Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் நடு வானில் மோதி, விழுந்து நொறுங்கிய விமானங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜார்ஜ் ரைட் பதவி,பிபிசி நியூஸ் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இரண்டு விமானங்களும் தாழ்வான உயரத்தில் ஒன்றையொன்று மோதுவதையும், அதில் ஒரு விமானம் பாதியாக உடைவதையும் காணொளிகளில் பார்க்க முடிகிறது. அவை தரையில் விழும்போது தீப்பிழம்பு ஏற்பட்டதையும் காண முடிகிறது. டல்லாஸ் அருகே நடைபெற்ற ஒரு நினைவு கூறல் நிகழ்வில் …

  2. விகாஸ் பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த பல கூட்டங்களைப் போலவே இந்த ஆண்டின் "குவாட்" அமைப்பின் உச்சி மாநாடும் மெய்நிகர் வடிவிலேயே நடந்தது. குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். இந்த 4 நாடுகளின் தலைவர்கள் ஆன்லைன் மூலம் இணைந்தார்கள். நூறு கோடி டோஸ் கோவிட் தடுப்பூசியை ஆசிய நாடுகளுக்கு வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய உடன்பாடு தொடர்பான தீவிரமான விவாதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், குவாட் குழு மீண்டும் ஒரு சந்திப்பை வாஷிங்டனில் நடத்துகிறது. …

  3. அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் : புதிய அதிபர் யார்? on 03-11-2008 03:15 அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இத்தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தல் 4ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள். …

    • 66 replies
    • 5.9k views
  4. அமெரிக்காவில் நிதி நெருக்கடியைத் தீர்க்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாடு கண்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையின் மூத்த எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் நிலவி வரும் நெருக்கடியைச் சமாளிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மற்றும் ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களிடையே புதன்கிழமை முக்கிய விவாதம் நடைபெற்றது. அப்போது, அரசியல்ரீதியிலான கருத்து வேறுபாடுகளை மறந்து சமரசத்தீர்வு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செனட் எனப்படும் மேலவையின் பெரும்பான்மைத் தலைவர் ஹாரி ரீட், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்போது எட்டப்பட்டுள்ள சமரசத் திட்டத்தின் மூலம் நமது பொருளாதாரத்துக்கு ஸ்திரத்தன்மை ஏற்படும்'' என்றும் அவர…

  5. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சீக்கியப்பெண் போலீஸ் அதிகாரியாக நியமனம் அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக குர்சோச் கவுர் என்ற சீக்கியப் பெண் துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #GursoachKaur #TurbanedPoliceOfficer நியூயார்க்: அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக சீக்கியப் பெண் ஒருவர், துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரது பெயர், குர்சோச் கவுர். இவர் கடந்த வா…

    • 0 replies
    • 295 views
  6. அமெரிக்காவில் நிலநடுக்கம்:பொதுமக்கள் அச்சம் நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் எற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அலஸ்கா மாகாணத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி மாலை 5.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியன. கடலுக்கடியில் சுமார் 10 கீ.மீட்டர் ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. http://www.vikatan.com/news/world/60855-earthquake-hits-off-alaska.art

  7. அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம்:ஒபாமா கவலை அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாராம் குறித்து அதிபர் ஒபாமா ஆழமான கவலையை வெளியிட்டுளார். நாட்டு மக்களுக்கான தனது வாராந்திர உரையில் இது தொடர்பில் அவர் பேசினார். அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார் சில தினங்களுக்கு முன்னர் கலிஃபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில், படையினர் பயன்படுத்தும் வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, அமெரிக்காவில் ஆபத்தானவர்களின் கைகளில் துப்பாக்கிகள் கிடைப்பது மிகவும் சுலபமானது என்ற துக்ககரமான விஷயத்தை நினைவுபடுத்துவதாக, அதிபர் ஒபாமா தெரிவித்தார். கலிஃபோர்னியா படுகொலைகளை நடத்திய தம்பதிய…

