உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26853 topics in this forum
-
"பெனாசிரைத் தாக்கவந்த தற்கொலை குண்டுதாரிகள் ஐவரில் நானும் ஒருவன்" [28 - January - 2008] [Font Size - A - A - A] * கைதான சிறுவன் ஒப்புதல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவைக் கொல்வதற்கு ஐவர் கொண்ட குழு ஒன்று தற்கொலை அங்கிகளுடன் புறப்பட்டோம் அதில் நானும் ஒருவன் என்கிறார் அண்மையில் கைது செய்யப்பட்ட பதினைந்து வயதுச் சிறுவன். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் பதினைந்து வயதுச் சிறுவனிடம் அந்நாட்டுப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கொலை தொடர்பான விசாரணைகளை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரும் பாகிஸ்தான் பொலிஸாரும் இ…
-
- 0 replies
- 908 views
-
-
பொலிஸாரின் விசாரணையில் பிரான்ஸ் பங்குசந்தை வியாபாரி பிரான்சில் பங்கு சந்தை வியாபாரத்தில் மாபெரும் மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெரோம் கெர்வீல் என்ற நபரை பொலிஸார் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர். இவர் பிரான்சின் இரண்டாவது மிக பெரிய வங்கியான சோசியதே ஜெனரலுக்கு பங்கு வியாபாரத்தில் சுமார் ஏழுநூறு கோடி டாலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, அதனை மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை காவல்துறையினர் விசாரிக்கின்றனர். பொலிஸார் வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜெரோம் கெர்வீலின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர், அதன் போது அவருடைய கணிணி கோப்புகள் சிலவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுத்தகவல்களும் வேண்டும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் காலமானார் 3 நாள் துக்க தினம் பிரகடனம் 1/27/2008 5:35:38 PM வீரகேசரி நாளேடு - பாலஸ்தீன விடுதலை இயக்கமான "பி.எப்.எல்.பி.' அமைப்பின் ஸ்தாபகரான ஜோர்ஜ் ஹபாஷ், ஜோர்தானில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 80 வயதான ஹபாஷ், மாரடைப்பு காரணமாகவே, மரணத்தைத் தழுவியதாக அவரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். ஜோர்ஜ் ஹபாஷின் மரணத்தையடுத்து, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், மூன்றுநாள் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஹபாஷை வரலாற்று முக்கியத்துவ தலைவர் என வர்ணித்த பாலஸ்தீன ஜனாதிபதி, தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளார். ஹபாஸின் தலைமைத்துவத்தின் கீழ் "பி.எப்.எல்.பி.' அமைப்பா…
-
- 0 replies
- 819 views
-
-
இந்தோனேசிய முன்னாள் ஜனாதிபதி சுஹார்ட்டோ மரணம் 1/27/2008 5:31:02 PM வீரகேசரி நாளேடு - ஜகார்த்தா, இந்தோனேசிய முன்னாள் ஜனாதிபதி சுஹõர்ட்டோ, தனது 86 வயதில் மரணமடைந்துள்ளார். < br> நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.10 மணிக்கு அனைத்து உறுப்புகளும் செயலிழந்து கோமா நிலைக்குச் சென்ற நிலையில் அவர் மரணத்தைத் தழுவியதாக கூறப்படுகிறது. சுஹார்ட்டோவின் 32 வருட ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் அபிவிருத்தி கண்ட போதும், பபுவா மற்றும் ஏக் மாகாணங்களிலும் 1975 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பின் போது கிழக்குத் தீமோரிலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளான சுஹார்ட்டோ, 19…
-
- 0 replies
- 653 views
-
-
கிளிண்டனை திணற வைத்த சிறுமி கிங்ஸ்ட்ரீ, ஜன.24: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளிண்டனை 5 வயது சிறுமி திருமணம் குறித்து மிகச் சிக்கலான கேள்வி ஒன்றை கேட்டு அவரை திணற வைத்தார். ஜனநாயக கட்சி சார்பில் வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் தனது மனைவி ஹிலாரிக்கு ஆதரவாக தென் கரோலினா மாகாணத்தின் பொழுது போக்கு மையம் ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் பிரச்சாரம் செய்தார். . அங்கு 400க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அப்போது மெக்கன்னா சான்ஸ் என்ற 5 வயது சிறுமி, "திருமணம் செய்து கொண்ட பிறகு என்ன செய்வார்கள்?' என்று கிளிண்டனை பார்த்து கேள்வி எழுப்பினார். அந்த சிறுமியின் இந்த கேள்வியால் அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது. ஆனால் கிளிண்டன் சுதாரித்துக்க…
