உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26638 topics in this forum
-
ரஷ்யாவுடனான போரினால்... உக்ரைனில், 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு! உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டில் 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போரில் 4,062பேர் காயமடைந்தாகவும் உயிரிழந்துள்ளளோர் காயமடைந்தோரின் உண்மையான எண்ணிக்கை இதைவிட இன்னும் அதிகமாக இருக்கலாம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, உக்ரைனின் 31 இடங்களில் தாங்கள் நடத்திய தாக்குதலில் 270 ‘தேசியவாத’ படையினர் உயிரிழந்ததாகவும் அமெரிக்க பீரங்கிகள் உள்ளிட்ட 54 இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. இதுவரை உக்ரைனின் 172 விமானங்கள், 125 ஹெலிகாப்டர்கள்,…
-
- 0 replies
- 132 views
-
-
போருக்கு ஆதரவான... சின்னம் அணிந்ததற்காக, ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு தடை! பதக்கம் வழங்கும் மேடையில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ஆதரவான சின்னத்தை அணிந்ததற்காக ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் கட்டாரில் நடந்த போட்டியில், வெண்கல பதக்கத்தை பெற்றுக்கொள்ளும் போது ரஷ்ய வீரர் தனது உடையில் “Z” என்ற சின்னத்தை பொறித்திருந்தார். பதக்கம் பெறும் மேடையில் தங்கப் பதக்கம் வென்ற உக்ரேனிய வீரர் அவர் அருகில் நின்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் உள்ள ரஷ்ய போர் வண்டிகள் மற்றும் வாகனங்களில் Z என வர்ணம் பூசப்பட்டு, போருக்கு ரஷ்யர்களால் அனுப்பப்படுகின்றது. இந்நிலையில் ஜிம்னாஸ்டிக்ஸ் நெறிமுறைகளை 20 வயதா…
-
- 1 reply
- 216 views
-
-
ரஷ்யாவின், போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை... சேகரிக்கும் திட்டத்தை, அமெரிக்கா தொடங்கியுள்ளது உக்ரைனில் ரஷ்யா நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பிற அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்களை திரட்டி ஆய்வு செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அந்தவகையில் புதிய திட்டத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. படையெடுப்பின் போது ரஷ்யப் படைகள் மேற்கொண்ட விடயங்கள் தொடர்பான ஆதாரங்களை ஆவணப்படுத்துதல், சரிபார்த்தல் மற்றும் கண்காணிப்புக்கள் இடம்பெறும் என அறிவித்துள்ளது. போர்க் குற்றங்களுக்கு ரஷ்யாவை பொறுப்பேற்க வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செயற்கைக்கோள் ம…
-
- 1 reply
- 213 views
-
-
24 மணி நேரத்தில்... 694 உக்ரைன் போராளிகள், சரணடைவு – ரஷ்யா 694 உக்ரைன் போராளிகள் சரணடைந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில் பதுங்கியிருந்தவர்களே இவ்வாறு சரணடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை முதல், தொழிற்சாலையில் தங்கியிருந்த மொத்தம் 959 போராளிகள் சரணடைந்துள்ளனர். அவர்களில் 80 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2022/1282631
-
- 1 reply
- 320 views
-
-
யுக்ரேன் போரால் உலகம் உணவு சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் - எச்சரித்த ஐ.நா மட் மர்ஃபி பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் வரும் மாதங்களில் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. இந்த போர் காரணமாக, ஏழை நாடுகளில் விலைவாசி உயர்வால் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்திருப்பதாக, ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். யுக்ரேனிலிருந்து ஏற்றுமதிகள் போருக்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கப்படாவிட்டால், பல ஆண்டுகளாக நீடிக்கும் பஞ்சத்தை சில நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் …
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
