உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
‘முதல்வன்’ பாணியில் முதல்வர்... ஒரே நாளில் 125 பேர் சஸ்பெண்ட்! ‘‘நீங்க இந்தியாவோட மூத்த அரசியல் வாதிங்கறது எல்லோருக்கும் தெரிஞ்ச சேதி... ஆனா, அடிப்படையில நீங்க ஒரு விவசாயிங்கறது பலபேருக்கு தெரியாத விஷயம். நீங்க பொறந்த மாவட்டம் உள்பட காவிரி டெல்டா விவசாயிங்களுக்கு உங்க காலத்துலயே ஒரு விடிவு வரணும்னு ஆசைப்படறோம். அது ஒருபக்கம் இருந் தாலும் உங்ககிட்ட நாங்க இன்னொரு கோரிக் கைய வைக்க பிரியப்படுறோம். பெரிசா ஒண்ணுமில்லீங்க... எங்க ஏரியா பக்கம் இருக்கற நெல் நேரடி கொள்முதல் நிலையங் கள்ல நடக்கற முறைகேடுகளை பெரிய மனசு வச்சு தீர்த்து வெச்சா அதுபோதும் எங்களுக்கு...’’ & இப்படி ஒரு வேண்டுகோள் முதல்வர் கருணாநிதியின் தனிப் பார்வைக்கு வர, புருவம் உயர்த்திய அவர் உ…
-
- 3 replies
- 1.1k views
-
-
திண்டுக்கல் ‘திடுக்’ சாதி வெறியில் பாதிரியார்? ‘‘தலித் கிறிஸ்தவர்கள் மீது சாதி வெறியைக் காட்டுகிறார், தேவாலய தலித் ஊழியரை சாதியைச் சொல்லி திட்டுகிறார்...”-----& பாதிரியார் பீட்டர் ராஜ் என்பவர் மீது இப்படியரு அதிர்ச்சிப் புகாரை அள்ளிவீசுகிறார்கள், திண்டுக்கல் நகர்ப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட சில தலித் கிறிஸ்தவர்கள். திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் 80 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத் துடன் வீற்றிருக்கிறது, தூய வளனார் பேராலயம். பீட்டர் ராஜ் இந்தப் பேராலயத்தின் பங்கு பாதிரியார். இவருக்கெதிராக கச்சைகட்டி நிற்கும் தலித் கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர், கடந்த 18ம் தேதி பேராலயத்தின் திருப்பலி பூசையை நிறுத்தவும், தேவாலய கதவுகளை மூடவும் எத்தனித்திருக்கிறார்கள். மற்ற …
-
- 0 replies
- 1.2k views
-
-
விண்வெளிக்கான முதலாவது ரொக்கட்டை ஈரான் நேற்று வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியுள்து. ஈரானில் தயாரிக்கப்பட்டதும் முற்றிலும், உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டதுமான ரொக்கட்டை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியுள்ளதாக விஞ்ஞான மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைச்சர் டாக்டர் பஹ்ரமி அரச தொலைக்காட்சியில் தெரிவித்தார். எனினும் இவ்ரொக்கட்டின் பெயர் உட்பட மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. இவ்ரொக்கட்டானது விண்வெளி ஆராய்ச்சிக்கான உபகரணங்களை தாங்கிச் சென்றுள்ளது. 1995ஆம் ஆண்டு ஈரான்ரஷ்யா கூட்டுத்தயாரிப்பான ஸின்னா1 என்ற ரொக்கட் மூலம் தனது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியதையடுத்து 3 ஆண்டுகளில் மேலும் பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.…
-
- 8 replies
- 1.7k views
-
-
சென்னை: கல்யாணத்திற்கு முன்பே நடத்தையில் சந்தேகப்பட்ட மணமகனை, தாலி கட்டிக் கொண்ட அடுத்த நிமிடமே தாலியை கழற்றி எறிந்து புறக்கணித்து விட்டுச் சென்றார் மணமகள். சென்னை வளசரவாக்கம் வெங்கட சுப்பிரணி நகரைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், ஆழ்வார் திருநகரைச் சேர்நத வள்ளிமயிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தையொட்டி கல்யாண மண்டபத்தில் அனைவரும் கூடியிருந்தனர். இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது மண்டபத்திற்கு வந்திருந்த ஒருவருடன் வள்ளிமயில் பேசியுள்ளார். இதைப் பார்த்த வெங்கடசுப்ரமணி, வள்ளியின் நடத்தை குறித்து சந்தேகமடைந்தார். இது வள்ளியின் காதுக்குச் சென்றது. தாலி கட்டுவதற்கு முன்பே இப்படி சந்தேகப்படுபவர் நாளை எப்படியெல்லாம் சநதேகப்படுவாரோ என்று நினைத்தா…
