சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
"அனுராத புரத்தில் தமிழர்" கி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை "திஸ " என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டு இருந்தான். அவன் அவ் மதத்தில் கவரப் பட்டு, தனது மக்களுடன் மதம் மாறினான். அத்துடன் தனது பெயரையும் "தேவ நம்பிய திஸ " [King Devanampiya Tissa/307-267 BC ] என்று மாற்றினான். இவ் மன்னன் இறந்த சில ஆண்டுகளின் பின்பு, கி.மு 237 ஆம் ஆண்டு அளவில், சேன [ஈழசேனன் / சேனன்],குத்தக [நாககுத்தன் / குத்திகன்] [Sena and Guththika/ 237-215 BC] என்ற இரு தமிழ் மன்னர்கள் மொத்தம் இருபத்தி இரண்டு ஆண்டுகள் அனுராத புரத்தில் இருந்து ஆட்சி செய்தனர். இவ்விரு தமிழ் மன்னர்களின் பின் சில காலம் கழித்து, எல்லா…
-
- 0 replies
- 732 views
-
-
'அம்பானியின் வறுமை' என்னும் தலைப்பில் 'அருஞ்சொல்' இதழில் அதன் ஆசிரியர் சமஸ் இன்று எழுதியிருக்கும் கட்டுரை இது. அம்பானிக்கு மட்டும் இல்லை, எங்களுக்கும் கூட இது பொருத்தமே. ****************** அம்பானியின் வறுமை சமஸ் 20 Mar 2024 ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு நீங்கள் இழந்ததாக நினைப்பது எதுவும் உண்டா? இப்படி யாராவது கேட்கும்போதெல்லாம் ஒரு விஷயம் தோன்றி மறையும். ஊர்ப் பக்கக் கல்யாணச் சாப்பாடு! எது நாம் வாழும் ஊரோ அதுவே நம் சொந்த ஊர் என்று எண்ணுபவன் நான். தீபாவளி, பொங்கல் என்றால் ஊருக்குச் செல்வது, ஊரில் திருவிழா என்றால் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்புவது, வீட்டில் ஏதும் விசேஷ நிகழ்வு என்றால் அதைப் பிறந்த ஊரில் திட்டமிடுவது… இதையெல்லாம் முற்றிலுமாக வெறுப்…
-
- 1 reply
- 735 views
- 1 follower
-
-
அம்பேத்கர் அவர்கள் பற்றி அவரின் மனைவி சவிதா அம்பேத்கர் எழுதிய நூலில் உள்ள சில விடயங்களை ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார் ஷங்கர்ராமசுப்ரமணியன். நல்ல ஒரு கட்டுரை. இது 'அகழ்' இதழில் வந்துள்ளது. கட்டுரையில் உள்ள ஒரு பந்தி: “26 ஜனவரி 1950-லிருந்து நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழையப்போகிறோம். அரசியலில் சமத்துவம் இருக்கும். சமூக, பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மை இருக்கும். இந்த முரண்பாட்டை நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படுபவர்களெல்லாம், இந்த அவை மிக கடினமான உழைப்பிலிருந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பைத் தகர்த்துவிடுவார்கள்.” *******************…
-
- 0 replies
- 511 views
-
-
விபத்தால் விசேடதேவையுடையவராகிய கணவர் மனைவிக்கு நண்பனை திருமணம் செய்து வைத்த கதை.
