Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..! யாழ் 'தமிழ் சிறி'யின் நீராகார 'வெள்ளி இரவு' முடிந்து, சனிக்கிழமையாக உதித்திருக்கும் இந்த நாள் இனிய நாள்..! இப்பொன்னாளில், உங்கள் மன்னனின் வாழ்க்கை பொன்பொழிகளை சற்றே கேட்டு இந்நாளை தொடங்குவோமா..? முள்ளிவாய்க்காலைவிட மிக மோசமான யுத்தம்..! இரத்தம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது..!! எங்கு நோக்கினும் பிணக்குவியல்கள், அலறல்கள், உயிர்மூச்சுக்கள்..!!! போரில் தோற்று வீழ்த்தப்பட்ட இராவணன், தனது இறுதி கணங்களை நெருங்கிக்கொண்டிருந்தான்.. குருதிசகதிக்குள் அமிழ்ந்த இராவணன், மரண எல்லையில் வலியால் முனங்கிக்கொண்டிருந்தான்.. இராமன், இலக்குமணனை அழைத்தான்.. தமையன் சொல்லுக்கு எப்பொழுதும் கீழ்ப்…

    • 23 replies
    • 2.5k views
  2. Started by அபராஜிதன்,

    .அரைக்கிழவனின் வியாக்கியானம் இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா?). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய டப்பா மாறுகிறது. குறுந்தொப்பை நிரந்தரம். Midlife crisisக்கான அறிகுறிகள் லேசுபாசாய் தென்படுகிறது. இது ஒரு taking stock of life பதிவு. இந்த 35 வயதில் நான் கற்றதும்,பெற்றதும் என்ன? 35 வயதில் என்ன சாதித்தாய் என்றால் ஒன்றுமில்லை. கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கிறேன் (touch wood). அமெரிக்காவில் ஊர் ஊராய் ஓடி, திரவியம் தேடி, தங்கைகள் திருமணத்துக்கு தோள் நின்று, களைத்து, வடக்கே கனடாவில் ஒதுங்கி, வீடு வாங்கி, நல்லது/கெட்டதுக்கு 4 நட்புக்கள் சேர்த்து, செந்திலை புரிந்திருக்கும் கரகாட்டக்கார கவுண்டமணியாய் ஒரு …

    • 1 reply
    • 1.4k views
  3. ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 1) சிறந்த ஆசான் 2) சிறந்த பெற்றோர் 3) சிறந்த நண்பன் கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . ஆசிரியர் என்பது வேறு ஆசிரியம் என்பது வேறு ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் என்பது என் கருத்து நன்றி

  4. மாற்றம் ஒன்றே மாறாதது.. http://youtu.be/y2Dp-zEGIZE பெரும்பாலான வீடுகளில் நடப்பவற்றை நகைச்சுவையாக, அழகாக சொல்லியுள்ளார், திருமதி.பாரதி பாஸ்கர்.. தந்தையின் அருமையை உணர்கிறேன்!

    • 5 replies
    • 2.2k views
  5. ஓதுவோரும் ஊதுவோரும் ------------------------------------------- அன்று . . . . தகவல் பரிமாற்றமானது சமூகங்களை இலகுவாகத் தொடர்புபடுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திராத காலங்களில் ஒவ்வொரு சமூகமும் அந்தச் சமூகம் சார்ந்த விடயங்களை (சரி, தவறு என்ற பாகுபாடின்றி) முழுமையாக ஏற்டுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த விடயங்கள் அந்தந்த சமூகத்திற்கு சமூக முன்னோடிகளாக கருதப்பட்டவர்களால் நேருக்கு நேராக கதைகள், மேடை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள், வில்லுபாட்டுக்கள், போன்ற மூலங்களின் ஊடாக தொடர்ச்சியான முறையில் சொல்லபட்டு (ஓதப்பட்டு) வந்தன. இந்த ஓதுவோர்கள் அறிந்தோ அறியாமலோ தமது சமூக, பொருளாதார நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தாம் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை ‘குண்டுச் சட்டிக்குள் குத்திர…

  6. உடன்பாடும் முரண்பாடும் -------------------------------------- மனம் போல் தான் வாழ்க்கை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மனத்தின் தன்மை அதன் செயற்பாடுகளை எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை தரும் வகையில் செயற்படுத்துவது எப்படி? மனத்தின் இரண்டு நிலைகள் உடன்பாடும் முரண்பாடும் தான். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விடயத்திலும் நாம் உடன்படுவோம் அல்லது முரண்படுவோம். உடன்பாடும் முரண்பாடும் வாழ்வியல் நகர்வின் சக்கரங்கள். உடன்பாடு மட்டுமே எமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைகின்றது. அப்படியானால் முரண்பாட்டை எப்படிக் கையாள்வது? ஒரேஒரு வழி இது தான். ஒரு விடயம் உடன்படக்கூடியதாக இருப்பின் உடன்படுங்கள். முரண்பாடாக இருப்பின் முரண்படுங்கள். முரண்பாட்டுக்கு எதிரான முரண்பாடும் மறைமுகம…

