உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
எங்கள் சொந்த மூளை எங்களுக்கு இருக்கிறது மேற்குலக நாடுகள் மீது முஷாரப் பாய்ச்சல் 1/25/2008 8:30:07 PM வீரகேசரி இணையம் - அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளென்றால் அவை எவ்வாறு ஆட்சி செய்வது என்பதை தெரியாதவர்களைக் கொண்ட நாடுகள் என மேற்குலக புத்திஜீவிகள் நினைத்துக்கொண்டிருப்பதாக பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் குற்றஞ்சாட்டியுள்ளார். சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற உலக பொருளாதார சம்மேளன மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள முஷாரப், "சிஎன்என்' செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானில் நீதியும் நியாயமுமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை எனக் கூறப்படும் கருத்துக்கள் குறித்தும் அவர் இதன்போது மறுப்புத் தெரிவித்தார். "…
-
- 1 reply
- 896 views
-
-
போலந்தில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கி அதிகாரிகள் உட்பட 19 பேர் பலி [25 - January - 2008] [Font Size - A - A - A] போலந்தில் இராணுவத்தினரின் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அந்நாட்டைச் சேர்ந்த பல விமானப்படை அதிகாரிகள் உட்பட 19 பேர் பலியாகியுள்ளனர். விமான சேவை பாதுகாப்பு தொடர்பிலான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு திரும்பும் வழியிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 15 பயணிகளையும் 4 பேரடங்கிய விமானிகள் குழுவையும் காவிவந்த ஸ்பெயினின் தயாரிப்பான இவ் விமானம் வடபோலந்திலுள்ள இராணுவத்தினரின் விமான நிலையமொன்றை நெருங்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானத்திலிருந்த அனைவரும் பலியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பத
-
- 0 replies
- 593 views
-
-
பாகிஸ்தானில் கடும் மோதல் 40 போராளிகள் பலி; 30 பேர் சிறைப்பிடிப்பு [25 - January - 2008] [Font Size - A - A - A] பாகிஸ்தானின் தென் வாஷிறிஸ்தான் பகுதியில் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 40 போராளிகள் பலியானதுடன் 30 க்கும் அதிகமானோர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனரெ
-
- 0 replies
- 731 views
-
-
அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் (ரூபன்) அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் தெரிவாகியுள்ளது. இது 2007ஆம் ஆண்டு நிலைமைகளை வைத்து முன்னெடுக்கப்பட்ட தெரிவாகும்.. அனைத்துலக ரீதியில் வாழ்க்கைக்தரத்தில் சிறந்த நாடுகளைப் பட்டியலிடும் இந்நடைமுறை 1990 ஆம் ஆண்டிலிருந்து, ஐ.நாவினால் ஒவ்வோராண்டும் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக நோர்வே தெரிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த ஆண்டு ஸ்கண்டிநேவிய நாடுகளில் மற்றொன்றான ஐஸ்லாண் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இறுதிக் காலங்களில் ஐஸ்லாண்டில் சமூக –மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் கணிச…
-
- 0 replies
- 716 views
-
-
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம் நாசா: செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம் இருப்பதாக அங்கு இருந்து எடுக்கப்பட்ட படத்தை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை அமெரிக்கா அனுப்பியது. அங்குள்ள விண்பரப்பில் இருந்து அவ்வப்போது எடுக்கப்படும் படங்களை இன்டர்நெட் மூலம் பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் பாறை மீது ஒரு பெண் அமர்ந்து இருப்பதுபோன்ற ஒரு அமைப்பு இருக்கும் படம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்ணுக்கு பெண் போன்ற உருவமாக தோன்றுவதாகவும் , பாறையில் இயற்கையாக அமைந்துள்ள காட்சி தான் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் அங்கு மக்கள் வாழ்ந்திருப்பார்களோ என்ற கேள்வியையும் பரவலாக உலக…