-
- 0 replies
- 830 views
- 1 follower
-
-
இன்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை இருந்தது. ***** மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி. March 14, 2024 வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்‘ என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொ…
-
- 0 replies
- 681 views
-
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"PART / பகுதி: 17 "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing" [ஆங்கிலத்திலும் தமிழிலும் / In English and Tamil] சிந்து சமவெளி நாகரிகத்தின் மக்கள் அனைவரும் சைவ உணவு உண்பவர்கள் அல்ல என்பதும், சைவ உணவுப் பொருட்களுடன் சிந்து சமவெளி நாகரிக மக்களும் இறைச்சியை உட்கொண்டனர் என்பதும் இறந்தவர்களுக்காக வழங்கப்படும் பிரசாதங்களில் இறைச்சி சேர்க்கப்பட்டுள்ளது என்பதன் மூலம் தெளிவாகவும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. …
-
- 0 replies
- 586 views
-
-
தூய அடையாளம் ----------------------------- 10ம் வகுப்பு சோதனைக்காக அடையாள அட்டை ஒன்றை எடுக்குமளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என்று ஒன்று இருக்கின்றது, அது மிகவும் தேவையானது என்று உணர்ந்திருக்கவில்லை. அந்த விண்ணப்ப படிவத்தில் முழுப்பெயர் தப்பாக இருக்கின்றது என்று ஆசிரியர் சொல்ல, பின்னர் அதை மாற்றுவது கூட முடியாமல் போனது. முதன்முதலாக இலங்கையில் வேறு இன மக்களின் நடுவில் வாழ ஆரம்பித்த பொழுது தான், அடையாள அட்டையை தாண்டிய விடயங்கள் தெரியவந்தது. மொழி, உணவு, மதம் என்பன மட்டும் இல்லை, இனக் குழுக்களின் நடை, உடை, பாவனைகளில் கூட தனித்துவம் இருந்தது. பொதுவான மொழியான ஆங்கிலத்தில் ஒரு சொல்லை ஒருவர் சொன்னாலே, அவர் இந்த இனமா அல்லது அந்த இனமா என்ற…
-
-
- 4 replies
- 828 views
-
-
முற்றவெளி மந்திரம் sudumanalFebruary 18, 2023 யாழ் முற்றவெளியில் 09.02.24 அன்று நடந்த இந்திய சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி கட்டற்ற மக்கள் அலையில் தத்தளித்தது. அதில் சில மீறல்களை இளைஞர்கள் நிகழ்த்தியதால் பரபரப்பாகி நிகழ்ச்சி தடைப்பட்டு பின் தொடர்ந்து நடந்து முடிந்தது. சமூகவலைத்தளங்கள் எப்போதுமே தூண்டிலோடு அலைவதால் முற்றவெளியில் பேத்தைவால் குஞ்சு அகப்படவும் அதைப் பிடித்து இராட்சத மீனாக படம் காட்டி அமர்க்களப்படுத்திவிட்டன. இதற்குள் புகுந்து “யாழ்ப்பாணிகளின் கலாச்சாரச் சீரழிவு” என இளைஞர்கள் மீதான ஒழுக்காற்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டன. அலம்பல்கள், வன்மங்கள், வகுப்பெடுப்புகள் என அடித்த அலைகளுக்கு நடுவே பொறுப்பான விதத்தில் இப் பிரச்சினையை அணு…
-
- 2 replies
- 917 views
- 1 follower
-
-
எதுவுமே நிரந்தரமல்ல சமீபத்தில் வலைதளங்களில் பார்த்த ஒரு வீடியோ க்ளிப் மனத்தை வலியில் தள்ளியது. அதில் புகழ்பெற்ற திரைப்பட பாடகி திருமதி. பி. சுசீலா பேசியிருந்தார். அது: "செத்துப்போயிடலாமான்னு இருக்கு. சாவு நம்ம கையில இல்லை. கடவுள் எப்ப கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான். ஒரு ஆர்டிஸ்டு உயிரோடு இருக்கறப்ப யாரும் பார்க்கறதில்லை சார். பாட முடியாம இருக்கிறேன். வாய்ஸ்ம் இல்லை, சக்தியும் இல்லை. எண்பது வயதுக்கு மேல அதிகமாயிடுச்சு. யாராவது வந்து கேட்கிறாங்களா. சுசீலாம்மா சரஸ்வதிதேவி, மேல் உலகத்திலிருந்து கீழே வந்தவங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. சரஸ்வதிக்கு உடுத்தறதுக்கு த…
-
- 2 replies
- 888 views
-
-
Thanks to the Swiss couple ( Mr & Mrs Sritharan )who donated this very valuable & useful ultrasound scanner to the Chankanai Hospital.
