Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புடின் போர் குற்றவாளி – ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கூட்டு இராணுவ தளபதிகளின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் எனவும் விளக்க…

  2. யுக்ரேன் Vs ரஷ்யா: புதின் ராணுவத்தின் மிகப்பெரிய தவறுகள் என்ன? ஜோனாத்தன் பீல் பாதுகாப்பு செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யா உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராணுவ பலத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும், ஆனால் யுக்ரேன் மீதான அதன் ஆரம்பகால படையெடுப்பு நடவடிக்கையின்போது அது வெளிப்படையாக இருக்கவில்லை. மேற்கு நாடுகளில் உள்ள பல ராணுவ ஆய்வாளர்கள் போர்க்களத்தில் ரஷ்யாவின் செயல்திறனைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் அதை "மோசமான நடவடிக்கை" என்று அழைக்கிறார். யுக்ரேனுக்குள் ரஷ்ய ராணுவத்தின் முன்னேற்றங்கள் பெரும்பாலும் முடங்க…

  3. உக்ரைனில்.... தங்களது படையினர், வீரமாக போரிடுவதாக புட்டின் பாராட்டு! உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய துருப்புக்கள், அங்கு வீரமாக போரிடுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார். க்ரைமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் எட்டாவது ஆண்டு நிறைவை குறிக்கும் பிரமாண்ட கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று (வெள்ளிக்கிழமை) பொதுக் கூட்டம் நடைபெற்ற லுஷ்னிகி மைதானம் மற்றும் அதைச் சுற்றிலும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்ததாக அறியமுடிகின்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய புடின், உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷ்ய ராணுவ வீரர்களை பாராட்டினார். உக்ரைனில் தொடர்ந்து வீரமாகப் போரிட்டதாக தனது படைக…

  4. ரஷ்யாவுக்கு... ஆதரவுக் கரத்தை நீட்டுமா சீனா? அச்சத்திற்கு மத்தியில் பைடன் அவசர பேச்சுவார்த்தை! ரஷ்யாவுடனான சீனாவின் உறவு மற்றும் உக்ரைனில் நிலவிவரும் போரில் சீனாவின் நிலைப்பாடு குறித்து வளர்ந்து வரும் அமெரிக்க கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இருநாட்டு தலைவர்களும் நாளை (வெள்ளிக்கிழமை) 13:00 மணிக்கு தொலைபேசியில் உரையாடவுள்ளனர். கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு இவரும் பேசவுள்ளனர். ரஷ்யாவிற்கு இராணுவ ஆதரவை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக கூறும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. முன்னதாக அமெரிக்க …

  5. உக்ரைன் போரை நிறுத்த... புடினின், இரண்டு வகை கோரிக்கைகள்! க்ரைன் போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தரப்பில், இரண்டு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கி தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல், ஜனாதிபதி விளாடிமிர் புடின் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை தொலைப்பேசியில் அழைத்து, உக்ரேனுடன் சமாதான உடன்படிக்கைக்கு ரஷ்யாவின் துல்லியமான கோரிக்கைகள் என்ன என்பதை அவரிடம் கூறியுள்ளார். தொலைபேசி அழைப்பு முடிந்த அரை மணி நேரத்திற்கு பிறகு, எர்டோகனின் முன்னணி ஆலோசகரும் செய்தித் தொடர்பாளருமான இப்ராஹிம் கலின் ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்து விபரித்துள்ளார். ரஷ்ய கோரிக்கைகள் இரண்டு வகைகளாகும். முதல் நான்கு கோர…

  6. சீனாவுக்கான ரஷ்ய தூதரை சந்தித்து... சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி பேச்சுவார்த்தை! சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், சீனாவுக்கான ரஷ்யாவின் தூதரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டார் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆணையர் செங் குயோபிங், ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரே டெனிசோவை சந்தித்து இருதரப்பு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான தனது படையெடுப்பில் இராணுவ உதவிய…