-
- 61 replies
- 6.2k views
-
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர் சுட்டுக்கொலை இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட அவர்கள் மீனவர்களை 3 மணி நேரம் கடலில் தத்தளிக்க விட்டனர். நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களின் 60 படகுகள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தமிழக மீனவர்களுக்கு கடலில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 4 மணி அளவில் நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்…
-
- 7 replies
- 1.4k views
-
-
புஷ்ஷின் உத்தரவு கிடைத்த 24 மணிநேரத்திற்குள் ஈரான் மீது தாக்குதல் [26 - February - 2007] * நியூயோர்க்கர் சஞ்சிகை தகவல் ஈரான் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் திட்டம் எதுவுமில்லையென புஷ் நிர்வாகம் தெரிவித்து வருகின்ற போதிலும் புஷ்ஷிடமிருந்து உத்தரவு கிடைத்த 24 மணிநேரத்திற்குள் விமானத் தாக்குதலை மேற்கொள்வதற்கான தந்திரோபாயத்தை வகுப்பதற்கான குழுவொன்றை பென்டகன் ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூயோர்க்கர் சஞ்சிகை இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் கூட்டுப்படைகளின் அலுவலகத்திற்குள் இதற்கென விசேட திட்டமிடல் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க புலனாய்வு அதிகாரியை மேற்கோள் காட்டி நியூயோர்க்கர் தெரிவித…
-
- 0 replies
- 817 views
-
-
இலங்கைக்கு ஆயுதமா?: ஜெ Monday, 26 February , 2007, 19:44 சென்னை "இலங்கைக்குக் கடத்துவதற்காக மதுரைக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் பயங்கரமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் வந்து சேருகின்றன என்றால், தமிழகத்தின் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து எப்படி இந்தப் பொருட்கள் மேற்படி விநியோக இடங்களை வந்து சேருகின்றன என்பதற்குக் கருணாநிதி என்ன விளக்கம் தர இருக்கிறார்? உளவுப் பிரிவு என்றும் 'க்ஞ் பிராஞ்ச் என்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு என்றும் பல பிரிவுகள் காவல் துறையில் இவை பற்றியெல்லாம் கண்டுபிடிப்பதற்காக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்று அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
-
- 0 replies
- 834 views
-
-
1600 பிரிட்டிஷ் படையினரை திருப்பி அழைக்கும் பிளயரின் அறிவிப்பை ஈராக் வரவேற்பு பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் ஈராக்கிலிருந்து அடுத்த சில மாதங்களுக்குள் 1600 பிரிட்டிஷ் படையினரை மீள அழைக்கப்போவதாக அறிவித்துள்ள அதேவேளை, இதனை ஈராக் வரவேற்றுள்ளது. ரொனி பிளயர் ஈராக்கில் உள்ள பிரிட்டிஷ் படையினரின் எண்ணிக்கை 7100 இலிருந்து 5000 ஆக குறைக்கப்படும் என அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அமெரிக்க படையினருக்கு உதவவும் எல்லைகளை பாதுகாக்கவும் ஏனைய படையினர் 2008 வரை அங்கிருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈராக்கின் பஸ்ரா பகுதியில் வன்முறைகளை கட்டுப்படுத்த ஐந்து மாதகாலமாக பிரிட்டிஷ் படையினர் மேற்கொண்ட முயற்சிகளின் பின்னரே இதனை தெரிவித்துள்ளார். முன்னணி பா…
-
- 0 replies
- 600 views
-
-