-
-
- 5 replies
- 1k views
- 2 followers
-
-
அப்பா ஒரு அதிசயமான புத்தகம் தான். ஏனென்றால், இந்த புத்தகம் நமது கையில் இருக்கும் போது, அதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. புரிந்துகொள்ள நினைக்கும் போது, அந்த புத்தகம் நம் கையில் இருப்பதில்லை. இது தான் உண்மையும் கூட. நம்முடையும் வாழ்க்கையும் ஒரு புத்தகம் தான். இந்த வாழ்க்கையின் முதல் மற்றும் கடைசி பக்கங்கள் கடவுளால் எழுதப்படுகிறது. ஆனால், நடுவில் உள்ள அனைத்து பக்களையும் நாம் தான் நிரப்ப வேண்டும். இந்த பக்கங்கள் சந்தோசத்தாலும், உயர்வினாலும், கண்ணீரின்றி, கவலையின்றி நிரப்பப்பட வேண்டும் என்றால், அதற்கு நமக்காக கஷ்டப்பட்டு, கண்ணீர் சிந்தி, நம்மை சரியான வழியில் நடத்த வேண்டும். தந்தையின் அன்போடு இணைந்து வாழ்பவர்களை விட, தந்தையின் அன்பை இழந்து அல்லது பிரிந்து வாழும…
-
-
- 1 reply
- 955 views
-
-
தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்? மு.இராமநாதன் ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர் காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதி வரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால், திருத்தணி முதல் தென்குமரி வரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை. பான் அட்டை விண்ணப்பத்தில் இரண்டு பெயர்கள் கேட்டார்கள். முதற்பெயர் (first name) ஒன்று. குடும்பப் பெயர் (surname) மற்றொன்று. தமிழர்களுக்கு ஆக உள்ளது ஒரு பெயர்தான். இரண்டில் ஒன்றிற்கு அதை எழுதினார்கள். மற்ற…
-
-
- 1 reply
- 1.1k views
-
-
போர் முழக்கம் - சுப.சோமசுந்தரம் நியூசிலாந்து பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் வயது குறைந்த (21) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஹனா ரஹிதி மெய்பி கிளார்க்' என்ற பெண் அந்நாட்டின் தொல்பழங்குடி இனமான 'மவுரி' இனத்தைச் சார்ந்தவர். பழங்குடியினருக்கான சமூகச் செயற்பாட்டாளர். தம் இனத்தின் போர் முழக்கப் பாடலைப் பாடி பாராளுமன்றத்தில் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அவருடன் இணைந்து வேறு சிலரும் முழக்கத்தில் பங்கெடுத்தது சிறப்பு. தலைவிரி கோலத்தில், "இளங்கோவடிகளின் சிலம்பு எடுத்தியம்பும் கொற்றவையோ, தோழர் சு.வெங்கடேசனின் வேள்பாரிக் கொற்றவையோ, உலகில் தீமையை அழிக்கும் கூற்றமோ !" என்று வியக்க வைக்கிறார் மெய்பி கிளார்க். "இன்னுயிர் ஈந்தும் உங்களது உரிமை…
-
-
- 1 reply
- 822 views
- 2 followers
-
-
புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும் December 22, 2023 — எழுவான் வேலன் — ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை பரிசு மழையால் மூழ்கடிக்கும் பழக்கம் ஒன்று இப்போ ஆரம்பமாகியிருக்கிறது. வறுமையான பிள்ளைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புலமைப் பரிசில் திட்டம் இப்போ பெற்றோரை வறுமையாக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புலமைப் பரீட்சையை நோக்கமாகக் கொண்டு முதலாம் ஆண்டிலிருந்தே பிள்ளைகளுக்கு ரியுசன் ஆரம்பிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஐந்து வருடத்துக்கு ரியுசன் காசு கட்ட வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். (புலமைப் பரீட்சை முடிந்த பின் கட்டப்படுகின்ற ரியுசன் காசு வேறு கணக்கு) நான்காம் ஆண்டுக்குப் போ…
-
-
- 2 replies
- 896 views
- 1 follower
-
-
சந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது. இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் மொழி உயர்வானது’ – ‘கலப்பற்றது அல்லது ஒப்பீட்டளவில் கலப்பற்ற நல்ல தமிழை ஈழத்தமிழர்கள் பேசுகிறார்கள்’ என்ற பலமான ஒரு ஜனரஞ்சக நம்பிக்கை உண்டு. மொழியல் ரீதியாக யோசித்தால் மேற்படி நம்பிக்கைகள் அதிகம் அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் நிச்சயமாக ஆங்கிலத்தை அதிகம் தமிழுக்குள் இட்டுப் பேச…
