Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நொவா கக்கோவா அணை ரஸ்ய படையினரால் தகர்ப்பு - பெரும் வெள்ள அபாயம்-உக்ரைன் Published By: RAJEEBAN 06 JUN, 2023 | 11:46 AM ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான கேர்சனில் நிப்பர் ஆற்றின் மீதுஉள்ள நொவா கக்கோவா அணைக்கட்டை ரஸ்ய படையினர் தகர்த்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ள உக்ரைன் பாரிய வெள்ள ஆபத்துள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அணையின் சுவர்கள் நீரில் வீழ்ந்து கிடப்பதையும் பெருமள நீர் வெளியேறிக்கொண்டிருப்பதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரஸ்ய ஆக்கிரமிப்பு படையினர் நீர்மின் அணைக்க…

  2. பிரித்தானிய முன்னாள் பிரதமர் ஜோன்சன், எம்.பி பதவியிலிருந்து இராஜினாமா Published By: Sethu 10 Jun, 2023 | 11:18 AM பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 58 வயதான போரிஸ் ஜோன்சன், 2019 ஜூலை முதல் 2022 செப்டெம்பர் வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்தார். கொவிட் தடுப்பு விதிகளை மீறி விருந்து நடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அவர் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். கொவிட் தடுப்பு விதிகளை மீறும் வகையிலான விருந்துகள் தொடர்பில் பாராமன்றத்…

  3. பட மூலாதாரம்,PREM PARIYAR படக்குறிப்பு, கலிஃபோர்னியா மாகாண சட்ட மேலவையில் சாதி பாகுபாட்டிற்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து பேசும் செனட் உறுப்பினர் ஆயிஷா வஹாப் 9 ஜூன் 2023, 16:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாதி பாகுபாட்டை சட்டவிரோதமாகக் கருத வகை செய்யும் மசோதா, கலிஃபோர்னியா மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த வாரம் விவாதத்திற்கு வர உள்ளது. கலிஃபோர்னியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல் இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடம் இதுகுறித்து உரையாடினார். கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் சுக்ஜி…

  4. Published By: RAJEEBAN 08 JUN, 2023 | 10:46 AM இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலையை பொதுவில் புகழும்விதத்தில் கனடாவில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடும் கண்டனம்வெளியிட்டுள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திராகாந்தியின் படுகொலையை புகழும் விதத்தில் பொதுவெளியில் நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ள அலிசப்ரி; கருத்துசுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையை போற்றுதல் என்ற போர்வையில் எந்த நாடும் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகளிற்கு புகலிடம் வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். பயங்கர…

  5. 08 JUN, 2023 | 03:00 PM பிரான்சில் இனந்தெரியாத நபர் ஒருவர் சற்று முன்னர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். பிரென்ஞ் அல்ப்ஸில் உள்ள அனெசை என்றபகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த மூன்றுவயதிற்கு உட்பட்ட சிறுவர்களை இலக்குவைத்து இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கை காரணமாக குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கத்திக்குத்திற்கு இலக்கானவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். https://www.virakesari.lk/article/157266

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர் உணவு நஞ்சாக மாறுவதால் பாதிக்கப்படுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர்,பெடகாடி ராஜேஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், 'உண்ட பின் நஞ்சாக மாறும்' (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. அடிக்கடி 'உண்ட பின் நஞ்சாகும்' உணவுப் பொருட்கள் எவை என்பது…

  7. பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம் வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உயர்நிலைப் பாடசாலையில் இடமபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்பட்டதாகவும் அதில் 18 வயதுடைய பட்டதாரி மாணவன் ஒருவனும் 36 வயதுடைய அவரது தந்தையும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிக்வின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் இருப்பதாக…

  8. 05 JUN, 2023 | 01:00 PM அவுஸ்திரேலியாவின் மிகவும்மோசமான பெண் தொடர் கொலையாளி என அழைக்கப்படும் பெண்ணிற்கு நீதிமன்றம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. கத்திலீன்பொல்பீளிக் என்ற அந்த பெண்மணி தனது நான்கு பிள்ளைகளையும் கொலை செய்யவில்லை என்பதற்கான புதியஆதாரங்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கத்திலீன் பொல்பீளிக் தனது நான்கு பிள்ளைகளையும் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு முன்னர் நீதிபதியொருவர் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்திருந்தார். எனினும் சமீபத்தைய விசாரணைகளின் போது அவரது பிள்ளைகள் இயல்பாகவே மரணத்தை தழுவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 55 வய…

