உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27006 topics in this forum
-
16 AUG, 2023 | 11:10 AM அவுஸ்திரேலியாவில் காலநிலை நெருக்கடி தீவிரமடைவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஜூலை மாதத்தில் முன்னர் எப்போதையும் விட வெப்பம் மிக அதிகமாக காணப்பட்ட நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஜூலை மாத வெப்பநிலை வழமையான சராசரி வெப்பநிலையை விட 1.2சென்டிகிரேட் அதிகமாக காணப்பட்டது. கான்பெராவை தவிர ஏனைய அனைத்து தலைநகரங்களிலும் வழமையை விட அதிகளவு வெப்பநிலை காணப்பட்டது என வானிலை ஆய்வு பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. சிட்னி, மெல்பேர்ன், ஹொபார்ட் உட்பட பல முக்கிய நகரங்கள் தங்களின் ஜூலை மாத வெப்பத்தில் சாதனை அளவை எட்டியுள்ளன. சில நகரங்களில்…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 14 AUG, 2023 | 04:08 PM சிட்னியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தின் பயணியொருவர் இஸ்லாமை குறிப்பிட்டு ஆபத்தான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டதால் விமானம் நடுவானில் மீண்டும் சிட்னிக்கு திருப்பப்பட்டது. எம்122 விமானம் 194 பயணிகள் ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்ட சில நிமிடத்தில் முதுகுப்பையுடன் காணப்பட்ட நபர் எழுந்து நின்று நான் இஸ்லாமின் அடிமை என சத்தமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய விமானப்பாதுகாப்பு படையினர் அவரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். விமானம் தற்போது ஓடுபாதையில் காணப்படுகின்றது - விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 442 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவை தற்போது வாட்டுவது, பணவாட்டம், அதாவது பொருட்களின் விலைகள் மளமளவென சரிந்து வருகின்றன. 12 ஆகஸ்ட் 2023 உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான சீனா, தற்போது தீவிர சிக்கலில் உள்ளது. பொதுவாக பணவீக்கம், அதாவது பொருட்களின் விலையேற்றத்தால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஆனால் சீனாவை தற்போது வாட்டுவது, பணவாட்டம், அதாவது பொருட்களின் விலைகள் மளமளவென சரிந்து வருகின்றன. கடந்த 18 மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா திணறிக்கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் தலை கீழ் நிலைமை நிலவுகிறது. மக்களும் தொழில் நடத்துபவர்களும் பணத்தை செலவு செய்வதில்ல…
-
- 6 replies
- 878 views
- 1 follower
-
-
கூண்டுச் சண்டைக்கு மஸ்க், ஸக்கர்பேர்க் தயார்! இடத்தையும் அறிவித்தார் மஸ்க் Published By: Sethu 23 Jun, 2023 | 10:16 AM டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் இலோன் மஸ்க்கும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பேர்க்கும் கூண்டுச் சண்டையில் மோதுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். டுவிட்டரும் பேஸ்புக்கும் உலகின் முன்னிலை சமூக வலைத்தளங்கள். ஒன்றுக்கு ஒன்று போட்டியானவையாகவும் கருதப்படுகின்றன. தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரர்களான் இலோன் மஸ்க்கும், மார்க் ஸக்கர்பேர்கும் அரசியல், செயற்கை நுண்ணறிவு உட்பட பல விடயங்களில் எதிரெதிரான அபிப்பிராயங்களை வ…
-
- 6 replies
- 802 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 13 ஆகஸ்ட் 2023 இயற்கைக்குள் எல்லாம் இருக்கிறது. அவற்றில் அதன் படைப்புகள் எத்தனை ஆண்டுகள் வாழும் என்பதும் அடக்கம். மேஃபிளை என்று அழைக்கப்படும் எபிமெரோப்டெரா , வெறும் 24 மணிநேரம் மட்டுமே வாழும் போது, டர்ரிடோப்சிஸ் டோர்னி என்ற ஜெல்லி மீனும் அதன் பெயருக்கு ஏற்றவாறு வாழ்கிறது. சிறிய மற்றும் வெளிப்படையான, இந்த உயிரினங்கள் அசாதாரண உயிர்வாழும் திறன்களைக் கொண்டுள்ளன. இவை உடல் ரீதியாக பாதிக்கப்படும்போது, பட்டினி கிடக்கும் போது, அல்லது மன அழுத்தத்தின் போது தங்களின் பழைய இளமையான தோற்றத்தைப் பெறுகின்றன. இதை கோட்பாட்டளவில் சொன்னால், இந்த உயிரினங்கள் எப்போதும் வாழ முடியும். மான்டெய்க்னே என்ற தத்துவஞா…
-
- 0 replies
- 532 views
- 1 follower
-
-
இனி ஒரே வாகனத்தில் ஆணும் பெண்ணும் பயணிக்க கூடாது! அமலுக்கு வந்தது உத்தரவு! இந்தோனேசிய மாகாணம் ஒன்றில், ஆண் – பெண் வாகனப் பயணங்கள் தனித்தனியாக அமைய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் மேற்கு மூலையில் இருக்கும் மாகாணம் ஆச்சே. உலகளவில் இஸ்லாமிய மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் ஆச்சேவும் ஒன்று. மிகவும் கட்டுக்கோப்பான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ள பிராந்தியம் என்ற வகையிலும் ஆச்சேவுக்கு உலகப் பிரபலம் உண்டு. இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சி நடைபெறும் இந்த மாகாணத்தில், தண்டனையாக பொது இடத்தில் வைத்து கசையடிகள் வழங்குவது பல்வேறு சட்டங்கள் அமலில் இருக்கின்றன. சூதாட்டம், மது அர…