பாக்தாத் நகரில் புதிய பாதுகாப்புத் திட்டம் அமுலாகி சில நாட்களில் பாரிய குண்டுத் தாக்குதல் ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 42 பேர் பலியாகியுள்ளனர். ஈராக்கில் வன்முறைகளால் கொல்லப்படுவோரின் தொகை குறைவடைந்திருப்பதாக ஈராக்கிய பிரதமர் நூரி மலிக்கி தெரிவித்த சில மணி நேரங்களிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஹபானியா நகரிலுள்ள பள்ளிவாசலுக்கருகிலேயே இக் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகவும் இதில் மேலும் 60 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்னர் பாக்தாத் நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்புத் திட்டத்தால் கொல்லப்படுவோர் மற்றும் கடத்தப்…
-
- 0 replies
- 670 views
-
-
தென்னாபிரிக்காவில் மூக்குத்திக்காக போராடும் தமிழ்ப் பெண் சுனாலி பிள்ளை Sunday, 25 February 2007 தென்னாபிரிக்காவில் தமிழ்ப் பெண் ஒருவர் மூக்குத்தி அணிவதற்காக பள்ளி நிர்வாகத்துடன் போராடி வருகிறார்.டர்பன் நகரில் வசிக்கும் தமிழ்ப் பெண் சுனாலி பிள்ளை (18). அங்குள்ள அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.ஒரு நாள் மூக்குத்தி அணிந்து பள்ளிக்குச் சென்றார். ஆனால், அதற்குப் பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், சுனாலி பிள்ளை பள்ளிக்கு மூக்குத்தி அணிந்து செல்வதில் உறுதியாக இருக்கிறார். இது குறித்து சுனாலி, பள்ளி நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சுனாலிக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. இதையடுத்து சுனாலி மேல் கோர்ட்டில் மேல் முறையீடு…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஆந்திராவில் ஐந்தாயிரம் ஜோடிகளுக்கு திருமணம் ஐதராபாத்:திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திரா முழுவதும் நேற்று ஒரே நாளில் ஐந்தாயிரத்து 174 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.ஐதராபாத்தில் பாலாஜி பவனில் 55 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆந்திர கவர்னர் ராமேஷ்வர் தாகூர், முதல்வர் ராஜசேகர ரெட்டி, சபாநாயகர் சுரேஷ் ரெட்டி மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தேவஸ்தானத்தின் சார்பாக வருடத்திற்கு இரண்டு முறை திருமணச் செலவுகளை சமாளிக்க முடியாத ஏழை இந்து குடும்பங்களுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. குழந்தை திருமணத்தை தவிர்க்கும் வகையில் இந்த இலவச மெகா திருமணத்தை தேவஸ்தானம் நடத்துகிறது. திருமண ஜோடி…
-
- 8 replies
- 1.9k views
-
-
இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக பிரிட்டன் இளவரசர் ஹரி ஈராக் இராணுவத்தில் பணிபுரிய இருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹரி அந்நாட்டு சட்டப்படி தற்போது இராணுவ பயிற்சிபெற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஈராக்கின் இராணுவத் தளத்தில் 6 மாதம் அவர் பயிற்சி பெறவுள்ளார். இது குறித்து இங்கிலாந்து இராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இராணுவ நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும், தொழில்நுட்பங்களையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொள்வதற்காகவே 6 மாத பயிற்சிக்காக இளவரசர் ஹரி ஈராக் அனுப்பப்படுகிறார். இங்கிலாந்து அரசு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், போர் நடைபெறும் பகுதியில் செல்வது 25 வருடத்தில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பாக 1982 இல் இளவரசர் அண்ட்ரூ பிரிட்டன் …
-
- 6 replies
- 1.3k views
-
-