  9. Published By: SETHU 06 JUN, 2023 | 10:07 AM உக்ரேனின் கிழக்குப் பிராந்திய களமுனையில் உக்ரேனிய படையினர் முன்னேறியுள்ளர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. பக்முக் நகரைச் சூழ்ந்த பகுதிகளில் உக்ரேனிய படையினர் முன்னேறியுள்ளனர் என உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஹனான மலியர் கூறியுள்ளார். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனின் எதிர்த்தாக்குதல் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எனினும், கிழக்கு டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் புதிய தாக்குதலை தான் முறியடித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, உக்ரேனிய படையினரின் முன்னேற்றத்துக்காக அ…

  10. Published By: SETHU 05 JUN, 2023 | 06:45 PM உக்ரேனுக்கு எதிரான யுத்தத்தில் ரஷ்யா சார்பாக போரில் ஈடுபட்டுள்ள வாக்னர் தனியார் கூலிப்படையினர், ரஷ்ய இராணுவ சிப்பாய் ஒருவரை சிறைப்பிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய பிராந்தியத்தில் தனது குழுவினரை தாக்குவதற்கு முயற்சித்ததாக மேற்படி சிப்பாய் மீது வாக்னர் குழு குற்றம் சுமத்தி வருகிறது. உக்ரேனில் தமது போராளிகளின் அதிக மரணங்களுக்கு ரஷ்ய இராணுவத் தளபதிகள் காரணம் என வாக்னர் குழுவின் ஸ்தாபகர் யெவ்ஜெனி பிரிகோஜின் பல மாதங்களாக குற்றம் சுமத்தி வருகிறார். உக்ரேனியப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக பின்வாங்கும் வாக்னர் குழுவினர் வெளியேறக்…

  11. சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. \ உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாத்து அதை பராமரிப்பதற்கான நமது பொறுப்பை நினைவூட்டுவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இயற்கையை மனிதன் பாதுகாப்பதை விடவும் அதை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நலம். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மனிதன் தேர்ந்தெடுக்காமல் போனால் எதிர்காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் அபாயகரமானதாக இருக்கும். சங்கால தமிழர்கள் இயற்கையை அடிப்படையாக கொண்ட வாழ்க்கையே மேற்கொண்டனர். ஆனால் தேவைகள் பெருகும்போது இயற்கையின் அழிவும் …

  12. பட மூலாதாரம்,JOHNNY STOCKSHOOTER/ALAMY கட்டுரை தகவல் எழுதியவர்,ட்ரேசி டியோ பதவி,பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடலின் மேற்பரப்பில் அற்புதமான பொறியியலின் துணை கொண்டு சுமார் 181 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலை நம்மைப் பிரமிக்கவைக்கிறது. மெக்சிகோ வளைகுடாவுக்கும், அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நான் காரில் பயணம் மேற்கொண்ட சென்றபோது, எனது தலைக்கு மேல் கடற்பறவைகள் கீச்சிட்ட சத்தம் மட்டுமே கேட்டது. ஆழமற்ற கடற்பகுதியான அங்கே, பவளம் மற்றும் சுண்ணாம்பு தீவுகளுக்கு இடையே, நீலவண்ண வானமே கடலில் மூழ்கியது போல் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை …

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் மதத் தலைவர் அயதுல்லா ருஹோல்லா மௌசவி கொமேனி 1989 ஜூன் 3 ஆம் தேதி காலமானார். கடந்த 80 ஆண்டுகளில் இயற்கையாக காலமான இரானின் முதல் தலைவர் இவர்தான். அவருக்கு முன் இருந்த இரானிய அரசுத் தலைவர்கள் நாடுகடத்தப்பட்ட அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது அல்லது ஆயுதமேந்திய கொலையாளிகளின் கைகளில் அவர்கள் இறந்தனர். கொமேனி இறந்தபோது, இரான் அரசு அவரை ஹஸ்ரத் முகமது மற்றும் இமாம்களுக்குப் பிறகு அற்புத சக்தி வாய்ந்த நபர் என்று அழைத்தது. …