  8. அமெரிக்காவில் பகல் சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் மசோதாவை செனட் நிறைவேற்றுகிறது.இதே நடைமுறை கனடாவிலும் வரும் என எண்ணுகிறேன். அமெரிக்கா முழுவதும் பகல் சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் நடவடிக்கையை செனட் செவ்வாயன்று நிறைவேற்றியது. சன்ஷைன் பாதுகாப்பு சட்டம் ஒருமனதாக ஒப்புதலுடன் அறையை நிறைவேற்றியது. இந்த மசோதா இன்னும் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் மற்றும் சட்டமாக மாறுவதற்கு ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட வேண்டும். இந்த நடவடிக்கை காங்கிரசை அழித்து சட்டமாக கையொப்பமிட்டால், ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர்காலத்தில் பின்வாங்கக்கூடாது என்று அர்த்தம். சிஎன்என், ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசியின் அலுவலகத்தை அணுகி, மசோதாவை எப்போது அல்லது சபை எடுத்துக்கொள்வது என்பது குறித்து க…

  9. அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்! அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிற நிலையில் சமீபத்தில் சில வெளிநாட்டு மாணவர்களின் விசா இரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தகுதி வாய்ந்ததாக மாற்றும் விதியை உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது. சர்வதேச மாணவர்களை நிலையான தங்கும் காலங்களுக்கு உட்படுத்தும் வகையில் இந்த விதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தங்கள் முழுந…

  10. அமெரிக்காவில் படித்தவர்களுக்கு எச்-1 பி விசாவில் முன்னுரிமை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு ‘எச்-1 பி’ விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் தங்கி இருந்து பணிபுரிவதற்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற 20 ஆயிரம் பேருக்கு அதிகமாக குறித்த விசா வழங்கப்படும். ‘எச்-1 பி’ விசாக்களில் 70 சதவீதத்துக்கும் மேலாக இந்தியர்களே பெறுகிறார்கள். அதாவது ‘எச்-1 பி’ விசா மூலம் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் இந்தியர்களால் நடத்தப்படு…

  11. அமெரிக்காவின் ஒரேகான் மாநில ஆயுதப்படையினரை போர்ட்லாந்துக்கு அனுப்புவதை நீதிமன்றம் தடை செய்ததால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், கலிபோர்னிய ஆயுதப்படையினர் 300 பேரை அங்கு அனுப்பியுள்ளது. போர்ட்லாந்துக்கு ஆயுதப்படையினரை அனுப்புவதற்கு எதிரான குறித்த தடை உத்தரவு நீதிமன்றத்தால் 60 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. போர்ட்லாந்தில் குடிவரவு மற்றும் சுங்க கட்டிடத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு ஆயுதப்படையினர் தேவை என ட்ரம்ப் கூறிய பின்னரும் இந்த தடை உத்தரவை நீதிபதி பிறப்பித்திருந்தார். ட்ரம்ப் மீது விமர்சனங்கள் இந்நிலையில், கலிபோர்னிய ஆயுதப்படையினரை ட்ரம்ப் நிர்வாகம் அங்கு அனுப்பியுள்ளது. இவ்வாறிருக்க, இராணுவத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் அதிகாரத…

  12. அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த பனிப் புயலால் 6 முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அமெரிக்கா கடந்த ஒரு மாதமாக கடும் பனிப் பொழிவில் சிக்கி தவிக்கிறது. நாடு முழுவதும் மைனஸ் டிகிரிக்கும் கீழ் குளிர் வீசுகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் அட்லாண்டா பகுதியில் திடீரென கடும் பனிப்புயல் தாக்கியது. பல மணி நேரம் இந்த புயல் நீடித்தது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நகர முடியாமல் நின்றன. பல வாகனங்கள் விபத்தில் சிக்கின. பள்ளிக் கூடம் சென்ற மாணவர்களும் அலுவலகத்திற்கு சென்ற ஊழியர்களும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே நின்றனர். டெக்சாஸ், கரோலினா பகுதிகள்…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது அமெரிக்கா, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நிலைமைகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன, பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சில விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன. …

  14. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகள் முன்னெடுப்பு இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயலில் சிக்கி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. https://tamilwin.com/article/death-toll-from-cold-storm-in-us-reaches-1705846071 இந்த ரென்னிசி மாநிலத்திலேயே சகோதரி @nilmini வசிக்கிறா.