-
- 8 replies
- 2.7k views
-
-
எங்கள் சொந்த மூளை எங்களுக்கு இருக்கிறது மேற்குலக நாடுகள் மீது முஷாரப் பாய்ச்சல் 1/25/2008 8:30:07 PM வீரகேசரி இணையம் - அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளென்றால் அவை எவ்வாறு ஆட்சி செய்வது என்பதை தெரியாதவர்களைக் கொண்ட நாடுகள் என மேற்குலக புத்திஜீவிகள் நினைத்துக்கொண்டிருப்பதாக பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் குற்றஞ்சாட்டியுள்ளார். சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற உலக பொருளாதார சம்மேளன மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள முஷாரப், "சிஎன்என்' செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானில் நீதியும் நியாயமுமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை எனக் கூறப்படும் கருத்துக்கள் குறித்தும் அவர் இதன்போது மறுப்புத் தெரிவித்தார். "…
-
- 1 reply
- 893 views
-
-
போலந்தில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கி அதிகாரிகள் உட்பட 19 பேர் பலி [25 - January - 2008] [Font Size - A - A - A] போலந்தில் இராணுவத்தினரின் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அந்நாட்டைச் சேர்ந்த பல விமானப்படை அதிகாரிகள் உட்பட 19 பேர் பலியாகியுள்ளனர். விமான சேவை பாதுகாப்பு தொடர்பிலான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு திரும்பும் வழியிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 15 பயணிகளையும் 4 பேரடங்கிய விமானிகள் குழுவையும் காவிவந்த ஸ்பெயினின் தயாரிப்பான இவ் விமானம் வடபோலந்திலுள்ள இராணுவத்தினரின் விமான நிலையமொன்றை நெருங்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானத்திலிருந்த அனைவரும் பலியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பத
-
- 0 replies
- 592 views
-
-
பாகிஸ்தானில் கடும் மோதல் 40 போராளிகள் பலி; 30 பேர் சிறைப்பிடிப்பு [25 - January - 2008] [Font Size - A - A - A] பாகிஸ்தானின் தென் வாஷிறிஸ்தான் பகுதியில் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 40 போராளிகள் பலியானதுடன் 30 க்கும் அதிகமானோர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனரெ
-
- 0 replies
- 731 views
-
-
அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் (ரூபன்) அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் தெரிவாகியுள்ளது. இது 2007ஆம் ஆண்டு நிலைமைகளை வைத்து முன்னெடுக்கப்பட்ட தெரிவாகும்.. அனைத்துலக ரீதியில் வாழ்க்கைக்தரத்தில் சிறந்த நாடுகளைப் பட்டியலிடும் இந்நடைமுறை 1990 ஆம் ஆண்டிலிருந்து, ஐ.நாவினால் ஒவ்வோராண்டும் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக நோர்வே தெரிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த ஆண்டு ஸ்கண்டிநேவிய நாடுகளில் மற்றொன்றான ஐஸ்லாண் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இறுதிக் காலங்களில் ஐஸ்லாண்டில் சமூக –மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் கணிச…
-
- 0 replies
- 715 views
-
-
நான் முஸ்லிம் இல்லை' மறுக்கிறார் பராக் ஒபாமா [23 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களில் ஒருவரான பராக் ஒபாமா ஒரு முஸ்லிமென வெளியான தகவல்களை அவர் கடுமையாக மறுத்துள்ளார். ஒபாமா ஒரு முஸ்லிம் தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர் போன்ற தகவல்களை உள்ளடக்கிய மின் அஞ்சல்கள் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் செனட் சபையில் குர்.ஆனின் மீது தான் ஒபாமா உறுதிமொழி எடுத்தார் என்ற தகவலும் அந்த மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளது. இது ஒபாமாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள் நிறைந்திருக்கும் தெற்கு அமெரிக…
