Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் கடத்திக்கொல்லப்பட்ட இந்தியக் குடும்பம் ; சந்தேக நபர் கைது By T. SARANYA 07 OCT, 2022 | 02:55 PM அமெரிக்காவில் இந்தியக் குடும்பம் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வந்தார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். அந்த குடும்பம் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர…

  2. புட்டின் ஆட்சியின் கீழ் தடைசெய்யப்பட்ட ரஸ்யாவின் மனச்சாட்சி என வர்ணிக்கப்படும் மெமோரியலிற்கு அமைதிக்கான நோபல் பரிசு By RAJEEBAN 07 OCT, 2022 | 05:33 PM இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள அமைப்புகளில் ஒன்று மெமோரியல் மேமோரியலை புட்டின் ஆட்சியின் கீழ் தடைசெய்யப்பட்ட ரஸ்யாவின் மனச்சாட்சி என வர்ணித்துள்ள ஏஎவ்பி விமர்சனங்களை எழுப்பும் குரல்களிற்கு எதிரான ஒடுக்குமுறையின் போது மெமேரியல் மூடப்படவேண்டிய நிலையேற்பட்டது எனவும் தெரிவித்துள்ளது மெமோரியல் குறித்து ஏஎவ்பி மேலும் தெரிவிப்பதாவது 1990களில் ஜனநாயகத்தை நோக்கிய ரஸ்யாவின் குழப்பகரமான மாற்றத்தின்போது நம்பிக்கையின் சின்னமாக உருவெடுத்த இந்த அம…

    • 3 replies
    • 387 views
  3. உய்குர் முஸ்லிம் விவகாரம்: இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் அசந்து போன சீனா! Xinjiang Uighur Muslim: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டினால் சர்வதேச நாடுகள் அதிர்ந்து போனது, சீனாவுக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. Xinjiang Uighur Muslim: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டினால் சர்வதேச நாடுகள் அதிர்ந்து போனது, சீனாவுக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியாவும் சீனாவும், கிழக்கு லடாக்கில் மோதி வருகின்…

  4. இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு By T. SARANYA 05 OCT, 2022 | 04:24 PM 2022ம் ஆண்டுக்கான இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு "மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும்" வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர். பெர்டோசி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்தி…

  5. யுக்ரேன் vs ரஷ்யா: லைமன் நகரில் சடலங்கள் திரளாக புதைக்கப்பட்டதைக் கண்டுபிடித்ததாகக் கூறும் யுக்ரேன் மெர்லின் தாமஸ் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேன் மீட்ட கிழக்கு நகரமான லைமன் நகரில், இரண்டு திரள் மயானங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக யுக்ரேன் கூறுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட மயானத்தில் பொதுமக்களின் சடலங்கள் இருக்கும் கிட்டத்தட்ட 200 கல்லறைகள் இருந்ததாக டான்டேஸ்க் பிராந்தியத்தின் யுக்ரேன் கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்தார். மற்றொரு மயானத்தில் எத்தனை சடலங்கள் உள்ளன என்று இன்னும் தெளிவாக இல்லை என்றும்,…

  6. சிரியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் – முக்கிய ISIS பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண்டு முக்கிய ISIS பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிரியாவின் வடகிழக்கில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய ஹெலிகாப்டர் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ISIS தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு-ஹும் அல்-உமாவி உட்பட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. https://athavannews.com/2022/1303326

  7. ரஷ்யா உக்ரேனை நோக்கி அணுவாயுதங்களை எடுத்துச் செல்வதாகக் கூறப்படும் தகவல்களை நிராகரித்தது அமெரிக்கா! உக்ரேனை நோக்கி ரயில் மூலமாக அணுவாயுதங்களை ரஷ்யா எடுத்துச் செல்வதாகக் கூறப்படும் தகவல்களை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அது ஆதாரம் இல்லாத தகவல் என்பதனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ரஷ்யத் பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான இராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்படுவது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக ரஷ்யப் படைக்குப் பின்னடைவு ஏற்பட்டிரக்கும் ஹெர்சன் பகுதிக்கு அந்த அணு ஆயுதங்கள் எடுத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது. புதிதாக இணைத்துக் கொண்ட உக்ரேனிய …

    • 2 replies
    • 543 views
  8. புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள் By T. SARANYA 03 OCT, 2022 | 02:40 PM வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 221-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனிடையே, போரில் கைப்பற்றிய உக்ரேனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்த பகுதி ஒட்டுமொத்த உக்ரேனின் 15 சதவிகிதம் ஆகும். …

  9. இணைக்கப்பட்ட பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக புடின் உறுதி! ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் புடின் இந்த கருத்தை வெளியிட்டார். ரஷ்ய ஜனாதிபதி கடந்த வாரம் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், ஸபோரிஸியா மற்றும் கெர்சன் ஆகிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஆனால், லுஹான்ஸ்க் மற்றும் கெர்சனில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியுள்ளது. இது மற்ற இரண்டு பிராந்தியங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் டொனெட்ஸ்…