-
- 32 replies
- 7.5k views
-
-
கொங்கோவில் இதுவரை 5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் Report: 5 million killed in Congo conflictStory Highlights (CNN) -- Hopes are high that the government of the Democratic Republic of Congo and armed groups can end a decade of fighting that a new report says has claimed the lives of more than 5 million people. Rebel soldiers loyal to renegade general Laurent Nkunda pictured in December near Goma The two sides have been attending a conference for more than two weeks in the eastern city of Goma and late Tuesday, they appeared close to signing an agreement. Their discussions are focusing on peace for the country's eastern Kivu province…
-
- 0 replies
- 593 views
-
-
போதைப்பொருள் கடத்தலின் புகலிடமாக வெனிசூலா [23 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க அதிகாரிகள் கடும் குற்றச்சாட்டு போதைப்பொருளான கொகேய்ன் வர்த்தகத்திற்கு வெனிசூலா ஜனாதிபதி ஹியுகோ சாவேஷ் பெரிதும் உதவுவதாக அமெரிக்க போதைப்பொருள் தடுப்பிற்கான உயர்மட்ட அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அயல்நாடான கொலம்பியாவில் உற்பத்தி செய்யப்படும் கொகேய்னை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான புகலிடமாக வெனிசூலா விளங்குவதாக அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள வெனிசூலா போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் ப…
-
- 0 replies
- 642 views
-
-
நான் முஸ்லிம் இல்லை' மறுக்கிறார் பராக் ஒபாமா [23 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களில் ஒருவரான பராக் ஒபாமா ஒரு முஸ்லிமென வெளியான தகவல்களை அவர் கடுமையாக மறுத்துள்ளார். ஒபாமா ஒரு முஸ்லிம் தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர் போன்ற தகவல்களை உள்ளடக்கிய மின் அஞ்சல்கள் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் செனட் சபையில் குர்.ஆனின் மீது தான் ஒபாமா உறுதிமொழி எடுத்தார் என்ற தகவலும் அந்த மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளது. இது ஒபாமாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள் நிறைந்திருக்கும் தெற்கு அமெரிக…
-
- 3 replies
- 1.2k views
-
-
தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது, தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவு…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் சுனாமி பீதி ஏற்பட்டு மக்கள் ஓட்டம் பிடித்தனர். இன்று காலையில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள நியாஸ் தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் கடலோரப் பகுதி வீடுகளில் உள்ளவர்கள் சுனாமி பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கை குறித்து அந்நாட்டு அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் வீதிகளில் பீதியுடன் அமர்ந்த…
-
- 0 replies
- 578 views
-
-
கியூபாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகின்றன [22 - January - 2008] [Font Size - A - A - A] கியூபாவில் புதிய பாராளுமன்றத்திற்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இத் தேர்தலில் கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ உட்பட ஒரு ஆசனத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நோய்வாய்ப்பட்டுள்ள பிடல் காஸ்ட்ரோ ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமாக மக்கள் முன் தோன்றவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. பிடல் காஸ்ட்ரோ தொடர்ந்தும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பாரா என்பது பெப்ரவரி 24 ஆம் திகதி கூடவுள்ள புதிய பாராளுமன்றமே திர்மானிக்கவுள்ளதாக காஸ்ட்ரோவின் சகோதரரும் ஜனாதிபதி பதவியை தற்காலிகமாக வகித்துவருபவருமான ரவூல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 729 views