உக்ரைனுக்கு... நிதி உதவியை அதிகரிக்குமாறு ,அமெரிக்க கருவூல செயலாளர்... நட்பு நாடுகளிடம் கோரிக்கை உக்ரைனின் நட்பு நாடுகள் அவர்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் பொருளாதார மன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் இந்த கோரிக்கையை விடுத்தார். அமெரிக்க செனட் சபை 40 பில்லியன் டொலர் இராணுவ மற்றும் மனிதாபிமான உதவியை வழங்க தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளை கட்டம் கட்டமாக தடை செய்யலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். https://athavan…
-
- 0 replies
- 121 views
-
-
மீதமுள்ள படையினரைக் காப்பாற்ற... உக்ரைன், நடவடிக்கை ! மரியுபோலின் அஸொவ்ஸ்டல் பகுதியிலிருந்து, எஞ்சியுள்ள படையினரை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மலியர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த திங்கட்கிழமை காயமடைந்த படையினர் உட்பட 264 இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் 7 பேருந்துகள் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒலெனிவ்கா என்ற …
-
- 0 replies
- 233 views
-
-
நேட்டோ அமைப்பில், இணைய உள்ளதாக.... ஃபின்லாந்து- சுவீடன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக வரும் ஒரு வரலாற்று மாற்றத்தில் நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பதாக சுவீடன் மற்றும் ஃபின்லாந்து உறுதிப்படுத்தியுள்ளன. ஸ்வீடனில், ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியினர் மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டணியில் சேர்வதை ஆதரிப்பதாகக் கூறியதால், இது நாடு விண்ணப்பிக்க வழி வகுத்தது. ஃபின்லாந்தும் நேட்டோவில் சேர்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்தது. சுவீடன் இரண்டாம் உலகப் போரில் நடுநிலை வகித்தது மற்றும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இராணுவக் கூட்டணிகளில் சேருவதைத் தவிர்த்தது. பின்லாந்து ரஷ்யாவுடன்…
-
- 12 replies
- 915 views
-
-
பிரான்ஸின்... புதிய பிரதமராக, எலிசபெத் போர்ன் நியமனம்! பிரான்ஸின் புதிய பிரதமராக முன்னாள் தொழிற்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், 61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மக்ரோன், தனது அரசாங்கத்தில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்ததன் பின்னணியில், முன்னதாக பிரதமராக இருந்த ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து எலிசபெத் போர்னை புதிய பிரதமராக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அறிவித்தார். இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்…
-
- 0 replies
- 322 views
-
-
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், தன்னார்வ பொலிஸ் அதிகாரிகளுக்கு... டேசர்களைப், பயன்படுத்த அதிகாரம்! இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தன்னார்வ பொலிஸ் அதிகாரிகளுக்கு டேசர்களைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அறிவிப்பை உட்துறைச் செயலாளர் ப்ரீத்தி படேல், ஒரு உரையில் பொலிஸ்துறையிடம் அறிவிப்பார் என அறியமுடிகின்றது. சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குறிப்பிட்ட பயிற்சியை முடித்தால் அவர்கள் மின்சார ஸ்டன் துப்பாக்கிகளைப் பயன்படுத்த முடியும். தாக்குபவர்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் பாதகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக உட்துறை அலுவலகம் கூறியது. ஆனால், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதை அவர்களின் பயன்பாட்டில் ஆபத்தான விரிவா…
-
- 0 replies
- 149 views
-
-
