உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
ஈராக்கில் ஆஸி. படைகள் வாபஸ் . Monday, 02 June, 2008 10:22 AM . சிட்னி, ஜூன் 2: ஈராக்கில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய ராணுவப் படைகள் தனது பணியை முடித்துக் கொண்டு விட்டதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. . ஆஸ்திரேலிய படையின் சேவைகள் ஈராக்கில் முடிவுற்றதை குறிக்கும் வகையில் ஈராக்கின் தெற்கே உள்ள டெரன்டாக் முகாமில் பறந்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கொடி இறக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் வரும் வாரங்களில் ஈராக்கில் இருந்து தாயகம் திரும்புகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தேர்தலில் வெற்றி பெற்று புதிய பிரதமராக பதவியேற்ற கெவின் ருட் 2008ம் ஆண்டு மத்தியில் ஈராக்கில் இருந்து படைகள் திரும்பப் பெறப்படும் என உறுதியளித்திரு…
-
- 0 replies
- 702 views
-
-
களக்காடு: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு, சிறுத்தை, புலி, கரடி, யானை, மான், சிங்கவால் குரங்கு, மிளா உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் உள்ளன. இங்குள்ள விலங்குகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. தன்னர்வ தொண்டர்கள், கிராம வனக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் தனிதனி குழுக்களாக பிரிநது காட்டுக்குள் சென்று விலங்குகளின் கால் தடங்களையும், அவைகளின் எச்சங்களையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கால் தடங்களை முண்டன்துறையில் வைத்து ஆய்வு நடத…
-
- 3 replies
- 1.3k views
-
-
சென்னையின் விபரீத தொழில்-ஆண் விபச்சாரம். - `எவ்வளவு சம்பாதிப்பீர்கள் ஒரு இரவுக்கு?' கிகோலோஸ்' தமிழ்நாட்டுக்கு புதிய வார்த்தை. இதன் கொச்சையான அர்த்தம் ஆண் விபச்சாரம். இலைமறைவு காயாக மிகப் பணக்காரப் பெண்களுக்கு மட்டும் தேவைப்பட்டுக் கொண்டிருந்த இந்த சமாச்சாரம் இப்போது சென்னையில் காலூன்றிவிட்டது. பெண்ணுக்கு மசாஜ் செய்வதாக கூறிக்கொண்டு, தப்புக் காரியங்களில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செக்ஸ் விஷயத்துக்கு ஆண்கள் கைது செய்யப்படுவது சென்னையில் இது முதல்முறை. இந்த இரண்டு இளைஞர்களுமே படித்துப் பட்டம் பெற்றவர்கள். நாளிதழ்களில் `பெண்களுக்கு வீட்டுக்கு வந்து மசாஜ் செய்து தரப்படும்' என்று விளம்பரம் செய்ய வேண்டியது. அந்த விளம்பரத்தைப் ப…
-
- 2 replies
- 35.2k views
-
-
சும்மா மழை பெய்து பார்த்திருக்கிறோம்.. தாயகத்தில் தோட்டா மழை பொழியப் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இந்தோனிசியாவில் ஒரு பணக்கார வியாபாரி.. சுமார் 100 மில்லியன் ருப்பீயாக்களை.. வானத்தில் இருந்து அள்ளி வீசியிருக்கிறார். இவற்றின் அமெரிக்க டாலர் பெறுமதி 10,700 டாலர்கள் மட்டுமே..! இது தொடர்பான காணொளி கீழுள்ள இணைப்பில் உண்டு. http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/7429940.stm
-
- 2 replies
- 1.1k views
-
-
வீரகேசரி நாளேடு கோலாலம்பூர், மலேசிய தகவல் அமைச்சானது அந்நாட்டு "ரிவி 2' அலைவரிசையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் நாடகங்களை ஒளிபரப்புவதை தடை செய்ய தீர்மானித்துள்ளது. மலேசிய தொலைக்காட்சி இரசிகர்களுக்கு தமிழ் நாடகங்களை தயாரித்து வழங்கும் ஒரே நாடாக இந்தியா இருக்கையில் இவ்வாறான தடை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளதாக முன்னாள் அமைச்சரும் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவருமான எஸ். சாமிவேலு தெரிவித்தார். இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் செயலாளர் நாயகம் மனித வள அமைச்சருமான எஸ். சுப்பிரமணியம் இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக சாமிவேலு கூறினார். தமிழ் நிகழ்ச்சிகளானது 2.6 மில்லியன் மலேசிய இந…