-
-
மலேசியாவில் வேலை வாய்ப்பை பெற்றுள்ள 2 இலட்சம் வெளிநாட்டவர் அடுத்த ஆண்டில் திருப்பி அனுப்பப்படுவர்? [22 - January - 2008] [Font Size - A - A - A] மலேசியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களில் 2 இலட்சம் பேரை அந்நாட்டு அரசாங்கம் அடுத்தாண்டளவில் திருப்பியனுப்பவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மலேசிய அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 இலட்சம் தொழிலாளர்கள் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர். கட்டுமானத் தொழில், ஹோட்டல்கள் மற்றும் தோட்டங்களில் அவர்கள் வேலை செய்க…
-
- 0 replies
- 849 views
-
-
அமெரிக்க என்ற ஏகாதபக்திய வல்லாதிக்க சக்தி இராணுவ ரீதியில் மட்டுமன்றி அரசியல் ரீதியில் ஜனநாயகம் என்ற போர்வையிலும் பொருளாதார ரீதியில் உலக மயமாக்கம்.. பங்கு வர்த்தகம் என்று உலகையே தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களாக உலகப் பங்குச் சந்தைகளில் வியாபாரம் படு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் இந்தியா உட்பட சில நாடுகள் பங்கு சந்தை வியாபாரத்தை இடைநிறுத்தி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் முக்கிய காரணம்.. அமெரிக்காவில் நிகழும் பொருளாதார தளம்பல் நிலைதான்..! ஆக உலகம் தற்போது அமெரிக்காவின் பிடியில் வசமாகச் சிக்கிவிட்டுள்ளது..! அமெரிக்கா ஆட்டி வைப்பது போல ஆட வேண்டிய நிலைக்கு உலகம் விரும்பியோ விரும்பாலமோ இலக்காகி விட்டுள்ளது..! பொருளாதார…
-
- 15 replies
- 2.3k views
-
-
சென்னை: இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான, `போலாரிஸ்' செயற்கைக் கோளை தாங்கிச் சென்று விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்தது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட், சென்னை அருகில் உள்ள ஷ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9:15 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இங்கிருந்து ராக்கெட் ஏவப்படுவது இது 25வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டில் இஸ்ரேல் நாட்டுக்குச் சொந்தமான 300 கிலோ எடையுள்ள, `டெக்சார்' எனப்படும் போலாரிஸ் செயற்கைக் கோள் எடுத்துச் செல்லப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட ஆயிரத்து 185வது வினாடியில் இந்த செயற்கைக் கோள் அதன் சுற்றுப் பாதையில் …
-
- 0 replies
- 2.3k views
-
-
ஆபிரிக்கப் பெண்களின் எழுச்சி -அன்பரசு- இருபதாம் நூற்றாண்டை அடையாளப்படுத்தும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் பெண்கள் எழுச்சி முன்னணி இடம் வகிக்கிறது. பெண்கள் அரசியலில் தமக்குரிய இடத்தைப் பெறுவதற்காகப் போரிட வேண்டியிருந்தது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாட்டுப் பெண்கள் வாக்குரிமைக்காகக் கடும் போராட்டம் நடத்தி இறுதியில் வெற்றி பெற்றனர். அவர்கள் நடத்திய வாக்குரிமைப் போராட்டம் உலகப் பெண்களுக்கு இந்த அனு கூலத்தைப் பெற்றுக்கொடுத்தது. வாக்குரிமைக்காகப் போராடிய இங்கிலாந்துப் பெண்களைச் சப்பிறஜெற்கள் (ளுரககசயபநவவந) என்று அழைத்தார்கள். இவர்களின் போராட்டம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் நடைபெற்…
-
- 1 reply
- 1.3k views
-
-
