Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 78 வயதான அமெரிக்க பிரஜைக்கு ஆயுள்தண்டனை விதித்த சீனா !! உளவு பார்த்த குற்றச்சாட்டில் 78 வயதான அமெரிக்க பிரஜை ஒருவருக்கு சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற ஜான் ஷிங்-வான் லியுங் என்பவருக்கே இன்று திங்கட்கிழமை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட குறித்த நபர் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. தாய்வான், தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவமயமாக்கல் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இரு நாடுகளும் தொடர்ந்தும் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1331904

  2. கட்டுரை தகவல் எழுதியவர்,கில்பெர்ட் ஜான் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 16 வயது நிரம்பிய 3 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த தொடர் கொலைகளில் ஈடுபட்ட நபரை போலீசார் எப்படி பிடித்தனர் என்பதே தற்போது பிபிசி வெளியிட்டுள்ள குறுந்தொடரின் கதையாகும். 'சனிக்கிழமையின் இரவு கொலைகாரன்' என்ற அந்த நபரை அடையாளம் காணவே முடியாது என ஏராளமானோர் நினைத்திருந்தனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கொலைகாரனை காவல் துறையினர் அடையாளம் கண்டுபிடித்தனர். அந்த நபரை அடையாளம் கண்டுபிடிக்க இரண்டு டிஎன்ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோகக் கதைதான் 'ஸ்டீல்டவுன் கொலைகள்'…

  3. Published By: RAJEEBAN 12 MAY, 2023 | 12:53 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெற்றோரின் புதைகுழிவுகளை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ரஸ்ய ஜனாதிபதியின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் ஒரு அசுரனையும் ஒரு கொலைகாரனையும் வளர்த்தவர்கள் என குறிப்பொன்றை வைத்துவிட்டு சென்ற 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. செயின்பீட்டர்ஸ்பேர்க்கை சேர்ந்த இரினா சைபனேவா என்ற 60 வயது பெண்ணிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. அரசியல் குரோததன்மையால் அவர் இதனை செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்…

  4. டிரம்ப் பாலியல் வன்முறை குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு Published By: Rajeeban 10 May, 2023 | 06:50 AM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 1990களில் நியுயோர்க்கின் பல்பொருள் அங்காடியில் பத்தி எழுத்தாளர் ஒருவரை டிரம்ப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேர்க்டோவ் குட்மனின் ஆடைமாற்றும் அறையில் டிரம்ப் ஈ ஜீன் கரோலை பாலியல்வன்முறைக்கு உட்படுத்தினார் என நீதிமன்றம் தீர்ப்பளி;த்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் ப…

  5. Published By: RAJEEBAN 15 MAY, 2023 | 03:05 PM ரஸ்யாவிற்கு எதிராக உக்ரைன் பதில் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் பிரிட்டன் ஸ்டோர்ம் சடோ என்ற அதிநவீன ஏவுகணையை உக்ரைனிற்கு வழங்கியுள்ளது. பிரிட்டன் உக்ரைனிற்கு ஸ்டோர்ம் சடோ அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளதன் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பதில் தாக்குதலிற்கு முன்னதாக உக்ரைனின் நீண்ட தூரம் தாக்கும் திறனை அதிகரித்துள்ளது. ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற தன்மைக்கு எதிராக உக்ரைன் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ஏவுகணை என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் பென்வலெஸ் தெரிவித்துள்ளார். துல்லியமாக தாக்கும் திறன் உள்ள நீண்டதூர குறுஸ…

  6. Victory Day : ``வீரர்களின் கையில்தான் ரஷ்யாவின் எதிர்காலமே இருக்கிறது..!"- புதின் Victory Day : ``வீரர்களின் கையில்தான் ரஷ்யாவின் எதிர்காலமே இருக்கிறது..!"- புதின் VM மன்சூர் கைரி Government & Politics ரஷ்ய அதிபர் புதின் ( ட்விட்டர் ) Share ``மேற்கு நாடுகள் நமக்கு எதிராகத் தீவிரமடைந்திருக்கின்றன. எனவே, நமது வீரர்களுடன் முழு நாடும் இருக்க வேண்டும்." - புதின் இந்தக் கட்டுரையை ஆடியோவில் கேட்க 00:00 …