  7. ஈரானில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான நசானின் ஜாகரி- ராட்க்ளிஃப், அனூஷே அஷூரி ஆகியோர் பிரித்தானியாவை சென்றடைந்தனர் ஈரானில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான நசானின் ஜாகரி- ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பிரித்தானியாவை சென்றடைந்தனர். பிரிட்டிஷ் - ஈரானிய கைதியான நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பல வருட சிறைவாசத்திற்கு பிறகு தங்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர். ஜகாரி-ராட்க்ளிஃப் ஈரானிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் 2016 இல் கைது செய்யப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு ஏப்ரலில் அவருக்கு மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் …

  8. உக்ரைனுக்கு எதிரான... இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு! உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த தீர்ப்பை உக்ரைன் வரவேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும் எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதல்கள் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1272225

  9. மரியுபோல் நகரில்... பொதுமக்கள் தங்கியிருந்த, திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு தாக்குதல்! உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு வீசியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1,000 முதல் 1,200 பேர் வரை இந்த கட்டடத்தில் தஞ்சம் புகுந்திருந்ததாக, துணை மேயர் செர்ஜி ஓர்லோவ் தெரிவித்துள்ளார். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 2,400பேர் மரியுபோலில் கொல்லப்பட்டதாகக் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அரசாங்கம் கூறுகின்றது. நகருக்குள் சுமார் 300,…

  10. ON: MARCH 17, 2022 இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகம் கிழக்கு மற்றும் மேற்கு என இரு துருவங்களாக, தொகுதிகளாகப் பிரிந்தது. கிழக்கு பெர்லின் சோவியத் சோசலிஸ்ட் குடியரசின் (USSR) ஆட்சியின் கீழ் வந்தது. மேற்கு பெர்லின் அமெரிக்காவின் ஆட்சியின் கீழ் வந்ததுடன் உலகில் அரசியல் பனிப்போர் ஆரம்பமாகியது. சில நாடுகள் அமெரிக்காவின் தலைமையிலும் சில நாடுகள் சோவியத் தொகுதியிலும் இணைந்துகொண்டன. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இணைந்து நேட்டோ NATO (North Atlantic Treaty Organization) வையும் மற்றும் யுஎஸ்எஸ்ஆர் (USSR -Union of Soviet Socialist Republics) மற்றும் அதன் கூட்டாளிகள் வார்சாவை WARSAW (WARSAW Treaty Organization) உருவாக்கினர். WRASAW ஒப்பந்தம் 1991 இல் சோவியத் ஒன்றியத்தின்…

    • 0 replies
    • 371 views
  11. யப்பானில் 7.3 புள்ளி பூமி அதிர்ச்சி. சுனாமி வரலாம் என எதிர்பார்ப்பு. 7.3 magnitude quake hits north Japan, tsunami risk receding A powerful 7.3 magnitude earthquake has struck off the coast of Fukushima in northern Japan, triggering a tsunami advisory and plunging more than 2 million homes in the Tokyo area into darkness https://abcnews.go.com/International/wireStory/73-magnitude-quake-hits-north-japan-tsunami-alert-83480525

  12. அமெரிக்காவில் பகல் சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் மசோதாவை செனட் நிறைவேற்றுகிறது.இதே நடைமுறை கனடாவிலும் வரும் என எண்ணுகிறேன். அமெரிக்கா முழுவதும் பகல் சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் நடவடிக்கையை செனட் செவ்வாயன்று நிறைவேற்றியது. சன்ஷைன் பாதுகாப்பு சட்டம் ஒருமனதாக ஒப்புதலுடன் அறையை நிறைவேற்றியது. இந்த மசோதா இன்னும் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் மற்றும் சட்டமாக மாறுவதற்கு ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட வேண்டும். இந்த நடவடிக்கை காங்கிரசை அழித்து சட்டமாக கையொப்பமிட்டால், ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர்காலத்தில் பின்வாங்கக்கூடாது என்று அர்த்தம். சிஎன்என், ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசியின் அலுவலகத்தை அணுகி, மசோதாவை எப்போது அல்லது சபை எடுத்துக்கொள்வது என்பது குறித்து க…