-
- 3 replies
- 1.2k views
-
-
திருவனந்தபுரம்: "மதத்தை காரணம் காட்டி, கடம்புழா தேவி கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது," என பிரபல பாடகர் ஜேசுதாஸ் கூறினார். திருவனந்தபுரத்தில் உள்ள இசைக் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் பேசியதாவது:கேரளா, மலப்புரம் மாவட்டம் கடம்புழாவில் உள்ள தேவி கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். இதை நிறைவேற்றுவதற்காக சமீபத்தில் கடம்புழா கோவிலுக்கு சென்றிருந்தேன். ஆனால், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன் என்பதற்காக என்னை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாக அதிகாரிகள் மறுத்து விட்டனர். அங்குள்ள எலி, பூனை போன்றவை கூட கடவுளுக்கு அருகில் செல்கின்றன. ஆனால், நான் கோவிலுக்குள் செல…
-
- 26 replies
- 4.2k views
-
-
தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது, தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவு…
-
- 4 replies
- 1.2k views
-
-
கொங்கோவில் இதுவரை 5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் Report: 5 million killed in Congo conflictStory Highlights (CNN) -- Hopes are high that the government of the Democratic Republic of Congo and armed groups can end a decade of fighting that a new report says has claimed the lives of more than 5 million people. Rebel soldiers loyal to renegade general Laurent Nkunda pictured in December near Goma The two sides have been attending a conference for more than two weeks in the eastern city of Goma and late Tuesday, they appeared close to signing an agreement. Their discussions are focusing on peace for the country's eastern Kivu province…
-
- 0 replies
- 592 views
-
-
போதைப்பொருள் கடத்தலின் புகலிடமாக வெனிசூலா [23 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க அதிகாரிகள் கடும் குற்றச்சாட்டு போதைப்பொருளான கொகேய்ன் வர்த்தகத்திற்கு வெனிசூலா ஜனாதிபதி ஹியுகோ சாவேஷ் பெரிதும் உதவுவதாக அமெரிக்க போதைப்பொருள் தடுப்பிற்கான உயர்மட்ட அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அயல்நாடான கொலம்பியாவில் உற்பத்தி செய்யப்படும் கொகேய்னை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான புகலிடமாக வெனிசூலா விளங்குவதாக அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள வெனிசூலா போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் ப…
-
- 0 replies
- 641 views
-
-
முதல்வர் கருணாநிதி அறிவிப்பு தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு அரசாணை விரைவில் வெளியாகும் சென்னை, ஜன.11: "தமிழ்ப் புத்தாண்டு தை முதல்நாள்தான் பிறக்கிறது என்று 500 புலவர்கள் கூடி கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள். அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள் விரைவில் வரும்" என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழ் மையம், சுற்றுலா வளர்ச்சி பண்பாட்டுத் துறை சார்பில் நடக்கும் சென்னை சங்கமம் கலைவிழாவை ஐஐடி திறந்தவெளி அரங்கில் முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: பொங்கல் திருநாளையட்டி நடக்கும் இந்த விழா, கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு தொடர காரணமான கனிமொழி, கஸ்பர் மற்றும் நண்பர்களுக்கு பாராட்டுகள். எனக்கு ஒரு குறை. கடந்த ஆ…
-
- 95 replies
- 12.4k views
-
-
ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் சுனாமி பீதி ஏற்பட்டு மக்கள் ஓட்டம் பிடித்தனர். இன்று காலையில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள நியாஸ் தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் கடலோரப் பகுதி வீடுகளில் உள்ளவர்கள் சுனாமி பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கை குறித்து அந்நாட்டு அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் வீதிகளில் பீதியுடன் அமர்ந்த…
-
- 0 replies
- 577 views
-
-
கியூபாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகின்றன [22 - January - 2008] [Font Size - A - A - A] கியூபாவில் புதிய பாராளுமன்றத்திற்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இத் தேர்தலில் கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ உட்பட ஒரு ஆசனத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நோய்வாய்ப்பட்டுள்ள பிடல் காஸ்ட்ரோ ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமாக மக்கள் முன் தோன்றவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. பிடல் காஸ்ட்ரோ தொடர்ந்தும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பாரா என்பது பெப்ரவரி 24 ஆம் திகதி கூடவுள்ள புதிய பாராளுமன்றமே திர்மானிக்கவுள்ளதாக காஸ்ட்ரோவின் சகோதரரும் ஜனாதிபதி பதவியை தற்காலிகமாக வகித்துவருபவருமான ரவூல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 728 views
-
-
மலேசியாவில் வேலை வாய்ப்பை பெற்றுள்ள 2 இலட்சம் வெளிநாட்டவர் அடுத்த ஆண்டில் திருப்பி அனுப்பப்படுவர்? [22 - January - 2008] [Font Size - A - A - A] மலேசியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களில் 2 இலட்சம் பேரை அந்நாட்டு அரசாங்கம் அடுத்தாண்டளவில் திருப்பியனுப்பவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மலேசிய அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 இலட்சம் தொழிலாளர்கள் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர். கட்டுமானத் தொழில், ஹோட்டல்கள் மற்றும் தோட்டங்களில் அவர்கள் வேலை செய்க…
-
- 0 replies
- 848 views
-
-
ஆபிரிக்கப் பெண்களின் எழுச்சி -அன்பரசு- இருபதாம் நூற்றாண்டை அடையாளப்படுத்தும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் பெண்கள் எழுச்சி முன்னணி இடம் வகிக்கிறது. பெண்கள் அரசியலில் தமக்குரிய இடத்தைப் பெறுவதற்காகப் போரிட வேண்டியிருந்தது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாட்டுப் பெண்கள் வாக்குரிமைக்காகக் கடும் போராட்டம் நடத்தி இறுதியில் வெற்றி பெற்றனர். அவர்கள் நடத்திய வாக்குரிமைப் போராட்டம் உலகப் பெண்களுக்கு இந்த அனு கூலத்தைப் பெற்றுக்கொடுத்தது. வாக்குரிமைக்காகப் போராடிய இங்கிலாந்துப் பெண்களைச் சப்பிறஜெற்கள் (ளுரககசயபநவவந) என்று அழைத்தார்கள். இவர்களின் போராட்டம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் நடைபெற்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சென்னை: இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான, `போலாரிஸ்' செயற்கைக் கோளை தாங்கிச் சென்று விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்தது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட், சென்னை அருகில் உள்ள ஷ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9:15 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இங்கிருந்து ராக்கெட் ஏவப்படுவது இது 25வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டில் இஸ்ரேல் நாட்டுக்குச் சொந்தமான 300 கிலோ எடையுள்ள, `டெக்சார்' எனப்படும் போலாரிஸ் செயற்கைக் கோள் எடுத்துச் செல்லப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட ஆயிரத்து 185வது வினாடியில் இந்த செயற்கைக் கோள் அதன் சுற்றுப் பாதையில் …
-
- 0 replies
- 2.3k views
-
-
