அவர் பல உதவிகளைஒத்துக்கொண்டிருப்பார். இது போக அவரை சந்திக்கவோசும்மா பேசவோ யாராவது வந்தாலும் தன் அத்தனை வேலைசுமைகளுக்கு நடுவிலும் அவர்களிடம் சிரித்தபடிஉரையாடுவார். ஒருநாளில் முட…
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னை: சிவகங்கையில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் வயிற்றில் வளரும் 13 வார கருவை கலைக்க ஐகோர்ட் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கையில் தனியார் செவிலியர் கல்லூரி முதல்வர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக மாணவி குற்றச்சாட்டு தெரிவித்தார். மாணவிக்கு திருமணம் நடந்த சில நாட்களில் மருத்துவ பரிசோதனையில் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. 3 மாதமாக கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததை அடுத்து பெண்ணை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் கணவர் விட்டார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அடுத்து செவிலியர் கல்லூரி முதல்வர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார். அரசு மருத்துவமனையில் தனக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்ததை அடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிள…
-
- 0 replies
- 547 views
-
-
இளம்பராயத்தினர் 30 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவு அல்லது உடற்பருமனால் பாதிப்பு – UNICEF சர்வதேச ரீதியாக 5 வயதுக்குக் குறைவான சுமார் 700 மில்லியன் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர், போதிய ஊட்டச்சத்து இன்றியோ அல்லது அதிக உடல் பருமனுடனேயோ இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக குழந்தைகள் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் துணை நிறுவனமான சிறுவர் நல அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஊட்டச்சத்து இன்றி உணவு உற்கொள்ளும் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் மோசமாகவே இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுனிசெப் அமைப்பு வெளியிட்ட முதல் குழந்தைகள் நல அறிக்கையில் இந்த தகவல் இடம்பெ…
-
- 0 replies
- 235 views
-
-
காலங்காலமாக அழுகை என்ற உணர்வு பெண்களோடு மட்டுமே பொருத்திப் பார்க்கப்படுகிறது. ஓர் ஆண் அழுதால், "என்னடா! பொம்பள மாதிரி அழுவுற..." என்று சுற்றியிருப்பவர்களால் கடிந்துகொள்ளப்படுவார். அழுகை என்பது பெண்களுக்கு மட்டும்தானா, ஆண்கள் அழுவது தவறா? தோல்வியைக் கண்டு துவளக்கூடாது என்று சொல்வது எளிது. ஆனால், தோல்வியை அனுபவிக்கும்போதுதான் அதன் வலியை நாம் உணர முடியும். அதேபோல்தான் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதில் ஏற்பட்ட தோல்வியைத் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டார் இஸ்ரோ தலைவர் சிவன். பிரதமர் நரேந்திர மோடியின் தோள்களில் அவர் சாய்ந்து அழுத காட்சி அடுத்த நாள் பேசுபொருளானது. சில நொடிகள்தான் அவர் கண்ணீர் சிந்தினார் என்றாலும் அதன்பிறகு, பல நாள்களுக்கு அந்தச் செயல் விமர்சனத்துக்குள்ளானது…
-
- 8 replies
- 1.6k views
-
-
"தமிழ் இலக்கிய உலகில் பாலின சமத்துவம் இல்லை. ஆண் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை." இது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், அப்படியான துறையிலிருந்து உயர எழுந்து இருக்கிறார் திருநங்கை அ. ரேவதி. மாயா ஏஞ்சலோ, டோனி மாரிசன், லெஸ்லி மார்மன் சில்கோ, ஷாங்கே ஆகிய எழுத்தாளர்களுடன் இவரது பெயரும் கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தில் இடம் பெற்றிருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தின் முகப்பில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஹோமர், டெமோஸ்தினீஸ், சீசாரோ என ஆண் எழுத்தாளர்கள், அறிஞர்கள் 8 பேரின் பெயர்கள் மட்டுமே பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். பெண் எழுத்தாளர்கள் பெயர் ஏன் ஒன்று கூட இல்லை என எதிர்ப்பு தெரிவித்து கொலம்பி…
-
- 0 replies
- 359 views
-
-
உலக சுகாதார அமைப்பு (WHO), உலக உளநல மருத்துவ அமைப்பு (WFMH) ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் உளநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் திகதி உலக உளநல தினமாக அனுசரிக்கப்பட்டுவருகின்றது. “உளநல ஊக்குவிப்பும் தற்கொலைத்தடுப்பும்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான உளநல தினமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. ‘மனது’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயற்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. நீண்ட கால…
-
- 0 replies
- 396 views
-
-
உள்ளூர் பெண் உரிமை குழுவைச் சேர்ந்த சலிஷ்கேந்திரா ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று வன்புணர்வுகள் நடப்பதாக தெரிவித்தார். பழமைவாதம் மிக்க முஸ்லீம் தேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை குழுக்கள் எச்சரித்துள்ள நிலையில், பங்களாதேஷத்தில் காலை உணவில் தலை முடி இருந்ததைக் கண்டு மனைவிக்கு மொட்டையடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கிராமவாசிகள் அதிகாரிகளிடம் கூறியதாவது, ஜாய்பூர் ஹாட்டின் வடமேற்கு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் போலீசார் சோதனை நடத்தி 35 வயதான பாப்லு மொண்டலை கைது செய்தனர். “அவர் தனது மனைவி தயாரித்த அரிசி மற்றும் பால் கலந்த உணவில் முடியைக் கண்டு கோபமடைந்தார்” என்று காவல்துறைத் த…