ட்ரம்ப் காலத்தில்... கியூபா மீது, விதிக்கப்பட்ட தடைகளை நீக்கியது... பைடன் நிர்வாகம்! கியூபா மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்பத்துக்கான பணம் அனுப்புதல் மற்றும் கியூபாவிற்கு பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதுதவிர, மேலும், கியூபா நாட்டவர்களுக்கான அமெரிக்க விசாக்கள் பரிசீலனையும் துரிதப்படுத்தப்படும். இந்த நடவடிக்கை, கியூபா குடிமக்கள் அரசாங்க அடக்குமுறையில் இருந்து விடுபட்ட வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொட…
-
- 0 replies
- 151 views
-
-
தாலிபன்களின் கட்டுப்பாடுகளால் தவிக்கும் ஆப்கன் பெண்கள்: “இங்கு பெண்ணாக வாழ்வதே குற்றமா?" லாரா ஓவென் பிபிசி 100 பெண்கள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "தெருவில் இருந்தவர்கள் என்னிடம் வந்து, என் முகத்தை மறைக்குமாறு கூறியது வேதனையாக இருந்தது. நான் சென்ற தையல்காரரும் கூட நான் பேசுவதற்கு முன்பு என் முகத்தை மறைக்குமாறு கூறினார்," என்கிறார் சோர்ச்யா. காபூலில் ஒரு சிறு தொழில் செய்து வருகிறார் சோரயா. இந்த வாரம் மேற்கு காபூலில் உள்ள கடைகளுக்கு அவர் வழக்கமாகச் செல்வதைப் போல் சென்றபோது, சில விஷயங்கள் மாறியிருந்தன. தாலிபன் பிரதிநிதிகள் பெண்களுக்கான துணிக்க…
-
- 1 reply
- 308 views
- 1 follower
-
-
இந்த ஆண்டு இறுதிக்குள்... உக்ரைன்- ரஷ்ய போர் முடிவடையும்: உக்ரைன் இராணுவ மேஜர் ஜெனரல்! இந்த ஆண்டு இறுதிக்குள் உக்ரைன் மற்றும் ரஷ்ய போர் முடிவடையும் என உக்ரைன் இராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார். ஸ்கை செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை வீழ்த்த சதி நடக்கின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையும். இந்த போரில் ரஷ்யா தோல்வி அடைந்தால், ஜனாதிபதி பதவியில் இருந்து புடின் அகற்றப்படுவார். இதன் மூலம் ரஷ்யா வீழ்ச்சி அடையும். புடின் மிகவும் மோசமான உளவியல் மற்றும் உடல் நிலை பாதிப்பில் இருக்கின்றார்” என கூறினார். இதனிடையே, ரஷ்யாவி…
-
- 0 replies
- 211 views
-
-
வட கொரியாவில்... கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, இராணுவத்துக்கு... கிம் அழைப்பு! வடகொரியாவில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். மக்களுக்கு மருந்துகளை விநியோகிக்க உதவுமாறு இராணுவத்திற்கு கிம் ஜோங் உன், உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவில் கொவிட் தொற்று பரவியுள்ளதாக செய்தி வெளியானதில் இருந்து, இதுவரை 50பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி போடப்படாத மக்கள் மூலம் நோய் பரவுவதை மெதுவாக்கும் முயற்சியில் கிம் நாடு தழுவிய முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்கு உத்தரவிட்ட போதிலும், வடகொரியா ‘காய்ச்சல்’ என்று குறிப்பிடுவதன் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நோய்வாய்ப…
-
- 0 replies
- 144 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தின்... புதிய ஜனாதிபதியாக, ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு! ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிஃபா பின் சயீத் மறைவைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டார். 1971ஆம் ஆண்டில் சுதந்திர நாடாக ஐக்கிய அரபு அமீரகம் ஆன பிறகு, அந்த நாட்டுக்கு நியமிக்கப்படும் மூன்றாவது ஜனாபதி ஷேக் முகமது பின் சயீது ஆவார். இவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். இராணுவத்தில் பல முக்கிய பதவிகளை இவர்வகித்துள்ளார். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் ஜனாதிபதியாக ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannew…
-
- 0 replies
- 135 views
-
-
வட கொரியாவில் கோவிட்: 10 லட்சம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மருந்து தெளிக்கும் ஊழியர்கள். தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வட கொரிய நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று அலை அலையாகப் பரவி வரும் நிலையில், இந்த நெருக்கடியைக் கையாளும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறை அலுவலர்களை கடுமையாக விமர்சித்த வட கொரியத் தலைவர் கிம் ஜோங் - உன் மருந்துகளை விநியோகிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை "காய்ச்சல்" எ…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