REFUGEE advocates have condemned the Federal Government's apparent attempts to prevent a group of Sri Lankan boat people claiming asylum in Australia. The 85 men – 83 Sri Lankans and two Indonesians – were rescued by an Australian navy ship in international waters near Christmas Island this week after sabotaging their fishing boat. It had been expected that many would apply for asylum in Australia and be taken to Nauru or Christmas Island for processing. But it was reported today the Government had struck a secret deal with Jakarta and Colombo to send the asylum seekers back to Sri Lanka via Indonesia. The policy would be an even more hardline approach…
-
- 2 replies
- 1.1k views
-
-
கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை : ஸ்டாலின் அடிக்கல் 24 பெப்ரவரி 2007 Blog this story சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே கடல்நீரை குடிநீர் ஆக்கும் தொழிற்சாலைக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிறன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த திட்டத்தை ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனமும், பெபிஸா நிறுவனமும் இணைந்து செயல்படுத்த உள்ளன. மீஞ்சூர் அருகே அமைக்கப்பட உள்ள தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. மாநில அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்டாலின், தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், ராசா மற்றும் நடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர…
-
- 0 replies
- 695 views
-
-
[ஈராக்கும் வொஸிங்டனும் கடந்த புதன்கிழமை பிரிடிஸ் தனது இராணுவத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அழைக்க போவதாக அறிவித்துள்ள நிலையில். வாஸிங்டன் சற்று குழப்பமடைந்திருப்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும் அமெரிக்க மக்களை குளப்பமடையாமல் வைத்திருக்க சில ஆரோக்கியமற்ற செய்திகளையும் ஒரு நன்மைபயக்கக் கூடிய செய்திகளாக பரப்ப வேண்டிய சூழ்நிலை ஒன்றை காண கூடியதாக இருக்கின்றது. அதாவது ஈராக்கில் போர் தொடங்கியதற்கான இலக்கை பிரிட்டிஸ் படைகள் அடைந்துவி;ட்டது போலும் இங்கே இனி வரும் நாட்களில் தங்களால் பயிற்சி வழங்கபட்ட ஈராக்கிய படைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது போன்ற தோற்ற செய்திகளே அவை. இருப்பினும் இந்த செய்தியே ஜோர்ஜ் புஸ் அவர்களுக்கு இன்னொரு முட்டுகட்டையாகவும் அமைந்துவிட்டத…
-
- 0 replies
- 1.2k views
-
-
மியாமியில் அக்டோபர் 24 ,2006 அன்று , 21 வாரம் 6 நாட்களுடன் கருவறை வாசத்தை முடித்து கொண்டு அவசரமாக பிறந்த குழந்தை நல்லபடியாக வளர்நது நலமாக இருக்கிறது.அக்குழந்தையின் எடை 280 கிராம் .உயரம் 24 செ.மீ மட்டுமே.டாக்டர்கள் இக்குழந்தை ஒரு அதியச குழந்தை என கூறுகிறார்கள்
-
- 28 replies
- 3.4k views
-
-
[23 - February - 2007] [Font Size - A - A - A] ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் எச்சரிக்கையை மீறி ஈரான் தனது அணுவாயுத திட்டங்களை முன்னெடுப்பதன் காரணமாக அந்த நாட்டிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை கொண்டு வரப்போவதாக வாஷிங்டன் தெரிவித்துள்ளது. ஈரான் தனது யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கு பாதுகாப்புச் சபை 60 நாள் காலக்கெடுவை விதித்திருந்தது. எனினும், இந்த காலக்கெடு முடிவடைந்துள்ளது. மேலும், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்கின்றது என ஐக்கிய நாடுகள் அறிக்கையை வெளியிடவுள்ளது. ஈரான் தனது அணுவாயுத திட்டத்தினை துணிச்சலுடன் முன்னெடுப்பதாக அமெரிக்க துணை வெளிவிவகார அமைச்சர் நிக்கலஸ் பேர்ன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஈராக் ம…