மலேசியத் தமிழர் பிரச்சினை பற்றி... [21 - January - 2008] [Font Size - A - A - A] மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அரசாங்கம் பேரினவாத நோக்கில் நடந்து கொள்வதாக அந்த நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் அனுமதியில்லாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்று அதைப் பொலிஸார் தாக்கிக் கலைத்துள்ளனர். மலேசிய அரசாங்கம் பற்றி நம்மிற் பலருக்குத் தெரியாது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் ஜனநாயகமின்மை பற்றியோ இனப்பாகுபாடு பற்றியோ நமக்குச் சொல்லுமளவுக்கு நமது ஊடகங்கட்கும் அக்கறையில்லை. சமூகப் பிரமுகர் யாருக்கும் அக்கறை இல்லை. இப்போது மத அடிப்படையிலான உரிமை மீறல்கள் தொடர்பாகத் தகவல்கள் வந்துள்ளதால் இனிமேற் கொண்டு மலேசியாவின் பேரினவாத ஆட்சி பற்றிப் பேச…
-
- 0 replies
- 915 views
-
-
ஒரு மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண் முதலிட தகுதியிருந்தால் இங்கிலாந்தில் குடியேற அனுமதி 1/21/2008 8:40:40 PM வீரகேசரி இணையம் - குறைந்தது ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுணை முதலீடு செய்யும் தகைமை வாய்ந்த செல்வந்த வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் இங்கிலாந்தில் வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளது. இதன்போது வதிவிட உரிமை கோருபவர்களின் ஆங்கில புலமை தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டப் பிரேரணையானது அரசாங்கத்தின் குடியேற்றவாசிகளுக்கான புதிய புள்ளியிடல் திட்டத்தின் ஒரு அங்கமாக முன்வைக்கப்பட்டது. தொழில் முயற்சியாளர்களும் புத்துருவாக்குனர்களும் அதிக திறமை வாய்ந்த குடியேற்றவாசிகள், தொழிற்சந்தையில் நிலவும் பற்றா…
-
- 0 replies
- 815 views
-
-
வாழ்க்கைத்தரம் வீட்டுரிமை, கல்வி, சுகாதாரம் ஆகிய விடயங்களில் உலகில் முக்கியம் பெறும் நாடுகள் எவை என்பது குறித்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. வடஅமெரிக்கா, வட ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் உள்ள 131 நாடுகளிடையே நடைபெற்ற கணிப்பீட்டில் உலகநாடுகளின் தர வரிசையின் முதல் பத்து நாடுகளும் பின்வருமாறு அமைந்துள்ளன. 01. அமெரிக்கா 02. சுவிஸ் 03. டென்மார்க் 04. சுவீடன் 05. ஜேர்மனி 06. பின்லாந்து 07. சிங்கப்பூர் 08. ஜப்பான் 09. பிரிட்டன் 10. கொலன்ட் 131 வது இடம் சாட். http://www.nerudal.com/content/view/3971/35/
-
- 0 replies
- 818 views
-
-
அது ஒரு சிறைச்சாலை. அங்குள்ள கைதிகளையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இதில் விநோதம் என்னவென்றால் இது சிவபெருமானின் சிறைச்சாலையாகும். இங்கு நூற்றுக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் எல்லை மாவட்டமான நீமாக்கில் இந்த சிறைச்சாலை உள்ளது. இப்படி ஒன்றை கேள்விப்பட்டதும், உடனடியாக அங்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கு ஏராளமான கைதிகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தனர். பல தடுப்புகளுக்கு இடையே ஏராளமான கைதிகள் இருந்தனர். அதில் இருந்த ஒரு கைதி எங்களிடம் பேசினார். தான் நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதில் இருந்து விடுபட இங்கு வந்துள்ளதாகக் கூறினார். நோய் தீர்ந்த உடன் சிவபெருமானின் முன் அனுமதியுடன் தான் இங்கிருந்து சென்று விடுவேன் என்று…
-
- 5 replies
- 1.9k views
-
-
15 மாதங்களுக்கு முன்னம் தமிழகத்தில் வைத்து குமுதம் தீராநதிக்கு அளித்த பேட்டியை இங்கு உங்கள் ஆலோசனைகளுக்காக வெளியிடுகிறேன். புது டெல்ஹியில்ல்வெள்ளிவரும் "த ஸ்ரென்ற்மென்"ஆங்கில பேட்டி ஒன்றையும் இணைக்க விரும்பினேன். அது இங்கு மரபோ தெரியவில்லைஇ. அண்மையில் மேலும் ஒரு நீண்ட பேட்டிக்கான கோரிக்கையும் அவசியமும் எழுந்திருக்கிறதால் தமிழர் மத்தியில் நிலவும் கருத்துக்களை அறிய விருப்பம். விவாதங்களை வளர்ப்பதில் அல்ல உங்கள் கருத்தை அறிவதில்தான் ஆர்வம். இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்பட வேண்டும்" By: தளவாய் சுந்தரம் Courtesy: குமுதம் தீராநதி யாழ்ப்பாணத்தில் பிறந்த வ.ஐ.ச. ஷெயபாலன், தற்கால ஈழத்துக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர். இலக்கியம் மட்டுமின்றி, ச…
-
- 1 reply
- 836 views
-