  7. தாய்லாந்து தேர்தலில் ஜனநாயக ஆதரவு கட்சிகள் வெற்றி Published By: Sethu 15 May, 2023 | 10:39 AM தாய்லாந்து பொதுத் தேர்தலில் இராணுவ ஆட்சியை நிராகரிக்கும் வகையில் மக்கள் வாக்ளித்துள்ளனர். இன்று வெளியான தேர்தல் பெறுபேறுகளில் ஜனநாயக ஆதரவான கட்சிகளுக்கு ஆதரவான இரு எதிர்க்கட்சிகள்; முன்னிலையில் உள்ளன. 500 ஆசனங்கள் கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 251 ஆசனங்கள் தேவை. இந்நிலையில், இன்று திங்கட்கிழமை வெளியான பெறுபேறுகளின்படி, 42 வயதான பீதா லிம்ஜரோன்ராத் தலைமையிலான எம்.ஈ.பி. கட்சி 151 ஆசன…

  8. Published By: SETHU 12 MAY, 2023 | 11:23 AM பலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் கடந்த செவ்வாய் முதல் நடைபெற்ற தாக்குதல்களால் 29 பலஸ்தீனியர்களும் இஸ்ரேலில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை 3 ஆவது நாளாக தாக்குதல்கள் தொடர்ந்தன. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதல்களில் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில சிறுவர்கள் உட்பட பொதுமக்களும் அடங்கியுள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 90 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, காஸாவிலிருந்து ஏவப்…

  9. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, துருக்கியில் 2003ஆம் ஆண்டு எர்துவான் பதவிக்கு வந்த பின் அதிபருக்கான அதிகாரங்கள் யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளன 11 மே 2023 துருக்கி அதிபர் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடிக்கும் நிலையில் தற்போது அரசியலில் அவர் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மே 14ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவருக்கு எதிராக 6 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் கெமால் கிலிக்சதரோ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிபர் எர்துவான் ஆட்சியில்…

  10. Published By: SETHU 11 MAY, 2023 | 04:18 PM ஜேர்மனியிலுள்ள மேர்சிடிஸ் - பென்ஸ் வாகனத் தொழிற்சாலையொன்றில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சின்டெல்பின்கென் நகரிலுள்ள இத்தொழிற்சாலையில் காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிக் பிரயோகம் செய்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பின்னர் உயிரிழந்தனர். 53 வயதான இச்சந்தேக நபரை, தொழற்சாலையின் பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். https://www.virakesari.lk/article/155072

  11. பாக்முத்திலிருந்து வெளியேறுவோம்! - வாக்னா் குழு கிழக்கு உக்ரைனில் தீவிர சண்டை நடைபெற்று வரும் பாக்முத் நகரில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறப்போவதாக ரஷிய தனியாா் படையான வாக்னா் குழுவின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் திடீா் மிரட்டல் விடுத்துள்ளாா். பாக்முத்தில் தொடா்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை ரஷியா அனுப்பாததாலும், அந்த நகரில் நடைபெறும் சண்டையில் தங்களது வீரா்கள் அதிக எண்ணிக்கையில் பலியாவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாக்முத் நகரில் நாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் 10-ஆம் தேதி வெளியேற முடிவு செய்துள்ளோம்.…

  12. டோங்கா தீவில் தூதரகத்தைத் திறந்த அமெரிக்கா அமெரிக்கக் கொடிக்கு பின்னால் Manhattan நகரக்காட்சி. (படம்: Reuters) அமெரிக்கா, டோங்கா (Tonga) தீவில் தூதரகத்தைத் திறந்துள்ளது. சுமார் 100,000 குடிமக்களைக் கொண்ட நாடு, டோங்கா. தென் பசிபிக் பகுதியில் செல்வாக்கை நிலைநாட்டச் சீனாவுடன் போட்டியிடுகிறது அமெரிக்கா. அதற்காகத் தென் பசிபிக் தீவுகளில் நட்புறவைப் புதுப்பிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துவருகிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சாலமன் (Solomon) தீவுக…