மலேசியத் தமிழர் பிரச்சினை பற்றி... [21 - January - 2008] [Font Size - A - A - A] மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அரசாங்கம் பேரினவாத நோக்கில் நடந்து கொள்வதாக அந்த நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் அனுமதியில்லாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்று அதைப் பொலிஸார் தாக்கிக் கலைத்துள்ளனர். மலேசிய அரசாங்கம் பற்றி நம்மிற் பலருக்குத் தெரியாது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் ஜனநாயகமின்மை பற்றியோ இனப்பாகுபாடு பற்றியோ நமக்குச் சொல்லுமளவுக்கு நமது ஊடகங்கட்கும் அக்கறையில்லை. சமூகப் பிரமுகர் யாருக்கும் அக்கறை இல்லை. இப்போது மத அடிப்படையிலான உரிமை மீறல்கள் தொடர்பாகத் தகவல்கள் வந்துள்ளதால் இனிமேற் கொண்டு மலேசியாவின் பேரினவாத ஆட்சி பற்றிப் பேச…
-
- 0 replies
- 916 views
-
-
ஒரு மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண் முதலிட தகுதியிருந்தால் இங்கிலாந்தில் குடியேற அனுமதி 1/21/2008 8:40:40 PM வீரகேசரி இணையம் - குறைந்தது ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுணை முதலீடு செய்யும் தகைமை வாய்ந்த செல்வந்த வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் இங்கிலாந்தில் வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளது. இதன்போது வதிவிட உரிமை கோருபவர்களின் ஆங்கில புலமை தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டப் பிரேரணையானது அரசாங்கத்தின் குடியேற்றவாசிகளுக்கான புதிய புள்ளியிடல் திட்டத்தின் ஒரு அங்கமாக முன்வைக்கப்பட்டது. தொழில் முயற்சியாளர்களும் புத்துருவாக்குனர்களும் அதிக திறமை வாய்ந்த குடியேற்றவாசிகள், தொழிற்சந்தையில் நிலவும் பற்றா…
-
- 0 replies
- 816 views
-
-
திருவனந்தபுரம்: "மதத்தை காரணம் காட்டி, கடம்புழா தேவி கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது," என பிரபல பாடகர் ஜேசுதாஸ் கூறினார். திருவனந்தபுரத்தில் உள்ள இசைக் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் பேசியதாவது:கேரளா, மலப்புரம் மாவட்டம் கடம்புழாவில் உள்ள தேவி கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். இதை நிறைவேற்றுவதற்காக சமீபத்தில் கடம்புழா கோவிலுக்கு சென்றிருந்தேன். ஆனால், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன் என்பதற்காக என்னை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாக அதிகாரிகள் மறுத்து விட்டனர். அங்குள்ள எலி, பூனை போன்றவை கூட கடவுளுக்கு அருகில் செல்கின்றன. ஆனால், நான் கோவிலுக்குள் செல…
-
- 26 replies
- 4.2k views
-
-
வாழ்க்கைத்தரம் வீட்டுரிமை, கல்வி, சுகாதாரம் ஆகிய விடயங்களில் உலகில் முக்கியம் பெறும் நாடுகள் எவை என்பது குறித்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. வடஅமெரிக்கா, வட ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் உள்ள 131 நாடுகளிடையே நடைபெற்ற கணிப்பீட்டில் உலகநாடுகளின் தர வரிசையின் முதல் பத்து நாடுகளும் பின்வருமாறு அமைந்துள்ளன. 01. அமெரிக்கா 02. சுவிஸ் 03. டென்மார்க் 04. சுவீடன் 05. ஜேர்மனி 06. பின்லாந்து 07. சிங்கப்பூர் 08. ஜப்பான் 09. பிரிட்டன் 10. கொலன்ட் 131 வது இடம் சாட். http://www.nerudal.com/content/view/3971/35/
-
- 0 replies
- 819 views
-
-
அது ஒரு சிறைச்சாலை. அங்குள்ள கைதிகளையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இதில் விநோதம் என்னவென்றால் இது சிவபெருமானின் சிறைச்சாலையாகும். இங்கு நூற்றுக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் எல்லை மாவட்டமான நீமாக்கில் இந்த சிறைச்சாலை உள்ளது. இப்படி ஒன்றை கேள்விப்பட்டதும், உடனடியாக அங்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கு ஏராளமான கைதிகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தனர். பல தடுப்புகளுக்கு இடையே ஏராளமான கைதிகள் இருந்தனர். அதில் இருந்த ஒரு கைதி எங்களிடம் பேசினார். தான் நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதில் இருந்து விடுபட இங்கு வந்துள்ளதாகக் கூறினார். நோய் தீர்ந்த உடன் சிவபெருமானின் முன் அனுமதியுடன் தான் இங்கிருந்து சென்று விடுவேன் என்று…
