Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 6 சீர்காழி மீனவர்கள் மாயம் மே 11, 2007 சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த 6 மீனவர்கள் 4 நாட்களாகியும் கரை திரும்பாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி அருகே திருமுல்லைவாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்(30), ஜெய்கணேஷ் (25), இளவேந்தன் (18), முத்து (32), ராஜேந்திரன் (55) ஆகிய 6 மீன்வர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதுவரை இவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து திருமுல்லைவாயில் கிராம தலைவர் பரந்தாமன், போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது(thatstamil)

    • 5 replies
    • 1.4k views
  2. 4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது மே 09, 2007 சென்னை: 4 பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார். சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு. இவர் கொடுங்கையூர் சீதாராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரேமிபியூலா என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பியூலா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பியூலா சமீபத்தில் ஜெய் மார்ட்டின் லூதர் மீது காவல் ந…

    • 46 replies
    • 5.8k views
  3. இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் ராஜினாமா இன்று அறிவிக்கிறார் லண்டன், மே. 10- இங்கிலாந்தில் பிரதமர் டோனிபிளேர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. ஈராக் போர், பொரு ளாதார கொள்கை ஆகிய வற்றில் அவருக்கு எதிராக கட்சியிலேயே அதிருப்தி ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்த லிலும் தொழிலாளர் கட்சி படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து விரைவில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று டோனி பிளேர் அறிவித்து இருந்தார். அவர் பிரதமர் பதவியில் 10 ஆண்டுகளை கடந்த 1-ந்தேதியுடன் முடித்து விட்டார். இந்த நிலையில் மந்திரி சபையின் கூட்டத்தை டோனி பிளேர் இன்று கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் ராஜினாமா முடிவை அறிவிக்கிறார். புதிய பிரதமர் யார் என்பதும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படு…

    • 22 replies
    • 2.9k views
  4. காதலன் மூக்கை துண்டித்த காதலி காதல் போயிற் சாதல்' என்பார்கள். ஆனால் சிலருக்கு உயிர் போகாது. மூக்கு போய்விடும்.பாகிஸ்தானின்பஞ்ச

  5. இலங்கைத் தமிழர்களுக்கு "கூட்டு அதிகாரம்' இல்லையெனில் தனி ஈழம் தவிர்க்க முடியாதது: சுப்பிரமணியன் சுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு சமஷ்டி அமைப்பு (கூட்டு அதிகாரம்) கிடைக்கவில்லை என்றால் தனி ஈழம் தவிர்க்க முடியாததாகி விடும் என, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: இலங்கை ஆளும்கட்சியினால் தமிழர் வாழ் பகுதிக்கு அதிகார பகிர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் முற்றிலும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள திட்டம் ஆளும் கட்சியின் பிற்போக்கு மனப்பான்மையையே பிரதிபலிக்கிறது. ஏற்கெனவே சிங்கள பெரும்பான்மை கட்சிகளால் 1981-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் எ…

  6. இணையதளம் மூலம் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து சர்வதேச சமூகம் கவலை இணையதளம் மூலமாக சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருட்கள் விற்கப்படுவது அதிகரிப்பது தொடர்பாக, தற்போது ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்று வரும் சர்வதேச போதைப் பொருள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டுவருகிறது. இணைய பக்கங்கள் மற்றும் மின் அஞ்சல் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமாக, போதைப் பொருட்களை விற்பவர்கள், தங்கள் பொருட்களை வாங்கக் கூடிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைந்தது 100 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவின், போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது இணைய தளம் மூலமாக புத்தகங்கள், குறுந்தகடுகள் போன்றவற்றை கட…

  7. சீனாவில் துப்பியவர்களுக்கு அபராதம் தலைநகர் பீஜிங்கில் பொது இடத்தில் எச்சில் துப்பியவர்கள் 50பேருக்கு முதன்முறையாக அபராதம் விதிக்கப்பட்டது. 2008 ஒலிம்பிக்சுக்கு முன்பாக நகரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுஇடங்களில் குப்பை போடுபவர்கள், எச்சில் துப்புபவர்கள், வரிசைகளில் முந்துபவர்களை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொல்ளப்பட்டுவருகின்றன.