-
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
மரண பலம் -----சுப.சோமசுந்தரம் சமீபத்தில் எனக்கு ஒரு விஷயம் வேடிக்கையாகத்தான் இருந்தது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன் சமூக வலைத்தளங்களின் Memes நாயகனாக சித்தரிக்கப்பட்டவர் திரு. விஜயகாந்த். இன்று இந்திரன், சந்திரன் என்று அதே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் திருவாளர் வெகுசனமும் கொண்டாடும் நபரானார் அவர். ஒரு வாரத்திற்கு முன் என் ஆச்சி (அப்பாவின் அம்மா) தனது 103 வது அகவையில் இயற்கை எய்தினாள். நான் சிறுவனாய் இருக்கும்போது என் அப்பா அரசுப்பணியில் ஒரு கிராமத்தில் பணியில் இருந்ததால் அங்கேயே ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். "எங்கிருந்தெல்லாமோ நம் ஊரைத் (பாளையங்கோட்டை) தேடி வந்து பிள்ளைகளப் படிக்க வைக்கிறார்கள். நீ இந்தப் பட…
-
- 0 replies
- 664 views
- 1 follower
-
-
இனியேனும் பணியிடத்திற்கு ஏற்ற உடைகள் பரவலாகட்டும்! KaviDec 26, 2023 15:34PM நா.மணி சேலையை கட்டியது முதல், வீட்டிற்கு வந்து அதனை மாற்றிக் கொள்ளும் வரை, பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்ளவே பெரும்பாடு படுகிறார்கள். இந்திய மக்கள் தொகை சுமார் 140 கோடி. அதில் பெண்கள் சரிபாதி. அதிலும் பாதிபேர் தான் சேலை உடுத்தும் நிலையிலும் வயதிலும் இருக்கிறார்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும், இன்றைய நிலையில் சுமார் 35 கோடி பெண்கள் நாள் தோறும் சேலை அணிந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இந்த அவஸ்தையை அனுதினமும் அனுபவித்து வருகிறார்கள். இப்படி எத்தனை கோடி பெண்கள், எத்தனை நூற்றாண்டுகள் இந்தக் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். கலாச்சாரமாக மாற்றப்பட்ட கஷ்டங்கள்…
-
- 1 reply
- 926 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 45 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில், இத்தாலியின் வடக்கு நகரமான பாவியாவில், 75 வயதான மூதாட்டி ஒருவர், தனது மகன்களை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மகன்களில் ஒருவரது வயது 40, மற்றவருக்கு வயது 42. தனித்தனியாக வாழுமாறு தனது மகன்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை என அந்தப் பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரு மகன்களும் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை வழங்கும்போது, "குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோரின் பொறுப்பு என்பதால் ஆரம்பத்தில் மகன்கள் தங்கியிருக்கலாம். ஆனால், இப்போது அவர்கள் 40 வயதுக…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
men's day special mentors meet…
-
- 0 replies
- 860 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆண் என்றால் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றியெல்லாம் உலகம் தோன்றியதிலிருந்தே தனித்துவமான சிந்தனைகள் நிலவி வருகின்றன. இதில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதன் கலாசாரம் மற்றும் மதங்கள் சார்ந்து வேறுபாடுகள் இருந்தாலும், ஆண்கள் குறித்த சிந்தனைகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே இருக்கிறது. நம்மில் பலரும் இதுபோன்ற விஷயங்களைப் பல தலைமுறைகளாகவே நமது வீடுகளில் தொடங்கி, நாம் பேசும் மனிதர்கள், ஊடகங்கள் மற்றும் படங்கள் வரை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். உதாரணமாக ஆண்களுக்கு வலியே தெரியாது, `என்ன மனுஷன்ப்பா இ…
-
- 0 replies
- 884 views
- 1 follower
-
-