  14. பட மூலாதாரம்,JONO LANCASTER/INSTAGRAM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “நான் பிறந்தபோது எனது தோற்றத்தை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பிறந்த 36 வது மணி நேரத்திலேயே அவர்கள் என்னை கைவிட்டனர்” என்கிறார் தற்போது 37 வயது இளைஞரான ஜோனோ லான்காஸ்டர். வடக்கு பிரிட்டனின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன், Treacher Collins syndrome (TCS) என்ற அரிய மரபணு குறைபாடுடன் பிறந்தவர் தான் லான்காஸ்டர். தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே சில குழந்தைகளுக்கு இந்த குறைபாடு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். புரத மூலக்கூறுகள் உருவாவதற்கு காரணமான மரபணுக்களின் பிறழ்சியின் விளைவாக இந்த கோளாறு ஏற்படுவதாகவும் அவர்கள் கூறு…

  15. அமெரிக்காவின் போர் கப்பலை நோக்கி நெருங்கி வந்த சீனாவின் நாசகாரி - தாய்வான் நீரிணையில் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது 04 JUN, 2023 | 12:51 PM அமெரிக்காவும் அதன் சகாக்களும் இந்தோ பசுபிக்கின் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என சீனா குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவினதும் சீனாவினதும் யுத்தகப்பல்கள் கிட்டத்தட்ட ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கு நெருங்கி வந்த சம்பவத்தின் பின்னர் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இடம்பெறும் சங்கிரிலா உரையாடல் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் சீனாவி;ன் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்கா சுயநலத்திற்காக …

    • 3 replies
    • 558 views
  16. பட மூலாதாரம்,தாரா ஷா கட்டுரை தகவல் எழுதியவர்,பிரஜக்தா போல் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "எனது குட்டிக் குழந்தை, பெற்றோர் இருந்தாலும், அனாதை மாதிரி வாழ வேண்டிய நிலையில் தவிக்கிறாள். இரண்டு ஆண்டுகளாக அவளை விட்டு நாங்க பிரிந்து வாழ்ந்து வருகிறோம். குழந்தைக்கு என்ன வேண்டும் என்பதில் பெற்றோர்களுக்கே அதிக அக்கறை இருக்கும் நிலையில், அவளுக்கு தாயின் அரவணைப்புடன் யார் சாப்பாடு ஊட்டிவிடுவார்கள்?" "மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, என்னிடம் இருந்து செவிலியர் அவளைப் பறித்துக்கொண்டார். அழுதுகொண்டே இருந்த அவளை செவிலியர் எடுத்துச் சென்றுவிட்டார்." "எனது மகளை மீட்க உதவும…

  17. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர நாடுகளை ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சி புதியதாக பலதரப்பு ஆயுத கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இடையே அமெரிக்கா-ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை அறிவிப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜேக் சல்லிவன், இந்த விவகாரத்தில் அதிக முயற்சிகள் செய்யப்பட வேண்டும் எனவு…

    • 1 reply
    • 351 views
  18. சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை சீனாவால் நிராகரிப்பு! இந்த வார இறுதியில் சிங்கப்பூரில் நடைபெறும் வருடாந்திர பாதுகாப்பு மன்றத்தில் தங்கள் பாதுகாப்புத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஷங்ரி-லா உரையாடல் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளருக்கும் சீன பாதுகாப்பு செயலாளருக்கும் இடையிலான சந்திப்பிற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அழைப்பை நிராகரித்துள்ள சீனா, அதற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு தற்போதைய சீன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை…

  19. Published By: RAJEEBAN 01 JUN, 2023 | 04:27 PM சீனாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மிகமோசமான சூழ்நிலைகளிற்கும் அலைகள் மிகுந்த கடலை கடப்பதற்கும் தயாராகவேண்டும் என சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆணைக்குழுவுடனான சந்திப்பின்போது சீன ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்கொள்ளும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் குழப்பமும் கடும் சவாலும் தற்போது அதிகரித்துள்ளது என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாங்கள் மிகமோசமானசூழ்நிலைகள் குறித்த சிந்தனையை பின்பற்றவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் பெரும்காற்று கொந்தளிப்பான அலைகள் அலைகள் நிரம்பிய கடல்கள் போன்ற பாரிய சவால்களைஎதிர்கொள…