    • 10 replies
    • 1.8k views
  8. மதுரை: போலியான பல்கலைக்கழகத்தை நடத்தி அதன் மூலம் டாக்டர் பட்டங்களை விற்பனை செய்து வந்த முன்னாள் பேராசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் கொத்தனாருக்கும் எம்.டி. பட்டத்தை விற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் வில்சன் என்ற போலி டாக்டர் பிடிபட்டார். இவர் கொடுத்த மருந்துகள் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஸ்ரீராம் என்கிற நுகர்வோர் அமைப்பின் தலைவரிடம் தெரிவித்துள்ளனர். அவர் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் வில்சன் ஒரு போலி டாக்டர் எனத் தெரிய வந்தது. அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணி என்பவர்தான் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து மதுரை வந்த ஸ்ரீராம் ம…

  9. அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை உலகில் அதிக செல்வாக்கு பெயர் பெற்ற பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரபலங்களில் முதல் 100 பேரை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டுள்ளது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை வாரியாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 4-வது ஆண்டாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொது சேவை பிரிவில் செல்வாக்குமிக்கவர்களாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இடம் பிடித்துள்ளார். தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்களில் இந்திய வம்சாவழியை சேர்ந்த தொழில் அதிபர் லட்சுமிமிட்டல் இடம் பிடித்திருக்கிறார். உலக அமைதி மற்றும் நன்மைக்காக பாடுபடும் மதத்தலைவர்கள் வரிசையில் போப் ஆண்டவர் பெனடிக் இடம் பெறுகிறார்…

    • 2 replies
    • 989 views
  10. இது வர இருக்கின்ற தேர்தலை மனதில் வைத்த தீட்டப்பட்ட பட்ஜெட்டாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்...அதாவது இனி ஒவ்வோரு அவ்வரேஜ் குடு;ம்பமும் மேலதிகமாக 1 வாரத்தில் 14 டாலர்களை சேமிக்க கூடியதாக வரிவிலக்கு விலத்தப்பட்டு இருக்கின்றது... சுகாதாரத்துக்கு 51.8 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது 486 மில்லியன் டாலர் செலவில் புதிய மருத்துவ ஆராச்சி நிறுவனம் நிருவப்பட இருக்கின்றது..150 மில்லியன் டாலர்கள் உடற்பயிற்சி மற்றும் உடலை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான நிகழ்சி திட்டங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு பாடசாலைக்கு பின்னரான உடற் பயிற்சிக்கு ஒதுக்கபட்டு இருக்கின்றது.. பாதுகாப்புக்காக 22 பில்லியன் டாலர்களும் அதாவது கடந்த வரவுசெலவு அறிக்கையில் சொ…

    • 0 replies
    • 677 views
  11. மிகப் பெரிய விமானமான ஏ 380 -------------------------------------------------------------------------------- ஏர்பஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய விமானமான ஏ380 ரக விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமானத்தில் இன்று தரையிறங்கியது. பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனம் ஏ 380 என்ற மிகப் பெரிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது. இரண்டு அடுக்கில் இருக்கைகள் அமைந்துள்ள இந்த விமானத்தில் 850 பேர் பயணம் செய்யலாம். இந்த விமானம் இன்னும் பயணிகள் உபயோகத்துக்கு வரவில்லை. சோதனை ஓட்டமாக ஏ380 விமானம் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு தற்போது சென்று வந்து கொண்டிருக்கிறது. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏ380 விமானம் இந்தியா…