-
- 3 replies
- 688 views
-
-
ஹவாய் தீவில் காட்டுத்தீ : உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு! 1000 பேர் மாயம்! அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஒன்றான மெளயி-ல் (Maui) கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இந்த காட்டுத் தீயில் மாட்டி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்திருக்கிறது. ஆயிரக்க்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்கக் கடலினுள் குதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தீ கட்டுக்கட…
-
- 0 replies
- 410 views
-
-
நைஜர் ஜனாதிபதியை கைது செய்தது அந்நாட்டு இராணுவம்! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஊடாக பாதுகாப்பு தரப்பினர் மக்களுக்கு அறிவித்தியுள்ளது. மேலும் நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2023/1341810
-
- 41 replies
- 2.8k views
- 1 follower
-
-
Published By: SETHU 10 AUG, 2023 | 10:30 AM (ஆர்.சேதுராமன்) பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களை சர்ச்சைக்குரிய கப்பலில் தங்கவைக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 'பிபி ஸ்டொக்ஹோம்' எனும் இக்கப்பலுக்கு முதல் கட்டமாக 15 பேர் கடந்த திங்கட்கிழமை அனுப்பப்பட்டனர். பிபி ஸ்டோக்ஹோம் ஆனது ஒரு பாரிய தெப்பம் (barge) ஆகும். 222 அறைகள் இதில் உள்ளன. 500 ஆண்களை இதில் தங்க வைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு எதிர்க்கட்சியினரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவான குழுக்களும் சட்டத்தரணிகளும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் இதை மிதக்கும் சிறைச்சாலை என வர்ணிக்கின்றனர். …
-
- 6 replies
- 429 views
- 1 follower
-
-
ஹவாய் தீவு காட்டுத் தீ ஒரு பேரழிவு: அதிபர் ஜோ பைடன் வேதனை- பலி 53 ஆக அதிகரிப்பு வைலுகு (ஹவாய்): அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள நிலையில் இதனை ஒரு பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீவு மாநிலமான ஹவாய் தீவுகள், முக்கிய நிலப்பகுதியில் இருந்து மேற்கே 2,000 மைல் தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இதில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய தீவு மாய் ஆகும். இத்தீவின் சில இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டுத் தீ பற்றியது. அருகில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான லைஹானா நகருக்குள் தீ மிக …
-
- 1 reply
- 502 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1950 களில் பூமியின் மேற்பரப்பில் பல்வேறு இடங்களில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷர் பதவி, பிபிசி ஃபியூச்சர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அது உங்கள் பற்களில் இருக்கிறது. உங்கள் கண்களுக்குள் ஊடுருவியிருக்கிறது. ஏன் உங்கள் மூளைக்குள்ளும் புதைந்திருக்கிறது. விஞ்ஞானிகள் இதை "வெடிகுண்டு முனை" என்கிறார்கள். கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக அது உங்கள் உடலுக்குள் தனது அடையாளத்தை வைத்திருக்கிறது. கடந்த 1950 களில் பூமியின் மேற்பரப்பில் பல்வேறு இடங்களில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்ப…
-
- 8 replies
- 1.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,BRITISH GOVERNMENT கட்டுரை தகவல் எழுதியவர், அனகா பதக் பதவி, பிபிசி மராத்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டானிக் கப்பல் மூழ்கப்போகும் தறுவாயில், முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் படகுகளில் மீட்கப்பட்டனர். அத்தகைய படகில் ஒரு பெண், ஒரு சிறிய குழந்தை மற்றும் ஒரு நபர் அமர்ந்திருந்தனர். படகை தண்ணீரில் செலுத்தும் முன், ஒரு அதிகாரி, " வேறு பெண் பயணிகள் யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டார். யாரும் முன்வரவில்லை. "பெண்கள் யாராவது இருக்கிறீர்களா?" என்று மற்றொரு அதிகாரி கத்தினார். கப்பலின் மேல் தளத்திலிருந்து ஒரு பெண் வந்து, “நான் இந்தக் கப்பலில் …