"அல் ஜசீரா" ஊடகவியலாளரின்... இறுதிச் சடங்கில், மோதல்! ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்ட அல் ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லாவின், இறுதிச் சடங்கில் இஸ்ரேலிய பொலிஸார் துக்கத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கியுள்ளனர். பொலிஸார், சிலர் தடியடிகளைப் பயன்படுத்தி, பாலஸ்தீனியர்களின் கூட்டத்திற்குள் நுழைந்ததால், ஷிரீன் அபு அக்லாவை வைத்திருந்த சவப்பெட்டி கிட்டத்தட்ட விழுந்தது. ஆனால், இஸ்ரேலிய பொலிஸார் மீது கற்களை வீசி தாக்கிய பின்னரே, தாம் அவர்களை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொலிஸாருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மருத்துவமனை வளாகத்தில் சவப்பெட்டியைச் சுற்றி திரண்டிருந்த மக்கள், அபு அக்லாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அதிகார…
-
- 5 replies
- 783 views
-
-
அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி - என்ன நடந்தது? 15 மே 2022, 03:59 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் - கருப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பஃப்பலோ பகுதியை அடைய மணிக்கணக்கில் வாகனம் ஓட்டியதாக நம்பப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை. இது இனவெறி நோக்குடன் தூண்டப்பட்ட வெறுப்புணர்வு…
-
- 2 replies
- 382 views
- 1 follower
-
-
லக்பா ஷெர்பா - வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் சுவாமிநாதன் நடராஜன் & பேட்ரிக் ஜேக்சன், லண்டன் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LHAKPA SHERPA படக்குறிப்பு, 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் லக்பா ஷெர்பா தனது வாழ்நாள் முழுவதும் சவால்களை எதிர்கொண்டு வரும் லக்பா ஷெர்பா, தனது 48 வயதில், 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். அவர் 10-வது முறையாகச் செய்துள்ள சாதனை, அவரது சகோதரரால் அறிவிக்கப்பட்டது. நேபாள அதிகாரிகள் அதை உறுதி செய்தனர். இதைச் செய்துள்ள முதல் பெண் என்ற ப…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
ரஷ்ய படையெடுப்பால்.... உக்ரைனில் இதுவரை, "3,500க்கும் மேற்பட்டோர்" உயிரிழப்பு! உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியது முதல் இதுவரை அந்நாட்டில் 3,573 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,816 பொதுமக்கள் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. கனரக பீரங்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மூலமே பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், ரஷ்யா நிகழ்த்தி உள்ள போர்க்குற்ற விசாரணையை உக்ரைன் நீதிமன்றம் தொடங்கி உள்ள நிலையில், 10,000க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை அடையாளம் கண்டுள்ளதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. ஆனால், பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் உட்பட போர்க்குற்றங்களில் ஈடுபடவில்ல…
-
- 5 replies
- 351 views
-
-
ஐம்பது புலம்பெயர்ந்தோர்... ருவாண்டாவுக்கு, திரும்ப அனுப்பப்படுவார்கள்: பிரதமர் பொரிஸ் ஜோன்சன்! அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மீள்குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ருவாண்டாவிற்கு முதலில் ஐம்பது புலம்பெயர்ந்தோர் அனுப்பப்படவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். டெய்லி மெயிலுக்கு அளித்த செவ்வியில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இந்த எண்ணிக்கையை வெளிப்படுத்தினார். ஒரு புதிய ஒப்பந்தத்தின்படி, பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் இப்போது ருவாண்டாவிற்கு மீள்குடியேற்றத்திற்காக விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள். ஆனால், இந்த கொள்கையை 160க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், கேன்டர்பரி பேராயர், எதிர்க்கட்சிகள் மற்றும் மூத்…