-
- 3 replies
- 1.2k views
-
-
பைசா சாயும் கோபுரம் நிமிர்கிறது உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பைசா நகர சாய்ந்த கோபுரம் ஒரேயடியாக சாய்ந்து விழுந்துவிடாமல் தடுப்பதற்காக நான்கு கோடி டாலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் பலனளித்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்காக தற்போது சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சாய்ந்த கோபுரமாது தனது 800 வயது சரித்திரத்தில் இப்போதுதான் முதல் முறையாக சாய்வதை முற்றிலுமாக நிறுத்தியிருக்கிறது என்று சோதனை முடிவுகள் உறுதிசெய்துள்ளன. சாய்வாக நிற்கும் உலகக் கட்டிடங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதான பைசா கோபுரத்தை சாயாமல் நிறுத்துவதற்கு பத்து ஆண்டுகள் எடுத்திருக்கிறன. கோபுரத்துக்கு அருகில் வடக்கு பக்கத்திலிருந்து பூமியைத் தோண்டி சுமார் எழுபது டன் மண்ணை எடுத்திருக்…
-
- 0 replies
- 853 views
-
-
உலகத்தின் கண்களில் இருந்து இது நாள் வரை தென்படாமல் இருந்த பழங்குடி இனமொன்று பிரேஸிலின் ரியோடி ஜெனீரோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வமான பழங்குகுடியினர் உடம்பெங்கும் செம்மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தை பூசியிருக்கின்றனர்.இவர்களின
-
- 15 replies
- 4.5k views
-
-
http://www.dinamalar.com/pothunewsdetail.a...ow3&ncat=IN
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.dinamalar.com/Sambavamnewsdetai...ow3&ncat=IN
-
- 5 replies
- 2k views
-
-
காத்மாண்டு: கடந்த 239 ஆண்டுகளாக நிலவி வந்த மன்னராட்சி நேபாளத்தில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று முதல் நேபாளம் குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள குட்டி நாடான நேபாளம், உலகின் ஒரே இந்து நாடாக அறியப்பட்டது. மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் போராட்டம் வெடித்தது. மாவோயிஸ்ட்டுகள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தின் விளைவாக அங்கு ஜனநாயகம் மலர்ந்தது. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட மாவோயிஸ்ட்டுகள் தேர்தலில் பங்கேற்றனர். ஆட்சியையும் பிடித்துள்ளனர். நேற்று நேபாள நாடாளுமன்றத்தின் (தேசிய அரசியல் நிர்ணய சபை) முதல் கூட்டம் நடந்தது. எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் மன்னராட்சியை முடி…
-
- 0 replies
- 1.4k views
-
-
மியான்மார் நாட்டைத் தாக்கிய "நர்கீஸ்" புயலுக்கு இரண்டு இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். அதில் சுமார் நாற்பதாயிரம் பேர் தமிழர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அது தவிர சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இது பற்றி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளார். "நர்கீஸ்" தாக்கியதைத் தொடர்ந்து மியான்மாரில் உள்ள இராணுவ அரசாங்கம் வெளிநாடுகளின் உதவிகளை வேண்டாமென்று மறுத்து வந்தது. ஐநா சபையின் வலியுறுத்தலுக்குப் பிறகே தற்போது உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த உதவிகளும் கூட பர்மியர்களுக்கே வழங்கப்படுகின்றன. அங…
-
- 14 replies
- 3.4k views
-
-
மத்திய கிழக்கில் அணுஆயுதப் பரம்பல் மற்றும் உலகில் அணு ஆயுதப்பரம்பலைத் இராணுவ ரீதியில் எல்லாம் தலையிட்டு அமெரிக்கா தடுப்பதாக உலகுக்குப் போக்குக் காட்டிக் கொண்டு.. இஸ்ரேலின் அணு ஆயுத இருப்பு வளர்வதை அனுமதித்திருப்பதை.. அமெரிக்க முன்னாள் அதிபரும் சிறீலங்காவை ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு அங்கத்துவத்தில் இருந்து விலக்க குரல் கொடுத்தவருமான ஜிம்மி காட்டர் சுட்டிக்காட்டியுள்ளார்..! இஸ்ரேல் உலகுக்கு அறிவிக்காமலே 150 அணுகுண்டுகள் வரை வைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள காட்டர்.. இஸ்ரேல் பலஸ்தீனர்களை நடத்தி வரும் விதமே.. இந்தப் பூமியில் மிக மோசமாக மனித உரிமை மீறல் குற்றம் என்றும் சாடியுள்ளார். உலகின் மிக மோசமான மனித உரிமைக் குற்றங்களில் ஒன்றாக சுமார் 1.6 மில்லியன் பலஸ…