-
- 0 replies
- 818 views
-
-
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை நோக்கி படகில் வந்துகொண்டிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 85 பேர் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் இப்படகை பெப்ரவரி 19 ஆம் நாளில் இருந்து அவதானித்து வந்ததாகவும் இவர்கள் பயணம் செய்த படகு, கடற்பயணத்துக்கு உகந்தது அல்ல என்று அறிந்தவுடன், பெப்ரவரி 20 ஆம் நாள் அதிகாலை வேளையில் படகை வழிமறித்த கடற்படைப் படையினர், அவர்களை அப்படகில் இருந்து தமது கடற்படைக் கலத்துக்கு மாற்றியதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஹெவின் அன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும்…
-
- 4 replies
- 1.3k views
-
-
புலிகள் 18 வயதுக்கு உட்பட்ட சிறாரைப் படையில் சேர்ப்பதாகக் குக்கிரலிட்ட பிரித்தானியா, 18 வயதுக்கு குறைந்த சிறாரை ஈராக்குக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளது. சர்வதேசம் தனக்கு ஒரு சட்டம். மற்றவர்களுக்கு ஒரு சட்டம். UK guilty of sending 'child soldiers' to Iraq Wednesday, 21 February 2007 JAMES KIRKUP POLITICAL EDITOR ( jkirkup@scotsman.com ) BRITAIN broke a United Nations treaty banning the use of child soldiers by sending underage troops - including 17-year-old girls - to Iraq, it has been revealed. The Ministry of Defence has admitted that army commanders were put under pressure by successive deployments to Iraq and as a result broke international rules b…
-
- 1 reply
- 812 views
-
-
தமிழாசிரியரை அடித்த மாணவர்கள்!! பிப்ரவரி 22, 2007 மார்த்தாண்டம்: பக்கத்து விட்டு பெண்ணிடம் சைகை காட்டி பேசிய மாணவரை தட்டிக் கேட்ட தமிழாசிரியரை மாணவர்கள் அடித்து உதைத்தது சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் லாரன்ஸ். சில தினங்களுக்கு முன் இங்கு படிக்கும் பிளஸ் 2 மாணவன் வினு பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு பக்கத்து வீட்டில் நின்ற பெண்ணிடம் சைகை காட்டி பேசியுள்ளார். இதை பார்த்த ஆசிரியர் வினுவை கண்டித்தார். இந்நிலையில் வினுவை சிலர் தாக்கினர். இதற்கு ஆசிரியர் லாரன்ஸ்தான் காரணம் என கருதிய மாணவர்கள், வினுவை தாக்கியவர்கள் மீதும், அதற்கு உடந்தையான ஆசிரிய…
-
- 0 replies
- 798 views
-
-
[21 - February - 2007] [Font Size - A - A - A] அண்மைக்காலங்களில் உலகமயமாக்கப்பட்டுள்ள உலகளாவிய சூழலில் வர்த்தக அபிவிருத்தியில் இலத்திரனியல் நன்மைகள் பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. உலகின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்குத் தகவல் தொழில்நுட்பம் எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சர்வதேச கணினி வலைப்பின்னல்களைப் பயன்படுத்துவதால் வறுமையைக் குறைக்க முடியும். செல்வந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும் எனச் செல்வந்த நாடுகளின் தொலைத் தொடர்புக் கம்பனிகள் பிரசாரம் செய்கின்றன. உலக வங்கி, யுனெஸ்கோ, யு.எஸ்.எய்ட் (க்குஅஐஈ) போன்ற நிறுவனங்களின் உதவியுடன் இக்கம்பெனிகள் மூன்றாம் உலக நாடுக…
-