  10. தாய்லாந்து குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச் சூடு – 34 பேர் உயிரிழப்பு 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERSCOPYRIGHT தாய்லாந்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பகல் நேர குழந்தை பராமரிப்பு மையத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தின் வட கிழக்கு மாவட்டமான நாங் புவா லம்புவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிதாரி முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை இரண்டு வயது குழந்தை உட்பட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். முதல் முறை …

  11. துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் பலி தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் ஒரு பகல் நேர குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான குழந்தைகளும், பெற்றோர்களும், காப்பக ஊழியர்களும் இருந்தனர். அப்போது காப்பகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனை கண்ட குழந்தைகளும், பெற்றோர்களும் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர். இந்த கோரத் தாக்குதலில் குழந்தைகள், பெ…

  12. வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை! வட கொரியா பியோங்யாங் பகுதியில் இருந்து நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. ஜப்பானின் என்.எச்.கே. தேசிய தொலைக்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்ட செய்தியில், வட கொரியாவிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே இருந்தாலும் ஜப்பான் கடலில் அது தரையிறங்கியதாகவும் கூறியுள்ளது. சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6:47 மணிக்கு வட கொரியாவில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக ஜப்பானிய கடலோரக் காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமார் 15 நிமிடங்களுக்…

  13. கழிவறையில் டிரம்ப் அழித்த ஆவணங்கள்: புத்தகம் சொல்லும் ரகசியங்கள் நாடின் யூசுஃப் பிபிசி நியூஸ் 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தன் மகளை முக்கிய அரசு பொறுப்பிலிருந்து நீக்க நினைத்தார், மேலும் அரசு ஆவணங்களை கழிவறையில் போட்டு 'ஃபிளஷ்' செய்தார். இதுபோன்ற இன்னும் பல ஆச்சரியகரமான, முன்பு அறிந்திராத தகவல்கள் பல, நியூயார்க் டைம்ஸ் ஊடகவியலாளர் மேகி ஹேபர்மேனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கான்ஃபிடன்ஸ் மேன்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகியுள்ளது. டொனால்டு டிரம்ப் நியூயார்…

  14. 16 நாடுகளில் 40 மலையேற்றம் புரிந்து சாதித்த அமெரிக்கப் பெண் ஹிலாரி நீல்சன் நவீன் சிங் கட்கா சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,NORTH FACE புகழ்பெற்ற பனிச்சறுக்கு மலையேற்ற அமெரிக்க வீராங்கனையான ஹிலாரி நீல்சன் இமயமலையில் ஒரு வாரத்துக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடல் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 2) அன்று பெளத்த முறைப்படி எரியூட்டப்பட்டது. ஒரு தலைமுறையை சார்ந்த பெண்களின் மத்தியில் அவர் ஒரு உந்து சக்தியாக விளங்கியது எப்படி என சக மலையேற்ற வீரர்கள் பிபிசியிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 2012ஆம் ஆண…

  15. ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா! ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி 07:29 மணிக்கு ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து வெளியான எச்சரிக்கையில், ஹொக்கைடோ தீவில் உள்ள மக்களுக்கு விமானம் மற்றும் ரயில் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. வடகிழக்கு ஹொக்கைடோ மற்றும் அமோரி பகுதிகளில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஜப்பானில் இருந்து சுமார் 3,000 கிமீ (1,860 மைல்) தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழுந்ததாகவும், இது தொடர்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானிய கடலோ…

    • 3 replies
    • 731 views
  16. சீன சேவையை நிறுத்தியது கூகுள்! சீனத்தில் பல்வேறு சேவைகளை கூகுள் நிறுத்திவந்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையையே நிறுத்திவிட்டது என்றால் அது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம். கூகுளுக்கு ஏற்படும் சறுக்கல்கள் வழக்கமானதுதான். ஆனால் சீனத்தில் தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருப்பது பெரிய பின்னடைவாகப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒருபக்கம் கூகுள் சேவைகளை ஹேக் செய்வது, சீனத்தில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூகுள் அளிக்கும் சேவைகளை விட மி…

    • 0 replies
    • 468 views
  17. வடக்கு அயர்லாந்து குடும்பங்கள் நவம்பரில் 400 பவுண்டுகள் எரிசக்தி ஆதரவைப் பெறும்: பிரதமர் ட்ரஸ்! வடக்கு அயர்லாந்தில் உள்ள குடும்பங்களுக்கு நவம்பர் மாதம் 400 பவுண்டுகள் எரிசக்தி ஆதரவு தள்ளுபடி கிடைக்கும் என பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள குடும்பங்கள் மின் கட்டணத் தள்ளுபடியைப் பெறும் அதே திகதியில் ஒக்டோபர் 1ஆம் திகதிக்குப் பணம் செலுத்தப்படும் என்று பிரதமர் மேலும் கூறினார். அத்துடன், சர்ச்சைக்குரிய மினி-பட்ஜெட் பற்றிய விமர்சனங்களை ட்ரஸ் நிராகரித்தார். திறைசேரியின் தலைவரின் அறிவிப்புகள் ஸ்டெர்லிங்கின் மதிப்பில் பாரிய வீழ்ச்சிக்கும், கடன் வாங்கும் செலவுகள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது. இது வீட்டு உரிமை…