-
- 1 reply
- 938 views
-
-
லண்டன்: டைட்டானிக் கப்பலைக் கண்டுபிடிக்கப் போவதாக கூறிக் கொண்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது அணு சக்திக் கப்பலை அமெரிக்கா தேடிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1912ம் ஆண்டு கடலில் மூழ்கிய கப்பல் டைட்டானிக். இதில் 1500 பேர் பலியானார்கள். டைட்டானிக் கப்பலைத் தேட அவ்வப்போது கடல் பயணங்கள் நடந்துள்ளன. ஆனால் டைட்டானிக் கப்பலைத் தேடுவதாக கூறி விட்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது இரு கப்பல்களை அமெரிக்கா தேடிய கதை வெளியாகியுள்ளது. 1985ல் இந்த டூப் மிஷனை மேற்கொண்டது அமெரிக்கா. பாப் பல்லார்ட் என்பவர்தான் இந்த மிஷனுக்குத் தலைமை தாங்கினார். சமீபத்தில் இவர் தான் மேற்கொண்ட டைட்டானிக் மிஷனின் பின்னணியை புட்டுப் புட்டு வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் …
-
- 0 replies
- 819 views
-
-
பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 224 இடங்களில் பாஜகவுக்கு 112 இடங்களும், காங்கிரசுக்கு 77 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 28 இடங்களும் பிற கட்சிகளுக்கு 8 இடங்களும் கிடைத்துள்ளன. ஆட்சியமைக்க 113 இடங்களே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில்.. கலைக்கப்பட்ட சட்டசபையில் பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 65 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 58 எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 5 எம்எல்ஏக்களும் இருந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது. இதன் மூலம் மதசார்பற்ற ஜனதா தளத்துக்குத் தான் பெருத்த அடி விழுந்துள்ளது. அந்தக் கட்சி இழந்த இடங்களை பாஜக அள்ளியுள்ளது. …
-
- 1 reply
- 817 views
-
-
ஹரி பொட்டர் படத்தில் நடித்த இளம் நடிகர் Rob Knox குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். லண்டன் Kentல் உள்ள பார் ஒன்றிற்கு வெளியே நேற்று காலை (24.05.08) ஏற்பட்ட தகராறில் அவர் குத்தப்பட்டார். மற்றும் மூவர் பலமான குத்துக்காயங்களுக்கு ஆளானார்கள். Harry Potter film actor stabbed to death Lee Glendinning and agencies guardian.co.uk, Saturday May 24 2008 A teenager was stabbed to death in a fight outside a bar in Kent following an altercation in which three other men suffered serious stab wounds early today. Rob Knox, an 18-year-old who acted in Harry Potter and the Half-Blood Prince, was fatally wounded outside the Metro Bar in Sidcup, …
-
- 4 replies
- 1.9k views
-
-
மே 25,2008,00:00 IST தி.மு.க.,வில் இருந்து பல தலைவர்கள் வெளியேறிய போதும், வெளியேற்றப்பட்ட போதும் அந்த கட்சி நிலைகுலையாமல் இன்று வரை நின்று வருகிறது. எம்.ஜி.ஆருக்கு பின் தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேறி தனிக்கட்சி கண்டபோது ஒன்பது மாவட்டச் செயலர்கள், ஒன்றிய செயலர்கள் என பெரும்படையே அவருக்கு பக்கபலமாய் இருந்தது. ஆனால், நாளைடைவில் ம.தி.மு.க.,வில் இருந்து முக்கியத் தலைகள் "தாய்' கழகத்தில் இணைந்த நிலையில், இப்போது வைகோ, கண்ணப்பன் உள்ளிட்ட சில தலைகள் மட்டுமே ம.தி. மு.க.,வின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மைதீன் கான், செல்வராஜ், மத்திய அமைச்சர் வேங்கடபதி உள்ளிட்டவர்களில் துவங்கி, மதுரை பொன். முத்துராமலிங்கம், எ…
-
- 0 replies
- 943 views
-
-