    • 0 replies
    • 350 views
  13. Published By: SETHU 11 MAY, 2023 | 01:00 PM பின்லாந்தின் பிரதமர் சனா மரீனும் அவரின் கணவரும் விவாகரத்து பெறுவதற்கு கூட்டாக விண்ணப்பித்துள்ளனர். 2019 ஆம் ஆணடு தனது 34 ஆவது வயதில் பின்லாந்தின் பிரதமராக சனா மரீன் பதவியேற்றார். அப்போது உலகின் மிக இளமையான பிரதமராக அவர் விளங்கினார். பின்லாந்து வரலாற்றில் மிக இளமையான பிரதமர் அவரே. தனது காதலாரான மார்க்ஸ் ரெய்கோனெனை 2020 ஆம் ஆண்டு சனா மரீன் திருமணம் செய்தார். பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இத்திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்னரே இவர்கள் நீண்டகாலமாக இணைந்து வாழ்ந்தனர். இத்தம்பதியினருக்கு 5 வயதான ஒரு மகள் உள்ளார். 'நாம் இருவரும் 19 வருடங்களாக இணைந்து வா…

  14. Published By: DIGITAL DESK 3 11 MAY, 2023 | 10:01 AM கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐக்கி நாடுகள் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கி நாடுகள் சபை குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து 'குறை பிரசவ குழந்தைகள்' என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தின. அதில் கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9 சதவீதம் குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக…

  15. புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..! உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். உக்ரைனை எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணி புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தார். ஆனால், உக்ரைன் இன்னமும் எதிர்த்து நிற்கிறது. ரஷ்ய தரப்பிலோ, சுமார் 200,000 படைவீரர்கள் பலியாகிவிட்டார்கள். 17 பில்லியன் டொலர்கள் அளவில் வாகனங்கள் முதலானவற்றை ரஷ்யா இழந்துவிட்டது என்கிறது உக்ரைன் தரப்பு. ஆக, இனி என்ன நடக்கும், ரஷ்யாவுக்கு என்ன ஆகும், புடின் என்ன ஆவார் என்பது குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், புடின் …

  16. இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத், கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனும், பட்டத்துக்கு இளவரசருமான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர் மன்னராக முடிசூட்டும் விழா அடுத்த மாதம் 6 ஆம் திகதி லண்டனில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்விழாவில் அரசு குடும்பத்தினர் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2ஆவது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10 ஆவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர் அரச குடும்பத்தினரில் 10ஆவது வரிசைக்கு பின்னால் அமர்ந்திருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை சார்லஸ், சகோதரரான இளவரசர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபா…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,அலெக்ஸ் மூரே பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஜெர்மனி தலைமையிலான நாஜிப் படைகளுக்கும், பிரிட்டன் தலைமையிலான நேச நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கது. உலக போரில் பிரிட்டன் மற்றும் அதன் நேச நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் பங்கு, அவர்களது வீரம், தியாகம் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் நோக்கில், “We Were There” எனும் தலைப்பில் பிபிசி, அனுபவ கட்டுரைகளை தொகுத்து வழங்கி வருகிறது. இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று ,தற்போது உயிருடன் உள்ள நேச நாடுகளின் …

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,மாட் மர்பி & ஜரோஸ்லாவ் லுகிவ் பதவி,பிபிசி செய்தியாளர் 9 மே 2023, 06:00 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. புதிய வகை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு, ரஷ்யா தொடங்கியுள்ள தாக்குதலால் உக்ரைனில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கீவ்வில் இரவு முழுவதும் வெடிசப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது எனக் கூறும் நகர மேயர், ரஷ்யாவின் காமிகேஸ் வகை பெரிய ட்ரோன் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த த…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் 1950-களில் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திய ரஷ்யாவுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கும் முயற்சியாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு வினோதமான திட்டத்தை தீட்டினர். ஆனால் அணு குண்டு வெடித்து அந்த நிலவின் நிலப்பரப்பை கதிரியக்கம் மிக்க ஆபத்தான நிலப்பரப்பாக மாற்றியிருந்தால் அது எப்படியிருக்கும்? நிலவுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்கள் குறித்த ஆய்வறிக்கை, தொகுப்பு 1 என்ற அந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் அது ஒரு சாதாரண அறிவியல் ஆராய்ச்சி குறித்த தகவல்களை வெளிப்படுத்தும் விதத்திலேயே இருக்கிறது. அந்த புத்தகத்தை சாதாரணமாக நாம் புறந்தள்ளிவிட முடியும். அது தான் அந்தத் தலைப்பின்…