  7. அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியான புதிய விற்பனைச் சரக்குகளில் ஒன்றுதான் மகிழ்ச்சி! நாம் எப்போதுமே நம்பிக்கையோடு வாழ வேண்டும், எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும், எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கப் பழக வேண்டும் என்ற ஆலோசனைகள் அனைத்துமே மனித மனதின் இயல்புகளைப் புரிந்துகொள்ளாததன் விளைவே. நான் என் கூட்டை உடைத்துக்கொண்டு வரப்போகிறேன், உங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தரக்கூடிய - ஏன் அவமானகரமான - உண்மையை ஒப்புக்கொள்ளப்போகிறேன். நான் மகிழ்ச்சியான மனிதன் அல்ல. தெருவில் போகிற ஆளைப் பார்த்து, ‘‘ஏன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருக் கிறாய், மகிழ்ச்சியாக இரு’’ என்று ஆலோசனை கூறும் ஆளும் அல்ல. காரணம், அப்படி எப்போதுமே நடக்காது. அதே வேளையில், நான் மகிழ்ச்சியற்ற மனி…

    • 0 replies
    • 687 views
  8. நம் சமூகத்தில் எத்தனையோ மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டிருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் சதவீதமும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. கருவறையில் தொடங்கும் பாதுகாப்பின்மை பெண்களுக்குக் கல்லறைவரை தொடரவே செய்கிறது. பிணமான பிறகும் வல்லுறவுக் குள்ளாகும் பெண்களைப் பற்றிய செய்திகள் இந்தச் சமூகத்தில் பெண்கள் வெறும் உடல்களாக மட்டுமே பார்க்கப் படுகிறார்கள் என்பதற்கு சாட்சி. இந்தியாவின் தேசிய குற்றப் பதிவு அமைச்சரவை சமீபத்தில் நடத்திய ஆய்வு வெளியீட்டுத் தகவல் நம்மை திடுக்கிட வைக்கிறது. ‘இந்தியாவில் ஒவ்வொரு 26 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறாள். 34 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறாள். மேலும் ஒவ்வொரு 43 நிமிடங்களுக்க…

    • 0 replies
    • 732 views
  9. தனிவரிசை ஜெயமோகன் சென்ற மே 7 ஆம் தேதி அமெரிக்க விசா அலுவலகத்தில் இருந்த இரண்டுமணிநேரம் அற்புதமானது. அனேகமாக படித்த உயர்குடியினர், உயர்நடுத்தரவர்க்கத்தினர். கூடுமானவரை ஆங்கிலத்திலேயே தங்களுக்குள் பேசிக்கொள்பவர்கள். உயர்தர உடையணிந்தவர்கள். மென்மையான பாவனைகள் கொண்டவர்கள். பிற அனைவரையும் உடை, தோற்றம், நிறம் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ளும் விழிகள் கொண்டவர்கள். ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் எந்த வரிசையைக் கண்டாலும் இயல்பாகவே அதில் முண்டியடித்து ஊடுருவவே முயன்றனர். சிலர் நேராகச் சென்று வரிசையின் முன்னால் தனிவரிசையாக நின்றனர். பல இடங்களில் எழுதிவைக்கப்பட்டிருந்தும்கூட , கண்ணும்முன் வரிசை தெரிந்தாலும் கூட வரிசையில் சென்று இயல்பாக நின்றவர்கள் பாதிக்கும் கீழேதான் சீர…

  10. ஸ்மார்ட் போன்கள் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நாம் அதை எப்படிப் பயன்படுத்துகின்றோம்? செல்பேசியில் அலைவரிசை சரியாகக் கிடைக்காமல் போனாலோ, பேட்டரி தீர்ந்து விட்டாலோ, செல்பேசியைக் காணவில்லை என்றாலோ மிகவும் அதிகமாகப் பதட்டப்படுகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு 'நோமோபோபியா' இருக்கிறது என்பது நிச்சயம். செல்பேசி இல்லையென்றால் தேவைக்கதிகமாக பயப்படுவது ''நோ மொபைல் போன் போபியா'' என்று அமெரிக்காவில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 2019-ல் 651 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் புழக்கத்துக்கு வந்துவிடும் என்று 'சிஸ்கோ' என்னும் தொழில்நுட்ப நிறுவனம் கணித்திருக்கிறது. டிஜிட்டல் உலகத்தில் தொழில்நுட்ப வசதிகளோடு பிறக்கும் குழந்தைகள் மற…