  13. 97 குழந்தைகள் யுத்தத்தில் உயிரிழப்பு - உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்ய படைகள் உக்ரேனில் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா இன்று 20 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரேனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன ஆனால், உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன இதற்கிடையில், உக்ரேன் தலைநகர் கீவ்வில் செவ்வாய்க…

  14. இங்கிலாந்தில் இரத்தாகிறது பயண கட்டுப்பாடுகள் இங்கிலாந்து நாட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், நாட்டில் நுழைவதற்கு முன் பயணிகள் கட்டாய இருப்பிட படிவத்தை நிரப்பித்தரவேண்டிய தேவை உட்பட அனைத்து பயண கட்டுப்பாடுகளும் இரத்துச் செய்யப்படுகின்றன. இங்கிலாந்துக்கு பயணிப்பவர்கள் இனிமேல் பயண விவரங்களை சமர்ப்பிக்கவோ, தடுப்பூசி போடப்பட்டிருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ளவோ தேவையில்லை. இங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறை மாதம் என்பதால், அதற்கு ஏற்றவகையில் கூடுதல் தேவைகள் இல்லாமல் குடும்பங்கள் பயணத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் 86 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத…

  15. 500 பில்லியன் டொலர் மதிப்பிலான... சேதத்தை, ரஷ்யா விளைவித்துள்ளது – உக்ரைன் ரஷ்யாவின்படையெலுப்பை தொடர்ந்து தாம் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் போருக்குப் பின்னர் உக்ரைனை மீட்டெடுப்பதற்கு ரஷ்யா பணம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனும் நட்பு நாடுகளிடம் இருந்து நிதி கிடைக்கும் என்றும் வெளிநாட்டில் ரஷ்யாவின் சொத்துக்களை கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். கியூவ் நகருக்கு விஜயம் செய்த செக் குடியரசு, போலந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய மூன்று அண்டை நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை நான்காவது சுற்று சமாதானப் பேச்சுவார்த…

  16. பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு... வரம்பு இல்லை: மைக்கேல் கோவ்! உக்ரைன் அகதிகள் தங்கள் மிகப்பெரிய தேவையை எதிர்கொள்வதால், பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்று வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் செயலர் மைக்கேல் கோவ், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு பிரித்தானியாவின் புதிய அணுசரணை திட்டத்தின் விபரங்களை அறிவித்த கோவ், பல பிரித்தானியர்கள் தங்கள் வீடுகளைத் திறந்து உக்ரைனிய அகதிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். புதிய திட்டம், பிரித்தானிய பொதுமக்களின் மகத்தான நல்லெண்ணம் மற்றும் தாராள மனப்பான்மை மற்றும் மிகவ…

  17. பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் பலி மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபரான அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட், இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறுவை சிகிச்சை செய்த வைத்தியசாலை புதன்கிழமை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள வைத்தியசாலையில் 57 வயதான பென்னட் செவ்வாய்க்கிழமை இறந்தார், மேலும் இறப்புக்கான சரியான காரணத்தையும் வைத்தியர்கள் வழங்கியுள்ளனர். பென்னட், மனித இதயத்திற்குத் தகுதி பெற முடியாத அளவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால் அவருக்கு பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயம் பொருத்தும் "இரக்கமுள்ள நோய்த்தடுப்பு சிகிச்சை" கடந்த …