  20. டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு டெக்சாஸ் மாகாணத்தின் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வழிப்போக்கர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதன்போது நூற்றுக்கணக்கானோர் வணிக வளாகத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சிலர் குழந்தைகள் என்றும் குறைந்தது 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேநேரம் அவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்…

  21. பட மூலாதாரம்,MOHAMED OSMAN/ BBC கட்டுரை தகவல் எழுதியவர்,முகமது ஒஸ்மான் பதவி,பிபிசி செய்தியாளர், சூடானிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிபிசி அரபு சேவையின் செய்தியாளர் முகமது ஒஸ்மான் தனது வாழ்நாள் முழுவதும் சூடானில் வாழ்ந்தவர். கடந்த மாதம் ராணுவத்தின் இரண்டு தரப்பு பிரிவுகளுக்கு இடையில் மோதல் வெடித்தபோது, அவர் அதுகுறித்த செய்திகளை வெளியிட்டு வந்தார். ஆனால் நாளடைவில் அங்கு நிலைமை மோசமானது. அவர் தனது தாய்நாட்டை விட்டு எகிப்துக்கு தப்பிச்செல்ல ஆபத்தான தரைவழி பயணத்தை மேற்கொள்ளும் கடினமான முடிவைப் பற்றி சிந்தித்தார். பிறந்த ஊரை விட்டு வெளியேறி… சூடான் தலைநகர் கார்தூமின் மே…

  22. ரஷிய ஆதரவு எழுத்தாளர் பயணித்த காரில் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 438-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதனிடையே, இந்த போரில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக, போரில் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்து தெரிவித்த நபர்களையும் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு எழுத்தாளர் பெர்லிபின் நேற்று மாஸ்கோவில் இருந்து 400 கிலோ மீட…

    • 1 reply
    • 633 views
  23. கொங்கோவில் வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 200 பேர் பலி May 7, 2023 கொங்கோவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனா். கொங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. இதனால ஏற்பட்ட வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிாிழந்துள்ளனா். அப்பகுதியில் உள்ள வீதிகள், பாடசாலைகள் , மருத்துவமனைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.. இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும், காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இர…

  24. கட்டுரை தகவல் எழுதியவர்,யோகிதா லிமாயே பதவி,ஆப்கானிஸ்தான் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிறந்து மூன்று மாதமே ஆன தயாபுல்லாவின் உடல் அமைதியாக அசையாமல் இருக்கிறது. அவனது மூக்கில் வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாயை எடுத்துவிட்டு, கொஞ்சமாவது அவன் மூச்சு விடுகிறானா என அவனது தாய் சோதித்துப் பார்க்கிறார். குழந்தையின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததை உணர்ந்து அந்த தாய் கதறி அழத் தொடங்குகிறாள் ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்த மருத்துவமனையில் நன்றாக வேலை செய்யும் ஒரு வென்டிலேட்டர் கூட இல்லை. வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு மூச்சு விட உதவலாம் என்றால், அவர்களின் சிறிய முகங்களுக்குப் பொரு…

  25. துருக்கி மாநாட்டில் ரஷ்ய, உக்ரேனிய எம்.பிகள் கைகலப்பு Published By: Sethu 05 May, 2023 | 11:04 AM துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (PABSEC) பாராளுமன்றப் பிரதிநிதிகள் மாநாட்டில் இச்சம்பவம் இச்சம்பவம் இடம்பெற்றது. இம்மாநாட்டின் ஆரம்ப நாளான நேற்று, ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரேனிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரேனிய தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.