    • 0 replies
    • 521 views
  11. அதிகாரம் என்பது நல்ல சொல் ஆர். அபிலாஷ் வேதியலில் சில வாயு அல்லது அமிலங்களை நிறமும் குணமும் அற்றது என்பார்களே அப்படி ஒரு வஸ்து தான் அதிகாரம். இதை புரிந்து கொள்ள எனக்கு வாழ்க்கையின் கிட்டத்தட்ட பாதி தேவைப்பட்டது. இதை சரியாக அறிந்து கொள்ளாததனாலே எனக்கு அதிகாரத்தில் எனக்கு மேலேயும் கீழேயும் உள்ளவர்களோடு உறவை தக்க வைப்பதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன. இது என்னை நிம்மதியற்றவனாக, உலகத்தை, மனிதர்களை வெறுப்பவனாக என்னை மாற்றியது. என்னுடைய நிலைக்கு மூன்று காரணங்கள். ஒன்று என் அப்பா. அவர் எப்போதும் அதீதமான இரட்டை நிலைகளில் இருப்பார். ஒன்று அதிகாரத்தை பொழிவார். அல்லது அன்பை பொழிவார். இரண்டிலும் திக்குமுக்காட செய்வார். பன்னிரெண்டு வயதில் இருந்தே அப்பாவுடனான உறவு எனக்கு சிக…

  12. இந்தியாவுக்கு இல்லாத துணிவு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு இருக்கிறது. ஆம், சிவப்பழகு கிரீம், பவுடர் வகைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. கூடவே, கருப்பழகின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கருப்பழகு விளம்பரத் தட்டிகளும் பதாகைகளும் மிளிர்கின்றன. சிவப்பழகூட்டிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சிவப்பு அல்லது வெள்ளைதான் அழகு, கருப்பு அழகிய நிறமல்ல என்ற பரவலான தப்பபிப்பிராயத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. நம் நாட்டைப் போலவே, ஆப்பிரிக்கச் சந்தையிலும் சிவப்பழகூட்டிகளின் ஆக்கிரமிப்பு அதிகம். உலக சுகாதார நிறுவனம் தரும் புள்ளிவிவரத்தின்படி நைஜீரியர்கள்தான் இதி…

    • 0 replies
    • 571 views
  13. பிரான்பற்று வேள்வியில் அறுக்கப்பட்ட ஆட்டின் தலை புலம்புகின்றது கேட்பீராக….? செய்திகள் | இலங்கைச் செய்திகள் Saturday, May 9, 2015 by admin இன்றைய தினமும் நூற்றுக்கணக்கான கடா ஆடுகள் வெட்டி மண்ணில் சாய்க்கப்பட்டள்ளன. இந்நிலையில் ஒரே வெட்டில் இரண்டு துண்டாய் தலைவேறு முண்டம் வேறாய் துடிதுடித்து கிடந்த ஒரு கடா ஆடு தன் வாழ்க்கையையும் துன்பத்தினையும் அந்த ஆலய சந்நிதானத்தில் அதாவது அந்தக்கடாவின் பலிபீடத்தில் கிடந்தவாறு தன் ஆற்றாமையை சொல்லி புலம்புகின்றது. அவ்வளவு சனக்கூட்டத்திற்கு மத்தியிலும் அதன் புலம்பல்கள் மட்டும் என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தன. எனதருமை அன்புத்த தமிழா! உன் நம்பிக்கைகள் கண்டு எமது இனம் இன்று வெட்கித்தலைகுணிகின்றது. மன்னித்துக்கொள்ளுங…