    • 11 replies
    • 2.4k views
  12. திருக்கோவிலூர்: திருவிழாவில் ஜாதி கலவரம் போலீஸ் தடியடி- கண்ணீர் புகை குண்டு வீச்சு மே 08, 2007 திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே நடந்த தேர்த் திருவிழாவில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை விரட்டியடித்தனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த குலதீபமங்கல் கிராமத்தில் திரிவுபதியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. தேர் புறப்பட்டபோது தேருக்கு மாலை அணிவிப்பதற்காக தலித் தரப்பைச் சேர்ந்தவர்கள் மேள தாளங்களுடன் வந்தனர். அங்கு இன்னொரு ஜாதியினர் அவர்களை தடுத்து நிறுத்தி கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தலித் தரப்பை சேர்ந்தவர்…

    • 1 reply
    • 1k views
  13. பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவு மக்கள் வாக்களிப்பு அமெரிக்க சார்பு வேட்பாளர் வெற்றி பெறும் சாத்தியம் [23 - April - 2007] பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தின் பின்னர் இடம் பெற்றுள்ளது. பத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் கொன்சர்வேட்டிவான நிக்கொலஸ் சர்கோசிக்கும் சோசலிஷ கட்சியைச் சேர்ந்த செகொலெனே ரோயலுக்கும் இடையில் கடும் போட்டி காணப்படுகின்றது. கடுமையான சீர்திருத்தவாதி, அமெரிக்க சார்பாளர் எனக் கருதப்படும் சர்கோசி பல பிரான்ஸ் மக்களுக்கு அச்சமூட்டுபவராக காணப்படுகின்றார். சோசலிஷ வாதியான செகொலெனே ரோயல் இதற்கு நேர்மாறானவராகவும், பெண்ணிலை வாதியாகவும், தாய்மை உணர்வை ஏற்படுத்துபவரா…

    • 9 replies
    • 2.2k views
  14. அதிரவைக்கும் உளவுத்துறை ‘‘இந்திய அரசுக்கு புலிகளின் பிளாக்மெயில்...!’’ விடுதலைப்புலிகளை 'போராளிகள்' என்றும் 'பயங்கரவாதிகள்' என்றும் இருவேறு கண் கொண்டு பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் இருக்கும் சக தமிழர்களின் விடுதலைக்காகப் பாடுபடுகிற அமைப்பாகவே இந்த இயக்கத்தை முழுக்க முழுக்க தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. பத்மநாபாவும் அவரது இயக்கத்தவர்களும் சென்னையில் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்துக்குப் பிறகுதான், புலிகளை லேசான பயக்கண் கொண்டு தமிழகம் பார்க்க ஆரம்பித்தது. அடுத்து, ராஜீவ் படுகொலையின்போது ஒட்டுமொத்த இந்தியாவுமே துடித்துப்போனது. புலிகள் மீது அச்சத்தோடு வெறுப்பும் அதிகமானது. ராஜீவ் படுகொலையின் துயர நினைவுகள் மெதுவாகப் ப…

  15. உயிர்தப்பி வந்த மீனவர்கள் 'கடல்புலி'களான கதை: அம்பலப்படுத்துகிறார் தமிழக ச.ம.உ. ரவிக்குமார் [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 20:47 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரத்தில் உள்ள முரண்பாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் அம்பலப்படுத்தியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஈழப்பிரச்னை தமிழக அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. புலிகளின் விமானப்படை சாகசங்கள் தமிழக மக்களிடம் ஏற்படுத்தியிருந்த உற்சாகம், தமிழக மீனவர்கள் ஐந்து பேரைப் புலிகள்தான் கொன்றார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் தடுமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போது புலிகள் தரப்பு …

  16. குடிகார கணவரை அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் கொன்ற மனைவி! குடித்து விட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை, தனது அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த பெண்ணையும், அவரது அக்காவையும் போலீஸார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவாராம். இதனால் மனைவி ஆதிலட்சுமி அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சீனிவாசன், கிண்டியில் வசித்து வந்தார். அதன் பின்னர் மயிலாப்பூருக்கு மாறினார். அங்கு போன பின்னர் தனது …