-
- 3 replies
- 587 views
-
-
பிரித்தானியாவில் அதிகரிக்கும் விவாகரத்துகள்: குழந்தைகளின் மனோநிலை என்ன? – ஆய்வில் அதிர்ச்சி பிரித்தானியாவில் விவாகரத்து செய்வேரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மாத்திரம் பிரித்தானிய நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை 15 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, 2018இல் 118,141 விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சூழலில் விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள் சிறுவயதிலேயே மோசமான நடத்தைக்கு ஆளாகியிருப்பதால் அவர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 490 views
-
-
சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்றாகும்.மதுப் பாவனை என்பது சம்பந்தப்பட்ட தனிமனிதனை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமூகம், நாடு என்றெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மதுப் பழக்கம் முதலில் சாதாரண பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். முதலில் பியர் என்று சமாதானம் கூறிக்கொண்டுதான் இந்தப் பழக்கம் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும் போதே யாரும் முழு போத்தல் மதுவையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் அல்கேஹால் சில இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக் கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் போத்தல் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்…
-
- 0 replies
- 708 views
-
-
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் பல தலைமுறைகளாக மது அருந்தாமல், வரதட்சணை வாங்காமல் வாழ்ந்து வருகின்றனர். சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது மதகுபட்டி. இங்கிருந்து கல்லல் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலவிளாம்பட்டி. இக்கிராமத்தில் மூப்பர் சமுதாயத்தை சேர்ந்த 170 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது முன்னோர்கள் இக்கிராமத்திற்கு 13ம் நூற்றாண்டில் குடியேற திருச்சி கொள்ளிடம் பகுதியிலிருந்து (வடநாடு) வந்தவர்கள், அப்போது அங்குள்ள ராமசுவாமி, பொன்னழகி அம்மாள் தெய்வங்களிடம் எப்போதும் மது அருந்துவதில்லை என சத்திய வாக்கு கொடுத்துள்ளனர். அதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். இக்கிராமத்தில் போதை பொருள்கள் யா…
-
- 2 replies
- 1.1k views
-
-
EMOTIONAL: "முதியோர் இல்லம் தான் BEST!" Life Story of Mothers in Old Age Home.
-
- 12 replies
- 1.8k views
-
-
சர்வதேச முதியோர் தினம் இன்று கடந்த காலத்தில் கட்டழகாகத் திகழ்ந்தவர்கள், கம்பீரமாக தோற்றமளித்தவர்கள், வீரமான செயற்பாடுகளுடன் விரைவாக செயற்பட்டவர்களே இன்றைய முதியோர். இன்று கட்டழகு குலைந்து, கம்பீரம் குறைந்து, முதியோர் என்ற முத்திரை பதித்து பிறரின் உதவி வேண்டி அவர்கள் காலம் கழிக்கின்றனர். மனித வாழ்வில் மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள் வாழ்விலும் தவிர்க்க முடியாத இயற்கை நியதிகளில் ஒன்றுதான் முதுமை. இதனை எந்த விஞ்ஞான விந்தையாலும் தடுக்கவோ, தாமதித்து விடவோ முடியாது. இலங்கையில் 60 வயதைத் தாண்டியவர்களே முதியோர் எனக் கருதப்படுகின்றனர். 'முதியோர்' என்றால் அவர்கள் யாருமில்லை. அவர்களே நம் பெற்றோர்... நம்மை பெற்று வளர்த்து கல்வியூட…
-
- 0 replies
- 584 views
-
-
எட்வினா லாங்லே பிபிசி த்ரீ படத்தின் காப்புரிமை BBC Three/ David Weller கடைசியாக நான் மன வேதனை அடைந்தது சரியாக ஓராண்டுக்கு முன்பு. என் விஷயத்தில், காலம் முழுவதும் இருந்த அன்பு நிறைந்த வாக்குறுதி திடீரென முடிவுக்கு வந்துவிட்டது. நான் காதலித்தவருடன் செல்வதாக இருந்த நேரம். அவர் தன் மனதை மாற்றிக் கொண்டார். அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மறுபடி பழைய நிலைக்கு ஒருபோதும் வர முடியாது என்று நான் நினைத்தேன். முறிவுகள் முறிவுகள் எனக்குப் புதியது அல்ல. அதை நான் வழக்கமாகக் கைய…
-
- 2 replies
- 820 views
-
-
இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் வெளிநாட்டு மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் அறிமுகப்படுத்தாதீர்கள் மாறாக முடிந்தால் வெளிநாட்டு கல்வியையும், பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்துங்கள். மாதாந்தம் பணம் வழங்கி முதுகெலும்பற்ற தங்கிவாழும் தலைமுறையை உருவாக்காதீர்கள், முடிந்தால் நிலையான வருமானமீட்டலிற்கு -வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுங்கள். இலங்கைவாழ் உங்கள் உறவுகளிற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு பணம் வழங்குவதைவிட இன்னமும் அடிப்படை வசதிகளிற்காய் ஏங்கும் தமிழ் உறவுகளிற்கு உதவுங்கள். பனியில் வெய்யிலில் பதினொருமாதம் வேலை செய்து ஒரு மாதம் ஒய்வெடுக்க நீங்கள் வருவதை நாமறிவோம் ஆயினும், உங்கள் ஒருமாத கால உல்லாச வாழ்க்கையையே வெளிநாட்டு வாழ்வாக எம்மவர்கள் பிழையாக புரிந்துகொள்க…
-
- 2 replies
- 506 views
-