    • 4 replies
    • 781 views
  14. சும்மா இருப்பவள் ~ லறீனா ஏ. ஹக் ~ சமூக அமைப்பில் உள்ள பல்வேறு நிறுவனக் கட்டமைப்புக்களில் குடும்பமும் ஒன்று. என்றாலும், சாதாரணச் சமூக உளவியலில் அது ஒரு ‘நிறுவனம்’ என்பதான விம்பம் ஆழம் பெறவில்லை என்பதே உண்மை. சமூக, கலாசார, சமயம் சார்ந்த கருத்தியல்கள் கட்டமைத்துள்ள புனிதப் பிம்பம் மேலெழுந்து ஆழப்பதிந்துள்ளதன் விளைவே இதுவாகும். மனித உயிரி ஒரு சமூகப் பிராணி என்ற அளவில், சிறுகுழுவாக, பெருங்குழுமமாக ஒருங்கு சேர்ந்து வாழ்வது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில், குடும்பமும் ஆணும் -பெண்ணும் இணைந்து வாழும் ஒரு சமூகச் சிற்றலகாக இருக்கின்றது. நம்முடைய சமூக அமைப்பில் கணவன் – மனைவி- குழந்தைகள் இணைந்ததாக, சிலபோது இவர்களோடு மூத்த தலைமுறையினரையும் உள்வாங்கியதாகக் குடும்பம் கட்ட…

  15. பிராண்டட் பொருட்களின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை புரிந்துகொள்ள முடியாது. பொருளின் மதிப்பைவிட அதிகமான தொகையைத்தான் கொடுக்கிறோம் என்று தெரிந்துகொண்டே பிராண்டட் பொருட்களுக்கு அதிக விலை கொடுக் கிறோம். ஏனென்றால் பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்கிற நம்பிக்கை. தனி அந்தஸ்தை கொடுக்கும் சில பிராண்டுகளுக்கும் அதிக விலை கொடுக்கத்தான் செய்கிறோம். அதே சமயத்தில் பிராண்டட் அல்லாத பொருட்களும் சந்தையில் முக்கிய பங்கை வகிக்கத்தான் செய்கின்றன. பிராண்டட் பொருட்களுக்கு ஈடான அதே தரத்தை பிராண்டட் அல்லாத பொருட்களிலிருந்தும் பெற முடியும். பெரிய நிறுவனங்கள் தங்களது பிராண்டை உருவாக்க கோடி கோடி யாக செலவு செய்து மக்களிடம் நம்பிக் கையைப் பெறுகிறார்கள். அதற்காகும் செலவுகளை பொருட்…

    • 0 replies
    • 624 views
  16. இன்றைய பரபரப்பான வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதா ? பரிதாபத்துக்குரியதா ? 12c5d949d48ed491352a0b4ef8196eef

    • 0 replies
    • 1.5k views
  17. திராவிட இயற்கங்களால் தமிழரின் கலாசாரம் அழிக்கப்படுகிறதா?

    • 10 replies
    • 3.7k views
  18. விடுமுறை நாளன்று தெருவோரமாக நடந்து கொண்டிருந்தார் ஒருவர். அப்போது அலுவலக சகஊழியர் ஒருவரை எதேச்சையாகச் சந்தித்தார். தெரிந்த ஒருவரைக் கண்டவுடன் வழக்கமாக எல்லோரும் சொல்லும் அந்த வார்த்தைகளைக் கேட்டார். “ஹலோ சார், எப்படி இருக்கீங்க?” உடனே அந்த நபர் “நான் எப்படி இருக்கிறேனா அல்லது நான் எப்படி உணர்கிறேனா? இதில் எதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்?” என எதிர்க் கேள்வி எழுப்பினார். அலுவலக நண்பர் கேட்கும் கேள்வியின் உள் அர்த்தம் புரியாமல் “ஓகே சார்…ஃபைன்” எனச் சொல்லிவிட்டு இடத்தைவிட்டு நகர்ந்தார் முதலாவது ஆசாமி. இப்படித்தான் பெரும்பாலான நேரங்களில் நலம் விசாரித்தல் என்பது உதட்டளவில் மட்டுமே நடைபெறுகிறது. உண்மையான உணர்ச்சி “எப்படி இருக்கீங்க?” எனக் கேட்கும்போது ஏதோ சொல்ல வேண…

    • 0 replies
    • 680 views
  19. யாழ்பாணத்தில் இப்பொது வாள் வெட்டு என்பது அடிக்கடி நடக்கின்ற ஒரு நிகழ்வாகும். இதில் பல அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள். பெரும்பாலும் குழுக்களுக்கு இடையில் ஏற்படும் சிறு சிறு பிரசின்னை தான் வாள் வெட்டு வரை போகின்றது. வாள் வெட்டில் ஈடுபட்ட சில நபர்கள் கைது செய்து (பெரும்பாலானவர்கள் கைது செய்யபடுவது இல்லை) சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாலும், சில நாட்கிளில் அவர்கள் பிணையில் வந்து தங்களது திருவிளையாடல்களை மீண்டும் ஆரம்பிகின்றார்கள். அத்துடன் அவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்களையும் அச்சுறுத்தி வருகிறர்கள் (சாட்சி சொன்னவர்களுக்கும் வாள் வெட்டு). இந்த கலாச்சாரத்துக்கு மூல காரணம் என்ன? இதற்கு தீர்வுதான் என்ன? இந்த வாள் வெட்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர என்ன செ…