    • 24 replies
    • 7.4k views
  17. கென்ய விமானம் நொறுங்கி 114 பேர் பலி; இந்தியர்கள் 15 பேரும் பரிதாப சாவு மே 06, 2007 நைரோபி: கென்யாவிலிருந்து சென்ற பயணிகள் விமானம் காமரூன் நாட்டில் விழுந்து நொறுங்கியதில் இந்தியர்கள் உள்பட அதில் பயணம் செய்த 114 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கென்ய நாட்டின் கென்யா ஏர்வேஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு ஐவரிகோஸ்ட் நாட்டின் அபிஜான் நகரிலிருந்து கென்ய தலைநகர் நைரோபிக்குக் கிளம்பியது. விமானத்தில் 105 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 114 பேர் இருந்தனர். வழியில் காமரூன் நாட்டில் உள்ள தெளவ்லா நகரில் தரையிறங்கியது. பின்னர் மீண்டும் நைரோபிக்குக் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் விபத்தில் சிக்கியது. நீட்டி என்ற இடத்தில் பறந்தபோது விமானம் வ…

    • 4 replies
    • 1.2k views
  18. முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம் செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை மே 05, 2007 கொல்கத்தா: விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ. 9 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. கொல்ககத்தாவில் கடந்த 1995ம் ஆண்டு உஷா பன்னோக்கு கூட்டுறவு சங்கம் என்ற கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநில கூட்டுறவு வங்கியின் ஆரவுடன் இந்த வங்கியை, தர்பார் மகிளா சம்மனய் சமிதி என்ற அமைப்பு தொடங்கியது. இந்த வங்கியை முழுக்க முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 8500 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ. 9 கோட…

  19. இலங்கை 'பதற்றம்': இரவில் தனுஷ்கோடிக்குள் நுழைய தடை மே 04, 2007 ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு தனுஷ்கோடிக்கு இரவில் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை தீவிரப்படுத்த ஆரம்பித்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொளப்பட்டுள்ளது. இலங்கைக்கு மிகவும் அருகில் உள்ள பகுதி ராமேஸ்வரம் என்பதால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மிக தீவிர கண்காணிப்பு மேற்ெகாள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ராமேஸ்வரத்தைச் சுற்றிலும் உள்ள 21 தீவுகளிலும் பலத்த கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்படை, கடலோரக் காவல் படை…

  20. மண்தோண்டும் போது வைர, நவரத்தின புதையல் பண்ருட்டியில் மண் தோண்டும் போது வைர புதையல் கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் செங்கல் சூளையில் வேலைப் பார்த்து வருகிறார். இவர் கட்டி வரும் வீட்டுக்காக மண் தோண்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது 4 அடி ஆழத்தில் பழங்கால செப்பு பெட்டி கிடைத்தது. அந்த பெட்டியை திறந்து பார்த்தும் அதில் வைர, வைடூரிய, நவரத்தின ஆபரணங்கள் இருந்ததை கண்ட கூலி தொழிலாளர்கள் ஆச்சரியமடைந்தனர். இது குறித்து தாசில்தார் அலுவலகத்திற்கு தகவல் தரப்பட்டது. இதன் மதிப்பை கணக்கிட முடியவில்லை. இந்த பழமையான ஆபரணங்கள் பல கோடி மதிப்புடையவை என அதிகாரிகள் கூறியுள்ளனர். - சூரியன்

    • 6 replies
    • 1.9k views
  21. தமிழகம் முழுவதும் கன மழை: 7 பேர் பலி - இன்று முதல் கத்திரி மே 04, 2007 சென்னை: தமிழகம் முழுவதும் ேநற்று பெய்த கன மழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். பல பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் இயல்பு நிலை ஸ்தம்பித்தது. தமிழகத்தின் தென் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்தக் கால கட்டத்தில் ெவயில் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால் மக்கள் கவலையுடன் உள்ளனர். இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இடி, மின்னல், சூறாவளிக் கா…