-
- 5 replies
- 1.9k views
-
-
15 மாதங்களுக்கு முன்னம் தமிழகத்தில் வைத்து குமுதம் தீராநதிக்கு அளித்த பேட்டியை இங்கு உங்கள் ஆலோசனைகளுக்காக வெளியிடுகிறேன். புது டெல்ஹியில்ல்வெள்ளிவரும் "த ஸ்ரென்ற்மென்"ஆங்கில பேட்டி ஒன்றையும் இணைக்க விரும்பினேன். அது இங்கு மரபோ தெரியவில்லைஇ. அண்மையில் மேலும் ஒரு நீண்ட பேட்டிக்கான கோரிக்கையும் அவசியமும் எழுந்திருக்கிறதால் தமிழர் மத்தியில் நிலவும் கருத்துக்களை அறிய விருப்பம். விவாதங்களை வளர்ப்பதில் அல்ல உங்கள் கருத்தை அறிவதில்தான் ஆர்வம். இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்பட வேண்டும்" By: தளவாய் சுந்தரம் Courtesy: குமுதம் தீராநதி யாழ்ப்பாணத்தில் பிறந்த வ.ஐ.ச. ஷெயபாலன், தற்கால ஈழத்துக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர். இலக்கியம் மட்டுமின்றி, ச…
-
- 1 reply
- 837 views
-
-
அரட்டை அரங்கில் T.ராஜேந்தர் ஈழத் தமிழர் பற்றி http://eelamtube.com/aab5298d5da10fe66f21....ந்தர் http://eelamtube.com
-
- 3 replies
- 1.9k views
-
-
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள அங்காரா பிளாக்கில் வசித்து வருபவர் சுக்லால் மகோதா. இவரது மனைவிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை முகத்தைப் பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியில் ஆடிப்போய் விட்டனர். அந்த பெண் குழந்தை 3 கண்கள் மற்றும் 2 மூக்குகளு டன் பிறந்திருந்தது. முகத்தின் மத்தியில் 2 மூக்கு இருக்கிறது. அந்த 2 மூக்குகளுக்கு மேல் மத்தியில் 3-வது கண் உள்ளது. 3 கண்களுடன் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தை சிவனின் மறு அவதாரம் என்று திடீரென ஒரு வதந்தி கிளம்பியது. இந்த தகவல் ராஞ்சி முழுக்க பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 3 கண் குழந்தையை பார்க்க மருத்துவ மனைக்கு தினமும் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். ராஞ்சி நகரின்…
-
- 7 replies
- 2.7k views
-
-
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் சீனாவின் பிஜிங் நகரில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு வந்தது. 136 பயணிகளுடன் வந்த அந்த விமானம் ஹீத்ரூ விமான நிலையத்தில் தரை இறங்கும்போது அதன் என் ஜினில் திடீர் கோளாறு ஏற் பட்டது. சக்கரங்கள் இயங்கவில்லை. கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் உள்ள புல்தரையில் பயங்கரமாக மோதி இறங்கியது. இதனால் விமானத்தின் அடிப்பகுதி மற்றும் இறக்கைகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் விமானத்தில் இருந்தவர்களில் 13 பேர் காயம் அடைந்தனர். அந்த விமான தளத்தில் இருந்து இன்னொரு விமானம் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அவரது மனைவி ஆகியோருடன் சீனா புறப்பட தயாராக நின்றது. விபத்தில் சிக்கிய விமானம் தாறுமாறா…
-
- 4 replies
- 1.5k views
-
-
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் `முருக விலாஸ் காம்ப்ளக்ஸ்' என்ற பெயரில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் கந்தசாமி என்பவரின் மனைவி லோகநாயகி (வயது 53) விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு நேற்று வந்த திருச்செங்கோடு அருகே உள்ள மோடமங்கலத்தை சேர்ந்த ரவிசந்திரன் என்ப வரின் மகன் ரஞ்சித் (வயது 16) என்ற பிளஸ்-1 மாண வன் துப்பாக்கியால் சுட்டு விட்டான். இதில் லோக நாயகியின் இடது தோள் பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. …
-
- 0 replies
- 598 views
-