பாஸ்க் பிரிவினைவாதக் குழுவின் சிரேஷ்ட தளபதி லொபேஸ் பேனா கைது [24 - May - 2008] பாஸ்க் பிரிவினைவாத அமைப்பின் சிரேஷ்ட தளபதி உட்பட்ட நால்வர் பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியிலுள்ள போர்டேயுக்ஸ் நகரில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக 820 இற்கும் மேற்பட்ட கொலைகளைப் புரிந்துள்ளாரென ஜேவியர் லொபேஸ் பெனா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இக்குழுவினர் கடந்த 2006 இல் யுத்தநிறுத்தத்தை அறிவித்திருந்தாலும் கடந்த வருட ஜூன் மாதத்துடன் அது காலாவதியாகிவிட்டது. லொபேஸ் பெனாவின் கைதை வரவேற்றுள்ள ஸ்பைன் உள்விவகார அமைச்சர் …
-
- 0 replies
- 756 views
-
-
பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கைதுசெய்யப்பட்ட, அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் 4 பேரை பிரிட்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றம் வெள்ளியன்று பிணையில் விடுவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் வாண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்தபடியே, வீடியோ தொடர்பு மூலம் நீதிமன்ற விசாரணைகளை அவதானித்தார்கள். அவர்களில் ஒருவரான அருணாசலம் கிருஷாந்தக்குமார் என்ற சாந்தன் மீது, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு திரட்ட கூட்டங்களை ஒழுங்கு செய்தார் என்று ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புப் பிரிவின் தலைவர் சாந்தன் என்று வர்ணித்து, ஆயுதங்கள் மற்றும் குண்டு தயாரித்தல் ஆகியவற்றுக்கு வேண்டிய பயங்கரவாத த…
-
- 0 replies
- 814 views
-
-
ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுடன் ஆஸ்திரேலிய நடிகை தானியா சயீட்டா, செக்ஸ் வைத்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய டிவி ஸ்டன்ட் ஷோவான ஹூ டேர்ஸ் வின்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தானியா சயீட்டா. இந்தியில் வெளியான மிஸ்டர் பிளாக், மிஸ்டர் ஒயிட் ஆகிய படங்களிலும் சயீட்டா நடித்துள்ளார். இதனால் அவரை பாலிவுட் நடிகை என்றே ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இதுதவிர பே வாட்ச் தொடரிலும் தலை காட்டியுள்ளார். இங்கிலாந்து டிவி நாடகமான மிஷன் இம்பிளாசிபிள் தொடரிலும் நடித்துள்ளார். சயீட்டா தற்போது பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டுவதற்காக சென்றுள்ள ஆஸ்திரேல…
-
- 2 replies
- 2.6k views
-
-
சென்னை: திமுகவும் அதிமுகவும் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் எனக்கு ஏன் இவ்வளவு கூட்டம் கூடப் போகிறது, இளைஞர்கள் ஏன் என்னைத் தேடி ஏன் வரப் போகிறார்கள் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார். சென்னையில் திருமண நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில், திருமண வீட்டிற்கு செல்லும்போது சில விஷயங்களை பேசியாக வேண்டும். ஏனென்றால் இப்போது ஆளுகின்ற, ஆண்ட கட்சிகளெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளிலே பேசி தங்களது கட்சியை வளர்த்துள்ளனர். இங்கே என்னை வரவேற்று வழி நெடுக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், அலங்கார வளைவுகள் தே.மு.தி.க. தொண்டனின் உழைப்பு. அவனுடைய வியர்வையை பணமாக்கி என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறார
-
- 7 replies
- 2.1k views
-
-
லண்டன்: லண்டனில் உள்ள மிகப் பெரிய மாளிகையை 117 மில்லியன் பவுன்டுகளுக்கு இந்திய கோடீஸ்வரர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டலின் மகன் ஆதித்யா மிட்டல் வாங்கியுள்ளார். உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்படும் கட்டடம் என்ற பெருமை இதன் மூலம் இந்த மாளிகைக்குக் கிடைத்துள்ளது. பாலஸ்கிரீன் பகுதியில் இந்தி பிரமாண்டமான மாளிகை உள்ளது. இதற்கு அருகில் உள்ள கென்சிங்டன் பாலஸ் கார்டன்ஸ் பகுதியில்தான் ஆதித்யா மிட்டலின் தந்தை லக்ஷ்மி மிட்டலின் பிரமாண்ட வீடு உள்ளது. 32 வயதாகும் ஆதித்யா மிட்டல், தனது தந்தையின் வீட்டுக்கு அருகிலேயே மிகப் பெரிய வீடாக பாரத்து வந்தபோதுதான் இந்த பாலஸ் க்ரீன்ஸ் வீடு கிடைத்தது. கென்சிங்டன் பகுதியில் தற்போது லக்ஷ்மி மிட்டல் வசித்து வரும் வீட்டை 2004ம் ஆண்டு பார்முல…