  15. அமெரிக்காவில் பனிப்பொழிவால் விபரீதம்: 168 வாகனங்கள் மோதி சங்கிலித்தொடர் விபத்து – 8 பேர் பலி அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தெற்கு பகுதியில் மிகப்பெரிய சதுப்பு நிலம் காணப்படுகிறது. இங்கு ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே அங்கு காலையில் கடும் பனிப்பொழிவு உருவானது. இந்த பனிப்பொழிவுடன் தீயில் இருந்து வெளியேறிய புகையும் சேர்ந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. ஒன்றன்பின் ஒன்றாக மோதின இதனால் சாலையில் முன்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாத அளவுக்கு மூடுபனி உருவானது. அப்போது அபாயகரமான வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று அந்த வழியாக சென்றது. மூடுபனி காரணமாக எதிரே வந்த வா…

  16. அமெரிக்காவில் பனிப்பொழிவு: வட கரோலினாவில் மூவர் உயிரிழப்பு அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் வீசிய சக்திவாய்ந்த பனிப் புயல் மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், நூறாயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், வட கரோலினா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காரொன்றின் மீது மரம் முறிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஆறொன்றினுள் இருந்து கண்டெடுக்கப்பட்ட காரின் சாரதியை தேடும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன், வட கரோலினா ஏரிகளில் அமைக்கப்பட்டிருந்த பல படகு வீடுகளும் பனிப்புயலின் எதிரொலியாக இடிந்து விழுந்துள்ளன. இதேவேளை, அமெரிக்காவின் தென்கிழக்கு பிராந்…

  17. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்றிரவு திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீயினால் சுமார் 120 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட காடு முற்றிலுமாக அழிந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். காட்டுப் பகுதிக்கு அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அங்குள்ள பண்ணைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குதிரைகள் தீயின் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறி துடித்தன. காற்றின் வேகம் அதிகமாயிருப்பதால், லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வடமேற்கே உள்ள வெண்டுரா மாவட்டத்தின் அருகில் உள்ள காடுகளிலும், பள்ளத்தாக்குகளில் உள்ள மரங்களும் கொழுந்துவிட்டு எரிகின்றன. அருகிலுள்ள இரண்டு ஊரில் உள்ள வீடுகள் தீக்கிரையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சானல் தீவி…

  18. அமெரிக்காவில் பயங்கரம் : மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், எனவும் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1355686

  19. மும்பையின் தானே நகரைச் சேர்ந்த கிளிபோர்டு மைனேஜ் என்ற 27 வயது இளைஞர் ஹாலந்து அமெரிக்க லைன் கப்பலில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், புளோரிடா கடற்கரையில் உடல் ஒன்று கரை ஒதுங்கியதாக, கடற்கரை வழியாக நடந்து சென்ற சிலர் கொடுத்த தகவலின் படி உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது கிளிபோர்டு மைனேஜின் உடல் என்பது தெரியவந்தது ”ரைண்டாம்” என்ற பெயர் கொண்ட அந்த கரிபியன் கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாம்பா துறைமுகத்துக்கு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மைனேஜ் கடலில் விழுந்து பலியாகி இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். எனினும் இந்த மைனேஜ் மாயமானது குறித்து கப்பல் கேப்டன், சம்பம் நடைபெற்ற நாளின் காலை வரை எந்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. கப்பலில…