- 0 replies
- 991 views
-
-
யுரேனியம் செறிவூட்டும் பணியை 60 நாட்களுக்குள் நிறுத்தாவிடில், மேலும் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என ஐ.நா. விதித்த கெடு இரு தினங்களே உள்ள நிலையில் , 60 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்கும் பெரும் போர் பயிற்சியை ஈரான் ஆரம்பித்திருக்கிறது. ஈரானில் 1906 மார்ச்சுக்குப் பிறகு நடைபெறும் மிகப் பெரிய போர் ஒத்திகை இது என்று, ஈரான் புரட்சிப் படைத்தளபதி முகமது ரேஸா சாஹிதி கூறியதாக ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்தது. ஈரானில் மொத்தமுள்ள 30 மாகாணங்களில் 16 மாகாணங்களில் நடைபெறும் இந்தப் போர் பயிற்சியில், ஈரான் புரட்சிப் படையின் 19 பிரிகேடுகளைச் சேர்ந்த 60 ஆயிரம் படைவீரர்கள் கலந்து கொள்கிறார்கள். நவீன ஆயுதங்கள் உட்பட படையின் வசமுள்ள அனைத்து ஆயுதங்களும் இப் பயிற்சியின் போ…
-
- 3 replies
- 1.1k views
-
-
விமான பயணியின் ஷýவில் 13 லட்சம் கரன்சி! விமான பயணியின் ஷýவில் 13 லட்சம் கரன்சி! சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் தனது ஷýவில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க, ஐரோப்பிய கரன்சிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். சென்னையிலிருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு வாலிபர் ஏராளமான வெளிநாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்வதாக சுங்கத் துறை அதிகா>களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த திப்பு சுல்தான் என்ற வாலிபரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த ஷýவைப் …
-
- 2 replies
- 917 views
-
-
-சபேசன் (அவுஸ்திரேலியா)- அவுஸ்திரேலியப் பிரதம மந்திரியான திரு ஜோன் ஹவார்ட் (துழுர்N ர்ழுறுயுசுனு) அவர்கள், அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரான பரக் ஒபாமா (டீயுசுயுஊமு ழுடீயுஆயு) அவர்களுடைய கொள்கைகளைக் கடந்த வாரம் விமர்சித்திருந்தார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக வரக்கூடிய பரக் ஒபாமா அவர்கள் ஈராக்கிலிருக்கும் அமெரிக்கப் படையினரை ஈராக்கிலிருந்து மீளப்பெறுவதற்கான தனது கொள்கையை அறிவித்திருந்தார். இதனை அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவார்ட் விமர்சித்துத் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நேச நாடொன்றின் முக்கிய தேர்தல் வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்து நிற்கும் அரசியல் கட்சி மீது அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்த விமர்சனங்கள் இந்த …
-
- 0 replies
- 782 views
-
-
எல்லையில் தமிழ் பெயர் பலகைகள் அழிப்பு: சர்சுகளில் தமிழுக்கு தடை கோரும் கன்னடர்கள் பிப்ரவரி 20, 2007 பெங்களூர் மைசூர்: பெங்களூர் அருகே தமிழககர்நாடக எல்லையில் ஆனைக்கல் பகுதியில் தமிழ் பெயர் பலகையை கன்னட அமைப்பினர் தார் பூசி அழித்தனர். அதே போல குமாரனப்பள்ளி பகுதியில் வர்த்தக நிறுவனங்களில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்களையும் அழித்தனர். மேலும் ஓசூர்ஆனைக்கல் ரோட்டில் வழி நெடுகிலும் இருந்த தமிழ் பெயர் பலகைகளை கருப்பு மை மற்றும் தார் பூசி அழித்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். ஓசூரில் இருந்து ஆனைக்கல் நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை ஒரு கும்பல் வழி மறித்து மீண்டும் ஓசூருக்கே திரும்பிப் போகுமாறு மிரட்டி அனுப்பினர். இதனால் அங்கு…
-
- 2 replies
- 1k views
-