  20. உண்மை காதலுக்கு அர்த்தம் காட்டிய திருமணம் ஜோர்டான் நாட்டு இளவரசர், சவுதியின் கட்டிடக் கலை நிபுணர் ஒருவரை திருமணம் செய்துகொண்டது வளைகுடா நாடுகளில் பேசும் பொருளாகி உள்ளது. ஜோர்டானின் இளவரசர் ஹூசைன் (28) - சவுதியின் கட்டிடக்கலை கலை நிபுணர் ராஜ்வா அல் சைஃப் (29) திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. தலைநகர் அம்மானில் நடைபெற்ற இந்த திருமணத்தில் உலகப் பிரபலங்கள், அரசக் குடும்பங்கள் என பலரும் கலந்து கொண்டனர். இளவரசரின் திருமணத்தை முன்னிட்டு இன்று ஜோர்டானில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, அரசு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் செய்யப்பட்டது. இந்த திருமணம் ஜோர்டான் - சவுதி இடையே அரசியல் ரீதியிலான உறவை மேலும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடதக்கது. திரும…

    • 4 replies
    • 484 views
  21. கனடாவில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும் சுகாதார எச்சரிக்கை வாசகங்களை அச்சிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பொது மக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கனடா அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது. சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அதுவே தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகையிலையின் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், புகையிலை புற்றுநோய் உருவாவதற்கு ஒரு காரணம், ஒவ்வொரு புகைச்சலிலும் விஷம் உள்ளது போன்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. …

  22. இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல் இளவரசர் ஹரியைப் பிரிய அவரது மனைவியான மேகன் திட்டமிடுவருவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ள விடயம் தொடர்பிலான செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. குழந்தைகளையும் பிரிக்கத் திட்டம் ராஜ குடும்ப எழுத்தாளரான ஏஞ்சலா லெவின் என்பவர், இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன், மெல்ல தன்னை ஹரியிடமிருந்து பிரிப்பதாகவும், தன் பிள்ளைகளையும் தானே பொறுப்பெடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே, ஹரி மேகன் உறவில் பிரச்சினை உருவாகியுள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவிவருகின்றன. உறுதி செய்வதுபோல் நிகழ்ந்த சம்பவம் இதற்கிடையில், வதந்திகளாக பர…

  23. Published By: RAJEEBAN 02 JUN, 2023 | 06:25 AM அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஜோபைடன் நிலத்தில் வீழ்ந்த சம்பவம் ஊடகங்களில் கவனத்தை பெற்றுள்ளது. அமெரிக்க விமானப்படை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தவேளை ஜோ பைடன் கால்தடுக்கி நிலத்தில் வீழ்ந்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதிகளில் வயது கூடியவரான( 80) பைடனை அங்கிருந்தவர்கள் தூக்கிவிட்டனர் அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 921பேருடனும் கைகுலுக்குவதற்காக ஒரு மணித்தியலாத்திற்கு ஜனாதிபதி நின்றபடி காணப்பட்டார். ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என வெள்ளை மாளிகையின் தொட…

  24. Published By: DIGITAL DESK 5 02 JUN, 2023 | 06:53 PM (நா.தனுஜா) கனடாவில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி மூலமான மோசடிச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், தொலைபேசி வாயிலாக தாம் எந்தவொரு கட்டணத்தையும் கோருவதில்லை என்றும், எனவே இத்தகைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளைச்சேர்ந்த மாணவர்கள் பலர் கனடாவில் கல்விபயின்று வருவதுடன், குறிப்பாக பெருமளவான இலங்கையர்கள் கனடாவில் உயர்கல்வி பயில்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்டவாறான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கும் கனேடிய …

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்டுள்ள கடன் உச்சவரம்பு நெருக்கடி சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் புயலை உருவாக்கி இருக்கிறது. அமெரிக்காவுக்கு இந்த நெருக்கடி ஏன் வந்தது? இதற்கு தீர்வு காண அதிபர் ஜோ பைடன் என்ன செய்கிறார்? அமெரிக்காவால் இந்த நெருக்கடியை எளிதில் கடந்துவிட முடியுமா? இதனால் உலகளாவிய நிதிச் சந்தையில் மாற்றங்கள் வருமா? அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்தியாவுக்கு ஆபத்தா? அல்லது ஆதாயமா? இலங்கை திவாலாகி மக்கள் கிளர்ச்சி வெடித்ததையும், பாகிஸ்தான் கடன் நெருக்கடியில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.