  18. போலந்து உக்ரேனிய அகதிகள் முகாமில் சீனாவின் கசாக் இனத்தவர் ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு மத்தியில், சீனாவின் வடமேற்கு மாகாணமான ஷின்ஜியாங்கைச் சேர்ந்த கசாக் இனத்தவர் ஏனைய உக்ரேனிய அகதிகளுடன் போலந்துக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எர்சின் எர்கினுலி என்ற சீன குடிமகன் உக்ரைனில் பல மாதங்களாக குடியேற்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை சீனாவிற்கு திருப்பி அனுப்பினால் சிறையில் அடைக்கப்படலாம், அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்பதன் காரணமாக உக்ரேனிய அதிகாரிகளால் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாமல் போலந்திற்குள் செல்ல…

    • 0 replies
    • 348 views
  19. உக்ரைனுக்கு ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து... வழங்குவோம்: ஜோ பைடன் அறிவிப்பு! ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளை எதிர்க்க, உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ரஷ்ய துருப்புக்கள் தொடர்ந்து தலைநகர் கீவ் மீது உக்கிர தாக்குதலை தொடுத்து வருகின்ற நிலையில், ஜோ பைடனின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பைடன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனியர்களை திறந்த கரங்களுடன் வரவேற்பதாக பதிவிட்டுள்ளார். முன்னதாக, 13.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஓர் அவசர ஆணையில் ஜோ பைடன் கடந்த வார இறுதியில் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப…

  20. 3 சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்! உக்ரைன் தலைநகர் கீவில் செவ்வாய்க்கிழமை காலை மூன்று முறை பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 20 ஆவது நாளாகத் தொடர்கிறது. தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும் உக்ரைனின் முக்கிய தொழிற்சாலைகள், துறைமுகங்கள் என முக்கிய இடங்களை குறிவைத்து ரஷியப் படைகள் தாக்கி வருகின்றன. மரியுபோல் நகரையும் ரஷியப் படை ஆக்கிரமித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கருங்கடல் துறைமுக நகரமான கொ்சனில் நேற்று விடிய விடிய குண்டு சப்தம் கே…

    • 0 replies
    • 329 views
  21. சர்வதேச அங்கீகாரத்திற்காக ஆப்கானின் இயற்கை வளங்களை பேரம் பேசும் தலிபான்கள்: அறிக்கை (ஏ.என்.ஐ) தலிபான்கள் இயற்கை வளங்களை சர்வதேச அங்கீகாரத்திற்கான பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்துவதாக தி ஃபிரான்டியர் போஸ்ட்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி தட்டுப்பாட்டினாலான பொருளாதாரத்தின் உடனடி சரிவைத் தடுக்கவே ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களைப் பயன்படுத்த தலிபான்கள் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் நான்காவது பெரிய இரும்புத் தாது இருப்பு ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் ஆப்கான் புவியியல் ஆய்வு ஆகியவற்றின் தரவுகளின் படி, இரும்பு மற்றும் தாமிர இருப…

  22. போலந்து எல்லைக்கு அருகே... ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: போலந்து எச்சரிக்கை! போலந்து எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைன் இராணுவ தளத்தின் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல், நேட்டோவை அச்சுறுத்தும் முயற்சி என்று போலந்தின் துணை வெளியுறவு அமைச்சர் மார்சின் பிரசிடாக்ஸ் தெரிவித்துள்ளார். மேற்கத்திய இராணுவக் கூட்டணியின் உறுப்பினரான போலந்தின் எல்லையில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள யாவோரிவ் பயிற்சித் தளத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 35பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆத்திரமூட்டும் செயல் என்று பிரசிடாக்ஸ் கூறியுள்ளார். மேலும், ‘இந்த இராணுவத் தளம் போலந்து எல்லைக்கு மிக அருகாமையில் அமைந்திருந்தது…

  23. ரஷ்யா- உக்ரைனுக்கு இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஆயத்தமாகி வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், துருக்கியில் இன்று ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை தொடரும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அத்துடன், முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், பேச்சுவார்த்தை நன்றாக நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். உக்ரைனிய பேச்சுவார்த்தையாளர் மைக்கைலோ போடோலியாக், வார இறுதி பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை என்று கூறியதையடுத்து, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.