  22. பிரான்ஸின் இரு ஜனாதிபதி வேட்பாளர்கள் தொலைக்காட்சியில் கடும் விவாதம். பிரான்ஸின் இரு ஜனாதிபதி வேட்பாளர்களும் நேற்று முன்தினம் புதன்கிழமை காரசாரமான தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர். சமூகவுடைமை கட்சியின் வேட்பாளர் செகோலெனே ரோயலுக்கும் அவருடைய வலதுசாரி எதிராளியான நிகோலஸ் சார்கோஸிக்குமிடையே இடம்பெற்ற இவ்விவாதமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது இரு வேட்பாளர்களும் வேலைவாய்ப்பு, சுற்றுச் சூழல் மற்றும் சட்ட அமுலாக்கம் போன்ற விடயங்கள் குறித்து விவாதித்தனர். இந்த விவாத நிகழ்ச்சியானது பிரான்ஸின் இரு பெரிய தொலைக்காட்சி ஊட…

    • 2 replies
    • 859 views
  23. ஈராக் போருக்கு காலக்கெடு விதித்து நிதியளிக்கும் சட்டமூலம் ஜனாதிபதி புஷ்ஷினால் நிராகரிப்பு. ஈராக்கிலிருந்து அமெரிக்க படையினரை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவுடன் போருக்கான நிதியளிக்கும் காங்கிரஸின் சட்டமூலத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்துள்ளார். இச்சட்டமூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை புஷ்ஷிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஈராக்கிலிருந்து படையினரை திருப்பி அழைக்க காலக்கெடு விதிப்பதானது ஈராக்கில் தோல்வி காண்பதற்கான தினத்தை நிர்ணயிப்பதற்கு ஒப்பானது என புஷ் தெரிவித்துள்ளார். இது மத்திய கிழக்கின் எல்லைப் பகுதியெங்குமுள்ள போராளிகளை ஊக்குவிப்பதாக அமையும். அவர்கள் இந்த காலக்கெடுவை தமது நாளேடுகளில் குறித்து…

  24. . மே 03, 2007 சென்னை: முதல்வர் கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு மறைமுக ஆதரவு தருகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக அரசால் தயாரிக்கப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுள்ளது. அதில் தமிழக காவல்துறையினரால் இலங்கை தமிழர்களிடம் இருந்து பணம், எல்க்ட்ரிக் டெட்டனேட்டர்கள், வெடிபொருள் பூஸ்டர்கள், இரும்பு பால்ரஸ்கள், ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாகவும், இது தொடர்பாக இலங்கை தமிழர்கள் கைது செய்யப்படதாகவும் காவல் துறை மானியக் கோரிக்கையில் பல்வேறு இடங்களில் குறிப்பி…

  25. 45 லட்சம் ரூபாய் இருக்கிறதா? கனடா குடியுரிமை வாங்கலாம் புதுடெல்லி, மே 3: உங்களிடம் ரூ.45 லட்சம் இருக்கிறதா? உங்கள் குடும்பத்துக்கே கனடா குடியுரிமை பெற்றுவிடலாம். கொஞ்சம் அதிகம் பணம் வைத்திருந்தால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் குடியுரிமை பெறலாம். இதற்கு சட்டரீதியாக மிகச் சுலபமான வழி இருக்கிறது. வெளிநாடுகளில் குடியேற வேண்டும் என விரும்பும் பலரும் அறியாத விஷயம் அது. அந்த ரகசியம் இதோ. வெளிநாட்டில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யத் தயார் எனத் தெரிவித்தால் போதும். எவ்வளவு தொகை என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். ஆனால் இதன் மூலம் குடும்பத்துக்கே குடியுரிமை கிடைக்கும். முதலீட்டு தொகையை எப்படி திரட்டுவது என்ற கவலையும் தேவையில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.