  18. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு உலகின் 4 ஆவது பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் ஜனாதிபதி தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் ஆளும் வலதுசாரி மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே நிலவும் தீவிர போட்டியில் இடதுசாரிகளுக்கே வெற்றிவாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிரேஸிலின் உள்ளூா் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தோ்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெறுவதால், தோ்தல் முடிவடைந்த சில மணி நேரங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கியுள்ள 11 வேட்பாளா்களில், தற்போதயை அதிபரும் வலதுசாரியுமான ஜெயிா்…

    • 2 replies
    • 779 views
  19. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை கண்டித்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை கண்டித்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை! உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் வகையில் சுய பாணியிலான வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 278பேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் அதன் பாதுகாப்புத் துறையோடு தொடர்புடைய 14 பேரையும் குறி வைத்துள்ளது. ரஷ்யாவிற்க…

  20. பிரித்தானியா வாழ் இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ள மன்னர் சார்லஸ் மன்னர் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக்கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ளார். மன்னர் சார்லஸ் பதவியேற்ற பின்னர், இங்கிலாந்து முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கை உட்பட பல தெற்காசிய நாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் ஒன்றிணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவேற்பு நிகழ்வு இந்தநிகழ்வில் இங்கிலாந்து முழுவதிலுமிருந்து பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு பாரம்பரியத்தைச் சேர்ந்த 200-300 விருந்தினர்கள் பங்கேற்பார்…

  21. நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம் - கோழிகள் மூலம் உலகிற்கு தெரியவந்தது எப்படி? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES துருக்கியில் அமைந்துள்ள கப்படோசியாவின் காதல் பள்ளத்தாக்கு வழியாக நான் நடந்தபோது வேகமாக வீசிய காற்றால் புழுதிப் பறந்தது. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மலைச்சரிவுகள் அந்த நிலப்பரப்பை ஆழமான சிவப்பு பள்ளத்தாக்குகளுடன் வண்ணமயமாக்கின. மேலும், தூரத்தில் புகைக்கூடு போன்ற பாறை வடிவங்கள் தெரிந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கொந்தளிப்பான எரிமலைச் சூழல் இயற்கையாகவே இந்தக் கோபுரங்களை உருவாக்கியுள்ளது. மத்திய துருக்கியில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு சுற்றுப்பயணமும் அதன…

  22. யுக்ரேன் பதிலடித் தாக்குதல்: முக்கிய நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா ஹ்யூகோ பச்சேகா & ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்டு பிபிசி நியூஸ், கீயவ்வில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இழந்த பகுதிகளை மீட்க யுக்ரேன் படைகள் நடத்தும் போராட்டம். தமது அண்டை நாடான யுக்ரேன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த லைமன் நகரில் இருந்து பின் வாங்கியது. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் நகரத்தில் சுற்றி வளைக்கப்படுவார்கள் என்ற அச்சத்திற்கு இடையே இந்தப் பின்வாங்கல் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்ப…

  23. இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் : 130 பேர் பலி, 180 க்கும் மேற்பட்டோர் காயம் 02 Oct, 2022 | 10:05 AM இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் : 130 பேர் பலி, 180 க்கும் மேற்பட்டோர் காயம் இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். 180 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் . இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா களம் கண்டன. இப்போட்டியின் போது வன்முறை வெடித்தது. இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியட…

  24. உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உத்தியோகபூர்வமாக இன்று ரஷ்யாவுடன் இணைப்பு! ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள், உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. புனித ஜோர்ஜ் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா பகுதிகளில் தற்போது ஆட்சி செலுத்தி வரும் நிர்வாகத் தலைவர்கள், ரஷ்யாவுடன் அந்தப் பகுதிகளை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்கள். இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிராந்திய நிர்வாகத் தலைவர்கள் மாஸ்கோ வந்துள்ள நிலையில் இவ் இணைப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் கலந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சர்ச்சைக்க…

  25. மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயம் வெளியீடு! மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயத்தை, ரோயல் மின்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. இந்த நாணயங்கள் படிப்படியாக புழக்கத்தில் வருவதால், மக்கள் டிசம்பர் மாதத்திலிருந்து சிறிய மாற்றங்களில் சார்லஸ் மன்னரின் உருவத்தை காணத்தொடங்குவர். இதற்கிடையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் ஒக்டோபர் 3ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒரு நினைவு நாணயத்தை ரோயல் மின்ட் நிறுவனம் வெளியிடும். இதுதவிர, மன்னரின் உருவம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.