    • 20 replies
    • 1.9k views
  20. சமீபத்தில் "உங்கள் குழாயில்"(Youtube) தேடியபோது மனதை தொட்ட குறும்படம் இது.. ! ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? "கால்நடையா போகிறேன்.. கஞ்சன் கிட்டே கேட்கிறேன்.. உழைச்சு திங்க வயசில்லே.. உசிரை மாய்க்க மனசில்லே.. என்ன மட்டும் மறந்திட்டியே.. பிச்சைக்கார கடவுளே.." http://youtu.be/oPZTjdzS1-s

  21. தந்தையாகப் போகிறீர்களா? ஒரு குட்டி அட்வைஸ் தாயாக போகும் பெண்களை விட, தந்தையாக போகும் ஆண்களுக்கு தான் பயம் கலந்த சந்தோஷம் இருக்கும். ஏனெனில் பெண் என்பவள் ஒரு கருவை தனது வயிற்றில் சுமக்கிறாள். ஆனால், ஆண் மனைவியோடு சேர்த்து தனது குழந்தையையும் மனதில் சுமக்கிறார். இந்த இரண்டு உயிர்களையும் எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற அச்சம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் பயங்களை எல்லாம் போக்கி, ஒரு நல்ல தந்தையாக விளங்குவதற்கு தயார்படுத்திக்கொள்வது அவர்களின் கடமையாகும். 1. தந்தையாக போகும் ஆண்கள், தங்கள் குழந்தைக்காக பாதுகாப்பான முறையில் வீட்டினை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது. 2. அலுவலக வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமாளிப்பது என்பது ஒவ…

    • 6 replies
    • 828 views
  22. சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் தில்லைராஜன்: வாழ்க்கை - வேலை இரண்டுமே முக்கியமான விஷயங்கள் தான். ஒரு நாளில் எத்தனை மணி நேரம் அலுவலக வேலைகளை கவனிக்க வேண்டும், எவ்வளவு நேரம் குடும்பத்தோடு செலவிட வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், உங்களது வேலை மற்றும் குடும்பத்துடனான நேரம், சம நிலையில் அமையும். ஒரு வேலையை செய்து முடிக்க, அதிக நேரம் தேவைப்படுகிறது அல்லது நீங்கள் திட்டமிட்ட நேரத்துக்குள் அந்த வேலையை முடிக்க முடியவில்லை எனில், உங்களுக்கு சோர்வு தான் ஏற்படும். இவ்வாறான சூழ்நிலையில், அந்த வேலைக்கு சிறிது அவகாசம் தந்து, நீங்கள் புத்துணர்ச்சி அடைந்தவுடன் அதே வேலையை செய்தால், எந்தத் தவறும் இல்லாமல் சிறப்பாக செய்து முடிக்கலாம். வேலையே கதி என்று இருந்து விடாமல், ஊரில் நடக்கும் திருவிழா …

    • 0 replies
    • 1.7k views
  23. Started by கிருபன்,

    முள்வேலி -புஷ்பராணி- ஈழத்தில் இருந்து புலம் பெயரும்போது ,உறவுகள், சொத்துகள் , வீடுவாசல்கள்….அழிக்க முடியாத பல நினைவுத்தடங்கள் என்று எல்லாவற்றையும் தடாலடியாக அங்கேயே விட்டுவிட்டு வந்த நம்மவர்கள் சாதியையும் அதனோடு சேர்ந்து விடுவிக்கமுடியாத வீணாய்ப்போன கலாசாரங்களையும் ,மேலோங்கி எண்ணங்களையும் முன்பிருந்ததைவிட மிக அதிகமாகவே புதையல் போலப் பொத்திக்கொண்டு வந்து தாம் தஞ்சமடைந்த நாடுகளிலும் பேணி வளர்க்கும் அநாகரிகத்தை மிக உன்னதமாக நினைத்துப் பெருமை வேறு கொள்கின்றார்கள். இதுபற்றி எழுதும்போதே என் காதில் விழுந்த …கண்ணால் கண்ட பல சம்பவங்கள் வரிசை கட்டிக் கண்முன்னே விரிகின்றன…தாம் வாழும் நாடுகளிலுள்ள பலவித பழக்கவழக்கங்களை முக்கித் தக்கிப் பின்பற்றி நாகரிக நடைபோடப் பிரயத்தனப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.