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 11 AUG, 2023 | 12:03 PM சூரிய ஒளியை நான் இழந்துவிட்டேன் - மரங்களை பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டன என சீனாவில் மூன்று வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக கருத்து தெரிவித்துள்ள அவர் நான் சூரியனை தவறவிட்டுவிட்டேன். எனது ஜன்னல் ஊடாக சூரியஒளி வருகின்றது எனினும் என்னால் பத்து மணித்தியலாங்கள் மாத்திரம் அதன் கீழ் நிற்க முடியும் என ஜெங் லே தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மக்களுக்கான பகிரங்க கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார் - தன்னை ஒவ்வொரு மாதமும் சந்திக்க வரும் இராஜதந்திரிகள் மூலம் அவர் இதனை அனுப்பியுள்ளார். நான் அவுஸ்த…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 10 AUG, 2023 | 06:04 AM அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக இணையவழி அச்சுறுத்தலை விடுத்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யுட்டாவிற்கு ஜோபைடன் விஜயம் மேற்கொள்வதற்கு சில மணி நேரங்களிற்கு முன்னர் அந்த நபரை கைது செய்வதற்காக வீட்டிற்கு எவ்பிஐ அதிகாரிகள் சென்றவேளை இடம்பெற்ற சம்பவத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கிரெய்க் ரொபேர்ட்சன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், இணையவழி மூலம் பைடனிற்கும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பிற்கு எதிரான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிக்கும் எதிராக ரொபேட்சன் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. முகநூலில் இந்…
-
- 0 replies
- 465 views
- 1 follower
-
-
3 மணி நேரம் முன் இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர் படகு விபத்துக்குள்ளானதில் 41 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கி பயணித்த படகில் பயனித்த புலம்பெயர் பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் குறித்த விபத்தில் என உயிருடன் மீட்கப்பட்ட 4 பேர் வழங்கிய தகவலுக்கமையவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 1800 பேர் உயிரிழப்பு மேலும் உயிருடன் தப்பியவர்களில் 3 ஆண்கள் மற்றும் 1 பெண் உள்ளடங்குகிறார்கள். மேலும், மூழ்கிய படகில் மூன்று குழந்தைகள் உட்பட 45 பேர் சென்றதாக மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். லம்பேடுசா பகுதியானது இத்தாலியின் தெற்கே…
-
- 1 reply
- 210 views
- 1 follower
-
-
வாழ்வில் தூக்கம் என்பது சோம்பல் என்றும், அது தேவையற்றது என நான் எனது இளம் வயதில் நினைத்தேன்” என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசோப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் சிறப்பிடத்தில் இருந்தவர். உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில் கேட்ஸ். இப்போது கூட உலக பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 134 பில்லியன் டொலர்கள். தனது சொத்துகளை தானமாக வழங்குவது குறித்து கடந்த ஆண்டு பேசி இருந்தார். “என்னுடைய 30 மற்றும் 40 வயதுக…
-
- 0 replies
- 493 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,VOLOCOPTER படக்குறிப்பு, வோலோகாப்டர் நிறுவனத்தின் 'வோலோசிட்டி' மின்சார விமானம் கட்டுரை தகவல் எழுதியவர், பென் மோரிஸ் பதவி, வணிக ஆசிரியர் 8 ஆகஸ்ட் 2023 பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்னும் ஒரு வருடத்தில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனைகள் படைக்க தடகள வீரர்கள் ஆவலுடன் இருப்பார்கள். இந்த கோடை திருவிழா ஒருபுறமிருக்க, அதற்கு முன்பே பாரிஸ் மாநகரம் மற்றொரு புதிய பயண அனுபவத்துக்கு ஆயத்தமாகி வருகிறது. ‘வோலோசிட்டி’ (Volocity) என்றழைக்கப்படும் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானம…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ளது பிரபல மெளண்ட் ஸினாய் மருத்துவமனை. அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை துறையில் மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர். கிரிஸ்டல் காஸெட்டா. இவர் அந்த மருத்துவமனையில் மார்பகம், எலும்பு, மகளிர் நோய் மற்றும் இரைப்பை குடல் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வாய்ந்த மருத்துவர். மேலும், மெளண்ட் ஸினாய் குயின்ஸ் செண்டரில் நிலைய தலைவராகவும், இகான் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பதவிகள் வகித்தார். இவருக்கு ஒரு குழந்தை உண்டு. டாக்டர்.கிரிஸ்டலின் இல்லம் நியூயோர்க் நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் சோமர்ஸ் பகுதியில் உள்ளது. டாக்டர். கிரிஸ்டலுடன் அவ்வீட்டில் வசிக்கும் ஒருவர், நேற்று முன் தினம் கா…