வயதான தந்தையை, புறக்கணிக்காதீர்கள். பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும்... மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது. இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர். குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர். வயதான தந்தை தன் குடும்ப…
-
- 3 replies
- 888 views
-
-
ஆலகாலச் செடி – குறியீட்டு எண்: 420 பிரான்ஸ் குகை ஓவியம் 1971ல் கலிபோர்னியாவின் சான் ராஃபெல் பள்ளியின் ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு தங்களை ’வால்டோஸ்’ என்று அழைத்துக் கொண்டது. அவர்கள் கையில் தற்செயலாக கிடைத்திருந்த ஒரு வரைபடம் பள்ளியின் அருகிலிருக்கும் அடர் காட்டுக்குள் சட்டவிரோதமாக வளர்க்கப்படும் போதைச்செடிகளின் இருப்பிடத்தைக் காட்டியது. ஸ்டீவ், டேவ், ஜெஃப்ரி, லேரி மற்றும் மார்க் ஆகிய ஐவரும் மாலை பள்ளி முடிந்த பின்னர் ரகசியமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று கூடி அந்த செடிகளை தேடிக்கண்டுபிடிக்க முடிவெடுத்தனர். மறுநாள் பள்ளி வளாகத்தின் பின்புறமிருந்த லூயி பாஸ்டரின் வெண்கலச்சிலையின் அருகிலிருந்த பீச் மரப்பொந்திற்குள் 4;20 என்று மட்டும் எழுதியிருந்த நீல…
-
- 1 reply
- 581 views
-
-
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறைய நிறுவன நிர்வாகிகள் மன அழுத்தத்திலும் கவலையிலும் இருப்பது தெரிய வந்தது. தொழில், நிறுவனம், அமைப்பு, பள்ளி என எதுவாகினும் அதனை நிர்வகிக்கும் போது அது தொடர்பான சிக்கல்கள், பிரச்சினைகள், சவால்கள் நினைவில் வந்து வந்து போகும்தானே? உளவியல் அறிஞர்களை நாடினர். ஓர் ஒழுங்கினைக் கட்டமைத்தார்கள். அன்றாடமும் மாலையில் வீட்டுக்குச் செல்லும் முன்பாக சக அலுவலர்களுடனான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அந்தக் கூட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் எழுதச் சொன்னார்கள். அவற்றை வரிசைப்படுத்தச் சொன்னார்கள். வரிசையின் அடிப்படையில் அதற்கான தீர்வுகள் இன்னின்னதென அடையாளம் காணப்பட்டு அதற்கான பணிகள் இடம் பெறச் செய்தனர். மனிதனின் மனம் என்பது விநோதமானது. எ…
-
- 0 replies
- 644 views
- 1 follower
-
-
இன்றைக்கு அதிகாலையில் கருப்பண்ணசாமி கோவிலை ஒட்டிய, வறண்டு கிடந்த காட்டோடைக்குள், சிறிது தூரம் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, எதிரே காலைக் கடனுக்காகத் தள்ளாடி நடந்து வந்த பொங்கிமுத்து, "அட்ரா சக்கை. அட்ரா சக்கை. அறிவு வந்திருச்சா" என்ற போது சிரித்துக் கொண்டேன். பிறகு பொங்கிமுத்துவும் நானும் அவருக்குச் சில பொருட்கள் வாங்கவும் எனக்கு கடலை, எள், தேங்காய் எண்ணையை ஆட்டவும் ஒட்டன்சத்திரம் வரை போனோம். பொங்கிமுத்துவிற்கு எண்பது வயதிற்கு மேல் இருக்கலாம். அவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன் அல்லவா? இப்போது நடை அவருக்கு முற்றிலுமே சுருங்கி விட்டது. பெயரன் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு மட்டும் வண்டியில் வைத்து அழைத்துப் போவதாகச் சொன்னார். வீடு அதைவிட்டால் நந்தினி …
-
- 2 replies
- 863 views
- 1 follower
-
-
“இப்ப மனிசியும் இல்லை. கையிலை காசும் இல்லை. உள்ளதை எல்லாம் பிடுங்கிப் போட்டு பிணமாகத்தான் அனுப்பினாங்கள்.” மனைவியை இழந்த அவர் புலம்பினார். தீடீரென மயங்கி விழுந்த அவளை கொழும்பில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். கடுமையான ஸ்ரோக் (பக்கவாதம்). நினைவில்லை. வாயால் பேச முடியாது. வேண்டியதைக் கேட்க முடியாது. சாப்பிட முடியாது. சலம் மலம் போவது தெரியாது. செத்த பிணம்போலக் கிடந்தாள். நெஞ்சாங் கூடு அசைவதும், இருதயம் துடிப்பதும்தான் இன்னமும் உயிருடன் இருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின. நாளங்கள் வழியாக ஊசிகள், குழாய் மூலம் உணவு, மற்றொரு குழாய் மூலம் சிறுநீர் அகற்றல் என சுமார் இரண்டு மாதங்கள் கழிந்தன. ஆனால் காப்பாற்ற முடியவி…
-
- 2 replies
- 637 views
- 1 follower
-