-
- 0 replies
- 714 views
-
-
அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது `எப்படி வாழ்ந்த குடும்பம்' என்று ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட்டது. சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் தமிழ்த்திரை மற்றும் இசையுலகின் ஏகபோக சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் ராஜாங்கம் நடத்திய எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி, வாழ்க்கை யோடு போராடிக் கொண்டிருக்கிறார்! ஒரே ஒரு சிறிய ரூம், இரண்டாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் கெரசின் ஸ்டவ் அடுப்பும் சில பாத்திரங்களும் இறைந்து கிடக்கின்றன. தடுப்புக்குப் பின்னே பழைய கட்டிலில் சுயநினைவின்றி முனகிக் கொண்டே பரிதாபமாக படுத்திருக்கிறார் பாகவதரின் மனைவி ராஜம்மாள். அவருக்கு அருகே சுவரோரமாக குட்டையான அழுக்கு ஸ்டீல் பீ…
-
- 2 replies
- 9.9k views
-
-
[23 - May - 2008] [Font Size - A - A - A] மாலைதீவில் சொசம்வில்லா பகுதியில் வீடு ஒன்றில் விபசாரத்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கையர் உட்பட பத்துப் பேரை மாலை தீவு பொலிஸார் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளனர். அயலவர்கள் தெரிவித்த தகவலையடுத்து பொலிஸார் இந்த வீட்டைக் கண்காணித்த பின்னர் வீட்டின் ஐந்து அறைகளின் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்த போது சந்தேக நபர்கள் கூரையின் மீது ஏறித்தப்பிக்க முயன்றனர். ஆனால் பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இவர்கள் கைவிலங்கிடப்பட்டு பொலிஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதை அந்த வீட்டுக்கு வெளியே நின்று பலர் பார்த்தனர். விருந்தினர் விடுதி என்ற பெயரில் இந்த வீட்டில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக விபசாரத்தொழில் இட…
-
- 0 replies
- 938 views
-
-
உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜேர்மனியின் சர்வாதிகாரியாக 1934இல் இருந்து 1945 வரை ஆட்சி புரிந்த ஹிட்லர் நடத்திய அழிவுகள் எண்ணில் அடங்காதவை. ஹிட்லர் உருவாக்கிய இரண்டாம் உலக யுத்தத்தில் ஐரோப்பாவில் மட்டும் 39 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ஹிட்லரின் நாசிப் படைகள் செய்த படுகொலைகள் மனிதகுலத்தை இன்று வரை நடுங்கச் செய்பவை. எக் குற்றமும் செய்யாத 6 மில்லயனுக்கும் அதிகமான யூத மக்கள் ஹிட்லரின் படைகளால் கொல்லப்பட்டார்கள். யூதர்களை கொல்வதற்கு என்றே உருவாக்கப்பட்ட பிரத்தியேக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூத மக்கள் அங்கு பல விதமான சித்திரவதைகளின் ஊடாக கொல்லப்பட்டார்கள். சுட்டும், விச வாயு செலுத்தியும் கொல்லப்பட்ட யூத…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிருஷ்ணகுமார் என்ற 22 வயது இளைஞர் Orkut இணையதளத்தில் சோனியா காந்தியைப்பற்றி அசிங்கமாகவும், தாழ்த்தியும் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் குர்கானில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி செய்பவர். அதனை கண்ட பூனா காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் அவரது IP கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இதனை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேறு இல்லை. Crime Branch arrests Gurgaon IT pro for posting obscene remarks about Sonia Gandhi Google's Social Networking website Orkut. com is again in the news as Crime branch has arrested an…
-
- 7 replies
- 2.1k views
-