-
- 2 replies
- 346 views
- 1 follower
-
-
தனது மனைவி சோஃபியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த தம்பதியரின் 18 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 51 வயதான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் 48 வயதான அவரது மனைவி சோஃபி கடந்த 2005இல் மண வாழ்க்கையில் இணைந்தனர். இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. “அனைவருக்கும் வணக்கம். சோஃபியும் நானும் இந்த உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீண்ட ஆலோசனைக்கு பின்னர் நாங்கள் இருவரும் கலந்து பேசி பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஒருவருக…
-
- 3 replies
- 645 views
- 1 follower
-
-
Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப் பட்டது. தற்போது இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெ…
-
- 1 reply
- 680 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தோ்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த ஜனாதிபதி தோ்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க ட்ரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தன்யா சுட்கன் உறுதி செய்துள்ளாா். அமெரிக்காவை ஏமாற்றுவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டது, தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை புதிய ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக நடைபெற்ற அரசுப் பணிக்கு இடையூறு விளைவித்தத…
-
- 2 replies
- 367 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்துக்கு உட்பட்ட பால்டிமோரில் உள்ள லாக்சின் பேரக்குழந்தை ஒருவரின் வீட்டில் இருக்கும் அவரது உருவப்படம் 5 ஆகஸ்ட் 2023, 10:51 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆராய்ச்சியாளராகவோ, கல்வியாளராகவோ இருக்கும் ஒருவரின் பெயர் அவர் சார்ந்த துறையால் அங்கீகரிக்கப்படுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. ஆனால், இப்படி எந்தவொரு அடையாளமும் இல்லாத சாதாரண ஒரு பெண்ணின் பெயர் இன்று உயிரி அறிவியல் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எழுபது ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் அவர் இறந்தாலும், அவரது உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட ச…
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FLORIDA FISH & WILDLIFE படக்குறிப்பு, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், பர்மிய வகை மலைப்பாம்புகளை வேட்டையாடுவதற்கான போட்டி (Python Challenge) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், மேக்ஸ் மாட்சா பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட நேபிள்ஸை பூர்வீகமாகக் கொண்டவர் ஜேக் வாலேரி. 22 வயது துடிப்பான இளைஞரும், ஓஹியோ பல்கலைக்கழகத்தின் மாணவருமான இவர், பாம்புகளை வேட்டையாடுவதைத் தனது கோடை விடுமுறையின் ஒரு பெரிய திட்டமாக வைத்திருக்கிறார். தொழில்முறையாக பாம்புகளை வேட்…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
Published By: SETHU 01 AUG, 2023 | 04:05 PM சீனாவில், சூறாவளியினால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தோக்சூரி எனும் சூறாவளி காரணமாக, தொடர்ச்சியாக 4 ஆவது நாளாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், பல நதிகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதுடன் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், குறைந்தபட்சம் 20 பேர் பலியானதுடன் மேலும் 19 பேரை காணவில்லை என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் பெய்ஜிங்கில் சுமார் 52,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் அதிகம…
-
- 2 replies
- 646 views
- 1 follower
-
-
Published By: SETHU 02 AUG, 2023 | 09:58 AM பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி இந்திய ரூபா)) பெறுமதியான ஆபரணங்களை கொள்ளைடித்துச் சென்றுள்ளனர். ஆடம்பர கடிகார விற்பனை நிலையமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 10 முதல் 15 மில்லியன் யூரோ பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் வழக்குத்தொடுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. டிப்டொப்பாக ஆடையணிந்த 2 ஆண்கள், ஒரு பெண் அடங்கிய குழுவினர், கைத்துப்பாக்கியொன்றுடன் கடையின் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த ஊழிய…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-