-
- 1 reply
- 311 views
-
-
ஃபின்லாந்திற்கு... மின்சார விநியோகத்தை, நிறுத்துவதாக... ரஷ்யா அறிவிப்பு! ரஷ்ய எரிசக்தி விநியோக நிறுவனமான RAO Nordic பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி, ஃபின்லாந்திற்கு மின்சார விநியோகத்தை இன்று (சனிக்கிழமை) முதல் நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ளது. முந்தைய விநியோகங்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபின்லாந்து கிரிட் கட்டுப்பாட்டு நிறுவனம், ரஷ்யா நாட்டின் மின்சாரத்தில் ஒரு சிறிய சதவீதத்தை மட்டுமே வழங்கியதாகவும், அதை மாற்று ஆதாரங்களில் இருந்து மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை நேட்டோவில் சேரத் திட்டமிட்டுள்ளதாக ஃபின்லாந்து கூறியதை அடுத்து, ‘பழிவாங்கும் நடவடிக்கைகளை’ எடுப்பதாக ரஷ்யா…
-
- 0 replies
- 369 views
-
-
புடினின் முன்னாள் மனைவி- இரகசிய காதலி உட்பட... 12பேருக்கு பிரித்தானியா, பொருளாதாரத் தடை! செல்வாக்கு மிக்க அரச பதவிகளுக்கு ஈடாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முறைகேடான செல்வத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்படும் 12பேருக்கு பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்களில் அவரது முன்னாள் மனைவி லியுட்மிலா ஓச்செரெட்னயா மற்றும் அவரது இரகசிய காதலியாக நம்பப்படும் 38 வயதான முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை அலினா கபேவா ஆகியோர் அடங்குவர். இதுதவிர, புடினின் நெருங்கிய குடும்ப உறுப்பினரான இகோர் புதின் என்பவர் மீதும் தடை விதிக்கப்படுகிறது. ரஷ்ய தொழிலதிபரான இகோர், பெசெங்கா சர்வதேச கடல் துறைமுக இயக்குனராக இருந்து வருகிறார். 38 வயதான அலினா க…
-
- 0 replies
- 248 views
-
-
மேற்குக் கரையில்... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல் ஜசீரா செய்தியாளர் கொல்லப்பட்டார் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் அல் ஜசீராவுக்கு செய்தி அளித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 51 வயதான ஷெரின் அபு அக்லா, இஸ்ரேலிய துருப்புக்களால் வேண்டுமென்றே சுடப்பட்டதாகவும் அவரது தயாரிப்பாளரும் சுடப்பட்டு காயமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுட்டள்ளது, துப்பாக்கிச் சூட்டின் போது பாலஸ்தீனிய ஆயுததாரிகளால் அவர்கள் சுடப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறினார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள…
-
- 2 replies
- 325 views
- 1 follower
-
-
கம்போடியா வரை நீண்டிருந்த தமிழர் ஆட்சியில்.. கோலோஞ்சி இருந்த கோவில்களில் இருந்து அமெரிக்கா.. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் திருடப்பட்ட விலைமதிக்க முடியாத அருங்காட்சியக சொத்துக்களை மீள கையளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்.. அண்மையில் அமெரிக்கா.. தான் திருடி வைத்திருந்த துரியோதனன்.. மற்றும் பீமன் சிலைகளை மீளக் கையளித்துள்ளது. அதேபோல் பிரிட்டன் திருடியவற்றையும் மீளத் தரக் கேட்கப்பட்டுள்ளது. அதுபோக.. தமிழர்களிடம் இருந்து திருடிய கம்போடியாவை தமிழர்களிடம் எப்ப தருவார்கள்.. அதுசரி.. தமிழர்களே அதைப்பற்றி கதைப்பதில்லை. ஏலவே ஈழத்தில் பெளத்த ஆக்கிரமிப்பைக் கூட கண்டும் காணாமலும் இருக்கும் தமிழர்களிடம் போய்.. இதை எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது தான். இத…
-
- 2 replies
- 576 views
-