  20. அமெரிக்காவில் பயணிகள் விமானத்துக்கு அருகில் பறந்த ஆளில்லா போர் விமானம் படம்: ஏ.பி. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் அருகே லுஃப்தான்சா பயணிகள் ஜெட் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது 200 அடிக்கு அருகில் ஆளில்லா போர் விமானம் ஒன்று மோதும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து விமானத்தை தரையிறக்கியவுடன் லுஃப்தான்சா ஏ380 விமானத்தின் பைலட் புகார் அளித்தார். விமானம் அப்போது 5,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு 14 மைல்கள் கிழக்காக பறந்து கொண்டிருந்தது. அப்போது தான் இந்த ட்ரோன் அபாயம் ஏற்பட்டது. ஆனால் விமானி சாமர்த்தியமாக அதிலிருந்து திசைதிருப்பி பாதுகாப்பாக தரையிறக்கினார். ஆளில்லா போர் விமான பற்றிய தகவல் இல…

  21. அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம் BatticaloaJanuary 30, 2025 அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் பயணிகள் விமானமொன்று ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது. இதனை அமெரிக்காவின் போக்குவரத்து திணைக்களம் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. இவ்விமானம் ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும்போது இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு, மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்து இடம்பெற்றபோது விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்துள்ளதோடு, ஹெலிகொப்டரில் மூன்று அ…

  22. அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் வில்லியம் புரும்பி(54), இவர் சரசோடா என்ற இடத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகன் ஸ்டீபன் புரும்பியும் உடன் இருந்தார். அப்போது துப்பாக்கி குண்டு தவறி திசை மாறி சென்று அருகில் இருந்த சுவரில்பட்டு விழுந்தது.அதன்பின்னர் மீண்டும் அவர் துப்பாக்கியால் சுட்டார். அக்குண்டு பின்புறம் நின்று கொண்டிருந்த அவரது மகன் ஸ்டீபன் உடலில் பாய்ந்தது. இதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அமெரிக்காவில் பல சம்பவங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இது போன்று கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 13,286 பேர் உயிரிழந்துள்ளனர். http://www…

  23. அமெரிக்காவின் லோஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் உள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்பட்ட நபரை சுட்டு வீழ்த்தினர். பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அருகில் உள்ள விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் சுதாட்ட மையம் …

  24. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் Van Nuys என்ற இடத்தில் பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமிண்ட் பெஞ்ச் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த் சிமிண்ட் பெஞ்ச் அடியில் நெருப்பு வைத்த்தாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். Van Nuys section of Los Angeles என்ற பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 67 வயது பெண் ஒருவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு எவ்வித சொந்த வீடும் இல்லாததால், தினசரி அந்த பெஞ்ச் மீது தூங்குவது வழக்கமாக இருந்திருக்கின்றது. அந்த பஸ் நிறுத்தத்திற்கு அருகில் கடை வைத்துள்ள ஒரு இருபது வயது இளைஞர் அந்த பெண்ணை பலமுறை அந்த சிமிண்ட் பெஞ்ச் மீது படுத்து தூங்கக்கூடாது என எச்சரித்துள்ளார். ஆனால் அந்த பெண், அந்த இளைஞரின் பேச்சைக் கேட்கா…

  25. அமெரிக்க பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் (வயது 18). இவர் விலையுயர்ந்த வெள்ளை நிற பெராரி கார் வைத்துள்ளார். இவரது கார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை புகைப்படம் எடுப்பதற்காக பின்தொடர்ந்தவர் மற்றொரு கார் ஏற்றியதில் பலியானார். இந்த சம்பவம் குறித்து கலிபோர்னியா மாகாண காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, பாப் பாடகரின் கார் வேகமாக பயணித்து கொண்டிருந்தது. அவருக்கு பின்னே மற்றொரு காரில் ஒருவர் தொடர்ந்து வந்தார். போக்குவரத்து சிக்னலில் பெராரி கார் நின்றபோது பின் தொடர்ந்தவர் தனது காரில் இருந்து இறங்கி முன்னே சென்று பெராரி காரை படம் பிடித்தார். அதன் பின் தனது காருக்கு திரும்பினார். ஆனால் அவரை மற்றொரு கார் மோதியதில் கீழே விழுந்தார். அவர் மருத்துவமன…

    • 0 replies
    • 511 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.